Jump to content

காதலனின் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட 'அசாதாரண' பெண்ணின் உருக்கமான கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதலனின் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட 'அசாதாரண' பெண்ணின் உருக்கமான கதை

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,டிம் ஸ்டோக்ஸ்
  • பதவி,பிபிசி நியூஸ்
  • 10 ஜனவரி 2023, 06:10 GMT
எடித் தாம்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

செய்யாத குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட எடித் தாம்சன்

1923ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பிரிட்டனை சேர்ந்த ஓர் இளம்பெண் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். எடித் தாம்ஸன் என்ற அந்த பெண்ணுக்கும் அவரது காதலர் ஃப்ரெடிரிக் பைவாட்டர்ஸுக்கும் ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தனது காதலனால் தன்னுடைய கணவர் கொல்லப்படுவார் என்பது குறித்து துளியும் அறிந்திராத அந்த பெண், இந்த வழக்கில் ஏன் தண்டிக்கப்பட்டார்? ஒரு நூற்றாண்டு கடந்துவிட்ட பின்னரும் இந்த வழக்கு ஏன் இன்றும் பேசப்படுகிறது?

ஒரு குளிர் நிறைந்த செவ்வாய் கிழமையின் காலை வேளையில் எடித் தாம்ஸனின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக லண்டனின் ஹாலோவே சிறைச்சாலைக்குள் சிறை அதிகாரி தனது உதவியாளர்களுடன் வந்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து மயக்க ஊசிகளால் துளைக்கப்பட்டிருந்த எடித் தாம்ஸனின் உடல் அப்போது சிறைக்குள் சரிந்து கிடந்தது. சிறை அதிகாரிகள் தனது அறைக்குள் நுழைந்தபோது சுயநினைவின்றி இருந்த அவரிடமிருந்து சிறு முனகல் மட்டுமே வெளிப்பட்டது.

எடித் தாம்ஸனை தூக்குமேடைக்கு அழைத்து செல்ல வந்த அதிகாரிகளில் ஒருவர், ‘இதோ சீக்கிரம் எல்லாம் முடிந்துவிடப்போகிறது, எழுந்து வா’ என்று கூறி அவரை தனது தோளில் சாய்த்து அழைத்து செல்கிறார். அங்கே அவருக்கு தூக்குமேடையும், மரணத்திற்கான கதவும் காத்துக்கொண்டிருந்தன. அடுத்த ஒரு சில நொடிகளில் எடித் தாம்ஸனின் உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 29 மட்டுமே.

 

 

லண்டன் ஹாலோவே சிறைச்சாலையிலிருந்து அரை மைல் தூரத்தில் அமைந்திருந்த பெண்டொன்வில் சிறைச்சாலையில் அதே தினம் எடித் தாம்ஸனின் 20வயது காதலர் ஃப்ரெட்ரிக்கிற்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அன்றைய தினத்திலிருந்து சுமார் மூன்று மாதத்திற்கு முன்பாக, தியேட்டரில் படம் பார்த்துவிட்டு எடித் தாம்ஸன் தனது கணவர் பெர்சியுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக அங்கு வந்த ஃப்ரெடிரிக், பெர்சியை பலமுறை தனது கத்தியால் குத்தினார். இந்த வழக்கு நடைபெற்று வந்த காலகட்டத்தில், ‘தான் செய்த கொலை குறித்து தனது காதலியான எடித் தாம்ஸனுக்கு எதுவும் தெரியாது’ என ஃப்ரெடிரிக் தொடர்ந்து கூறிவந்தார். ஆனாலும் ஃப்ரெடிரிக்குடன் சேர்ந்து எடித் தாம்ஸனுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கு அன்றைய பிரிட்டன் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட எடித் தாம்ஸன் மக்களால் மிகவும் ஒழுங்கீனமற்ற ஓர் பெண்ணாக பார்க்கப்பட்டார்.

ஆனால் அதேசமயம் எடித் தாம்ஸனுக்கு நிறைவேற்றப்பட்ட இந்த மரண தண்டனை குறித்து பிரிட்டன் எழுத்தாளரும் , கதாசிரியருமான எட்கர் வாலஸ் கூறுகையில் ”நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் பாரபட்சத்துடன் ஒரு வழக்கு நடத்தப்பட்டு, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண் தண்டிக்கப்பட்டார் என்றால் அது எடித் தாம்ஸன்தான்” என்று குறிப்பிடுகிறார்.

எடித் தாம்ஸன் - ஓர் அசாதாரணமான பெண்

அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான உழைக்கும் வர்க்க பெண்கள் ஏற்றுக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கையை வாழ்வதற்கு எடித் விரும்பவில்லை. அவர் எப்போதும் ஒரு வித்தியாசமான பார்வையைக் கொண்டிருந்தார்.

1893ஆம் ஆண்டு கிழக்கு லண்டனில் அமைந்துள்ள மேனர் பார்க் பகுதியில் ஒரு கிறிஸ்துமஸ் நாளில் எடித் பிறந்தார். குடும்பத்தில் மூத்த பெண்ணாக பிறந்திருந்த அவர் தனது மூன்று தம்பிகளையும், ஒரு தங்கயையும் வளர்ப்பதற்கு தன்னுடைய அம்மாவிற்கு உதவியாக இருந்தார்.

சாதிக்க வேண்டிய துடிப்பும், அறிவும் பெற்றிருந்த எடித், தன்னுடைய பள்ளி படிப்பை முடித்த கையோடு வேலைக்காக நகரத்தை நோக்கி சென்றார். அங்கு ஒரு பார்பிக்கன் நிறுவனத்தில் வேலை செய்த அவர், சிறந்த பணியாளராகவும் விளங்கினார்.

 

எடித்

பட மூலாதாரம்,RENÉ WEIS

1916ஆம் ஆண்டு கிளர்க்காக பணிபுரிந்து வந்த பெர்சி தாம்ஸனை திருமணம் செய்துகொள்ளும் எடித், இல்ஃபோர்ட் பகுதியில் உள்ள கென்சிங்டன் கார்டனில் ஒரு வீட்டை வாங்குகிறார். சுமார் 250டாலர்கள் மதிப்புக்கொண்ட அந்த வீட்டை வாங்குவதற்காக பாதிக்கும் மேலான பணத்தை எடித் கொடுக்கிறார். ஆனாலும் அந்த வீடு அவரது கணவர் பெர்சியின் பெயரில் வாங்கப்படுகிறது.

’புதிதாக திருமணமான எடித் வீட்டை கவனித்து கொள்வதிலேயோ, குழந்தை பெற்று கொள்வதிலேயோ ஆர்வம் காட்டவில்லை. மாறாக தனது வாழ்வை முழுமையாக அனுபவிக்க விருப்பம் கொள்கிறார். நடனமாடுவதிலும், நண்பர்களுடன் பொழுதை கழிப்பதிலும், தனக்கு விருப்பமான உணவை ருசிப்பதிலும், படங்கள் பார்ப்பதிலும் தனது பெரும்பாலான நேரத்தை செலவழித்தார்’ என்று கூறுகிறார் பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் லாரா தாம்ஸன்.

எடித்தின் வழக்கு குறித்து இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ள லாரா தாம்ஸன் ”அசாதாரணமான வாழ்வை வாழ விரும்பிய ஒரு சாதாரண பெண் எடித்” என்று அவரை குறிப்பிடுகிறார்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், வீட்டை பராமரித்துகொள்ளும் ஒரு சாதாரண மனைவியாக அவர் இருக்கவில்லை. மாறாக தன்னைவிட 8 ஆண்டுகள் இளைய வயதுடைய ஃப்ரெட்ரிக் பைவாட்டர்ஸ் என்னும் அழகான காதலனைக் கொண்டிருந்தார்.

எடித் தாம்ஸனுக்கும் ஃபெட்ரிக் பைவாட்டர்ஸுக்கும் இடையே உருவான காதல்

எடித் தாம்ஸனின் தம்பியின் வகுப்பு தோழரான ஃபெட்ரிக், எடித் மற்றும் அவரது குடும்பத்தை சிறுவயதிலிருந்தே நன்கு அறிந்திருந்தார். தன்னுடைய 13 வயதில் லண்டனுக்கு சென்ற ஃப்ரெட்ரிக், 1921ஆம் ஆண்டு ஜீன் மாதம் மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு வருகிறார். அந்த சமயத்தில் எடித், அவரது கணவர் பெர்சி மற்றும் எடித்தின் தங்கை ஏவிஸ் கிரேடன் ஆகியோர் ஃப்ரெட்ரிக்கை விடுமுறை கொண்டாட்டத்திற்காக அழைக்கிறார்கள்.

அந்த விடுமுறை கொண்டாட்டத்தின் இறுதி நாட்களில்தான் எடித்திற்கும்,ஃப்ரெட்ரிக்கும் இடையேயான காதல் மலர்கிறது. அதனைதொடர்ந்து எடித் தாம்ஸனின் வீட்டில் தங்குவதற்கான அழைப்பும் ஃப்ரெட்ரிக்கிற்கு கிடைக்கிறது. ஃப்ரெட்ரிக் அங்கு குடியேறுகிறார். ஆனால் எடித் தாம்ஸனின் வீட்டில் தங்கியிருந்த காலகட்டத்தில், பெர்சி தனது மனைவியை அடிக்கடி துன்புறுத்துவதை பார்க்கிறார். அதனை சகித்து கொள்ள முடியாத ஃப்ரெட்ரிக் சில நாட்களிலேயே அங்கிருந்து வெளியேறிவிடுகிறார்.

எடித்

பட மூலாதாரம்,RENÉ WEIS

ஆனால் அதன்பின்னரும் எடித்திற்கும், ஃப்ரெட்ரிக்கிற்கும் இடையிலான காதல் கடிதங்களின் மூலம் தொடர்கிறது.

‘அந்த கடிதங்கள் அனைத்தும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவை. மிகவும் அந்தரங்கமான உரையாடல்கள் அதில் இருந்தன. ஒரு கடிதத்தில் தான் மேற்கொண்ட கருக்கலைப்பு குறித்தும், தற்கொலை முயற்சி குறித்தும்கூட எடித் எழுதியிருந்தார்’ என்று கூறுகிறார் இந்த கடிதங்களை ஆராய்ந்து புத்தகம் வெளியிட்டுள்ள லாரா தாம்ஸன்.

புத்தக வாசிப்பில் தீவிர ஆர்வமுடைய எடித், ஒரு சில நேரங்களில் தன்னை புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்களாகவே கற்பனை செய்துகொண்டுள்ளார். தனது கணவரிடமிருந்து விடைபெற வேண்டும் என நினைத்த எடித், உணவில் சிறிய கண்ணாடி சில்லுகளை கலந்து கொடுத்து அவரை கொலை செய்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த வழக்கு குறித்து இருபது ஆண்டுகளாக ஆய்வு செய்துவரும் யுனிவெர்சிட்டி காலேஜ் லண்டனை சேர்ந்த பேராசிரியர் ரெனே வெய்ஸ், ‘தன்னுடைய காதல் மற்றும் அந்தரங்க வாழ்வு குறித்து எடித் மிகவும் அதிகமான கவலையில் ஆழ்ந்திருந்தார்’ என்று கூறுகிறார்.

பெர்சியை கொலை செய்த ஃப்ரெட்ரிக்

1922ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி எடித் மற்றும் பெர்சி தாம்சன் தம்பதியினர் சினிமா பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தபோது, சாலையில் மறைந்து நின்றுக்கொண்டிருந்த ஃப்ரெட்ரிக், திடீரென அவர்கள் மீது பாய்ந்து, பெர்சியை தான் வைத்திருந்த கத்தியால் தாக்கியுள்ளார்.

மருத்துவர் வந்து சோதித்தபோது பெர்சி ஏற்கனவே இறந்திருந்தார். அவரது ரத்தம் சாலையில் 13மீட்டர் தூரம் வரை படர்ந்திருந்தது.

பெர்சியை கொலை செய்த ஃப்ரெட்ரிக்

பட மூலாதாரம்,RENÉ WEIS

பெர்சியின் சகோதரர் அளித்த புகரின் பேரில், காவல்துறையினர் ஃப்ரெட்ரிக்கின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போதுதான் எடித் அவருக்காக எழுதிய காதல் கடிதங்கள் முதன்முறையாக வெளியே தெரிய வந்தது. இந்த கடிதங்களை வைத்துதான் எடித் தாம்ஸனும் இந்த குற்றச்செயலில் சம்பந்தப்பட்டிருப்பார் என்று எண்ணி அவரை காவல்த்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால் உண்மையில் தனது காதலர் ஃப்ரெட்ரிக் இப்படி செய்வார் என எடித் தாம்ஸன் சற்றும் அறிந்திருக்கவில்லை. ஃப்ரெட்ரிக் ஏன் இப்படி செய்தார் என்று அவர் அழுது தீர்த்தார்.

ஃப்ரெட்ரிக் தான் செய்த குற்றத்தை மறுக்கவில்லை. ஆனால் அதேசமயம் எடித்திற்கும் இந்த குற்றத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று அவர் காவல்த்துறையினரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.

நாடு முழுவதும் பேசு பொருளான எடித் - ஃபெட்ரிக் காதல் ஜோடி

பெர்சியின் கொலை குறித்த செய்தியுடன் எடித் தாம்ஸன் மற்றும் ஃபெட்ரிக்கின் காதல் கடிதங்களும் பிரிட்டன் நாளிதழ்களில் வெளியானது. ஒரே இரவில் இவர்கள் நாட்டின் பேசுப்பொருளாக மாறினர். கிட்டதட்ட திரை நட்சத்திரங்களுக்கு இணையான வகையில் இவர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தனர்.

1922ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, எடித் மற்றும் ஃபெட்ரிக்கை விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து வந்தபோது, அவர்களை காண்பதற்காக பெருந்திரளான கூட்டம் நீதிமன்றத்தின் வெளியே கூடியிருந்தது.

ஒருகட்டத்தில் எடித் ஃபெட்ரிக் ஜோடியை வேடிக்கை பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்றது. பிரிட்டனில் வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த இருந்த ஆண்கள் எல்லோரும் இவர்களை வேடிக்கை பார்க்க வருபவர்களுக்கு இடம்பிடித்து கொடுத்து சம்பாதிப்பதை தங்கள் வேலையாக மாற்றிக்கொண்டனர்.

மிகவும் கொடிய பாவிகளாக கருதப்பட்ட இவர்களின் உருவங்களை பிரிட்டனின் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியத்தின் திகில் அறையில் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதற்காக மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியத்தை சேர்ந்த கலைஞர்களும் நீதிமன்றத்திற்கு வர தொடங்கினர்.

நீதிமன்றத்தில் நிகழ்ந்த பாரபட்சம்

பெர்சியின் கொலை வழக்கு விசாரணையின்போது எடித் - ஃபெட்ரிக்கின் காதல் கடிதங்கள் வழக்கறிஞர்களால் அனைவரின் முன்னிலையிலும் மிகவும் சத்தமாக வாசிக்கப்பட்டது.

ஒருவரின் அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பேசியது மிகவும் கொடூரமான செயல் எனவும், அது சம்பந்தப்பட்டவர்களின் உளவியலின் மீது மோசமான பாதிப்பை ஏற்படுத்து எனவும் பிரிட்டன் எழுத்தாளர் லாரா தாம்ஸன் குறிப்பிடுகிறார்.

முதலாம் உலகப்போர் முடிந்திருந்த காலக்கட்டத்தில் எடித் - ஃப்ரெட்ரிக்கின் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் போரில் தங்களது கணவர்களை பெரும்பாலான பிரிட்டன் பெண்கள் இழந்திருந்தனர். ஏற்கனவே தங்களது கணவர்களின் இழப்பை தாங்கிகொள்ள முடியாமல் இருந்த பிரிட்டன் பெண்கள், எடித் தாம்சன் மீது அதிகப்படியான வெறுப்பை கொண்டிருந்தனர்.

கணவர் இருக்கும்போதே மற்றொரு ஆண் மீது எடித் தாம்சன் கொண்டிருந்த காதலை அவர்கள் இழிவான செயலாக கருதினர்.

‘பணமும், வீடும், சொகுசான வாழ்க்கையும் கிடைத்தபோதும் இவளுக்கு ஒரு ஆண் போதவில்லை’ என்றும், தன்னுடைய செயல்களால் இவள்தான் இளம் வயதான ஃப்ரெட்ரிக்கை மயக்கியிருப்பாள் என்றும் பிரிட்டன் பெண்கள் எடித் தாம்ஸன் பற்றி பேசி வந்ததாக’ பேராசிரியர் ரெனே வெய்ஸ் குறிப்பிடுகிறார்.

பொதுமக்களுக்கு எடித் தாம்ஸன் மீது ஏற்பட்டிருந்த வெறுப்பு இந்த வழக்கை விசாரித்து வந்த ’நீதிபதி ஷியர்மென்’ வரை எதிரொலித்ததாக கூறப்படுகிறது.

விசாரணையின் ஒருபகுதியாக கொலை செய்யப்பட்ட பெர்சியின் உடலில் சோதனை நடத்தப்பட்டது. எடித் தனது கடிதங்களில் கூறியிருந்தபடி பெர்சியின் உணவில் விஷம் அல்லது கண்ணாடி துண்டுகளை கலந்து கொடுத்திருந்தாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக பெர்சியின் உடல் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் அப்படி நடந்திருப்பதற்கான எந்தவொரு தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் எடித் தாம்சனின் மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டது. அவருக்கு எதிராக சாட்சியங்களை திருப்ப அனைத்து செய்லகளும் மேற்கொள்ளப்பட்டன.

எடித் தாம்சனின் கடிதங்களில் எழுதியிருந்தவை எல்லாம் திரிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. பொய்யான வார்த்தைகளும், தேதிகளும் கோர்க்கப்பட்டன.

டிசம்பர் 11ஆம் தேதி சுமார் இரண்டு மணி நேர நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு எடித் தாம்சனும் , ஃப்ரெட்ரிக்கும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

எடித் தாம்சனையும் குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை கேட்டு ஃப்ரெட்ரிக் கதறி அழுதார். எடித் குற்றமற்றவர் என நீதிமன்றம் அதிரும் அளவுக்கு கத்தினார். ஆனால் அது எதுவுமே அங்கிருந்த ஒருவரின் மனதில் கூட எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

எடித் தாம்ஸனின் மரணத்திற்கு பின் என்ன நடந்தது?

காதலனின் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட பிரிட்டன் பெண்

பட மூலாதாரம்,RENÉ WEIS

கடைசி வரை தன் பக்கத்து நியாயத்தையும், உண்மைகளையும் பேசுவதற்கு வாய்ப்பே அளிக்கப்படாத எடித் தாம்சன், தான் செய்யாத குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார்.

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியத்தின் திகில் அறையில் பொதுமக்களை அதிகம் கவரும் மெழுகுச்சிலை உருவங்களாக எடித் மற்றும் ஃப்ர்ட்ரிக்கின் சிலைகள் இருந்தன. ஆனால் 1980 காலக்கட்டங்களுக்கு பிறகு அவர்களின் சிலை ஒருவழியாக அங்கிருந்து எடுக்கப்பட்டது. மெழுகுகள் சேதமடைந்த நிலையிலும், வண்ணங்கள் மங்க தொடங்கிய நிலையிலும் அந்த சிலைகள் அங்கிருந்து எடுக்கப்பட்டது.

அதேபோல் பேராசிரியர் ரெனே வெய்ஸுனுடைய பல ஆண்டுகால போராட்டங்களுக்கு பின், 2018ஆம் ஆண்டில் எடித் தாம்சனின் உடலில் தோண்டி எடுக்கப்பட்டு லண்டன் சிமெட்ரி மனார் பார்க்கில் அவரது பெற்றோர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தில் மறு அடக்கம் செய்யப்பட்டது. தனது மகளின் உடல் தங்களுக்கு பக்கத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்பது எடித் தாமசனின் தாயின் கடைசி ஆசையாக இருந்தது என பேராசிரியர் வெய்ஸ் கூறுகிறார்.

’கிட்டத்தட்ட நூறாண்டுகள் ஆன பின்னரும் கூட எடித்திற்கு நிகழ்ந்த இந்த பாரபட்சமும், அநீதியும் இன்றும் பல இடங்களில் தொடரத்தான் செய்கிறது என்றும், அதனுடைய வடிவங்கள் மட்டுமே மாறுகிறது’ என்கிறார் எழுத்தாளர் லாரா தாம்சன்.

https://www.bbc.com/tamil/articles/clwn1jj5n0xo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன உருக்கம் வேண்டி இருக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாலி said:

இதில் என்ன உருக்கம் வேண்டி இருக்கிறது?

பிபிசி தமிழ் உருகுது போல!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.