Jump to content

ததேகூ பிளவும் உள்ளூராட்சி சபை தேர்தலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி தேர்தல் பற்றி பேசுகிறவர்கள் இந்த காணொளியையும் செவிமடுத்தால் கூடுதல் விபரங்கள் கிடைக்கும்.

முக்கியமாக ஏன் சுயேட்சைக் குழுவாக கேட்கிறார்கள் என்று தெரியாமல் இருந்துது.

இந்த காணொளி கேட்ட பின்னர் நிறையவே தெளிவடைந்துள்ளேன்.

இணைப்புக்கு நன்றி நுணா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாத கட்சிகளை வட கிழக்கில் அனுமதித்தது செயற்திறனற்ற தமிழரசுக்கட்சியே. இப்போ தமிழ்த்தேசியம் என்பதை உடைத்து பேரினவாத கட்சிகளின் காலடியில் விழ வைப்பதும் தமிழரசுக்கட்சியே. முன்னைய சுமந்திரனின் பேச்சுக்களை கேட்டால் புரியும் அதாவது தமிழரசு, தமிழ்த்தேசியம் என்று சொன்னால் சிங்களவர் பயப்படுகிறார்களாம் அதை வெறுக்கிறார்களாம். அதற்காகவே இந்த சிங்கள கட்சிகளை வட கிழக்கில் திட்டமிட்டு உள்நுழைய விடுகிறார்கள் போலுள்ளது. தமிழ்த் தேசியக்கட்சிகள்  பிரிந்து நின்று போட்டியிடுவதால் ஏற்படும் நன்மைகளை போன தேர்தலில் தாம் உணர்ந்து கொண்டதாக ஒத்துக்கொள்ளும் இவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை தூங்கிவிட்டு தேர்தல் நெருங்கும்போது பங்காளிக்கட்சிகளை வெளியேற்றுவதும் த. தே. கூட்டமைப்பின் சின்னத்தை பாவிக்கக்கூடாது என்று  தடுப்பதும் அவர்களை அரசியல் அனாதைகளாக்குவதுபோல் தெரியவில்லையா? பத்திரிகைகளில் செய்தி வந்த போதும் இல்லவே இல்லை என்று ஏன் சாதித்தார்கள்? இது ஒரு திட்டமிட்டு அவர்களை ஓரங்கட்டும் செயல். அதாவது தமிழ்த்தேசியத்தின் மேல் மக்கள் விருப்பு வைத்திருக்கிறார்கள் ஆகவே அதை அவர்களிடம் இருந்து தடுத்து தமிழரசுக்கட்சிக்கு விழும் வாக்குகளை அதிகப்படுத்தி தமது சர்வாதிகாரத்தை பலப்படுத்தும் உள்நோக்கம் கொண்டது. உண்மையிலேயே இவர்களது திட்டம் வாக்கை தக்க வைப்பதாயிருந்தால் பங்காளிக்கட்சிகளோடு பேசி, தெளிவுபடுத்தி, ஆயத்தப்படுத்தி சேர்ந்து தேர்தலை சந்தித்திருக்கலாம். ஒரு பக்கம் தாடியர் தனக்கு விழும் வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த தேசியக்கூட்டணி என்று பயப்படுகிறார். ஆனால் மக்கள் இங்கே கட்சியின் சின்னத்தில், கூட்டணியில் குறுகிய காலத்தில் புரிதல் இல்லாமல் தடுமாறி தமிழரசுக்கட்சியில் உள்ள வெறுப்பில் பேரினவாதக்காட்சிக்கு வாக்களிக்கும் நிலையை உருவாக்கி தமிழ்த்தேசியத்தை உடைத்த பெருமையை தமிழரசுக்கட்சியின் சிலர் செய்திருப்பதோடு அதை நிஞாயப்படுத்தவும் முயற்சிக்கிறார்கள். ஏற்கெனவே பங்காளிக்கட்சிகளை போடுதடியாக நடத்தியவர்கள் இனிமேல் காலில் போட்டு மிதிப்பதற்காக செய்யப்பட்ட சதிவேலை இது! தங்கள் சதிவேலையை நிறைவேற்றுவதற்காக, சரியான காரணத்தை காலந்தாழ்த்தி அறிவித்து சாதித்திருக்கிறார்கள். இன்று சொல்லி மற்றவர்களை குற்றம் சாட்டுபவர்கள் இதுவரை எங்கே போயிருந்தார்கள் உரிய தரப்பினருடன் ஆலோசிக்காமல். இதெல்லாம் குறுக்கால பாய்ந்து எதிரிக்கு வழிவிடும்  சாணக்கியம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எழுபத்தொன்பது வருடம் அரசியல் செய்த, தமிழ்மக்களின் ஏகோபித்த கட்சி இப்பதான் உண்மையை புரிந்ததாம், அதுவும் முஸ்லிம் கட்சிகளிடமிருந்து. ராஜதந்திரம் என்கிற பெருமை வேற! 

On 15/1/2023 at 08:02, ஈழப்பிரியன் said:

முக்கியமாக ஏன் சுயேட்சைக் குழுவாக கேட்கிறார்கள் என்று தெரியாமல் இருந்துது.

இருந்தபடியே கூட்டாக தேர்தலில் போட்டியிட்டுக்கொண்டு சுயேட்க்ஷையாகவும் இறங்கியிருந்தால் இவ்வளவு குழப்பம், வெறுப்பு வந்திருக்காதே!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

இருந்தபடியே கூட்டாக தேர்தலில் போட்டியிட்டுக்கொண்டு சுயேட்க்ஷையாகவும் இறங்கியிருந்தால் இவ்வளவு குழப்பம், வெறுப்பு வந்திருக்காதே!

இதைத் தான் நெறியாளர் கேட்கும் போது 70 வருட அனுபவசாலிகள் ஆமல்ல என்கிறார்கள்.

ஒரு சின்ன விடயத்திலேயே இவ்வளவு கோட்டை விடுகிறார்கள்.

இவர்களெல்லாம் எமது தலைவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வேண்டுமென்றே பங்காளிக்கட்சிகளை ஓரங்கட்டும், அவமானப்படுத்தும் செயல். செயற்பட்ட விதம் விளக்கத்திற்கு பதிலாக சொன்ன செய்தி. இப்போ கொஞ்சம் மண்டையில ஏறுது, வினயமாக சிறி நேசன் கோரிக்கை வைக்கிறார். ஒருவேளை.... பங்காளிக்கட்சிகள் வென்று தமிழரசுக்கட்சி அவர்களோடு இணைய வந்தால் சுமந்திரனை வெளியில் தூக்கிப்போட்டு விட்டு இணைத்துக்கொள்ளலாம். இவ்வளவு விரிவாக பொதுவெளியில் சொல்ல முடிந்ததை ஏன் அன்று நான்கு சுவருக்குள் அவர்களுக்கு விளக்க முடியவில்லை? அல்லது அதற்குப்பின்தான் காரணத்தை தேடினார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. அவர் சொல்லும்போது சொன்ன ஒரு கருத்து; போன தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கே அதிக வாக்குகள் விழுந்தன அதாவது தாங்கள் தானே வெல்லப்போகிறோம், இந்த முறை  அதிக அனுகூலமாக தங்கள் பக்கம்  பிரச்சார பீரங்கி இருக்கிறார் முழு வாக்குகளையும் அள்ளுவார்    இவர்கள் அதில் எதற்கு பங்காளிகளாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தார்களோ?  இவர்களுக்கு என்ன விளக்கம் கொடுப்பது நாங்கள், இவ்வளவு உதாசீனம் செய்தும் ஓட்டிக்கொண்டு இருபவர்கள்தானே இருந்துவிட்டுப்போகட்டுமேன் என்கிற தெனாவெட்டா? அவர்கள் கேட்டபோது, பத்திரிகைகள் வெளியிட்ட போதுங்கூட மறுதலிக்க காரணம் என்ன? தங்களுடைய சர்வாதிகாரப்போக்கை தங்களோடல்லவா வைத்திருக்க வேண்டும். அவர்கள்தான் மறுத்துவிட்டார்கள் என்று எப்படி குறை கூற முடியும்? அவர்களுக்கும் தன்மானம் உண்டு, அவர்களும்  மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்தானே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை பாக்க முந்தி தாடியரைச் சுற்றி நின்ற ஆட்கள் போல இருக்கிறது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
    • எண்ணையும் 82……85.5…..81.5 என ஏறி இறங்கி விட்டது. இந்த நொட்டல்களை இரு தரப்பும் ஒரு அளவுக்குள் மட்டுப்படுத்தும் என்ற @Justin கூற்று மெய்ப்படுகிறது.
    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.