Jump to content

நடுக்கடலில் பழுதான படகு, அறுந்த நங்கூரம், ஆளில்லா தீவு: ஒரு மாதம் போராடி உயிர் தப்பிய தமிழ்நாடு மீனவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடுக்கடலில் பழுதான படகு, அறுந்த நங்கூரம், ஆளில்லா தீவு: ஒரு மாதம் போராடி உயிர் தப்பிய தமிழ்நாடு மீனவர்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அஷ்ரப் படானா
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 15 ஜனவரி 2023, 11:20 GMT
    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
தீவில் தவித்த தமிழக மீனவர்கள்

பட மூலாதாரம்,ALAMY

எடிசன் டேவிஸ் மற்றும் அகஸ்டின் நெமஸ் ஆகியோர் இந்தியாவின் தெற்கு கரையில் இருந்து கடந்த நவம்பர் 27ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் செல்வதற்கு முன்பாக, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் திரும்பி விடுவோம் என்று தங்கள் குடும்பத்தாருக்கு உறுதி அளித்துவிட்டு சென்றனர். 

ஆனால், வாரக் கணக்கில் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

 

அரபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்று, சுமார் மூன்று வாரங்களுக்கு நெடுந்தொலைவு கப்பலில் பயணம் செய்த 15 மீனவர்கள் குழுவில் இவர்கள் இருவரும் இருந்தனர். 

பொதுவாக மீனவர்கள் கடலில் நாள் கணக்கில் செலவிடுவார்கள் என்பதால் தொடக்கத்தில் இருவரின் குடும்பத்தினரும் பதற்றம் அடையாமல்தான் இருந்தனர். 

ஆனால்,  கிறிஸ்துமஸ் பண்டிகையே வந்து சென்றும் அவர்கள் திரும்பாதது குடும்பத்தினரை பயம்கொள்ள செய்தது. 2017ஆம் ஆண்டில் கோரத் தாண்டவம் ஆடி மீனவர்கள் இறப்புக்கு காரணமான ஒக்கி புயலின் நினைவுகள் அவர்களின் மனதில் வந்து சென்றன. 

அதேபோன்ற நிலை எதாவது எடிசன் டேவிஸ் மற்றும் அகஸ்டின் நெமஸ் ஆகியோருக்கு ஏற்பட்டிருக்குமோ என்று அவர்களின் குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால், இருவரும் ஜனவரி 2ஆம் தேதி வீடு திரும்பினர்.

 

அவர்கள் சென்ற படகின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால், இந்தியப் பெருங்கடல் பகுதியில் யாருமற்ற  தீவில் அவர்கள் ஒதுங்கினர். பல நாட்களை அவர்கள் அங்கு செலவிட்ட நிலையில், இறுதியாக அவ்வழியாக சென்ற பிரிட்டிஷ் கப்பல் மூலம் அவர்கள் மீட்கப்பட்டனர்.

எப்போது மீட்கப்படுவோம் என்பது குறித்து எவ்வித நம்பிக்கையும் இல்லாத நிலையில்,  இளநீர் போல, தீவில் கிடைத்தவற்றை வைத்து உயிர் பிழைத்து இருந்துள்ளார்கள் அந்த மீனவர்கள்.

தமிழ்நாட்டின் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக அவர்கள் க்ரிஷா மோல் என்ற படகில் கடலுக்கு சென்றுள்ளனர்.  ஆனால், 7வது நாளில் அவர்கள் படகின் எஞ்சினில் பழுது ஏற்பட்டதால் படகு  கடலுக்குள் நெடுந்தொலைவு செல்லத் தொடங்கியது. இலங்கை படகு ஒன்று வரும்வரை 5 நாட்களுக்கு இந்த நிலை தொடர்ந்தது. 

  “அந்த படகில் இருந்த குழுவினர், நீரின் ஆழம் 8 அடியாக இருக்கும் பகுதிக்கு  எங்களின் படகை இழுத்தனர். நாங்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக நினைத்து அங்கு நங்கூரத்தை பாய்ச்சினோம்  ” என்று பிபிசியிடம் கூறுகிறார் நெமஸ்.

தீவில் தவித்த தமிழக மீனவர்கள்

பட மூலாதாரம்,VIVEK R NAIR

 
படக்குறிப்பு,

அகஸ்டின் நெமஸ்

இலங்கை படகுகள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி கிடையாது என்பதால், அப்பகுதி வழியாக செல்லும் இந்திய மீனவப் படகுகளிடம் உதவிக் கோர வயர்லெஸ் செய்தி அனுப்புமாறு இருவருக்கும் அவர்கள் அறிவுறுத்தினர்.

மூன்று நாட்களுக்கு பிறகு ஒரு படகு இவர்களுக்கு பதிலளித்தது. 

எனினும், எடிசன் டேவிஸ் மற்றும் அகஸ்டின் நெமஸ் ஆகியோரின் படகுகளை கரைக்கு இழுத்து செல்லும் அளவுக்கு அந்த படகின் எஞ்சின் திறன் வாய்ந்ததாக இல்லை. அந்தக் குழுவில் இருந்த க்ரிஷா மோல் படகின் உரிமையாளர், படகின் கியர்பாக்ஸை எடுத்துக்கொண்டு அதை சரிசெய்வதற்காக இந்தியப் படகுடன் புறப்பட்டார். மீனவர்கள் தங்கள் படகை உறுதியாகப் பிணைத்து,  அது அலைபாய்வதை தடுக்கும் வகையில், குழுவினர் தங்கள் நங்கூரத்தை விட்டுச் சென்றனர்.

ஆனால், டிசம்பர் 19ஆம் தேதி ஏற்பட்ட திடீர் காற்றினால் நங்கூரம் ஒன்றின் கயிறு அறுந்தது.  மூன்று நாட்கள் கழித்து 2வது நங்கூரத்தின் கயிறும் அறுந்தது. இதனால், படகு மீண்டும் கடலில் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. 

 “கடலின் நடுவில் நம்மால் கடவுளை பிரார்த்திக்க மட்டுமே முடியும். அது எங்களை எங்கு அழைத்துச் செல்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்றும் கூறும் நெமஸ் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் குறித்து நினைத்துகொண்டதாகவும் தெரிவிக்கிறார். 

படகில் இருந்த திசை காட்டும் கருவியை அவர்கள் பார்த்தனர். 

 “29 நாட்டிக்கல் மைல் தூரத்தில் ஒரு தீவு இருப்பதை ஜிபிஎஸ் எங்களுக்கு காட்டியது,” என்று டேவிஸ் கூறினார். பிரிட்டிஷ் இந்திய பெருங்கடலில் உள்ள சாலமோன் தீவுகளில் அது அமைந்துள்ளது. 

தீவில் தவித்த தமிழக மீனவர்கள்

பட மூலாதாரம்,VIVEK R NAIR

 
படக்குறிப்பு,

எடிசன் டேவிஸ்

இதனிடையே தங்கள் படகுடன் இணைக்கப்பட்டிருந்த சிறிய மரப் படகில் அரிசி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு 9 மீனவர்கள் தீவை நோக்கி சென்றதாக டேவிஸ் தெரிவித்தார்.   

மீதி 5 பேர் தாய்ப் படகிலேயே காத்திருந்தனர்.

9 பேரை ஏற்றிச் சென்ற சிறிய படகு, தீவை அடைந்த பிறகு அவர்களில் இரண்டு பேர் அந்த சிறிய படகை எடுத்துக்கொண்டு தாய்ப் படகில் காத்திருந்த 5 பேரை மீட்பதற்காக திரும்பிச் சென்றனர்.

ஆனால், அதற்குள் தாய்ப் படகு மேலும் விலகி எங்கோ சென்றுவிட்டது.

“ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகுதான் நாங்கள் படகை கண்டுபிடித்தோம்” என்று டேவிஸ் குறிப்பிட்டார். 

பிறகு அதில் இருந்த ஐந்து பேரை ஏற்றிக்கொண்டு தீவுக்குச் செல்ல அவர்களுக்கு 5 மணி நேரம் பிடித்தது.

ஒரு வழியாக அவர்கள் 14 பேரும் தீவை அடைந்தனர். இப்போது அவர்கள் முன்பு புதிய சவால் இருந்தது. இருக்கும் குறைந்த அளவிலான பொருட்களை வைத்து அந்தத் தீவில் எப்படி வாழ்வது என்பதுதான் அது.

10 நாட்களுக்கு போதுமான உணவுப் பொருட்கள் மட்டுமே அவர்களிடம் இருந்தது. குடிக்க தண்ணீர் கிடையாது. 

எனவே, இயற்கையின் உதவியை அவர்கள் நாடினர். சமைப்பதற்கு கடல் நீரை பயன்படுத்தினர். தாகமெடுத்தால் தென்னை மரங்களில் இருந்த இளநீரை பருகினர். மழை பெய்யும்போது, பிளாஸ்டிக் கவரை தரையில் விரித்து மழை நீரை அதில் சேமித்து பின்னர் கேன்களில் அடைத்து குடிக்க பயன்படுத்தினர். 

“சாவை நேருக்கு நேர் சந்திப்பது போல் நான் உணர்ந்தேன். நாங்கள் சரியாக தூங்கவில்லை.  மிகவும் சிக்கனமாகவே சமைத்து உண்டோம் ” என்று நெமஸ் கூறினார். 

எங்களிடம் இருந்த பொருட்கள் எப்போது வேண்டுமானாலும் தீர்ந்துபோகலாம் என்று நாங்கள் பயந்தோம். நாங்கள் எங்கு இருக்கிறோம் , இன்னும் எத்தனை நாட்கள் அங்கு சிக்கி இருக்க போகிறோம் என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. 

தீவில் தவித்த தமிழக மீனவர்கள்

பட மூலாதாரம்,AFP

ஐந்து நாட்கள் கழித்து, டிசம்பர் 27ஆம் தேதி, அவர்கள் சிக்கியிருந்த தீவில் இருந்து சிறிது தொலைவில் பிரிட்டிஷ் கப்பல் செல்வதை அவர்கள் பார்த்துள்ளனர். பரவசமடைந்த  மீனவர்கள், சிவப்பு துணி ஒன்றை மரத்தின் கிளையில் கட்டி தொங்கவிட்டு உதவி கோரியுள்ளனர். 

“கப்பலில் இருந்த குழுவினரின் கவனத்தை ஈர்க்க எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் முயன்றோம். 2 மணி நேரம் கழித்து தண்ணீர் மற்றும் கூடை நிறைய பழங்களுடன் 4 பேர் எங்களை அணுகினர். நாங்கள் நலமாக இருக்கிறோமா என்று அவர்கள் கேட்டனர்,” என்று டேவிஸ் தெரிவித்தார். பின்னர், சிறிய படகில் மீனவர்களை அவர்கள் கப்பலுக்கு அழைத்து சென்றனர். 

நீண்ட நாட்களுக்குப் பிறகு கப்பலில் அவர்கள் குளித்தனர். அவர்களின் உடல்நலத்தை பரிசோதித்த குழுவினர் அவர்களுக்கு பழங்கள், ஆடைகள் போன்றவற்றை வழங்கினர். 

ஜனவரி 2ம் தேதி,  விழிஞ்சம் துறைமுகத்தில் வைத்து மீனவர்களை அந்த குழுவினர் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களின் அடையாளங்களை சரிபார்ப்பது மற்றும் இன்ன பிற நடைமுறைகள் முடிய ஒரு நாள் ஆனது. அதன் பின்னர், குடும்பத்தினருடன் அவர்கள் சேர்ந்தனர். 

“நான் வீடு திரும்பியபோது, என் குழந்தைகள்  என்னை கட்டிப்பிடித்து என்ன நடந்தது” என்று கேட்டார்கள் 

“அவர்களிடன் கூற என்னிடம் விசித்திர கதையே இருந்தது. எத்தனை முறை திரும்ப திரும்ப சொன்னேன் என்று தெரியவில்லை. அந்த தொலைதூர தீவில் நாங்கள் சிக்கித் தவித்தபோது, நாங்கள் வீடு திரும்புவோம் என்று யாரும் நினைக்கவில்லை, ”என்று அவர் மேலும் கூறினார். ”

இந்த அனுபவம் தன்னை உலுக்கியதாக கூறும் நெமஸ் இனி குறைந்த தூரத்தில் உள்ள பகுதிகளிலேயே மீன் பிடிக்கப்போவதாக தெரிவித்தார். 

“இதுதான் என் வேலை, இதுதான் என் விதி” என்றும் அவர் கூறினார். 

https://www.bbc.com/tamil/articles/c1ew0gd59jeo

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் வாசித்த ரோபின்சன் குருசோ கதை, பின்னர் வெளிவந்த காஸ்ட்எவே திரைப்படம் போல நிஜ கதை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2023 at 06:00, goshan_che said:

சிறு வயதில் வாசித்த ரோபின்சன் குருசோ கதை, பின்னர் வெளிவந்த காஸ்ட்எவே திரைப்படம் போல நிஜ கதை.

நம்ம ஊர் டீம் ஒன்று லண்டனுக்கு சொந்தமான தீவில் இருந்து போன வருடம் இறுதியில் ஊருக்கு வந்தது அவர்கள் வெளிநாட்டுக்கென படகு ஏறியவர்கள் மீதமானவர்கள் அந்த தீவிலே இருப்பதாகவும் அது ஒரு ஆர்மி பேஸ் எனவும் சொன்னார்கள் 

தங்குமிடம் சாப்பாடு மட்டுமே கொடுத்தார்களாம் மருத்துவ வசதி குறைவு எனவும் விரும்பியவர்களை அவரவர் நாட்டுக்கு அனுப்பி விடுகிறோம் என சொல்ல இவர்கள் வந்து விட்டார்கள் ஒரு தொகை பணத்தை பெற்று .

ஆனால் போனவர்களுக்கு அந்த தீவின் பெயர் இதுவரை சரியாக தெரியவில்லை ஆனால் அவர்களுக்கு மொழி பெயர்ப்பு செய்ய வந்த பெண்மணி யாழ்பாணத்தை சேர்ந்தவராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி மாறன் போல யாராவது ஒரு இயக்குனர் இதை படமாக எடுத்தால்.. இதே வெள்ளைக்காரன் கையில் இப்படி ஒரு கதை கிடைத்தால் வேறு லெவலில் இருக்கும் படம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம ஊர் டீம் ஒன்று லண்டனுக்கு சொந்தமான தீவில் இருந்து போன வருடம் இறுதியில் ஊருக்கு வந்தது அவர்கள் வெளிநாட்டுக்கென படகு ஏறியவர்கள் மீதமானவர்கள் அந்த தீவிலே இருப்பதாகவும் அது ஒரு ஆர்மி பேஸ் எனவும் சொன்னார்கள் 

தங்குமிடம் சாப்பாடு மட்டுமே கொடுத்தார்களாம் மருத்துவ வசதி குறைவு எனவும் விரும்பியவர்களை அவரவர் நாட்டுக்கு அனுப்பி விடுகிறோம் என சொல்ல இவர்கள் வந்து விட்டார்கள் ஒரு தொகை பணத்தை பெற்று .

ஆனால் போனவர்களுக்கு அந்த தீவின் பெயர் இதுவரை சரியாக தெரியவில்லை ஆனால் அவர்களுக்கு மொழி பெயர்ப்பு செய்ய வந்த பெண்மணி யாழ்பாணத்தை சேர்ந்தவராம்.

Guadeloupe அல்லது Réunion என்று நினைக்கிறேன்

இவை பிரெஞ்சு காலணித்துவ நாடுகள். 

இங்கிருந்து தான் விருப்பங்களின் அடிப்படையில் திருப்பி அனுப்புவார்கள்

நீங்கள் எந்த நாட்டில் தஞ்சம் புகுந்தாலும் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் 

ஐ.நா விதிகளை ஏற்ற நாடுகள் என்ற வரிசையில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம ஊர் டீம் ஒன்று லண்டனுக்கு சொந்தமான தீவில் இருந்து போன வருடம் இறுதியில் ஊருக்கு வந்தது அவர்கள் வெளிநாட்டுக்கென படகு ஏறியவர்கள் மீதமானவர்கள் அந்த தீவிலே இருப்பதாகவும் அது ஒரு ஆர்மி பேஸ் எனவும் சொன்னார்கள் 

தங்குமிடம் சாப்பாடு மட்டுமே கொடுத்தார்களாம் மருத்துவ வசதி குறைவு எனவும் விரும்பியவர்களை அவரவர் நாட்டுக்கு அனுப்பி விடுகிறோம் என சொல்ல இவர்கள் வந்து விட்டார்கள் ஒரு தொகை பணத்தை பெற்று .

ஆனால் போனவர்களுக்கு அந்த தீவின் பெயர் இதுவரை சரியாக தெரியவில்லை ஆனால் அவர்களுக்கு மொழி பெயர்ப்பு செய்ய வந்த பெண்மணி யாழ்பாணத்தை சேர்ந்தவராம்.

அந்த தீவின் பெயர் டியகோ கார்சியா…

பிரிட்டன் வைத்திருந்து பின்னர் அமெரிக்காவுக்கு பேஸ் அமைக்க வாடகைக்கு கொடுத்திருக்கு.

இங்கே இருந்த மக்களை வேரறுத்து சீசெல்ஸ், மாலதீவு என அனுப்பினார்கள். வழக்கு அண்மையில்தான் முடிந்தது.

சொந்த நிலம் மீளும் அம்மக்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை.

https://ta.m.wikipedia.org/wiki/தியேகோ_கார்சியா

 

28 minutes ago, விசுகு said:

Guadeloupe அல்லது Réunion என்று நினைக்கிறேன்

இவை பிரெஞ்சு காலணித்துவ நாடுகள். 

இங்கிருந்து தான் விருப்பங்களின் அடிப்படையில் திருப்பி அனுப்புவார்கள்

நீங்கள் எந்த நாட்டில் தஞ்சம் புகுந்தாலும் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் 

ஐ.நா விதிகளை ஏற்ற நாடுகள் என்ற வரிசையில் 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வெற்றி மாறன் போல யாராவது ஒரு இயக்குனர் இதை படமாக எடுத்தால்.. இதே வெள்ளைக்காரன் கையில் இப்படி ஒரு கதை கிடைத்தால் வேறு லெவலில் இருக்கும் படம்..

அப்படியான படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்  சில படங்கள் பார்த்தேன் ( ஆங்கில) பெயர்கள் நியாபகம் இல்லை

 

7 hours ago, விசுகு said:

Guadeloupe அல்லது Réunion என்று நினைக்கிறேன்

இவை பிரெஞ்சு காலணித்துவ நாடுகள். 

இங்கிருந்து தான் விருப்பங்களின் அடிப்படையில் திருப்பி அனுப்புவார்கள்

நீங்கள் எந்த நாட்டில் தஞ்சம் புகுந்தாலும் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் 

ஐ.நா விதிகளை ஏற்ற நாடுகள் என்ற வரிசையில் 

ம் ஆனால் அவர்களோ அங்கு வரவேண்டாம் எனவும் வேற நாடுகளுக்கு செல்ல சகல உதவிகளையும் செய்து த்ருகிறோம்  எனகூறி படகை ஆறு மணி நேரம் காக்க வைத்துள்ளார்கள் ஆனால் இவர்களோ இனிமேலும் கடலில் பயணம் செய்ய முடியாது உணவும் தீர்ந்து விட்டது என பெண்கள் அழுக  உள்ளே எடுத்தார்கள் என சொன்னார்கள்   

 

7 hours ago, goshan_che said:

அந்த தீவின் பெயர் டியகோ கார்சியா…

பிரிட்டன் வைத்திருந்து பின்னர் அமெரிக்காவுக்கு பேஸ் அமைக்க வாடகைக்கு கொடுத்திருக்கு.

இங்கே இருந்த மக்களை வேரறுத்து சீசெல்ஸ், மாலதீவு என அனுப்பினார்கள். வழக்கு அண்மையில்தான் முடிந்தது.

சொந்த நிலம் மீளும் அம்மக்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை.

இதே போலதான் எதோ பெயர் சொன்னார்கள் பல நநூறு ஈழத்தவர்கள் அதாவது 2 வருடங்களுக்கு முன்னர் வந்தவர்கள் கூட அந்த தீவில் இருப்பதாகவும் சொன்னார்கள் அவர்களை மீள எடுக்க மாட்டார்களா அம்மக்களின் நிலை  வெளித்தொடர்பு முற்றிலும் இல்லாததாக சொன்னார்களே அது எப்படி ? இவர்கள் ஊர் வந்த போதே தெரியும் அவர்கள் ஏதோ ஓர் இடத்தில் இருந்திருக்கிறார்கள் என 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியான படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்  சில படங்கள் பார்த்தேன் ( ஆங்கில) பெயர்கள் நியாபகம் இல்லை

 

ம் ஆனால் அவர்களோ அங்கு வரவேண்டாம் எனவும் வேற நாடுகளுக்கு செல்ல சகல உதவிகளையும் செய்து த்ருகிறோம்  எனகூறி படகை ஆறு மணி நேரம் காக்க வைத்துள்ளார்கள் ஆனால் இவர்களோ இனிமேலும் கடலில் பயணம் செய்ய முடியாது உணவும் தீர்ந்து விட்டது என பெண்கள் அழுக  உள்ளே எடுத்தார்கள் என சொன்னார்கள்   

 

இதே போலதான் எதோ பெயர் சொன்னார்கள் பல நநூறு ஈழத்தவர்கள் அதாவது 2 வருடங்களுக்கு முன்னர் வந்தவர்கள் கூட அந்த தீவில் இருப்பதாகவும் சொன்னார்கள் அவர்களை மீள எடுக்க மாட்டார்களா அம்மக்களின் நிலை  வெளித்தொடர்பு முற்றிலும் இல்லாததாக சொன்னார்களே அது எப்படி ? இவர்கள் ஊர் வந்த போதே தெரியும் அவர்கள் ஏதோ ஓர் இடத்தில் இருந்திருக்கிறார்கள் என 

விபரம் தெரியவில்லை. ஆனால் சிலரை மருத்துவ சிகிச்சைக்காக உகண்டா அனுப்பியதாக செய்தி வந்தது. பிரித்தானிய உரிமை என்றாலும் ஆளுகை அமெரிக்காவினது.  

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.