Jump to content

சூப்பர் காரை வடிவமைத்த தாலிபான் அரசு - வியப்பில் உலகம்!


Recommended Posts

சூப்பர் காரை வடிவமைத்த தாலிபான் அரசு - வியப்பில் உலகம்!

சூப்பர் காரை வடிவமைத்த தாலிபான் அரசு - வியப்பில் உலகம்!

தாலிபான் ஆளும் ஆப்கானிஸ்தான் தற்போது ஒரு சூப்பர் காரை வடிவமைத்துள்ளது உலகளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.

அதோடு அங்கு தாலிபானுக்கு எதிரான அமைப்புகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், தாலிபான் ஆளும் ஆப்கானிஸ்தான் தற்போது ஒரு சூப்பர் காரை வடிவமைத்துள்ளது உலகளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த பொறியாளரான முஹம்மது ரஸா அஹ்மதி என்பவர் இந்த சூப்பர் காரை வடிவமைத்துள்ளார்.

தாலிபான்கள் ஆட்சிக்கு வரும் முன்னரே இந்த பணி தொடங்கப்பட்டாலும் தற்போதே இதற்கான இறுதிப்பணிகள் முடிவடைந்து தாலிபான் ஆட்சியில் இந்த கார் வடிவமைப்பு முழுவதுமாக முடிவுக்கு வந்துள்ளது.

இந்த காரை தயாரிக்கும் பணியில் 10 முதல் 12 பேர் கொண்ட குழு ஈடுபட்டதாகவும் டொயோட்டா இன்ஜின் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தாலிபான்கள் ஆட்சிக்கு வரும் முன்னரே இந்த பணி தொடங்கப்பட்டாலும் தற்போதே இதற்கான இறுதிப்பணிகள் முடிவடைந்து தாலிபான் ஆட்சியில் இந்த கார் வடிவமைப்பு முழுவதுமாக முடிவுக்கு வந்துள்ளது.

இந்த காரை தயாரிக்க 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் டொலர் வரை செலவாகியதாகவும் பொறியாளர் முஹம்மது ரஸா அஹ்மதி கூறியுள்ளார்.

இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள வாகனக் கண்காட்சியில் இந்த வாகனத்தையும் பங்கெடுக்க வைக்க தாலிபான் அரசு முயல்வதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில், பலரும் அந்த பொறியாளரை பாராட்டி வருகின்றனர்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியப்பில் உலகம்!

உண்மை தான்.

பெண்களுக்கு கல்வி கற்க ,வேலை செய்ய உரிமைகள் இல்லை. விரும்பிய உடை அணியும் உரிமை கிடையாது. ஆப்கானிஸ்தானிலேயே தங்கியிருந்து சேவைசெய்ய விரும்பிய முன்னாள் பெண் எம்பி சுட்டு கொல்லபடுகிறார்.  டொயோட்டா என்ஜினை பயன்படுத்தி சுப்பர் கார் செய்கிறார்களாம்

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார் அம்சமா இருக்கு, சும்மா சுழருது.........!  👍

நன்றி கல்யாணி......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேசில் ஒரு மெக்கானிக் இருக்கிறார்…

சும்மா புகாட்டி வெய்ரோன் எல்லாம் பிச்சை வாங்கும் அளவுக்கு காரின் வெளிபுறத்தை தானே வடிவமைத்து உருவாக்குவார்.

ஆனால் ஓடிக்கொண்டிருக்கும் போது கியர் கையோட வந்தால் கம்பெனி பொறுப்பல்ல🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

பங்களாதேசில் ஒரு மெக்கானிக் இருக்கிறார்…

சும்மா புகாட்டி வெய்ரோன் எல்லாம் பிச்சை வாங்கும் அளவுக்கு காரின் வெளிபுறத்தை தானே வடிவமைத்து உருவாக்குவார்.

ஆனால் ஓடிக்கொண்டிருக்கும் போது கியர் கையோட வந்தால் கம்பெனி பொறுப்பல்ல🤣

எங்கடை சிலோன் மெக்கானிக்மார் பழைய கிடையன் கார்களையும் புத்தம் புதிசாய்  செய்து பளிச்செண்டு தருவினமெல்லோ....
மோட்டரும் புத்தம் புதிசாய் இருக்கும் :cool:

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சிலோன் மெக்கானிக்மார் பழைய கிடையன் கார்களையும் புத்தம் புதிசாய்  செய்து பளிச்செண்டு தருவினமெல்லோ....
மோட்டரும் புத்தம் புதிசாய் இருக்கும் :cool:

Latest Thank GIFs | Gfycat

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சிலோன் மெக்கானிக்மார் பழைய கிடையன் கார்களையும் புத்தம் புதிசாய்  செய்து பளிச்செண்டு தருவினமெல்லோ....
மோட்டரும் புத்தம் புதிசாய் இருக்கும் :cool:

அதுவும் சிடிபி ல வேலை செய்த ஆட்கள் திருத்த முடியாத வாகனம் எண்டு ஒண்டு இல்லையாமே😎

 

2 minutes ago, suvy said:

Latest Thank GIFs | Gfycat

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அதுவும் சிடிபி ல வேலை செய்த ஆட்கள் திருத்த முடியாத வாகனம் எண்டு ஒண்டு இல்லையாமே😎

 

 

உண்மைதான்.......திருத்துறது ஒன்றும் பெரிய வேலையில்லை......திருத்த முடியாவிட்டால் வேறுயாரும் அதை திருத்தாதவாறு செய்யிறதுதான் பெரிய வேலை.......(ஜோக்)......!  😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கார் வடிவமைக்க கூடிய மெக்கானிக்மார் இருக்கும் போது அதை கண்டுவந்த ஈழத்து அக்காவும், அண்ணாவும் தலிபான்களின் டொயோட்டா என்ஜினை வைத்து சுப்பர் கார் படம் காட்டுதலினால் கவரபடடுளள்ளார்களே.
டொயோட்டா என்ஜின் உயர்ந்த செயல்திறன் கொண்டது. சுழரும் சுற்றும் ஓடும் நீடித்து உழைக்கும். இசையை வெறுக்கும் தாலிபான்களுக்கு டொயோட்டா என்ஜினை வைத்து சுப்பர் கார் படம் காட்டுவதற்கு மொடென் மேற்கத்திய இசையும் தேவைபட்டிருக்கிறது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வீடியோ, graphics  வித்தை போலவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2023 at 00:58, விளங்க நினைப்பவன் said:

வியப்பில் உலகம்!

உண்மை தான்.

பெண்களுக்கு கல்வி கற்க ,வேலை செய்ய உரிமைகள் இல்லை. விரும்பிய உடை அணியும் உரிமை கிடையாது. ஆப்கானிஸ்தானிலேயே தங்கியிருந்து சேவைசெய்ய விரும்பிய முன்னாள் பெண் எம்பி சுட்டு கொல்லபடுகிறார்.  டொயோட்டா என்ஜினை பயன்படுத்தி சுப்பர் கார் செய்கிறார்களாம்

எடுத்துக்கொண்டது பல சகாப்தம்

இஞ்சினும் செய்ததல்ல. 

செய்ததும் ஒன்றே ஒன்று

ஆனால் எடுப்பு மட்டும்??

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2023 at 19:20, விசுகு said:

எடுத்துக்கொண்டது பல சகாப்தம்

இஞ்சினும் செய்ததல்ல. 

செய்ததும் ஒன்றே ஒன்று

ஆனால் எடுப்பு மட்டும்??

இதில் எனக்கு ஏமாற்றத்தை தந்தது என்னவென்றால் ஆப்கானிஸ்தானில் பெண்களை திட்டமிட்டு ஒடுக்கி அவர்கள் வாழ்கையை சீரழித்து வரும் தலிபான்களை எதிர்த்து முன்னுக்கு நின்று குரல் கொடுக்க வேண்டிய தமிழ் அக்கா டொயோட்டா என்ஜினை வைத்து தலிபான்களின் படம் காட்டும் எடுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தது தான்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இதில் எனக்கு ஏமாற்றத்தை தந்தது என்னவென்றால் ஆப்கானிஸ்தானில் பெண்களை திட்டமிட்டு ஒடுக்கி அவர்கள் வாழ்கையை சீரழித்து வரும் தலிபான்களை எதிர்த்து முன்னுக்கு நின்று குரல் கொடுக்க வேண்டிய தமிழ் அக்கா டொயோட்டா என்ஜினை வைத்து தலிபான்களின் படம் காட்டும் எடுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தது தான்.

  

தலிபான்கள் எதையாவது செய்யமாட்டார்களா என்ற ஏக்கத்தின் பாதிப்பாக இருக்கக்கூடும் 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான்களை போல் ஏனைய அரபு நாடுகளும் பெண்களை அடக்கி வைத்துள்ளார்கள். ஆனால் ஜனநாயகவாதிகள் அவற்றை கண்டு கொள்வதில்லை. ஏனென்றால் அமெரிக்க விசுவாசம். :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.