Jump to content

நன்கொடை பணத்தில் நிர்மாணிக்கப்படும் போலி தலதா மாளிகை! ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போலி தலதா மாளிகையொன்று உருவாக்கப்பட்டு நிர்மாணிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளார்.

குருநாகல் வடகட வீதியில் பொத்துஹெர என்ற இடத்தில் ஜனக சேனாதிபதி என்ற நபரால் போலியான போலி தலதா மாளிகை நிர்மாணிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

போலி தலதா மாளிகை கட்டுக்கதையால் பல உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏமாற்றப்பட்டு பணம், தங்கம் போன்றவற்றை நன்கொடையாக வழங்கி வருகின்றமையும் தெரியவந்துள்ளது.

நன்கொடை பணத்தில் நிர்மாணிக்கப்படும் போலி தலதா மாளிகை! ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் | Urgent Letter To The President Mahanayaka Thero

ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்

 

மேலும், பௌத்த மக்களின் உள்ளங்களை புண்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுவது தொடர்பிலும் மகாநாயக்க தேரர்களினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பௌத்த மதத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்கு கட்டுப்பட்ட அரசாங்கம் இவ்வாறான பௌத்த விரோதச் செயல்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அஸ்கிரி மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Gallery

https://tamilwin.com/article/urgent-letter-to-the-president-mahanayaka-thero-1672875225

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் தந்த தாதுக்களை அவமதித்தமைக்காக சேபாலவுக்கு விளக்கமறியல் - போலி தலதா மாளிகை நிர்மாணம் தொடர்பிலும் தனி விசாரணை

By DIGITAL DESK 5

06 JAN, 2023 | 07:59 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

புத்த பெருமானின் புனித தந்த தாதுக்களை அவமதித்து பௌத்த மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை சமூக வலைத் தலங்களில் வெளிப்படுத்தியமை தொடர்பிலான  குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர்  சேபால அமரசிங்கவை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொழும்பு  மேலதிக நீதவான் தரங்கா  மஹவத்த வெள்ளிக்கிழமை (06)  இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைக்கப்பெற்ற  முறைப்பாடுகளுக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இரு சம்பவங்கள் குறித்த விசாரணைகளை சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவுக்கு பாரப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி, அஸ்கிரிய மற்றும் மல்வத்து பெளத்த பீடங்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இவ்வாறு அம்முறைப்பாடுகள் சி.ஐ.டி.க்கு கையளிக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்று, சமூக ஊடக ஆர்வலர்  சேபால அமரசிங்க புத்த பெருமானின் புனித தந்த தாதுக்கள் குறித்து முன் வைத்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்த விசாரணைகளாகும்.

களனி புகையிரத நிலைய வீதி, பௌத்த தகவல் நிலையத்தின்  தலைவர் அஹுங்கல்லே ஸ்ரீ ஜினாநந்த தேரர், பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெருமவிடம் எழுத்துமூலம் முறைப்பாடு செய்த முறைப்பாடு, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிடம்  அனுப்பட்டதை அடுத்து, இவ்வாறு  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொது மக்கள்  முறைப்பாட்டுப் பிரிவுக்கு ,  விடயத்தை விசாரிப்பதற்காக பொறுப்பளிக்கப்பட்டதாக  சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 இது குறித்து உதவி பொலிஸ்  அத்தியட்சர் ஒருவரின் கீழ் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நேற்று இரவு ( 05) சேபால அமரசிங்கவின் பெல்லன்விலவில் அமைந்துள்ள  வீட்டுக்கு சென்ற சிறப்புக்குழு அவரைக் கைது செய்தது.

சேபால அமரசிங்க, 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் அரசியல் உரிமைகளுக்கான இணக்கப்பாட்டு சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் கீழ் குற்றங்களை புரிந்துள்ளதாக கூறி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

 இந் நிலையிலேயே அவரை சி.ஐ.டி.யினர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் பயன்படுத்திய கணனியை கைப்பற்றி கணனி தடயவியல் ஆய்வு கூடத்தில் வைத்து பகுப்பாய்வுகளை  மேற்கொண்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இந் நிலையிலேயே சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதனிடையே,  குருணாகல் - பொத்துஹர, வதாகட பகுதியில்  போலி தலதா மாளிகை ஒன்று நிர்மாணிக்கப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடும் பொலிஸ் மா அதிபரால் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்  மா அதிபருக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.

அது குறித்தும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

ஜானக சேனாதிபதி என்பவர் இந்த வழிபாட்டிடத்தை பொத்துஹர , வதாகட பகுதியில் நிர்மாணிப்பதாகவும், இது குறித்து பல பக்தர்கள்  தமது நிதி பங்களிப்புக்களை,  நல்கி வருவதாகவும் கூறப்படுகின்றது. இந் நிலையிலேயே போலி தலதா மாளிகை தொடர்பிலான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

https://www.virakesari.lk/article/145164

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா…. தலதா மாளிகையை பற்றி ஒருவர் தவறான தகவலை தெரிவித்தவுடன்….
மகா நாயக்க பீடங்கள், உள்ளூர் பொலிஸ், புலனாய்வுத் துறை, நீதவான், பிரதி பொலிஸ் மா அதிபர், சிறப்புக் குழு, ஜனாதிபதி என்று… எல்லாரும் பதறி அடித்து, கதறிக் கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழர் நாம்தான்…  வெத்து வேட்டுகள் மாதிரி…  
பழம் புண்ணை, மாறி மாறி… சொறிந்து கொண்டு இருக்கின்றோம்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செபால நல்லதொரு ஆய்வாளர். இவர் எல்லா மத மூட நம்பிக்கைகளையும் விமர்சிப்பவர். 
சமீபத்தில் தன்னை ஒரு தீர்கதரிசி என கூரிக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவ போதகரையும் இவர் விமர்சித்து இருந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, colomban said:

செபால நல்லதொரு ஆய்வாளர். இவர் எல்லா மத மூட நம்பிக்கைகளையும் விமர்சிப்பவர். 
சமீபத்தில் தன்னை ஒரு தீர்கதரிசி என கூரிக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவ போதகரையும் இவர் விமர்சித்து இருந்தார். 

பாவம்… ஆளை, ஒரு வழி பண்ணிப் போட்டுத்தான், வெளியில் விடுவார்கள் போலுள்ளது. 
சும்மா விகாரையில் கை வைத்தாலே… பதறியடிப்பவர்கள்,
தலதா மாளிகை என்றால் விசேட கவனிப்பு இருக்கும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சமூக ஊடக ஆர்வலர் சேபால அமரசிங்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல் !

தலதா மாளிகையை  அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சமூக ஊடக ஆர்வலர் சேபால அமரசிங்க எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதிவான்  பிரசன்ன அல்விஸ் இன்று (17)  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபர் தொடர்பில் உயர் நீதிமன்றில் பிணை பெற்றுக்கொள்ள முடியும் என நீதிவான் சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடக ஆர்வலர் சேபால அமரசிங்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல் ! | Virakesari.lk

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.