Jump to content

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க திட்டம் - பாதுகாப்பு அமைச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க திட்டம் - பாதுகாப்பு அமைச்சு

By Rajeeban

13 Jan, 2023 | 11:30 AM
image

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிடுகின்றது.

தற்போது 200783 ஆக காணப்படும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை 2024 இல் 135,000 ஆகக்குறைப்பதற்கு எண்ணியுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

2030 இல் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒருஇலட்சமாக குறைக்கவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரெமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தேவைகளிற்கு ஏற்ப எதிர்கொள்ளக்கூடிய பாதுகாப்பு சவால்களிற்கு தீர்வை காண்பதற்காக சிறந்ததிறன் உள்ள இராணுவத்தை உருவாக்கும் நோக்கம் குறித்தும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
 

https://www.virakesari.lk/article/145694

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவம் - மெதுவாக ஊசி அடிக்கும் ரணில் 

அடுத்த ஆண்டுக்கு முன்னர் இலங்கை இராணுவம் 200,000 ல் இருந்து 135,000 ஆக குறைக்கப்படும்.

https://www.dailymirror.lk/breaking_news/SL-Armys-strength-to-be-trimmed-from-200-000-to-135-000-by-next-year/108-252123

படிப்படியாக குறைக்கப்பட்டு, 2030ம் ஆண்டளவில் 100,000 அளவில் மட்டுப்படுத்தப்படும்.

இது வெளியே சொல்லப்படாத, உலக வங்கியின் நிபந்தனை என்று சொல்லப்படுகிறது.

@நியாயத்தை கதைப்போம் 

வீட்டுக்கு அனுப்பும் ஊசி. பெரிய பட்ஜெட்டை போட்டு, உங்களுக்கு பிரச்சனை இல்லை என்று சொல்லிப் போட்டு, திரத்தினா, என்ன நிலை? அரசுக்கு எதிராக போராடுவார்கள் என்று மெதுவாக ஊசி அடிக்கிறார்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

அடுத்த ஆண்டுக்கு முன்னர் இலங்கை இராணுவம் 200,000 ல் இருந்து 135,000 ஆக குறைக்கப்படும்.

இனி அவ்வளவு பேரும் தோட்டம் செய்வார்களா? 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே? தமிழரின் நிலங்களில்! இராணுவம் என்னும் பெயர் மாறி உற்பத்தியாளர் என அழைக்கப்படுவர். இராணுவம் பாதிக்கப்பட்ட மக்களிடங்களில் இருந்து வெளியேற வேண்டும், தேவையற்ற விகாரைகள் அகற்றப்படவேண்டும், பறிக்கப்பட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இப்படி படிப்படியாக நிபந்தனைகள் இறுக்கப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

எங்கே? தமிழரின் நிலங்களில்! இராணுவம் என்னும் பெயர் மாறி உற்பத்தியாளர் என அழைக்கப்படுவர். இராணுவம் பாதிக்கப்பட்ட மக்களிடங்களில் இருந்து வெளியேற வேண்டும், தேவையற்ற விகாரைகள் அகற்றப்படவேண்டும், பறிக்கப்பட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இப்படி படிப்படியாக நிபந்தனைகள் இறுக்கப்படவேண்டும்.

மன்னிக்க வேண்டும் சாத்தான், விகாரைகள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

மன்னிக்க வேண்டும் சாத்தான், விகாரைகள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது. 

தெரியும் மீரா. ஒரு சிறு நப்பாசை .... காலம் நினைத்தால் எதுவும் மாறும். நடக்காது என்று நினைத்த எத்தனையோ காரியங்கள் நடந்தன. அது கொஞ்சம் நம்பிக்கையை தருகிறது. இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டம் கூட நினைக்காத ஒன்று. அது நிறைவேறுமா என்பது அடுத்த கேள்வியாய் இருந்தாலும் இனிமேல் ஏமாற்று, பாசாங்கு வேலை எல்லாம் எடுபடாது. நடவடிக்கை எடுக்கும்வரை கடன் என்று கேட்க முடியாது. தாங்கள் தான் கெட்டிக்காரர் என்று ஆட்டம் போட்ட காலம் எல்லாம் மாறிப்போச்சு, இனி கடன் போடுபவர் போடும் தாளத்திற்கு ஆடியே ஆகவேண்டும் விரும்பியோ விரும்பாமலோ. அதுக்காக நாம் எடுக்கும் முயற்சிகளை கைவிடக்கூடாது. "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருந்திக் கூலி தரும்."

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.