Jump to content

பெண்களின் உடை: தமிழனின் கண்டுபிடிப்பு


Recommended Posts

பெண்களின் உடை: தமிழனின் கண்டுபிடிப்பு

- ச. சாமிநாதன்

தற்காலத்தில் உலகெங்கிலும் பெண்கள் அணியும் ஒரு ஆடை தமிழனின் கண்டுபிடிப்பு என்று தோன்றுகிறது. பெண்கள் அணியும் மார்க் கச்சு தமிழனின் கண்டுபிடிப்பு என்றால் வியப்பாகத் தான் தோன்றும். இதற்குச் சங்க இலக்கியத்திலும் பிற்காலத் தமிழ் இலக்கியத்திலும் சில எடுத்துக்காட்டுக்கள் கிடைக்கின்றன.

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி...

...

உண்பது நாழி; உடுப்பவை இரண்டே

- புறம் 189 -

மரக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய இப் புறநானூற்றுப் பாடலில் மக்கள் அனைவரும் உண்பது நாழி அளவு என்றும் ஆண்களும் பெண்களும் உடுப்பது இரண்டே ஆடைகள் என்றும் கூறுகிறார். பழந்தமிழர்களில் ஆண்கள் வேட்டியும் மேல் துண்டும் அணிந்தனர். பின்னர் மேல் துண்டு சட்டையாக மாறியது. பெண்கள் புடவையும் மேல் துண்டும் அணிந்தனர். பின்னர் மேல் துண்டு மார்க் கச்சு (பிரா) ஆகவும், இரவிக்கையாகவும் மாறின. பிற்கால இலக்கியங்களில் இந்த ஆடை வளர்ச்சியைத் தெளிவாகக் காண முடியும்.

'உடுப்பவை இரண்டே' என்று நக்கீரர் கூறினாலும் அந்த இரண்டு உடை என்ன என்பதை அவர் கூறவில்லை. ஆனால் சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, சீன, ரோமானிய, கிரேக்க, அசீரிய, மாயா, இன்கா நாகரீகப் படங்களைப் பார்த்தோருக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரியும். தமிழர் சிலைகளிலும், ஓவியங்களிலும் மட்டும் தான் மார்க் கச்சைக் காண முடியும். இது வரை வெளியான உலகத் தமிழ் மாநாட்டு மலர்களிலும் தமிழர் இலக்கிய நூல்களிலும் இத்தகைய பெண்களின் ஓவியங்களைக் காணலாம். இது வழி வழியாக வந்த மரபைப் பின்பற்றி வரைந்த ஓவியங்களாகும்.

அகத்துறை இலக்கியப் பாடல்களில் பெண்களின் உடல் அழகை வருணிக்கும் பாடல்கள் ஏராளமாக உள்ளன. ஆடைகளப் பற்றிப் பல இடங்களில் வருகின்றன. இதில் இன்னொரு வியப்பான விஷயமும் தெரிய வருகிறது. ஆடைகளுக்குக் கஞ்சி போட்டு அவைகளை விறைப்பாக வைத்திருப்பதையும் தமிழன் தான் கற்பித்தான் போலும்.

கஞ்சி போடுதல்

கஞ்சி போட்டுத் துணிகளை உலர வைத்த காட்சியை

"நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்து"?

- குறுந்தொகை 330 -

"பசைசொல் மெல்விரல் பெருந்தோட் புலைத்தி"

- அகம் 34 -

என்ற பாடல்களில் புலவர்கள் குறிப்பிடுகிறார்கள். நற்றிணை (90), புறநானூறு (311) முதலிய பாடல்களிலும் இதே காட்சியைக் காணலாம். தமிழர்கள், தங்கள் ஆடைகளப் பற்றியும் அதைப் பராமரிப்பது பற்றியும் எவ்வளவு கவனம் எடுத்துக் கொண்டார்கள் என்பதற்கு இந்த எடுத்துக் காட்டுக்களே போதும்!

நன்றி

நிலாச்சாரல்

Link to comment
Share on other sites

கிழிஞ்சுது போ... டவலுக்கு நன்றி... :angry: :angry:

அவனவன்(ள்) உடுப்பை போடுவமா வேண்டாமா எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்காங்க, இதுக்க உடுப்புகளை கண்டுபிடிச்சது தமிழனாம் எண்டு கொண்டு இருக்காங்க, உலகத்தில எல்லாத்தையும் கண்டுபிடிச்ச தமிழன் தனக்கெண்டு ஒரு நாட்டை கண்டுபிடிக்காமல் விட்டுட்டான்.. :angry:

அக்காச்சி கொலை விழுப்போகுது... :angry:

Link to comment
Share on other sites

டங்கு அண்ணா என்ன நக்கலா............. :angry:

தமிழன் எவ்வளவு கஷ்டபட்டு உடுப்பை கண்டு பிடித்து இருகிறான் அதை பாராடுவோம் என்று இல்லை..............உடுப்பை கண்டுபிடித்த தமிழனால் பட்ட்னை எங்கே வைகிறது என்று கண்டுபிடிக்க ஏலாம போய்விட்டது அதை கண்டுபிடித்து உலகிற்கு வெள்ளைகாரன் காட்டி போட்டான் அண்ணே........எல்லாவிசயத்தையும் செய்யிற டமிழன் இப்படி சின்ன விசயத்தால எல்லாத்தையும் இழந்து போறான்.............எவ்வளவு பீலிங்கா இருக்கு........... :P :P :D

Link to comment
Share on other sites

உடுப்பை கண்டுபிடித்த தமிழனால் பட்ட்னை எங்கே வைகிறது என்று கண்டுபிடிக்க ஏலாம போய்விட்டது

:D:lol::)

Link to comment
Share on other sites

பிட்டு ..இடியப்பம் தான் தமிழனின் கண்டுபிடிப்பென்று கேள்விப் பட்டிருக்கிறேன்... ஆனால் பெண்களின் உள்ளாடையும் தமிழன் கண்டுபிடிப்பென்று ரசிகை சொல்லித்தான் தெரியும் .... ரொம்பப் பெருமையா இருக்கு.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது போ... டவலுக்கு நன்றி... :angry: :angry:

அவனவன்(ள்) உடுப்பை போடுவமா வேண்டாமா எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்காங்க, இதுக்க உடுப்புகளை கண்டுபிடிச்சது தமிழனாம் எண்டு கொண்டு இருக்காங்க, உலகத்தில எல்லாத்தையும் கண்டுபிடிச்ச தமிழன் தனக்கெண்டு ஒரு நாட்டை கண்டுபிடிக்காமல் விட்டுட்டான்.. :angry:

அக்காச்சி கொலை விழுப்போகுது... :angry:

நாட்டைக் கண்டு பிடிக்கத்தான் தமிழனையே படைச்சான் danklas

Link to comment
Share on other sites

தமிழன் என்னும் எவ்வளவு காலம் இப்படி நான் அதை கண்டுபிடிச்சன் இதைக்கண்டு பிடிச்சன் என்று தற்பெருமைபேசிட்டு இருக்கபோறான்.

Link to comment
Share on other sites

:lol::):lol:

நிலா அக்கா என்ன சிரிப்பு பிழையா சொல்லிட்டோமோ...... :D

பிட்டு ..இடியப்பம் தான் தமிழனின் கண்டுபிடிப்பென்று கேள்விப் பட்டிருக்கிறேன்... ஆனால் பெண்களின் உள்ளாடையும் தமிழன் கண்டுபிடிப்பென்று ரசிகை சொல்லித்தான் தெரியும் .... ரொம்பப் பெருமையா இருக்கு.... :lol:

பின்னே கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி நாங்கள்............இதை எல்லாம் நாங்கள் கண்டுபிடிக்காம யார் கண்டுபிடிபாங்கள் ஆனா நான் முதல் சொன்ன மாதிரி பட்டன் வைகிறது தான் பிரச்சினை......... :P :P :lol:

Link to comment
Share on other sites

ஆகா...... சிங்களவன் அப்பவே முளைத்து தமிழனின் '''கண்டுபிடிப்பை''' தடுத்திருக்ககூடாதா.... :D

Link to comment
Share on other sites

ஆகா...... சிங்களவன் அப்பவே முளைத்து தமிழனின் '''கண்டுபிடிப்பை''' தடுத்திருக்ககூடாதா.... :D

ஆஹா... பனங்காய்க்கு ஆசை தோசை அப்பளம் வடை... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் எல்லாரும் :D நல்லது நடந்தால் பிடிக்காதே உங்களுக்கு :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அக்காலத்து தன்மானச்சிங்கங்களைப்பற்றி என்ன நினைகின்றீர்கள் :angry: இவ்வளவு பெரிய விடயத்தை கண்டுபிடித்த நம் மூதாதையருக்கு பட்டன் எங்கே வைப்பது என்பது அவர்களுக்கு தெரியாமல் விடவில்லை என்பதனை இவ்விடத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் B)

Link to comment
Share on other sites

கிழிஞ்சுது போ... டவலுக்கு நன்றி...

அவனவன்(ள்) உடுப்பை போடுவமா வேண்டாமா எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்காங்க, இதுக்க உடுப்புகளை கண்டுபிடிச்சது தமிழனாம் எண்டு கொண்டு இருக்காங்க, உலகத்தில எல்லாத்தையும் கண்டுபிடிச்ச தமிழன் தனக்கெண்டு ஒரு நாட்டை கண்டுபிடிக்காமல் விட்டுட்டான்.. :angry:

அக்காச்சி கொலை விழுப்போகுது... :angry:

:lol::D:lol::blink::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் இனத்த கண்டு பிடிச்சதே தமிழன்தான், கல்தோன்றி மண்தொன்றா காலத்திலயே வல்லினம் மெல்லினம் இடையினம் எண்டு யோசிச்சு நம்ம மூதாதயர் பேரு வைச்சிருக்கிரினம், உங்களுக்கு தெரியாதோ? :blink:

Link to comment
Share on other sites

எங்கள் அக்காலத்து தன்மானச்சிங்கங்களைப்பற்றி என்ன நினைகின்றீர்கள் :angry: இவ்வளவு பெரிய விடயத்தை கண்டுபிடித்த நம் மூதாதையருக்கு பட்டன் எங்கே வைப்பது என்பது அவர்களுக்கு தெரியாமல் விடவில்லை என்பதனை இவ்விடத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் B)

கு.சா தாத்தாவிற்கு பட்டனை பற்றி கதைக்க கோவம் வந்துட்டுது போல...............ஓ பட்டன் வைக்க தெரிந்தது ஆனா பட்டன் எப்படி செய்யிறது என்று தெரியாம ஊசி குத்திவிட்டீனமோ தாத்தா............. :P :P :blink:

Link to comment
Share on other sites

என்ன செய்ய கண்டை மட்டும் பிடிச்சிட்டு இருக்கிறம். இன்னும் மாட்டை பிடிக்கேல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவன்: இஞ்சேருங்கோ இந்தக் கழுசான் பட்டனைக் கெதியாய் தைச்சுத் தாங்கோ?

மணைவி: நாங்கள்(பெண்கள்) இல்லையென்டால் இதெல்லாம் யாரைக் கொண்டு தைப்பீங்கள்!

கணவன்: ம்ம் நீங்கள் இல்லையென்டால் எங்களுக்கு என்னத்துக்கு கழுசான். :lol::)

கை நாட்டை யாரப்பா கண்டு பிடித்தது. :P :P

Link to comment
Share on other sites

என்ன செய்ய கண்டை மட்டும் பிடிச்சிட்டு இருக்கிறம். இன்னும் மாட்டை பிடிக்கேல்லை

மாஸ்டர் மாட்டை நான் பிடித்தனான்............ :P

கணவன்: இஞ்சேருங்கோ இந்தக் கழுசான் பட்டனைக் கெதியாய் தைச்சுத் தாங்கோ? மணைவி: நாங்கள்(பெண்கள்) இல்லையென்டால் இதெல்லாம் யாரைக் கொண்டு தைப்பீங்கள்! கணவன்: ம்ம் நீங்கள் இல்லையென்டால் எங்களுக்கு என்னத்துக்கு கழுசான். :lol::) கை நாட்டை யாரப்பா கண்டு பிடித்தது. :P :P

பெரியப்பா நல்லா இருக்கு பகிடி எல்லாம் கை நாட்டை கண்டுபிடித்தது யாரோ வேற யாரா இருக்கும் எதற்கும் கந்தப்பு தாத்தாவிட்ட கேட்டு சொல்கிறேன்...... :P :P :D

Link to comment
Share on other sites

ரசிகை நல்ல விசயம். நானும் கொஞ்ச காலதிற்கு முன் எங்கள் தமிழ் பெண்களுக்காக மிகவும் கஸ்டப்பட்டு ஒரு உடையை கண்டுபிடித்தேன். மக்களின் ஆதரவு போதாமையாலும், மேலும் இந்தக்கண்டுபிடிப்பை முன்பே இன்னொரு விஞ்ஞானி செய்துவிட்டார் என்று சிலர் வாதம் செய்ததாலும் அந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பை கைவிட்டுவிட்டேன்..

அதைப்பற்றி அறிய இஞ்ச போங்கோ... http://www.yarl.com/forum3/index.php?showtopic=20273&hl=

நீங்கள் எல்லாரும் ஆதரவு தந்தால் இப்படி இன்னும் இன்னும் நல்ல புதிய கண்டுபிடிப்புக்களை செய்யலாம்.

ஆனா உங்களிடம் ஒரு கேள்வி: எங்களுக்கு படிபிச்ச ஆசிரியர் சொல்லுவார், அந்தக்காலத்தில் தமிழ்ப்பெண்கள் பிளவுஸ் கூட போடுவதில்லை. வெறும் சாரியை மாத்திரம் உடம்பில் சுற்றிக்கட்டுவார்கள் என்று. அதாவது சுற்றிக்கட்டும் ஒரு புடவையை தவிர தமிழ்ப்பெண்களுக்கு உரிமை கோர உடைகள் வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லித்தந்தார். இதேபோல் வேட்டி மட்டுமே தமிழ் ஆண்களின் உடை எண்டு சொன்னார்.

Link to comment
Share on other sites

ரசிகை

உங்கள் கூற்றில் ஒத்துப் போக சற்று தயக்கமாக இருக்கிறது. வேட்டி என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்க இல்லை. கிரேக்கரது ஆடை வடிவமே தமிழருக்கு வேட்டியாக வந்தது என்று எங்கேயோ வாசித்ததாக நினைவு.

Link to comment
Share on other sites

ரசிகை

உங்கள் கூற்றில் ஒத்துப் போக சற்று தயக்கமாக இருக்கிறது. வேட்டி என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்க இல்லை. கிரேக்கரது ஆடை வடிவமே தமிழருக்கு வேட்டியாக வந்தது என்று எங்கேயோ வாசித்ததாக நினைவு.

ஆரவல்லி

இந்தக் கட்டுரையை நான் எழுதவ்ல்லை ஏதோ தேடும்போது கிடைத்ததை இணைத்தேன்.

Link to comment
Share on other sites

இப்படியும் ஒரு கட்டுரை வரையலாம் நீராவியின் பயன்பாட்டை கண்டுபிடித்ததும் தமிழன் என அதுதான் புட்டு அவிக்கிரம் இட்டலி அவிக்கிறம் கொழுக்கட்டை அவிக்கிறம் நாம் அவிக்கிறதிலையே காலத்தை கடத்தினோம் ஆனால் வெள்ளையனோ நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தான் வேனுமெண்டால் நீராவியின் பயன்பாட்டை கண்டுபிடித்தது தமிழன் என தற்பெருமை அடிக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் ஒரு கட்டுரை வரையலாம் நீராவியின் பயன்பாட்டை கண்டுபிடித்ததும் தமிழன் என அதுதான் புட்டு அவிக்கிரம் இட்டலி அவிக்கிறம் கொழுக்கட்டை அவிக்கிறம் நாம் அவிக்கிறதிலையே காலத்தை கடத்தினோம் ஆனால் வெள்ளையனோ நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தான் வேனுமெண்டால் நீராவியின் பயன்பாட்டை கண்டுபிடித்தது தமிழன் என தற்பெருமை அடிக்கலாம்

எங்களுக்கு எல்லாம் நக்கலாய்த்தெரியுது? எங்கடை பழசுகள் எல்லாம் ஆவியிலை வேக வைச்சு சாப்பிட்டதாலைதான் வருத்தம் துன்பமில்லாமல் ஒரு டாக்குத்தர் பரியாரி எண்டு அலையாமல் பத்து பிள்ளையளையும் பெத்து ஆரோக்கியமாய் நூறு வருசம் வரைக்கும் வாழ்ந்தவையள்

இப்ப உந்த வெள்ளையளின்ரை சாப்பாட்டை ஸ்ரையிலாய் சாப்பிட வெளிக்கிட்டு வாற வருத்தங்களைக்கூட உந்த படிச்ச பரியாரிமாராலை கூட மாத்தேலாமல் இருக்கு.எதுக்கெடுத்தாலும் குளிசையளைத்தான் தாறாங்கள் பரிகாரம் ஒண்டும் சொல்லீனமில்லை

அந்தக்காலத்திலை ஒடியல்புட்டு, முட்டுக்காய்தேங்காய்ப்பூ போட்ட நீத்துப்பெட்டிப்புட்டு இப்புடி ஆவிவிலை செய்யுற விவகாரம் கனக்க இருக்கு.அதோடை தேங்காய்ச்சாப்பாடுகள் மூண்டு நேரமும் நிறையச்சாப்பிட்டுத்தான் வாழ்க்கையை நடத்தினவை.இப்ப என்னடாவெண்டால் தேங்காய் சாப்பாடே கூடாது எண்டு சொல்லுறாங்கள்.என்ரை கருத்து என்னவெண்டால் நல்லாய் சாப்பிடோணும் நல்லாய் உடம்பு களைக்க வேலை செய்யோணும் அப்பத்தான் கெட்ட கொழுப்புகளுக்கு வேலையிருக்கும்.

எங்கடை பழசுகளை மட்டம் தட்டித்தட்டியே காலத்தை ஓட்டுவம் அவையளின்ரை வாழ்க்கை முறையளைப்பத்தி ஆராவது யோசிச்சுப்பாத்தியளோ வெள்ளைக்காரன் கூட இப்ப எங்கடை சாப்பாடுதான் சுகாதரம் எண்டு சொல்லுறான் இப்ப நான் வேலை செய்யுற இடத்திலை சாப்பிடக்கொண்டு போற பச்சடியைக்கூட விட்டு வைக்கீனமில்லை :angry:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

யமுனாக்கா

வெள்ளக்காரன் கூட பொத்தானை பல காலத்தின் பின்பு தான் கண்டு பிடித்தார்கள்

தமிழர்களுக்கு நாகரீகம் இருக்கிறது ஆனால் அதைத் தவிர தற்போது எதுவுமே இல்லை

இவர்களுக்கு நாகரீகம் இல்லை இவர்களிடம் அதைத் தவிர தற்போது எல்லாம் இருக்கிறது

ஆனால் எல்லாவற்றுக்கும் மேலான தலைவர் இருக்கிறார் தமிழர்களுக்கு !!!!!!!

கரிகாலன் அங்கிள்,

பல காலதிற்கு பின் கண்டு பிடித்தா என்ன கண்டுபிடித்தது கண்டு பிடித்தது தானே :rolleyes: !!அத்தோட பாருங்கோ ஒன்றை கண்டு பிடித்து போட்டு தமிழன் படுறபாடு அவன் எத்தனை விசயத்தை கண்டு பிடித்து போட்டு அமைதியா இருப்பாதோடு :rolleyes: ........அந்த விசயங்களை மற்றவனிற்கும் சொல்லுறான் ஆனா நாம அப்படியா :wub: .........அவன் சொல்லுறதை எல்லாம் கேட்டு போட்டு அவனிற்கு என்ன தெரியும் என்று கதைபோம் அந்தளவு தான் நம்ம அறிவு :rolleyes: !!அவர்களிடமும் நாகரிக்காம் இருகிறது பலவிதத்தில் அவற்றை நாம் கற்று கொள்ளவில்லை அவர்கள் செய்யும் பிழையான நடவடிக்கைகளை எடுத்துவிட்டு அவர்களை குறை சொல்வது பிழையாகவே கருதுகிறேன் கரிகாலன் அங்கிள்!! <_<

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"என்னத்தை கண்டுபிடித்தாலும் அடக்கமா இருப்பவன் தான் அறிவாளி" <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.