Jump to content

புலம்பெயர்ந்த ஈழத் தமிழனின் எதிர்காலம் - பகுதி 1


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் 
எல்லோரும் நனமை வேண்டி 
கருத்து பரிமாறினால் 
பலருக்கும் சில விடயங்களை கற்று கொடுக்கும் 
என்று எண்ணுகிறேன் 

  • Like 2
Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

நல்ல விடயம் 
எல்லோரும் நனமை வேண்டி 
கருத்து பரிமாறினால் 
பலருக்கும் சில விடயங்களை கற்று கொடுக்கும் 
என்று எண்ணுகிறேன் 

ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி.

எம்மில் பலருக்கு வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் என்ன செய்வதென்ற திட்டம் எதுவும் இல்லை. வாரத்தில் 5-6 நாட்கள் காலை முதல் இரவு வரை வேலை செய்யும்போது உடல் தசைகளும் மூளையும் இயங்கிக் கொண்டே இருக்கும். திடீரென எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொண்டு வீட்டினுள் இருப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லதல்ல. வாழ்க்கையில் எப்போது ஒரு குறிக்கோள் வேண்டும். ஓய்வூதியத்திற்கு முன்னரே நாம் வலுவாக இருக்கும்போது இது பற்றி சிந்தித்துத் திட்டங்களை வகுக்க வேண்டும். 

ஓய்வு என்பதை சாப்பாடு, தூக்கம், தொலைக்காட்சி பார்ப்பதும் மட்டுமல்ல. என்னைப் பொறுத்தவரை நேரக் கட்டுப்பாடுகளற்ற வாழ்க்கை முறை. நாம் விரும்பும் செயல்களை விரும்பும் நேரத்தில் செய்து முடிக்கலாம். 

எனது வயதான உறவினர் ஒருவர் எப்போது வீட்டில் இருந்தவாறே கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பார். எல்லா வருத்தங்களும் உண்டு உணவில் ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. இன்னொருவர் 73 வயதாகிறது, இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்பவர். எந்த மருந்தும் பாவிப்பதில்லை, ஆரோக்கியமாக உள்ளார்.
ஒரு வயதிற்கு பின்னர் எமது மூளையும் உடலும் சரியாக இயங்காது. அப்போதுதான் வீட்டுக்குள் முடங்க வேண்டும். அதுவரை நன்றாக வாழ வேண்டும். 

நான் இங்கு எழுதப்போகும் திட்டம் எல்லோருக்கும் சரிவராது. இங்கு முதுமையோடு வாழ்வதற்கு ஏராளமான வழிகள் பொழுதுபோக்குகள் உள்ளன. சாத்தியமானதைப் பின்பற்றலாம்.

யாழ் உறவுகள் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களும் பெற இருப்பவர்களும் விரும்பினால் தங்கள் அனுபவங்களை அல்லது திட்டங்களைப் பகிர்ந்தால் பலருக்கும் உதவியாக இருக்கும்.

  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி.

எம்மில் பலருக்கு வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் என்ன செய்வதென்ற திட்டம் எதுவும் இல்லை. வாரத்தில் 5-6 நாட்கள் காலை முதல் இரவு வரை வேலை செய்யும்போது உடல் தசைகளும் மூளையும் இயங்கிக் கொண்டே இருக்கும். திடீரென எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொண்டு வீட்டினுள் இருப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லதல்ல. வாழ்க்கையில் எப்போது ஒரு குறிக்கோள் வேண்டும். ஓய்வூதியத்திற்கு முன்னரே நாம் வலுவாக இருக்கும்போது இது பற்றி சிந்தித்துத் திட்டங்களை வகுக்க வேண்டும். 

ஓய்வு என்பதை சாப்பாடு, தூக்கம், தொலைக்காட்சி பார்ப்பதும் மட்டுமல்ல. என்னைப் பொறுத்தவரை நேரக் கட்டுப்பாடுகளற்ற வாழ்க்கை முறை. நாம் விரும்பும் செயல்களை விரும்பும் நேரத்தில் செய்து முடிக்கலாம். 

எனது வயதான உறவினர் ஒருவர் எப்போது வீட்டில் இருந்தவாறே கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பார். எல்லா வருத்தங்களும் உண்டு உணவில் ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. இன்னொருவர் 73 வயதாகிறது, இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்பவர். எந்த மருந்தும் பாவிப்பதில்லை, ஆரோக்கியமாக உள்ளார்.
ஒரு வயதிற்கு பின்னர் எமது மூளையும் உடலும் சரியாக இயங்காது. அப்போதுதான் வீட்டுக்குள் முடங்க வேண்டும். அதுவரை நன்றாக வாழ வேண்டும். 

நான் இங்கு எழுதப்போகும் திட்டம் எல்லோருக்கும் சரிவராது. இங்கு முதுமையோடு வாழ்வதற்கு ஏராளமான வழிகள் பொழுதுபோக்குகள் உள்ளன. சாத்தியமானதைப் பின்பற்றலாம்.

யாழ் உறவுகள் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களும் பெற இருப்பவர்களும் விரும்பினால் தங்கள் அனுபவங்களை அல்லது திட்டங்களைப் பகிர்ந்தால் பலருக்கும் உதவியாக இருக்கும்.

இணையவன், ஒரு அருமையான விடயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்: இப்போது ஆயுள் (life span) என்பதை விட நல ஆயுள் (health span) என்பதையே மேற்கு நாடுகளில் வலியுறுத்துகிறார்கள். 100 வயது வரை வாழலாம், ஆனால் அதில் கடைசி 30 வருடங்களை படுக்கையில் கழிப்பதை விட, வாழும் 60- 70 வருடங்களையும் செயல்பட்ட படியே வாழும் கலை தான் நீங்கள் குறிப்பிடும் எண்ணக் கரு!   

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த கட்டுரை.

[என்னைப் பொறுத்தவரை நேரக் கட்டுப்பாடுகளற்ற வாழ்க்கை முறை. நாம் விரும்பும் செயல்களை விரும்பும் நேரத்தில் செய்து முடிக்கலாம் ] 🤔
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பிரயோசமான விடயங்களை உள்ளடக்கிய கட்டுரைகள். 👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் இணையவன். இப்போ புலம்பெயர் சமூகத்துக்கு அவசியமான விவாததுக்கு உரிய கருத்தாடல்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி. 👍
பல விடயங்களை அலசி ஆராயலாம்.நிறைய எழுதலாம்.
எனது சந்ததி எதிர் நோக்கும் பல பிரச்சனைகளை இங்கு பிறந்து வளர்ந்த ஈழத்து சந்ததிகள் சந்திக்காது என நினைக்கின்றேன். 
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 Best Model Fitness GIFs | Gfycat  Walking The Dog GIFs | Tenor Abductores en máquina sentado on Make a GIF

ஒய்வு பெற்ற பின்... 
1)  ஜிம்மிற்கு  மாதாந்த அடிப்படையில் அங்கத்தவராக  சேர்ந்து, பல கருவிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கலாம். மாதாந்த கட்டணம்  இங்கு 20 ஐரோ மட்டுமே. நீங்கள் ஆணழகன் போட்டிக்கு செல்வதற்கான கடுமையான பயற்சி அல்ல. உங்களால் எவ்வளவு உடலை அசைத்து பயிற்சியை செய்ய முடியுமோ அதே அளவு செய்யுங்கள். உங்கள் தசைகள்...  எப்போதும் தளர்வடையாமல் இருக்கும். அதனை கிழமைக்கு மூன்று தரம், மூன்று மணித்தியாலம் செய்தாலே பலன் அதிகம்.

2) நாய்  வளர்க்க வசதி உள்ளவர்கள், ஒன்றை வாங்கி வளர்த்தால்..... தினமும் இரண்டு முறையாவது அதனை வெளியே அழைத்துச் செல்லும் போது... உங்களுக்கு  நடைப் பயிற்சியும், மனதில் உற்சாகமும் பிறக்கும்.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மிகவும் பயனுள்ள சிந்திக்க வேண்டிய பதிவு . நாம் வாழ்க்கையை வகுத்துக் கொண்டால் மற்றவர்களுக்கு சிரமம் இருக்காது . இயந்திர உலகம் எல்லோரும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். பிள்ளைகள்  அவர்களது வேலைக்கு மத்தியில் வயதானவர்களை கவனிப்பது சிரமம். , தங்கள் குழந்தைகளைபராமரிப்பது , தங்கள் வேலைக்கு ஓடுவது என்று  இயந்திரமாகவே மாறிவிடடார்கள்  . எனவே மற்ற்வர்களுக்கு பாரமாய் இராது இயன்றவரை இயங்கி வாழ்தலே சிறந்தது. இந்த சிந்தனையை யாழ்களத்துக்கு எடுத்துவந்த உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இணையவன்

நானும் இவ்வாறு  எழுதணும் என்று தான் ஒரு  திரி  தொடங்கினேன்

கிட்டத்தட்ட

அரசியல் தாயகம் புலம் பெயர் வாழ்வு  சார்ந்து  ஒரே கோட்டில் நிற்கிறோம்  என்பதை  உணர்கிறேன்

தொடருங்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை.இன்னமும் நிறைய விடயங்களை தொட்டு எழுதுங்கள்.

நானும் 66இலேயே இளைப்பாறிவிட்டேன்.எனக்கும் செருப்படி இருக்கு போல.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்க வேலையிலிருந்து மனம் வெறுத்து, 'நம்மிடம் இருக்கும் திறமைக்கு வெளிநாடு சென்று பொருளீட்டலாமே.!' என முடிவெடுத்து இங்கே வந்தேன். இங்கும் அரசாங்க வேலைதான், ஆனால் திறமைக்கும், நிபுணத்துவ அனுபவத்திற்கும் இன்னும் மதிப்பிருந்து கொண்டிருக்கிறது.

வயது ஏற ஏற, அடுத்த நகர்வை நிறுவனம் மேற்கொள்ளும், அறிவாற்றலையும், அனுபவத்தையும் இளையோரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் என ஆலோசனைகள் வரும். ஆனாலும், பட்டறிவையும், சில நுணுக்கங்களையும் முழுமையாக கடத்த இயலாதுதானே? அதுவே என்னை இங்கே இறுத்தி வைத்துள்ளது.. இன்னும் எத்தனை வருடங்கள் செல்கிறதென பார்ப்போமே..! 😜

வேண்டிய பொருளீட்டும் எல்லையை நெருங்கியவுடன் இங்கிருந்து விடை பெற உத்தேசம். ஆனால் ஒய்வு பெற்று தமிழ்நாடு திரும்பியவுடன் மின் துறை சார்ந்த பகுதி நேர ஆலோசனை சொல்லும் தொழிலை செய்யலாம். ஏற்கனவே மாதந்தோறும் வருமானம் பெறும் வண்ணம் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்தாயிற்று.

நமக்கும், எம்மை நம்பி வாழ்க்கையில் இணைந்த மனைவிக்கும் முதிய காலத்தில் யாரிடமும் எதிர்நோக்காமல் வாழும் அளவிற்கு நம்மிடம் செல்வம் மிக முக்கியமாக இருக்கவேண்டும். அதுவே நோயுறும் காலத்தில் இருவருக்கும் உதவும். பிள்ளைகள் அவரவர் வழிகளில் செல்ல நாம் தடையாக இருக்கக் கூடாது. அது அவர்களின் வாழ்க்கை, செம்மையாக வாழட்டும்..!

ஒரு வயதிற்கு மேல் உடல் உழைப்பைவிட, மூளைக்கு வேலை கொடுக்கும் பணியை ஓரளவு செய்துகொண்டே பேரப் பிள்ளைகளுடன் விளையாடி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், அதுவே இன்பமயமான கொடுப்பினையாகும்.

ஓய்வுடன் வீட்டில் சும்மா இருந்தால் மனம் கறள் பிடித்துவிடும், அப்புறம் வீட்டில் மனைவிக்கு சமையலில் உதவி, துவைத்த துணிகளை காயபோடும் உதவி என நேரத்தை செலவழிக்க நேரிடும்..! 😍🤣

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

அப்புறம் வீட்டில் மனைவிக்கு சமையலில் உதவி, துவைத்த துணிகளை காயபோடும் உதவி என நேரத்தை செலவழிக்க நேரிடும்..! 😍🤣

இப்போ செய்வதை… ஒய்வு பெற்ற பின்பு செய்ய ஏன் தயங்குகின்றீர்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன விடயம்: (டிஸ்கி)

திரியின் தலைப்பு ஈழத் தமிழனின் எதிர்கால புலம்பெயர் வாழ்க்கை பற்றியது.. ஆனால் நானோ, தமிழ்நாடு தமிழன். 'ஒரு அனுபவ பகிர்வாக இருக்கட்டுமே!' என எனது கருத்தை பதிந்தேன்..😋

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

இப்போ செய்வதை… ஒய்வு பெற்ற பின்பு செய்ய ஏன் தயங்குகின்றீர்கள். 🤣

உங்களுக்கு புரியாது..

கணவன் சம்பாதிக்கும் வரைதான் வீட்டில் புலியாக இருக்க முடியும், எப்போ ஓய்வு பெற்று மனைவியை சார்ந்து வீட்டில் இருக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போதே எலியாக மாறிவிடும் நிலை வந்துவிடும். அப்புறம் நாமாக விரும்பி அவர்களுக்கு ஒத்தாசை செய்வது, நமக்கு அதுவே நிரந்தர வேலையாக மாறிவிடும்.

'உத்தியோகம் புருச லட்சணம்' என பெரியோர்கள் சும்மா சொல்லவில்லை, அவை ஆயிரம் பொன் வார்த்தைகள்..! 🤗😂

சரி, மற்ற உறவுகளின் கருத்தை எதிர்நோக்குவோம்..! 😜

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

வயோதிப வாழ்க்கை என்பது நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதல்ல. எமக்கு ஏற்றவாறான வாழ்கை முறையை ஒருங்கமைத்து வாழ முடியும். ஏறத்தாள மொத்த வாழ்வில் மூன்றில் ஒரு காலப் பகுதியை இது அடக்குகிறது. சிலர் ஏற்கனவே திட்டமிட்டும் சிலர் காலப்போக்கில் எடுத்த முடிவாலும் இன்னும் சிலர் சில நிர்ப்பந்தங்களுக்காகவும் தமது வழிகளைத் தேடிக் கொள்கின்றனர். 

எனக்குத் தெரிந்த மூன்று வித்தியாசமான நபர்களின் சிறு உதாரணங்களைத் தருகிறேன்.

  1. இவர் ஐரோப்பியர். ஓரளவு வசதியானவர். என்ன செய்வதென்று தெரியாமல் ஓய்வூதியத்தில் சில வருடங்களைக் கழித்து விட்டார். ஒரு நாள் வீட்டில் உடைந்துபோன மரக் கதிரை ஒன்றைத் திருத்த முயன்றார். நுட்பமான வேலைகள் எதையும் முன்னர் செய்திருக்கவில்லை. எப்படித் திருத்துவது என்று எதுவுமே தெரியாமல் பல முயற்சிக்குப் பின் ஒருவாறு திருத்திவிட்டார். அன்றிலிருந்து அதில் ஆர்வம் ஏற்பட, தனது உறவினர் வீடுகளில் பழுதான தளபாடங்களைத் திருத்த வெளிக்கிட்டார். சிறிது சிறிதாக உபகரணங்களையும் வாங்கி தனது பிள்ளைகளின் வீடுகளுக்குத் தேவையான தளபாடங்களைப் புதிதாகச் செய்யும் அளவுக்கு முன்னேறிவிட்டார். செய்து முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வாராயினும் யாரும் அழுத்தம் தராதபடியால் மெதுவாகச் செய்வார். வீட்டிற்கு வருபவர்களிடம் பிள்ளைகள் இவரது ஆக்கங்களைக் காட்டிப் பெருமைப் படுவார்கள்.
     
  2. இவரும் ஐரோப்பியப் பெண். ஒரு பெண் பிள்ளை திருமணமாகிச் சென்றுவிட, கணவனும் இறந்துவிட, பரிஸ் புறநகர் அடுக்குமாடி வீடொன்றில் தனிமைப் பட்டார். சில வருடங்களின் பின் திடீரென ஒரு முடிவைத் தானாகவே எடுத்தார். தான் இருந்த வீட்டை விற்றுவிட்டு ஒரு கிராமத்தில் சிறு வீடு ஒன்றை வாங்கிக் குடியேறினார். அக் கிராமமோ அங்கிருப்பவர்களோ அவருக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள் அல்ல. அங்கு சென்றது கிராம மக்களோடு பழக ஆரம்பித்தார். தினமும் கிராமத்தைச் சுற்றி வந்து அவர்களோடு பேசுவார். இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
     
  3. தமிழ் மூதாட்டி. 80 வயதாகிறது. தனது மகனின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். காலையிலிருந்து இரவு வரை வீட்டு வேலை செய்வதுதான் இவரது முழுநேர வாழ்க்கை. முதுகு வலியால் மிகவும் அவதிப் பட்டுக் கொண்டே சமையல் செய்வார். எப்போதும் பேரப் பிள்ளைகள் சாப்பிட்டார்களா பாடசாலைக்கு நேரத்துக்கு வெளிக்கிட்டார்களா என்பதே சிந்தனை. வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. இவர் வாழ்வது ஏனையவர்களுக்காகவே.

- முதலாமவர் பெருமையோடு வாழ்கிறார்.
- இரண்டாமவர் தனது மகிழ்ச்சியைத் தேடிவிட்டார்.
- மூன்றாமவர் ஏனையவர்களுக்காக மட்டும் வாழ்கிறார்.

மூன்றாவது உதாரணத்தில் விருப்பம்போல் முதுமைக் காலத்தை நிர்ணயிப்பதில் புற காரணிகள் தடையாக இருந்துள்ளன.

எமது தீர்மானத்தில் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளில் முக்கியமானவை:

  1. வாழ்க்கைத் துணை
    எடுக்கப்படும் முடிவிற்குக் கணவன் மனைவி இருவருடைய ஒத்துழைப்பும் விருப்பமும் அவசியம். அப்படி இல்லாவிடினும் அது ஒருவரைப் பாதிப்பதாக இருக்கக் கூடாது. உங்கள் துணையுடன் எதிர்காலம் பற்றிக் கலந்தாலோசியுங்கள். அவருக்கும் புதிய யோசனைகள் ஆர்வங்கள் இருக்கலாம்.
  2. உடல் ஆரோக்கியம்
    நோய்கள் வராமல் முற்பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது. நல் உணவு, உடற்பயிற்சி, போதிய நித்திரை ஆகியன உடல் ஆரோக்கியத்தைப் பேண உதவும். பல தமிழர்களைப்போல் யூடியூப் மருத்துவத்தை நம்பாமல் நோய் அறிகுறிகள் தெரிந்தால் நல்ல மருத்துவம் செய்துகொள்ள வேண்டும்.
  3. குடும்ப உறவுகள்
    பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் பொழுதைக் கழிப்பது இனிமையானது. ஆனால் அதுவே முட்டுக்கட்டையாகவும் இருக்க வாய்ப்புண்டு. வசதியான நாடுகளில் முதியவர்களின் உதவி இல்லாமலே அவர்களால் வாழ முடியும். 

இருப்பிடம், பொருளாதாரம் போன்றவை இங்கு பெரிய பிரச்சனை இல்லை. வசதியாக வாழ வேண்டுமானால் உழைக்கும்போதே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்.

இதுவரை -
- சோர்வாக இருந்தாலும் தினமும் காலையில் சரியான நேரத்துக்கு எழுந்து வேலைக்கும் போக வேண்டும் என்ற நிர்ப்பந்தம்
- வேலையில் தரப்படும் அழுத்தங்களை யோசித்துக் நிம்மதியற்ற தூக்கம்
- பிள்ளைகளின் படிப்பு, மாலைநேர வகுப்பு, விளையாட்டு எல்லாவற்றையும் நினைத்துக் குழப்பம்
- வீட்டுக் கடன், வருமானவரி, போகுவரத்து, சேமிப்புத் திட்டம், காப்புறுதி என்றெல்லாம் ஏகப்பட்ட சிந்தனைகள்
இத்தனை காலமும் இன்னும் பல பிரச்சனைகளைத் தாங்கிவிட்டோம். முதுமையில் இவையெல்லாம் ஓய்ந்து சீராக வந்துவிடும்.

இனிமேல் எமக்குப் பிடித்த வழியில் அமைதியாக மகிழ்சியாகப் பயணிப்போம்.

  • Like 3
Link to comment
Share on other sites

ஊக்கமளித்தவர்களுக்கும் கருத்துப் பகிர்ந்தவர்களுக்கும் நன்றி.

 

21 hours ago, Justin said:

இணையவன், ஒரு அருமையான விடயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்: இப்போது ஆயுள் (life span) என்பதை விட நல ஆயுள் (health span) என்பதையே மேற்கு நாடுகளில் வலியுறுத்துகிறார்கள். 100 வயது வரை வாழலாம், ஆனால் அதில் கடைசி 30 வருடங்களை படுக்கையில் கழிப்பதை விட, வாழும் 60- 70 வருடங்களையும் செயல்பட்ட படியே வாழும் கலை தான் நீங்கள் குறிப்பிடும் எண்ணக் கரு!   

ஜிஸ்ரின், இரண்டு வரிகளில் சுருக்கமாக அழகாகக் கூறியுள்ளீர்கள்.
 

20 hours ago, விளங்க நினைப்பவன் said:

சிறந்த கட்டுரை.

[என்னைப் பொறுத்தவரை நேரக் கட்டுப்பாடுகளற்ற வாழ்க்கை முறை. நாம் விரும்பும் செயல்களை விரும்பும் நேரத்தில் செய்து முடிக்கலாம் ] 🤔
 

விளங்க நினைப்பவன், அழுத்தங்கள் இல்லாத வாழ்க்கை முறை என்று வந்திருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டதுபோன்று நினைப்பதை வார்த்தைகளில் கொண்டு வருவது எனக்குச் சரிவராது.
 

13 hours ago, முதல்வன் said:

தொடருங்கள் இணையவன். இப்போ புலம்பெயர் சமூகத்துக்கு அவசியமான விவாததுக்கு உரிய கருத்தாடல்.

முதல்வன், இது எமது சமுகத்துக்கு அவசியமாக இருந்தாலும் பேசாப் பொருள் போன்று புறக்கணிக்கப்பட்டுள்ளது.
 

9 hours ago, குமாரசாமி said:

நல்லதொரு திரி. 👍
பல விடயங்களை அலசி ஆராயலாம்.நிறைய எழுதலாம்.
எனது சந்ததி எதிர் நோக்கும் பல பிரச்சனைகளை இங்கு பிறந்து வளர்ந்த ஈழத்து சந்ததிகள் சந்திக்காது என நினைக்கின்றேன். 
 

குமாரசாமி, இந்தச் சந்ததி விடயத்தில் நான் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். கட்டுரையில் இரண்டாவது பகுதியில் எனது முடிவு பற்றி எழுதுவேன். பல அனுபவம் உள்ள உங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்.
 

7 hours ago, தமிழ் சிறி said:

 ஒய்வு பெற்ற பின்... 

தமிழ்சிறி, இந்த ஜிம் வாக்கிங் எல்லாம் பலர் வாயால் சொல்லக் கேட்டுள்ளேன். நீங்கள் செயலில் காட்ட முன்கூட்டியே எனது வாழ்த்துகள்.
 

5 hours ago, நிலாமதி said:

 மிகவும் பயனுள்ள சிந்திக்க வேண்டிய பதிவு . நாம் வாழ்க்கையை வகுத்துக் கொண்டால் மற்றவர்களுக்கு சிரமம் இருக்காது . இயந்திர உலகம் எல்லோரும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். பிள்ளைகள்  அவர்களது வேலைக்கு மத்தியில் வயதானவர்களை கவனிப்பது சிரமம். , தங்கள் குழந்தைகளைபராமரிப்பது , தங்கள் வேலைக்கு ஓடுவது என்று  இயந்திரமாகவே மாறிவிடடார்கள்  . எனவே மற்ற்வர்களுக்கு பாரமாய் இராது இயன்றவரை இயங்கி வாழ்தலே சிறந்தது. இந்த சிந்தனையை யாழ்களத்துக்கு எடுத்துவந்த உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன்

நிலாமதி அக்கா, நிச்சயமாக, ஏனையவர்களுக்குச் சுமையாக இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள்.  ஆனாலும் சிலர் தவிர்க்க முடியாத காரணங்களால் உறவுகளுடன் சார்ந்து வாழ வேண்டிய நிலையில் உள்ளவர்களையும் மதிப்போம். 
 

4 hours ago, விசுகு said:

வணக்கம் இணையவன்

நானும் இவ்வாறு  எழுதணும் என்று தான் ஒரு  திரி  தொடங்கினேன்

கிட்டத்தட்ட

அரசியல் தாயகம் புலம் பெயர் வாழ்வு  சார்ந்து  ஒரே கோட்டில் நிற்கிறோம்  என்பதை  உணர்கிறேன்

தொடருங்கள்

விசுகு அண்ணா, நீங்களும் சமூக, குடும்பச் சங்கிலியில் பிணைக்கப்பட்ட அனுபவமுள்ள ஒருவர். உங்கள் அனுபவமும் எமக்குப் பயனுள்ளதாக இருக்கும். இதில் எழுதுவது பொருத்தமாக இல்லாவிட்டால் தாராளமாகத் தனித் திரியில் எழுதுங்கள். 
 

4 hours ago, ஈழப்பிரியன் said:

நல்லதொரு கட்டுரை.இன்னமும் நிறைய விடயங்களை தொட்டு எழுதுங்கள்.

நானும் 66இலேயே இளைப்பாறிவிட்டேன்.எனக்கும் செருப்படி இருக்கு போல.

ஈழபிரியன் அண்ணா, யாரையும் குறை கூறும் அளவில் இல்லை. நீங்களும் தோட்டம் பேரப் பிள்ளைகள் என்று சுறுசுறுப்பாகத்தானே இருக்கிறீர்கள். எமது சமூகத்தில் உள்ள பொதுவான குறைபாடு பற்றி விவாதிப்பது பயனுள்ளது. ஓய்வில் இருக்கும் உங்களது கருத்துகளையும் எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு அனுபவமும் தனித்துவமானது. உங்களுக்குப் பின் உள்ளோர் தவிர்க்க வேண்டிய கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களை எழுதுங்கள். 
 

3 hours ago, ராசவன்னியன் said:

ஒரு சின்ன விடயம்: (டிஸ்கி)

திரியின் தலைப்பு ஈழத் தமிழனின் எதிர்கால புலம்பெயர் வாழ்க்கை பற்றியது.. ஆனால் நானோ, தமிழ்நாடு தமிழன். 'ஒரு அனுபவ பகிர்வாக இருக்கட்டுமே!' என எனது கருத்தை பதிந்தேன்..😋

 

ராசவன்னியன் அண்ணா, நாடற்ற ஈழத் தமிழர்களுக்குத்தான் அங்கும் இங்கும் இல்லாத இடைப்பட்ட வாழ்க்கை என்ற நிலையிலிருந்து எழுத ஆரம்பித்ததால்தால் தலைப்பை அப்படி எழுதியுள்ளேன். உங்கள் கருத்து மிகவும் வரவேற்கப்படுகிறது. நன்றாகத் திட்டமிட்டுள்ளீர்கள். அத்துடன் ஓய்வூதியத்தின் பின்னரும் உங்கள் அனுபவங்களை முதலீடாக்குகிறீர்கள். பாராட்டுகள்.
 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, இணையவன் said:

விளங்க நினைப்பவன், அழுத்தங்கள் இல்லாத வாழ்க்கை முறை என்று வந்திருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டதுபோன்று நினைப்பதை வார்த்தைகளில் கொண்டு வருவது எனக்குச் சரிவராது.

இப்போது எனக்கு விளங்கிவிட்டது .நேரக் கட்டுப்பாடுகள் உள்ள வாழ்க்கை முறை அழுத்தங்களை கொண்டுவரும்.  
நேரக் கட்டுப்பாடுகள் உள்ள வாழ்க்கை முறையை மட்டுமே தெரிந்த எனக்கு  உங்களிடம் இருந்து அறிந்து கொள்கிறேன்👍 நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

ஒய்வு பெற்ற பின்... 
1)  ஜிம்மிற்கு  மாதாந்த அடிப்படையில் அங்கத்தவராக  சேர்ந்து, பல கருவிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கலாம்.

சிறி அண்ணா, நீங்கள் சொன்ன   சிறந்த ஆலோசனை ஒய்வு பெற்றவர்களுக்கு மட்டுமல்ல வேலை செய்பவர்களுக்கும். ஜிம்மிற்கு சென்றோ அல்லது வேறு இடத்திலோ ,வீட்டிலோ.   வீட்டில் இருந்து வேலை பார்த்துவிட்டு முதுகில் பிடித்து கொண்டது வலி, கால் பிடித்து கொண்டது என்று தாண்டி தாண்டி நடக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழனின் வெளிநாட்டு வாழ்வு எப்படி அமையுதோ இல்லையோ.. புலத்தில் (தாயகத்தில்) நிலைமை மோசமாகப் போகுது. ஏனெனில்.. பயிர் செய்கை செய்யப்படாத தரிசுக் காணிகள் எல்லாம் சிங்கள அரச மயமாகப் போகிறது. ஏலவே.. இராணுவ முகாம்கள்.. உயர் பாதுகாப்பு வலயங்கள்.. பெளத்த பாரம்பரிய நிலங்கள்.. வனத்திணைக்களக் காணி.. தொல்பொருள் திணைக்களக் காணி.. மாவீரர் துயிலும் இல்லங்கள்.. சிங்கள.. முஸ்லிம் மீள் குடியேற்ற நிலங்கள்.. திட்டமிட்ட சிங்களக் குடியேற்ற நிலங்கள்.. என்று புடிச்ச காணிகள் போக.. இப்படியும் காணி பறிபோனால்.. புலம்பெயர் தமிழர்கள் நிரந்தர ஏதிலிகளாகவே மாய வேண்டியது தான். இதில் அந்தந்த நாட்டு கடவுச் சீட்டு வைச்சிருக்கிறம் என்ற வெட்டிப் பெருமையோடு போய் சேர வேண்டியான். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

இப்போ செய்வதை… ஒய்வு பெற்ற பின்பு செய்ய ஏன் தயங்குகின்றீர்கள். 🤣


Now Part time

After full time.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2023 at 18:28, ராசவன்னியன் said:

அரசாங்க வேலையிலிருந்து மனம் வெறுத்து, 'நம்மிடம் இருக்கும் திறமைக்கு வெளிநாடு சென்று பொருளீட்டலாமே.!' என முடிவெடுத்து இங்கே வந்தேன். இங்கும் அரசாங்க வேலைதான், ஆனால் திறமைக்கும், நிபுணத்துவ அனுபவத்திற்கும் இன்னும் மதிப்பிருந்து கொண்டிருக்கிறது.

வயது ஏற ஏற, அடுத்த நகர்வை நிறுவனம் மேற்கொள்ளும், அறிவாற்றலையும், அனுபவத்தையும் இளையோரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் என ஆலோசனைகள் வரும். ஆனாலும், பட்டறிவையும், சில நுணுக்கங்களையும் முழுமையாக கடத்த இயலாதுதானே? அதுவே என்னை இங்கே இறுத்தி வைத்துள்ளது.. இன்னும் எத்தனை வருடங்கள் செல்கிறதென பார்ப்போமே..! 😜

வேண்டிய பொருளீட்டும் எல்லையை நெருங்கியவுடன் இங்கிருந்து விடை பெற உத்தேசம். ஆனால் ஒய்வு பெற்று தமிழ்நாடு திரும்பியவுடன் மின் துறை சார்ந்த பகுதி நேர ஆலோசனை சொல்லும் தொழிலை செய்யலாம். ஏற்கனவே மாதந்தோறும் வருமானம் பெறும் வண்ணம் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்தாயிற்று.

நமக்கும், எம்மை நம்பி வாழ்க்கையில் இணைந்த மனைவிக்கும் முதிய காலத்தில் யாரிடமும் எதிர்நோக்காமல் வாழும் அளவிற்கு நம்மிடம் செல்வம் மிக முக்கியமாக இருக்கவேண்டும். அதுவே நோயுறும் காலத்தில் இருவருக்கும் உதவும். பிள்ளைகள் அவரவர் வழிகளில் செல்ல நாம் தடையாக இருக்கக் கூடாது. அது அவர்களின் வாழ்க்கை, செம்மையாக வாழட்டும்..!

ஒரு வயதிற்கு மேல் உடல் உழைப்பைவிட, மூளைக்கு வேலை கொடுக்கும் பணியை ஓரளவு செய்துகொண்டே பேரப் பிள்ளைகளுடன் விளையாடி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், அதுவே இன்பமயமான கொடுப்பினையாகும்.

ஓய்வுடன் வீட்டில் சும்மா இருந்தால் மனம் கறள் பிடித்துவிடும், அப்புறம் வீட்டில் மனைவிக்கு சமையலில் உதவி, துவைத்த துணிகளை காயபோடும் உதவி என நேரத்தை செலவழிக்க நேரிடும்..! 😍🤣

சிறப்பு. கிட்டத்தட்ட இணையவனின் பகுதி 2 உம் உங்கள் பதிலை சார்ந்து இருக்கும் என்றே நம்புகிறேன்.

Active Income மற்றும் Passive income போன்றவற்றை தொட்டுச்செல்லும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதான் இந்த திரி கண்ணில் பட்டது இணையவன் (நம்ம கண்ணில் நல்லது ஏன் படப்போகுது🤣). படித்து விட்டு என் கருத்தையும் எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.