Jump to content

யாழில் பாம்பு திருட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

யாழ்ப்பாணம் - மிருசுவில் தவசிகுளம் கண்ணகை அம்மன் கோயிலில் இருந்த பாம்பை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திருட்டு சம்பவம் (14) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

கண்ணகை அம்மன் கோயில் அடியார்கள் நீண்ட காலமாக நாகபாம்பு ஒன்றை பால் ஊற்றி வளர்த்து வந்தனர்.இந்நிலையில் சம்பவ தினத்தன்று மாலை வேளையில் கோயில் முன்றலில் குரங்குடன் வந்த நபரொருவர், சிறுவர்களுக்கு குரங்கு ஆட்டம் காட்டியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து மகுடி வாசித்துள்ளார். மகுடி சத்தம் கேட்ட பாம்பு கோயில் முன் பகுதிக்கு வந்துள்ளது.

அதன்போதே குறித்த நபர் பெட்டிக்குள் பாம்பை அடைத்து கொண்டு சென்றுள்ளார் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் பாம்பு திருட்டு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இதுக்கு மூட நம்பிக்கை என ஒருவர் எழுதணும்.

மனம் புண்பட்டு விட்டதாக சைவ சேனை கிளம்பி வரணும்.

ரணகளம் ஆகணும்.

அது சரி

பிழம்பு எண்டால் கொழுத்தி போட்டால்தானே மரியாதை🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவர்கள் மனம் புண்பட இது என்ன பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பா?  🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nunavilan said:

முதலில் பாம்பு என்ன மதம் என்று தெரிய வேணும். அதற்கு பிறகு தான் மிச்சம்.🙂

பாம்பு படத்தில் நாமம் போட்டிருப்பதால் அது வைஷ்ணவம் .........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு லீவு….. இந்த பிரிவிற்கு

Edited by MEERA
Link to comment
Share on other sites

4 hours ago, பிழம்பு said:
கண்ணகை அம்மன் கோயில் அடியார்கள் நீண்ட காலமாக நாகபாம்பு ஒன்றை பால் ஊற்றி வளர்த்து வந்தனர்.

பாம்பு பால் குடிக்காது. பால் வாசனையால் ஈர்க்கப்படும். பாலை நெருங்கி வரும் உயிரினங்களை வேட்டையாட. முன்பு யாழில் விவாதித்துள்ளோம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாம்புகளுக்கு காது இல்லை. கண்களால் தான் பாம்புகள் ஒலிகளை உணர்கின்றன. இதனால்தான் பாம்புகளுக்கு ‘கட்செவி’ என்றொரு பெயரும் உண்டு. 

பாம்புகளை அரவம் என்றும் அழைக்கலம். அரவம் என்றால் ஒலி என்றும் பொருள்படும்.

துரியோதனன் கொடி பாம்புக்கொடி. அதனால் அவனை அரவக்கொடியோன் என கம்பர் அழைகின்றார். இந்த அரவக்கொடியோன் என்பது பாம்பைப் போல கொடியவன் என்ற பொருளில் வரும்.

இப்ப சொல்லுங்க சிவபெருமான் கழுத்தில் இருக்கும் அரவம் கொடியதா? 😂

இல்லையா?👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“ஊர்வன”, என்ற உயிரின வகையுள் பாம்பு மிகவும் கொடியது. மனிதர்கள் வாழும் பிரதேசத்தில் இப்படியான கொடிய ஊர்வன இல்லாமல் பார்தது கொள்வதே மனிதர்களுக்கு பாதுகாப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, island said:

“ஊர்வன”, என்ற உயிரின வகையுள் பாம்பு மிகவும் கொடியது. மனிதர்கள் வாழும் பிரதேசத்தில் இப்படியான கொடிய ஊர்வன இல்லாமல் பார்தது கொள்வதே மனிதர்களுக்கு பாதுகாப்பு. 

சகல உயிரினங்களுக்கும் இந்த பூமி சொந்தம். மனிதம் முதலில் ஊர்வன வாழும் காடுகளை அழிக்காமல் இருக்கட்டும். அதன் பின்னர் ...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சகல உயிரினங்களுக்கும் இந்த பூமி சொந்தம். மனிதம் முதலில் ஊர்வன வாழும் காடுகளை அழிக்காமல் இருக்கட்டும். அதன் பின்னர் ...........

நீங்கள் கூறியதை ஏற்று கொள்கிறேன்.  

ஆனல், எல்லா உயிர்களும் முழுமையாக வாழ்வதற்கு பிறந்தாலும் அதை உணவிற்காக கொல்கிறோம். மீன்களும் வாழவேண்டும் என்ற சிந்தனை இன்றி அவைகளை பிடித்து வாய்க்கு  ருசியாய சமைத்து உண்கிறோம்.  ஆடு, கோழி போன்றனவும் அடங்கும் 

அதே போல மக்கள் தொகைப்பெருக்கத்தால் வாழ்விடத்திற்காக மனிதர்கள் காடுகளை அழிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எமது தாயகத்தில் வன்னி பகுதி ஒரு காலத்தில் காடாக இருந்தது. இன்று பல ஆயிரம் மக்கள் வாழ்கிறார்கள். யாழ் குடாநாட்டுக்குள் எல்லோரும் வாழ முடியாது 

 இருந்தாலும் வாழ்விடத்திற்காக  காட்டை அழிக்கும் போது ஒரு வரைமுறை தேவை.    

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே பாம்புதானே ஏவளை ஏமாற்றி அவளை ஏதேன் தோட்டத்தில் விலக்கப்ட்ட க‌னியை புசிக்க வைத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

இப்ப இதுக்கு மூட நம்பிக்கை என ஒருவர் எழுதணும்.

மனம் புண்பட்டு விட்டதாக சைவ சேனை கிளம்பி வரணும்.

ரணகளம் ஆகணும்.

அது சரி

பிழம்பு எண்டால் கொழுத்தி போட்டால்தானே மரியாதை🤣.

இது அவரவர் நம்பிக்கை விருப்பம் என்று சொல்லி விட்டு ஓடி விட முடியாது

பாம்பு பாம்பு 🐍 தான்

மக்கள் மத்தியில் நடமாட அனுமதிப்பது நன்றன்று 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

இது அவரவர் நம்பிக்கை விருப்பம் என்று சொல்லி விட்டு ஓடி விட முடியாது

பாம்பு பாம்பு 🐍 தான்

மக்கள் மத்தியில் நடமாட அனுமதிப்பது நன்றன்று 

அம்மன் கோவில் இருப்பது காடு போன்ற சோலைக்குள்.........
ஊர்மனையில் காடு எதற்கு?

ஆசியா போன்ற வெய்யில் நாடுகளில் விச பிராணிகள் மக்கள் வாழும் இடங்களில் இருப்பது சகஜம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இது அவரவர் நம்பிக்கை விருப்பம் என்று சொல்லி விட்டு ஓடி விட முடியாது

பாம்பு பாம்பு 🐍 தான்

மக்கள் மத்தியில் நடமாட அனுமதிப்பது நன்றன்று 

சும்மா பேசீட்டே இருந்தா எப்படி?

அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கவேண்டாம்?

3 hours ago, குமாரசாமி said:

அம்மன் கோவில் இருப்பது காடு போன்ற சோலைக்குள்.........
ஊர்மனையில் காடு எதற்கு?

ஆசியா போன்ற வெய்யில் நாடுகளில் விச பிராணிகள் மக்கள் வாழும் இடங்களில் இருப்பது சகஜம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

இதே பாம்புதானே ஏவளை ஏமாற்றி அவளை ஏதேன் தோட்டத்தில் விலக்கப்ட்ட க‌னியை புசிக்க வைத்தது.

கொழும்பான் இப்பதான் விளங்குது ஏவாளை ஏமாத்தி கனியைப் புசிக்க வச்சிட்டு அவருக்குப் பயந்து இங்காலை வந்து இவரிண்ட தலைமுடியில் சிக்கிகிச்சு!🙄 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, வாலி said:

கொழும்பான் இப்பதான் விளங்குது ஏவாளை ஏமாத்தி கனியைப் புசிக்க வச்சிட்டு அவருக்குப் பயந்து இங்காலை வந்து இவரிண்ட தலைமுடியில் சிக்கிகிச்சு!🙄 

இத வாசிச்சு, மனம் புண்பட்டுடுத்து, நேக்கு மனம் புண்பட்டுடுத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அம்மன் கோவில் இருப்பது காடு போன்ற சோலைக்குள்.........
ஊர்மனையில் காடு எதற்கு?

ஆசியா போன்ற வெய்யில் நாடுகளில் விச பிராணிகள் மக்கள் வாழும் இடங்களில் இருப்பது சகஜம்.

ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடினார்கள்

அவர்களில் அத்தனை பேருக்கும் பாம்பிலிருந்து தப்புவது அல்லது பாம்புக்கடிக்கான முதலுதவி தெரிந்து இருந்தது

இன்று லட்சக்கணக்கான மக்கள் திருவிழாக்களில் கலந்து கொள்கிறார்கள். இவர்களில் ஒரு விகிதமான மக்களுக்கு கூட அதைப் பற்றி தெரியாது. 

அதைவிட பாம்பைக் கண்டு மக்கள் வெகுண்டோடினால் என்னவாகும்???

Edited by விசுகு
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இன்று லட்சக்கணக்கான மக்கள் திருவிழாக்களில் கலந்து கொள்கிறார்கள். இவர்களில் ஒரு விகிதமான மக்களுக்கு கூட அதைப் பற்றி தெரியாது. 

ஏன் தெரியாது? அவர்கள் என்ன ஐரோப்பாவிலா பிறந்து வளர்ந்தவர்கள்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஏன் தெரியாது? அவர்கள் என்ன ஐரோப்பாவிலா பிறந்து வளர்ந்தவர்கள்? :cool:

இன்று அங்கே கூடுபவர்கள் யாரண்ணா அதிகம்???

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடிய ஊர்வன பாம்புகளை வழிபடுதல் என்பது தமிழர்களின் வரலாற்று காலந்தொட்டு இருந்து வருகிறது.. கொடிய விஷம் கொண்ட பாம்பு தனக்கு நல்வாழ்வு தரும் என்று நம்பி தமிழகள் வழிபடுகிறார்கள். பாரம்பரிய வழிபாட்டு முறைகளை இழிவுபடுத்த உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கொடிய ஊர்வன பாம்புகளை வழிபடுதல் என்பது தமிழர்களின் வரலாற்று காலந்தொட்டு இருந்து வருகிறது.. கொடிய விஷம் கொண்ட பாம்பு தனக்கு நல்வாழ்வு தரும் என்று நம்பி தமிழகள் வழிபடுகிறார்கள். பாரம்பரிய வழிபாட்டு முறைகளை இழிவுபடுத்த உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

என் மதத்தை இழிவு படுத்தினால் நான் அங்கே முதலாவது ஆளாக இருப்பேன்.

அதேபோல் இது போன்ற காலத்துக்கொவ்வாத மூடநம்பிக்கைகளை எதிர்ப்பதும் எமது இந்த தலைமுறையின் கடமை. இல்லையெனில் அடுத்த தலைமுறை முற்றாக எம்மை விட்டு சென்று விட நாமே வழி சமைத்தவராவோம். நன்றி 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நான் யாழ்ப்பாண பொது நூலகத்திற்குச் சென்றிருந்தேன்.. திடீரென ஒரு சலசலப்பு.. என்னவென்று பார்த்தால் ஒரு 5லீற்றர் வெற்றுத்தண்ணிப் போத்தலுக்குள் ஒரு குட்டிப் பாம்பு படமெடுத்தபடி இருக்க ஒருவர் கொண்டு வந்தார். அதுவும் புத்தகம் வாசிக்க வந்திருந்ததோ தெரியவில்லை, நூலக அலுவரிடம் மாட்டுப்பட்டுவிட்டது. 

அப்ப ஒருவர் சொல்லிக்கொண்டு இருந்தார் “ கோவில் பாம்போ தெரியாது.. யாரோ முனியப்பர் பக்கம் விட்டு விட்டுப்போட்டாங்களோ தெரியவில்லை” என்று..

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.