Jump to content

கூட்டணி குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சு – செல்வம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்- செல்வம்!

கூட்டணி குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சு – செல்வம்!

தமிழரசுக் கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக டெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ்தேசிய மக்கள் கூட்டணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து இந்த கூட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள பேச்சு நடத்தப்படும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1319593

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேமம் கொண்டு, மணியை எடுத்து, கஜேந்திரனை நினைத்து, லிங்க தரிசனத்துடன், மாவை காணிக்கையாக்கி வழிபட்டால், விக்கினங்கள் விலக கூடும், சிவஞான சித்தம் கைகூடும், செல்வம் பெருகும் என்ற கணக்கு, இருப்பது போல் படுகிறது.

ஆனால் பொன்னார் மேனியனுக்கு அம்பலத்தில் தனியே ஆடுவதுதான் பிடிக்கும் என நினைக்கிறேன்.  

  • Like 2
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

பிரேமம் கொண்டு, மணியை எடுத்து, கஜேந்திரனை நினைத்து, லிங்க தரிசனத்துடன், மாவை காணிக்கையாக்கி வழிபட்டால், விக்கினங்கள் விலக கூடும், சிவஞான சித்தம் கைகூடும், செல்வம் பெருகும் என்ற கணக்கு, இருப்பது போல் படுகிறது.

ஆனால் பொன்னார் மேனியனுக்கு அம்பலத்தில் தனியே ஆடுவதுதான் பிடிக்கும் என நினைக்கிறேன்.  

 

அவரும்  தனியே ஆடி  களைத்த  விட்டாரல்லவா?

எனக்கும்  இத  சரி வந்தால்  நலலது போலத்தான்  கிடக்கு?

இதாவது  கூட்டமைப்பை வுலை  செய்யத்தூண்டட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

 

அவரும்  தனியே ஆடி  களைத்த  விட்டாரல்லவா?

எனக்கும்  இத  சரி வந்தால்  நலலது போலத்தான்  கிடக்கு?

இதாவது  கூட்டமைப்பை வுலை  செய்யத்தூண்டட்டும்

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் “நானே ராஜா, நானே மந்திரி” புத்தி 3 தலைமுறை முதுசொம். மாறுமா? பார்ககலாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

26 minutes ago, goshan_che said:

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் “நானே ராஜா, நானே மந்திரி” புத்தி 3 தலைமுறை முதுசொம். மாறுமா? பார்ககலாம்.

அதிகமாக ஆசனங்கள் எடுக்கத்தான் இந்த கூட்டுக்கள். செயலளவில் எதுவும் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, nunavilan said:

அதிகமாக ஆசனங்கள் எடுக்கத்தான் இந்த கூட்டுக்கள். செயலளவில் எதுவும் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. 

மாற்று கருத்து இல்லை. 

ஆனால் கதிரையை காப்பாற்றவாவது எதையாவது உருபடியாக செய்ய வேண்டும் என்ற நிலையை, நிர்பந்தத்தை இவர்களுக்கு உருவாக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள பேச்சு நடத்தப்படும்

புகட்டுக்காலை  எடுத்து அடுப்புக்கை வைச்ச கதைதான்! இதுகும் பிரிந்து பிரிந்து போனதுதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரியாரையும் கேட்டுப்பாக்கலாம் வேண்டுமானால், கடிதம் எழுதியே உயிரை எடுத்துப்போடுவார்!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.