Jump to content

தமிழரசு வீடு வாடகைக்கு! ஹக்கீம் குடும்பம் குடியேறுகிறது (?)!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு வீடு வாடகைக்கு! ஹக்கீம் குடும்பம் குடியேறுகிறது (?)!!

தமிழரசு வீடு வாடகைக்கு! ஹக்கீம் குடும்பம் குடியேறுகிறது (?)!! மௌன உடைவுகள் – 17

 —- அழகு குணசீலன் —-

2001 இல் தமிழரசு வீட்டுக்காரரையும், அயல் வீட்டுக்காரரையும் புலிகள் ஒரே வீட்டில் கூட்டுக் குடித்தனம் நடத்துங்கள் என்று வலிந்து சொன்னார்கள். அப்போது வீட்டுக்காரருக்கு பெரிய உடன்பாடு இல்லை என்றாலும் மனதிற்குள் நச்சரித்துக்கொண்டு  “ஒற்றுமையின்” உத்தமர்களாக வாய்மூடி இருந்தனர். அது மௌனகாலம்தானே.

அயல் வீட்டுக்கார்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம். எங்களை ஒட்டுக்குழு, முகமூடி, இந்திய, இலங்கை அரச கூலிகள், இரத்தக்கறை படிந்தவர்கள், துரோகிகள் என்றெல்லாம் கூறி அமைப்பையே தடைசெய்து, தலைமைகளை அழித்தவர்கள் இப்போது வெற்றிலை பாக்கு வைத்துஅழைக்கிறார்கள் என்று மட்டிலா மகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டில் கூட்டுக் குடும்பத்தில் பங்காளிகளானார்கள். தங்கள் மீது பூசிய அனைத்து அழுக்குகளையும் பூசியவர்களே கழுவிவிட்டார்கள் என்ற பெருமை. இதைவிடவும் வேறென்ன வேண்டும்…? யார் செய்த புண்ணியமோ..?

குடியேறியதுதான் தாமதம் புலிகள் மாற்றுக் கருத்தாளர்களுக்கு சொன்னவற்றையே இவர்களும்சேர்ந்து, தங்களின் கடந்தகால நிலைமறந்து மற்றைய மாற்றுக் கருத்தாளர்களுக்கும் சொன்னார்கள். ஆயுதப்போராட்டத்தில் சகோதரர்களை அழித்து ஏகபோகத்தை கையில் எடுத்த புலிகள் அரசியலிலும்  இவர்களை மௌனிக்க வைத்து ஏகபோகத்தை எடுத்துக்கொண்டார்கள். தமிழ் மக்களின் ஏகபோக  இராணுவ, அரசியல் ஒரே தலைமை தாங்கள்தான் என்று கூறினார்கள். இவர்களும் ஆமா….ஆமா… சாமியே சரணம் என்றார்கள்.

இப்போது இருபது ஆண்டுகளாக தமிழரசு வாடகை வீட்டில் குடியேறி கூட்டுக்குடும்பம் நடாத்திய ரெலோ, புளட் குடும்பத்தை “பிடரியில் பிடித்து” வெளியே தள்ளியிருக்கிறது தமிழரசு. நாங்கள் இனி தனிக்குடித்தனம் என்கிறது தமிழரசு. இல்லை நாங்கள் கூட்டுக்குடும்பம் தான் தொடர்ந்தும் யாரோடாவது நடாத்தப்போகிறோம் என்கிறார்கள் தலைவர்கள் செல்வமும், சித்தார்த்தனும்.

உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் உங்கள் வீட்டில் இருந்து தேர்தலை எதிர்கொள்வோம் என்ற ரெலோ, புளட் கருத்தை நிராகரித்த வீட்டுக்காரர் அது சரிவராது தேர்தல் காலத்தில் வீட்டில் உங்களுக்கு அலுவல் இல்லை. வேண்டுமானால் தேர்தல் முடிந்த பின்னர் பார்ப்போம் என்கிறார்கள். அதுவும் கதிரைக்கும் பதவிக்கும் அயலவர் உதவி தேவை என்றால் மட்டுமே சாத்தியம். இல்லையேல் தாழ்வாரத்திலும் ஒதுங்க வாய்ப்பில்லை.

இதற்கிடையில் தேர்தலுக்கு பின்னர் ஹக்கீம் குடும்பத்தை வீட்டில் குடியேற்றி கூட்டுக்குடும்பத்தை நடாத்த பிளான் “B” போடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பின்னர் ரெலோ, புளட்கூட்டுக்குடும்ப பிளான் “A” சரிப்பட்டு வராதுவிட்டால் ஹக்கீம் குடும்பம் கை கொடுக்கும். இதனால்தான் வீடு தேர்தலுக்கு பின்னர் வாடகைக்கு விடப்படும் என்று வீட்டு வாசலில் எழுதித் தொங்கவிடப்பட்டுள்ளது. இது பழைய பங்காளிகளை ஏமாற்றும் அறிவிப்பு. இதற்குப் பெயர் “பொறிமுறை”, “தொழில்நுட்பம்”.

ஒருபுறம் தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என்று கோரி உண்ணாவிரதம், மறுபுறம் அதே கோரிக்கையை வைத்து மக்கள் போராட்டம். இதற்கு முற்றிலும் மாறாக இருந்த பங்காளிகளையும் துரத்திவிட்டு வீட்டுக்கதவு தாழ்ப்பாள் போட்டு பூட்டப்பட்டுவிட்டது. இதற்குப் பெயர் தமிழ்த்தேசிய மக்கள் நலன் சார்ந்த கதிரை பொறிமுறை அரசியலாம். ஆனால் ரெலோவுக்கும், புளட்டுக்கும் இது வைக்கப்பட்ட பொறி.

இப்போது வெளியேற்றப்பட்டவர்கள், அவர்கள் என்னத்தைச் சொன்னாலும் நடுரோட்டில் நிற்கிறார்கள். இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று ரெலோவும், புளட்டும் தாம் மூக்குடைபட்ட கதையை தேர்தல் மூலதனமாக்கி தனித்து நின்று மக்களிடம் அனுதாப வாக்கு கேட்பது. மற்றையது ஏற்கனவே விக்கினேஸ்வரன் அணிதிட்டமிட்டுள்ள “மீனில்” இருந்து “மானுக்கு” மாறுகின்ற கூட்டில் மீண்டும் புதிய கூட்டுக் குடித்தனத்தை ஆரம்பிப்பது. இந்த கூட்டிலாவது சேர்ந்தால் மக்கள் கோரிநிற்கின்ற “ஒற்றுமையை” ஏற்றுக்கொண்டதாக ஒரு மாயையை தேர்தலில் ஏற்படுத்தலாம். 

தமிழ்க் காங்கிரஸ் அரசியலில் அதற்கு ஒரு வரலாறு உண்டு. அது சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தனித்து சைக்கிள் ஓடும். இந்த தேர்தலிலும் அதுதான் நடக்கப்போகிறது. ஆனால் அதன் கடும்போக்குக்கு ஈடுகொடுக்க வேண்டிய தேவை இவர்கள் அனைவருக்கும் உண்டு.

முஸ்லீம் காங்கிரஸ்- ஹக்கீம் குடும்பத்திற்கு வீட்டை வாடகைக்கு விடும் திட்டம் இருதரப்பிலும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி தேர்தலில் சேதாரங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான இருதரப்பு தற்பாதுகாப்பு இது. பாராளுமன்ற தேர்தலை விடவும் பிரதேசசபை, மாகாணசபைத் தேர்தல்கள் கிழக்கில் தமிழ் மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் முக்கிமானவை. இரு சமூகத்தினதும் வாழ்வாதாரங்களோடு தொடர்புபடட்டவை. இதை ஹக்கீம் விளங்கிக்கொள்கிறார் இல்லை என்ற குற்றச்சாட்டு முஸ்லீம்களிடமும், தமிழ்த் தேசியகூட்டமைப்பு – தமிழரசு  சம்பந்தர், மாவை கிழக்கு மக்களின் நிலையை விளங்கிக்கொள்கிறார்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்களிடமும் உள்ளது.

கிழக்கில் முஸ்லீம் காங்கிரஸ் சந்தித்துள்ள பின்னடைவையும், உள்ளக மோதல்களையும் சமாளிக்க யாரை அண்டப்புழுகன், ஆகாசப்புழுகன் – என்ட வாப்பா அவன் கையைப்பிடித்து கொஞ்சின கொஞ்சில என்ற கை தேய்ஞ்சி போச்சிகா…. என்றவர் ஹக்கீம். அவர் அதே ஹிஸ்புல்லாவை தேடுகிறார். அதே போல் இவனுக்கெல்லாம் எதுக்குகா பச்சைசால்வை என்று கேட்ட ஹிஸ்புல்லா ஹக்கீமை சந்திக்கிறார். கிழக்கில் கட்சி அதிருப்தியாளர்களைச் சமாளிக்க ஹக்கீமுக்கு வேறுவழியில்லை.

கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவியை இதனால்தான் கூட்டமைப்பு எந்த நிபந்தனையும் இன்றி முஸ்லீம் காங்கிரஸ்க்கு தாரை வார்த்தது என்று கிழக்கு தமிழ் மக்கள் கருதுகிறார்கள். இந்த தவறு இனிமேலும் தொடரக்கூடாது என்பது மக்களின் நிலைப்பாடு. ஆனால் இன்றைய நிலைமை அதேபோன்ற சூழலை மீண்டும் பிரதேசசபைகளில் ஏற்படுத்துமா? என்ற சந்தேகம் கிழக்கு தமிழ் மக்களுக்கு ஏற்படுகிறது.

ரெலோவையும், புளட்டையும் திட்டமிட்டு தேர்தலுக்கு முன் வெளியேற்றி விட்டு தேர்தலுக்கு பின் முஸ்லீம் காங்கிரஸை  எந்த நிபந்தனையும் இன்றி -முற்பணம் கூட இல்லாமல்  வீட்டில் குடியேற்றிவிடுவார்களோ …? என்ற கடந்த கால அனுபவரீதியான நியமான அச்சம் இது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் ஒன்று நடக்குமா? இல்லையா என்பதை குறித்து திட்டவட்டமாக கூறமுடியாத நிலையே காணப்படுகிறது. ஆனால் தேர்தல் குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பானது அரசாங்கத்தின் மீதான எதிர்த்தரப்பின் கவனத்தை இரவோடிரவாக கதிரைகளின் பக்கம் திருப்பிவிட்டுள்ளது. காலிமுகத்திடல், ராஜபக்சாக்கள், ரணில் தனிநபர் ஜனாதிபதி என்றவற்றை எல்லாம் மறந்தும், சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளை மறந்தும் சகலரும் தேர்தலை குறிவைத்து செயற்படுகின்றனர். கட்சிகளின் ஒவ்வொரு நகர்வும் அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் தேர்தல் மந்திரத்தையே ஓதுகிறது.

பெரும்பான்மை தரப்பினரும், சிறுபான்மைத் தரப்பினரும் இனப்பிரச்சினைக்கான தீர்வைக்கூட ஒரு தேர்தல் வியூகமாக கையாள்வது தெரிகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடிவுகள் இல்லாத சந்திப்புக்களை நடாத்திக்கொண்டிருக்கிறார், சிங்கள கடும்போக்காளர்கள் அவரின் முடிவைப் பொறுத்து தமது ரியாக்ஷனுக்காக காத்திருக்கிறார்கள். தமிழ்த் தேசிய கடும்போக்காளர்களின் கோரிக்கை வலுக்கிறது. இதன்மூலம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணிக்கு வடக்கில் காற்று வசதியாக வீசுகிறது. இதற்காகவே விக்கினேஸ்வரன் தரப்பும் தமது கோரிக்கைகளை இறுக்குகிறது. 

இவற்றை எதிர் கொள்ள தனிக்குடித்தனம் நடாத்தும் தமிழரசு படாதபாடு படுகிறது இதனாலேயே பேச்சுக்கள் பற்றிய ஊடகச் சந்திப்புக்களில் சுமந்திரன் எதிர்மறையான – நம்பிக்கை அற்றவராக கருத்துக்களை வெளியிடுகிறார். இது வருகின்ற தேர்தலில் தங்களின் “சாணக்கியத்தை” தக்கவைக்கும் என்று அவர் நினைக்கிறார்.

ரணில் ஏமாற்றிவிட்டார் என்ற அறிவிப்பை தமிழரசு விரைவில் – தேர்தல் நெருங்கும் போது வெளிப்படுத்தும்….!

அப்போது ரணிலின் வீட்டில் இருந்து இவர்கள் தானாக வெளியேறுவார்கள்…!  பாராளுமன்ற பழக்கதோசம்…!!

ஆனால் ரணில் எங்களை ஏமாற்றித் துரத்திவிட்டார்… இது எங்களுக்கு எப்பவோ தெரியும் அதனால்தான் அப்பவே சொன்னோம் என்பார்கள்..!

இதைவிட வேறென்ன அரசியல் சாணக்கியம் வேண்டும்…?

இந்த வெளியேற்றம் எப்போது….?

பொங்கலுக்கா…? 

சுதந்திரதினத்துக்கா….?

தேர்தலின்போதா….?   

அந்த…. அவனுக்கே வெளிச்சம்….!

 

 

https://arangamnews.com/?p=8547

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.