Jump to content

சிலேடை நயம்


Recommended Posts

நண்பர்களே!!

தமிழின் அழகு எழுத்தில் அடங்காதது. மனித உயிரின் அத்தனை உணர்வுகளையும் எழுத்தில் வடித்தனர் எம் முன்னோர். வீரம், காதல், அன்பு, கோபம், துன்பம், வெறுப்பு என்று எதையும் விட்டுவைக்கவில்லை. ஆனாலும் தமிழருக்கே உரிய பண்பு காரணமாக, இவற்றை சிலேடையாக வெண்பாக்களிலும் பாடல்களிலும் அழகாக அமைத்தனர். இந்த அழகிய தமிழ்க் களஞ்சியத்தை கோர்த்து ஒரு மாலையாக்க விரும்பி இந்த பகுதியை தொடங்கினேன். உங்களில் பலர் தமிழில் இலக்கியங்களில் அதிகளவு நாட்டம் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு தெரிந்த சிலேடை வெண்பா, பாடல்களை பொருளுடன் இணைத்துவிடுங்கள்.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

ஒருமுறை ஒளவையாரை நோக்கி காளமேகப் புலவர் நையாண்டியாக ஏதோ கூற, வெகுண்டெழுந்த ஒளவையார் இந்தப் பாடலை பாடினார். கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகள் எவ்வளவு நயமாக வந்து விழுந்திருக்கின்றன, பாருங்கள்:

எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே

மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்

கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே

யாரையடா சொன்னாய் அது.

தமிழில் "அ" என்ற எழுத்து "எட்டு" என்ற எண்ணை குறிக்கும். அதேபோல் "வ" என்பது "1/4" ஐ குறிக்கும். அப்படியானால் "எட்டேகால்" என்பது "அவ" என்றாகிறது. முதல் சொற்றொடர் "அவ லட்சணமே" என்று பொருள் தருகிறது.

எமன் ஏவும் பரி என்பது "எருமை". :)

பெரியம்மை என்பது "லட்சுமியின் தமக்கையான மூதேவி". :rolleyes:

முட்டமுட்ட கூரையில்லா வீடு என்பது "மேகம்" (அதாவது காளமேகம் :D )

குலராமன் தூதுவன் "குரங்கு"

அப்படியே "யாரையடா சொன்னாய் அது".

அவ்வையை இப்படி பாடவைக்க காளமேகம் என்ன கூறியிருப்பார் என தெரியவில்லை. தெரிந்தவர்கள் இணைக்கவும்.

Link to comment
Share on other sites

காளமேகத்தின் திறனைப் பாருங்கள். பாம்பையும் வாழைப்பழத்தையும் ஒரே வெண்பாவில் வைத்து எவ்வளவு அழகாக பாடிவிட்டார்.

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்

வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்

தேம்பாயும் சோலைத் திருமலைராயன் வரையில்

பாம்பாகும் வாழைப் பழம்.

:lol::lol:

பாம்பில் "நஞ்சு இருக்கும்". வாழைப்பழம் "நைந்து இருக்கும்",

பாம்பும் தோலை உரிக்கும். வழைப்பழத்தை உண்பவர்களும் அதன் தோலை உரிப்பர்.

பாம்பு சிவன் முடியிலும் இருக்கும், வாழைப்பழமும் பஞ்சாமிர்தமாக சிவன் முடியில் இருக்கும்.

பாம்பு சினந்து கடித்தால் மீட்சி இல்லை. அதேபோல் வாழைப்பழத்தை கடித்துவிட்டாலும் அது பூசைக்கு உதவாது.

அதன் பின் திருமலைராயனை புகழ்ந்து எழுதுகிறார்.

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி ஈழத்திருமகன்

நீங்கள் இரசித்த சிலேடை வெண்பாக்களை நானும் இரசித்தேன். நேரம் கிடைக்கும் போது நானும் இணைக்கிறேன். தொடர்ந்து இணையுங்கள்.

Link to comment
Share on other sites

ஒருமுறை ஒளவையாரை நோக்கி காளமேகப் புலவர் நையாண்டியாக ஏதோ கூற, வெகுண்டெழுந்த ஒளவையார் இந்தப் பாடலை பாடினார். கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகள் எவ்வளவு நயமாக வந்து விழுந்திருக்கின்றன, பாருங்கள்:எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியேமட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்கூரையில்லா வீடே குலராமன் தூதுவனேயாரையடா சொன்னாய் அது.தமிழில் "அ" என்ற எழுத்து "எட்டு" என்ற எண்ணை குறிக்கும். அதேபோல் "வ" என்பது "1/4" ஐ குறிக்கும். அப்படியானால் "எட்டேகால்" என்பது "அவ" என்றாகிறது. முதல் சொற்றொடர் "அவ லட்சணமே" என்று பொருள் தருகிறது. எமன் ஏவும் பரி என்பது "எருமை". :lol: பெரியம்மை என்பது "லட்சுமியின் தமக்கையான மூதேவி". :lol: முட்டமுட்ட கூரையில்லா வீடு என்பது "மேகம்" (அதாவது காளமேகம் :D )குலராமன் தூதுவன் "குரங்கு"அப்படியே "யாரையடா சொன்னாய் அது". அவ்வையை இப்படி பாடவைக்க காளமேகம் என்ன கூறியிருப்பார் என தெரியவில்லை. தெரிந்தவர்கள் இணைக்கவும்.
ஈழத்திருமகன் ஒளவையிடம் முண்டி அவலட்சணமானவர் காளமேகமல்ல கம்பர்.வேறொன்றும் இல்லை ஒளவையை 'அடீ" என்று கம்பன் அழைத்ததால் வந்தவினை என்று பழசுகள் வாய்வழிக்கூற்றாகக் கேட்டிருக்கிறேன்'எட்டேகால் லட்சணமே எமனே றும்பரியேமட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேல்கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனேஆரையடா சொன்னாய் அது."எட்டேகால் லட்சணமே - அவலட்சணமேஎமன் ஏறும் பரியே - எருமையேமட்டில் பெரியம்மை வாகனமே - அளவில்லா துன்பத்தைத் தரும் மூதேவியின் வாகனமான கழுதையேமுட்டமேல் கூரையில்லா வீடே - குட்டிச்சுவரேகுலராமன் தூதுவனே - அனுமனேஆரையடா சொன்னாய் அது - (நீ) சொன்னது ஆரைக்கீரையையடாஅந்தக்கால ஆட்களின் அட்டகாசம் எப்படியிருக்கு?பொல்லாத ஆட்களுங்கோ... ஈழத்திருமகன் நமக்குத் தெரிந்தது இவ்வளவுதான் கம்பன் அடீ என்று விளித்ததற்காக, ஒளவை அடா என்று கேட்டு சமநிலைப்படுத்திவிட்டார்.
Link to comment
Share on other sites

ரசிகை, ஆதி மிகவும் நல்லது. நேரம் கிடைக்கும் போது நீங்களும் வெண்பாக்களை இணையுங்கள்.

ஆதி. ஒளவையிடம் அவலட்சணப் பட்டது கம்பரா? இன்றுதான் அறிந்துகொண்டேன். நன்றி.

ஆமாம். புலவர்களிடம் மாட்டிக்கொண்டால் "கையறம் பாடிவிடுவார்கள்" என்று கேள்விப்பட்டிருக்கிறேன். :lol::lol:

Link to comment
Share on other sites

ஈழத்திருமகன் நல்லதொரு பதிவு.

காளமேகத்தின் கவிதைகள்; அதனூடான சிலேடைகள் பெயர் போனவை. அவரவர்கள் அறிந்ததைத் தந்தால் இப் பகுதி மேலும் சிறப்புறும்.

எனது பங்குக்கு ஒரு பகுதி

நாகபட்டினத்தில் உள்ள காத்தான் என்பவரது சத்திரத்திற்கு உணவு அருந்துவதற்காக காளமேகம் ஒரு தடைவ சென்றிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்தும் உணவு வந்த பாடில்லை. காளமேகம் பொறுமையை முற்றாக இழந்து போன பின்னர்தான் உணவு அருந்த அழைப்பு வந்தது. பசியின் உச்சத்துக்குப் போயிருந்த காளமேகம் அப்பொழுது உதிர்த்த கவிதை,

கத்துக்கடல் நாகைக்

காத்தான் தன் சத்திரத்தில்

அத்தமிக்கும்போதில்

அரிசி வரும் - குத்தி

உலையில் இட ஊர் அடங்கும்;

ஓரகப்பை அன்னம்

இலையில் இட வெள்ளி எழும்.

பாடலைக் கேட்டதன் பின்னர்தான் உரிமையாளருக்கு வந்திருப்பது காளமேகம் என்பது தெரிந்திருக்கிறது. இந்தப் பாடலினால் எங்கே தனது சத்திரத்திற்கு அவப் பெயர் வந்து விடுமோ என்று பயந்த காத்தான்; காளமேகத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். காளமேகம் நிலமையைச் சரி செய்ய பாடலுக்கான விளக்கத்தை இவ்வாறு சொல்லிக் கொண்டார்.

'காத்தானது சத்திரத்தில், அத்தமிக்கும் நேரத்தில் அதாவது நாட்டில் உணவின்றி பஞ்சம் தலைவிரித்தாடும் காலத்தில் அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். அங்கு பரிமாறும் உணவை உண்டு அந்த ஊரே பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பை அன்னம் வெள்ளி நட்சத்திரம் போல பிரகாசமாக இருக்கும்'.

என்று பதில் சொன்னார். ஆனால் உண்மையான கருத்து வேறு விதமானது என்பது கவிதையைப் பார்த்ததும் புரிந்திருக்கும்.

உணவு உண்ணும் போது இன்னுமொரு கவிதையை காளமேகம் உமிழ்ந்திருக்கிறார். பலர் தங்களது மனைவிமார்களின் சுருக்கவிழ்ந்த குடுமியை வைத்துப் பாட இந்தக் கவிதை காரணமாயிருந்திருக்கிறது.

ஒரு தடைவ குடந்தை என்னும் நகரத்தில் உள்ள சத்திரத்தில் காளமேகம் உணவருந்திக் கொண்டிருந்தார். அருகில் ஒரு பிராமணன் உணவு உட்கொண்டு கொண்டிருந்தான். அவனது குடுமி அவிழ்ந்து அவன் உண்டு கொண்டிருக்கும் உணவில் அது விழ, குடுமியை பிராமணன் எடுத்து உதற, அருகில் உணவருந்திக் கொண்டிருந்த காளமேகத்தின் இலையில் அந்தக் குடுமியில் இருந்த சோற்றுப் பருக்கைகள் விழ, காளமேகம் கோபம் கொண்டு சொன்ன கவிதை,

சுருக்குஅவிழ்ந்த முன்குடுமிச் சோழியா! சோற்றுப்

பொருக்குஉலர்ந்த வாயா! புலையா! - திருக்குடந்தைக்

கோட்டானே! நாயே! குரங்கே! உனைஒருத்தி

போட்டாளே வேலையற்றுப் போய்!

Link to comment
Share on other sites

ஒளவையின் ஏளனப் பாட்டிற்குள்ளானவர் காளமேகமுமல்ல, கம்பருமல்ல. கம்பர் ஒளவையின் காலத்தில் வாழ்ந்தவருமல்ல. ஒளவையின் காலத்தில் வாழ்ந்த போட்டிப் புலவர் ஒட்டக்கூத்தர். இவருக்கு நெடுநாளாக ஒளவையை அவமானப்படுத்த வேண்டும் என்பது ஒரு வித்துவ அவா. அதை நிறைவேற்று முகமாகவே அரச சபையில் வைத்து ஒரு விடுகதை போன்ற கேள்வியைக் கேட்டார்.

"ஒரு காலடி நாலிலைப் பந்தலடி"

இந்தக் கேள்வியால் வந்த வினைதான் இந்தப் பாடல். இந்தப் பாடலில் அந்தக் கேள்விக்கான பதிலையும் ஒளவை சொல்லியிருந்தார் .

"ஆரையடா சொன்னாய் அடா. "

ஆரை என்ற பூண்டிற்கு ஒரு தண்டும் ( கால் ) நான்கு இலையுமுண்டு.

Link to comment
Share on other sites

கவியரசு கண்ணதாசனின் 'வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ '' என்ற பாடலை கேட்டிருக்கிறோம். அதன் கருத்தாழத்தை நினைத்துக் கவியரசு கண்ணதாசனை வாழ்த்தியிரு;கிறோம்.

இதே கருத்துப்பட பாடப்பட்ட சிவவாக்கியாரின் பாடலொன்றை இங்கே இணைக்கிறேன்

மிக்க செல்வநீ படைத்த விறகுமேவிப் பாவிகாள்

விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவ தறிகிலீர்

மக்கள்பெண்டிர் சுற்றமென்று மாயைகாணு மிவையெலாம்

மறலிவந் தழைத்தபோது வந்துகூட லாகுமோ?

எவ்வளவு மிகுதியாகச் செல்வம் படைத்தவனாயிருந்தாலும், இறந்தபின் விறகில் வைத்துக் கொளுத்தி விடுவார்கள்;. பிறகு வெந்தபின் சாம்பல் ஒன்றே மீதி. மாடு, மனை, மக்கள், சுற்றம் ஆகிய பந்த பாசம் தருபவை எல்லாம் எமன் வந்து அழைக்கும்போது துணை வருவார்களோ?

Link to comment
Share on other sites

ஈழதிருமுகன் மாமா எனக்கு சிலேடை என்றா என்னவென்று விளக்கம் சொல்லுங்கோ............ :lol:

Link to comment
Share on other sites

மிகவும் நல்லது, ஆரவல்லி,இறைவன் மற்றும் மணிவாசகன். பாருங்கள் எவ்வளவு தெரியாத விடயங்கள் இருக்கின்றன. அறிந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி.

ஆரவல்லி, நீங்கள் தந்த இரண்டாவது வெண்பாவில் காளமேகத்தின் கோபம் எப்படி இருக்க்கிறது என்று பார்த்தீர்களா? இறுதி அடியில் "போட்டாளே வேலையற்றுப் போய்" என்று எழுதிவிட்டார். பொதுவாகவே ஒரு தாய் மகவை "பெற்றெடுத்தாள்" என்றே கூறுவார்கள். பசுமாடு கன்றை "ஈன்றது" என்றும் நாய் "குட்டி போட்டது" என்றும் வரும். காளமேகத்தின் கோபம் "முன்குடுமிச் சோழியனை" மட்டுமல்ல அவனை பெற்றெடுத்த அன்னையையும் சென்றுதைக்கிறது. இகழ்ந்து பாடுவதில் காளமேகம் ஒரு தனிப்பிறவி.

இறைவன். எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. காளமேகமும் ஒட்டக்கூத்தரும் ஒரே காலத்தவர். பொதுவாகவே காளமேகம்தான் வம்பு வழக்குக்களை விலைகொடுத்து வாங்குபவர். ஒளவைக்கு பிரச்சனை ஒட்டக்கூத்தருடனா? ம்ம்... :lol::lol:

மணிவாசகன். ஆமாம். சமயபெரியார்களும் சிலேடை வெண்பாக்களில் பல உட்பொருள்களை வைத்து எழுதிவிடுகின்றனர். எமது காலத்தில் வாழ்ந்த "கவியரசு கண்ணதாசன்" யாருக்கும் சளைத்தவர் அல்ல. என்னைக் கவர்ந்த கவிஞர் அவர்.

உங்கள் ஆக்கங்களுக்கு மிகவும் நன்றி. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

இதோ நான் ரசித்த பட்டினத்தார் பாடல் ஒன்று:

சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க

வெற்றம்பலம் நாடிவிட்டோமே

நித்தம் பிறந்த இடத்தை நாடுதே

பேதை மட நெஞ்சம் - கறந்த

இடத்தை நாடுதே கண்!

Link to comment
Share on other sites

ஈழதிருமுகன் மாமா எனக்கு சிலேடை என்றா என்னவென்று விளக்கம் சொல்லுங்கோ............ :)

குழந்தாய்.!! :lol::lol:

சிலேடை என்பது எல்லா மொழிகளிலும் இருக்கக்கூடிய ஒரு "அணி". ஒரு சொல் அல்லது சொற்றொடர் தனியாகவோ அல்லது பிரிந்தோ பல்வேறு கருத்துக்களை தருவது சிலேடை. ஒருமுறை படிக்கும்போது ஒருவகை கருத்தையும், சொற்களை பிரித்துவிட்டால் இன்னொரு கருத்தையும் தருவது "பிரிமொழிச் சிலேடை". அவ்வாறில்லாமல் சொற்கள் பிரிக்கப்படாமலே வெவ்வேறு கருத்துக்களை தருவது "செம்மொழிச் சிலேடை".

சின்னப்புவை கேட்டுப்பாருங்கள். சிலேடையாக பேசுவார். :P :P

இதோ நான் ரசித்த பட்டினத்தார் பாடல் ஒன்று:சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்கவெற்றம்பலம் நாடிவிட்டோமேநித்தம் பிறந்த இடத்தை நாடுதேபேதை மட நெஞ்சம் - கறந்த இடத்தை நாடுதே கண்!

:D:)

Link to comment
Share on other sites

காளமேகம் "வைக்கோலையும்" "போர்யானையையும்" சேர்த்து எழுதிய சிலேடை. மிகவும் அருமையான வெண்பா.

வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும்

போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற

செக்கோல் மேனித் திருமலைராயன் வரையில்

வைக்கோலும் மால்யானை ஆம்.

யானையும் போர்க்களத்தில் பகைவரை வாரி அள்ளி அடித்துத் துவைக்கும். வைக்கோலையும் களத்துமேட்டில் சூடடிப்பார்கள்.

யானை போர் முடிந்து வந்து கோட்டைக்குள் செல்லும். வைக்கோலும் சூடடித்து முடிந்தபின் நெல் கோட்டை புகும்.

யானைப்படை போர்க்களத்தில் ஒரு பொலிவு. வைக்கோல் கூட "வைக்கோற்போர்" ஆக குவிக்கப்பட்டு அழகுறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காளமேகத்தின் பாடலில் ஒன்று. அர்த்தம் சொல்லுகின்றவைக்கு ஆயிரம் பொற்காசுகள்.

தத்தித் தாதுதி தாதூதித் தத்துதி..

துத்தித் துதைதி தித்தித்த தித்தித்த தாதெது

தித்தித்ததெத்தாதோ

தித்தித்த தோது

Link to comment
Share on other sites

மதனராசா, 1000 பொற்காசுகள் பேச்சிலும் எழுத்திலும் மட்டும் இல்லைத்தானே?

பொருளைத் தந்திருக்கிறேன். பிழைகள் இருந்தால் பார்த்துக் குறைச்சுக் கொள்ளலாம்.

தோழியின் மூலமாக அனுப்பும் தூது நன்மை பயக்காது. கிளியோ தூதுப் பணியில் தூதை திறம்பட ஓதாது. தோழியின் தூதோ நாளைக் கடத்திக் கொண்டே போகும். தெய்வத்தை வழிபட்டுத் தொடர்தலும் தீதாகும். ஆகவே பூந்தாதினைப் போன்ற தேமல்கள் என் மேல் படராது எனக்கு இனிமையான தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக.

Link to comment
Share on other sites

குழந்தாய்.!! :lol::lol:

சிலேடை என்பது எல்லா மொழிகளிலும் இருக்கக்கூடிய ஒரு "அணி". ஒரு சொல் அல்லது சொற்றொடர் தனியாகவோ அல்லது பிரிந்தோ பல்வேறு கருத்துக்களை தருவது சிலேடை. ஒருமுறை படிக்கும்போது ஒருவகை கருத்தையும், சொற்களை பிரித்துவிட்டால் இன்னொரு கருத்தையும் தருவது "பிரிமொழிச் சிலேடை". அவ்வாறில்லாமல் சொற்கள் பிரிக்கப்படாமலே வெவ்வேறு கருத்துக்களை தருவது "செம்மொழிச் சிலேடை".

சின்னப்புவை கேட்டுப்பாருங்கள். சிலேடையாக பேசுவார். :P :P

மாமோய்!!

உங்களின் விளகதிற்கு மிக்க நன்றி பேபிக்கு ஒரளவு விளங்கிவிட்டது இன்னும் கொஞ்சம் விளங்கியவுடன் நானே சிலேடையை இங்கே கொண்டு வந்து பதிகிறேன்....அதுவரை சின்னா தாத்தாவிடம் சென்று கற்று வருகிறேன் மாமா........ :D :P

நன்றி

Link to comment
Share on other sites

காளமேகத்தின் பாடலில் ஒன்று. அர்த்தம் சொல்லுகின்றவைக்கு ஆயிரம் பொற்காசுகள்.

தத்தித் தாதுதி தாதூதித் தத்துதி..

துத்தித் துதைதி தித்தித்த தித்தித்த தாதெது

தித்தித்ததெத்தாதோ

தித்தித்த தோது

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

தூதிதூ தெத்தித்த தூததே - தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது

தித்தித்த தோதித் திதி

ஆரவல்லியக்கோய்!

இங்கு இன்னொரு பாடலை பாருங்கோ

Link to comment
Share on other sites

ஆகா... காளமேகம் சரியான வில்லங்கமான புலவராக இருப்பார் போலும். :lol::lol:

Link to comment
Share on other sites

போங்கப்பா ஆதி தலைப்பிற்குள் கட்டுப்படாமல் குழப்புகிறேன் என்று யாரோ முணுமுணுக்கிறார்கள்.

கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்

வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டபோய்ப்

மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்

ஏறப் பரியாகு மே.

பெரியவாள் பொருள் சொல்லி ஆதியைக் காப்பாத்திவிடுங்கோ.

Link to comment
Share on other sites

ஏதோ தேடும் போது இது கிடைத்தது. இங்கு பொருந்தும் என்பதால் இதனை இணைக்கிறேன்

ஔவையாரின் பதிலடி- ஏ.கே.ராஜகோபாலன்

ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.

அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்கும்.

ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.

கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே காரிக் கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்:

"தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே

மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"

தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஔவையார்.

"குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் காரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.

அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு காரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வாரிகளின் கீழே கீழ்க்கண்ட வாரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:

"பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொற் சிலம்பே சிலம்பு."

என்பதாகும் அவ்வரிகள்.

ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.

தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும் படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,

"ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"

என்று கூறினார். இதற்கு உத்தரமாக ஔவையார்,

"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பா¢யே

மட்டில் பொ¢யம்மை வாகனமே முட்டமேற்க்

கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே

ஆரையடா சொன்னாயது."

தமிழில் "அ" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "வ" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.

எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பாரி எருமை. எமனேறும் பாரியே என்றால் "எருமையே" எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.

"குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.

எவ்வளவு அருமையான புலமை விளையாட்டு!

நன்றி

நிலாச்சாரல்

Link to comment
Share on other sites

கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்

வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டபோய்ப்

மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்

ஏறப் பரியாகு மே.

ஆதி சரியான பொருள் தெரியவில்லை. கீரைப்பாத்தியும் குதிரையுமா? :lol::lol:

Link to comment
Share on other sites

அது யாரு இரசிகையம்மாவாக்கும் அதான் ஆதியைக் காப்பாற்ற ஆதாரத்துடன் வந்துவிட்டார். நன்றி இரசிகைஎங்கேப்பா இறைவன் சீக்கிரமாக் கூப்பிடுங்க. இரசிகையம்மாவுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்று கேக்கோணும்ஈழத்திருமகனே! ஆதி சொல்லிட்டன் அப்பப்ப பொருள் தெரியாட்டாலும் எதையாவது போடுவேன் நீங்க யாராவது ஆதியைக் காப்பாத்தி கரையேத்தினாத் தப்புவன் அவ்வளவுதான். இல்லையெண்டால் தமிழும் நயமும் பகுதியில் தாண்டு போடுவன். :lol:

Link to comment
Share on other sites

குலோத்துங்க மன்னனின் மனைவி பாண்டிய நாட்டு ராஜகுமாரி. அவளது குரு புகழ்பெற்ற நளவெண்பா என்னும் காவியத்தை இயற்றிய புகழேந்திப் புலவர். புகழேந்திப் புலவர் ராஜகுமாரியுடனே வந்து சோழ நாட்டில் தங்கி இருந்தார். குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவரும் குருவுமான ஒட்டக்கூத்தர் புகழேந்தியை எக்காரணமுமின்றிச் சிறையிலடைத்துவிட்டார். இந்த விவரத்தைக் கேள்வியுற்ற ராணிக்குக் கோபம் வந்து விட்டது. அதனால் அவள் அரசன் அந்தப்புரத்திற்கு வரும் சமயம் அறைக்குள்ளே புகுந்து கொண்டு கதவைத் தாழிட்டுக் கொண்டாள். மன்னன் குரல் கொடுத்தும் கதவைத் திறக்கவில்லை. அந்த நாளில் மகாராணிகள் ஊடல் கொண்டால் மன்னர்கள் தங்கள் அவைக்களப் புலவரை அனுப்பி சமாதானம் செய்து வைப்பது வழக்கம். அதன்படியே குலோத்துங்கனும் தனது அவைக்களப் புலவரும் குருவுமான ஒட்டக்கூத்தரை அனுப்பினான். ஒட்டக்கூத்தர் அந்தப்புரத்திற்கு வந்து ராணியின் அறைக்கு முன்னால் நின்றுகொண்டு இவ்வாறு பாடினார்

"நானே இனியுன்னை வேண்டுவதில்லை நளினமலர்த்

தேனே கபாடந் திறந்திடு திறவா விடிலோ

வானேறனைய வாள் விரவிகுலாதிபன் வாசல் வந்தால்

தானே திறக்கு நின் கையிதழாகிய தாமரையே!"

“நளினமான மலரில் இருக்கும் தேன் போன்ற பெண்ணே நீ கதவைத் திறப்பதற்கு நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்ளும் அவசியமில்லை ஏனென்றால் வானளாவிய புகழ் கொண்ட ஆண் சிங்கத்தைப் போன்ற வலிமையுடைய வாள் வீரனாகிய குலோத்துங்கன் உன் அறை வாசலுக்கு வந்தால் தாமரை போன்ற உன் கைகள் தானே கதவைத் திறந்துவிடும்!” எனும் பொருளுடைய பின்வரும் பாடலைக் கூறினார்.

இந்தப் பாடலைக் கேட்ட அரசியின் கோபம் அதிகமாகவே அவள் கதவின் இன்னுமொரு தாழ்ப்பாளையும் தாளிட்டுக் கொண்டாள். அப்படித்தான் ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ சொற்றொடர் உருவானது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.