Jump to content

துணிவு விமர்சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாமானிய மக்கள் மீது வங்கிகள் நடத்தும் அத்துமீறல்களை அம்பலப்படுத்த துணிபவனின் போராட்டம்தான் ஹெச்.வினோத் இயக்கியுள்ள அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ஒன்லைன்.

சென்னையில் பிரதான பகுதியில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் ‘யுவர் பேங்க்’ என்ற வங்கியிலிருக்கும் பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது. அதன்படி வங்கிக்குள் நுழையும் அந்த கும்பல், துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களையும், அங்கிருக்கும் வாடிக்கையாளர்களையும் பணயக் கைதிகளாக்குகிறது. இதில் வாடிக்கையாளர் போல வரும் அஜித் கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு, மொத்த வங்கியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். உடனே காவல் துறையும், அரசு எந்திரமும் அஜித்தை பிடிக்க அலர்ட்டாக, இறுதியில் காவல் துறை கையில் அஜித் சிக்கினாரா? எதற்காக அவர் வங்கி கொள்ளையடிக்க நினைக்கிறார்? அங்கிருக்கும் பணம் யாருடையது? - இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மெசேஜுடன் கலந்த திரைக்கதையில் சொல்லும் படம்தான் ‘துணிவு’.

வெள்ளை நிற காஸ்ட்யூம், நேர்த்தியாக வளர்ந்த தாடி, தேவைக்கு அதிகமில்லாத தலைமுடி என வயதுக்கேற்ற தோற்றத்தில் ஸ்மார்ட் லுக்கில் ஈர்க்கிறார் அஜித். ‘ஒன் மேன் ஷோ’வாக படம் நெடுங்கிலும் ஜாலி கலந்த வில்லத்தனத்துடன் அசத்துகிறார்; அதேசமயம் ஆக்ரோஷம் காட்டும் இடங்களில் ‘பீஸ்ட்’ மோடில் நடிப்பில் அழுத்தம் கூட்டுகிறார். அஜித்தின் சின்னச் சின்ன நடன அசைவுகளும் (குறிப்பாக மைக்கல் ஜாக்சன் ஸ்டெப்) அதற்கேற்ற பின்னணி இசையும் ரசிக்க வைப்பதுடன் மொத்த திரையரங்கையும் அதிரவைக்கிறது.

கண்மணியாக மஞ்சு வாரியர் வழக்கமான ரொமான்ஸ் ஹீரோயினாக இல்லாமல் ஸ்டண்ட் காட்சிகள் மூலமாக கவனம் பெறுகிறார். அழுத்தமான நடிப்புடன் அஜித்துக்கும் அவருக்குமான கெமிஸ்ட்ரி பொருந்திப் போகிறது. தவிர தர்ஷன், ஜி.எம்.சுந்தர், சமுத்திரகனி, ஜான்கொக்கேன், ‘பக்ஸ்’ பகவதி, அஜய் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். ‘மைபா’வாக நடித்துள்ள மோகனசுந்தரம் தனது அசால்ட்டான உடல்மொழி, வசனங்கள் மூலம் அப்ளாஸ் அள்ளுகிறார். ‘மகாநதி’ ஷங்கருக்கான கதாபாத்திரம் பொருந்தவில்லையோ என்ற உணர்வும் எழுகிறது.

இப்படத்தின் வாயிலாக இயக்குநர் ஹெச்.வினோத் சொல்ல முயன்றிருக்கும் கருத்து முக்கியமானது. இஎம்ஐ முதலானவற்றில் சிக்கித் தவிக்கும் மக்கள், அவர்களை முதலீடாக்கி காசு பார்க்கும் வங்கிகள், இவர்களுக்கிடையிலான மார்க்கெட்டிங் ஊழியர்கள், அவர்களின் டார்கெட் டார்ச்சர் என பணத்தை அச்சாணியாக கொண்டு சுழலும் இந்த ரோலர் கோஸ்ட் பார்வையாக விரிகிறது படம்.

‘மனுச ஏன் சுயநலமா இருக்கான். சுயநலமா இருக்கறதால தான் அவன் மனுசனாவே இருக்கான்’ மற்றும் மனிதநேயத்தை உணர்த்தும் வசனங்கள் சில வரிகள் கவனிக்க வைக்கின்றன. வங்கிகள் கையாளும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், அதற்கான அவர்களின் எழுத்துரு அளவு, பங்குச்சந்தையை கைகாட்டி நகரும் அலட்சியப்போக்கு உள்ளிட்டவற்றை தோலுரிக்கும் விதமான காட்சி ஒன்று அரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது.

படத்தின் முதல் பாதி விறுவிறுப்புடன் அதீத ஆக்‌ஷன் காட்சிகள், தெறிக்கும் தோட்டாக்களுடன் நகர்கிறது. ஆரம்பத்தில் ரசிக்க வைக்கும் அந்த தோட்டாக்களின் சத்தம் ஒரு கட்டத்தில் இரைச்சலாக மாற, விறுவிறுப்பு மட்டுமே மிஞ்சி கதை நகராமல் ஒரே இடத்தில் தேங்கிவிடுகிறது. அதுவரை கட்டி எழுப்பப்பட்ட பில்டப்பிற்கு கதை சொல்லியாக வேண்டிய இரண்டாம் பாதியில் அஜித்துக்கான பின்புலக் கதை படு சுமார் ரகம். அதற்கடுத்து வரும் மற்றொரு பின்புலக் கதையானது, கருத்தை சொல்லியாக வேண்டுமே என செயற்கையாக திணிக்கப்பட்டிருப்பதை போல துருத்தி நிற்கிறது. இரண்டாம் பாதியைப் பார்க்க ரசிகர்களுக்கே ‘துணிவு’ தேவைப்படுகிறது. சில இடங்களில் வகுப்பெடுக்கும் உணர்வும் எழுவதை அடக்க முடியாமல் போகிறது.

‘இது தமிழ்நாடு இங்க உன் வேலைய காட்டாத’ என வடமாநில காவல் படையிடம் பேசும் அரசியல் வசனங்களும், வங்கிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசின் முகத்தையும் படம் பதிவு செய்கிறது. அத்துடன் திருநங்கை ஒருவரை அவரின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தது நெருடல். க்ளைமாக்ஸ் காட்சிகளில் வரும் அதீத ஹீரோயிசமும், திகட்டும் ஆக்‌ஷனும் படம் முடிந்தும் முழுமையில்லாத உணர்வை கொடுக்கிறது.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் ரசிக்க வைத்தாலும் கதைக்கு தேவையில்லாத இடைச்செருகல். பின்னணி இசை காட்சிகளுக்கு அடர்த்தி கூட்டி, சில இடங்களில் கூஸ்பம்ப்ஸ் தருணங்களை உருவாக்குவது பார்வையாளர்களுக்கு விருந்து. நீரவ் ஷா ஒளிப்பதிவும், விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பும் படத்தின் தரத்தை கூட்ட உதவுகின்றன.

மொத்தத்தில் அடர்த்தியான கருத்தை ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் மாஸ் ஹீரோ ஒருவரின் வழியாக சொல்ல முனைந்திருக்கிறது படம். ஆனால் பிசகிய திரைக்கதையால் படத்தை முழுமையாக பார்த்து முடிக்க ‘துணிவு’ தேவைப்படத்தான் செய்கிறது.

துணிவு Review: மாஸ், மெசேஜ், ஹெய்ஸ்ட்... ‘நிறைவு’ கிட்டியதா? | thunivu movie review - hindutamil.in

Link to comment
Share on other sites

  • 3 weeks later...


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.