Jump to content

வெளியானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தீர்ப்பு ! மைத்திரி 100 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு உத்தரவு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளியானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தீர்ப்பு ! மைத்திரி 100 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு உத்தரவு !

By DIGITAL DESK 5

12 JAN, 2023 | 12:11 PM
image

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் உளவுத்துறை பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்து அதன் தீர்ப்பை அளித்த 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற உயர் நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

அதன்படி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டை தனது சொந்த நிதியில் இருந்து செலுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் குறிப்பிட்டது.

அதேநேரம் நிலந்த ஜயவர்தன, பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் சொந்த நிதியில் இருந்து 75 மில்லியன் ரூபாவையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது சொந்த நிதியில் இருந்து 50 மில்லியன் ரூபாவையும் முன்னாள் உளவுத்துறை பிரதானி சிசிர மெண்டிஸ் தனது சொந்த நிதியில் இருந்து 10 மில்லியன் ரூபாவையும் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடாக செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/145596

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரியவில்லை

எதுக்கு சொந்த நிதியில் இருந்து???

அவ்வளவு இவர்களிடம் இருக்கிறதா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

புரியவில்லை

எதுக்கு சொந்த நிதியில் இருந்து???

அவ்வளவு இவர்களிடம் இருக்கிறதா???

 100 மில்லியன் = 10 கோடி

முன்னாள் சனாதிபதியிடம் இருக்கும் அண்ணா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நிஞாயமாக நடக்கிறது என்பதற்கு இந்த தீர்ப்பு, ஆனால் நஷ்ட ஈடு என்பது எல்லாம் சும்மா. அவர்களுக்கு பறிக்கத்தெரியுமே தவிர கொடுக்கத்தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

 100 மில்லியன் = 10 கோடி

முன்னாள் சனாதிபதியிடம் இருக்கும் அண்ணா.

 

ஒரு அரசாக  இருக்கும்போது நடைபெற்றதற்கு ....

சொந்த  நிதியில் கேட்பது தான் உதைக்குது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

ஒரு அரசாக  இருக்கும்போது நடைபெற்றதற்கு ....

சொந்த  நிதியில் கேட்பது தான் உதைக்குது?

அதை புரிந்துகொண்ட காரணமாகத்தான் சொந்த நிதியில் என்கிறார்கள்

Link to comment
Share on other sites

இவ்வளவு நிதியையும் அரசுக்கு செலுத்த வேண்டும். அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் கொடுக்காது????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் தீர்ப்பு: மைத்திரிபால சிறிசேன உட்பட ஐவர் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென உத்தரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் 2019, ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான 12 மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று (12/01/2023) வழங்கியுள்ளது.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலைத் தவிர்ப்பதற்குத் தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தரப்பினரால் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று உயர்நீதிமன்றம் வழங்கியது.

இதன்படி, 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

இதற்கேற்ப, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அத்துடன், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மிலலியன் ரூபா விதமும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 50 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் 10 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்ட தரப்பினருக்குச் செலுத்த வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நஷ்ட ஈடு தொகையானது, தமது சொந்த பணத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதேபோன்று, தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கத்தால் தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் தீர்ப்பு: மைத்திரிபால சிறிசேன உட்பட ஐவர் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென உத்தரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதேபோன்று, தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு அரசாங்கத்தால் 5 லட்சம் ரூபா வீதம் நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தனவிற்கு எதிராக 6 மாத காலத்திற்குள் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அளுவிஹாரே, எல்.ரி.பீ.தெஹிதெனிய, முர்த்து பெர்ணான்டோ, எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டீ.நவாஸ், சிரான் குணரத்ன ஆகிய நீதிபதிகள் குழாமினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி, ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 8 தற்கொலை குண்டுதாரிகள் அடங்களாக 277 பேர் உயிரிழந்திருந்தனர்.

அத்துடன், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சுமார் 400க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததாக தாக்குதல் தொடர்பில் விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் தீர்ப்பு: மைத்திரிபால சிறிசேன உட்பட ஐவர் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென உத்தரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தத் தாக்குதலில் 40 வெளிநாட்டு பிரஜைகளும் 45 குழந்தைகளும் உயிரிழந்திருந்தனர்.

இலங்கையிலுள்ள முக்கிய மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை இலக்காகக் கொண்டு இந்த தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமாஅம் அமைப்பு நடத்தியமை, விசாரணைகளின் ஊடாகக் கண்டறியப்பட்டது.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவராக செயற்பட்ட சஹரான் ஹாசிம் இந்தத் தாக்குதலுக்கு தலைமை தாங்கியிருந்ததுடன், அவரும் இந்தத் தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்றன.

முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு, பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், பல கோடி ரூபாய் சொத்துகளுக்கும் இதனூடாக சேதம் விளைவிக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/c6p50x2deyno

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஏராளன் said:

இந்த நஷ்ட ஈடு தொகையானது, தமது சொந்த பணத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது

செலுத்த தவறும் பட்சத்தில் ( ? ) சிறை தண்டனையோ அல்லது சொத்துக்களை பறிமுதல் செய்வதையோ குறிப்பிட படவில்லை..

vadivel-pocket.gif

அதற்கும் மேலே மஞ்சள் நோட்டிசு ( என்னிடம் எதுவும் இல்லை .. நான் ஒரு அன்னகாவடி ) கொடுத்தால் என்ன ஆவது.?  

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு இழப்பீடு கொடுப்பது போதுமா?  பாதிக்கப்பட்டோர் நினைப்பது என்ன?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இலங்கை ஈஸ்டர் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டு வெடிப்பின் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு, நட்டஈட்டு தொகையை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலை தவிர்ப்பதற்கு தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து, பாதிக்கப்பட்ட தரப்பினரால் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

 

 

இதன்படி, 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் ரூபாயும், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மில்லியன் ரூபாய் வீதமும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 50 மில்லியன் ரூபாயும் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் 10 மில்லியன் ரூபாயை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு செலுத்த வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தாக்குதலில் உயிரிழந்த ஒருவருக்கு தலா ஒரு மில்லியன் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என அரசாங்கத்திற்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இந்த நிலையில், நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு குறித்து, பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்தித்து பிபிசி தமிழ் வினவியது.

 

கொழும்பு - முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த கோமஸ், ஈஸ்டர் குண்டு வெடிப்பில் தனது மகன், மருமகள் மற்றும் மூன்று பேரப் பிள்ளைகளை இழந்துள்ளார்.

 

கொழும்பு - கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலிலேயே இவர்கள் உயிரிழந்திருந்தனர்.

 

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து, கோமஸ் கருத்து தெரிவித்தார்.

 

கேள்வி :- உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு திருப்தியளிக்கின்றதா?

 

பதில் :- இல்லை. இல்லையென்றே சொல்ல வேண்டும். காரணம், இது ஏற்கனவே வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. கால தாமதமாகிலும், இந்த தீர்ப்பு வந்ததற்கு ஓரளவிற்கு நாங்கள் திருப்தி அடைகிறோம். ஏனென்றால், நாங்கள் அவர்களை பற்றிய சிந்தனையிலும் அவர்களின் இழப்பை பற்றிய சிந்தனையிலும் எப்போதும் துக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் சிறியதொரு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவே கருத்திற் கொள்கின்றோம்.

 

கேள்வி :- இந்த சம்பவத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால், எவ்வாறானதொரு நியாயத்தை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

 

பதில் :- இறைவனின் தீர்ப்பை தவிர நாங்கள் எதுவும் மேலதிகமாக எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஏற்கனவே சம்பாதித்ததில் ஒரு சிறிய பங்கை இழக்கின்றார்கள்.

அவ்வளவு தான். இது எங்களுக்கு எந்தவிதத்திலும் திருப்தி இல்லை என்று சொல்வதற்கு காரணம், எங்களுடைய அன்றாடத் தேவைகளை பொருத்த வரை ஒரு பக்கம் இந்த பணத்தின் மூலம் திருப்தி அடையலாம். ஆனால், இழந்ததை எந்தவிதத்திலும் முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவினால் திருப்பி கொடுக்க முடியாது. எவ்வளவு பொறுப்பாக நடந்துக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தில் அவர் அந்த ஜனாதிபதி நாற்காலியை மாத்திரம் யோசித்தாரே தவிர, பொறுப்புக்களை தட்டிக் கழித்து விட்டார்.

அது இந்த தீர்ப்பின் மூலம் நன்றாக விளங்குகின்றது. அனைவரையும் பாதுகாக்குமாறு கோரியே  ஜனாதிபதியாக நாங்கள் அவரை  தேர்ந்தேடுத்தோம். ஆனால், அவர் அதை முழுமையாக செய்யவில்லை என்கின்றது தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது என்பதை உணர்கிறோம்.

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்

கேள்வி :- இந்த தீர்ப்பை குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள்?

 

பதில் :- அவர்களினாலும் இதனை ஜீரனிக்க முடியாது என்றுதான் நான் நினைக்கின்றேன். ஏனென்றால், எங்களுக்கு பண ரீதியிலான குறைபாடு பெரிதாக தெரியவில்லை. எனது குழந்தைகளின் சகோதரன், என்னுடைய மகன் எனக்கு பிறகு கிடைப்பாரா? கிடைப்பதற்கு ஏதாவது உத்தரவாதத்தை இவர்கள் கொடுப்பார்களா? என்னுடைய குழந்தைகள் என்னுடன் செலவிட்ட நாட்கள், நடந்துக்கொண்ட விதங்கள், இன்னும் எங்களை துக்கத்தில் ஆழ்த்தி இருக்கின்றதே தவிர, இந்த பணத்தினால் அதனை திருப்திப்படுத்த முடியாது.

 

கேள்வி :- பொருளாதார நெருக்கடி தற்போது நாட்டை பெரிதும் பாதித்திருக்கின்றது.  உங்களது மகன், உங்களின் குடும்பத்திற்கு உழைத்துக் கொடுக்கும் நபராக இருந்துள்ளார். அவர் இந்த தருணத்தில் உயிருடன் இருந்திருந்தால், இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நீங்கள் எவ்வாறு மீண்டெழுந்திருப்பீர்கள்?

 

பதில் :- இதுவொரு நல்ல கேள்வி. என்னுடைய இறந்த மகன் நல்ல உழைப்பாளி. அவன் ஒரு நேரம் கூட வீட்டில் இருப்பதில்லை. ஆட்டோ ஒன்று இருந்தது. ஆட்டோ செலுத்திக் கொண்டு, வேலைக்கும் சென்றார். ஒரு நாளைக்கு இரண்டு வேலைகளை செய்யக்கூடிய ஒரு உழைப்பாளியாக இருந்தார். எனக்கு நல்ல உதவியாக இருந்தது. இப்போதுள்ள பொருளாதார பிரச்னைக்கு அவர் இருந்திருந்தால், கஷ்டம் கொஞ்சம் குறைந்திருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

கேள்வி :- இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அல்லது பொறுப்பிலிருந்து தவறியவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிர்வரும் காலங்களில் நீதித்துறை ஊடாக எவ்வாறானதொரு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் முன்வைக்கிறீர்கள்?

 

பதில் :- அநேகமாக நான் எதிர்பார்க்கின்றது அவர்கள் அனைவரையும் உள்ளே தள்ள வேண்டும். உள்ளே இருக்கும் போது, என்ன பொறுப்பை தவறவிட்டார்கள் என்பதை அவர்கள் உணர்வார்கள். ஏன் நான் இப்படி செய்தேன் என்பதை தனிமையில் இருக்கும் போது ஓரளவுக்கேனும் உணர்வார்கள். அதனை உணரும் விதமாக சரி, அவர்களை உள்ளே தள்ள வேண்டும். அவர்களை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. பணத்தை கொடுத்து, தப்பிச் சென்றுவிடாமல், உள்ளே தனிமையில் இருந்து அவர்கள் உணர வேண்டும்.

இறந்த ஆத்மாக்களுக்கு தாங்கள் செய்த துரோகம் என்ன என்பதை உணர வேண்டும். இந்த வேதனையை அவர்கள் உணர வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் இறந்தவர்களின் தாய், தந்தையர்கள் படும் பாடு, வேதனையை இவர்கள் இன்னும் உணரவில்லை. இந்த தீர்ப்பின் ஊடாக அவர்களின் பொருளாதாரத்தில் ஒரு சிறிய பகுதியைத்தான் இழக்கின்றார்கள். முழுவதையும் இழக்கவில்லை. அவர்களை உள்ளே தள்ளி, அவர்கள் தனிமையில் இருந்து, என்ன நடந்தது என்பதை யோசிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். 

https://www.bbc.com/tamil/articles/cpelzwpxezlo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 கோடியை செலுத்தாவிடின் மைத்திரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் - ஹர்ஷண ராஜகருணா

By VISHNU

16 JAN, 2023 | 04:56 PM
image

(எம்.மனோசித்ரா)

நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து தனது நண்பர்கள் , உறவினர்களிடமிருந்து உதவி பெற்றாவது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையை செலுத்த வேண்டும்.

அவ்வாறில்லை எனில் சட்டத்தின் பிரகாரம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட சொத்து விவகாரங்கள் தொடர்பில் எனக்கு தெரியாது. எவ்வாறிருப்பினும் நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து அவர் செயற்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தன்னிடம் இல்லை என்று கூறிக் கொண்டிருப்பதை விடுத்து , உறவினர்கள் , நண்பரிகளிடமிருந்து உதவி பெற்றாவது அவர் அந்த நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்க வேண்டும். அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக இருப்பதால் அக்கட்சியும் முன்னாள் ஜனாதிபதிக்கு உதவ வேண்டும்.

தேர்தல் தொடர்பில் ஆளுந்தரப்பு எதிர்மறையான கருத்துக்களையே வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் தேர்தல் மீது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சமேயாகும். அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியால் எவ்வாறு தேர்தலை நடத்த வேண்டாம் என்று கூற முடியும்?

நிதி அமைச்சும் , திறைசேரியும் செலவீனங்களுக்கு சரியென்று கூறுகின்ற போதிலும் , அரசாங்கமே அதற்கு எதிர்ப்புக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வாறிருப்பினும் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் மக்களின் இறையான்மையை பாதுகாப்பதற்காக நாம் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம்.

தேர்தலை நடத்துவதற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அரசாங்கம் , ஏதேனுமொரு வழியில் இலஞ்சம் வழங்கியாவது தமது வெற்றியை உறுதி செய்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் தேர்தல் சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும்.

சுயாதீன தேர்தலொன்றை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கான பொறுப்பு பொது மக்களுக்கும் உண்டு.

தற்போது பொதுஜன பெரமுனவும் , ஐ.தே.க.வும் இணைந்து நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் 2000 இலட்சம் (200 மில்லியன்) செலவில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தினம் கொண்டாடப்படக் கூடாது என்பது எமது நிலைப்பாடல்ல.

ஆனால் செலவுகளைக் குறைத்து கௌரவத்துடன் கொண்டாடுமாறு வலியுறுத்துகின்றோம். சுதந்திர தின கொண்டாட்ட செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு தேவையான மருந்துகள் , உரம் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மொட்டு , ஹெலிகொப்டர் இரு அணியிலும் எவ்வித மாற்றமும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே மக்கள் எதிர்பார்த்துள்ள மாற்றத்தைக் கொண்டுள்ள கட்சியாகும்.

ஜே.வி.பி.க்கு தற்போது பித்துப் பிடித்துள்ளது. அவர்களால் மேடைகளில் பேசுவதற்கு மாத்திரமே முடியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேச்சின் மூலம் தேர்தலுக்கு முன்னரே வெற்றி பெற்று விடுவார்கள். ஆனால் தேர்தல் இடம்பெற்றதன் பின்னர் உண்மையான முடிவுகள் அதற்கு முரணானதாகவே இருக்கும்.

எனவே ஜே.வி.பி. குறித்து மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 1980 களில் அவரால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் என்றும் மாறக் கூடியவையல்ல. எதிர்பாராத விதமாக இம்முறை ஜே.வி.பி.யை மக்கள் தெரிவு செய்து விட்டால் , 5 ஆண்டுகளின் பின்னர் இவர்களை விட கோட்டாபய ராஜபக்ஷ சிறந்தவர் என்று எண்ணும் நிலைமையே ஏற்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/145933

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல்: நஷ்ட ஈடாக ரூ.10 கோடி செலுத்த இயலாது - மைத்திரிபால சிறிசேன

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஈஸ்டர் தாக்குதல் - சிறிசேன

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மைத்ரிபால சிறிசேன

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈட்டை வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட ஐவருக்கு, இலங்கை உயர்நீதிமன்றம் கடந்த 12ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபாயும், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன,  ஆகியோருக்கு 7.5 கோடி ரூபாயும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 5 கோடி ரூபாயும், முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஒரு கோடி ரூபாயும் நட்டஈடாக செலுத்த வேண்டும் என்பது நீதிமன்றம் உத்தரவு.

இந்த நட்டஈட்டு தொகையானது, தமது சொந்த பணத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை பல்வேறு தரப்பினர் வரவேற்றிருந்த நிலையில், உத்தரவுக்கு அமைய குறித்த நபர்கள் நட்டஈட்டை எவ்வாறு வழங்குவார்கள் என்ற கேள்விகளையும் எழுப்பியிருந்தனர்.

நட்டஈட்டை செலுத்தாதிருக்க சிறிசேன முயற்சி - கொழும்பு பேராயர் இல்லம் 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பின் பிரகாரம், நட்டஈடாக செலுத்த வேண்டிய 10 கோடி ரூபாயை செலுத்தாதிருப்பதற்கு முயற்சித்து வருகின்றமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு பேராயர் இல்லம் தெரிவிக்கின்றது.

 

 

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் அருட்தந்தை ஜுட் கிரிஷாந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை இல்லாது செய்வதற்கு, நாடாளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்த அவர்  தயாராகி வருகின்றமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் - சிறிசேன

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

''7 நீதியரசர்கள் குழாமினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக, இந்த நாட்டை போலியாக ஆட்சி செய்ய முடியாது என்பதனை காணக்கூடியதாக இருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து சில விடயங்களை அறிந்துக்கொள்ள முடிகின்றது. மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்ட அந்த தண்டனையை இல்லாது செய்வதற்கு நாடாளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.

 

அவ்வாறான விடயங்களை செய்ய முடியாது. அந்த தீர்ப்பை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். தண்டனைக்கு மைத்திரிபால சிறிசேனவை கீழ்படிய வைக்க வேண்டும்" என அருட்தந்தை ஜுட் கிரிஷாந்த தெரிவிக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் - சிறிசேன

பட மூலாதாரம்,PMD

மைத்திரிபால சிறிசேன பதில்

நீதிமன்றத்தினால் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் தடவையாக நேற்றைய தினம் பொது வெளியில் கருத்து தெரிவித்தார்.

 

உயர்நீதிமன்றத்தினால் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக செலுத்த வேண்டிய 10 கோடி ரூபாய் பணத்தை செலுத்தும் பின்புலம் தனக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கிக்னறார். எனினும், நீதிமன்ற தீர்ப்பை தான் மதித்து, தனக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பணத்தை சேகரித்து, இந்த நட்டஈட்டுத் தொகையை செலுத்த தயாராகி வருவதாக அவர் கூறுகின்றார்.

''நான் சட்டத்தை மதிக்கின்றேன். இந்த சம்பவம் நேரும் தருணத்தில், நான் சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தேன். இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்த போதிலும், தனக்கு இது தொடர்பில் எந்தவொரு நபரும் அறிவிக்கவில்லை என நான் தொடர்ச்சியாக கூறி வருகின்றேன். இந்த தீர்ப்பில் 85 பக்கங்களுக்கு தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது. 

 

இந்த தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்த போதிலும், ஜனாதிபதி எந்தவொரு விதத்திலும் இது குறித்து அறிந்திருக்கவில்லை என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால், 10 கோடி ரூபாயை செலுத்த ஏன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என நீங்கள் சிந்திக்க முடியும்?. ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற அதிகாரிகள், ஏதேனும் ஒரு தவறிழைக்கும் பட்சத்தில், அதற்கு ஜனாதிபதியும் பொறுப்பு கூற வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் எழுதப்பட்டுள்ளது. 

 

10 கோடி ரூபாய் நட்டஈட்டை செலுத்துவதற்கு எந்தவொரு வகையிலும் பொருளாதார பின்புலத்தை நான் கொண்டிருக்கவில்லை. எமக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பணத்தை சேர்ப்போம் என நானும், எனக்கு நெருங்கியவர்களும் தீர்மானித்துள்ளோம். 

 

எனக்கு எந்தவொரு வருமானமும் கிடையாது. நான் ஜனாதிபதியாக இருந்த ஐந்து வருட காலத்திலும், எனது சொத்து விபரங்களை நாடாளுமன்றத்திடம் வெளிப்படுத்தியுள்ளேன். தேவை ஏற்படுமாயின், தகவலறியும் சட்டத்தின் ஊடாக அதனை பெற்றுக்கொண்டு, பார்வையிட முடியும்." என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

பெரும் தொழிலதிபரான சிறிசேன சகோதரர் சொல்வது என்ன?

மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், இலங்கையின் பிரதான தொழிலதிபர். மிகப் பிரமாண்ட அரிசி ஆலை, காணி விற்பனை, ஹோட்டல் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடம் பதித்து, இலங்கையின் பிரமாண்ட தொழிலதிபராக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான டட்லி சிறிசேன விளங்குகின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் - சிறிசேன

பட மூலாதாரம்,DUDLEY SIRISENA'S FACEBOOK

 
படக்குறிப்பு,

டட்லி சிறிசேன

நாடு முழுவதும் அரிசி தேவையில் பெரும் பகுதியை, டட்லி சிறிசேன விநியோகித்து வருகின்றமையின் ஊடாக, நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்குகின்றார். இவ்வாறான பல்வேறு துறைகளின் தடம் பதித்து, மிக செல்வந்தராக காணப்படும் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன, தனது மூத்த சகோதரனான மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டார்.

 

ஊடகவியலாளர் :- ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களின் அண்ணாவிற்கு நட்டஈடு செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. அவருக்கு நீங்களா பணம் வழங்க போகின்றீர்கள்?

டட்லி சிறிசேன :- நீதிமன்ற தீர்ப்பில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. தம்பியிடமிருந்து பணத்தை பெற்று, நட்டஈட்டை வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. தேவையற்ற கேள்விகளை என்னிடம் எழுப்ப வேண்டாம்.

ஊடகவியலாளர் :- அப்படியென்றால், அவருக்கு அந்தளவு தொகையை செலுத்த முடியுமா?

டட்லி சிறிசேன :- அதனை அவரிடமே கேட்க வேண்டும். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்பது குறித்து நான் கவலை அடைகின்றேன்.

உலகையே உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்

இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டு வெடிப்பு சந்தர்ப்பத்தில், ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன கடமையாற்றியிருந்தார். மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பவங்களில், தற்கொலை குண்டுதாரிகள் 8 பேர் அடங்கலாக 277 பேர் உயிரிழந்திருந்தனர். அத்துடன், இந்த குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் சுமார் 400 பேர் காயமடைந்திருந்தனர்.

 

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான 12 மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் கடந்த 12-ம் தேதி வழங்கியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் - சிறிசேன

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலை தவிர்ப்பதற்கு தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து, பாதிக்கப்பட்ட தரப்பினரினால் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் தமது பொறுப்புகளை தவறவிட்டுள்ளதாக உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/czrk12we4kzo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சிறிசேன பிச்சை எடுத்தோ உறவினர் நண்பர்கள் மூலமாகவே செலுத்தி விடுவார் எஞ்சிய குற்றஞ்சாட்டப்பட்டோர் என்ன செய்வர்? மக்களிடம் எல்லோருக்கும் பிச்சையிட முடியுமா?  சொந்தத்தம்பியே அவரது பிரச்சனையை அவர் பாத்துக்கொள்ளட்டும் எனும்போது, நண்பர்கள், சில உறவினர் கொடுக்க காரணம் என்ன? அவரின் குற்றத்தில் இவர்களுக்கும் பங்குண்டோ? அவர் பதவி வகிக்கும்போது இவர்கள் சலுகைகளை பெற்றிருப்பார்களோ? இல்லை சிலர் தாங்கள் அகப்பட்டுக்கொள்ளாமல் உறவினர் நண்பர்கள் பேரில் வைப்புச்செய்வதுமுண்டு, பிடிபடுவதுமுண்டு. அந்த அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது அனுதாபம் தெரிவிக்காதவர்கள், அவர்களுக்கு உதவி செய்யாதவர்கள், ஒரு குற்றவாளிக்கு உதவுகிறார்கள். சமுதாயத்தின் மனநிலை! ஏமாற்றுபவன், சமுதாயத்தில் உயர் பதவியில், அந்தஸ்த்தில் இருந்தால்; அவர் மதிக்கப்படவேண்டும், காப்பாற்றப்படவேண்டும். ஏமாறுபவர், தாக்கப்பட்டவர் அவர்களை எதிர்த்து பொது வெளியில்  கேள்வி கேட்கக்கூடாது, சுட்டிக்காட்டக்கூடாது மரியாதை மதிப்பு கொடுக்கவேண்டும்! இது பாதிக்கப்பட்டவர்களை அடிமைப்படுத்தும் ஒருவகை மேட்டுக்குடி மனநிலை!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2023 at 08:05, விசுகு said:

புரியவில்லை

எதுக்கு சொந்த நிதியில் இருந்து???

அவ்வளவு இவர்களிடம் இருக்கிறதா???

மைத்திரி ஒரு நசியல் கள்ளர். அவர் கையில் ஒன்றுமே இல்லை. ஆனால் அவரது குடும்பம், இலங்கையில் பெரும் பணக்கார குடும்பம். அவரது சகோதரர் நாட்டின் பெரும் அரிசி ஆலை ஒன்றை பொலநறுவையில் வைத்துள்ளார்.

அவரது குடும்பத்தின், மிகப்பெரிய உல்லாச பயண விடுதி ஒன்று தென் இலங்கையில் உள்ளது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

காசு  தராவிடின் சொத்துக்களை ப்றிக்கக்கூடிய சட்டங்கள் சிறிலங்காவில் இருக்குமென நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

காசு  தராவிடின் சொத்துக்களை ப்றிக்கக்கூடிய சட்டங்கள் சிறிலங்காவில் இருக்குமென நம்புகிறேன்.

இப்படியான எவருமே சொந்த பெயரில் வைத்திருக்க மாட்டார்கள்.

பணம் இல்லை என்று ஓரிரு வருடம் சிறை சென்று வந்தால் இன்னும் கூடிய அளவான வாக்குகளால் வெற்றியடையலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

காசு  தராவிடின் சொத்துக்களை ப்றிக்கக்கூடிய சட்டங்கள் சிறிலங்காவில் இருக்குமென நம்புகிறேன்.

அதை சட்டத்தரணி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார் ஆனால் மைத்திரி தன்னிடம் சொத்தேதும் இல்லையென்கிறார். உதவி செய்யும் நண்பர், உறவினரின் வைப்புக்கணக்குகளை ஆராய்ந்தால் வெளிவரும் உண்மை. அதற்கு முதல் சரியான காரணம் காட்டி உத்தரவு வாங்க வேண்டும் நீதிமன்றத்திடம். 

குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக செய்தி கிடைத்தும் அதை தடுக்காது, நடத்துவதற்கு அனுமதியளித்துவிட்டு தான் தப்பிப்பதற்காக சிங்கப்பூருக்கு போவதற்கு முதல் சம்பந்தப்பட்டவர்களிடம் எவ்வளவு கையூட்டு வாங்கினாரோ? மொத்தத்தில் நஷ்ட ஈடு செலுத்த முடியாத பிச்சைக்காரன், தன்னைத் தெரித்தெடுத்த மக்களை காப்பாற்ற முடியாத, விரும்பாத செயற்திறனற்ற ஒருவரை மக்கள் தெரிந்தெடுத்தனர், நம்ம தலீவர்களும் தங்கள் கையை காட்டினார் இவர் பக்கம். இதே நாளைக்கு ராஜபக்ஸாக்களுக்கு எதிராக நீதிமன்றம் போனாலும் பணப்பையை கவிட்டுக்கொட்டி  கையை விரித்து தப்பிப்பார்கள்! அவ்வாறே ஊழலில் மாட்டும் எவரும் செய்து தப்பிக்கலாம். இப்போவாவது தனது தவறை, நம்பிக்கைத்துரோகத்தை நினைத்து பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக்கேட்க தோன்றுகிறதா இவர்களுக்கு? நஷ்ட ஈடு வழங்க வேண்டி வந்து விட்டதே என நொந்து கொள்வார். அவர் நினைத்திருப்பார் ராஜபக்சக்கள் ஆட்சியில் நிலைப்பார், இப்படியான நிலையெல்லாம் வராதென்று நம்பியிருப்பார். இத்தனை ஆயிரம் மக்களை காலங்காலமாய் கொன்றிருக்கிறோம் யாரும் யாருக்கும் இப்படி  நஷ்ட ஈடு கொடுத்ததில்லையே, நீதிமன்றங்களும் கோரவில்லை, வழக்குகள்  தள்ளுபடியானதே சரித்திரம்.

  • Like 2
Link to comment
Share on other sites

தன்னிடம் 3 ஏக்கர் மாந்தோட்டம் மட்டுமே உள்ளதாம். மிகுதியை மக்களிடம் திரட்டப்போகிறாராம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போவெல்லாம் பிச்சைக்காரர் தங்கள் படுக்கையின் கீழே பிச்சையெடுத்த, கொள்ளையடித்த பணத்தை பதுக்குகின்றனர். கோத்தாவின் படுக்கையறையில் போராட்டக்காரர் எடுத்த பணம் நினைவுக்கு வரலாம் எல்லோருக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.