Jump to content

தலாய் லாமாவை வரவேற்பதை கடுமையாக எதிர்க்கும் சீனா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலாய் லாமாவை வரவேற்பதை கடுமையாக எதிர்க்கும் சீனா

image_84b28baee7.jpg

திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா, இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டும் என்ற வேண்டுகோள், இலங்கையில் உள்ள பௌத்தமதத் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தின் பாராம்பரிய சிறப்புகள் மிகுந்த இலங்கையில் இருந்து இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

தலாய் லாமா இலங்கைக்கு வருகைத்தருவாராயின் அது இங்கு வாழும் பௌத்த மக்களுக்கு பெரும்பேறாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதுமாதிரமன்றி, உலகில் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்ற நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் மத மற்றும் பௌத்த கலாசார நல்லுறவுகளை வலுப்படுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படுமென்று பௌத்தமதத் தலைவர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.

அது மட்டுமன்றி இலங்கையில் மதத்தலங்களைத் தரிசிப்பதற்காக வருகைதருகின்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை தலாய் லாமாவின் வருகையின் மூலம் இன்னுமின்னும் அதிகரித்துக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டுமென்று ராமாண்ய மகாசங்கத்தின் பிரதமகுரு மாஹூல்வேவே விமல தேரர் தலைமையிலான பிக்குகள் குழு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தலாய் லாமா, இந்தியாவின் புத்தகாயாவுக்கு விஜயம் செய்திருந்தார். அவர் அங்கு சென்றதன் பின்னர், புத்தகாயாவுக்கு திருதல யாத்திரை செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அதனை கருத்தில் கொண்டே இலங்கை பௌத்த பிக்குகள், தலாய் லாமாவை இலங்கைக்கு வருகைதருமாறு அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

image_15ef3f74b3.jpg

இலங்கை பொருளாதார ரீதியில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில், தலாய் லாமாவின் வருகையானது பொருளாதார ரீதியில் அனுகூலங்களை ஏற்படுத்தும். அத்துடன் இலங்கையில் வாழும் பௌத்தர்களுக்கு ஆன்மீக ரீதியில் பெரும் நன்மையளிப்பதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் புத்தகயாவுக்கு விஜயம் செய்திருந்த இலங்கையின் பிக்குகள் குழுவின் தலைவரே, தலாய் லாமா, இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எனினும், அவரது வருகைக்கு சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இலங்கையின் பௌத்த பிக்குகள் விடுத்த கோரிக்கையை, தலாய் லாமா ஏற்றுக்கொண்டாரா அல்லது நிராகரித்துவிட்டாரா என்பது தொடர்பிலான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பௌத்த மதத்துக்கு எதிராக, சீன கம்யூனிஸ்ட் அரசு முயற்சித்து வருவதாக திபெத் பௌத்த ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கருத்துத்தெரிவித்திருந்தார்.

சீன இராணுவம் திபெத் பூமியை 1949 இல் ஆக்கிரமித்திருந்தது. இதன்பின்னர் சீன இராணுவத்தின் பிடியில் இருந்து 1959 ஆம் ஆண்டு தப்பித்த தலாய் லாமாவும் அவரது ஆதரவாளர்களும் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். அன்றுமுதல், இந்தியாவின் இமாச்சல பிரதேச தர்மசாலாவில் தலாய் லாமா வசித்துவருகின்றார்.

இந்தியாவின் இமாச்சல மலைப்பிரதேச நாடுகளில் பௌத்த மதம் வியாபித்து பரவியுள்ளது. குறிப்பாக சீனாவின் மங்கோலியாவில் பௌத்த மதம் செழித்து வளர்ந்துள்ளது. ஆனால், பெளத்த மதத்தை சீன கம்யூனிஸ்ட் அரசு விஷமாகவே கருதுகின்றது. பௌத்த மதத்தை அழிப்பதற்கு தீவிர முயற்சிகளில் ஈடுபடுகின்றது. என்றாலும், அந்த மதத்தை அழிப்பதற்கு முடியவில்லை.

சீனாவை பொறுத்தவரையில், திபெத் மற்றும் சீனாவில் பௌத்தமத மடாலயங்கள் பலவற்றை அழித்துள்ளது.

‘பனி பூமி’ என்றழைக்கப்படும் திபெத் பல்வேறான துயரங்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கின்றது. திபெத்தின் துயரங்கள் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் பௌத்த மதத்தை அறிந்துகொண்டிருக்கின்றது. இலங்கைக்கு தலாய் லாமா வருகைதருவாராயின், இலங்கையை பற்றி அறிந்துகொள்ளாதவர்கள் கூட அறிந்துகொள்வார்கள் என்பது உண்மையாகும்.

இந்தியாவுக்கு சிறப்பு சலுகைகளுடன் வருகைதந்த தலாய் லாமாவை, இந்தியா தன்பிடிக்குள் வைத்திருப்பது சீனாவுக்குப் பிடிக்கவில்லை. அவர், இந்தியாவில் இருந்துகொண்டு தங்களுக்குத் தொல்லை தருகின்றார் என சீனா கருதுகின்றது. அதனால்தான், தலாய் லாமாவை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு சீனா விரும்புகின்றது.

image_e0c1325823.jpg

தலாய் லாமாவின் பௌத்த மத நிறுவனம் 1,400 ஆண்டுகள் பழமையானவை. ஒவ்வொரு தலாய் லாமாவும் இறந்த பின்னர் அவர் மற்றொரு பிறவியில் லாமாவாக பிறப்பார் என்பது திபெத்தியர்களின் நம்பிக்கையாகும்.

தற்போதைய தலாய் லாமா 14ஆவது தலாய் லாமா ஆவர். இவருக்கு இப்போது 85 வயதாகிறது. இவர் மரணித்துவிட்டால். அவரது வாரிசை கண்டுப்பிடிப்பது பெளத்த மதத் துறவிகளான லாமாக்களின் பணியாகும்.

ஆனால், இந்த கண்டுப்பிடிக்கும் செயல்முறையைக் கட்டுப்படுத்த சீனா விரும்புகின்றது. தனக்கு இணக்கமான தலாய் லாமாவை நியமிக்கவும் சீனா விரும்புகின்றது. எனினும், அடுத்த தலாய் லாமா யார் என்பதை திபெத்தியர்களே தீர்மானிக்கவேண்டும் என்பதை அமெரிக்கா விரும்புகின்றது.

எனினும், தலாய் லாமாவின் இலங்கை விஜயம் இன்னுமே உறுதிப்படுத்தபடவில்லை. தலாய் லாமாவின் இலங்கை விஜயத்துக்கு சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றது.

இந்நிலையில்,  மல்வத்து மகாநாயக்க தேரரை கண்டியில் சந்தித்த கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹூ வேய்,
 

திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை எந்தவொரு வெளிநாடும் வரவேற்பதை சீன அரசாங்கமும் மக்களும் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தன்னை ஓர் எளிய பௌத்த துறவி என்று கூறிக்கொள்ளும் 14ஆவது தலாய் லாமா உண்மையில் ஓர் எளிய துறவி அல்ல என்றும் திபெத்தை சீனாவில் இருந்து பிரிக்க முயற்சித்து வரும் அவர், மதப் பிரமுகர் போல் மாறுவேடமிட்டு அரசியல் நாடு கடத்தப்பட்டவர் என்றும் ஹூ மகாநாயக்கரிடம் தெரிவித்தாக சீன தூதரகம் தனர் டுவிட்டரில் செவ்வாய்க்கிழமை (17) வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திபெத் தன்னாட்சிப் பகுதி உட்பட சீனாவின் அரசாங்கமும் மக்களும் தலாய் லாமாவை எந்தப் பெயரிலும் பெறுவதைக் கடுமையாக எதிர்க்கின்றனர் என்று மல்வத்து மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரிடம் கடந்த புதன்கிழமை (11) ஹூ வேய் குறிப்பிட்டுள்ளார் என சீன தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவும் இலங்கையும், திபெத் தொடர்பான பிரச்சினை உட்பட பரஸ்பரம் முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் உறுதியாக ஆதரவளித்து வருவதாக வலியுறுத்திய ஹு, இரு தரப்பினரும் குறிப்பாக பௌத்த சமூகங்கள் திபெத்திய சுதந்திரத்தை ஊக்குவிக்கவும், சீன-இலங்கை வரலாற்று உறவுகளை சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும் தலாய் லாமாவின் இலங்கைக்கான பயணத்தைத் தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பல பிக்குகள் தலாய் லாமாவை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படும் வதந்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த  மகாநாயக்க தேரர், சீனா இலங்கையின் நெருங்கிய நண்பர் என வலியுறுத்தினார்.

சீனாவுடனான நமது உறவுகள் பாதிக்கப்படக் கூடாது என்றும் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சீனா வழங்கிய பங்களிப்பின் முக்கியத்துவத்தை அரசாங்கம் புரிந்து கொள்வது நல்லது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையர்களாகிய நாம் சீனாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு நாங்கள் எப்போதும் கடன்பட்டுள்ளோம் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து அதிகமான பிக்குகள் மற்றும் பிக்குனிகள் சீனாவுக்கு விஜயம் செய்ய முடியும் என்றும் மேலும் சீனாவில் இருந்து அதிகமான பக்தர்கள் இலங்கை மற்றும் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்ய முடியும் என தான் நம்புவதாகவும் மகாநாயக்கர் தெரிவித்ததாக சீன தூதரக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
image_267d7a0e5e.jpg

இதேவேளை, புத்த கயாவில் பௌத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை இலங்கையின் உயர்மட்ட பௌத்த பிக்குகள் குழு கடந்த ஆண்டு டிசெம்பர் 27 திகதி சந்தித்தது. அதேபோன்று அன்றைய நாட்களில் புத்த கயாவில் பெரும் திரளான உள் நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்  காணப்பட்டனர்.

தலாய் லாமா ஏன் இந்தியாவிற்கு வந்தார்? பெரும் திரளான பன்னாட்டு மக்களும் ஏன்  இங்கு வருகின்றனர் போன்ற விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என ஸ்ரீ சம்புத்த சாஸனோதய சங்க சபை தலைவர் வணக்கத்திற்குரிய வஸ்கடுவ மகிந்தவங்ச மகாநாயக்க தேரர், தலாய் லாமாவை சந்தித்ததன் பின்னர் தெரிவித்திருந்தார்.

தலாய் லாமாவின் புனிதத்திற்கு இந்தியா உதவியது. இதன் காரணமாகவும் அவரது புனிதத்துவத்தின் பிரகாரமும் இன்று இந்தியாவிலும் புத்த கயாவிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். கடும் குளிர் மிக்க இந்த நாட்களில்  பொதுவாக மக்கள் வருவதில்லை. ஆனால் தலாய் லாமாவின புனிதத்தால் மக்கள் வருகின்றார்கள். இதனால் புத்தகயா பல வழிகளில் பயனடைகிறது என குறிப்பிட்ட  ஸ்ரீ சம்புத்த சாஸனோதய சங்க சபை தலைவர் வணக்கத்திற்குரிய வஸ்கடுவ மகிந்தவங்ச மகாநாயக்க தேரர், திபெத் பலன் பெற்றதா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.

எனவே தான் தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் செய்வது அனைத்து வகையிலும் நாட்டிற்கு நல் வழிகளை காட்டும். குறிப்பாக இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கவும் தலாய் லாமாவின் விஜயம் உதவும் என இலங்கை பிக்குகள் குழு குறிப்பிட்டுள்ளது.

தலாய் லாமா புத்த கயாவிற்கு சென்றது போல் இலங்கைக்கும் வர வேண்டும். அவர் இலங்கைக்கு வந்தால் பல ஆயிரக்கணக்கான பன்னாட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் வருவார்கள். இது பொருளாதாரத்தை மேம்படுத்தும். ஏனெனில் இலங்கை நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது. மேலும் அவர் இலங்கைக்கு வருவதால் நாங்கள் ஆசீர்வதிக்கப்படுவோம், பொருளாதாரமும் உயரும் எனவும் கூறினார்.

தலாய் லாமாவை சந்திப்பதற்கு இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயாவின் பிரதம பீடாதிபதி மகுலேவே விமல மகாநாயக்க உட்பட தேரர்களும் சென்றிருந்தனர். புனித தலாய் லாமா ஓர் ஆன்மீகத் தலைவர். அவரை அங்கு சந்தித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். எங்களுக்கு ஆன்மீக செயல்பாடுகள் பற்றிய புரிதல் உள்ளது. எனவே, இலங்கையைச் சேர்ந்த மகாசங்கத்தினராகிய நாங்கள் அவரது புனிதத்துவத்தை கண்டு மகிழ்ச்சியடைந்ததாக  ராமஞ்ஞ மகா நிகாயா கூறியது.

வண. அஸ்கிரி பீடத்தின் தேரர் முருத்தேனிய தம்மரதன தேரர் கூறுகையில், உண்மையில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், புத்தர் ஞானம் பெற்ற இடமான புத்தகயா எங்கள் தாய்நாடு போன்றது. எனவே தான் இங்கு அதிக தடவைகள் வருகிறோம். இது எனது முதல் முறையல்ல. பல முறை வந்துள்ளேன்.  தலாய் லாமாவிடம் ஆசி பெறுவதற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான லாமாக்கள் மற்றும் துறவிகள் வந்துள்ளனர். அவர்களையும் சந்திக்கும் அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்தது என்றார்.

அவர் மேலும் கூறுகையில், நாங்கள் அங்கு ஆயிரக்கணக்கான மக்களைக் கண்டோம். குறிப்பாக தலாய் லாமாவின் உரையைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். மறுப்புறம் அவருடைய போதனைகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்தோம். இந்த சந்தர்ப்பத்தை பெரும் அதிஷ;டமாகவே கருதுகிறோம் என்றார்.  

இலங்கை 2022 இல் எதிர்கொண்ட நிதி நெருக்கடியிலிருந்து மீள முடியாது தீவு தேசத்தில் அரசியல் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இந்தியா வழங்கியது. இதனால் இலங்கையால் ஒரளவிற்கு மூச்சு விட முடிந்தது என பௌத்த தேரர்கள் குழு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிற்கு வருகை தந்த உயர்மட்ட இலங்கை பௌத்த பிக்குகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்ததோடு, சவால்களை சமாளிக்க தங்கள் ஆன்மீகத் தலைவவரான  தலாய் லாமாவை இலங்கைக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொண்டனர்.

எவ்வாறாயினும் திபெத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமாவை இதற்கு முன்னரும். இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  ஆனால் அரசியல் காரணங்களால் அது முடியாமல் போனது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் ஆதிக்கத்துக்கு உள்ளாகியிருந்தமையே இதற்கான காரணமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தலாய் லாமாவின் இலங்கை விஜயம் குறித்து பேசப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரரின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாரா என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.

அவரை ஆன்மீகத் தலைவராகப் பார்ப்பதா அல்லது அரசியல் தலைவராகப் பார்ப்பது என்பது தொடர்பிலும் மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இலங்கை ஒரு அமைதியான பௌத்த நாடு என்பதால் தலாய் லாமாவும் அங்கு வரவேண்டும் என்று தாங்கள் அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

image_3007bd645f.jpg

கண்டி, அனுராதபுரம் செல்ல விருப்பினார்

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரும் போது, தலாய் லாமாவும் தமது நாட்டுக்கு வர வேண்டும் என்பது பௌத்தர்களின் விருப்பமாக உள்ளது என்று உபதிஸ்ஸ தேரர் கூறுகிறார்.

கடந்த 1950ம் ஆண்டு முதல் இலங்கைக்கு வரவேண்டும் எனும் ஆர்வம் தலாய் லாமாவிடம் இருந்தாலும், அதை நிறைவேற்ற அவர் எடுத்த முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை எனவும் உபதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

கண்டியிலுள்ள தலதா மாளிகை மற்றும் அனுராதபுரத்திலுள்ள புனிதமான அரச மரத்தை வழிபட வேண்டும் எனும் தனது ஆவலை தங்களிடம் தலாய் லாமா வெளிப்படுத்தியாக அவர் கூறுகிறார்.

அவரை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என தாங்கள் அரசிடம் கோரவுள்ளதாகவும், பௌத்த மதத் தலைவர்களுடனும் இது குறித்து பேசி வருவதாகவும் இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் கூறியிருந்தார்.

எனினும், திபெத்தின் புத்த மதத் தலைவர் தலாய்லாமாவின் வருகைக்கு, அன்றிருந்த இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்திருந்தது. அதற்கு  சீனா வரவேற்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலாய்லாமா எந்த நாட்டிற்கும் செல்வதற்கு, நாங்கள் எப்போதுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அவர் குறித்த நிலைப்பாட்டில், தெளிவாக உள்ளோம். இதை, பல்வேறு தருணங்களிலும் வெளிப்படுத்தியுள்ளோம் என்று அன்றும் சீனா தெரிவித்திருந்தமை கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயங்களாகும்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தலாய்-லாமாவை-வரவேற்பதை-கடுமையாக-எதிர்க்கும்-சீனா/91-310893

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலாய் லாமா: சீன அரசியலால் சுற்றி வளைக்கப்பட்ட ஓர் ஆன்மீகத் தலைவர்

image_c4990e4bba.jpg

தலாய் லாமா: சீன அரசியலால் சுற்றி வளைக்கப்பட்ட ஓர் ஆன்மீகத் தலைவர்

“ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல் இயற்கையின் அடிப்படை விதியாகும். மனிதர்கள் போன்ற உயர் ரக உயிரினங்கள் மட்டுமன்றி மதம், கல்வி, சட்டம் எதுவும் அறியா புழு பூச்சிகள் கூட, கூடி வாழ்வதன் அவசியத்தை உணர்ந்து இருக்கின்றன. கடல்கள், மேகங்கள், காடுகள், மலர்கள் எல்லாம் இயற்கையின்  இந்தத் தத்துவத்தையே முன் நிறுத்துகின்றன. ஒருவரோடு ஒருவா் சார்ந்து வாழ்தலில் தான் மனித இனத்தின் இருப்பு அடங்கி இருக்கிறது.” இப்படி சொல்லியிருப்பவா் சீனாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் 14வது தலாய் லாமா தான்.

தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. திபெத்தின் பௌத்த ஆன்மீகத் தலைவராக இருக்கும்  தலாய் லாமா இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ள வேண்டும் என்ற இலங்கையின் பௌத்த பிக்குகள் கோரிக்கை விட்டிருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை முன்னேற்றவும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், திபெத்தின் ஆன்மீகத் தலைவரான  தலாய் லாமாவை, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ராமன்ய மகா சங்கத்தின் பிரதம குரு மாஹூல்வேவே விமல தேரர் தலைமையிலான பிக்குகள் குழு அழைப்பு விடுத்திருந்ததாக  இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

தலாய் லாமா இந்தியாவின் புத்தகாயாவுக்கு விஜயம் செய்ததன்  பின்னர், அங்கு வருகை தருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை  கருத்தில் கொண்டே, தலாய் லாமாவிற்கு இலங்கை பிக்குகள் அழைப்பு விடுத்துள்ளதாகவும்  அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தலாய் லாமா தொடா்பான இந்த தகவல் சீனாவுக்கு பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.  குறித்த செய்தியால் சீற்றம் கொண்ட இலங்கைக்கான சீன தூதரகம் கடும் அதிருப்தியை வெளியிட கண்டி நகருக்கே ஓடிச் சென்றது. மகாநாயக்க தேரா்களிடம் மண்டியிட்டு தனது நிலைப்பாட்டை முன்வைத்தது.

தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் செய்வது தொடா்பான செய்தி, சீனாவுக்கு ஏன்  சா்ச்சைக்குரிய விவகாரமாய் மாறியது? சீனா  தலாய் லாமாவை வெறுப்பதின் பின்னால் உள்ள அரசியல் என்ன என்பதை  அலசுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

கண்டி மல்வத்து பீடத்தின் பிரதம பிக்கு  திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை,  சந்தித்து கலந்துரையாடிய போதே, இலங்கைக்கான சீன தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹூ வெய் தலாய் லாமாவின் இலங்கை வருகை தொடா்பான தனது கடும் ஆட்சேபனையை தெரிவித்தார்.

தலாய் லாமாவின் இந்த விஜயத்தின் காரணமாக சீன – இலங்கை உறவுகள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்படலாம் என சீனத் தூதரக அதிகாரி தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன.

தலாய் லாமா என்ற பெயரில் உள்ள நபர்களை சர்வதேச நாடுகள் மிக அதிகமாக வரவேற்பதை கண்டிப்பதாக ஹூ வெய் தெரிவித்திருந்தார். 14ஆவது தலாய் லாமா ஒரு துறவியல்ல என்றும்,  மத ரீதியான வேடம் தரித்த அரசியல் பிரமுகர் எனவும்,  சீனாவுக்கு எதிரான  விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு திபெத்தை சீனாவிலிருந்து பிரிக்க முயற்சிக்கும் ஒருவா் எனவும் ஹூ வெய் மகாநாயக்க தேரரிடம் தொிவித்திருந்தாா்.

சீனா,  இலங்கையுடன்  தொடர்ந்தும் ஒற்றுமையாக செயற்படுவதாகவும் அதற்கமைவாக இரு நாட்டு பௌத்த மக்களும் தலாய் லாமாவின் விஜயத்தை தடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டிருந்ததோடு, சீனாவுக்கும்  இலங்கைக்கு இடையிலான வரலாற்று உறவுகளை தலாய் லாமாவின் வருகை பாதிப்படையச் செய்யும் எனவும் அவா் எச்சரிக்கை தொனியில் கருத்து வெளியிட்டிருந்ததாக ஊடக செய்திகள் கூறியிருந்தன.

இது தொடர்பில் கருத்து தொிவித்த  மல்வத்த பீட மகாநாயக்கா்  திப்பட்டுவாவே சுமங்கல தேரா், சீன-இலங்கை உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தாம் எதனையும் செய்யப்போவதில்லை என சீன அதிகாரிக்கு  உறுதி மொழி வழங்கியிருந்தாா்.

தலாய் லாமாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இந்த மோதல்கள் மத, கலாசார, வரலாற்று ரீதியிலான முரண்பாடுகளின் வேர்களை ஆழமாக பதித்த, ஒரு சிக்கலான பிரச்சினையாக பாா்க்கப்படுகிறது.

தலாய் லாமா திபெத்தின் ஆன்மீகத் தலைவராகவும், திபெத்தின் தேசிய அடையாளமாகவும்  இருந்து வருகிறார்.   தலாய் லாமா அவரைப் பின்பற்றுபவர்களால் இரக்கத்தின் அவதாரமாகவும் கருதப்படுகிறார்.

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து சீனா  திபெத்தின் மீது உரிமையைக் கோரி வருவதோடு, பௌத்த ஆன்மீக தலைவரான   தலாய் லாமாவை ஒரு பிரிவினைவாத அச்சுறுத்தலாகவும் பாா்த்து வருகிறது.

1950களில், சீனா திபெத்தின் மீது கட்டுப்பாடுகளையும் அடக்குமுறைகளையும்  செலுத்தத் தொடங்கியது. இராணுவ தளங்களை திபெத்தில் அதிகமாக நிறுவியது. சீனாவின் பெரும்பான்மை இனமான ஹான் இன சீனர்களை திபெத்தில்  அதிகமாக குடியேற்றியது. சீனாவின் இந்த நடவடிக்கைகள்  திபெத்திய சுதேச மக்களிடையே பரவலான எதிர்ப்புகள் உருவாக காரணமாகியது.  இது திபெத்திய மக்கள் மத்தியில் எழுச்சிகளுக்கு வழிவகுத்தன. இவ்வாறு எழுந்த  திபெத்திய மக்களின் எழுச்சியை சீன அரசு அடக்குமுறையைப் பயன்படுத்தி இன்று வரை ஒடுக்கி வருகிறது.

திபெத் மீது நிகழ்த்தப்ட்ட  சீனாவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னா், 1959ம் ஆண்டு திபெத்தை விட்டு வெளியேறிய தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலம் பெற்றார். அன்றிலிருந்து, அவர் இந்தியாவில் இமாசல பிரதேச மாநிலத்தில் தர்மசாலாவில்  வசித்து வருகிறார்.

தலாய் லாமா  சர்வதேச சமூகத்தில் ஒரு முக்கியமான பௌத்த துறவியாக கருதப்படுகிறாா்.  தலாய் லாமா திபெத்திய மக்களின் உரிமைகள் மற்றும் சுயாட்சிக்காக குரல் கொடுப்பவராக இருந்து வருவதோடு,  திபெத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பையும், அதன் அடக்குமுறை கொள்கைகளையும் கடுமையாக எதிா்த்து வருகிறார்.

இதேவேளை, தலாய் லாமா சீனாவிலிருந்து திபெத்தை பிரிக்க முயல்வதாக குற்றம் சாட்டும் சீனா, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் பல  முயற்சிகளை மேற்கொண்டு  வருகிறது.

தலாய் லாமாவை சீனா ஓா் ஆன்மீக தலைவராக பாா்க்காமல், ஓா் அரசியல் சதிகாரா் என்ற கண்ணோட்டத்தில் பாா்க்கிறது. தலாய் லாமா தொடா்பான சீனாவின் அணுகுமுறை ஒரு மதப் பிரச்சினை என்பதையும் ஓா் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஏனெனில்,  தலாய் லாமா திபெத்தில் சீனா நிகழ்த்தி வரும் அடக்குமுறை ஆட்சியை கடுமையாக விமர்சிப்பவராக இருக்கிறாா். அதுமட்டுமல்லாமல், திபெத்  பிராந்தியத்திற்கு சுயாட்சி வேண்டும் என்று வாதிட்டு வருகிறாா்.

தலாய் லாமாவை பிரிவினைவாதியாக கருதும் சீனா,  திபெத்தில் அவா் வன்முறையைத் தூண்டி, கலவரத்தைத் தூண்டி வருவதாகவும் குற்றம் சாட்டி வருகிறது.  தலாய் லாமாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த சீனா பலவிதமான  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அவரது நடமாட்டத்தையும் அவரைப் பின்பற்றுபவர்களின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்துவதில் சீனா கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.

சீனாவுக்கும் தலாய் லாமாவுக்குமிடையிலான இந்த மோதல்கள் பல ஆண்டுகளாக பல முனைகளில் இடம்பெற்று வருகின்றன. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க வியடமாக பாா்க்கப்படுவது,  தலாய் லாமாவின் மறுபிறவி தொடா்பான பிரச்சினையாகும்.

திபெத்திய புத்த மத பாரம்பரியத்தின் படி, தலாய் லாமா என்ற ஆன்மீக தலைமை,  தொடர்ச்சியான வருகின்ற ஆன்மீகத் தலைமைத்துவத்தின் மறு அவதாரம் என்று நம்பப்படுகிறது. மேலும், திபெத்தியா்களிடம் அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு  ஒரு முக்கியமான மத, கலாசார, அரசியல் செயல்முறையாக பாா்க்கப்படுகிறது.

இது இப்படியிருக்க, அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் பூரண உரிமை  தனக்கே இருப்பதாக சீனா வாதிட்டு வருகிறது.  இந்த உரிமைக் கோரல்  சீனாவிற்கும் திபெத்திலிருந்து  நாடு கடத்தப்பட்டவர்களுக்கும் இடையே குரோதத்தையும், பெரும் விரிசலையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

தலாய் லாமாவை பின்பற்றுபவா்கள், அடுத்த தலாய் லாமாவை தொிவு செய்வது  திபெத்திய பாரம்பரிய,  பௌத்த நடைமுறைகளின்படி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வாதிட்டு வருவதோடு, சீனாவுக்கு அதற்கான உரிமை கிடையாது என்றும் கூறி வருகின்றனா்.

என்ற போதிலும், கடந்த 2019ம் ஆண்டு சீனா ஓா் அறிவித்தலை வெளியிட்டது. அதில்  அடுத்த தலாய் லாமாவை தாமே தெரிவு செய்யப் போதாகவும்,  அதற்கான  உரிமை தனக்கே இருப்பதாகவும்  சீனா பகிரங்கமாக அறிவித்தது. அது மட்டுமல்லாமல்,  இந்த விவகாரத்தில் இந்தியா ஒருபோதும் தலையிடக் கூடாது என்று  சீனா இந்தியாவை அந்த அறிக்கையில் எச்சரித்தும் இருந்தது.

தற்போதைய  தலாய் லாமா, அந்த வரிசையில்  14வது தலாய் லாமாவாக கருதப்படுகிறாா். அவாின் வயது தற்போது  87 ஐ தாண்டியிருக்கிறது.  இதன் காரணமாக அடுத்த தலாய் லாமாவை தோ்வு செய்வதில் இரு தரப்பினரிடையேயும் சா்ச்சைகளையும், முறுகல்களையும் தோற்றுவித்திருக்கிறது.

சீனாவுடனான இந்த மோதல்களின் விளைவாக,  திபெத்தில் மனித உரிமை மீறல்களை சீனா அதிகம் நடாத்தி வருவதாக சா்வதேச நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. சித்திரவதைகள், தன்னிச்சையான கைதுகள், அநீதியான தடுப்புக்காவல்கள், மத அடக்குமுறைகள் உள்ளிட்ட பல்வேறு  மனித உரிமை மீறல்கள் தொடா்பாக  சீனாவின் மீது பரவலான குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

சமீப காலங்களில், தலாய் லாமாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல்கள் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

திபெத்திய போராட்டக்காரா்கள் தமக்குத் தாமே தீமூட்டி தற்கொலை செய்து கொள்ளும் எதிா்ப்பு நடவடிக்கைகள் எழுச்சி பெற்று வருகின்றன.  கடந்த 2009 பெப்ரவரி மாதம் 27ம் திகதி முதல் 2022 மே மாதம் வரை, சீன ஆட்சிக்கு எதிராக 160க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் இவ்வாறு தமக்குத் தாமே தீமூட்டி தீக்குளித்து மரணித்துள்ளனா்.

தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் இந்த செயற்பாட்டை கண்டித்துள்ள தலாய் லாமா, விடுதலைக்கான அவா்களின் துணிச்சலை பாராட்டியும் இருந்தாா்.  திபெத்தியா்களை இந்த நிலைக்கு தள்ளியுள்ள சீனாவின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கோரி வருகிறாா். எது எப்படியிருப்பினும்,  தலாய் லாமா திபெத்தின் தேசிய அடையாளமாகவும்  மற்றும் எதிர்ப்பின் சக்திவாய்ந்த அடையாளமாகவும் இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.

தலாய் லாமாவின் இலங்கை விஜயம் தொடா்பாக எழுந்துள்ள சா்ச்சையும், சீனத் தூதரகத்தின் தீவிர எதிர் வினையாற்றலும் மேற் சொன்ன அரசியல் பின்னணிகளோடு பார்க்கப்பட வேண்டும்.

2015ஆம் ஆண்டு கூட தலாய் லாமாவின் இலங்கைக்கான பயணம் ஒன்று ஏற்பாடாகி இருந்தது.  இதே போன்று சீனாவின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் அன்று அதுவும் கைவிடப்பட்டது.  “ஒரே சீனக் கொள்கை” க்கு இணங்கி, இந்த முடிவை எடுத்ததாக அப்போதைய மைத்திரி - ரணில் அரசாங்கம் அறிவித்திருந்தது.

தலாய் லாமாவின் இலங்கை வருகையை தடுப்பதின் பின்னணியில் தொடா்ந்தும் சீன அரசியலே இருந்து வருகிறது. மஹிந்த ராஜபக்ஷ அரசு சீனாவுடனான மிகுந்த நட்பை பாதுகாக்கும் நோக்கில் தலாய் லாமா விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது.  2015ம் ஆண்டில் ஆட்சியிலிருந்த  மைத்திரி - ரணில் நல்லாட்சி அரசும் ராஜபக்ஷா்களின் அதே கொள்கையையும் அணுகுமுறையையும் கடைப்பிடித்தது. 

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையில் சீனாவின் நிலைப்பாட்டை எதிா்பாா்த்து நிலைகுலைந்து போயிருக்கும் இலங்கைக்கு தலாய் லாமா விவகாரம் ஒரு புதிய தலை வலியை கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை சா்வதேச நாணய நிதியத்திலிருந்து பெறுவதற்கு இலங்கைக்கு  சீனாவின் கடன் மறுசீரமைப்பு  சான்றிதழ்  மிகவும் முக்கியமானது.

தலாய் லாமாவுக்கு இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர் இலங்கைக்கு பயணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று திபெத்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் அண்மையில் ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார்.

த பெடரல் செய்தித்தளம் இந்த செய்தியை பிரசுரித்திருந்தது.

“சீனாவின் கடும் ஆட்சேபனையை அடுத்து தலாய் லாமா இலங்கை செல்வது நல்லதா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள திபெத்தின் அதிகாரி, இந்த கேள்வியை இலங்கை மக்களிடமே கேட்க வேண்டும் என்று பதிலளித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தலாய்-லாமா-சீன-அரசியலால்-சுற்றி-வளைக்கப்பட்ட-ஓர்-ஆன்மீகத்-தலைவர்/91-311333

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.