Jump to content

பலூன் போல வயிறு வீங்குவது ஏன்? சிகிச்சை என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் சாப்பிடாமலேயே முழுமையாக நிரம்பிய உணர்வுடன் பலூன் போல வயிறு இருப்பது மிகவும் பொதுவான ஒன்று.

அடிவயிற்றின் அளவு அதிகரிப்பது, வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதோடு அசௌகரியத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்த மாற்றத்துடன் கூடுதலாக, வயிற்று வலி போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில காரணங்களை நம்முடைய உணவுப்பழக்கத்தில் மாற்றம் செய்தே நிவர்த்தி செய்யலாம். சில காரணங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் காணப்படும் பிரச்னை மற்றும் புற்றுநோய் போன்றவற்றின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

 

இதை எதிர்கொள்ள எந்தப் பழக்கத்தை நாம் மாற்ற வேண்டும் மற்றும் எந்த அறிகுறி இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

வாயு

குடலில் வாயு அதிகமாக இருப்பதுதான் அடிவயிற்றில் வீக்கம் ஏற்படுவதற்கான பொதுவான காரணம். சில உணவுகள் மற்றும் பானங்கள் இதற்கு காரணம் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை கூறுகிறது.

வயிறு வீங்கியது போல உணர மற்றொரு பொதுவான காரணம் மலச்சிக்கல். மலச்சிக்கல் என்பது குடல் இயக்கம் சார்ந்தது மட்டுமல்ல. நீங்கள் மலம் கழிக்க சிரமப்பட்டால், உங்கள் மலம் இறுகி இருந்தால், மலம் கழிக்கும் போது குடல் காலியானதாக உணரவில்லை என்றால் நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்கள் என்று அர்த்தம் என்கிறது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ மையம்.

நீண்ட நேரம் மலம் வெளியேறாமல் இருக்கும் போது, பாக்டீரியா எண்ணிக்கை அதிகரித்து, அவை அதிக வாயு மற்றும் வீக்கத்தை உருவாக்குகின்றன.

பாக்டீரியா எண்ணிக்கை அதிகரிப்பு

பாக்டீரியா எண்ணிக்கை அதிகரிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிறுகுடலில் பாக்டீரியா எண்ணிக்கை அதிகரிப்பதும் வயிறு வீக்கத்திற்கு முக்கிய காரணமாகும்.

பெருங்குடலில் உள்ள குடல் பாக்டீரியா எண்ணிக்கை அதிகரிக்கும் போது அவை சிறுகுடலுக்குச் செல்கின்றன. இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, குடல் செயல்பாடுகளை சீராக்கி வாயுக்களை உறிஞ்சும் மற்ற பாக்டீரியாக்களின் செயல்பாடுகளைப் பாதிக்கும்.

பாக்டீரியா எண்ணிக்கை அதிகரிப்பிற்கு அடிவயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகான சிக்கல் அல்லது டைவர்டிகுலிடிஸ் போன்ற நமது செரிமான அமைப்பில் ஏற்படும் சில சிக்கல்கள் காரணமாக இருக்கலாம் என்று மயோ கிளினிக் தெரிவிக்கிறது.

குடல் எரிச்சல் செரிமான அமைப்பை பாதிக்கக் கூடிய மிகவும் பொதுவான நிலையாகும். இது வாயு, வயிறு வீக்கம் மட்டுமில்லாமல் வலி, பிடிப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது.

குடல் எரிச்சலுக்கு என்ன காரணம் என்பதில் தெளிவு இல்லாவிட்டாலும் கூட, மன அழுத்தம், மரபியல், குடல் வழியாக உணவு வேகமாக செல்கிறதா அல்லது மெதுவாக செல்கிறதா என்பன போன்ற பல்வேறு காரணிகளுடன் இது தொடர்புடையது என பிரிட்டன் தேசிய சுகாதார சேவை கூறுகிறது.

வயிற்று தசைகள் மற்றும் அதன் இயக்கத்தை பாதிக்கும் காஸ்ட்ரோபரேசிஸ் போன்ற நோய்களும் நம் வயிறு வீங்குவதற்கு மற்றொரு காரணம்.

காஸ்ட்ரோபரேசிஸிற்கு என்ன காரணம் என்பதில் தெளிவில்லை. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்கள், மனச்சோர்வு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இதற்கான அறிகுறிகளை ஏற்படுத்தலாம் என்று மயோ கிளினிக் கூறுகிறது.

ஒவ்வாமை மற்றும் ஹார்மோன்கள்

சில நேரங்களில் உணவு ஒவ்வாமையும் வயிறு வீக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்.

லாக்டோஸ், பிரக்டோஸ், கோதுமை போன்ற கார்போஹைட்ரேட்டுகள், பருப்பு வகைகள் ஆகிய உணவுகள் வயிறு வீக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது, க்ளூட்டன் உட்கொள்ளும் போது நோயெதிர்ப்பு மண்டலம் அதன் சொந்த திசுக்களைத் தாக்கும் ஒரு நிலையான செலியாக் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம், க்ளூட்டன் என்பது கோதுமை, பார்லி மற்றும் கம்பு ஆகிய தானியங்களில் காணப்படும் புரதம்.

இது சிறுகுடலை சேதப்படுத்தி, ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதை சிக்கலாக்குகிறது. மேலும், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளையும் ஏற்படுத்துகிறது.

மாதவிடாய் சுழற்சிக்கு காரணமான ஹார்மோன்களால் ஏற்படும் வீக்கமும் வயிறு வீக்கத்திற்கு காரணம். நான்கில் மூன்று பெண்கள் மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் வீக்கத்தை அனுபவிப்பதாக கிளீவ்லேண்ட் கிளினிக் கூறுகிறது.

பெண் ஹார்மோன்கள் பல காரணங்களுக்காக வீக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, திரவத்தைத் தக்கவைக்க காரணமான ஈஸ்ட்ரோஜனும், புரோஜெஸ்ட்டிரோனும் நமது வயிற்று தசைகளின் இயக்கத்தை துரிதப்படுத்தலாம் அல்லது மெதுவாக்கலாம். இது வாயு உருவாகவும், மாதவிடாய்க்கு சற்று முன்பு கருப்பை பெரிதாகவும் காரணமாகிறது.

நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வீக்கம், கருப்பை புற்றுநோய் போன்ற தீவிரமான நிலையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே இது தொடர்பான பரிசோதனைகளை வழக்கமாக்கிக் கொள்வது அவசியம்.

வீக்கத்தை குறைப்பது எப்படி?

வீக்கத்தை குறைப்பது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வயிறு வீக்கத்திற்கான காரணம் உங்களுக்குத் தெரியாவிட்டால், நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

செரிமானத்தை மேம்படுத்த வழக்கமான உடற்பயிற்சியையும், வயிற்றில் இருக்கும் காற்றை வெளியேற்ற வலமிருந்து இடமாக மசாஜ் செய்வதையும் பிரிட்டன் தேசிய சுகாதார சேவை பரிந்துரைக்கிறது.

மலச்சிக்கல் இருப்பது போல உணர்ந்தால், பழங்கள், காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதும், நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம்.

குளிர்பானங்கள், ஆல்கஹால், காஃபின், கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றுடன் பதப்படுத்தப்பட்ட உணவுகள், முட்டைக்கோஸ், பீன்ஸ் அல்லது பருப்பு போன்ற அதிக வாயு உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

உணவு உண்ணும் போது காற்றை விழுங்குவதைத் தவிர்க்க வாயை மூடிக்கொண்டு மென்று சாப்பிட வேண்டும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் அதிக உணவு எடுத்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

உங்களுக்கு உணவு ஒவ்வாமை இருப்பதாக நினைத்தால், நீங்கள் சந்தேகிக்கும் உணவுகளை படிப்படியாக குறைத்து, ஒவ்வொரு உணவிற்குப் பிறகும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று மதிப்பாய்வு செய்துபாருங்கள்.

எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்?

வயிறு வீக்கம் தானாகவே சரியாகிவிடும் அல்லது நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து சரி செய்யலாம். வயிறு வீக்கம் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும் அதன் பின்னணியில் தீவிரமான பிரச்னை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ஆனால், வாழ்க்கை முறையில் மாற்றம் செய்தும் வீக்கம் குறையவில்லை என்றாலோ அல்லது வேறு அறிகுறிகளுடன் அவை தொடர்ந்தாலோ மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

வயிற்றுப்போக்கு, தொடர்ச்சியான அல்லது கடுமையான வயிற்று வலி, ரத்தத்துடன் கூடிய மலம் அல்லது மலத்தின் நிறத்தில் மாற்றங்கள், எடை குறைவு, பசியின்மை அல்லது மிக விரைவாக வயிறு நிறைந்த உணர்வு, வயிறு மற்றும் மார்பில் அசௌகரியம் ஆகியவை நம்மை எச்சரிக்கும் அறிகுறிகள் என்கிறது மயோ கிளினிக்.

வயிறு வீக்கம்: சாப்பிடாமலேயே வயிறு வீங்குவது ஏன்? சிகிச்சை என்ன? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.