Jump to content

தினமும் 9 ஆயிரம் அடிகள் நடப்பது மாரடைப்பைத் தடுக்குமா? - மருத்துவர் விளக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நபர் 13 ஆயிரம் அடிகள் வரை நடந்தால் நல்லது என கூற முடியும், இவை ஒருவரை ஊக்கப்படுத்தப்படுத்த உதவலாம். ஆனால், அனைவருக்கும் இது பொருந்தாது.

 

பொதுவாகவே உடற்பயிற்சி உடல் நலத்தை மேம்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. உடற்பயிற்சியிலேயே குறிப்பாக கார்டியோ உடற்பயிற்சிகள் இதய நலத்தைப் பேணுபவை. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. வாக்கிங், ஜாகிங், ரன்னிங் போன்றவையே நல்ல உடற்பயிற்சிகள்தான். இன்றைக்கு நாம் வைக்கிற ஒவ்வோர் அடியையும் கணக்கிடும் செயலிகள் வந்துவிட்டன.

இந்நிலையில், தினமும் 9 ஆயிரம் அடிகள் நடக்கும் இளைஞர்களுக்கு மாரடைப்புக்கான அபாயம் 50 சதவிகிதம் குறைவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் உண்மைத் தன்மை குறித்தும், உடற்பயிற்சிக்கும் இதய நலத்திற்குமான தொடர்பு குறித்தும் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் குருபிரசாத்திடம் கேட்டோம்…

``கடந்த 10, 15 ஆண்டுகளில் மருத்துவம் சார்ந்த கருவிகளை அனைவரும் வாங்கிப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக டிட் பிட்ஸ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவை வந்த பிறகு ஒருவர் தனது ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. அறிவியலைப் பொறுத்தவரை இதற்கு ஆதாரங்கள் வேண்டும் என்பதால் ஆப்பிள் போனில் உள்ள ஹெல்த் செயலியையும், ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சும் கொண்டு சோதனை செய்யப்பட்டதில், இந்தக் கருவிகள் ஒருவரது உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க உதவுகின்றன என்பது நிரூபணமாகியுள்ளது. இதில் முக்கியமானது இந்தக் கருவிகள் ஈ.சி.ஜி எப்படி இருக்கிறது, இதயத் துடிப்பில் உள்ள மாற்றங்கள் என்ன, ஒருவரது உடற்பயிற்சியின் தேவை என்ன, உடலில் போதுமான ஆக்ஸிஜன் அளவு இருக்கிறதா என்பதை எல்லாம் கண்காணிக்க உதவுகின்றன என்பதில் சந்தேகமில்லை. எதிர்காலத்தில் இந்தக் கருவிகள் மேலும் மேம்பட்ட வடிவில் பயன்பாட்டிற்கு வரும். ஆனால், 9 ஆயிரம் அடிகள் கட்டாயம் நடந்தால் மாரடைப்பு வருவது 50 சதவிகிதம் குறையும் என பொதுப்படையாகச் சொல்லிவிட முடியாது.

உடல் உழைப்பு குறைவாக இருக்கும் வேலைகளைச் செய்வோருக்கு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், அதனைக் கண்காணிக்கவும் நடக்கும் தூரத்தைக் கணக்கிட இந்தச் செயலிகள் உதவுகின்றன. குறைந்தது ஒரு நபர் 13 ஆயிரம் அடிகள் வரை நடந்தால் நல்லது என கூற முடியும், இவை ஒருவரை ஊக்கப்படுத்த உதவலாம்.  ஆனால், அனைவருக்கும் இது பொருந்தாது. இதய நோய் உள்ளவர்கள், வயதானவர்களுக்கு இப்படியான அளவுகோல்கள் உதவலாமே தவிர, இளைஞர்களுக்கு இது பொருந்தாது. அவர்கள் தங்கள் இலக்கை 9 ஆயிரம் அடிகளாக சுருக்கிக்கொள்ளத் தேவையில்லை” என்றவர் நடைப்பயிற்சிக்கும் இதய நலத்துக்குமான தொடர்பு குறித்து கூறினார்.

 

``நடப்பதற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு என்றால், நம் முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியில் உள்ள தசைகளுக்கும், நமது இதயத்திற்கும் நரம்புகள் மூலம் தொடர்பு உள்ளது. நடப்பதால் தசைகளின் செயல்பாடு ஆக்டிவ்வாக இருக்கும், அதன் மூலம் இதயத்தின் செயல்பாடு அதிகரிக்கும். இந்தத் தசைகளின் செயல்பாடு அதிகரிக்க வேண்டும் என்றால், ஒன்று நடக்க வேண்டும் அல்லது ஓட வேண்டும். தொடர்ந்து நடப்பதன் மூலம் இதயத்தில் இருக்கும் சிறிய அளவிலான அடைப்புகள் கூட நீங்கும் வாய்ப்பு உள்ளது.

40 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி என்பது உடற்பயிற்சியே கிடையாது. 50 வயதுக்கும் குறைவானவர்கள் ஜிம், ஜாகிங் என தங்களால் இயன்ற அளவுக்கு உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி என்பதே 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், உடல் நலக்குறைபாடு உள்ளவர்களுக்கும் மட்டுமே அவசியமாகிறது. அதனால்தான், இந்த 9 ஆயிரம் அடிகள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்கிற அளவுகோல் அனைவருக்கும் பொருந்தாது என்று கூறுகிறோம். 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குமே கூட 9 முதல் 13 ஆயிரம் அடிகள் வரையும், அதற்கு இணையான நேரமும் நடக்கலாம்.  

40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இதைவிட 10 மடங்கு கடுமையான உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும், குறைந்தது ஓட வேண்டும். குறைந்தது 45 நிமிடங்கள் வரை வேகமாக நடப்பது சிறந்தது. 45 நிமிடங்கள் ஒரே நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது என்பதை காலை 30 நிமிடங்கள், மாலை 30 நிமிடங்கள் என பிரித்துக்கொண்டு, அதிலும் 15 நிமிடங்கள் வேகமாக நடக்கவும், 15 நிமிடங்கள் ஓடவும் செய்யலாம். எப்படியாயினும் உடல் நலத்தைப் பேண அவசியம் உடல் உழைப்பு தேவை என்பதை அனைவரும் உணர வேண்டும்” என்கிறார் குருபிரசாத்.

தினமும் 9 ஆயிரம் அடிகள் நடைபயிற்சி மாரடைப்பைத் தடுக்குமா? - மருத்துவர் விளக்கம் | Does walking 9,000 steps a day prevent heart attacks? - Vikatan

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.