Jump to content

புற்றுநோயை எதிர்த்து வாழும் ‘நேக்கட் மோல்’ எலி: மனிதர்களின் நீண்ட ஆயுளுக்கான ஆய்வில் பலன் தருமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புற்றுநோயை எதிர்த்து வாழும் ‘நேக்கட் மோல்’ எலி: மனிதர்களின் நீண்ட ஆயுளுக்கான ஆய்வில் பலன் தருமா?

Naked Mole Rat

பட மூலாதாரம்,GETTY IMAGES

8 மணி நேரங்களுக்கு முன்னர்

நேக்கட் மோல் எலிகளுக்கு அவ்வளவு எளிதில் வயதாவதில்லை. இவை புற்றுநோயை தனது நோய் எதிர்ப்பு சக்தியால் எதிர்த்து ஆரோக்கியமாக வாழ்கின்றன. இந்த உயிரினத்தின் இந்த பண்புகளில் இருந்து எப்படி நீண்ட ஆயுளுடன் மனிதர்கள் வாழ முடியும் என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேக்கட் மோல் எலியின் பண்புகள்

வாயில் இருந்து நீளும் நீண்ட பற்கள், முடியற்ற தோல்கள் என நேக்கட் மோல் எலி பார்ப்பதற்கு உங்கள் செல்லப்பிராணிகளை போல இருப்பதில்லை. அழகில்லாத குறையை இதன் அசாத்திய குணநலன்கள் நிவர்த்தி செய்கின்றன.

அளவில் 13 அங்குலம் மட்டுமே இருக்கும் இந்த சிறிய எலிகள், சராசரியாக 30 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. இந்த எலிகள் தனது பற்களை கொண்டு வாழ்வதற்கு தேவையான பொந்துகளை மண்ணுக்கு அடியில் தோண்டுகின்றன. இப்படி செய்வதன் மூலம், மண்ணில் பல்லுயிர் பெருக்கம் மேம்பட்டு சுற்றுச்சூழலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன.

அகழெலி என்று அழைக்கப்பட்டும் இந்த நேக்கட் மோல் எலிக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய்கள் ஏதும் வருவதில்லை. அதற்கு உறுதுணையாக இதன் நோய் எதிர்ப்புச் சக்தி செயல்படுகிறது. முதுமை மற்றும் வலியிலிருந்து விடுபட்டுள்ள இந்த விசித்திரமான தோற்றமுள்ள உயிரினங்கள் நீண்ட காலமாக விஞ்ஞானிகளை கவர்ந்துள்ளன.

 

மனித குலத்திற்கு அளிக்கும் குடை

நேக்கட் மோல் எலியின் பண்புகளில் இருந்து, மனிதனுக்கு அதிக ஆயுள் மற்றும் புற்றுநோயை எதிர்க்கும் சக்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

வரலாற்று ரீதியாக எலிகள் மற்றும் சுண்டெலிகள், மனிதர்களின் உடற்கூறு பண்புகளை புரிந்து கொண்டு வரும் நிலையில், நேக்கட் மோல் எலிகளினால் மனித குலத்திற்கு தேவையான மருத்துவ ஆராய்ச்சிகளின் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் நடக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

குறைவான ஆக்சிஜன்

நேக்கட் மோல் எலிகளால் குறைந்த ஆக்சிஜன் அளவு இருக்கும் சூழலில் நீண்ட காலத்திற்கு வாழ முடியும். ஆக்சிஜனை சுவாசித்து உயிர் வாழும் வேறு எந்த உயிரினங்களாலும், இந்த எலிகள் வாழும் சூழலில் வாழ முடிவதில்லை. இது இந்த எலிகளின் அசாதாரண பண்புகளின் ஒரு அறிகுறியாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

குறைவான ஆக்சிஜன் இருக்கும் சூழலில் சாதாரண எலிகளால், இரண்டு ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமெனில், அதே அளவுள்ள நேக்கட் மோல் எலியால் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும்.

மனிதர்களின் உருவத்துடன் ஒப்பிடும் போது 450 ஆண்டுகளுக்கு மனிதன் வாழ்வதற்கு இது சமமாகும். பெரும்பாலான ஏரோபிக்(ஆக்சிஜன் சுவாசித்து வாழும் உயிரினங்கள்) உயிரினங்கள் இந்த சூழலில் உயிர் வாழ போராடும்.

இந்த இன எலிகள், `ஹெட்டரோசெபாலஸ் கிளாபர்` என்னும் அறிவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் "வழுக்கை தலை பொருள்" என்பது ஆகும். இந்த எலிகள் வடகிழக்கு ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல பகுதிகளில் வாழ்பவை. பல கால்பந்து ஆடுகளங்களின் நீளத்திற்கு இந்த எலிகளின் பொந்துகள் பூமிக்கடியில் சுரங்கம் போல பல அறைகளுடன் இருக்கும்.

கென்யா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியா காடுகளில் காணப்படும், நேக்கட் மோல் எலிகள், சுமார் 70 முதல் 80 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக வாழ்கின்றன, சில இடங்களில் இந்த எண்ணிக்கை 300 ஆகக் கூட இருக்கும். இந்த கூட்டங்களுக்கு ஒரு ராணி தலைவியாக செயல்படுவார்.

இந்த எலிக்கூட்டங்களில் பல்வேறு படிநிலைகள் இருக்கும், ஒவ்வொரு எலிகளுக்கும் தனித்தனி வேலைகள் பிரித்து வழங்கப்பட்டு இருக்கும். நிலத்துக்கு அடியில் இருக்கும் தாவரங்களில் இருந்து அதன் வேர், கிழங்கு ஆகிவற்றை கொண்டு வந்து உண்ணும்.

Naked Mole Rat

பட மூலாதாரம்,GETTY IMAGES

நேக்கட் மோல் எலிகள் உயிரியல் நம்பமுடியாத தனித்துவமானது. இவை நிலத்தடியில் நிலவும் தீவிர சூழலிலும் செழித்து வளரக்கூடியவை என்பதால் "எக்ஸ்ட்ரீமோபைல்ஸ்"(extremophiles) என்று கருதப்படுகின்றன, என்று இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உணர்வு நரம்பு மண்டலத்தை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர் ஈவன் செயின்ட் ஜான் ஸ்மித் கூறுகிறார்.

என்றென்றும் இளமை

இவற்றின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, நேக்கட் மோல் எலியின் வயதை கணிப்பது மிகவும் கடினம். ஏனெனில் வயதானால் இவற்றின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து குறைந்த அறிகுறிகளை மட்டுமே வெளிப்படுத்துகிறது.

ஆனால் மனிதர்களின் உடலில் சுருக்கம், நரை முடி மற்றும் நோய்களுக்கு ஆளாக கூடுவது என வயது முதிர்வை காட்டும் பல்வேறு அறிகுறிகள் ஏற்படுகின்றன.

வயதாகும் பாலூட்டிகளிடம் ஏற்படும் உடல் மாற்றங்கள் ஏதும் இந்த எலிகளுக்கு ஏற்படுவதில்லை. இதன் இதய செயல்பாடு, உடல் அமைப்பு, வளர்சிதை மாற்றம், எலும்பின் உறுதி என எதிலும் குறிப்பிடும் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர் ஸ்மித்தின் குழு, சுமார் 160 நேக்கட் மோல் எலிகளை ஐந்து குழுக்களாக வைத்துள்லார். இவையனைத்தும் 60% ஈரப்பதத்தில் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்கப்படுகின்றன.

"நான் கேம்பிரிட்ஜில் 10 ஆண்டுகளாக இந்த விலங்குகளை வைத்திருக்கிறேன். இது வரை எந்தவொரு எலியும் இயற்கையான காரணங்களால் இறப்பதை நான் ஒருபோதும் கண்டதில்லை" என்று ஸ்மித் கூறுகிறார்.

அடைபட்டிருக்கும் நிலையில், இரண்டு எலிகளுக்கு இடையில் சண்டை ஏற்படுவதாலேயே மரணம் நிகழ்ந்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

காடுகளில் வாழும் போது பாம்பு போன்ற உயிரினங்கள் வேட்டையாடுவதால் இந்த எலிகள் மரணிக்கின்றன. நிலத்துக்கு அடியில் வாழ்வதால் தான், இந்த எலிகளின் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது.

குளிர், மழை மற்றும் காலநிலை மாற்றங்களில் இருந்து இப்படித்தான் இந்த உயிரினம் தப்பிப் பிழைக்கிறது.

ஆனால் மனிதர்களுக்கு மரணம் ஏற்படுவதற்கான காரணம் இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. மனிதர்களில் இரண்டில் ஒருவருக்கு புற்றுநோயால் மரணம் ஏற்படுகிறது, என்கிறார் ஸ்மித்.

எலிகளுக்கும், சுண்டெலிகளுக்கும் இதே போன்ற புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு காணப்படும் நிலையில், நேக்கட் மோல் எலிகளுக்கு புற்றுநோயே ஏற்படுவதில்லை, இது மிகவும் அரிதானது, என ஸ்மித் கூறுகிறார்.

புற்றுநோயை வென்ற எலிகள்

நேக்கட் மோல் எலிகள் புற்றுநோயைத் தவிர்ப்பதற்கான காரணம் இன்னும் ஒரு மர்மமாக உள்ளது. இதை விளக்க பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், வலுவான விளக்கத்தை விஞ்ஞானிகளால் முன் வைக்க முடியவில்லை.

ஒரு கோட்பாட்டின்படி, இந்த எலிகள் `செல்லுலார் செனெசென்ஸ்`(cellular senescence) எனப்படும் புற்றுநோயை எதிர்க்கும் ஒரு பயனுள்ள வடிவத்தைக் கொண்டுள்ளன. இது பாதிக்கப்பட்ட செல்கள், கட்டுப்பாடற்ற முறையில் மேலும் பிரிந்து புற்றுநோயாக உருவாகாமல் தடுக்கிறது.

மற்றொரு கோட்பாடு, ஒரு சிக்கலான "சூப்பர் சர்க்கரையை" சுரக்கின்றன, இது செல்கள் ஒன்றிணைந்து புற்றுநோய் கட்டிகளாக வளர்வதை தடுக்கிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த சோதனையின் போது ஆராய்ச்சியாளர்கள், 11 தனிப்பட்ட நேக்கட் மோல் எலிகளின் குடல், சிறுநீரகம், கணையம், நுரையீரல் மற்றும் தோல் திசுக்களிலிருந்து வளர்ந்த 79 வெவ்வேறு செல் கோடுகளை பகுப்பாய்வு செய்தனர்.

அவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு மாற்றப்பட்ட வைரஸ் செல்களை செலுத்தினர். ஆச்சரியமூட்டும் விதமாக, பாதிக்கப்பட்ட எலிகளின் செல்கள் விரைவாக பெருகத் தொடங்கின. இது நேக்கட் மோல் எலியின் உடல் சூழல் தான் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது என்பதை உறுதிப்படுத்தியது.

Naked Mole Rat

பட மூலாதாரம்,GETTY IMAGES

"புற்றுநோய் என்பது செல்கள் பிறழ்வின் ஒரு விளைவாகும், இது செல்கள் கட்டுப்பாடற்ற முறையில் பெருக காரணமாகிறது", என்று ஸ்மித் கூறுகிறார். "பிற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது, நேக்கட் மோல் எலிகள் மிகவும் மெதுவான பிறழ்வு விகிதங்களைக் கொண்டுள்ளன." குறுகிய ஆயுட்காலம் கொண்ட விலங்குகள் பொதுவாக வேகமான பிறழ்வு விகிதங்களைக் கொண்டிருக்கும்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக, மோல் எலிகளின் பிறழ்வு விகிதம் ஒட்டகச்சிவிங்கிகள் போன்ற நீண்ட காலம் வாழும் பாலூட்டிகளின் அளவை ஒத்து மெதுவாக உள்ளன. மெதுவான பிறழ்வு விகிதம் என்பது, விலங்குகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் புற்றுநோயைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதாகும்.

வலிகளை வென்ற உயிரினம்

Naked Mole Rat

பட மூலாதாரம்,GETTY IMAGES

நேக்கட் மோல் எலியின் விசித்திரமான பண்புகளில் ஒன்று, இவற்றுக்கு வலி அதிகமாக ஏற்படுவதில்லை. "இது அநேகமாக இவற்றின் உயர் கார்பன்-டை-ஆக்சைடு சூழலில் ஏற்பட்ட பரிணாம தழுவலின் விளைவாக இருக்கும்" என்று ஸ்மித் விளக்குகிறார்.

இந்த எலிகள் சுவாசித்து வெளியே விடும் கார்பன்-டை-ஆக்சைட், இவை வசிக்கும் பொந்துகளில் சிக்கி அதிகரிக்க தொடங்கும். இது போல வேறு எந்த பாலூட்டிகளுக்கும் ஏற்பட்டால், அவை நிச்சயமாக பிரச்சனைக்கு வழிவகுக்கும். கார்பன் டை ஆக்சைட் தண்ணீருடன் வினை புரிந்து, கார்போனிக் அமிலமாக மாறி, நரம்புகளில் வலியை தூண்டும்.

மனிதர்களுக்கு ஏற்படும் முடக்கு வாதம் போன்ற நோய்களில் இந்த வினை தான் நடக்கிறது. இதன் மூலம் அதிக வலி ஏற்படும். ஆனால் நேக்கட் மோல் எலிகளுக்கு இந்த வலி ஏதும் ஏற்படுவதில்லை. இந்த வலி என்பது நமக்கு ஏற்படும் காயத்தின் மீது எலுமிச்சை சாறு அல்லது வினிகரை ஊற்றும் போது ஏற்படும் வலிக்கு ஒப்பானது, என்கிறார் ஸ்மித்.

இந்த சகிப்புத்தன்மைக்கான மூலக்கூறு அடிப்படையை அவர் ஆய்வு செய்தார். அபோது இந்த எலிக்கு உணர்வு நரம்புகளின் ஆக்டிவேட்டராக அந்த அமிலம் செயல்படாமல், ஒரு மயக்க மருந்து போல செயல்பட காரணமான ஒரு மரபணுவை அடையாளம் கண்டார்.

ஆய்வின் அவசியம்

நேக்கட் மோல் எலிகளின் உயிரியல் செயல்பாடுகள் நம் மனதை எப்படி மயக்குகிறதோ, அவைகளை கண்காணித்து வேலை செய்யும் அளவுக்கு எளிதான இனங்கள் அல்ல, அதாவது உலகளவில் சில ஆராய்ச்சிக் குழுக்கள் மட்டுமே நம்பமுடியாத இந்த இனத்தை குறித்து ஆய்வு செய்கின்றன.

"இவற்றின் தீவிர உயிரியல் மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், அதிக தகவல்களை தரக்கூடியவையாக இருந்தாலும், அனைவராலும் இந்த இனத்தை குறித்து ஆய்வு செய்ய ஆய்வகங்கள் அமைப்பது அவ்வளவு எளித்தல்ல, என ஸ்மித் கூறுகிறார்.

சூடான மற்றும் ஈரப்பதமான சூழல்களைப் பிரதிபலிக்கும் தளவாடங்களைத் தவிர, மோல் எலியின் ஆயுட்காலம் பிற எலிகளை விட நீண்டது. ஒரே ஒரு இனப்பெருக்க ஜோடி மட்டுமே உள்ள நிலையில், அவை பிரசவிக்க 75 நாட்கள் வரை ஆகும். இதன் விளைவாக சோதனைகளைத் திட்டமிடும்போது நீண்ட காத்திருப்பு நேரம் ஏற்படுகிறது.

புற்றுநோய் போன்ற பிற மருத்துவத் துறைகளில் உள்ள நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றவும், தனது எலிகளைப் பயன்படுத்தி புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், "ஸ்மித் நேக்கட் மோல் எலி அமைப்பு" ஒன்றை அமைத்தார்.

இந்த பாலூட்டிகள் ஏன் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க முடிந்தால், அவர்கள் இந்த அறிவை நோய்த்தடுப்பு சிகிச்சைகள் அல்லது புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளாக மாற்ற முடியும் என்று ஸ்மித் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cv21ejp1d79o

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஏராளன் said:

புற்றுநோயை எதிர்த்து வாழும் ‘நேக்கட் மோல்’ எலி: மனிதர்களின் நீண்ட ஆயுளுக்கான ஆய்வில் பலன் தருமா?

Naked Mole Rat

பட மூலாதாரம்,GETTY IMAGES

8 மணி நேரங்களுக்கு முன்னர்

நேக்கட் மோல் எலிகளுக்கு அவ்வளவு எளிதில் வயதாவதில்லை. இவை புற்றுநோயை தனது நோய் எதிர்ப்பு சக்தியால் எதிர்த்து ஆரோக்கியமாக வாழ்கின்றன. இந்த உயிரினத்தின் இந்த பண்புகளில் இருந்து எப்படி நீண்ட ஆயுளுடன் மனிதர்கள் வாழ முடியும் என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேக்கட் மோல் எலியின் பண்புகள்

வாயில் இருந்து நீளும் நீண்ட பற்கள், முடியற்ற தோல்கள் என நேக்கட் மோல் எலி பார்ப்பதற்கு உங்கள் செல்லப்பிராணிகளை போல இருப்பதில்லை. அழகில்லாத குறையை இதன் அசாத்திய குணநலன்கள் நிவர்த்தி செய்கின்றன.

அளவில் 13 அங்குலம் மட்டுமே இருக்கும் இந்த சிறிய எலிகள், சராசரியாக 30 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. இந்த எலிகள் தனது பற்களை கொண்டு வாழ்வதற்கு தேவையான பொந்துகளை மண்ணுக்கு அடியில் தோண்டுகின்றன. இப்படி செய்வதன் மூலம், மண்ணில் பல்லுயிர் பெருக்கம் மேம்பட்டு சுற்றுச்சூழலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன.

அகழெலி என்று அழைக்கப்பட்டும் இந்த நேக்கட் மோல் எலிக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய்கள் ஏதும் வருவதில்லை. அதற்கு உறுதுணையாக இதன் நோய் எதிர்ப்புச் சக்தி செயல்படுகிறது. முதுமை மற்றும் வலியிலிருந்து விடுபட்டுள்ள இந்த விசித்திரமான தோற்றமுள்ள உயிரினங்கள் நீண்ட காலமாக விஞ்ஞானிகளை கவர்ந்துள்ளன.

 

மனித குலத்திற்கு அளிக்கும் குடை

நேக்கட் மோல் எலியின் பண்புகளில் இருந்து, மனிதனுக்கு அதிக ஆயுள் மற்றும் புற்றுநோயை எதிர்க்கும் சக்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

வரலாற்று ரீதியாக எலிகள் மற்றும் சுண்டெலிகள், மனிதர்களின் உடற்கூறு பண்புகளை புரிந்து கொண்டு வரும் நிலையில், நேக்கட் மோல் எலிகளினால் மனித குலத்திற்கு தேவையான மருத்துவ ஆராய்ச்சிகளின் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் நடக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

குறைவான ஆக்சிஜன்

நேக்கட் மோல் எலிகளால் குறைந்த ஆக்சிஜன் அளவு இருக்கும் சூழலில் நீண்ட காலத்திற்கு வாழ முடியும். ஆக்சிஜனை சுவாசித்து உயிர் வாழும் வேறு எந்த உயிரினங்களாலும், இந்த எலிகள் வாழும் சூழலில் வாழ முடிவதில்லை. இது இந்த எலிகளின் அசாதாரண பண்புகளின் ஒரு அறிகுறியாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

குறைவான ஆக்சிஜன் இருக்கும் சூழலில் சாதாரண எலிகளால், இரண்டு ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமெனில், அதே அளவுள்ள நேக்கட் மோல் எலியால் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும்.

மனிதர்களின் உருவத்துடன் ஒப்பிடும் போது 450 ஆண்டுகளுக்கு மனிதன் வாழ்வதற்கு இது சமமாகும். பெரும்பாலான ஏரோபிக்(ஆக்சிஜன் சுவாசித்து வாழும் உயிரினங்கள்) உயிரினங்கள் இந்த சூழலில் உயிர் வாழ போராடும்.

இந்த இன எலிகள், `ஹெட்டரோசெபாலஸ் கிளாபர்` என்னும் அறிவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் "வழுக்கை தலை பொருள்" என்பது ஆகும். இந்த எலிகள் வடகிழக்கு ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல பகுதிகளில் வாழ்பவை. பல கால்பந்து ஆடுகளங்களின் நீளத்திற்கு இந்த எலிகளின் பொந்துகள் பூமிக்கடியில் சுரங்கம் போல பல அறைகளுடன் இருக்கும்.

கென்யா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியா காடுகளில் காணப்படும், நேக்கட் மோல் எலிகள், சுமார் 70 முதல் 80 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக வாழ்கின்றன, சில இடங்களில் இந்த எண்ணிக்கை 300 ஆகக் கூட இருக்கும். இந்த கூட்டங்களுக்கு ஒரு ராணி தலைவியாக செயல்படுவார்.

இந்த எலிக்கூட்டங்களில் பல்வேறு படிநிலைகள் இருக்கும், ஒவ்வொரு எலிகளுக்கும் தனித்தனி வேலைகள் பிரித்து வழங்கப்பட்டு இருக்கும். நிலத்துக்கு அடியில் இருக்கும் தாவரங்களில் இருந்து அதன் வேர், கிழங்கு ஆகிவற்றை கொண்டு வந்து உண்ணும்.

Naked Mole Rat

பட மூலாதாரம்,GETTY IMAGES

நேக்கட் மோல் எலிகள் உயிரியல் நம்பமுடியாத தனித்துவமானது. இவை நிலத்தடியில் நிலவும் தீவிர சூழலிலும் செழித்து வளரக்கூடியவை என்பதால் "எக்ஸ்ட்ரீமோபைல்ஸ்"(extremophiles) என்று கருதப்படுகின்றன, என்று இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உணர்வு நரம்பு மண்டலத்தை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர் ஈவன் செயின்ட் ஜான் ஸ்மித் கூறுகிறார்.

என்றென்றும் இளமை

இவற்றின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, நேக்கட் மோல் எலியின் வயதை கணிப்பது மிகவும் கடினம். ஏனெனில் வயதானால் இவற்றின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து குறைந்த அறிகுறிகளை மட்டுமே வெளிப்படுத்துகிறது.

ஆனால் மனிதர்களின் உடலில் சுருக்கம், நரை முடி மற்றும் நோய்களுக்கு ஆளாக கூடுவது என வயது முதிர்வை காட்டும் பல்வேறு அறிகுறிகள் ஏற்படுகின்றன.

வயதாகும் பாலூட்டிகளிடம் ஏற்படும் உடல் மாற்றங்கள் ஏதும் இந்த எலிகளுக்கு ஏற்படுவதில்லை. இதன் இதய செயல்பாடு, உடல் அமைப்பு, வளர்சிதை மாற்றம், எலும்பின் உறுதி என எதிலும் குறிப்பிடும் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர் ஸ்மித்தின் குழு, சுமார் 160 நேக்கட் மோல் எலிகளை ஐந்து குழுக்களாக வைத்துள்லார். இவையனைத்தும் 60% ஈரப்பதத்தில் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்கப்படுகின்றன.

"நான் கேம்பிரிட்ஜில் 10 ஆண்டுகளாக இந்த விலங்குகளை வைத்திருக்கிறேன். இது வரை எந்தவொரு எலியும் இயற்கையான காரணங்களால் இறப்பதை நான் ஒருபோதும் கண்டதில்லை" என்று ஸ்மித் கூறுகிறார்.

அடைபட்டிருக்கும் நிலையில், இரண்டு எலிகளுக்கு இடையில் சண்டை ஏற்படுவதாலேயே மரணம் நிகழ்ந்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

காடுகளில் வாழும் போது பாம்பு போன்ற உயிரினங்கள் வேட்டையாடுவதால் இந்த எலிகள் மரணிக்கின்றன. நிலத்துக்கு அடியில் வாழ்வதால் தான், இந்த எலிகளின் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது.

குளிர், மழை மற்றும் காலநிலை மாற்றங்களில் இருந்து இப்படித்தான் இந்த உயிரினம் தப்பிப் பிழைக்கிறது.

ஆனால் மனிதர்களுக்கு மரணம் ஏற்படுவதற்கான காரணம் இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. மனிதர்களில் இரண்டில் ஒருவருக்கு புற்றுநோயால் மரணம் ஏற்படுகிறது, என்கிறார் ஸ்மித்.

எலிகளுக்கும், சுண்டெலிகளுக்கும் இதே போன்ற புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு காணப்படும் நிலையில், நேக்கட் மோல் எலிகளுக்கு புற்றுநோயே ஏற்படுவதில்லை, இது மிகவும் அரிதானது, என ஸ்மித் கூறுகிறார்.

புற்றுநோயை வென்ற எலிகள்

நேக்கட் மோல் எலிகள் புற்றுநோயைத் தவிர்ப்பதற்கான காரணம் இன்னும் ஒரு மர்மமாக உள்ளது. இதை விளக்க பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், வலுவான விளக்கத்தை விஞ்ஞானிகளால் முன் வைக்க முடியவில்லை.

ஒரு கோட்பாட்டின்படி, இந்த எலிகள் `செல்லுலார் செனெசென்ஸ்`(cellular senescence) எனப்படும் புற்றுநோயை எதிர்க்கும் ஒரு பயனுள்ள வடிவத்தைக் கொண்டுள்ளன. இது பாதிக்கப்பட்ட செல்கள், கட்டுப்பாடற்ற முறையில் மேலும் பிரிந்து புற்றுநோயாக உருவாகாமல் தடுக்கிறது.

மற்றொரு கோட்பாடு, ஒரு சிக்கலான "சூப்பர் சர்க்கரையை" சுரக்கின்றன, இது செல்கள் ஒன்றிணைந்து புற்றுநோய் கட்டிகளாக வளர்வதை தடுக்கிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த சோதனையின் போது ஆராய்ச்சியாளர்கள், 11 தனிப்பட்ட நேக்கட் மோல் எலிகளின் குடல், சிறுநீரகம், கணையம், நுரையீரல் மற்றும் தோல் திசுக்களிலிருந்து வளர்ந்த 79 வெவ்வேறு செல் கோடுகளை பகுப்பாய்வு செய்தனர்.

அவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு மாற்றப்பட்ட வைரஸ் செல்களை செலுத்தினர். ஆச்சரியமூட்டும் விதமாக, பாதிக்கப்பட்ட எலிகளின் செல்கள் விரைவாக பெருகத் தொடங்கின. இது நேக்கட் மோல் எலியின் உடல் சூழல் தான் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது என்பதை உறுதிப்படுத்தியது.

Naked Mole Rat

பட மூலாதாரம்,GETTY IMAGES

"புற்றுநோய் என்பது செல்கள் பிறழ்வின் ஒரு விளைவாகும், இது செல்கள் கட்டுப்பாடற்ற முறையில் பெருக காரணமாகிறது", என்று ஸ்மித் கூறுகிறார். "பிற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது, நேக்கட் மோல் எலிகள் மிகவும் மெதுவான பிறழ்வு விகிதங்களைக் கொண்டுள்ளன." குறுகிய ஆயுட்காலம் கொண்ட விலங்குகள் பொதுவாக வேகமான பிறழ்வு விகிதங்களைக் கொண்டிருக்கும்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக, மோல் எலிகளின் பிறழ்வு விகிதம் ஒட்டகச்சிவிங்கிகள் போன்ற நீண்ட காலம் வாழும் பாலூட்டிகளின் அளவை ஒத்து மெதுவாக உள்ளன. மெதுவான பிறழ்வு விகிதம் என்பது, விலங்குகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் புற்றுநோயைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதாகும்.

வலிகளை வென்ற உயிரினம்

Naked Mole Rat

பட மூலாதாரம்,GETTY IMAGES

நேக்கட் மோல் எலியின் விசித்திரமான பண்புகளில் ஒன்று, இவற்றுக்கு வலி அதிகமாக ஏற்படுவதில்லை. "இது அநேகமாக இவற்றின் உயர் கார்பன்-டை-ஆக்சைடு சூழலில் ஏற்பட்ட பரிணாம தழுவலின் விளைவாக இருக்கும்" என்று ஸ்மித் விளக்குகிறார்.

இந்த எலிகள் சுவாசித்து வெளியே விடும் கார்பன்-டை-ஆக்சைட், இவை வசிக்கும் பொந்துகளில் சிக்கி அதிகரிக்க தொடங்கும். இது போல வேறு எந்த பாலூட்டிகளுக்கும் ஏற்பட்டால், அவை நிச்சயமாக பிரச்சனைக்கு வழிவகுக்கும். கார்பன் டை ஆக்சைட் தண்ணீருடன் வினை புரிந்து, கார்போனிக் அமிலமாக மாறி, நரம்புகளில் வலியை தூண்டும்.

மனிதர்களுக்கு ஏற்படும் முடக்கு வாதம் போன்ற நோய்களில் இந்த வினை தான் நடக்கிறது. இதன் மூலம் அதிக வலி ஏற்படும். ஆனால் நேக்கட் மோல் எலிகளுக்கு இந்த வலி ஏதும் ஏற்படுவதில்லை. இந்த வலி என்பது நமக்கு ஏற்படும் காயத்தின் மீது எலுமிச்சை சாறு அல்லது வினிகரை ஊற்றும் போது ஏற்படும் வலிக்கு ஒப்பானது, என்கிறார் ஸ்மித்.

இந்த சகிப்புத்தன்மைக்கான மூலக்கூறு அடிப்படையை அவர் ஆய்வு செய்தார். அபோது இந்த எலிக்கு உணர்வு நரம்புகளின் ஆக்டிவேட்டராக அந்த அமிலம் செயல்படாமல், ஒரு மயக்க மருந்து போல செயல்பட காரணமான ஒரு மரபணுவை அடையாளம் கண்டார்.

ஆய்வின் அவசியம்

நேக்கட் மோல் எலிகளின் உயிரியல் செயல்பாடுகள் நம் மனதை எப்படி மயக்குகிறதோ, அவைகளை கண்காணித்து வேலை செய்யும் அளவுக்கு எளிதான இனங்கள் அல்ல, அதாவது உலகளவில் சில ஆராய்ச்சிக் குழுக்கள் மட்டுமே நம்பமுடியாத இந்த இனத்தை குறித்து ஆய்வு செய்கின்றன.

"இவற்றின் தீவிர உயிரியல் மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், அதிக தகவல்களை தரக்கூடியவையாக இருந்தாலும், அனைவராலும் இந்த இனத்தை குறித்து ஆய்வு செய்ய ஆய்வகங்கள் அமைப்பது அவ்வளவு எளித்தல்ல, என ஸ்மித் கூறுகிறார்.

சூடான மற்றும் ஈரப்பதமான சூழல்களைப் பிரதிபலிக்கும் தளவாடங்களைத் தவிர, மோல் எலியின் ஆயுட்காலம் பிற எலிகளை விட நீண்டது. ஒரே ஒரு இனப்பெருக்க ஜோடி மட்டுமே உள்ள நிலையில், அவை பிரசவிக்க 75 நாட்கள் வரை ஆகும். இதன் விளைவாக சோதனைகளைத் திட்டமிடும்போது நீண்ட காத்திருப்பு நேரம் ஏற்படுகிறது.

புற்றுநோய் போன்ற பிற மருத்துவத் துறைகளில் உள்ள நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றவும், தனது எலிகளைப் பயன்படுத்தி புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், "ஸ்மித் நேக்கட் மோல் எலி அமைப்பு" ஒன்றை அமைத்தார்.

இந்த பாலூட்டிகள் ஏன் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க முடிந்தால், அவர்கள் இந்த அறிவை நோய்த்தடுப்பு சிகிச்சைகள் அல்லது புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளாக மாற்ற முடியும் என்று ஸ்மித் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cv21ejp1d79o

மனிதர்களில் இரண்டு பேரில் ஒருவர், புற்று நோயால் இறக்கின்றார்களாம்? 😮

  • Sad 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.