Jump to content

தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, இல்லவேயில்லை..... தவறு! நான் எங்கேயும் தேவையற்ற வாதங்களை ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால் அடியடா பாப்போம் தைரியமிருந்தால் என்று ஒருவர் வம்புக்கிழுத்துவிட்டு அடிச்சுப்போட்டான் என்று குற்றஞ்சொல்வதால் பயனில்லை. அவ்வளவு விவாதம் நடக்கிறது அமைதியாக இருந்துவிட்டு பெருமாள் கருத்தை கண்டவுடன் நீங்கள் குதிப்பதிலும் பாக்க பட்டதை சட்டென சொன்ன பெருமாள் மேல். பதிவின் ஆரம்பமே சாணக்கியனைப்பற்றியது தான்! ஏன் அந்த விபரங்களை எழுதினேன் என்று பெருமாள் விளக்கப்படுத்தியுள்ளார்.  உங்களைப்போலவே மற்றவர்களுக்கும் உணர்வுகளும் உண்டு என்று நினைத்தால் பிரச்சனையே இல்லை. அரசியல்வாதி மக்களுக்கு பொதுவானவர், வடமாகாண அரசியல்வாதிகளை எல்லோரும் விமர்சிக்கிறார்கள் நாங்கள் கொடி தூக்கினோமா? சவால் விட்டோமா? எங்கே திருந்த மாட்டார்களா, எங்களது அபிலாசைகளை நிறைவேற்ற மாட்டார்களா என்கிற ஆதங்கம், நப்பாசையில் விமர்சிக்கிறோமே தவிர அவர்கள்மேல் எங்கள் யாருக்கும் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் கிடையாது. பெருமாள் தனது பக்க நிஞாயத்தை விளக்கி விட்டார் இதற்குமேல் இதை இழுத்து நீங்கள்  சரி நான் சரி என்று வாதாட வேண்டாம். சரி நான் ஒரு பக்கம் சார்ந்தவராகவே இருந்துவிட்டு போகிறேன், நன்றி வணக்கம்!

27 minutes ago, Justin said:

இருவர் சுட்டிக் காட்டிய பின்னரும், பெருமாள் ஒருமையில் விளித்த அந்தக் கருத்தை  அகற்றவில்லை

இது மற்றப்பக்கத்துக்கும் பொருந்தும்!      

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 148
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

இந்த சீத்துவத்தில உங்களுக்கு தீர்வு? அதுவும் வடக்கும் கிழக்கும் இணைத்து? பொலிஸ் அதிகாரத்தோட? இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுக்குப்பின் காலம் நினைத்தால், அதுவரை இலங்கையில் இனம் நிலைத்தால், உங்க

island

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை ஏக வசனத்தில் குறிப்பிடுவது தமிழ் மரபும் இல்லை,  யாழ்கள விதிமுறையும் அதற்கு இடமளிக்கவில்லை.  இப்படியாக  தமிழ் இனத்தின் மாண்பைக்  கெடுக்கும் நீங்கள்

MEERA

சாணக்கிய சிறீலங்கா சுதந்திர கட்சியில் இருந்தது உங்களுக்கு தெரியவில்லை..  செக்கா சிவலிங்கமா என்று தெளிவுபடுத்த யாழ்ப்பாணத்தவன் தான் உங்களுக்கு தேவை…

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

கோஷான், யஸ்ரின்! நீங்கள் எதுவேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள்,

இதில் பலது ஜஸ்ரின்னுக்கானது என நினைக்கிறேன். ஆனால் என்னையும் சேர்த்து எழுதியதால் எழுதுகிறேன் (இனிமேல் ஒரு @ போட்டுவிடுங்கள் வசதியாய் இருக்கும்). 

என்னை பொறுத்தவரை நான் என் கண்ணில் பட்ட போதெல்லாம் தமிழரிடையே மதவாதம், சாதிவாதம், பிரதேசவாதம் எங்கு எழுந்தாலும் (யாழில் மட்டும் அல்ல) அதன் தலையில் அருகில் இருக்கும் எதையாவது தூக்கி ஒரு போடு போட்டே வந்துள்ளேன். அது பண்டத்தரிப்பு பாதிரியார், மன்னார் வளைவு, புத்தூர் மயானம் எதுவானாலும்.

அதே போல் வர்க, மத, சாதிய, பிரதேச அடையாளங்களை முன்னிறுத்தி தமது தவறுகளை மறைக்கப்பார்க்கும் போதும் அதை எதிர்த்துள்ளேன் (கருணா, அருண்).

என்னை பொறுத்தவரை நேரடியாக இந்த வாதங்களை பேசுவோர், இந்த வாதங்களை தமது தவறை மறைக்க ஒரு ஊன்றுகோலாக பாவிப்போர் இருவருமே, கெட்ட சயனைடுகளே.

உதாரணமாக சுமந்திரன் அகற்றப்பட வேண்டும் - என்பதை ஏற்கிறேன் ஆனால் அதற்கான உத்தியாக அவரின் மதத்தை பயன்படுத்துவதை முற்றிலும் எதிர்கிறேன்.

தனியே என் தனிப்பட்ட தார்மீக காரணங்கள் மட்டும் அல்ல.

இது ஒரு விசம்.

சுமந்திரன் நாளை போய்விடலாம், அல்லது நாளை மறுநாள் - ஆனால் இந்த விசப்பிரிவினையை நாம் மக்கள் மத்தியில் ஊண்டி விட்டால் அது காலத்துக்கும் நம் இனத்தை நாசம் செய்யும்.

முஸ்லிம்கள் தனி அலகாக உணர்ந்தபோது நாம் ஒருங்கிணைந்த, இப்போ உள்ள எல்லைகள் சேர் வட-கிழக்கு என்பதை கைவிட வேண்டி வந்தது.

தமிழ் கிறிஸ்தவர்களும் அப்படி உணர்ந்தால்- நாம் ஒவ்வொரு குறிச்சிக்கும்தான் அதிகாரபரவலை கேட்க வேண்டி வரும்.

இங்கே யாழில் மாவீரர்களை அவமதித்தார் என்பது இலகுவாக எறியப்படும் ஒரு வசவு.

என்னை பொறுத்தவரை ஒவ்வொருமுறை வினையாக, அல்லது எதிர்வினையாக இந்த வாத கருத்துக்களை நாம் எழுதும்போதும்…. இதற்கு மேல் இல்லை என்ற அளவில் அவர்களை அவமரியாதை செய்கிறோம்.

 

Edited by goshan_che
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

தமிழ் கிறிஸ்தவர்களும் அப்படி உணர்ந்தால்- நாம் ஒவ்வொரு குறிச்சிக்கும்தான் அதிகாரபரவலை கேட்க வேண்டி வரும்.

இது தேவையற்ற பயம் அல்லது கற்பனை. சிலர் கிறிஸ்தவர்களை அந்நியர்களாக நினைக்கிறார்கள் அவர்களுக்கு உரிமைஇல்லை என கருதுகிறார்கள் அது அறியாத்தனம்.

 

8 hours ago, goshan_che said:

உதாரணமாக சுமந்திரன் அகற்றப்பட வேண்டும் - என்பதை ஏற்கிறேன் ஆனால் அதற்கான உத்தியாக அவரின் மதத்தை பயன்படுத்துவதை முற்றிலும் எதிர்கிறேன்.

இது முற்றிலும் கற்பனை. அனுதாபத்தை தேடுவதற்காக சம்பந்தப்பட்டவர்கள் வலிந்து மூடும் போர்வை. அது முடிந்த கதை தொடர வேண்டாமே!

பல நிஞாயாவாதிகள் உண்டு, இங்கு முன்னாள் நீதியரசரை காரணமில்லாமல் சிங்களசம்பந்தி கொழும்பில் வசித்தவர் அவருக்கு இதெல்லாம் விளங்காது என்று அவரை ஏளனம் செய்தபோதெல்லாம் மவுன விரதம் காத்தவர்களெல்லாம் சிலபேரை சொன்னவுடன் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதை பாத்தால் நடுவுநிலைமை கூட கனம் பாத்துத்தான் அசையும்.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, island said:

அவர் மக்களுக்கு என்ன செய்தார் என்பதை, அவரை தெரிவு செய்த மக்கள் தான் கூற வேண்டும். அவர் மக்களுக்கு ஏதும் செய்யமால் விட்டால், அவரை தெரிவு செய்த மக்கள் அடுத்தமுறை அவரை நிராகரிப்பர். அதுவே ஜனநாயகம்.

 என்னாலும் உங்களாலும் எங்கோ தூர தேசத்தில் இருந்து புலம்ப மட்டுமே  முடியும். 

காலப்போக்கில் றிமோட் கொன்றோல்கள் பற்றரி வீக்காகி, ஒவ்வொன்றாக பழுதடைந்து டிஸ்போஸ் ஆகிவிடும். அதுவே நல்லது நடப்பதற்கான அறிகுறி. 

நீங்கள் சொல்வது உண்மை தான்...பிறகு எப்படி உங்களால் இங்கு இருந்து கொண்டு கோத்தாவையோ, பிள்ளையானையோ விமர்சிக்க முடியுது?....அதுவும் அங்குள்ளவர்கள் விருப்பம் அல்லவா!...இது உங்களுக்கு மட்டுமான பதில் அல்ல , உங்கள் கருத்தை ஆமோதிப்பவர்களுக்கும சேர்த்து தான் 

12 hours ago, Justin said:

முதலில் நான் யாழில் தொடர்ந்து இருந்து வரும் ஒரு ஆளல்ல என்பதை நீங்கள் அவதானித்தீர்களோ தெரியாது. வாசகனாகக் கூட நான் வராமல் இருந்த காலத்தில் நடந்ததை நீங்கள் கேட்டால் , நான் வரவில்லைத் தான்! ஏனெனில் நான் பெருமாள் எடுத்துக் கொண்ட "தகுதிப் பொலிஸ்" உத்தியோகம் போல எதையும் வைத்துக் கொண்டு யாழில் நிரந்தரமாக உலவவில்லை, நேரம் இருந்தால் வருவேன், ஏதாவது எழுத நினைத்தால் எழுதுவேன். அவ்வளவு தான்.

அடுத்தது, பெருமாளிடம் வெட்கம் , சுரணை இல்லையா என்று கேட்ட பாதி வசனத்தை மட்டும் வாசிக்காமல், அதன் முன்பகுதியையும் வாசித்து அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயலுங்கள். பெருமாளுக்குப் புரிந்திருக்கிறது என்பது அடுத்த அவரது பதில்களிலேயே வெளிப்பட்டிருக்கிறது. உங்களுக்குப் புரிய வைக்க எனக்கு அவசியமில்லை.

கரு பிரதேசவாதம் பேசினால், இங்கே களத்திலேயே இல்லாத சாணக்கியனை மதம் , குலம் கோத்திரம், பெயர் என்று ஒருமையில் விமர்சித்தது  எப்படி கருவின் பிரதேச வாதத்திற்குப் பதிலாகும் என்கிறீர்கள்? நியாயமாக கரு வுக்கு அல்லவா பதில் சொல்லியிருக்க வேண்டும்? அதை இருவர் சுட்டிக் காட்டிய பின்னரும், பெருமாள் ஒருமையில் விளித்த அந்தக் கருத்தை  அகற்றவில்லையென்பது மட்டுமல்ல, மேலும் மேலும் தன் "வாதக் குணத்தை" உறுதி செய்த பின்னரே, நான் எழுதினேன்.

உங்கள் பிரச்சினை, அரசியலில் , கொள்கையில் ஒத்த கருத்துள்ள ஒருவரின் கீழ்த்தரமான கருத்துக்களைக் கண்டிக்க அச்சப் படுகிறீர்கள். இந்தப் பிந்திய கருத்தின் மூலம், அப்படிப் பெருமாளின் மதவாத விஷக் கருத்தில் "ஒன்றுமே தீமையில்லை" என்று பூசி மெழுகவும் முயல்கிறீர்கள். உங்களைப் போல பலர் யாழ் களத்தில் "நம்ம ஆளு, வுட்றா வுட்றா" மன நிலையில் இருப்பதால் தான், பெருமாள் எழுதியது போன்ற விஷக் கருத்துகள் மேலும் மேலும் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஏனெனில், இதையெல்லாம் நீங்கள் normalize செய்து விடுகிறீர்கள்!

கருவின் எழுத்தில் பிரதேசவாதத்தை கண்டவுடனேயே அதைசுட்டிக் காட்டி இருந்தீர்கள் என்டால், பெருமாள், போன்றவர்கள்  இப்படியான கருத்துக்களை எழுதி இருக்க மாட்டார்கள்...அவர்கள் எப்படி ஒரு குழுவாக சேர்ந்து தங்களுக்கு சார்பானவர்கள் பிழை செய்தால் சுட்டிக் காட்டுவதில்லையோ அதே போல் தான் நீங்களும் செயற்படுகிறீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/1/2023 at 18:41, MEERA said:

சிறி திருத்தம் சாணக்கியவின் பரம்பரை தொடர்பாக நான் எதுவும் எழுதவில்லை.

மன்னிக்கவும் மீரா உங்களை சொல்லவில்லை அவசரத்தில் எழுதும் போது உங்கள் பெயர் வந்து விட்டது 

On 10/1/2023 at 20:26, goshan_che said:

சாமிவோவ்,

இதையேதான் சாமியோவ் நான் 3ம் பக்கத்தில சொல்லி இருக்கன்.

சில்லறைய பூரா அக்காவின் தட்டில் போடாமல் என் தண்டிலும் கொஞ்சம் போடுங்க சாமியோவ்🤣

கரு ஆதாரம் இல்லாமல் பிரதேசவாதம் என கூறியது தவறேதான். 

ஆனால் அதற்கு வந்த பதில்? 

நீங்களும் ஒரு பக்கத்தை மட்டும் நோவதாக படுகிறது.

 

கோசான் வயசு போக,போக கண் தெரியாது தான் ...கண்ணாடி போட்டு விட்டு வாசிக்கவும்.😂

 

On 10/1/2023 at 20:37, goshan_che said:

இங்கே நீங்களே கரு சொன்னதை போலதானே சொல்கிறீர்கள்?

கரு சாணாக்கியனின் மீதான தாக்குதலுக்கு அவரின் மட்டகளப்பு அடையாளம் காரணம் என்கிறார். 

நீங்கள் பாலா அண்ணை தன் மட்டகளப்பு என்பதை சொல்லி இருந்தால் அவருக்கும் அதுவே நடந்திருக்கும் என்கிறீகள்?

உங்கள் நிலைப்பாடு ஏறுக்குமாறாக இருக்கிறதே ?

பிகு

இங்கே பலருக்கு அடிமனதில் யாழ் மையவாதம் இருப்பதாக நான் முன்பே சந்தேகித்தே உள்ளேன்.

ஆனால் இந்த திரியில் அது வெளிப்பட்டதாக நான் உணரவில்லை.

ஆனால் பலரின் மதவாதம் மிக கொச்சையாக பல்லிளித்தது.

முதலாவது எழுதிய கருத்து இந்த திரியை வாசித்து ,கிரகித்து எழுதியது ...இரண்டாவது எழுதிய கருத்து பொதுவான தமிழரின் மனநிலை தெரிந்து எழுதியது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

இது தேவையற்ற பயம் அல்லது கற்பனை

இல்லை.

மேலே ஒருவர் எழுதியுள்ளார். தனது பெயரும் இந்து பெயர் இல்லை, தனது மதமும் சைவம் இல்லை என்பதால் முதலில் எழுதாமல் இருந்ததாக.

இத்தனைக்கும் அவர் நெஞ்சுரம் மிக்க ஒருவர். ஓரிருவரின் மதவாதத்தால் மொத்த இந்துக்களையும் வெறுக்ககூடியவரும் அல்ல.

அவரே இப்படி யோசிக்கும் அளவுக்கு இருக்கும் போது, சாதாரணமாக உணர்சிவசப்படுவோர்?

3 hours ago, satan said:

சிலர் கிறிஸ்தவர்களை அந்நியர்களாக நினைக்கிறார்கள் அவர்களுக்கு உரிமைஇல்லை என கருதுகிறார்கள் அது அறியாத்தனம்.

சிலர் அல்ல. மிகச்சிலர்.

ஆனால்…

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விடம் போதும்.

3 hours ago, satan said:

இங்கு முன்னாள் நீதியரசரை காரணமில்லாமல் சிங்களசம்பந்தி கொழும்பில் வசித்தவர் அவருக்கு இதெல்லாம் விளங்காது என்று அவரை ஏளனம் செய்தபோதெல்லாம்

இது நிச்சயமாக எனக்கு இல்லை. அல்லது 2013 இல் நான் எழுதியதை நீங்கள் வாசிக்கவில்லை.

1 hour ago, ரதி said:

முதலாவது எழுதிய கருத்து இந்த திரியை வாசித்து ,கிரகித்து எழுதியது ...இரண்டாவது எழுதிய கருத்து பொதுவான தமிழரின் மனநிலை தெரிந்து எழுதியது 

பொதுவான தமிழரின் மனநிலையை வைத்துத்தான் கருவும் இதை அணுகியுள்ளார் (அது தவறு).

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

கருவின் எழுத்தில் பிரதேசவாதத்தை கண்டவுடனேயே அதைசுட்டிக் காட்டி இருந்தீர்கள் என்டால், பெருமாள், போன்றவர்கள்  இப்படியான கருத்துக்களை எழுதி இருக்க மாட்டார்கள்...அவர்கள் எப்படி ஒரு குழுவாக சேர்ந்து தங்களுக்கு சார்பானவர்கள் பிழை செய்தால் சுட்டிக் காட்டுவதில்லையோ அதே போல் தான் நீங்களும் செயற்படுகிறீர்கள் 

எல்லாம் @Justin இன் வாதக் குணங்கள் மறைத்து விட்டன..

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 6/1/2023 at 20:43, karu said:

.

பதவிக்காக சிங்களவரோடு இருந்துவிட்டு அங்கு கிடைக்கவில்லையென்றவுடன் தமிழர் கட்சிகளுக்கு கட்சிதாவிய சாணக்கியனை எந்தவகையிலும் நம்பவியலாது. இனத்தையே விற்ற சுமந்திரனின் 2.0 ஆகவே இவரும் வெளித்தெரிவார், செயலாற்றுவார். நாளை தேவைப்படின் மீண்டும் முருங்கை மரம் ஏறுவார். இவருக்கு எந்தவகையிலும் நான் ஆதரவு கிடையாது. 

 

//அவரது பாட்டனார் தந்தை செல்லவாவுடன் இணைந்து தமிழரசுக் கோட்பாட்டை வளர்த்தெடுத்தவர். //

ஐயனே மூன்றாம் தலைமுறைக்கான ஆதாரம்? 

//எல்லாவற்றுக்கும் யாழ்ப்பாணத்திலிருந்துதான் ஆட்களைக் கொண்டுவரவேண்டுமா?//

நீங்கள் சாணக்கியனின் ஆதரவாளர் என்பது புலப்படுகிறது. அதற்காக நீங்கள் கைக்கொண்ட உங்களது பிரதேசவாதத்தை - முதலில் ஏவல்செய்தவர் என்ற வகையில் - வன்மையாகக் கண்டிக்கிறேன். நீங்கள் சார்ந்தவரிற்கான ஆதரவிற்காக வேண்டுமென்றே நீங்கள் இதை கையிலெடுத்துள்ளீர்கள். ஏனெனில் இதுகாலம்வரை நீங்கள் கூறியதற்கு மன்னிப்புக் கோரவேயில்லை. உங்களால்தான் இவ்வளவு நீண்ட திரியும் பெரிய சிக்கலும் ஏற்பட்டுள்ளது. 

பிரதேசவாதம் என்ற கொள்ளி எப்படி கொழுந்துவிட்டு எரிந்துள்ளது என்பதைக் கண்ணால் காணுங்கள். 

  

On 9/1/2023 at 09:20, பெருமாள் said:

May be an image of 1 person

சாணக்கிய ராகுல்’
என்ன கோதாரி இது 😳
பெயரே தமிழ்ல இல்லையே? இவர்  எப்படி தமிழ்த்தேசியத்தில உறுதியா இருப்பார்  என்டு நம்புறது?


1) சாணக்கியவின் அம்மா பறங்கிய இனத்தை சேர்ந்த சிங்கள பெண்மணி…
2) சாணக்கிய இந்து சமயத்தில் இருந்து சுமந்திரனின் மதமாற்ற குழுவான புரட்டஸ்தாந்து மதத்திற்கு மாறிய ஒருவன்.
3) சாணக்கியவின் காதலி கண்டிய சிங்கள பெண்(ஒரு அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்)
4) சுமந்திரன் போலவே பிறந்தது முதல் சிங்களவர்களோடு வாழ்ந்த ஒருவன். (தமிழ் மக்களின் உணர்வு எப்படி புரியும்?)

பெயரில் ஒன்றுமில்லை ஐயனே. செயலிலும் மனதிலும் தான் அனைத்தும் உள்ளது. உங்களுடைய மதம் தொடர்பான கருத்துக்களுக்கு எனது கடும் கண்டனங்கள்.

நீங்கள் கோரியவற்றிற்கான ஆதாரங்களை இங்கே சமர்ப்பிக்க இயலுமா? 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

  

On 9/1/2023 at 12:02, island said:

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை ஏக வசனத்தில் குறிப்பிடுவது தமிழ் மரபும் இல்லை,  யாழ்கள விதிமுறையும் அதற்கு இடமளிக்கவில்லை.  இப்படியாக  தமிழ் இனத்தின் மாண்பைக்  கெடுக்கும் நீங்கள் உண்மையில் தமிழரா கேட்கலாம் தானே!   

அப்படியெல்லாம் அங்கு ஒன்றுமில்லை; யாழ் கள விதிமுறைகளிலுமில்லை, தமிழர்களின் மரபாகவும் இருந்ததில்லை. நீங்களே ஒரு எடுகோளை எடுத்து ஊதிவிடவேண்டாம்!

அது அவரவர் விருப்பம். எந்த அரசியல்வாதிக்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று அடுத்தவருக்கு நல்லுரை வேண்டாமென். 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தவறை  சுட்டிக்காட்டி, கண்டிக்க தவறி சும்மா இருந்தால், அதற்கும் ஒருபடி மேலே போய் அதற்கு சிறப்பு சான்றிதழ், விலக்கு அளித்தால் அது இன்னும் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு நமது ஆயுதப்போராட்டம், எம்மினத்தின் அழிவு, இன்றைய இந்தத்திரி நல்ல எடுத்துக்காட்டு. ஆரம்ப தவறை  கட்டுப்படுத்தாமல் அதை தடுக்க அல்லது கட்டுப்படுத்த வக்கில்லாமல் தங்கள் நேர்மையாளர் என்று சொல்லிக்கொண்டு எடுத்த ஆயுதத்தை கீழே வை அல்லது அழிப்போம் என்று நிராயுத பாணியாக்கி தன்னைக்காக்க முற்பட்டவனை குற்றவாளியாக்கி நிரந்தர அடிமையாக்கி தவறை ஊக்கப்படுத்துவதற்கு சர்வதேசமும், இன்றைய கள்ள நடுநிலைவாதிகளும் சான்று. எதை வேண்டுமானாலும் செய்யலாம், சொல்லலாம் நமக்கு முண்டுகொடுக்க  ஆட்கள் இருக்கிறார்கள் என்பதற்கு படித்தவர்கள் மேட்டுக்குடிகள் சொல்லிக்கொள்ளும் சிலருக்கு இன்றைய அரசியல்வாதிகள் இரண்டு பக்கமும் நல்ல உதாரணம். அதெல்லாம் நாம் சொல்லக்கூடாது நமது செய்கைகளும் அதனை உண்மையாய் அனுபவித்து பயன்கண்டவர்களுமே சான்று பகரவேண்டும். நானே எனக்கு அளிக்கும் சாட்சியம் செல்லாது. 

2 hours ago, நன்னிச் சோழன் said:

இதுகாலம்வரை நீங்கள் கூறியதற்கு மன்னிப்புக் கோரவேயில்லை.

ஆனால் அடுத்த பக்கத்தை வற்புறுத்துவதன் மூலம் வற்புறுத்துபவரின் முகமூடி கிழிந்தது, அவரால்  கொடுக்கப்பட்ட சிறப்பும் அழிந்தது. தன்னை இனங்காட்டியுமுள்ளார்.

8 hours ago, ரதி said:

மன்னிக்கவும் மீரா உங்களை சொல்லவில்லை அவசரத்தில் எழுதும் போது உங்கள் பெயர் வந்து விட்டது

பெருந்தன்மை.

8 hours ago, ரதி said:

நீங்கள் சொல்வது உண்மை தான்...பிறகு எப்படி உங்களால் இங்கு இருந்து கொண்டு கோத்தாவையோ, பிள்ளையானையோ விமர்சிக்க முடியுது?....அதுவும் அங்குள்ளவர்கள் விருப்பம் அல்லவா!...இது உங்களுக்கு மட்டுமான பதில் அல்ல , உங்கள் கருத்தை ஆமோதிப்பவர்களுக்கும சேர்த்து தான் 

கருவின் எழுத்தில் பிரதேசவாதத்தை கண்டவுடனேயே அதைசுட்டிக் காட்டி இருந்தீர்கள் என்டால், பெருமாள், போன்றவர்கள்  இப்படியான கருத்துக்களை எழுதி இருக்க மாட்டார்கள்...அவர்கள் எப்படி ஒரு குழுவாக சேர்ந்து தங்களுக்கு சார்பானவர்கள் பிழை செய்தால் சுட்டிக் காட்டுவதில்லையோ அதே போல் தான் நீங்களும் செயற்படுகிறீர்கள் 

ஆங் .... இது கறெக்ற்! ஒரு தவறு இன்னொரு தவறை பிறப்பிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம். அதுக்கொரு பச்சை! சொல்லியே குத்துறேன், பிறகு கேள்வி வரக்கூடாது கண்டியளோ. இதெல்லாம் கேட்டு வாங்கிற சாமானே?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

அவர்கள் எப்படி ஒரு குழுவாக சேர்ந்து தங்களுக்கு சார்பானவர்கள் பிழை செய்தால் சுட்டிக் காட்டுவதில்லையோ அதே போல் தான் நீங்களும் செயற்படுகிறீர்கள் 

பெரும்பாலும் சுட்டிக்காட்டுகிறோம் மை டியர் லோட்!  ஊக்கப்படுத்துவதில்லை சிறப்பு விலக்கு அளிப்பதில்லை! பெருமாள்..! இப்படியான கருத்துக்களை தவிருங்கள், இப்படியான வார்த்தைப்பிரயோகங்கள் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்காது. இதுவரையில் நான் அப்படி நடந்திருந்தால் நானும் என்னை வருங்காலத்தில்  திருத்திக்கொள்கிறேன்.  இப்படியான கருத்துக்களுக்கு கல்லெறிவதை விட விலகிச்செல்வதன் மூலம்  அந்தக்கருத்துக்களை ஓரங்கட்டி விடலாம். இது எனது தாழ்மையான வேண்டுகோள்!

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நன்னிச் சோழன் said:

  

அப்படியெல்லாம் அங்கு ஒன்றுமில்லை; யாழ் கள விதிமுறைகளிலுமில்லை, தமிழர்களின் மரபாகவும் இருந்ததில்லை. நீங்களே ஒரு எடுகோளை எடுத்து ஊதிவிடவேண்டாம்!

அது அவரவர் விருப்பம். எந்த அரசியல்வாதிக்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று அடுத்தவருக்கு நல்லுரை வேண்டாமென். 

பொது வெளியில் அவன், இவன் அதை போன்ற ஏக வசனங்களால் ஒருவரை அழைப்பது அல்லது எழுதுவது தவறானது. பொது வெளியில் மரியாதையான வார்ததைகளை உபயோகிப்பது  தமிழ் மரபு மட்டுமல்ல மனித மாண்பும் கூட.

 பல ஆயிரக்கணக்கான மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அப்படி அழைப்பது, அவரது கடவு சீட்டை அவரது அனுமதி இன்றி பொது வெளியில் பிரசுரிப்பது, அவரது குடும்பம், காதலி போன்ற தனிப்பட தகவல்களை பகிர்வது தவறானது. இதற்காக சாணக்கியன் நினைத்தால் தனது கடவுச்சீட்டை பொது வெளியில் பிரசுரித்ததற்காக சட்ட நடவடிக்கை கூட எடுக்கலாம்.  

 யுத்த சம்பவங்களை பற்றியும் ஆயுதங்கள் பற்றியும்  மட்டுமே எழுதி,  சதா நேரமும்  அதிலேயே மூழ்கி இருப்பதால், பொதுவான இயல்பான மனித  வாழ்வியலின் இவ்வாறான ஜதார்த்த  மனித பழக்க வழக்கங்கள், மாண்புகள் பற்றி தாங்கள் அறியவில்லைப்போலும்.  

Edited by island
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

பொது வெளியில் அவன், இவன் அதை போன்ற ஏக வசனங்களால் ஒருவரை அழைப்பது அல்லது எழுதுவது தவறானது. பொது வெளியில் மரியாதையான வார்ததைகளை உபயோகிப்பது  தமிழ் மரபு மட்டுமல்ல மனித மாண்பும் கூட.

 பல ஆயிரக்கணக்கான மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அப்படி அழைப்பது, அவரது கடவு சீட்டை அவரது அனுமதி இன்றி பொது வெளியில் பிரசுரிப்பது, அவரது குடும்பம், காதலி போன்ற தனிப்பட தகவல்களை பகிர்வது தவறானது. இதற்காக சாணக்கியன் நினைத்தால் தனது கடவுச்சீட்டை பொது வெளியில் பிரசுரித்ததற்காக சட்ட நடவடிக்கை கூட எடுக்கலாம்.  

 யுத்த சம்பவங்களை பற்றியும் ஆயுதங்கள் பற்றியும்  மட்டுமே எழுதி,  சதா நேரமும்  அதிலேயே மூழ்கி இருப்பதால், பொதுவான இயல்பான மனித  வாழ்வியலின் இவ்வாறான ஜதார்த்த  மனித பழக்க வழக்கங்கள், மாண்புகள் பற்றி தாங்கள் அறியவில்லைப்போலும்.  

அப்போ ராஜபக்ச சகோதரர்களையும் மரியாதையுடன் நடத்துங்கள். யாழ் இணையம் சார்பாக வாழ்த்துங்கள்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

அதை போன்ற ஏக வசனங்களால் ஒருவரை அழைப்பது அல்லது எழுதுவது தவறானது.

பகுத்தறிவில்லாமல்  மக்களை ஏமாற்றி, சகமனிதனை தன் சுயநலத்திற்காகவும் கூலிக்காகவும் கடத்தி கப்பம் பெற்று கொலை செய்பவர்களை மக்களை பகடைக்காய்களாக பாவிப்பவர்களை அஃறிணையாய் விளிப்பது தகும். உதாரணமாக அளவோடு உணவு உட்கொள்பவர்களை  சாப்பிடுகிறார் என்று அழைக்கப்படும். அதே நேரம் அளவுக்கு மிஞ்சி மிருகங்களைப்போல் உட்க்கொள்பவர்களைப்பார்த்து மிருகம்போல் தின்னுதல் என்று அழைப்பதுண்டு அது வழமை. மிருகங்களைப்போல் நடப்பவர்களை அஃறிணையில் விளிப்பது உண்டு. தாங்கள் அறியவில்லைபோலும்.

5 hours ago, island said:

யுத்த சம்பவங்களை பற்றியும் ஆயுதங்கள் பற்றியும்  மட்டுமே எழுதி,  சதா நேரமும்  அதிலேயே மூழ்கி இருப்பதால், பொதுவான இயல்பான மனித  வாழ்வியலின் இவ்வாறான ஜதார்த்த  மனித பழக்க வழக்கங்கள், மாண்புகள் பற்றி தாங்கள் அறியவில்லைப்போலும்.  

எங்களை இயல்பான வாழ்க்கை வாழவிடாமல் அடிமைகளாக நடத்துகிறார்கள், நாங்கள் தெரிந்து அனுப்பியவர்களாலும் எங்களை விடுவிக்க முடியவில்லை, நாட்டின் சக இன மக்கள் வாழ்வதுபோன்று இயல்பாக வாழ விடுகிறார்களில்லை, எங்களது மாண்பு அழிக்கப்பட்டு எம்மினமே கூலிக்காக எங்களை வேடடையாடும்போது நீங்கள் குறிப்பிடும் இவையெல்லாம் மறைந்து, மறந்து போச்சு. நாளாந்த வாழ்வே போராட்டந்தான் எப்படி விடுபடுவது அதிலிருந்து நாங்கள் மறந்தாலும் எதிரி அதற்குள்ளேயே எங்களை அமுக்குகிறான் சுதந்திரம் என்பதை நாங்கள் அனுபவிக்க முடியவில்லை. நீங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கிறீர்கள் போலும் இழந்தவனுக்குத்தான் தெரியும் அதன் வலி, மற்றவருக்கு அது கேலியாகத்தான் இருக்கும். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, island said:

பொது வெளியில் அவன், இவன் அதை போன்ற ஏக வசனங்களால் ஒருவரை அழைப்பது அல்லது எழுதுவது தவறானது. பொது வெளியில் மரியாதையான வார்ததைகளை உபயோகிப்பது  தமிழ் மரபு மட்டுமல்ல மனித மாண்பும் கூட.

மதிப்பு, மரியாதை எல்லாம் ஒருவரின் நடத்தையை பார்த்து நாமாக கொடுக்கவேண்டும். கேட்டெல்லாம் வாங்கப்படாது!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
13 hours ago, island said:

பொது வெளியில் அவன், இவன் அதை போன்ற ஏக வசனங்களால் ஒருவரை அழைப்பது அல்லது எழுதுவது தவறானது. பொது வெளியில் மரியாதையான வார்ததைகளை உபயோகிப்பது  தமிழ் மரபு மட்டுமல்ல மனித மாண்பும் கூட.

 பல ஆயிரக்கணக்கான மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அப்படி அழைப்பது, அவரது கடவு சீட்டை அவரது அனுமதி இன்றி பொது வெளியில் பிரசுரிப்பது, அவரது குடும்பம், காதலி போன்ற தனிப்பட தகவல்களை பகிர்வது தவறானது. இதற்காக சாணக்கியன் நினைத்தால் தனது கடவுச்சீட்டை பொது வெளியில் பிரசுரித்ததற்காக சட்ட நடவடிக்கை கூட எடுக்கலாம்.  

 யுத்த சம்பவங்களை பற்றியும் ஆயுதங்கள் பற்றியும்  மட்டுமே எழுதி,  சதா நேரமும்  அதிலேயே மூழ்கி இருப்பதால், பொதுவான இயல்பான மனித  வாழ்வியலின் இவ்வாறான ஜதார்த்த  மனித பழக்க வழக்கங்கள், மாண்புகள் பற்றி தாங்கள் அறியவில்லைப்போலும்.  

முதலில் 'நாடாளுமன்ற உறுப்பினரை' என்று கூறிவிட்டு, இப்போது 'பொதுவெளியில்' என்று குட்டிக்கரணம் அடிப்பது வாதத்திலிருந்து மழுப்பும் செயலாகும். எனது மறுமொழியானது நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றியதேயொழிய பொதுவெளியில் பேசுவது பற்றியதன்று.

சரி இப்போது உங்களது மழுப்பலுக்கே வருகிறேன். பொதுவெளியில் பொதுவாக விளிக்கக்கூடாது தான். ஆனால் எவரை மரியாதையாக விளிக்க வேண்டுமென்பது அவரவர் விருப்பம். படுகொலைக்காரன், கொள்ளைக்காரன், கூடயிருந்து குழிபறிப்போர்களையெல்லாம் மரியாதையாக விளிக்க வேண்டும் என்றில்லை. அதிலும் குறிப்பாக அரசியல்வியாதிகளை!  

இப்போது எடுத்துக்காட்டுக்கு உங்களையே எடுத்துக்கொள்ளுவோமென். நீங்கள் இதுவரை யாழ் களத்தில் குறிப்பிட்டெழுதிய 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட' எனப்படுத்திய அரசியல்வியாதிகளில் எத்தனை பேரை எப்படி (ஒருமையில்) விளித்துள்ளீர்கள் என்று நோண்டிப் பார்ப்போமா? தூய்மைப்படுத்தும் வேலையை வீட்டிலிருந்தே தொடங்குவோம்! ஆமென்.🫡😂🤣

டக்கி நக்கியைத் தவிர வேறு யாருக்கும் ஐயன் மரியாதை கொடுக்கவில்லைப் போலும். அதிலும் டக்கிக்கு 'மாண்பு மிகு தோழர்' ... என்ன கண்ட்ராவியோ! (எதற்காகவிருந்தாலும் எழுதியது எழுதியது தான்)

 

நரி மற்றும் சந்திரிக்கா மாமிக்கு எங்கே?

 

மணி, கஜே, விக்கி ஆகியோருக்கு எங்கே?

 

 

 

ஆக மொத்தத்தில் 'ஊருக்கு மட்டுமே உபதேசம், ஆனால் எனக்கல்ல'!

இன்னும் சொல்லப்போனால், தமிழ் இனத்தின் மாண்பைக்  கெடுக்கும் நீங்கள் உண்மையில் தமிழரா என்றே கேட்கத்தோன்றுகிறது!😉 (உங்கட வசனம் உங்களுக்கே பொருந்துது, பார்த்தியளோ?😆)

அந்தக் குடும்பத் தகவல் உண்மையா பொய்யா என்பது கூட இதுவரை அறியப்படவில்லை. இந்நிலையில், குடும்பத்தைப் பற்றிக் கேவலமாக மற்றும் பேசுவதுதான் தவறானதேயொழிய அறிந்துகொள்வதில் தவறில்லையே. என்னைப் பொறுத்தவரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரின் பின்புலத்தை அறிந்துவைத்திருப்பது நல்லது தானே. அதில் என்ன பிழையுண்டு? விக்கியிலும் இதுதான் பதிவேற்றப்படும். அதற்காக விக்கியை நோவீர்களோ?

இது இணையவெளி. சட்ட நடவடிக்கையெல்லாம் ஒன்றும் எடுக்கேலாது. மீறி எடுத்தாலும் முதன்முதலில் வெளியிட்டவர்/பதிவேற்றியவர் மீதே பாச்ச வேண்டும். காவி மீதன்று. 

அந்தக் கடைசிப் பத்தி தேவையற்ற தனிமனித - தாக்குதல் மற்றும் சீண்டல் கருத்து ஆகும். கருத்து வறுமை ஏற்படும் போது உங்களைப் போன்றவர்கள் பயன்படுத்தும் நாகரீகமற்ற இழிவான கடைசி ஆயுதம். யாழில் கருத்தாடும் நாகரீகமான பண்பென்று ஒன்று உள்ளது. அதைக் கடைப்பிடிக்கவும். 

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி எல்லாம் ஓகே,

தமிழரசுகட்சியின் உபதலைவர் ஆகிட்டார சாணாக்ஸ்?

 

23 hours ago, satan said:

இதெல்லாம் கேட்டு வாங்கிற சாமானே?

அந்தோணியாரே அது பகிடியா எழுதினது அந்தோணியாரே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

சரி எல்லாம் ஓகே,

தமிழரசுகட்சியின் உபதலைவர் ஆகிட்டார சாணாக்ஸ்?

அதெல்லாம் தெரியாது….

ஆனால் கவிஞரும் தமிழ் அறிஞரும் யஸ்ரினின் தோழருமான Karu வின் பிரதேசவாத முகமூடி கிழிக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

அதெல்லாம் தெரியாது….

ஆனால் கவிஞரும் தமிழ் அறிஞரும் யஸ்ரினின் தோழருமான Karu வின் பிரதேசவாத முகமூடி கிழிக்கப்பட்டது.

பகிடியாய் இல்லையப்பா…

தமிழரசில் ஒரு உபதலைவர் மட்டகளப்பு என்பது நடைமுறை. இது செல்வராசாவிடம் இருந்து சாணக்கியனுக்கு மாறிவிட்டதா இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பகிடியாய் இல்லையப்பா…

தமிழரசில் ஒரு உபதலைவர் மட்டகளப்பு என்பது நடைமுறை. இது செல்வராசாவிடம் இருந்து சாணக்கியனுக்கு மாறிவிட்டதா இல்லையா?

இம்முறை மட்டகளப்பாரால் கைவிடப்பட்ட திருகோணமலைக்கு கொடுக்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இம்முறை மட்டகளப்பாரால் கைவிடப்பட்ட திருகோணமலைக்கு கொடுக்கலாம்.

 

நீங்கள் விடுறதாய் இல்லை🤣.

ஆனால் ஒரு விசயம்.

உண்மையில் கரு, சாணக்கியன் போன்றவர்கள் இரு பக்கதால் அடி வாங்குகிறார்கள்.

1.  தமிழ் தேசியவாதிகளின் ஒரு பிரிவால் (நீங்கள், பெரும்ஸ் etc).

2. தமிழ் தேசியத்துக்கு எதிரான பிரதேசவாதிகளால், அவர்களின் ஊதுகுழல்களால்.

இதில் 1ம் தரப்புக்கு சாணாக்கியன் மீது இருக்கும் பல விமர்சனங்களை நானும் கொண்டுள்ளேன். குறிப்பாக அவரின் 2009 க்கு பின்னான மகிந்த நெருக்கம், பின் சும் மூலம் உள்ளே வந்தது etc.

ஆனால் விரும்பியோ விரும்பாமலோ மட்டு-அம்பாறையில் இப்போ தமிழ் தேசியம் பேசும் ஒரே மக்கள் ஏற்று கொண்ட சக்தி தமிழரசு கட்சியும், சாணக்கியனும்தான்.

ஆனால் இப்படி இருமுனை தாக்குதலுக்கு அவர்கள் கனகாலம் தாக்கு பிடிக்க முடியாது.

அநேகமாக எமது ஆயுட்காலத்தில் மட்டில் இருந்து ஒரு தமிழ் தேசிய கட்சி எம்பி கூட தேர்வாகாத நிலையை நாம் காணக்கூடும்.

மட்டு-அம்பாறை தமிழ் அரசியல் எப்போதும் தனித்துவமானது. அதை தன்மையாக, பொறுமையாக,  கையாண்ட ஒரே தலைவர், தலைவர் மட்டுமே. அதை சாதாரண கருத்தாளர்களிடம் நான் எதிர்பார்ப்பதும் தவறே.

உண்மையில் கருவும், பெருமாளும், நீங்களும் ஒரே அரசியலுக்கு உரியவர்கள். 

இவர்களின் எதிர் அரசியலை ஆதரிப்பவர் ரதி அக்கா.

ஆனால் பெருமாளும், நீங்களும் ரதி அக்காவோடு சேர்ந்து கருவை கும்முகிறீர்கள். யாழில் மட்டும் அல்ல, வெளியாலும் இதுதான் நடக்கிறது.

# தந்தை இல்லாத வீடு = என் இனம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

நீங்கள் விடுறதாய் இல்லை🤣.

ஆனால் ஒரு விசயம்.

உண்மையில் கரு, சாணக்கியன் போன்றவர்கள் இரு பக்கதால் அடி வாங்குகிறார்கள்.

1.  தமிழ் தேசியவாதிகளின் ஒரு பிரிவால் (நீங்கள், பெரும்ஸ் etc).

2. தமிழ் தேசியத்துக்கு எதிரான பிரதேசவாதிகளால், அவர்களின் ஊதுகுழல்களால்.

இதில் 1ம் தரப்புக்கு சாணாக்கியன் மீது இருக்கும் பல விமர்சனங்களை நானும் கொண்டுள்ளேன். குறிப்பாக அவரின் 2009 க்கு பின்னான மகிந்த நெருக்கம், பின் சும் மூலம் உள்ளே வந்தது etc.

ஆனால் விரும்பியோ விரும்பாமலோ மட்டு-அம்பாறையில் இப்போ தமிழ் தேசியம் பேசும் ஒரே மக்கள் ஏற்று கொண்ட சக்தி தமிழரசு கட்சியும், சாணக்கியனும்தான்.

ஆனால் இப்படி இருமுனை தாக்குதலுக்கு அவர்கள் கனகாலம் தாக்கு பிடிக்க முடியாது.

அநேகமாக எமது ஆயுட்காலத்தில் மட்டில் இருந்து ஒரு தமிழ் தேசிய கட்சி எம்பி கூட தேர்வாகாத நிலையை நாம் காணக்கூடும்.

மட்டு-அம்பாறை தமிழ் அரசியல் எப்போதும் தனித்துவமானது. அதை தன்மையாக, பொறுமையாக,  கையாண்ட ஒரே தலைவர், தலைவர் மட்டுமே. அதை சாதாரண கருத்தாளர்களிடம் நான் எதிர்பார்ப்பதும் தவறே.

உண்மையில் கருவும், பெருமாளும், நீங்களும் ஒரே அரசியலுக்கு உரியவர்கள். 

இவர்களின் எதிர் அரசியலை ஆதரிப்பவர் ரதி அக்கா.

ஆனால் பெருமாளும், நீங்களும் ரதி அக்காவோடு சேர்ந்து கருவை கும்முகிறீர்கள். யாழில் மட்டும் அல்ல, வெளியாலும் இதுதான் நடக்கிறது.

# தந்தை இல்லாத வீடு = என் இனம்

 

 

உங்களுக்கு மண்டையில் பிரச்சனை என்றால் போய் நித்திரை கொள்ளுங்கோ ...தேவையில்லாமல் எல்லாம் தெரிஞ்ச மாதிரி விசர் கதை கதைக்க வேண்டாம் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

ஆனால் விரும்பியோ விரும்பாமலோ மட்டு-அம்பாறையில் இப்போ தமிழ் தேசியம் பேசும் ஒரே மக்கள் ஏற்று கொண்ட சக்தி தமிழரசு கட்சியும், சாணக்கியனும்தான்.

இன்று அரசியல்வாதிகள் மக்களுக்கு பயமேற்படுத்தி, ஆசைகாட்டி, பொய்யான நம்பிக்கையூட்டி, உணர்ச்சிகளை தூண்டி, சலுகைகளை காட்டி, ஏமாற்றி  தங்களை தெரிய வைக்கிறார்கள். இப்பொழுது  பேசுபொருளாக்கப்பட்டவர், தன்னை மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென்பதற்காக எப்படி ஒரு காட்சியமைக்கப்பட்டது என்பதின் காணொளியை  திருப்பி பார்க்க முடித்தால் பாருங்கள், அப்பட்டமாக தெரிகிறது, அப்பாவி மக்களுக்கு பயமேற்படுத்தி அதிலே தன்னை நம்பிக்கை நாயகனாக காட்டி ஏமாற்றி வாக்குப்பெற்று தெரிவானார். கையோடு கிளம்பியது மேய்ச்சல் தரை பறிப்பு விவகாரம், தீர்ந்ததா? தீர்த்தாரா? தங்கள் கையறு நிலையை கனடாவில் ஒத்துகொண்டள்ளார்கள். இதுதான்  மக்கள் தங்களை தெரிய வைக்க இவர்கள் கையாளும் தந்திரம். மக்களின் இயலாமை, வறுமை, இழப்பு, வலி யாரையாவது தேர்ந்து அவர்கள் வழியாக தங்கள் இருண்ட வாழ்வில் ஒளி தெரியாதா என்கிற நம்பிக்கையில் இவர்களை தூக்கிவிட்டிட்டு இன்னும் அதே ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். தங்கள் உண்மையான நாயகர்களை தேடுகிறார்கள். ஆண்டாண்டு தோறும் எவ்வளவு இன்னல்கள் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தமது கதாநாயகர்களுக்கு தமது மரியாதையை தெரிவிக்க கண்ணீரோடு முண்டியடிக்கிறார்கள்.  காலமும் காட்சிகளும் மாறுது  எங்கள் கவலைகள் தீரவில்லை. இவர்களோ மக்களின் ஏக்கங்கள், தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து மக்கள் வாங்கிக்கொடுத்த அதன் சுகபோகங்களை அனுபவிப்பதில் குறியாக இருக்கிறார்கள். மேடைக்கு மேடை, இடத்துக்கு இடம் பேசும் வசனங்கள் அதை நிரூபிக்கின்றன.  அவர்களுக்கு மனச்சாட்சி செத்துவிட்டது. மக்களோ தங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி விமர்சித்தால் அடி பொடிகளுக்கு வலிக்குது. மொத்தத்தில் மக்களை ஏமாற்றி வாக்கு கொள்ளையடித்த நம்பிக்கை துரோகிகளுக்கு வெள்ளையடிக்கட்டாம்.   "வாங்கினவன் சரக்கு மிடுக்கு கூட." என்பது  உண்மைதான்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

உங்களுக்கு மண்டையில் பிரச்சனை என்றால் போய் நித்திரை கொள்ளுங்கோ ...தேவையில்லாமல் எல்லாம் தெரிஞ்ச மாதிரி விசர் கதை கதைக்க வேண்டாம் 

🤣 சரி அக்கா…இந்தா..குடு..குடு..எண்டு ஓடிப்போய் படுக்கிறன்…🤣

அதுக்கு முதல் உங்கள் உத்தரவோட ஒரு கருத்து கண்றாவியை சொல்லி விட்டு போறன் ஓகேயா?

————

இது @MEERA @satan @பெருமாள் சகோதரங்களுக்கு.

யாழ்பாணத்தின் அரசியல் போல் அல்ல மட்டு-அம்பாறையின் அரசியல்.

சுமந்திரன் மீது பாவிக்கும் அஸ்திரங்களை அப்படியே சாணக்கியன் மீது பாவித்தால் நட்டம் ஒட்டு மொத்த தமிழ் தேசிய கொள்கைக்கும், தமிழ் இனத்துக்கும்தான். 

தலைவரின் 2004 காலத்தில் தலைவர் எடுத்த அணுகுமுறையை மனதில் நிறுத்தி யோசியுங்கள்.

ஆங்கிலத்தில் weaponizing என்பார்கள். ஒரு விடயத்தை அரசியலுக்காக “ஆயுதமாக்கல்”.

போன தேர்தலில் மட்டு அம்பாறையில் தமிழ் தேசியத்துக்கு எதிராக தமிழ்-முஸ்லிம் பிணக்கு ஆயுதமாக்கப்பட்டது. இரெண்டு எம்பி சீட்டை பெற்று கொண்டார்கள்.

இந்தமுறை இந்து-கிறீஸ்தவ முரணை ஆயுதமாக்குகிறார்கள்.

இதில் சாணாக்கியன் கிறீஸ்தவர் என்பது இவர்களுக்கு மேலும் வசதியாக போய்விட்டது.

சுருங்க சொல்லின் - திரு முரளீதரன் எம்பி ஆவதும் ஆகாததும் நம் எல்லோர்கையிலும், பொறுப்புணர்விலும் தங்கி உள்ளது.

3 minutes ago, satan said:

இன்று அரசியல்வாதிகள் மக்களுக்கு பயமேற்படுத்தி, ஆசைகாட்டி, பொய்யான நம்பிக்கையூட்டி, உணர்ச்சிகளை தூண்டி, சலுகைகளை காட்டி, ஏமாற்றி  தங்களை தெரிய வைக்கிறார்கள். இப்பொழுது  பேசுபொருளாக்கப்பட்டவர், தன்னை மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென்பதற்காக எப்படி ஒரு காட்சியமைக்கப்பட்டது என்பதின் காணொளியை  திருப்பி பார்க்க முடித்தால் பாருங்கள், அப்பட்டமாக தெரிகிறது, அப்பாவி மக்களுக்கு பயமேற்படுத்தி அதிலே தன்னை நம்பிக்கை நாயகனாக காட்டி ஏமாற்றி வாக்குப்பெற்று தெரிவானார். கையோடு கிளம்பியது மேய்ச்சல் தரை பறிப்பு விவகாரம், தீர்ந்ததா? தீர்த்தாரா? தங்கள் கையறு நிலையை கனடாவில் ஒத்துகொண்டள்ளார்கள். இதுதான்  மக்கள் தங்களை தெரிய வைக்க இவர்கள் கையாளும் தந்திரம். மக்களின் இயலாமை, வறுமை, இழப்பு, வலி யாரையாவது தேர்ந்து அவர்கள் வழியாக தங்கள் இருண்ட வாழ்வில் ஒளி தெரியாதா என்கிற நம்பிக்கையில் இவர்களை தூக்கிவிட்டிட்டு இன்னும் அதே ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். தங்கள் உண்மையான நாயகர்களை தேடுகிறார்கள். ஆண்டாண்டு தோறும் எவ்வளவு இன்னல்கள் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தமது கதாநாயகர்களுக்கு தமது மரியாதையை தெரிவிக்க கண்ணீரோடு முண்டியடிக்கிறார்கள்.  காலமும் காட்சிகளும் மாறுது  எங்கள் கவலைகள் தீரவில்லை. இவர்களோ மக்களின் ஏக்கங்கள், தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து மக்கள் வாங்கிக்கொடுத்த அதன் சுகபோகங்களை அனுபவிப்பதில் குறியாக இருக்கிறார்கள். மேடைக்கு மேடை, இடத்துக்கு இடம் பேசும் வசனங்கள் அதை நிரூபிக்கின்றன.  அவர்களுக்கு மனச்சாட்சி செத்துவிட்டது. மக்களோ தங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி விமர்சித்தால் அடி பொடிகளுக்கு வலிக்குது. மொத்தத்தில் மக்களை ஏமாற்றி வாக்கு கொள்ளையடித்த நம்பிக்கை துரோகிகளுக்கு வெள்ளையடிக்கட்டாம்.   "வாங்கினவன் சரக்கு மிடுக்கு கூட." என்பது  உண்மைதான்!

இதில் முரண்பட எதுவும் இல்லை.

நானும், நீங்களும், கருவும், பெருமாளும், ஜஸ்டீனும், மீராவும் ஒரே அணிதான். நல்லா கோல் அடிக்கிறோம்.

# சேம் சைட் கோல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோஷான் ஒன்றை விளங்கிக்கொள்ளுங்கள்! நாம் குறிப்பிட்ட அரசியல்வாதியை எந்த தனிப்பட்ட, வாத காரணங்களுக்காகவும் விமர்ச்சிக்கவில்லை, இவரை மட்டுமல்ல எந்த அரசியல்வாதியையும். நீங்கள் தேவையில்லாமல் புதிதாக ஒரு பிரச்சனையை கிளப்பி பிரிவினையை தூண்டாதீர்கள். எங்களது நிஞாயமான விமர்சனத்தை நீங்கள் சரியாக வாசிக்கவில்லை அல்லது திசை திருப்புகிறீர்களோ என சதேகமாக இருக்கிறது. சுமந்திரன் விமர்சனத்திலும் நீங்களும் உங்களது வசன நடையை அச்சடிப்பது போன்று எழுதும் இன்னொரு நாமமும் உடனே மதத்தை புகுத்துவது சரியல்ல. மதவாதமோ, பிரதேசவாதமோ, சாதீய வாதமோ எதுவானாலும் ரொம்ப ஆபத்தானது. அப்படி வந்தாலும் கூட அதை விலத்தி பயணிக்க வேண்டும். நாங்களே ஆயுதத்தை தூக்கி கொடுப்பதுபோல் இருக்கிறது உங்களது கருத்து. அப்படியானால் இவர்களுக்கு கட்சி எப்படி இடம் கொடுத்தது என்கிற கேள்வி எழுகிறது. செல்வநாயகத்தை மக்கள் எப்படி தங்கள் தலைவனாக கொண்டார்கள்?  கிழக்கு மாவட்டத்தைப்பற்றி எங்களுக்கு நிறையவே கவலை உண்டு, ஆக்கிரமிப்பு மட்டுமல்ல இயற்கை அழிவுகளும் மற்றைய மாவட்டங்களை விட கூடுதலாக உண்டு. அவர்களது தொண்டை நெருக்கம் புரியாமலில்லை. என் தாயார் நான் சிறு வயதாயிருந்த காலத்திலிருந்து  மட்டக்களப்பு மாவட்ட தமிழர் படும் இன்னல்களை அடிக்கடி கூறுவார் அப்படியான செயற்பாடுகளை நான் பத்திரிகைகளில் வாசித்தறிந்துஉள்ளேன்.  ஆனால் பாருங்கள்! எடுத்தவுடன் வரும் பிரதேசவாதம் அது சாதாரணமானதல்ல கடந்த கால அனுபவங்களுமுண்டு. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் சந்தர்ப்பம் இப்போ அவர்கள் சேர்ந்திருந்தாலும் ஒருநாள் எல்லோரும் சேர்ந்து வடக்கும் கிழக்கும் இணைய அனுமதியோம் என்று கோஷமெழுப்புவார்கள், அதில் நீங்கள் குறிப்பிடுபவர் முதன்மையாய் இருப்பார். உள்ளுக்குள் யாழ் மீது ஒரு வெறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஒரு ஆதரவாளனுக்கு இவ்வளவு வெறுப்பு எடுத்தவுடன் கொட்டுகிறார் என்றால்; தலைவனுக்கு எவ்வளவு இருக்கும்? அதையே சிலர் ஆதரித்துக்கொண்டு மதவாதத்தை வெறுக்கிறேன் என்றால் நகைக்காமல் நான்  என்ன செய்ய? அரசியல்வியாதிகள் விடும் தவறுகளை ஏதோ ஒரு வாதத்துக்குள் போட்டு மூடி நிஞாயப்படுத்துவதை நிறுத்துங்கள்! இப்போதைக்கு அமைதியாக தூங்கப்போங்கள், நீங்கள் சொன்ன மாதிரி இருக்கு.                           

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.