Jump to content

சாமியார்களும் தமிழர்களும்


Recommended Posts

முன்பொரு காலத்தில் குரு, சாமியார், ஆசான் என்று பலர் தமிழரில் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அன்றைய நாளில் அது அவசியமாக இருந்திருக்கலாம்.   இப்போதும் இவ்வாறான சாமியார்கள் தேவையா ? இன்று பெரும் செல்வத்திலும் ஊழல் அரசியல்வாதிகளின் பின் பலத்திலும் இயங்கும் சாமியார்களை நாம் பிந்தொடர்வது சரியா ?

ஆக்கபூர்வ்வமாக விவாதிப்போம்.

***

இணையத்தில் தேடியபோது கிடைத்த கட்டுரையின் ஒரு பகுதியை இணைக்கிறேன்.

 

https://vimarisanam.com/2016/03/31/சாமியார்களும்-சுஜாதா-சா/

ஒரு கேள்வி பதில் வடிவில் “சாமியார்கள்” குறித்து சுஜாதா தன் கருத்தைக் கூறி இருந்தார். முதலில் அவரது கருத்து –

——

கேள்வி : ரமண மகரிஷி, ராமகிருஷ்ணர், சத்யசாயி பாபா, ஓஷோ, மாதா அமிர்தானந்தமயி என்று எந்த ஆன்மீக அமைப்பை எடுத்துக்கொண்டாலும் உலகெங்கும் கிளைகள்.
படிக்காத மற்றும் படித்த டாக்டர்கள், இஞ்சினீயர்கள், வெளிநாட்டவர்கள் போன்ற லட்ச கணக்கான மக்கள் கூட்டம். இதென்ன… மாஸ் ஹிஸ்டீரியாவா அல்லது
மாஸ் ஹிப்னாடிஸமா?

பதில்: இவை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது Domino effect என்ற சங்கதி அருகருகே இருக்கும் டாமினோக்களில் ஒன்றை தள்ளிவிட்டால் மற்றது தொடர்ந்து விழுமே… சைக்கிள் ஸ்டாண்டில் கூட பார்த்திருப்பீர்கள்.
அந்த வகைதான் இந்த இயக்கங்கள் பிரபலமடைவதும்! யாரோ ஒருத்தர் தனக்கு நிகழ்ந்த நல்லதைச்சொல்ல, அவர் மற்றொருவருக்குச் சொல்ல… மெள்ள மெள்ள அது தேச அளவுக்கு ஏன், உலகளவுக்கு விரிகிறது.

இவற்றின் ஆதாரமான இயக்கு சக்தி மனிதன்.
என்னதான் இஞ்சினீயரோ, டாக்டரோ, வெளி நாடோ, உள் நாடோ, தன் பிறப்பு ‍ இறப்பைப் பற்றி தெளிவில்லாமல் இருப்பதும் – மரணத்துக்குப் பின் என்ன? என்கிற கேள்வி ‍ பதில் அளிக்காமலேயே இருப்பதும்தான். இந்த uncertainity – நிச்சயமின்மை அவனை இம்சிக்கிறது. ஏதாவது ஆணியில் தன் நம்பிக்கையை மாட்டிவைக்க விரும்புகிறான்.

முழுக்க முழுக்க பகுத்தறிவு வாதமும் ஏன் ஏன் என்கிற முடிவில்லாத கேள்விகளும் அவனுக்கு பிடிக்கவில்லை. ஓர் எல்லைக்கு பிறகு, கேள்வி கேட்காமல் நம்பவே
விரும்புகிறான். அந்த எல்லை ஆளுக்கு ஆள் மாறுபடும். ஓர் எளிய மனதுக்கு தெருக்கோடி பிள்ளையாரில் துவங்கி, அண்ட சராசரங்களையும் பிரபஞ்ச விசைகளையும் ஆராய்ந்த ஐன்ஸ்டைனுக்கு இறுதியில் God என்ற ஓர் எளிய வார்த்தை
தேவைப்பட்டிருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கின் போன்றவர்கள் கூட Determinism பற்றி பேசும் போது. ஆரம்ப கணத்தில் ஓர் எல்லையற்ற சக்தியைச் சொல்ல வேண்டியிருந்தது.

தெருக்கோடி பிள்ளையாரா இல்லை க்வாண்டம் இயற்பியலா இடையில் எத்தனையோ… மகான்கள். எல்லோருக்கும் பகுத்தறிவுக்கான எல்லை உண்டு.

என்னைப் பொறுத்தவரை இந்த நம்பிக்கைகளால் நல்லது நிகழும்வரை போனால் போகிறது நம்பிவிட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான்.

——

நான் இதை வேறு கோணத்தில் பார்க்கிறேன்.

இவர்களை மூன்று விதங்களில் பார்க்கலாம்.

ரமண மகரிஷி, காஞ்சி முனிவர் போன்றவர்களை எல்லாம் இந்த சாமியார்களுடன் சேர்த்து பட்டியல் போடுவது தவறு.
அவர்கள் முழுக்க முழுக்க ஆன்மிகவாதிகள். மனிதர்களின் மனதில் உள்ள ஆசா பாசங்களை போக்கி, தூய வாழ்வு வாழ்ந்து – பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்த முயற்சித்த பெரியவர்கள் – நிஜமாகவே – சகலத்தையும் துறந்த சந்நியாசிகள்.

ராமகிருஷ்ணர் முற்றிலும் பக்தி மார்க்கத்தில் மூழ்கியவர்.

ஆனால், அவரது சீடரான விவேகானந்தரோ, ஆன்மிக வளர்ச்சியை விட சமுதாய நலத்தை முக்கியமென்று நினைத்தார்.

பல நூற்றாண்டுகளாக அடிமைத்தளையில் வீழ்ந்து சிக்கி, சின்னாபின்னமாகி, சீரழிந்து கிடந்த இந்திய சமூகத்தை – மீண்டும் அதன் உன்னத நிலைக்கு கொண்டு வர அரும்பாடு பட்டவர். மக்கள் நல்ல கல்வியறிவும், உடல் ஆரோக்கியமும் பெற வேண்டும் என்பதை முதல் நோக்கமாக கொண்டு நாடு முழுவதும் தன் குருநாதர் ராமகிருஷ்ணரின் பெயரில் கல்வி நிறுவனங்களையும், மருத்துவ மனைகளையும் நிறுவினார். அந்த வழியில், ராமகிருஷ்ணா மடங்கள் இன்றும் நாடெங்கும் கல்வித்துறையில் அருமையான முறையில் தொண்டாற்றி வருகின்றன. ( தமிழ்நாட்டில், திருச்சி அருகே திருப்பராய்த்துறையில் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் “குடில்” ஆற்றும் அரும் பணிகள் பற்றி அண்மையில் இந்த இடுகையில் ஒரு நண்பர் விவரித்ததை இங்கு நினைவில் கொள்ளலாம்…)

இந்த முதல் இரண்டு வகை “சாமியார்” களாலும் சமுதாயத்தில் அளப்பரிய முன்னேற்றம் ஏற்படுகிறது. மக்களிடையே மனவளர்ச்சியும், கல்வியறிவும், உடல்நலமும்
பல்வேறு சமூகத்தினரிடையே ஒற்றுமை உணர்வும் வளர இவை உதவியிருக்கின்றன – இப்போதும் உதவுகின்றன. இவை வரவேற்கப்பட, போற்றப்பட வேண்டிய விஷயம்….

——

ஆனால், தங்களது பேச்சாற்றல், பெரும் கூட்டத்தை திரட்டி தன்வசப்படுத்தும் ஆளுமை, பெரிய அளவில் அடியார் கூட்டம் –

இவற்றைக் கொண்டு, தனித்தனியே கார்பொரேட் நிறுவனங்களைப் போன்ற ஆசிரமங்களை உருவாக்கிக் கொண்டு மேலும் மேலும் தங்கள் செல்வத்தையும், செல்வாக்கையும் வளர்த்துக் கொள்வதை மட்டுமே முதல் நோக்கமாக கொண்டு செயல்படும் “சாமியார்கள்” – மூன்றாம் வகையினர். இவர்களைக் கொண்டாடுவது – பெரும்பாலும் சமூகத்தின் மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்களே. அதற்கு காரணம், மேலே சுஜாதா அவர்கள் கூறியுள்ளவை தான்.

  • Like 7
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செக்கன் கூட இல்லை

சாமிகளும் சாமியார்களும் என்று ஒரு திரி தொடங்கி விவாதிக்கலாமா என்று யாழைத்தட்ட இது வந்து விழுகிறது. 

Link to comment
Share on other sites

இந்த (மானிடப்) பிறப்பு எதற்கு? பிறக்க முதல் எங்கிருந்தோம்? இறந்த பின்பு எங்கு போகப் போகின்றோம்? என் பிறப்பின் அர்த்தம் என்ன? நான் பிறந்திருக்காவிட்டால் நான் எங்கு இருப்பேன்? என் ஆத்மா இறுதியில் போய் சேரும் இடம் என்ன?

ஏன் அவனை /அவளைப் போல என்னால் வாழ முடியுது இல்லை? அவனு(ள்)க்கு கிடைத்த வாய்ப்பு எனக்கு கிடைப்பதில்லை? இவ்வளவு செல்வம் இருந்தும் ஏன் மனது அமைதியடையவில்லை? நான் ஏன் இன்னும் மிக ஏழ்மையில் உழல்கின்றேன்? கர்மாதான் எல்லாவற்றுக்கும் காரணமா? இப் பிறவியில் நான் செய்த எல்லாம் அடுத்த பிறவிக்கும் வந்து சேருமா?

....இவ்வாறான அரதப் பழசான கேள்விகளை, சமூகத்துக்கோ தனக்கோ கொஞ்சம் கூட நன்மை கொடுக்காத  கேள்விகளை ஆன்மீகம் என்ற பெயரில் கேட்டுக் கொண்டு, சோம்பிக் கிடந்து உழல்கின்றவர்களில் பலர் தான் இவ்வாறான சாமியார்களிடம் தஞ்சம் அடைகின்றனர். 

தன் மீதான பயம். அளவுக்கு மீறிய ஆசை, தன்னம்ப்பிக்கை இன்மை, எதிர்காலம் பற்றிய அச்சம். தான் செய்யும் செயல்களால், தன் தொழிலால் ஏற்படும் மனவுளைச்சல் போன்றவற்றை தணிக்க கிடைக்கும் போதைப் பொருள் தான் இந்த சாமியார்களின் மீதான பக்தி.

கடின உழைப்பும் தன்னம்பிக்கையும், எதிர்காலம் மீதான பயமின்மையும் உள்ள கொண்ட எவரையும் இப்படியான சாமியார்களிடம் தஞ்சம் அடைவதையும், ஆன்மீகம் என்ற பெயரில் செய்து கொண்டு இருப்பதையும் நான் காணவில்லை.

கடவுள் (இறை) நம்பிக்கையும், சாமியார்களின் மீதான நம்பிக்கையும் ஒன்றுதான் என்று நம்புகின்ற கூட்டம் இது. 

உண்மையில் கடவுளை நேர்மையாக நம்புகின்ற எவரும் சாமியார்களை நம்பப் போவதில்லை. 

பின்குறிப்பு:

இணையவன், தலைப்பில் தமிழர்கள் என்று இட்டுள்ளீர்கள். இது தமிழர்களுக்கு மட்டுமான "வியாதி" அல்ல. 

எனக்கு தெரிந்து குஜாராத்திகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் தமிழர்களை விட மோசமாக சாமியார்களை நம்புகின்றனர். சாயிபாபாவை நம்புகின்ற தமிழர் அல்லாதவர்கள் பலர் உள்ளனர். தர்காவுக்கு சென்று மெளலவியை தெய்வமாக போற்றும் முஸ்லிம்கள் பலரை எனக்கு தெரியும். மாளிகாவத்தையில் கூட இப்படியான ஒரு முஸ்லிம் "பெரியார்" இருந்தார் (ஆனால் கோப்பரேட் மெளலவிகள் அரிது).

சிங்கள பெளத்தர்களுக்கு ஒவ்வொரு பிக்குவும் ஒரு பெரும் சாமியார் தான். 

  • Like 8
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிழலி said:

இந்த (மானிடப்) பிறப்பு எதற்கு? பிறக்க முதல் எங்கிருந்தோம்? இறந்த பின்பு எங்கு போகப் போகின்றோம்? என் பிறப்பின் அர்த்தம் என்ன? நான் பிறந்திருக்காவிட்டால் நான் எங்கு இருப்பேன்? என் ஆத்மா இறுதியில் போய் சேரும் இடம் என்ன?

ஏன் அவனை /அவளைப் போல என்னால் வாழ முடியுது இல்லை? அவனு(ள்)க்கு கிடைத்த வாய்ப்பு எனக்கு கிடைப்பதில்லை? இவ்வளவு செல்வம் இருந்தும் ஏன் மனது அமைதியடையவில்லை? நான் ஏன் இன்னும் மிக ஏழ்மையில் உழல்கின்றேன்? கர்மாதான் எல்லாவற்றுக்கும் காரணமா? இப் பிறவியில் நான் செய்த எல்லாம் அடுத்த பிறவிக்கும் வந்து சேருமா?

....இவ்வாறான அரதப் பழசான கேள்விகளை, சமூகத்துக்கோ தனக்கோ கொஞ்சம் கூட நன்மை கொடுக்காத  கேள்விகளை ஆன்மீகம் என்ற பெயரில் கேட்டுக் கொண்டு, சோம்பிக் கிடந்து உழல்கின்றவர்களில் பலர் தான் இவ்வாறான சாமியார்களிடம் தஞ்சம் அடைகின்றனர். 

தன் மீதான பயம். அளவுக்கு மீறிய ஆசை, தன்னம்ப்பிக்கை இன்மை, எதிர்காலம் பற்றிய அச்சம். தான் செய்யும் செயல்களால், தன் தொழிலால் ஏற்படும் மனவுளைச்சல் போன்றவற்றை தணிக்க கிடைக்கும் போதைப் பொருள் தான் இந்த சாமியார்களின் மீதான பக்தி.

கடின உழைப்பும் தன்னம்பிக்கையும், எதிர்காலம் மீதான பயமின்மையும் உள்ள கொண்ட எவரையும் இப்படியான சாமியார்களிடம் தஞ்சம் அடைவதையும், ஆன்மீகம் என்ற பெயரில் செய்து கொண்டு இருப்பதையும் நான் காணவில்லை.

கடவுள் (இறை) நம்பிக்கையும், சாமியார்களின் மீதான நம்பிக்கையும் ஒன்றுதான் என்று நம்புகின்ற கூட்டம் இது. 

உண்மையில் கடவுளை நேர்மையாக நம்புகின்ற எவரும் சாமியார்களை நம்பப் போவதில்லை. 

பின்குறிப்பு:

இணையவன், தலைப்பில் தமிழர்கள் என்று இட்டுள்ளீர்கள். இது தமிழர்களுக்கு மட்டுமான "வியாதி" அல்ல. 

எனக்கு தெரிந்து குஜாராத்திகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் தமிழர்களை விட மோசமாக சாமியார்களை நம்புகின்றனர். சாயிபாபாவை நம்புகின்ற தமிழர் அல்லாதவர்கள் பலர் உள்ளனர். தர்காவுக்கு சென்று மெளலவியை தெய்வமாக போற்றும் முஸ்லிம்கள் பலரை எனக்கு தெரியும். மாளிகாவத்தையில் கூட இப்படியான ஒரு முஸ்லிம் "பெரியார்" இருந்தார் (ஆனால் கோப்பரேட் மெளலவிகள் அரிது).

சிங்கள பெளத்தர்களுக்கு ஒவ்வொரு பிக்குவும் ஒரு பெரும் சாமியார் தான். 

உண்மையில் கடவுளை நேர்மையாக நம்புகின்ற எவரும் சாமியார்களை நம்பப் போவதில்லை

இதை  இரண்டும்  கெட்டான் கூட்டம் எனலாம்

சொல்ல  வார்த்தையில்லை

நன்றி நேரத்திற்கு ...

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

இந்த முதல் இரண்டு வகை “சாமியார்” களாலும் சமுதாயத்தில் அளப்பரிய முன்னேற்றம் ஏற்படுகிறது. மக்களிடையே மனவளர்ச்சியும், கல்வியறிவும், உடல்நலமும்
பல்வேறு சமூகத்தினரிடையே ஒற்றுமை உணர்வும் வளர இவை உதவியிருக்கின்றன
– இப்போதும் உதவுகின்றன

நீங்கள் கூறிய மூன்றாம் தர கார்ப்பரேட் சுவாமியார்களாலும் இவை சாத்தியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித சிந்தனைக்கும், செயல்பாட்டுக்கும் அப்பால் ஒரு சக்தி இருக்கிறது என்ற அகண்ட உணர்வு அந்த உணர்வின் மூலம் எழுப்பப்படும் கேள்விகள்; மனித பிறவி , அதன் நோக்கம், பிரபஞ்ச சக்தி, தெரியாமல் அறியாமல் இருக்கும் அதன் ஆழ்ந்த உண்மைகள் இப்படியான சிந்தனை ஆன்மீகத்தை சார்ந்து நிற்கும். அல்லது ஆன்மிக தேடல் என்றும் கூட சொல்லலாம். 
இந்த சிந்தனை மனிதர்களுக்கானது. இயல்பானது. 
இவை வெறுமனே அரதப்பழசான கேள்விகளோ அல்லது வெறுமனே சோம்பேரிகளின் போக்கிடம் என்னும் சிந்தனை ஆலமற்றது.  

முன்பொரு காலத்தில் குரு, சாமியார், ஆசான் என்று பலர் தமிழரில் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அன்றைய நாளில் அது அவசியமாக இருந்திருக்கலாம்.   இப்போதும் இவ்வாறான சாமியார்கள் தேவையா ?

தேடுதல் உள்ளவனுக்கு குருவின் வழிகாட்டல் இப்போது / அப்போது என்று பார்க்காமல் தேவை உள்ளபோது தேவை. 

இன்று பெரும் செல்வத்திலும் ஊழல் அரசியல்வாதிகளின் பின் பலத்திலும் இயங்கும் சாமியார்களை நாம் பிந்தொடர்வது சரியா ?

அப்படியான சுவாமியார்களை பின்தொடர்வதை தவிர்த்து அவர்களால் நல்ல விடயங்கள் சொல்லப்படுவதாக நீங்கள் உணர்ந்தால் அந்த விடயங்களை நீங்கள் கடைபிடிக்கலாம்.

கார்ப்பரேட் மருத்துவ கம்பெனிகள் மேல் எண்ணற்ற குற்றச்சாட்டுகல் இருக்க; எனக்கு நம்பிக்கை, தேவை இருந்தால் வாக்சீன் போட்டுக்கொள்வேன் இல்லை என்றால் கடந்து போவேன் என்று இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இணையவன் said:

 யாரோ ஒருத்தர் தனக்கு நிகழ்ந்த நல்லதைச்சொல்ல, அவர் மற்றொருவருக்குச் சொல்ல… மெள்ள மெள்ள அது தேச அளவுக்கு ஏன், உலகளவுக்கு விரிகிறது.

இவற்றின் ஆதாரமான இயக்கு சக்தி மனிதன்.

இதே முறையில் தான் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடையே மதம் மாறுவதும் நடைபெறுகின்றது. மதம் மாறிய  தமிழர்  மற்ற மதத்திற்கு போன பின்பு தனக்கு அற்புதம் நடந்ததாக புளுகி விட  அதை கேட்டவர் மற்றொருவருக்கு அதை சொல்ல...😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதங்கள், சாமியார்களில் நம்பிகை இல்லை என உறுதியாக சொல்லும் அளவுக்கு எனக்கு அறிவில்லை என கருதுகிறேன், அதனால் அதனை பற்றி சிந்திப்பதில்லை, திருமணமான பின்னர் கோவிலுக்கு செல்வதுண்டு, மத நம்பிக்கையில் இல்லை மற்றவர்களின் நம்பிக்கையினை மதிப்பதற்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sad-guru உடான்ஸ்சாமியார் அருளுரை

கள்ள சாமியாருக்கும், சாமியாருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.

மறைத்து வைத்த CCTV கமராவ  கண்டுபிடிக்கத்தெரிந்தவன் சாமியார்

கண்டுபிடிக்க தெரியாதவன் கள்ளச் சாமியார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வாழ்க்கை என் முடிவு,சாமியும் வேணாம் ஆசாமியும் வேணாம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

ஒரு செக்கன் கூட இல்லை

சாமிகளும் சாமியார்களும் என்று ஒரு திரி தொடங்கி விவாதிக்கலாமா என்று யாழைத்தட்ட இது வந்து விழுகிறது. 

நம்ம உடான்சு சுவாமியார் பத்தி இல்லைதானே.

சரி இந்த சாமியார்கள் பற்றி சொல்லும் போது நேற்று பார்த்த செய்தி ஒன்றை பகிர விரும்புகிறேன்.

இந்திய பம்பாய் பக்கத்தில் ஒரு ரீச்சர், ரெயினிங் போன இடத்தில், அவர் படிப்பிக்கும் ஊரில் இருந்து பின் அங்கே இடம்மாறி வந்த முன்னாள் மாணவி வீட்டில் தங்கி இருந்திருக்கிறார்.

மாணவியின் தாயார், அவரிடம், கலியாணம் ஆகி கண நாளாகியும் பிள்ளை இல்லாமல் இருப்பது குறித்து விசாரித்து இருக்கிறார்.

அவரும் கண்ணீர் விட, பக்கத்து தெருவில், அருள் பாலிக்கும் திருநங்கை சாமியார் குறித்து சொல்லி, போய் பார்த்து ஆசி வாங்கி வருமாறு, மகளுடன் அனுப்பி வைத்தார்.

அவரது பிரச்சணையை கேட்ட சாமியார், மாணவியை, வெளியே இருக்கச் சொல்லி விட்டு, உடனடியாக பூசையை ஆரம்பித்தார்.

எதையோ பூச, ஆசிரியை மயக்கமாக, அவரை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார். இதை அரை மயக்கத்தில் உணர்ந்த போதும் தடுக்க முடியவில்லை.

வெளியே வந்த அவருக்கு என்ன நடந்தது என்று தெளிவின்மை இருந்தாலும் அவரது உடைகள் வரும் போது இருந்தது போலல்லாமல் களைந்திருந்ததை மாணவி கவனித்திருக்கிறார்.

மாணவியின் வீடு திரும்பிய ஆசிரியை மயக்கம் முமுவதுமாக திருப்பிய போது என்ன நடந்தது என புரியவும், திருநங்கை சுவாமியார், போலீசுக்கு போயிருப்பாரோ அல்லது ஊருக்குப் போயிருப்பாரோ என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்ய மாணவி வீட்டுப்பக்கம் விசாரணைக்கு வர, ஆசிரியை கோவத்தில், தாக்க..... ஊரே கூடிவிட்டது.

போலீசாரும் வர, சாமியார் பக்தர்கள், அவ(ரு) தான் திருநங்கையாச்சே என்று, ஆசிரியை மேல் சந்தேகத்துடன் பேசத் தொடங்கினர்.

இறுதியில் போலீசார், திருநங்கை சாமியாரை கொண்டு போய் செக் பண்ணி அவர், திருநங்கை அல்ல, அப்படி வேடத்தில் இருந்த ஆண் சாமியார் என்று அறிவித்ததுடன், ஆசிரியை குற்றச்சாட்டை வைத்து கைதும் செய்துள்ளனர்.

இது புது ரெக்னிக் ஆக இருக்குதே.

படித்த ஒரு ஆசிரியரே இப்படி ஏமாறும் போது, படிக்காத பாமர மக்களை நம்பித்தான் இந்த சாமியார்கள் கிளம்புகிறார்கள் போல உள்ளதே.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

படித்த ஒரு ஆசிரியரே இப்படி ஏமாறும் போது, படிக்காத பாமர மக்களை நம்பித்தான் இந்த சாமியார்கள் கிளம்புகிறார்கள் போல உள்ளதே.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை ஆனால் அளவுகள் வேறுபடலாம், சாமியாரில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சாமியில் நம்பிக்கை வைக்கிறார்கள்.

மனிதர்களுக்கு மதம் ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் சட்டம் ஒன்று இருக்கும் போது பின்  எதற்கு மதம் என்பதனை ஏற்று கொள்வார்களா? 

ஆனால் சாமியாராக இருந்தாலும் சாமியாக இருந்தாலும் தமக்கு நன்மை வேண்டியே நாடுகிறார்கள், யாரும் உலகம் நன்றாக இருக்கவேண்டும் என சாமியினையோ சாமியாரினையோ நாடுவதில்லை.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை ஆனால் அளவுகள் வேறுபடலாம், சாமியாரில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சாமியில் நம்பிக்கை வைக்கிறார்கள்.

மனிதர்களுக்கு மதம் ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் சட்டம் ஒன்று இருக்கும் போது பின்  எதற்கு மதம் என்பதனை ஏற்று கொள்வார்களா? 

ஆனால் சாமியாராக இருந்தாலும் சாமியாக இருந்தாலும் தமக்கு நன்மை வேண்டியே நாடுகிறார்கள், யாரும் உலகம் நன்றாக இருக்கவேண்டும் என சாமியினையோ சாமியாரினையோ நாடுவதில்லை.

உண்மை சகோ

நன்றி 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2023 at 15:20, இணையவன் said:

முன்பொரு காலத்தில் குரு, சாமியார், ஆசான் என்று பலர் தமிழரில் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அன்றைய நாளில் அது அவசியமாக இருந்திருக்கலாம்.   இப்போதும் இவ்வாறான சாமியார்கள் தேவையா ? இன்று பெரும் செல்வத்திலும் ஊழல் அரசியல்வாதிகளின் பின் பலத்திலும் இயங்கும் சாமியார்களை நாம் பிந்தொடர்வது சரியா ?

அரசியல் கட்சிகளைப்போல் இவர்களும் ஏதோ ஒரு அமைப்பு. பல அமைப்புகள் பிழையானவர்களின் கையில் அகப்பட்டு அவலங்கள் தான் மிஞ்சுகிறது.
சில  அமைப்புகள் மக்களுக்கு நல்லது செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. எனினும்  சாமிகள் அருள் வழங்குதல் என்பது எனக்கு ஏற்புடையது அல்ல. நான் கடவுள் பக்தி மிக்கவன்.  எமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது என்பதை அதிகமாக நம்புபவன்.மனம் நிம்மதியடைய தியானம் செய்பவன். ஆனான் தனி மனித சாமிகளை இதுவரைக்கும் நாடியதில்லை.

ஆன்மீகமும் வியாபாரம் ஆகி விட்டதால் சாமிகளை பற்றி பெரிதாக சொல்வதற்கில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரும்பியோ விரும்பாமலோ தமிழர்களின் பண்பாடும் கலாச்சாரமும் சைவத்துடன் பிணைந்துவிட்டது.

தமிழ் பேரரசுகளின் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் இருக்கும் சிற்பக்கலைகளும், இறைவனை நோக்கிப்பாடப்பட்ட தேவராங்களும் தமிழரின் பண்பாட்டையும் கலை கலாச்சாரத்தை சொல்லி நிற்கின்றன.

இதை தமிழரிடம் இருந்து பிரித்தால் மாத்திரமே தமிழை அழிக்கமுடியும்.

இதற்கு மதத்திற்குள்ளும் வெளியிலும் காலத்துக்கு காலம் செயற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றின் ஒரு பகுதியாகவே நான் இந்த போலி சாமியார்களை அணுகுகிறேன். 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“சாமியார்”  என்பதை தனது நகைச்சுவை மூலம் பல காலங்களுக்கு முன்பே திரை மொழியில்  மக்களுக்கு எடுத்துரைத்த எம். ஆர். ராதா. 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“கடவுள் நம்பிக்கை இல்லனு சொல்ற நிலை வருதுன்னா அது உன்ன நம்புற இடத்துல இருந்து வரணும். கடவுள் நம்பிக்கைங்குறது சாஞ்சுக்குறதுக்கு ஒரு தோள் மாதிரி. அது இல்லங்குறப்போ உனக்கு நீயே தான் அந்தத் தோள் . அந்த strentgh  உனக்கு வரணும். வரப்போ கடவுள் நம்பிக்கை வேணுமா வேணாமான்னு முடிவு எடுத்துக்கோ"- கனிமொழி. ஒரு பகுத்தறிவுவாதியின் மொழியில் இருந்து சொல்லப்பட்ட வார்த்தைகள் இவை....
 

"கடவுள் இருக்கு - இல்ல. அந்த topicகுள்ள போக மாட்டேன். எனக்கு கடவுள் வேணுமா இல்லையான்னு கேட்டா எனக்கு தேவப்படுது. ஏன்னா கடவுள் இல்லாம வாழலாம்னு சொல்றதுக்கு நிறைய clarityயும் தைரியமும் தேவைப்படுது. அது எனக்கு இன்னும் வரல. என்னுடைய சிக்கல்கள்ல இருந்து என்ன move -on பண்ணிக்கிறதுக்கு கடவுள் தேவையா இருக்கு எனக்கு.

நான் கடவுள கும்பிடறதால யாருக்கும் எந்த பிரச்னையும் இல்ல. கடவுள வச்சு வியாபாரம் பண்ணவோ அதிகாரத்த அடையவோ இல்ல வெறுக்கவோ பிரிக்கவோ try பண்ணும்போதுதான் கடவுள் பிரச்சனையா மாறுறார். Mathematicsல provlems solve பண்றதுக்கு ஒரு X போட்டு solve பண்ணுவோம்ல அப்டி எனக்கு கடவுள்."- கடவுள் நம்பிக்கை கொண்டவரான இயக்குனர் H.வினோத் சொல்லும் பார்வை...  

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக படித்து பெரிய பதவியில் இருப்பவர்கள் இப்படி சாமியார் பின்னால் அலைவதை பார்க்க அதிர்ச்ச்சியாய் இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2023 at 17:18, பாலபத்ர ஓணாண்டி said:

கடவுள் நம்பிக்கைங்குறது சாஞ்சுக்குறதுக்கு ஒரு தோள் மாதிரி. அது இல்லங்குறப்போ உனக்கு நீயே தான் அந்தத் தோள் .

தாங்கள் சாய்ந்து கொள்ள தோள் தேடி சாமியிடமும் சாமியார்களிடமும் செல்பவர்கள் தங்கள் தோள்களை கொடுத்து சாமியும் சாமியார்களும் சாய்ந்து இருப்பதற்கு உதவியல்லவா செய்கிறார்கள்.இந்தியாவில் திருப்பதி என்கின்ற கோவிலின் ஒரு நாள் வருமானம் 426 ஆயிரம் யுஎஸ் டொலராம். [426.000]

Link to comment
Share on other sites

 

சாமி – யார்?

 
  • சாமி – யார்?
சாமி – யார்?

 

இந்துக்கள் சாமி, இயேசு சாமி, அல்லா சாமி இன்னும் பிற மதத்தினர் வழிபடும் சுவாமிகள்.

பொதுப்படையாக நான் கும்பிடும் தெய்வத்தை, ஒரு சக்தியை அந்தந்த மதத்தினர் “சாமி” என்றே அழைக்கின்றனர்.

தமிழ்நாட்டிற்கு சாமி என்றால் வடநாட்டுக்கு என்னவென்று கேட்டு விடாதீர்கள்! நமக்கு அவ்வளவு அறிமுகம் இல்லை. மொழிக்கு மொழி வேறுபடும் ஆனால் எல்லா மதத்தினரும் அந்த மொழியில் குறிப்பிட்ட ஒரு சொல்லைப் பயன்படுத்தித்  தங்கள் தெய்வங்களை குறிப்பிடுகின்றனர்.

சரி நமது தலைப்புக்கு வருவோம்!

சாமி – யார்?  எங்கிருந்து வந்தனர்?

நமக்கும் கடவுளுக்கும் இடையில் அவர்களுக்கு என்ன பணி?
சற்று யோசித்துப் பார்த்தால், வெங்காயம் போல ஒன்றுமே இல்லை. வெளியில் பார்க்கும்போது வெங்காயம் முழுமையாக தெரியும் ஆனால் அதை உறிக்க உறிக்க உள்ளே ஒன்றுமே இருக்காது. அப்படி தான் சாமியார்கள்.

நாம் மனவேதனையுடன் எதையாவது எதிர்பார்த்து அங்கு சென்று இருப்போம். அதை சரி செய்கிறேன் பேர்வழி என்று அவர்கள் ஏதோ ஒரு புத்தகத்தில் எழுதி வைத்திருக்கும் நான்கு சொற்களை ஊதுபத்தி கொளுத்தி வைத்து, அல்லது கோர்வையான சொல்லில் உங்களுக்கு சொன்னால், அதை நமது மனதை ஆறுதல் அடைந்து ஏற்றுக்கொள்கிறது.

ஆனால் கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் அதை நாமே செய்து விட முடியும். ஆனால் யாரோ ஒருவரை நம்பி இருப்பதே நமக்கு பழக்கமாகிவிட்டது. ஏனென்றால் ஒரு சக்தி இருக்கிறது அதை நம்பி தான் நாம் என்று ஆரியம் நமது மனதில் ஆழப்பதிய வைத்திருக்கிறது.

நாம் சிந்தித்துப் பார்த்தால் நாம் மனதார கும்பிடும் கடவுளுக்கும் நமக்கும் இடையில் இவர் எதற்கு? ஆனால் நாம் சிந்திப்போமா? கிடையாது! சிந்திக்காமல் இருக்க வைப்பதற்கு தான் ஆயிரத்தெட்டு சடங்குகளும் பரிகாரங்களும்.

நம் மனம் கொண்ட கொண்ட ஆசையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது, அதை பெற்றுத் தருவதாக நமது மனதை நம்பவைக்கும் ஒரு கலையை தெரிந்து வைத்திருப்பதால்தான் அவர் சாமியார்!

உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். ஆனால் இவரிடம் சென்றதால் தான் கிடைத்தது என்பதை நம்ப வைக்கும் அளவுக்கு நமது யோசிக்கும் திறனும் வெகுவாக குறைத்து வைத்திருக்கின்றனர் இந்த சாமியார்கள். ஒரு புத்தகத்தை படித்தால் வரும் அறிவை விட முதிர்ச்சியை விட சாமியார்கள் கொடுத்துவிட முடியுமா? ஏன் இதை நாம் சிந்திக்கவே இல்லை. எதற்காக நமக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு தரகர் தேடுகிறோம்? பதில் இருக்காது!

ஏனென்றால் வழிவழியாக பரம்பரை பரம்பரையாக இதை நமக்கு கடத்திக் கொண்டு வருகிறார்கள். அறிவியல் இவ்வளவு வளர்ந்த பிறகும் நாம் கேள்வி கேட்க வேண்டாமா?

100 ஆண்டுகள் முன்புதான் எந்த அறிவியல் வளர்ச்சியும் இல்லாமல் ஆரியத்தின் சூழ்ச்சியால் நமது முன்னோர்களின் மனதில் இந்த பயத்தை ஆழப்பதிய வைத்துவிட்டார்கள். அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு இன்று நம்மிடமும் வந்து நிற்கிறது. ஆனால் அதில் பகுத்தறிவை பயன்படுத்தி சிந்தியுங்கள் என்று பெரியார் போன்று பலர் கூறியதால் இந்த பதிவை நான் எழுதுகிறேன். ஏனென்றால் பதினேழு வயது வரை நானும் இதே கூட்டத்தில் தான் இருந்தேன்.

ஒரு குடிசையோ கட்டிடமோ கட்டி ஆரம்பிக்கும் சாமியார் சில வருடங்களில் பல மாடிக் கட்டிடங்களும் பல நூறு ஆசிரமங்களும் திறக்கிறார் என்றால் எப்படி?

கொஞ்சம் மதத்தை தள்ளிவைத்துவிட்டு சிந்தியுங்கள் திராவிடர்களே!

எப்படி நமது தாய், தந்தையர், பாட்டி, தாத்தா மற்றும் நம் மதிப்பிற்குரிய ஆசிரியர்கள், புத்தகங்கள் சொல்லாத எந்த நல்ல விடயத்தை சாமியார்கள் சொல்லிவிடப் போகிறார்கள்?

நமக்கு அறிவு வேண்டாமா? சுய சிந்தனை வேண்டாமா?

இதற்கு சாட்சி ஜீசஸ், கால்ஸ், ஈசா யோகா போன்றோர். கடவுளின் ஏஜெண்டுகளாக இருக்கிறோம்! நாங்கள் கடவுளிடம் மன்றாடி உங்களுக்காக வேண்டுகிறோம் என்று சொன்னவர்களை இன்று இன்கம்டாக்ஸ் ரெய்டு முதல் அன்னிய செலாவணி மோசடி வரை துரத்துகிறது. இன்று சாமியார்களும் கார்ப்பரேட் மாயமாகி வருகின்றனர். தங்களுக்கு குடும்பம் என்று ஒன்று இருக்கும் பொழுது உங்கள் முன்னோர்கள் உங்களை நின்று காக்கும் பொழுது எதற்கு இந்த சாமியார்கள்?

ஏழைகளுக்கு உணவு அல்லது உதவிகளை செய்யும் பொழுது கிடைக்கும் மனநிறைவை விட அந்தச்  சாமியாரிடம் எடுத்துப் போய் பணத்தைக் கொட்டுவதில் கிடைக்கப் போகிறதா?

வரும் தலைமுறையினருக்கு இப்பேர்ப்பட்ட சிந்தனைகளைத் தான் கடத்த வேண்டுமே தவிர, சாமியார்களிடம் சென்றால் நமக்கு நன்மை நடக்கும்; மனநிறைவு கிடைக்கும் என்று சொல்லி வளர்க்கவே கூடாது.

திராவிடம் அறிவோம்! திராவிடம் பேசுவோம்! திராவிடம் பழகுவோம்!

வாழ்க தமிழ் தமிழ் வெல்லும்!

திராவிடன்

https://dravidan.in/2021/08/06/saami-yaar/

 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

 

சாமி – யார்?

 
  • சாமி – யார்?
சாமி – யார்?

 

இந்துக்கள் சாமி, இயேசு சாமி, அல்லா சாமி இன்னும் பிற மதத்தினர் வழிபடும் சுவாமிகள்.

பொதுப்படையாக நான் கும்பிடும் தெய்வத்தை, ஒரு சக்தியை அந்தந்த மதத்தினர் “சாமி” என்றே அழைக்கின்றனர்.

தமிழ்நாட்டிற்கு சாமி என்றால் வடநாட்டுக்கு என்னவென்று கேட்டு விடாதீர்கள்! நமக்கு அவ்வளவு அறிமுகம் இல்லை. மொழிக்கு மொழி வேறுபடும் ஆனால் எல்லா மதத்தினரும் அந்த மொழியில் குறிப்பிட்ட ஒரு சொல்லைப் பயன்படுத்தித்  தங்கள் தெய்வங்களை குறிப்பிடுகின்றனர்.

சரி நமது தலைப்புக்கு வருவோம்!

சாமி – யார்?  எங்கிருந்து வந்தனர்?

நமக்கும் கடவுளுக்கும் இடையில் அவர்களுக்கு என்ன பணி?
சற்று யோசித்துப் பார்த்தால், வெங்காயம் போல ஒன்றுமே இல்லை. வெளியில் பார்க்கும்போது வெங்காயம் முழுமையாக தெரியும் ஆனால் அதை உறிக்க உறிக்க உள்ளே ஒன்றுமே இருக்காது. அப்படி தான் சாமியார்கள்.

நாம் மனவேதனையுடன் எதையாவது எதிர்பார்த்து அங்கு சென்று இருப்போம். அதை சரி செய்கிறேன் பேர்வழி என்று அவர்கள் ஏதோ ஒரு புத்தகத்தில் எழுதி வைத்திருக்கும் நான்கு சொற்களை ஊதுபத்தி கொளுத்தி வைத்து, அல்லது கோர்வையான சொல்லில் உங்களுக்கு சொன்னால், அதை நமது மனதை ஆறுதல் அடைந்து ஏற்றுக்கொள்கிறது.

ஆனால் கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் அதை நாமே செய்து விட முடியும். ஆனால் யாரோ ஒருவரை நம்பி இருப்பதே நமக்கு பழக்கமாகிவிட்டது. ஏனென்றால் ஒரு சக்தி இருக்கிறது அதை நம்பி தான் நாம் என்று ஆரியம் நமது மனதில் ஆழப்பதிய வைத்திருக்கிறது.

நாம் சிந்தித்துப் பார்த்தால் நாம் மனதார கும்பிடும் கடவுளுக்கும் நமக்கும் இடையில் இவர் எதற்கு? ஆனால் நாம் சிந்திப்போமா? கிடையாது! சிந்திக்காமல் இருக்க வைப்பதற்கு தான் ஆயிரத்தெட்டு சடங்குகளும் பரிகாரங்களும்.

நம் மனம் கொண்ட கொண்ட ஆசையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது, அதை பெற்றுத் தருவதாக நமது மனதை நம்பவைக்கும் ஒரு கலையை தெரிந்து வைத்திருப்பதால்தான் அவர் சாமியார்!

உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். ஆனால் இவரிடம் சென்றதால் தான் கிடைத்தது என்பதை நம்ப வைக்கும் அளவுக்கு நமது யோசிக்கும் திறனும் வெகுவாக குறைத்து வைத்திருக்கின்றனர் இந்த சாமியார்கள். ஒரு புத்தகத்தை படித்தால் வரும் அறிவை விட முதிர்ச்சியை விட சாமியார்கள் கொடுத்துவிட முடியுமா? ஏன் இதை நாம் சிந்திக்கவே இல்லை. எதற்காக நமக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு தரகர் தேடுகிறோம்? பதில் இருக்காது!

ஏனென்றால் வழிவழியாக பரம்பரை பரம்பரையாக இதை நமக்கு கடத்திக் கொண்டு வருகிறார்கள். அறிவியல் இவ்வளவு வளர்ந்த பிறகும் நாம் கேள்வி கேட்க வேண்டாமா?

100 ஆண்டுகள் முன்புதான் எந்த அறிவியல் வளர்ச்சியும் இல்லாமல் ஆரியத்தின் சூழ்ச்சியால் நமது முன்னோர்களின் மனதில் இந்த பயத்தை ஆழப்பதிய வைத்துவிட்டார்கள். அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு இன்று நம்மிடமும் வந்து நிற்கிறது. ஆனால் அதில் பகுத்தறிவை பயன்படுத்தி சிந்தியுங்கள் என்று பெரியார் போன்று பலர் கூறியதால் இந்த பதிவை நான் எழுதுகிறேன். ஏனென்றால் பதினேழு வயது வரை நானும் இதே கூட்டத்தில் தான் இருந்தேன்.

ஒரு குடிசையோ கட்டிடமோ கட்டி ஆரம்பிக்கும் சாமியார் சில வருடங்களில் பல மாடிக் கட்டிடங்களும் பல நூறு ஆசிரமங்களும் திறக்கிறார் என்றால் எப்படி?

கொஞ்சம் மதத்தை தள்ளிவைத்துவிட்டு சிந்தியுங்கள் திராவிடர்களே!

எப்படி நமது தாய், தந்தையர், பாட்டி, தாத்தா மற்றும் நம் மதிப்பிற்குரிய ஆசிரியர்கள், புத்தகங்கள் சொல்லாத எந்த நல்ல விடயத்தை சாமியார்கள் சொல்லிவிடப் போகிறார்கள்?

நமக்கு அறிவு வேண்டாமா? சுய சிந்தனை வேண்டாமா?

இதற்கு சாட்சி ஜீசஸ், கால்ஸ், ஈசா யோகா போன்றோர். கடவுளின் ஏஜெண்டுகளாக இருக்கிறோம்! நாங்கள் கடவுளிடம் மன்றாடி உங்களுக்காக வேண்டுகிறோம் என்று சொன்னவர்களை இன்று இன்கம்டாக்ஸ் ரெய்டு முதல் அன்னிய செலாவணி மோசடி வரை துரத்துகிறது. இன்று சாமியார்களும் கார்ப்பரேட் மாயமாகி வருகின்றனர். தங்களுக்கு குடும்பம் என்று ஒன்று இருக்கும் பொழுது உங்கள் முன்னோர்கள் உங்களை நின்று காக்கும் பொழுது எதற்கு இந்த சாமியார்கள்?

ஏழைகளுக்கு உணவு அல்லது உதவிகளை செய்யும் பொழுது கிடைக்கும் மனநிறைவை விட அந்தச்  சாமியாரிடம் எடுத்துப் போய் பணத்தைக் கொட்டுவதில் கிடைக்கப் போகிறதா?

வரும் தலைமுறையினருக்கு இப்பேர்ப்பட்ட சிந்தனைகளைத் தான் கடத்த வேண்டுமே தவிர, சாமியார்களிடம் சென்றால் நமக்கு நன்மை நடக்கும்; மனநிறைவு கிடைக்கும் என்று சொல்லி வளர்க்கவே கூடாது.

திராவிடம் அறிவோம்! திராவிடம் பேசுவோம்! திராவிடம் பழகுவோம்!

வாழ்க தமிழ் தமிழ் வெல்லும்!

திராவிடன்

https://dravidan.in/2021/08/06/saami-yaar/

 

சாமி, சாமியாரை நம்பாதவர்கள் கூட சாத்திரியாரை நம்புகிறார்கள்.

ஊரில் முன்னர் சாத்திரியார்களின் பொதுவான பலன் ஆள் ஊரில இருந்தால் உயிரிழக்கலாம் அல்லது கை கால்களை இழக்கலாம் என சொல்வார்கள்.

பொதுவாக அது நிகழ்வதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக  இருப்பதால், அதையும் பெற்றோர் நம்புவார்கள்,பிள்ளை வெளிநாடு வந்த பின்; வெளிநாடுதான் வந்துவிட்டார்களே என்று நிம்மதியாயிருக்காமல் மீண்டும் சாத்திரியாரிடம் போனால்; அவர் பாட்டிற்கு பெண்களால் ஆபத்து என ஏதாவது ஒன்றை அடித்துவிடுவார்கள்.

அதுவரை சிவனே என்று இரண்டு வேலை செய்து தாணுண்டு தன்பாடுண்டு இருப்பவர்களுக்கு ஒரு திருமணத்தினை செய்துவைத்துவிடுவார்கள் இந்த சாத்திரியார்களின் பேச்சினை நம்பும் பெற்றோர்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

ஒரு குடிசையோ கட்டிடமோ கட்டி ஆரம்பிக்கும் சாமியார் சில வருடங்களில் பல மாடிக் கட்டிடங்களும் பல நூறு ஆசிரமங்களும் திறக்கிறார் என்றால் எப்படி?

இப்படி பல சிந்திக்கவைக்கும் கேள்விகளை கொண்ட நல்ல கட்டுரை.

23 minutes ago, vasee said:

சாமி, சாமியாரை நம்பாதவர்கள் கூட சாத்திரியாரை நம்புகிறார்கள்.

அப்படியும் இருக்கிறதா  நான் நினைத்தேன் இவர்களுக்குள் உள்ள பொதுவான ஒற்றுமைகள் அது என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

சாமி, சாமியாரை நம்பாதவர்கள் கூட சாத்திரியாரை நம்புகிறார்கள்.

ஊரில் முன்னர் சாத்திரியார்களின் பொதுவான பலன் ஆள் ஊரில இருந்தால் உயிரிழக்கலாம் அல்லது கை கால்களை இழக்கலாம் என சொல்வார்கள்.

பொதுவாக அது நிகழ்வதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக  இருப்பதால், அதையும் பெற்றோர் நம்புவார்கள்,பிள்ளை வெளிநாடு வந்த பின்; வெளிநாடுதான் வந்துவிட்டார்களே என்று நிம்மதியாயிருக்காமல் மீண்டும் சாத்திரியாரிடம் போனால்; அவர் பாட்டிற்கு பெண்களால் ஆபத்து என ஏதாவது ஒன்றை அடித்துவிடுவார்கள்.

அதுவரை சிவனே என்று இரண்டு வேலை செய்து தாணுண்டு தன்பாடுண்டு இருப்பவர்களுக்கு ஒரு திருமணத்தினை செய்துவைத்துவிடுவார்கள் இந்த சாத்திரியார்களின் பேச்சினை நம்பும் பெற்றோர்.

சொந்த அனுபவம் போல் தெரிகிறதே…?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

சொந்த அனுபவம் போல் தெரிகிறதே…?

 

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அப்படியும் இருக்கிறதா  நான் நினைத்தேன் இவர்களுக்குள் உள்ள பொதுவான ஒற்றுமைகள் அது என்று.

மீரா,
சொந்த அனுபவம் இல்லை, நகைசுவையாக எழுதுவதற்காக சும்மா எழுதியுள்ளேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

இங்கு எழுதியவர்கள் யாரும் சாமியார்கள் பணத்தில் மிதப்பவர்கள் என்பதை மறுதலிக்கவில்லை. அது மட்டுமல்லாது மோசமான அரசியல்வாதிகளிடமும் தொடர்புள்ளவர்கள். சாமியார்கள் செய்யும் சில சமுக சேவைகள் வெறும் கண்துடைப்புகள். அவர்களிடமுள்ள பலத்தோடு ஒப்பிடும்போது மிகச் சிறியவை.

சாமியார் ஒருவரை நம்புபவர் இன்னொரு சாமியை நம்புவது குறைவு. அதேபோல் இரு சாமியார்கள் ஒன்றுசேர்ந்து சமுகநலத் திட்டங்களை முன்னெடுப்பதும் மிக அரிது. ஏன் ஒரு சாமி இன்னொரு சாமியாருடன் சேர்வதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனது உறவினர்கள் நம்பும் சாமியார் பற்றி ஆதாரங்களுடன் அவர்களுக்கு விளக்கியபோதும் அதை ஏற்றுக் கொள்ள முடியாதவாறு அவர்களது நம்பிக்கை வேரூன்றியுள்ளது.

சாமியாரை நம்புவதும் நம்பாததும் அவரவர் சொந்த முடிவு என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது ? சாமியாரை நம்புவதால் எனது மனதில் இன்பம் உண்டாகிறது என்பதால் அவர் செய்யும் காரியங்களை நான் பொருட்படுத்தாமல் போவது சரியா ? போதை வஸ்து போலவே இதுவும். அப்பாவிகளை மயக்கி வரி கட்டாத பணத்தையும் கருப்புப் பணத்தையும் முடக்குவது தனது நாட்டுக்குச் செய்யும் தேச துரோகம். எனது சொந்த மன நிம்மதிக்காக நான் இதை எப்படி அனுமதிப்பது எப்படி நியாயமாகும் ?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.