Jump to content

(VIDEO) கொடூரச் சட்டத்தில் சிக்குண்டு 71 வயதில் விடுதலையான செல்வரத்தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(VIDEO) கொடூரச் சட்டத்தில் சிக்குண்டு 71 வயதில் விடுதலையான செல்வரத்தினம்

on January 11, 2023

 
3N7A9512-scaled.jpg?resize=1200%2C550&ss

வெட்ட வெளி, வெயில் சுட்டெரிக்கிறது. மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகள் ஆங்காங்கே வளந்திருக்கின்ற மரங்களின் நிழலில் நெருக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. நான் தேடிவந்த செல்வரத்தினம் ஐயா மாடுகளை அழைத்துக்கொண்டு இந்தப் பக்கமாகத்தான் வந்திருப்பதாக அவரது மனைவி கூறியிருந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவரை காணாததால் நானும் மரமொன்றைத் தேடி உட்கார்ந்தவாறு அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தேன். நீண்டநேரத்தின் பின்னர் வயதான ஒரு ஐயாவும் இளைஞனொருவனும் வருவதைக் கண்டேன். நான் தேடி வந்தவர் இவர்தான் என்பதை கண்டுணர்ந்து அவரோடு பேச்சுகொடுக்க ஆரம்பித்தேன்.

மூச்சிரைத்தபடி எனது அருகில் உட்கார்ந்தார். “இப்போதெல்லாம் முன்ன மாதிரி நடக்க முடியாது தம்பி. கொஞ்சம் நடந்தாலே மூச்சிரைக்குது. நீண்டநேரம் நிற்கவும் முடியாது.” இரண்டு கைகளையும் பின்பக்கமாக தரையில் ஊன்றியவாறு கால்களிரண்டையும் நீட்டி உட்கார்ந்தார்.

ஏற்கனவே, தொலைபேசி வழியாக செல்வரத்தினம் ஐயாவுடன் பேசியதால் நேரடியாக விசயத்துக்கே வந்தேன். எப்போ ஐயா உங்கள கைதுசெய்தாங்க? எப்ப விட்டாங்க?

“தம்பி, என்னை ரெண்டு தரம் பிடிச்சவங்க. முள்ளிவாய்க்கால் வழியா இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு போய் முகாமல்ல இருந்தப்போ ரி.ஜ.டி. ஆக்கள் என்னை பிடிச்சவங்க. இரண்டு நாள் விசாரணை முடிஞ்ச பிறகு விட்டவங்க. நான் இயக்கத்துல எந்த பிரிவிலயும் எந்த வேலையும் செய்ததில்ல. அவங்க (விடுதலைப் புலிகள்) பங்கர் வெட்ட கூப்புடுவினம். அதுக்குப் போய் உதவி செய்திருக்கன். அவ்வளவுதான். முகாம்ல இருந்து இங்க வீட்டுக்கு வந்த பிறகு வெள்ளை வான் ஒன்டுல ரி.ஐ.டி. ஆக்கள் வந்தவங்க. திரும்பவும் விசாரிக்கனும் என்று கூட்டிட்டுப் போனவங்க 12 வருஷம் கழிச்சுத்தான் விட்டவங்க. 58 வயசுல போய் 70 வயசுல வெளியில வந்திருக்கன் தம்பி. எந்தக் குற்றச்சாட்டும் என் மீது சுமத்தல.”

காய்ந்த நிலத்தையே பார்த்து பேசிக்கொண்டிருந்த அவர் மகனின் முகத்தைத் திரும்பிப் பார்த்தார்.

“கடைசி காலம் வரைக்கும் இவங்களின்ட தயவுலதான் வாழனும். செத்தாலும் இவங்கதான் தூக்கி அடக்கம் செய்யனும். என்னால தனியா ஒன்டுமே செய்ய முடியுதில்ல. இப்படியே பாரமா இருந்திட்டு செத்திட வேண்டியதுதான்.”

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி வாழ்க்கையைத் தொலைத்த பலருள் செல்வரத்தினமும் ஒருவர். முதுமையான வயதில் குடும்பத்தினரோடு வாழவேண்டிய செல்வரத்தினம் போன்ற பலர் இந்தக் கொடூரச் சட்டத்தால் தங்களுடைய எஞ்சிய காலத்தை சிறையிலோ அல்லது விடுதலையின் பின்னர் இறுதி கொஞ்ச காலத்தை உபாதைகளுடனோ கழிக்கவேண்டியிருக்கிறது. குடலில் ஏற்பட்டிருக்கும் தீவிர புண் காரணமாக தொடர்ச்சியான சிகிச்சைகளுக்கு நகரத்தை நோக்கி செல்வரத்தினத்தால் போகவேண்டியிருக்கிறது. “இன்னும் எத்தனை நாள்தான் வாழப்போறன் தம்பி, அதுவரைக்குமாவது இவங்க யாருக்கும் தொந்தரவில்லாம வாழ்ந்திட்டுப் போயிரனும்.”

* பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செல்வரத்தினத்துடனான முழுமையான நேர்க்காணல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
 

https://maatram.org/?p=10579

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.