Jump to content

ஐயோ சாமி தைப் பொங்கல் எனக்கு வேணாம்! - வீமன்


Recommended Posts

ஐயோ சாமி தைப் பொங்கல் எனக்கு வேணாம்!
=====================================
நான் சின்னப் பொடியனா இருந்தபோது நாங்கள் எங்கள வயலில நெல்லு விதைச்சுப் பராமரிச்சு அறுவடை செய்தம். தை மாதம் புது அரிசி போட்டுப் பொங்கிச் சந்தோசமா சாப்பிடுவம். பிறகு கோவிலுக்குப் போவம், அப்பிடியா சொந்தக்காரர் வீட்டுக்குப் போவம். பிறகு பொங்கல் திண்ட தியக்கத்தில கொஞ்ச நேரம் நித்திரை கொண்டிட்டுப் பின்னேரம் பருத்தித்துறைக் கடற்கரைக்குப் பட்டம் பார்க்கப் போவம். இப்பிடி ஒரு பிரச்சினை இல்லாமத்தான் எங்கட தைப்பொங்கல் கொண்டாட்டம் இருந்தது.
 
தைப்பொங்கல் உழவர் பெருநாள், சூரியனுக்கு நன்றி சொல்லுற நாள் அடுத்தநாள் கால்நடைகளுக்கு நன்றி சொல்லுற நாள் என்ற புரிதல்தான் எனக்கு இருந்தது. பிறகு கொஞ்சக்காலம் போக, 1935இல் தமிழ்நாட்டில, பச்சையப்பன் கல்லூரியில கூட்டம் வைச்சத் தமிழ் அறிஞர்கள் தையிலதான் தமிழருக்கு புதுவருசம் எண்டு முடிவெடுத்ததா திரும்பவும் கொஞ்சப்பேர் கதைக்க வெளிக்கிட்டினம்.
 
பாரதிதாசன் எண்ட கவிஞர் சொன்ன நாலு வரியையும் வைச்சுக் கொண்டு சித்திரையல்ல புதுவருடம், தை ஒன்றே தமிழரின் புதுவருசம் என்று கம்பு சுத்தத் தொடங்கிட்டினம். சித்திரையில புதுவருசம் கொண்டாடுறவன் முட்டாள் என்று நக்கல் வேறை. அதைப் பாத்து என்ர நாட்டில உள்ளவங்களும் இந்த விசயத்தை ஒவ்வொரு வருசமும் கதைக்கிற விவாதப் பொருளாவே மாத்திட்டாங்கள். தைப் பொங்கலுக்கு பால் பொங்குதோ இல்லையோ, உவங்கள் பொங்கல் உந்த விவாதப் பொங்கலை வைக்க மறக்கிறேல்லை.
 
உந்தப் பிரச்சினையைக் கெட்டியாப் பிடிச்சுக் கொண்ட தமிழர்களின் கட்டுமரம் கலைஞர் தாத்தாவும் தன்ர விழுந்த செல்வாக்கை தூக்கி நிறுத்தலாமெண்டு பிளான் பண்ணி 2008 இல் இனிமேல் தை 01ம் தேதிதான் தான் புதுவருசம் எண்டு சட்டமே போட்டுவிட்டார். என்ன பிரயோசனம்? மூன்றே வருசத்திலேயே திரும்பப் பதவிக்கு வந்த ஜெயலலிதா பருத்தி மூட்டை கோடவுனிலயே இருக்கட்டும் என்று சொல்லி, சித்திரையில்தான் புதுவருசம், தையில இல்லையென்று சொல்லிப் போட்டா. நாட்டாமை தீர்ப்பை மாத்து எண்டு சிலர் சத்தம் போட்டாலும் ஒண்டுமே செய்ய முடியேல்லை.
ஆனால் கட்டுமரம் ஐயாவுக்கு முன்னமே, 90களில ஈழத்தில பொடியளும் தை மாதம்தான் தமிழருக்கு புதுவருசம் தொடங்குதெண்டு அறிவிச்சவை எண்டு என்ர கூட்டாளி சொல்லுறான். ஆனால் அதையும் எல்லாரும் பின்பற்றினதாத் தெரியேல்லை.
 
வழமையா எங்கடை ஆக்களுக்கு தாங்கள் நினைச்சதைச் செய்ய முடியாமப் போனா அதை யாரிட்டையாவது புலம்புறதுதானே வழமை. அதுதான் கொஞ்சக் காலமா உவங்கள் எல்லாரும் சமூக வலைத்தளத்தில ஒவ்வொரு வருசமும் வம்புப் பொங்கல் வைக்கிறாங்கள். நானும் உந்த இரண்டு பக்கமும் பேசி ஒரு முடிவுக்கு வருமெண்டு இவ்வளவு காலம் இருந்து பாத்தால் ஒரு முடிவையும் உவங்கள் எடுக்கிறதாத் தெரியேல்லை.
 
இந்தப் பிரச்சினை ஒருபக்கம் இருக்க, இப்ப கொஞ்சக் காலமா தமிழ்நாட்டில எப்பிடியாவது தாமரையை மலரச் செய்ய வேணும் எண்டு வேட்டியை மடிச்சுக் கொடுக்குக் கட்டிக் கொண்டு திரியுற கும்பல் கொஞ்சநாளா தைப்பொங்கல் இந்துக்களின் பண்டிகை எண்டு புதுசா ஒரு போர்த்தேங்காயை உருட்டி விளையாடுறாங்கள். அதுக்கு இலங்கையில இருந்தும் புலம்பெயர் நாட்டில இருந்தும் கனபேர் முண்டு குடுக்கிறாங்கள். உந்தக் காவி கட்டுற பாவியள் ஈழத் தமிழரை தங்கட வெறிக்கு ஊறுகாயா பாவிக்கிறாங்கள் எண்டு சொன்னாலும் இவங்கள் கேக்கிறாங்கள் இல்லை. உவங்கள் எல்லாருக்கும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் எண்ட நினைப்பு.
 
உந்த இந்திய சங்கிகள் செய்யுற ஆக்கினை போதாதெண்டு இப்ப அவங்கட வாலைப் பிடிச்சு தொங்கிற ஈழத்து சங்கிகள் கொஞ்சபேர் இலங்கையில காலம் காலமாக தைப்பொங்கல் கொண்டாடுற சில கிறிஸ்தவ சகோதரங்களை வம்பிழுத்துக் கொண்டிருக்கிறாங்கள். எங்கட தைப்பொங்கலை இவை ஏன் கொண்டாடுகினம் என்று Facebookஇல பிராது குடுத்துத் திரியுறாங்கள். இது தமிழரின்ர, குறிப்பாச் சொன்னால் உழவர் திருநாள், மதம் சார்ந்த பண்டிகை இல்லையடா என்று சொன்னால் குறுக்கால போவார் காதிலையும் வாங்கிறாங்கள் இல்லை.
 
இது போதாதெண்டு இப்ப புதுசா ஒரு பிரச்சினையைக் கிளப்பி விட்டிருக்கிறாங்கள். இந்த முறை இலங்கையில 15ம் திகதிதான் தைப்பொங்கல் வருகுது, அதெப்படி கனடாக்காரர் 14 ம் திகதியே பொங்கலைக் கொண்டாடினவை எண்டு ஒரு தமிழ் இணைய இதழ் ஆசிரியர் கேட்டிருக்கிறார். உடன நிறையப்பேர் அங்க வந்து கும்மியடிச்சு கனடாக்காரரை, குறிப்பாச் சொன்னா கனடாவில இருக்கிற ஐயர்மாரை குற்றவாளிக் கூண்டிலையும் ஏத்தி விட்டிருக்கினம். உது ஐயர்மார் செய்யுற விளையாட்டாம். தங்கட விருப்பத்துக்கு தேதிகளை மாதத்தில் சனத்தை ஏமாத்திக் காசு பறிக்கிறாங்களாம்.
அந்தப் பதிவில ஒருத்தர் உந்தப் தைபொங்கல் நாள் எப்பிடி மாறுதெண்டு பெரிய விஞ்ஞான விளக்கமே குடுத்திருந்தார். இந்திய பஞ்சாங்க நேரக் கணக்கீட்டுப்படி சூரியன் ஒவ்வொரு வருசமும் மகர ராசிக்குள்ள நுழைய 20 நிமிசங்கள் பிந்துறாராம். அதாலை, 72 வருசத்தில சூரியன் ஒருநாள் பிந்தித்தான் மகர ராசிக்குள்ள நுழைவாராம். இதுவரை, 1934 இல இருந்து 2007 வரை ஜனவரி 14 இலதானாம் பொங்கல் வந்தது. 2008 – 2081 வரையும் ஜனவரி 15இலதானாம் பொங்கல் வரும்.
ஆனால் இதில என்ன பகிடி எண்டால் இவர் சொன்ன 2007இல் இலங்கையில 14இல தைப்பொங்கல் வரேல்லை. 15இலதான் கொண்டாடினவை. அதேமாதிரி இவர் சொன்னபடி 2009, 2010, 2013, 2014, 2017, 2021 எண்ட ஆறு வருசமும் இலங்கையில அவர் சொன்ன 15ம் தேதி பொங்கல் வரேல்லை, 14ம் திகதிதான் பொங்கல் வந்தது.
 
அதுமட்டுமில்லை, உவரும் மற்றவையும் சொல்லுற மாதிரி இந்த வருஷம் மட்டும் இல்லை இதுக்கு முதலும் இலங்கையில ஜனவரி 15 பொங்கல் வந்த வருசங்களில கனடாவில 14ம் திகதி கொண்டாடுறது வழமை எண்டு இஞ்ச உந்தச் சடங்கு சம்பிரதாயங்களை இறுக்கமா பின்பற்றுற என்ர சொந்தக்காரர், நண்பர்கள் சொல்லிச்சினம். பொங்கல் மட்டுமில்லை, சதுர்த்தி விரதங்களும் ஒருநாள் முந்தி வருமெண்டும் அவை சொல்லிச்சினம். இதுக்குள்ள இரகுநாதர் பஞ்சாங்கம் எழுதுறவை இப்ப கனடாவுக்கு எண்டொரு பஞ்சாங்கக் கணிப்பை எழுதி விக்கிறாங்கள். இஞ்ச உள்ள சனம் அதைத்தான் பார்த்து இப்பிடிக் கொண்டாடுகினமாம். உந்த Facebook போராளிகள் இவ்வளவு நாளும் எங்க படுத்துக் கிடந்திட்டு இப்ப வந்து புதுசா பிரச்சினையைக் கிளப்புறாங்கள் எண்டும் கனடாச் சனம் கேக்குது.
 
மனிசனுக்கு ஆயிரம் பிரச்சினை இருக்கிற இந்தக் காலத்தில சந்தோசமா தைப்பொங்கலோட வருசத்தைத் தொடங்கலாம் எண்டு பாத்தா, இது தமிழரின் புத்தாண்டு எண்டு கொஞ்சப் பேர், இது இந்துக்களின் பண்டிகை எண்டு கொஞ்சப் பேர், இலங்கையில கிறிஸ்தவர் எப்பிடிப் பொங்கல் கொண்டாடலாம் எண்டு கொஞ்சப் பேர், இலங்கை, இந்தியாவில கொண்டாடுற நாளிலதான் புலம்பெயர் தமிழரும் பொங்கல் கொண்டாட வேணும் எண்டு கொஞ்சப் பேர் மாறிமாறி வழக்கு வைக்கிறாங்கள். எனக்கு இப்ப தைப்பொங்கல் எண்டாலே சீ எண்டு கிடக்கு! இப்ப கனபேரின்ர பிள்ளையளும், வை இஸ் திஸ் கொன்பியூசன் அம்மா எண்டு அம்மாமாரைக் கேக்கினமாம். இதெல்லாத்தையும் பாக்கேக்கை, ஐயோ சாமி தைப்பொங்கலே எனக்கு வேண்டாம் எண்டுதான் நினைக்கத் தோன்றுது.
 
ஐயோ சாமி தைப்பொங்கல் எனக்கு வேணாம்!
ஆளாளுக்கு என்னைக் குழப்பினது போதும்!!
 
  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன சாட்சியை நீ விலைபேசினால் 
அட நீ சொல்லு.. நீ மனுசனா.... அய்யோ சாமி.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் முன்னோர்கள் விட்ட தவறுகள். அதனால் அவர்கள் சந்ததிகள் தெளிவில்லாத வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள்.

இனத்தையும் மதத்தையும் கட்டிக்காக்க வத்திக்கான் போல் ஒர் கண்டிப்பான அமைப்பை நிறுவியிருக்க வேண்டும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை தைமாதம் மார்கழி பின்னேரம்  நாலு மணிக்கு 13திகதி ஆங்கிலதிகதியில்  ஐரோப்பாவில்   பிறப்பதால்  வந்த வினை .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.