Jump to content

ஜேர்மனியுடனான எரிவாயுப் போரில் புடின் தோற்றுவிட்டார்! ஜேர்மனி தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போரில் புடின் தோற்றுவிட்டார்! ஜேர்மனி தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு

11-12.jpg

உக்ரைனுடனான போரில் புடினுக்கு வெற்றியா தோல்வியா என்பது இன்னமும் முடிவாகவில்லை. ஆனால், ஜேர்மனியுடனான போரில் புடின் தோற்றுவிட்டார் என்கிறது ஜேர்மன் தரப்பிலிருந்து எழுந்துள்ள ஒரு குரல்.

ஜேர்மனியைக் கைவிட்ட புடின்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதித்தது. ஜேர்மனிக்கும் வேறு வழியில்லை, ஆகவே, ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துகொண்டது. ஆனால், அதற்காக ஜேர்மனியை தண்டிக்க முடிவு செய்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.

ஆகவே, தங்கள் எரிவாயுவை அதிகம் சார்ந்திருந்த ஜேர்மனியைக் கைகழுவினார் புடின். அவரது முடிவு ஜேர்மனியில் பதற்றத்தை உருவாக்கியதை மறுப்பதற்கில்லை. குளிர்காலத்தை எப்படி சமாளிக்கப்போகிறோமோ என்ற பயம் பொதுமக்களுக்கும், அரசுக்கும் இருந்தது.

ஜேர்மனியுடனான போரில் புடின் தோற்றுவிட்டார்

ஆனால், ஜேர்மனியுடனான எரிவாயுப் போரில் புடின் தோற்றுவிட்டார். ஆம், அவர் கைவிட்டபோதிலும் ஜேர்மனி சமாளித்துக்கொண்டது.

Gazprom நிறுவனத்திலிருந்து எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டு ஐந்து மாதங்களாகிறது. ஆனாலும், ஜேர்மன் மக்கள் குளிரில் உறைந்துபோய்விடவில்லை.

அவர்களுடைய தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை அவர்களுக்கு உருவாகவும் இல்லை. இன்னமும் கைவசம் போதுமான எரிவாயுவும் உள்ளது.

ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால் அது நம்மைப் பழிவாங்கிவிடுமென்ற பயமும் ஜேர்மன் அரசியல்வாதிகளுக்கு இல்லை. ஆக, ஜேர்மனியுடனான எரிவாயுப் போரில் தோற்றுவிட்டார் புடின்.

எனவே, அடுத்து உக்ரைன் அவரைத் தோற்கடிப்பதற்காக உக்ரைனுக்கு தனது ஆதரவை அதிகப்படுத்திவருகிறது ஜேர்மனி.

 

https://akkinikkunchu.com/?p=235509

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

போரில் புடின் தோற்றுவிட்டார்! ஜேர்மனி தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு

வெற்றி தோல்வியை பற்றி தெரியவில்லை.
ஆனால் பொது மக்கள் வரி ஏற்றங்களையும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றங்களையும் தாங்கமுடியாமல் தவிக்கின்றார்கள்.

இருந்தாலும் ரஷ்ய எரிவாயு ஜேர்மனிக்கு வந்துகொண்டு தான் இருக்கின்றது. வேறு விற்பனையாளர் மூலம்......😎

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

போரில் புடின் தோற்றுவிட்டார்! ஜேர்மனி தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு

11-12.jpg

உக்ரைனுடனான போரில் புடினுக்கு வெற்றியா தோல்வியா என்பது இன்னமும் முடிவாகவில்லை. ஆனால், ஜேர்மனியுடனான போரில் புடின் தோற்றுவிட்டார் என்கிறது ஜேர்மன் தரப்பிலிருந்து எழுந்துள்ள ஒரு குரல்.

ஜேர்மனியைக் கைவிட்ட புடின்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதித்தது. ஜேர்மனிக்கும் வேறு வழியில்லை, ஆகவே, ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துகொண்டது. ஆனால், அதற்காக ஜேர்மனியை தண்டிக்க முடிவு செய்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.

ஆகவே, தங்கள் எரிவாயுவை அதிகம் சார்ந்திருந்த ஜேர்மனியைக் கைகழுவினார் புடின். அவரது முடிவு ஜேர்மனியில் பதற்றத்தை உருவாக்கியதை மறுப்பதற்கில்லை. குளிர்காலத்தை எப்படி சமாளிக்கப்போகிறோமோ என்ற பயம் பொதுமக்களுக்கும், அரசுக்கும் இருந்தது.

ஜேர்மனியுடனான போரில் புடின் தோற்றுவிட்டார்

ஆனால், ஜேர்மனியுடனான எரிவாயுப் போரில் புடின் தோற்றுவிட்டார். ஆம், அவர் கைவிட்டபோதிலும் ஜேர்மனி சமாளித்துக்கொண்டது.

Gazprom நிறுவனத்திலிருந்து எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டு ஐந்து மாதங்களாகிறது. ஆனாலும், ஜேர்மன் மக்கள் குளிரில் உறைந்துபோய்விடவில்லை.

அவர்களுடைய தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை அவர்களுக்கு உருவாகவும் இல்லை. இன்னமும் கைவசம் போதுமான எரிவாயுவும் உள்ளது.

ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால் அது நம்மைப் பழிவாங்கிவிடுமென்ற பயமும் ஜேர்மன் அரசியல்வாதிகளுக்கு இல்லை. ஆக, ஜேர்மனியுடனான எரிவாயுப் போரில் தோற்றுவிட்டார் புடின்.

எனவே, அடுத்து உக்ரைன் அவரைத் தோற்கடிப்பதற்காக உக்ரைனுக்கு தனது ஆதரவை அதிகப்படுத்திவருகிறது ஜேர்மனி.

 

https://akkinikkunchu.com/?p=235509

 

ஜி,

இந்த அக்கினி குஞ்சை நீங்களா நடத்துறிங்க.

@குமாரசாமி @தமிழ் சிறிஅண்ணையளுக்கு  காலங்காத்தால கடுப்பை கிளப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த இணையதளம் நடத்தபடுவது போல் தெரிகிறது 🤣.

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் ரொம்ப தாமதமாக இந்த ஆயுதத்தை  பாவித்தார்

அதற்கு முன்பே ஐரோப்பா

டீசல்  பெற்றோல்  எரிவாயுலிருந்து விடுதலை  பெற தொடங்கிவிட்டார்கள்

புட்டின்  பெரிய தடி  என்று வைத்திருந்ததை  இவர்கள் குச்சியாக்கி  கன நாளாச்சு...

பாவம்  இது தெரியாமல்?

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொரு வருடமும் மே, ஜூன் மாதங்களிலிருந்து தங்கள் எரிவாயு தாங்கிகளை நிரப்பத் தொடங்குவார்கள். நவம்பர் மாத இறுதியில் எரிவாயு வாங்குவதைப் பெருமளவு குறைப்பார்கள். இதன்படி ஒரு மாதத்திற்கு முன்னர் ஜேர்மனியின் உள்நாட்டு தாங்கிகள் 95 வீதம் நிரப்பப்பட்டு விட்டது. ஓகஸ்ட் மாதத்தில் எரிவாயுவின் சந்தை உச்ச அளவில் இருந்துள்ளது.  ஒரு MWh எரிவாயு 340 ஈரோவுக்குப் போனது. இப்போது இதன் விலை 70 ஈரோக்கள் மட்டுமே.

உக்ரெயின் போரினால் ஏற்பட்ட நெருக்கடியால் அதிக விலை கொடுத்து தாங்கிகளை நிரப்ப வேண்டி வந்தது. இதனைப் பயன்படுத்தியே ரஸ்யா வழமைக்கு அதிகமான இலாபம் ஈட்டியது. ரஸ்யாவின் போர்ச் செலவின் பெரும் பகுதியை இந்த இலாபம் ஈடு செய்தது. இவ்வாறு கொள்ளை இலாபம் இனிமேலும் அடையாமல் இருக்கவே வருடம் முழுவதும் ஓரளவு சீரான முறையில் விலை இருகவேண்டும் என்பதற்காக எரிவாயுவின் அதிகபட்ச சந்தை விலையை மட்டுப்படுத்துகிறார்கள்.

இன்னும் 6 மாதத்தில் ரஸ்யா எரிவாயுப் போரில் வெற்றியா தோல்வியா என்பது தெரியவரும். இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகள் மாற்றீடுகளை உருவாக்கி வருகின்றன.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது சனநாயக்த்தின் காவலர்கள் யாரும் போரைப்பற்றியோ அல்லது இழப்புகள் பற்றியோ அழுவது கிடையாது. நாட்செல்லச் செல்ல, போரின் உண்மையான கோர முகத்தைக் கண்டு அமைதி காக்கத் தொடங்கிவிட்டனர். 

வேடிக்கை என்னவென்றால், ரஸ்யா எந்தவொரு இடத்திலும் எரிவாயு ஏற்றுமதியை மட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ இல்லை. மாறாக, தன் மீது தடைகளை விதித்த நாடுகள் எரிவாயு  + எரிபொருள் ஏற்ருமதிக்கான பணத்தை ரூபிளில் செலுத்த வேண்டும் எனக் கூறியது. 

உண்மையில் ரஸ்ய எரிசக்தியின் மீதான கட்டுப்பாடுகளை விதித்தது ஐரோப்பிய நாடுகளே. ஆனால் தற்போது ரஸ்யா தங்கள் மீது எரிவாயு யுத்தத்தை ஆரம்பித்ததாகக் கூறுவது முழுப் பூசணிக்காயை ஒருபிடி சோற்றில் மறைக்க முற்படுவது போலாகும் 🤣

ஆனாலும், யாழ் களத்தில் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காண்பிக்க வேண்டும் அல்லவா ? எனவே இப்படி எதையாவது  சொல்லி திருப்திப்பட்டுக்கொள்வோம். 

😏

Russia allows Kazakhstan to use its pipelines to transport oil to Germany

Astana will export 1.2 million tons of crude to Berlin this year to cover some of the volume previously supplied by Moscow.
 

Gas market to remain volatile for years – Qatar

Diversification efforts will help, but Russian gas will eventually return to Europe, the energy minister says.
 

Nord Stream must be repaired – German state official

Fixing the sabotaged pipelines and resuming imports from Russia would be cheaper than buying LNG, Saxony’s governor has said.
Edited by Kapithan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஜி,

இந்த அக்கினி குஞ்சை நீங்களா நடத்துறிங்க.

@குமாரசாமி @தமிழ் சிறிஅண்ணையளுக்கு  காலங்காத்தால கடுப்பை கிளப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த இணையதளம் நடத்தபடுவது போல் தெரிகிறது 🤣.

 

“அக்கினி குஞ்சு” என்ற பேரை பார்க்க, 
 @கிருபன்ஜீ நடத்திற இணையம் போலைதான் கிடக்குது. 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

ஜி,

இந்த அக்கினி குஞ்சை நீங்களா நடத்துறிங்க.

@குமாரசாமி @தமிழ் சிறிஅண்ணையளுக்கு  காலங்காத்தால கடுப்பை கிளப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த இணையதளம் நடத்தபடுவது போல் தெரிகிறது 🤣.

 

விடியக்காலமை நித்திரைப்பாயாலை எழும்பி வந்து யாழ்களத்த பாக்க அக்கினிக்குஞ்சு காக்கா குஞ்சு எண்டு நியூஸ்காரங்களின்ரை தொல்லை தாங்கேலாமல் கிடக்கு.....சும்மா பிரசர் குளிசைக்கு வேலை வைச்சுக்கொண்டு....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

 

இருந்தாலும் ரஷ்ய எரிவாயு ஜேர்மனிக்கு வந்துகொண்டு தான் இருக்கின்றது. வேறு விற்பனையாளர் மூலம்......😎

முற்றிலும் உண்மை தாத்தா..............

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொரு வருடமும் மே, ஜூன் மாதங்களிலிருந்து தங்கள் எரிவாயு தாங்கிகளை நிரப்பத் தொடங்குவார்கள். நவம்பர் மாத இறுதியில் எரிவாயு வாங்குவதைப் பெருமளவு குறைப்பார்கள். இதன்படி ஒரு மாதத்திற்கு முன்னர் ஜேர்மனியின் உள்நாட்டு தாங்கிகள் 95 வீதம் நிரப்பப்பட்டு விட்டது. ஓகஸ்ட் மாதத்தில் எரிவாயுவின் சந்தை உச்ச அளவில் இருந்துள்ளது.  ஒரு MWh எரிவாயு 340 ஈரோவுக்குப் போனது. இப்போது இதன் விலை 70 ஈரோக்கள் மட்டுமே.

உக்ரெயின் போரினால் ஏற்பட்ட நெருக்கடியால் அதிக விலை கொடுத்து தாங்கிகளை நிரப்ப வேண்டி வந்தது. இதனைப் பயன்படுத்தியே ரஸ்யா வழமைக்கு அதிகமான இலாபம் ஈட்டியது. ரஸ்யாவின் போர்ச் செலவின் பெரும் பகுதியை இந்த இலாபம் ஈடு செய்தது. இவ்வாறு கொள்ளை இலாபம் இனிமேலும் அடையாமல் இருக்கவே வருடம் முழுவதும் ஓரளவு சீரான முறையில் விலை இருகவேண்டும் என்பதற்காக எரிவாயுவின் அதிகபட்ச சந்தை விலையை மட்டுப்படுத்துகிறார்கள்.

இன்னும் 6 மாதத்தில் ரஸ்யா எரிவாயுப் போரில் வெற்றியா தோல்வியா என்பது தெரியவரும். இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகள் மாற்றீடுகளை உருவாக்கி வருகின்றன.

இடைத்தரகர்கள் மூலம் ரஷ்யாவின் எரிபொருள் வியாபாரம் தங்கு தடையின்றி அமோகமாக நடக்கின்றதாமே. 

எரிவாயு உற்பத்தியை நினைத்தமட்டில் நிற்பாட்ட முடியாது என்பது யாவரும் அறிந்த விடயம். அது ஆபத்தானதும் கூட.....எனவே ரஷ்யா அடிமாட்டு விலைக்கு ஆசிய நாடுகளுக்கு விற்று தள்ளுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

இடைத்தரகர்கள் மூலம் ரஷ்யாவின் எரிபொருள் வியாபாரம் தங்கு தடையின்றி அமோகமாக நடக்கின்றதாமே. 

எரிவாயு உற்பத்தியை நினைத்தமட்டில் நிற்பாட்ட முடியாது என்பது யாவரும் அறிந்த விடயம். அது ஆபத்தானதும் கூட.....எனவே ரஷ்யா அடிமாட்டு விலைக்கு ஆசிய நாடுகளுக்கு விற்று தள்ளுகின்றது.

அண்ணை,

நீங்கள் உட்பட பலரும் எதிர்பார்த்த குளிர்கால ஏரிபொருள் நெருக்கடி ஏற்படவில்லைதானே?

அதுவும் ரஸ்ய நிறுவனம் ஜேர்மனியின் கையிருப்பை மிக குறைவாக வைத்து விட்டு போனபின்னும்.

இனி இதே பொறிமுறையில் தொடர்நியாக எதிர்கால ஒப்பந்த (futures ) அடிப்படையில்  மேற்கு ஏரிபொருளை வாங்கினால் - புட்டினின் ஆயுதங்களில் ஒன்று நமுத்து விட்டது என்பதுதானே அர்த்தம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இடைத்தரகர்கள் மூலம் ரஷ்யாவின் எரிபொருள் வியாபாரம் தங்கு தடையின்றி அமோகமாக நடக்கின்றதாமே. 

எரிவாயு உற்பத்தியை நினைத்தமட்டில் நிற்பாட்ட முடியாது என்பது யாவரும் அறிந்த விடயம். அது ஆபத்தானதும் கூட.....எனவே ரஷ்யா அடிமாட்டு விலைக்கு ஆசிய நாடுகளுக்கு விற்று தள்ளுகின்றது.

நான் முகம் குப்பற விழுந்தனான்தான் ஆனால் எனக்கு மீசையில் மண் ஒட்டவில்லை 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது நிறுவனம் இரஸ்சியாவிற்கு தமது பொருளினை ஏற்றுமதி செய்வதற்கு அனைத்து முயற்சியும் இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறுகிறார்கள்.

ஆனால் நேரடியாக இரஸ்சியாவிற்கு ஏற்றுமதி செய்யாமல் கசகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யும் எனவும் அங்கிருந்து இரஸ்சியா பெற்றுகொள்ளும் என கூறப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் அரசாங்கங்களுக்கு தெரியாமல் இருக்காது, எமது நிறுவனம் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம், கறுப்புப்பட்டியலில் வந்தால் என்ன ஆகும் என தெரியாமலா ஈடுபடுவார்கள்.

4 hours ago, குமாரசாமி said:

இடைத்தரகர்கள் மூலம் ரஷ்யாவின் எரிபொருள் வியாபாரம் தங்கு தடையின்றி அமோகமாக நடக்கின்றதாமே. 

எரிவாயு உற்பத்தியை நினைத்தமட்டில் நிற்பாட்ட முடியாது என்பது யாவரும் அறிந்த விடயம். அது ஆபத்தானதும் கூட.....எனவே ரஷ்யா அடிமாட்டு விலைக்கு ஆசிய நாடுகளுக்கு விற்று தள்ளுகின்றது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

ஜி,

இந்த அக்கினி குஞ்சை நீங்களா நடத்துறிங்க.

@குமாரசாமி @தமிழ் சிறிஅண்ணையளுக்கு  காலங்காத்தால கடுப்பை கிளப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த இணையதளம் நடத்தபடுவது போல் தெரிகிறது 🤣.

 

சிவ சிவா! இப்படி அபாண்டமாகச் சொல்லுறீங்களே!

யாழில் வந்து எழுதவே நேரம் இல்லை! இணையத்தளம் நடாத்தவேண்டுமென்றால் லைக்கா, லிபரா, லங்காசிறிக்காரருடன் டீல் போட்டுத்தான் நடாத்துவேன்!😁

அது சரிவராவிட்டால் RT உடன் ஒரு டீல்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கினிகுஞ்சு வெளிநாட்டில் இருந்து செய்திகள் வெளியிடுவதால் புரின், ரஷ்யா பற்றிய செய்திகளை வெளியிடுகிறார்கள். இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிக்கையில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது பற்றி கட்டுரை எழுதுவதானால் புரினுடைய பிரசாரத்தை தான் எழுதுகிறார்கள்.தமிழ் சிங்களம் என்று வேறுபாடு இல்லை. ரஷ்யாவுக்காக பொய் கட்டுரைகள் தானாம் அங்கே.இப்படியான நிலைமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சரியானவர்கள் பக்கம் நிற்று கொண்டிருப்பது சிறப்பு.

ரஷ்யா தனது எண்ணெய்யை ஆசிய நாடுகளுக்கு விற்று அதிக இலாபம் சம்பாதிக்கின்றது. மத்திய வங்கி  ரஷ்ய பொருளாதாரம் மிகையாக வளர்ந்துள்ளதாக மகிழ்சியை தெரிவித்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அது சரிவராவிட்டால் RT உடன் ஒரு டீல்!

அந்த டீல் இந்திய மேற்பார்வையில் ஏற்கனவே முடிஞ்சுது. 

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

அண்ணை,

நீங்கள் உட்பட பலரும் எதிர்பார்த்த குளிர்கால ஏரிபொருள் நெருக்கடி ஏற்படவில்லைதானே?

நெருக்கடியை இவர்கள் வெளியே பெரிதாக காட்டிக்கொள்ளா விட்டாலும் ரஷ்ய எரிவாயுதான்  தஞ்சமளித்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை..:cool:

பால் மாட்டோடு பகை ஆனால் பாலுடன் இல்லை.🤪

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

எமது நிறுவனம் இரஸ்சியாவிற்கு தமது பொருளினை ஏற்றுமதி செய்வதற்கு அனைத்து முயற்சியும் இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறுகிறார்கள்.

ஆனால் நேரடியாக இரஸ்சியாவிற்கு ஏற்றுமதி செய்யாமல் கசகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யும் எனவும் அங்கிருந்து இரஸ்சியா பெற்றுகொள்ளும் என கூறப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் அரசாங்கங்களுக்கு தெரியாமல் இருக்காது, எமது நிறுவனம் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம், கறுப்புப்பட்டியலில் வந்தால் என்ன ஆகும் என தெரியாமலா ஈடுபடுவார்கள்.

உதுதான் ஐரோப்பிய நாடுகளிலையும் நடக்குது. ஆனால் வெளியில வெட்டுக்குத்து பகை மாதிரி காட்டிக்கொள்ளுவினம் :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

நான் முகம் குப்பற விழுந்தனான்தான் ஆனால் எனக்கு மீசையில் மண் ஒட்டவில்லை 

சண்டை தொடங்கின நாள் தொடக்கம் உந்த நாடக நாட்டியம் தானே நடக்குது :face_with_tears_of_joy:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

நெருக்கடியை இவர்கள் வெளியே பெரிதாக காட்டிக்கொள்ளா விட்டாலும் ரஷ்ய எரிவாயுதான்  தஞ்சமளித்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை..:cool:

பால் மாட்டோடு பகை ஆனால் பாலுடன் இல்லை.🤪

ம்ம்ம்… ஆனால் முடிவுகள் என்ன?

1. பெப்ரவரி 22 க்கு முன்னான நிலை அல்லது அண்மித்த நிலையில் எரிவாயு வின் மொத்த விலை

2. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஈயுவிடம் எரிவாயு சேமிப்பாக கையிருப்பு (இதை விலையை கீழே வைத்த படி, தீர-தீர நிரப்பலாம்)

3. ரஸ்யாவுக்கு மாற்றீடான எரிவாயு ஒப்பந்தங்கள் அமெரிக்காவுடன் (கப்பல் மூலம் திரவ ஏரிவாயு), மற்றும் நோர்வேயுடன்- டென்மார்க், போலந்து (பைப்). இது போர் முடிந்தாலும் ரஸ்யாவின் மிக பெரும் அந்நிய் செலாவணியை ஈட்டி தரும் துறையை கிட்டதட்ட அதன் மிக பெரிய சந்தையில் இருந்து ஓரம் கட்டிவிடும்.

ரஸ்யா இனி ஐரோப்பிய சந்தைக்கு, குறிப்பாக ஜேர்மனியின் சந்தைக்கு திரும்பி வந்தாலும் அது முன்னர் போல் monopoly ஐ எரிவாயு விடயத்தில் கொண்டிராது.

அதே போல்தான் யூகேயில் அணு நிலையங்கள், காற்றாலைகள் - ஜேர்மனியிலும், பிரான்சிலும் இதே போல் காபன் எரிபொருள் அற்ற வழிமுறைகள் பல மக்கள் எதிர்ப்பை ரஸ்யாவை காட்டி அடக்கி நடந்தேறி விட்டன. 

இவ்வாறு பல முனைகளில் எரிபொருளால் ரஸ்யா பொருளாதார, இராணுவ, பிராந்திய பலத்தை அடைவது குறுகிய, மத்திய, நீண்ட கால நோக்கில் முனை மழுங்க பட வைத்கிருப்பதாயே எனக்கு படுகிறது.

4.  மிக முக்கியமாக - ஏரிவாயுவையும், எண்ணையும் ஒன்றல்ல. எண்ணை கப்பலில் ஏற்றி யாருக்கும் விற்கலாம். ஆனால் அதையும் காப்புறுதி, உச்ச வரம்பு மூலம் மட்டு படுத்துகிரார்கள்.

ஆனால் எரிவாயு விநியோகிக்க உள்கட்டுமானம் அவசியம்.

நான் வாசித்து தெரிந்த வரை சைபீரியாவில் இருந்து எத்தனையோ நாடுகள் கிட்ட இருந்தும் ஜேர்மனி வரை பைப்பை இழுத்து வந்ததுக்கு ஒரே காரணம் - இப்படி எடுத்து விற்கும் செலவை ஈடு கட்டி, லாபமும் பார்க்கும் வகையில் (economically viable) கொள்முதல் செய்ய கூடிய இடங்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா மட்டுமே.

சீனாவும் விரும்பினால், சீனா வாய்புள்ள சந்தையாக மாறலாம் - ஆனால் உள்கட்டுமானம், சீனாவில் எரிபொருள் பாவனை முறையை மாற்ற எடுக்கும் ஆரம்ப செலவை ஏற்க சீனா தயாரில்லை. சீனாவும் வெளியாரில் தங்கி இராமல், சக்தி-சுயசார்பு அடையவே விரும்புகிறது. ஆகவே அதுவும் காபன்-அற்ற தொழில்நுட்பங்களிலேயே முதலிட விரும்புகிறது.

20/30 வருடத்தில் முடிய போகும் துறைக்கு, அதிக பணத்தை முதலிட சீனா தயாரில்லை.

நோர்வே பைப்லைன் ஒப்பந்தம் ஆகி செயல்படவும் தொடங்கி விட்டது. ஆனாலும் 5 வருடம் வரைக்குமே இதில் அதிக வருவாய் வரும் என கணிக்கிறது நோர்வே அரசு. 2024 இன் பின் வருவாய் இறங்குமுகமாயே இருக்கும் என்பது அவர்களின் லாப முன்கணிப்பில் உள்ளது.

5. மேற்குக்கு ராஸ்யாவின் சக்தி வியாபார்த்தை முற்றாக தடுப்பது அல்ல நோக்கம். அது முடியாது என்பதும் தெரியும். ஆனால் அதை ஒரு ஆயுதமாக பாவிக்காமல் தடுப்பதே இலக்கு. 

 பிகு 1

இதனால் இனி எரிவாயு, எண்ணை விலை ஏறாது என்பதல்ல. ஒரு புயல் மெக்சிகோவில் என்ணை எடுப்பதை குழப்பினால் விலை கூடும் துறை அது.

ஆனால் ஏரிபொருளை ஆயுதமாக்கல் (weaponising fuel supply ) என்ற தந்திரோபாயம் முனை மழுங்கடிக்கப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். 

பிகு 2

உங்கள் பாதுகாப்ப்பமைச்சர் கிளம்பியாச்சு.

அடுத்து வருபவர் சிறுத்கைகளை உக்ரேனுக்கு அனுப்புவாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

9 hours ago, கிருபன் said:

சிவ சிவா! இப்படி அபாண்டமாகச் சொல்லுறீங்களே!

யாழில் வந்து எழுதவே நேரம் இல்லை! இணையத்தளம் நடாத்தவேண்டுமென்றால் லைக்கா, லிபரா, லங்காசிறிக்காரருடன் டீல் போட்டுத்தான் நடாத்துவேன்!😁

அது சரிவராவிட்டால் RT உடன் ஒரு டீல்!

தங்கள் வாதம் மண் கவ்வினால் SUN tabloid உடன் மட்டுமல்ல அதை வாசிக்கும்,  கழுதைப் புலிகளுடனும் டீல் அடிக்கலாம்.  

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் இந்த வசதி இருப்பது எத்தனை பேருக்கு தெரியுமோ, தெரியாது.

யாழில் இக்னோர் லிஸ்ட் என்று உள்ளது.

முன்பு இருந்ததாக நியாபகம் இல்லை.

நான் இன்றுதான் பரீட்சித்து பார்த்தேன்.

அற்புதமாக வேலை செய்கிறது 🥳  

வழமையாக கருத்துக்களத்தில் எல்லாருடனும் கருத்து பரிமாறுவது என் வழக்கம். எனக்கு பதில் போட்டோருக்கு தொடர்ந்து பதில் போடாமல் போனதும் அரிது.

ஆனால் அதே போல்   

முகவர்களோடு முகம் கொடுத்தே கதைப்பதில்லை என்பதும் பலவருட கொள்கை முடிவு. இதனால் சில வாய்புகளை கூட வாழ்வில் தூக்கி எறிந்ததுண்டு.

யாழிலும் முகத்துக்கு நேராகவே சொல்லியபின்பும், செருப்பில் ஒட்டிய அசிங்கம் கழுவிய பின்ன்னும் மணப்பது போல யாரும் இருந்தால் நீங்களும் இந்த இக்னோர் லிஸ்டை பயன்படுத்தலாம்.

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயன்படுத்தும் முறை

1. வலப்பக்கம் இருக்கும் மூன்று தடி ஐகானை அழுத்தவும்

2. Account தெரிவை அழுத்தவும்

3. கடைசி தெரிவான ignore list ஐ அழுத்தவும் 

4. அங்கே add to ignore list என்ற தெரிவில், தேடல் பெட்டியில் நீங்கள் ignore பண்ண விரும்பும் பயனாளர் பெயரை தட்ட - தானாக காட்டும். அழுத்தி அவரை பட்டியலில் சேர்க்கவும்.

5. கீழே அவரின் சகல செயல்களையுமா அல்லது பதிவுகளை மட்டுமா ignore செய்ய போகிறீகள் என்ற தெரிவுகள் இருக்கும். தேவைக்கு ஏற்ப எல்லாவற்றையும் அல்லது ஒரு சிலதை தெரிந்து கொள்ளலாம்.

6. வெளியே வந்து விட்டு. மீள போய் பார்தால். நீங்கள் முச்சந்தியில் பூசனி உடைந்த நபரின் பெயர் அந்த லிஸ்டில் மின்னும்😀.

7. ஜாலி லே ஜிம்கான 🥳🥳🥳

Edited by goshan_che
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

 

 

 

லிஸ் டிரஸ் போல இவவும் இந்த வேலைக்கு ஏற்ற தகுதி உடைய ஆள் இல்லை என்கிறார்கள். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.