Jump to content

யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

இந்த திரி களைகட்டபோகிறது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் ஆரம்பத்திலேயே தெரிகிறது.

எப்படி?

(ஏதோ நம்மால முடிஞ்சது)😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 128
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

நானாக சொல்லமாட்டேன், திரியினை ஆரம்பத்திலிருந்து வாசிக்காமல் மறுவளமாக வாசிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

இந்த வீடியோக்களில் அப்படி எதுவும் காட்டவில்லையே?

போறபோக்கில ஒரு எக்ஸ்ட்ரா பிட் ஒண்டை அடிச்சுவிட விடமாட்டீங்க போல😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

இந்த வீடியோக்களில் அப்படி எதுவும் காட்டவில்லையே?

நான் நன்கு அவதானிச்சுட்டுத் தான் எழுதுவது வழமை..ஒன்றை மட்டும் பார்த்துட்டு எழுத வேணாமே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

வேலை வெட்டிக்கு போகாத உழைக்காதவர்களுக்கு கனடா:லண்டன்.சுவிஸ் மற்றும் இதர நாடுகளில் வாழும் புலர்பெயர் உறவுகள் காட்டும் வசதி இப்படித் தான் செலவாகிறது..இந்தப் பிறந்த நாள் பறவா இல்ல .இன்னும் ஒன்று இணைக்கிறேன் பாருங்கள்..இவர்கள் எல்லாம் மிக குறுகிய காலத்தில் புலம் வந்த உறவுகளின் பணத்தால் தத்து எடுக்கபட்ட உழைப்பாளர்கள்...இந்த குடும்பத்தில் உள்ள அனைத்து பிள்ளைகளின் குடும்பங்களுக்கும் கனடாவில் உள்ள ஒரு அம்மா மாதந்தோறும் பார்சல் போடுவது..வெளி நாட்டுப் பணம் எப்படிப் புரளுது பாருங்கள்.

கடந்த 6ஆம் திகதி மட்டக்களப்பில் மற்றவரின் பிறந்த நாளுக்கு ..........

 

கிடைச்ச வேலையைும் வேணாம் என்று விட்டுப் போட்டு  ஊர் சுற்றுவதும் ஏழை இந்து மக்களை மதம் மாற்றுவதும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு உதவுவதும் தான் மிக முக்கியமான இவர்களின் பணி..

யாயினியை கண்டது மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:
1 hour ago, vasee said:

இந்த திரி களைகட்டபோகிறது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் ஆரம்பத்திலேயே தெரிகிறது.

எப்படி?

Vasee  இடித்துரைப்பு செய்துள்ளார்.நாங்கள் தான் கவனித்து கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இந்த வீடியோக்களில் அப்படி எதுவும் காட்டவில்லையே?

அது தான் சொன்னேனே. வாதக் குணம் எப்படியும் வெளிவந்து விடும்!😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

நான் நன்கு அவதானிச்சுட்டுத் தான் எழுதுவது வழமை..ஒன்றை மட்டும் பார்த்துட்டு எழுத வேணாமே..

பதிலுக்கு நன்றி அக்கா,

இவர்கள் யாரென்று எனக்கு தெரியாது. இப்போதான் முதலில் பார்க்கிறேன்.

நீங்கள் அப்படி சொன்னதால் அப்படி ஏதும் இருக்குமோ என்று இந்த இரெண்டு லூசு வீடியோவையும் பார்த்து, கண் பூத்ததுதான் மிச்சம்🤣.

நீங்கள் அவதானித்ததின் அடிப்படையில் ஒருவரை மதமாற்ற கும்பல் என சொல்ல உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு.

ஆனால் அதை நாமும் பார்த்தால்தானே நாம் அது பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும்.

தெரியும்தானே அக்கா,

1. வசதியை காட்டி மதம் மாற்ற முயலும் பலர் எம்மக்களிடையே உண்டு

அதே போல்

2. ஒரு தமிழ் கிறிஸ்தவன் ஒரு தமிழ் இந்து பிச்சைகாரன் தட்டில் 1 ரூபாய் போட்டாலும் அதை மதமாறம் என சித்தரிக்கும் போக்கும் இப்போ 2009க்கு பின் வலுவாக அதிகரிக்கிறது.

ஆகவே எதையும் தீர ஆராய வேண்டிய தேவை இருக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

பதிலுக்கு நன்றி அக்கா,

இவர்கள் யாரென்று எனக்கு தெரியாது. இப்போதான் முதலில் பார்க்கிறேன்.

நீங்கள் அப்படி சொன்னதால் அப்படி ஏதும் இருக்குமோ என்று இந்த இரெண்டு லூசு வீடியோவையும் பார்த்து, கண் பூத்ததுதான் மிச்சம்🤣.

நீங்கள் அவதானித்ததின் அடிப்படையில் ஒருவரை மதமாற்ற கும்பல் என சொல்ல உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு.

ஆனால் அதை நாமும் பார்த்தால்தானே நாம் அது பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும்.

தெரியும்தானே அக்கா,

1. வசதியை காட்டி மதம் மாற்ற முயலும் பலர் எம்மக்களிடையே உண்டு

அதே போல்

2. ஒரு தமிழ் கிறிஸ்தவன் ஒரு தமிழ் இந்து பிச்சைகாரன் தட்டில் 1 ரூபாய் போட்டாலும் அதை மதமாறம் என சித்தரிக்கும் போக்கும் இப்போ 2009க்கு பின் வலுவாக அதிகரிக்கிறது.

ஆகவே எதையும் தீர ஆராய வேண்டிய தேவை இருக்கிறது.

 

வெறும் இரண்டு பக்கங்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வராதீங்க கோசான்..உங்களுக்கு தெரியாது எண்டதற்காக மற்றவர்களும் அப்படித் தான் இருப்பார்கள் என்றோ அல்லது ஒரு பெண் எழுதிறா நன்றாக கலாய்க்கலாம் என்றோ நினைச்சு எழுதாதீங்கள்..நானும் எந்த மதத்திற்கும் எதிர்பானவள் அல்ல..நன்றி  இதற்கு மேல் போய் அவர்களின் முழுப் பக்கத்தையும் பாருங்கள் விமர்சனங்களையும் படித்து அறிந்து கொள்ளுங்கள்..எனக்கு கண்ட குப்பை எல்லாத்தையும் இங்கு கொண்டு வந்து சொருக வேண்டும் என்ற அவசியம் இல்ல..

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, யாயினி said:

வெறும் இரண்டு பக்கங்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வராதீங்க கோசான்..உங்களுக்கு தெரியாது எண்டதற்காக மற்றவர்களும் அப்படித் தான் இருப்பார்கள் என்றோ அல்லது ஒரு பெண் எழுதிறா நன்றாக கலாய்க்கலாம் என்றோ நினைச்சு எழுதாதீங்கள்..நானும் எந்த மதத்திற்கும் எதிர்பானவள் அல்ல..நன்றி  இதற்கு மேல் போய் அவர்களின் முழுப் பக்கத்தையும் பாருங்கள் விமர்சனங்களையும் படித்து அறிந்து கொள்ளுங்கள்..எனக்கு கண்ட குப்பை எல்லாத்தையும் இங்கு கொண்டு வந்து சொருக வேண்டும் என்ற அவசியம் இல்ல..

இல்லை அக்கா. நான் உங்களை கலாய்க்க இல்லை.

குறிப்பாக பெண் என்பதால் போட்டுத்தாக்கலாம் என நான் நினைப்பதாக நீங்கள் கூறி இருப்பது - எந்த ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டு.

நான் முதலே சொல்லி விட்டேன் எனக்கு இவர்களை பற்றி தெரியாது என்று.

ஆனால் ஒருவரை அல்லது குழுவை பார்த்து மதம்மாற்ற கோஸ்டி என சொல்லுவது மிக கடுமையான குற்றச்சாட்டு. 

ஒருவரை பிரதேசவாதி, இனவாதி, மதவாதி என சொல்வது போன்ற ஒரு பாரிய குற்றச்சாட்டு.

அதை பொதுவெளியில் வைக்கும் போது ஆதாரம் கேட்கப்படுவது இயல்பானதே.

அதை நீங்கள் எழுதுவதையோ அல்லது அங்கே வயித்தெரிச்சலில், மத குரோதத்தில் எழுதப்படும் விமர்சனங்களையோ வைத்து நாம் எடை போட முடியாது.

நீங்கள் இங்கே இந்த நபர்கள், குழு மதமாற்றம் செய்ததை நிறுவம் வீடியோ ஆதாரம் இருந்தால் போடுங்கள். பார்த்துவிட்டு, சரியான ஆதாரம் என்றால் நானும் உங்களுடன் சேர்ந்து அவர்களை எதிர்க்கிறேன்.

அவ்வளவுதான். சிம்பிள்.

மீண்டும் சொல்கிறேன். 

உங்களை இங்கே குப்பையை இணைக்க சொல்லவில்லை.

ஆனால் இரெண்டு குப்பை பிறந்தநாள் வீடியோவை இணைத்து விட்டு, போற போக்கில் இவர்கள் மதமாற்ற குழு என சொன்னபோதுதான் ஆதாரம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

குற்றம்சாட்டும் நீங்கள்தான், குற்றம்சாட்டிய தளத்தில், ஆதாரத்தை கொடுக்க வேண்டும்.

இதை பற்றி எந்த அறிவும் இல்லாத என்னை போய் ஆராய்து பாருங்கள் என சொல்லுவது ஏற்புடையது அல்ல.

 

Edited by goshan_che
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

நீங்கள் எந்த மதத்துக்கும் எதிர், சார்பு என நான் எங்கேயும் எழுதவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

 

அதைத்தான் நானும் பார்த்தேன்

யார்  உழைத்த பணமோ??

அண்ணன் தம்பிமார்

கோப்பை  கழுவுகிறார்களோ

றோட்டுக்கூட்டுகிறார்களோ???

அல்லது மூட்டை சுமக்கிறார்களோ?

 

சொந்த உழைப்பு என்றால் சொல்வதற்கு எதுவும் இல்லை. நானும் பெண் இலங்கையில் என ஆரம்பத்தில் நினைத்தேன்.

தனக்கு விருப்பமானவனை வாழ்க்கை துணையாக அடைவதற்கு எடுக்கப்படும் முயற்சியாகவும் இதை கருதலாம். 

உலகம் போட்டி மயமானது தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

சொந்த உழைப்பு என்றால் சொல்வதற்கு எதுவும் இல்லை. நானும் பெண் இலங்கையில் என ஆரம்பத்தில் நினைத்தேன்.

தனக்கு விருப்பமானவனை வாழ்க்கை துணையாக அடைவதற்கு எடுக்கப்படும் முயற்சியாகவும் இதை கருதலாம். 

உலகம் போட்டி மயமானது தானே.

பரிசில்களை கொடுத்து தமது அன்பை வெளிக்காட்டும் இந்நிலை வரவேற்கத்தக்கதாக இல்லாது விட்டாலும் பொதுவானதே. ஆனால் இந்த நிலைக்கு எமது நாடும் மக்களும் அண்ணளவாக என்றாலும் வந்து இருக்கிறோம் என்றால் சந்தோஷப்படும் முதல் ஆளாக நான் தான் இருப்பேன். மற்றும் படி அங்கொன்றும் இங்கொன்றுமாக நடாத்தப்படும் இவை எதிர் விளைவுகளையே தரக் கூடியவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்பிடி அஞ்சாறு சப்ரைஸ் டெலிவெரி ஊருக்கு அனுப்பலாம் எண்டு யோசிக்கிறன்..😂

 

  • Haha 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இல்லை அக்கா. நான் உங்களை கலாய்க்க இல்லை.

குறிப்பாக பெண் என்பதால் போட்டுத்தாக்கலாம் என நான் நினைப்பதாக நீங்கள் கூறி இருப்பது - எந்த ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டு.

நான் முதலே சொல்லி விட்டேன் எனக்கு இவர்களை பற்றி தெரியாது என்று.

ஆனால் ஒருவரை அல்லது குழுவை பார்த்து மதம்மாற்ற கோஸ்டி என சொல்லுவது மிக கடுமையான குற்றச்சாட்டு. 

ஒருவரை பிரதேசவாதி, இனவாதி, மதவாதி என சொல்வது போன்ற ஒரு பாரிய குற்றச்சாட்டு.

அதை பொதுவெளியில் வைக்கும் போது ஆதாரம் கேட்கப்படுவது இயல்பானதே.

அதை நீங்கள் எழுதுவதையோ அல்லது அங்கே வயித்தெரிச்சலில், மத குரோதத்தில் எழுதப்படும் விமர்சனங்களையோ வைத்து நாம் எடை போட முடியாது.

நீங்கள் இங்கே இந்த நபர்கள், குழு மதமாற்றம் செய்ததை நிறுவம் வீடியோ ஆதாரம் இருந்தால் போடுங்கள். பார்த்துவிட்டு, சரியான ஆதாரம் என்றால் நானும் உங்களுடன் சேர்ந்து அவர்களை எதிர்க்கிறேன்.

அவ்வளவுதான். சிம்பிள்.

மீண்டும் சொல்கிறேன். 

உங்களை இங்கே குப்பையை இணைக்க சொல்லவில்லை.

ஆனால் இரெண்டு குப்பை பிறந்தநாள் வீடியோவை இணைத்து விட்டு, போற போக்கில் இவர்கள் மதமாற்ற குழு என சொன்னபோதுதான் ஆதாரம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

குற்றம்சாட்டும் நீங்கள்தான், குற்றம்சாட்டிய தளத்தில், ஆதாரத்தை கொடுக்க வேண்டும்.

இதை பற்றி எந்த அறிவும் இல்லாத என்னை போய் ஆராய்து பாருங்கள் என சொல்லுவது ஏற்புடையது அல்ல.

 

நிறைய யூ டியூப்பார்கள் புலம் பேர் மக்களை ஏமாத்தி பணம் சம்பாதிக்க வெளிக்கிட்டினம்...அவர்களை சொல்லி குத்தமில்லை ...அவர்கள் கேட்டவுடனேயே இங்கேயிருந்து கேட்டு கேள்வி இல்லாமல் காசு அனுப்பிறவர்களை சொல்லோணும்.
கத்தோலிக்கர்கள் வலிந்து ஒருவரை மதம் மாத்துவதில்லை அவர்களுக்குள் திருமணம் செய்தால் தவிர,யாயினி இணைத்த முதலாவது காணொளியில் இருப்பவர் எனக்கு தெரிந்த வரையில் சுத்த சைவமாயிருந்து அவர்களுடைய தகப்பன் ,தாயை திருமணம் செய்ய ஏதோ கோயிலில் நேர்த்திக் கடன் எல்லாம் வைத்தது...தாயும் சைவம் தான் ...பிறகு மதம் மாறி விட்டார்கள் ...அது அவர்கள் விருப்பம் ...மதமாறின ஒருத்தரும் தாங்கள் காசுக்காய் மதம் மாறினோம் ,வசதிக்காய் மதம் மாறினோம் என்று சொல்லப் போவதில்லை.
சைவர்கள் இப்பவும் அந்தோனியார் கோயிலுக்கு போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள் ...இயேசு மேல் அன்பு அதனால் மதம் மாறினோம் என்று சொல்வது சுத்தப் பொய் என்று உங்களுக்கு தெரியும்...மதம் மாறியவர்கள் தங்களுக்குள் அதை வைத்துக் கொண்டு இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை ...மற்றவரை மாத்த வெளிக்கிடும் போது தான் பிரச்சனை வருகிறது.
சாணக்கியனது தாத்தா வேண்டுமானால் தமிழ் காங்கிரசை சேர்ந்தவராய் இருந்திருக்கலாம் ...அவருடைய தகப்பன் அப்படி அல்ல ...சாணக்கியனும் மதம் மாறியவர் ,சும்மும் மதம் மாறினவர், அவர்கள் இருவரது சேர்க்கைகள், செய்கைகள்....கூட்டிக் கழித்து பாருங்கோ விளங்கும்...விளங்காத மாதிரி நடிக்க வேண்டாம்மதம் மாற்றுபவர்கள் ஒரு நாளில் மாற்றுவதில்லை ...அதற்கு வீடியோ ஆதாரம் எல்லாம் கேட்க்கிறீர்களே உங்களுக்கே இது சிரிப்பாய் தெரியவில்லை .

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை...ஆனால்,தமிழர்களின் அடையாளம் சைவம் என்பதில் உஐதியாய் இருக்கிறேன்...அதை மற்றவர்கள் அழிக்க முற்படும் போது எதிர்ப்பேன் ...மற்றப்படி எந்த மதத்தை பின் பற்ற வேண்டும் என்பது அவர்களது விருப்பம்    
 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நிறைய யூ டியூப்பார்கள் புலம் பேர் மக்களை ஏமாத்தி பணம் சம்பாதிக்க வெளிக்கிட்டினம்...அவர்களை சொல்லி குத்தமில்லை ...அவர்கள் கேட்டவுடனேயே இங்கேயிருந்து கேட்டு கேள்வி இல்லாமல் காசு அனுப்பிறவர்களை சொல்லோணும்.
கத்தோலிக்கர்கள் வலிந்து ஒருவரை மதம் மாத்துவதில்லை அவர்களுக்குள் திருமணம் செய்தால் தவிர,யாயினி இணைத்த முதலாவது காணொளியில் இருப்பவர் எனக்கு தெரிந்த வரையில் சுத்த சைவமாயிருந்து அவர்களுடைய தகப்பன் ,தாயை திருமணம் செய்ய ஏதோ கோயிலில் நேர்த்திக் கடன் எல்லாம் வைத்தது...தாயும் சைவம் தான் ...பிறகு மதம் மாறி விட்டார்கள் ...அது அவர்கள் விருப்பம் ...மதமாறின ஒருத்தரும் தாங்கள் காசுக்காய் மதம் மாறினோம் ,வசதிக்காய் மதம் மாறினோம் என்று சொல்லப் போவதில்லை.
சைவர்கள் இப்பவும் அந்தோனியார் கோயிலுக்கு போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள் ...இயேசு மேல் அன்பு அதனால் மதம் மாறினோம் என்று சொல்வது சுத்தப் பொய் என்று உங்களுக்கு தெரியும்...மதம் மாறியவர்கள் தங்களுக்குள் அதை வைத்துக் கொண்டு இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை ...மற்றவரை மாத்த வெளிக்கிடும் போது தான் பிரச்சனை வருகிறது.
சாணக்கியனது தாத்தா வேண்டுமானால் தமிழ் காங்கிரசை சேர்ந்தவராய் இருந்திருக்கலாம் ...அவருடைய தகப்பன் அப்படி அல்ல ...சாணக்கியனும் மதம் மாறியவர் ,சும்மும் மதம் மாறினவர், அவர்கள் இருவரது சேர்க்கைகள், செய்கைகள்....கூட்டிக் கழித்து பாருங்கோ விளங்கும்...விளங்காத மாதிரி நடிக்க வேண்டாம்மதம் மாற்றுபவர்கள் ஒரு நாளில் மாற்றுவதில்லை ...அதற்கு வீடியோ ஆதாரம் எல்லாம் கேட்க்கிறீர்களே உங்களுக்கே இது சிரிப்பாய் தெரியவில்லை .

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை...ஆனால்,தமிழர்களின் அடையாளம் சைவம் என்பதில் உஐதியாய் இருக்கிறேன்...அதை மற்றவர்கள் அழிக்க முற்படும் போது எதிர்ப்பேன் ...மற்றப்படி எந்த மதத்தை பின் பற்ற வேண்டும் என்பது அவர்களது விருப்பம்    
 

1. இங்கே இந்த வீடியோ போட்டவர்கள் மதம் மாறினார்கள் என்றால் - அதை பற்றி நம் எவருக்கும் கேள்வி கேட்க அருகதை இல்லை. என்ன காரணம் என்றாலும் அது அவர்கள் சொந்த விடயம்.

2. அவர்கள் ஏனையோரை மதம் மாற்றுகிறார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. வீடியோ ஆதாரம் இல்லை - வேறு என்ன ஆதாரம் எண்டாலும் கொடுக்கலாம். ஆதாரமே இல்லாமல், ரதி அக்கா ஒரு மதமாற்றி என நான் சொன்னால் நீங்கள் ஏற்பீர்களா? இல்லை. அது போலத்தான். 

3. சாணக்கியன் பிறக்கும் போதே கிறிஸ்தவர் என நினைக்கிறேன். சுமந்திரன் நிச்சயமாக பிறக்கும் போதே கிறிஸ்தவர். ஆகவே அவர்கள் மதம் மாறியோர் இல்லை. அப்படி மாறி இருந்தாலும் அவர்களுடைய அரசியலிக்கும் இதற்கும் தொடர்பில்லை.

4. இருவரும் கிறிஸ்தவர் என்றால் என்ன? பிள்ளையானும், கருணாவும் இந்துக்கள். அதனால் அவர்களுக்கும் மதத்துக்கும் முடிச்சு போட்டோமா? அவர்கள் அரசியலை விமர்சியுங்கள். மத நம்பிக்கையை அல்ல.

5. நீங்கள் கடவுள் நம்பிக்கை அற்றவராக இருக்கலாம் - ஆனால் சாணாக்கியனை வீழ்த்த, அதன் மூலம் உங்கள் அண்ணாவின் அரசியலை தூக்க மதத்தை பாவிக்கிறீர்கள்.

 

3 hours ago, குமாரசாமி said:

நானும் இப்பிடி அஞ்சாறு சப்ரைஸ் டெலிவெரி ஊருக்கு அனுப்பலாம் எண்டு யோசிக்கிறன்..😂

 

வெளி நாடு வந்த நாளில் இருந்து அனுப்பின ஒரே விசயம், கடிதம், கடுதாசி, லெட்டர். 

இப்ப…சும்மா கதைக்கிறியள் என்ன🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை...ஆனால்,தமிழர்களின் அடையாளம் சைவம் என்பதில் உஐதியாய் இருக்கிறேன்...அதை மற்றவர்கள் அழிக்க முற்படும் போது எதிர்ப்பேன் ...மற்றப்படி எந்த மதத்தை பின் பற்ற வேண்டும் என்பது அவர்களது விருப்பம்    
 

அதே...

என் தங்கையன்றோ...❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சைவமதத்தத்தை சேர்ந்தவன். ஆனால்,  சைவம் மட்டும் தான் தமிழரின் அடையாளம் என்பதை முற்றாக நிராகரிக்கிறேன். தமிழருக்கு,  தமிழ் மட்டும் தான் அடையாளம் 

@ரதி  @விசுகு

30 வருடங்களாக போராடிய விடுதலைப்புலிகள் என்றுமே தமிழரின் அடையாளம் சைவம் என்று கூறவில்லை. அவர்களது  எந்த நிகழ்வுகளிலும் சைவ முறைப்படியான கடவுள் வாழ்தது செய்யப்படவில்லை. அமையவிருக்கும் தமிழீழம் மதச்சாரபற்றதாக இருக்கும் என்றே அவர்களது பல வெளியீடுகளில் ஐயம் திரிபற தெரிவித்தார்கள். அதுவே முறையானதும் கூட.  மடிந்த மாவீர்ர்கள் சரி விடுதலையை  நேசித்த  எத்தனையோ தமிழ் மக்கள்  கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். 

தமிழரின் அடையாளம், தமிழ் மொழி. அதனை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள்ளும் குறுகலாக்க முனைபவர்கள் தமிழரை அழிக்க நினைப்பவர்களே.  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

வெளி நாடு வந்த நாளில் இருந்து அனுப்பின ஒரே விசயம், கடிதம், கடுதாசி, லெட்டர். 

இப்ப…சும்மா கதைக்கிறியள் என்ன🤣

நான் என்ன செய்ய....? என்னால் முடிஞ்சது அவ்வளவுதான்....:cool:
விஸ்கி,பிரண்டி,சொக்லேட்,சம்சுங் போன், றோலக்ஸ்,றோசா கலர் பொம்மை, கைச்செலவுக்கு காசு எல்லாம் அனுப்ப நான் என்ன உங்களைமாதிரி வசதி படைத்தவனா? 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நிறைய யூ டியூப்பார்கள் புலம் பேர் மக்களை ஏமாத்தி பணம் சம்பாதிக்க வெளிக்கிட்டினம்...அவர்களை சொல்லி குத்தமில்லை ...அவர்கள் கேட்டவுடனேயே இங்கேயிருந்து கேட்டு கேள்வி இல்லாமல் காசு அனுப்பிறவர்களை சொல்லோணும்.

செல்வி. தங்கச்சி அவர்களே! முன்னர் ஒரு முறை தாங்கள் தானே இலங்கை மக்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் யூரியூப்பர் மூலமாகவும் உதவலாம் என தெரிவித்தீர்கள்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, island said:

நான் சைவமதத்தத்தை சேர்ந்தவன். ஆனால்,  சைவம் மட்டும் தான் தமிழரின் அடையாளம் என்பதை முற்றாக நிராகரிக்கிறேன். தமிழருக்கு,  தமிழ் மட்டும் தான் அடையாளம் 

@ரதி  @விசுகு

30 வருடங்களாக போராடிய விடுதலைப்புலிகள் என்றுமே தமிழரின் அடையாளம் சைவம் என்று கூறவில்லை. அவர்களது  எந்த நிகழ்வுகளிலும் சைவ முறைப்படியான கடவுள் வாழ்தது செய்யப்படவில்லை. அமையவிருக்கும் தமிழீழம் மதச்சாரபற்றதாக இருக்கும் என்றே அவர்களது பல வெளியீடுகளில் ஐயம் திரிபற தெரிவித்தார்கள். அதுவே முறையானதும் கூட.  மடிந்த மாவீர்ர்கள் சரி விடுதலையை  நேசித்த  எத்தனையோ தமிழ் மக்கள்  கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். 

தமிழரின் அடையாளம், தமிழ் மொழி. அதனை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள்ளும் குறுகலாக்க முனைபவர்கள் தமிழரை அழிக்க நினைப்பவர்களே.  

 

மன்னிக்கவும்

எனது மூதாதையரை  நான் மதிப்பது  பூல  அவர்கள் வழிவந்த  சைவத்தையும் மதிக்கிறேன்

மாறமாட்டேன்  என்பதையே  குறிப்பிட்டேன்

இதில் விடுதலைப்புலிகள்  விலக்கு

அவர்களது மாவீரர் வாரம் மற்றும் விளக்கேற்றல்  பூ தூவுதல் என்பன  சைவ  சமயத்தின் தொடர்ச்சி என்றாலும்

எந்த  மதத்தையும் சார்ந்தவர்கள் அல்ல அப்படி சாந்ததும் இல்லை. ஊக்குவித்தவர்களும்  அல்ல

எனது  கருத்து  அவ்வாறு  உங்களுக்கு  தவறான  விளக்கத்தை  தந்திருந்தால் மன்னித்தருள்க.நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

 

மன்னிக்கவும்

எனது மூதாதையரை  நான் மதிப்பது  பூல  அவர்கள் வழிவந்த  சைவத்தையும் மதிக்கிறேன்

மாறமாட்டேன்  என்பதையே  குறிப்பிட்டேன்

இதில் விடுதலைப்புலிகள்  விலக்கு

அவர்களது மாவீரர் வாரம் மற்றும் விளக்கேற்றல்  பூ தூவுதல் என்பன  சைவ  சமயத்தின் தொடர்ச்சி என்றாலும்

எந்த  மதத்தையும் சார்ந்தவர்கள் அல்ல அப்படி சாந்ததும் இல்லை. ஊக்குவித்தவர்களும்  அல்ல

எனது  கருத்து  அவ்வாறு  உங்களுக்கு  தவறான  விளக்கத்தை  தந்திருந்தால் மன்னித்தருள்க.நன்றி

நீங்கள், நான் எமது மூதாதயரை மதிப்பது எமது தனிப்பட்ட விவகாரம். ஆனால் தமிழரின் அடையாளம் சைவம் மட்டும் தான் என்று கிளம்புவது அபத்தம். 

நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

செல்வி. தங்கச்சி அவர்களே! முன்னர் ஒரு முறை தாங்கள் தானே இலங்கை மக்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் யூரியூப்பர் மூலமாகவும் உதவலாம் என தெரிவித்தீர்கள்? 😁

அது வேற வாய் 🤣.

இந்த டிசைனல் வரும் 👇

1.  கருணா பிரிய என்ன காரணம்? யாழ்பாணத்தாரின் பிரதேசவாதம்

2. பாலா அண்ணா ஏன் தன் பூர்வீகம் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை? அப்படி செய்தால் யாழ்பாண பிரதேசவாதம் தன்னை விழுங்கி விடும் என பயந்தார்.

3. சாணாக்கியன் மீது நடக்கும் தாக்குதல் யாழ்பாண பிரதேசவாதமா? இல்லவே இல்லை. அப்படி சொல்பவர்தான் மட்டகளப்பு பிரதேசவாதி🤣.

இலக்கு ஒன்றுதான்.

அண்ணனுக்கு முட்டு கொடுப்பது. 

அதற்கு மதம் உட்பட எந்த ஆயுதத்தையும் தூக்கலாம். இனத்தை நாசமாக்கும் எந்த நச்சு விதையையும் ஊண்டி விட்டு போகலாம்.

10 minutes ago, விசுகு said:

அவர்களது மாவீரர் வாரம் மற்றும் விளக்கேற்றல்  பூ தூவுதல் என்பன  சைவ  சமயத்தின் தொடர்ச்சி என்றாலும்

இதுவும் இப்போ எம்மில் இருக்கும் மதங்களுக்கு முன்பான நடுகல் வழிபாடே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

அவர்களது மாவீரர் வாரம் மற்றும் விளக்கேற்றல்  பூ தூவுதல் என்பன  சைவ  சமயத்தின் தொடர்ச்சி என்றாலும்

முரண்படுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, யாயினி said:

வேலை வெட்டிக்கு போகாத உழைக்காதவர்களுக்கு கனடா:லண்டன்.சுவிஸ் மற்றும் இதர நாடுகளில் வாழும் புலர்பெயர் உறவுகள் காட்டும் வசதி இப்படித் தான் செலவாகிறது..இந்தப் பிறந்த நாள் பறவா இல்ல .இன்னும் ஒன்று இணைக்கிறேன் பாருங்கள்..இவர்கள் எல்லாம் மிக குறுகிய காலத்தில் புலம் வந்த உறவுகளின் பணத்தால் தத்து எடுக்கபட்ட உழைப்பாளர்கள்...இந்த குடும்பத்தில் உள்ள அனைத்து பிள்ளைகளின் குடும்பங்களுக்கும் கனடாவில் உள்ள ஒரு அம்மா மாதந்தோறும் பார்சல் போடுவது..வெளி நாட்டுப் பணம் எப்படிப் புரளுது பாருங்கள்.

கடந்த 6ஆம் திகதி மட்டக்களப்பில் மற்றவரின் பிறந்த நாளுக்கு ..........

 

கிடைச்ச வேலையைும் வேணாம் என்று விட்டுப் போட்டு  ஊர் சுற்றுவதும் ஏழை இந்து மக்களை மதம் மாற்றுவதும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு உதவுவதும் தான் மிக முக்கியமான இவர்களின் பணி..

முத‌லாவ‌து ப‌ருத்திதுறையில் வ‌சிக்கும் கிருஷ்னா

இர‌ண்டாவ‌து விடியோவில் இருப்ப‌து ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் வ‌சிக்கும் அனுஷ்கான் , அனுஷ்கான் சைவ‌ ம‌த‌த்தை சார்ந்த‌வ‌ர்............

கிருஷ்னா மூல‌ம் ப‌ல‌ குடும்ப‌ங்க‌ளுக்கு ந‌ல்ல‌ உத‌விக‌ள் போய் இருக்கு நான் பார்த்த‌ ம‌ட்டில் அவ‌ர் ம‌த‌ம் பார்த்து உத‌வுவ‌தாய் தெரிய‌ வில்லை...............எல்லாருக்கும் பொதுவாய் உத‌வுகிறார்

அவேன்ட‌ குடும்ப‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள் இப்போது எல்லாரும் சைவ‌ ம‌த‌த்தில் இருந்து அல்லொலியா ம‌த‌த்துக்கு மாறி விட்டின‌ம்............

கிருஷ்னாவிட‌ம் ப‌ல‌ர் செல்லி இருக்கின‌ம் இப்ப‌டி உத‌வி செய்ய‌ போகிற‌ இட‌த்தில் ம‌த‌ம் ப‌ற்றி க‌தைக்க‌ கூடாது என்று அதை அவ‌ர் ஒழுங்காய் க‌டை பிடிக்கிறார்..................
என‌க்கு உந்த‌ ம‌த‌ம் மாறி கேலி கூத்துக‌ள் போடுவ‌து பிடிக்க‌வே பிடிக்காது , 


ஒவ்வொரு வ‌ருட‌மும் அவேன்ட‌ பிற‌ந்த‌ நாளுக்கு உந்த‌ கூத்து போட்டால் ப‌ல‌ரின் வெறுப்புக்கு ஆள் ஆகுவின‌ம்...........

சாண‌க்கிய‌ன் க‌ல‌ந்து கொண்ட‌து அனுஷ்கானின் பிற‌ந்த‌ நாளில்............அனுஷ்கான் சிறு வ‌ய‌து முத‌லே ஏழை எளிய‌ குடும்ப‌த்தில் இருந்து வ‌ந்த‌வ‌ர்..............அவ‌ரின் வாழ்வில் முத‌ல் முறை கேக் வெட்டி பிற‌ந்த‌ நாள் கொண்டாடின‌து என்று சொல்லி இருக்கிறார்

காசு கொடுத்து தான் ம‌க்க‌ளை ம‌த‌ம் மாற்ற‌னும் என்றால் அது அந்த‌ ம‌த‌த்துக்கு தான் அழுக்கு................

நான் அவ‌ர்க‌ளை ஆத‌ரிக்க‌ கார‌ண‌ம் எம‌க்காக‌ போராடின‌வ‌ர்க‌ளை புல‌ம்பெய‌ர் நாட்டு  எலிக‌ள் கைவிட்ட‌ நிலையில் முன்னாள் போராளிக‌ளின் குடும்ப‌த்துக்கு இவ‌ர்க‌ள் மூல‌மாய் த‌ன்னும்  உத‌விக‌ள் போய் சேருது

 

நானும் இவ‌ர்க‌ள் மூல‌ம் உத‌வி செய்து இருக்கிறேன்...........என‌க்கு ஆதார‌த்தை காட்டி இருக்கின‌ம்..........நான் பெரிசா க‌தைப்ப‌து கிடையாது காசு அனுப்பி போட்டு சொல்லுவேன் அந்த‌ குடும்ப‌த்துக்கு  இந்த‌ உத‌விய‌ கொண்டு போய் குடுங்கோ என்று................

 

ஒரு நாள் கூலி வேலைக்கு போனால் 1500 இருந்து 2000 ரூபாய் கொடுக்கின‌ம்..................கிருஷ்னா ம‌ற்று அனுஷ்கான்  ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளுக்கு ம‌த்தியில் அந்த‌ உத‌விய‌ ச‌ரியா நேர‌த்தில் ச‌ரியான‌ ஆட்க‌ளிட‌ம் கொண்டு போய் கொடுக்கின‌ம்.............

 

அக்கா நீங்க‌ள் ஊரில் இருந்த‌ ப‌டி இப்ப‌டி செய்து பாருங்கோ அதுக்கு பிற‌க்கு தெரியும் நீங்க‌ள் ப‌ட‌ போகும் அவ‌மான‌ங்க‌ள் ம‌ற்றும் வேத‌னைக‌ள் இன்ன‌ல்க‌ள் க‌ஸ்ர‌ங்க‌ள் ............இவைக‌ளை க‌ட‌ந்து தான் அவ‌ர்க‌ளின் ப‌ய‌ன‌ம் தொட‌ர்கிற‌து..................எதுவாயினும் தூற்றாம‌ல் இருப்போம் அக்கா..............❤️🙏

 

 

Edited by பையன்26
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.