Jump to content

மஹிந்த , கோட்டா உள்ளிட்ட நால்வர் மீதான தொடர்ச்சியான தடைக்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் கனடா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த , கோட்டா உள்ளிட்ட நால்வர் மீதான தொடர்ச்சியான தடைக்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் கனடா

21 JAN, 2023 | 07:05 PM
image

 

(எம்.மனோசித்ரா)

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான தடையை விதிப்பதற்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சிகளில் கனடா ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சர் மெலின் ஜோலி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட சிவில் யுத்தத்தின் போது மனித உரிமைகளை மீறில்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி அண்மையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகிய நால்வருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் பல்வேறு முக்கிய தடைகளை விதித்தது.

இந்நிலையிலேயே சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் மெலின் ஜோலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதன் சுருக்கம் வருமாறு :

கேள்வி : ஜனவரி 10 நான்கு இலங்கையர்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கான காரணம் மற்றும் காலக்கெடு குறித்து இன்னும் தெளிவான புரிதல் இல்லையே?

பதில் : நாம் இது தொடர்பில் ஒரு குறுப்பிட்ட காலத்திற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதைப் போன்றே , நீதி நிலைநாட்டப்படுவது தொடர்பிலும் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம். கனடா அனைத்து சந்தர்ப்பங்களிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக செயற்பட்டு வருகிறது. அதே போன்று கனடா பல வருடங்களாக சர்வதேச ரீதியில் பொறுப்பு கூறல் தொடர்பிலும் கேள்வியெழுப்பியுள்ளது.

அதற்கமைய பொறுப்பு கூறலில் பிரச்சினைகள் காணப்பட்டால் அங்கு சர்வதேச சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. இதன் காரணமாகவே நாம் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் ஏனைய இருவருக்கும் தடை விதித்தோம். இதன் ஊடாக கனடாவில் காணப்படும் அவர்களது சொத்துக்களுக்கு தடை விதிப்பதோடு , அவர்களுக்கும் கனடாவிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

கேள்வி : இலங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட உக்ரேன் போன்ற நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஜி7 நாடுகளின் உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறும். இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஜி7 உறுப்பினர்களை ஊக்குவிப்பதன் மூலம் எவ்வாறான விளைவுகள் ஏற்படும்?

பதில்: இதுவே எமது இலக்காகும். இது தொடர்பில் நாம் அவர்களது கவனத்திற்குக் கொண்டு செல்வோம். இலங்கையிலுள்ள தமிழ் சமூகத்தினர் இதுவே உண்மை என்பதை அறிவார்கள். அமைதியை அடைய , உண்மையை சுட்டிக்காட்ட வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும் என்றார்.

https://www.virakesari.lk/article/146396

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் முயற்சி, விரைவில் வெற்றி பெற வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கனடாவின் முயற்சி, விரைவில் வெற்றி பெற வேண்டும்.

இதற்குப் பின்னால் அமெரிக்காவாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கனடாவின் முயற்சி, விரைவில் வெற்றி பெற வேண்டும்.

ரஸ்யா என்ன மாரியாம்? 🤣

1 hour ago, ஈழப்பிரியன் said:

இதற்குப் பின்னால் அமெரிக்காவாக இருக்குமோ?

Map ஆகட்டும், எதுவாகட்டும் கனடாவுக்கு பின்னால் இருப்பது அமெரிக்காதானே🤣

அமெரிக்காவின் கோட்டில் தொங்குவது பிரிட்டன், காற்சட்சையில் தொங்குவது பிரான்ஸ், ஜேர்மனி, சப்பாத்தில் தொங்குவது கனடா🤣

Edited by goshan_che
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:
5 hours ago, தமிழ் சிறி said:

கனடாவின் முயற்சி, விரைவில் வெற்றி பெற வேண்டும்.

ரஸ்யா என்ன மாரியாம்?

இலங்கையும் ரசியாவும் காதலர்கள்.

57 minutes ago, goshan_che said:

Map ஆகட்டும், எதுவாகட்டும் கனடாவுக்கு பின்னால் இருப்பது அமெரிக்காதானே🤣

அமெரிக்காவின் கோட்டில் தொங்குவது பிரிட்டன், காற்சட்சையில் தொங்குவது பிரான்ஸ், ஜேர்மனி, சப்பாத்தில் தொங்குவது கனடா🤣

கொறியாகாரி இலங்கைக்கு போகும்போதே சொன்னார்கள்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ரஸ்யா என்ன மாரியாம்? 🤣

இந்தியா எப்படியோ அப்படியே.....:smiling_face_with_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

இந்தியா எப்படியோ அப்படியே.....:smiling_face_with_sunglasses:

இந்தியாவின் நிலைப்பாடு தமிழரை நாதி அற்றவராக்கி தன் கையை எதிர்பார்த்து இருக்கும் படி செய்வது.

👆🏼 இந்த கூற்றை ஏற்கிறீர்களா?

  • Like 2
  • Haha 2
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இந்தியாவின் நிலைப்பாடு தமிழரை நாதி அற்றவராக்கி தன் கையை எதிர்பார்த்து இருக்கும் படி செய்வது.

👆🏼 இந்த கூற்றை ஏற்கிறீர்களா?

இலங்கை விடயத்தில் இந்தியாவை மீறி ரஷ்யா எதுவும் செய்யாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

இலங்கை விடயத்தில் இந்தியாவை மீறி ரஷ்யா எதுவும் செய்யாது.

அதாவது இந்தியாவின் நிலைப்பாடு = ரஸ்யாவின் நிலைப்பாடு?

சரிதானே?

அப்போ, 

இந்தியாவின் நிலைப்பாடு தமிழரை நாதி அற்றவராக்கி தன் கையை எதிர்பார்த்து இருக்கும் படி செய்வது எனில்,

ரஸ்யாவின் நிலைப்பாடு தமிழரை நாதி அற்றவராக்கி இந்தியாவின் கையை எதிர்பார்த்து இருக்கும் படி செய்வது.

சரியா?

 

  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இதற்குப் பின்னால் அமெரிக்காவாக இருக்குமோ?

அப்போ அமெரிக்கா இவர்களுக்கு தடை போட பயந்து, சும்மா இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்துவிட்டு இவர்களை கனடா பக்கம் விட்டதோ?

2 hours ago, goshan_che said:

ரஸ்யா என்ன மாரியாம்?

ரஸ்யா உக்ரேயினில் எப்படி நடந்து கொள்கிறதோ அதற்கு என்ன காரணம் சொல்கிறதோ அது ஏற்கெனவே நம் நாட்டில் நடந்தேறி விட்டதே. இதற்குப்பின் எதற்கு விளக்கம். "உன் நண்பனைக்காட்டு நான் உன்னைப்பற்றி சொல்கிறேன்." என்றொரு பழமொழி உண்டு.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

அதாவது இந்தியாவின் நிலைப்பாடு = ரஸ்யாவின் நிலைப்பாடு?

சரிதானே?

அப்போ, 

இந்தியாவின் நிலைப்பாடு தமிழரை நாதி அற்றவராக்கி தன் கையை எதிர்பார்த்து இருக்கும் படி செய்வது எனில்,

ரஸ்யாவின் நிலைப்பாடு தமிழரை நாதி அற்றவராக்கி இந்தியாவின் கையை எதிர்பார்த்து இருக்கும் படி செய்வது.

சரியா?

 

 

இன்னொரு இறையாண்மையுள்ள நாட்டின்மீது ஆக்கிரமிப்புப்போர் ஒன்றினைக்ன்கட்டவிழ்த்துவிட்டு அம்மக்களை மீட்கவே அவர்களைக் கொல்கிறேன் என்று கூறும் ரஸ்ஸியாவிற்கும், தமிழினத்தை இனவழிப்புச் செய்துகொண்டே மபிதாபிமான மீட்பு நடவடிக்கை என்று கூறும் இலங்கைக்கும் அதிக வேறுபாடில்லை.

அப்படியானால் ரஸ்ஸியா எந்தப்பக்கம் என்று புரிந்துகொள்வது கடிணமாக இருக்காது. ஆனால் என்ன, ரஸ்ஸியாவை நியாயப்படுத்த வெளிக்கிட்டால், இலங்கை செய்வதையும் நியாயப்படுத்தவேண்டி வரும். அதையும் செய்வோம்!

  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்கள் உக்ரேன் பிரச்சனையையும் ஈழத்தமிழர் பிரச்சனைகளையும் சேர்த்து சாம்பாராக்கி வைத்துள்ளார்கள்.
உக்ரேன் தனி நாடு.சகல உரிமைகளுடனும் வாழும் நாடு.
ஈழத்தமிழர்  அப்படியா? நாடே இல்லை. யாரும் அங்கீகரிக்கவும் இல்லை. இப்படியிருக்க.......

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

நம்மவர்கள் உக்ரேன் பிரச்சனையையும் ஈழத்தமிழர் பிரச்சனைகளையும் சேர்த்து சாம்பாராக்கி வைத்துள்ளார்கள்.
உக்ரேன் தனி நாடு.சகல உரிமைகளுடனும் வாழும் நாடு.
ஈழத்தமிழர்  அப்படியா? நாடே இல்லை. யாரும் அங்கீகரிக்கவும் இல்லை. இப்படியிருக்க.......

முழங்காலுக்கும், மொட்டந் தலைக்கும் முடிச்சு போடுவதில்... நம்ம ஆக்கள் விண்ணர்கள். 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நம்மவர்கள் உக்ரேன் பிரச்சனையையும் ஈழத்தமிழர் பிரச்சனைகளையும் சேர்த்து சாம்பாராக்கி வைத்துள்ளார்கள்.
உக்ரேன் தனி நாடு.சகல உரிமைகளுடனும் வாழும் நாடு.
ஈழத்தமிழர்  அப்படியா? நாடே இல்லை. யாரும் அங்கீகரிக்கவும் இல்லை. இப்படியிருக்க.......

வரவேற்க வேண்டிய கருத்துகள்..100 % சரியானது ஆனால் இப்படியான உக்ரேன் அழிக்கப்படுவதையும். சிலர் ஆதரிக்கிறார்கள்   ....அதுவும் இந்த நாடே இல்லாத ஈழத்தமிழர்களிருத்து வந்தவர்கள்...இவர்களை எந்த நாடு   ?எவ்வாறு அங்கீகரிக்க முடியும்?🤣🙏

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நம்மவர்கள் உக்ரேன் பிரச்சனையையும் ஈழத்தமிழர் பிரச்சனைகளையும் சேர்த்து சாம்பாராக்கி வைத்துள்ளார்கள்.
உக்ரேன் தனி நாடு.சகல உரிமைகளுடனும் வாழும் நாடு.
ஈழத்தமிழர்  அப்படியா? நாடே இல்லை. யாரும் அங்கீகரிக்கவும் இல்லை. இப்படியிருக்க.......

அண்ணை,

இலங்கையில் இந்தியாவின் நிலைப்பாடுதான் ரஸ்யாவின் நிலைபாடும் என்றவர் நீங்கள்.

அப்போ ஒரு போரில் நாம் இந்தியாவை ஆதரிப்பதும். ரஸ்யாவை ஆதரிப்பதும் ஒன்றே!

இது மொட்டந்தலை+முழங்கால் இல்லை.

தலிபான்கள் போல அதீத அமெரிக்க வெறுப்பால் உந்த பட்டு, ரஸ்யாவை ஆதரித்த உங்கள் நிலைப்பாட்டின் கொள்கை-கையறு நிலை.

விளங்கு தமிழில் சொன்னால் -

#முட்டுச் சந்து🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

வரவேற்க வேண்டிய கருத்துகள்..100 % சரியானது ஆனால் இப்படியான உக்ரேன் அழிக்கப்படுவதையும். சிலர் ஆதரிக்கிறார்கள்   ....அதுவும் இந்த நாடே இல்லாத ஈழத்தமிழர்களிருத்து வந்தவர்கள்...இவர்களை எந்த நாடு   ?எவ்வாறு அங்கீகரிக்க முடியும்?🤣🙏

எமக்கான நாடு என ஒன்றும் இல்லை. தமிழீழம் எனும் முகவரி உண்டு.தமிழ் அரசியல்வாதிகள் முயற்சி செய்தால் சகலதும் சுபமாக முடியும்.

மற்றும் படி கருத்து சுதந்திரம் யாருக்கும் உண்டு. இது ரஷ்யாவிலும் உண்டு.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

முழங்காலுக்கும், மொட்டந் தலைக்கும் முடிச்சு போடுவதில்... நம்ம ஆக்கள் விண்ணர்கள். 🙂

இரண்டு நாடுகளும் தாங்கள் செய்யும் போர் முறைகளும், அதற்கு சொல்லப்படும்  காரணங்களும் ஒன்றுக்கொன்று ஒத்துவருகிறது என சொல்லவந்தோம், வேறொன்றுமில்லை...... இதை போர் என்று சொல்ல முடியாது. தங்கள் சுயநலத்திற்காக மக்களை கொடூரமாக கொன்று  அடிபணிய வைக்கும் செயல். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

உக்ரேன் அழிக்கப்படுவதையும். சிலர் ஆதரிக்கிறார்கள்   ....அதுவும் இந்த நாடே இல்லாத ஈழத்தமிழர்களிருத்து வந்தவர்கள்...இவர்களை எந்த நாடு   ?எவ்வாறு அங்கீகரிக்க முடியும்?

ஒரு முழுமையான நாடான உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமிப்பதை, அழிக்கபடுவதை , ரஷ்ய போர் குற்றங்களை,  புரின் மீதுள்ள பற்றுதலினாலும், சித்தாந்த பற்றுதலினாலும் முழுமையாக ஆதரிக்கும் போதே தனி நாடு பெறுவதற்கு தகுதியில்லாதவர்கள் ஈழத்தமிழர்கள் என்கின்றாகிவிட்டது.
அமெரிக்காவுக்கு பின்னால் ப‌ல‌ நாடுக‌ள் இருப்பதனால் அமெரிக்காவை பிடித்து தமிழீழம் எடுத்துவிட்டு பின்பு ரஷ்யாவின் நட்பு நாடாக மாறுவோம் என்கிறார் ஒருவர் அவ்வளவுக்கு பூலோக சொர்க்கம் ரஷ்யா🤣
இலங்கைக்கு கை கொடுக்கும் நண்பன் ரஷ்யா. தமிழீழத்துடன் நட்பு வைக்குமா ?

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, satan said:

 தங்கள் சுயநலத்திற்காக மக்களை கொடூரமாக கொன்று  அடிபணிய வைக்கும் செயல். 

ரஷ்யா இலங்கையின் செயல்களை சொல்லியுள்ளீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ புட்டின்+ ரஸ்யா  என்பது ஒரு போதை வஸ்த்தை போன்ற ஒரு சமாச்சாரம். அதை உட்கொண்டவர்கள் அந்த போதையிலேயே இருக்க விரும்புகிறார்கள்.
மற்றும்படி இதுக்கும் அரசியல் நுண்ணறிவு, சமகால பார்வை, தார்மீக சிந்தனை இவற்றுக்கெல்லாம் தொடர்பே கிடையாது.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Sasi_varnam said:

எனக்கென்னமோ புட்டின்+ ரஸ்யா  என்பது ஒரு போதை வஸ்த்தை போன்ற ஒரு சமாச்சாரம். அதை உட்கொண்டவர்கள் அந்த போதையிலேயே இருக்க விரும்புகிறார்கள்.
மற்றும்படி இதுக்கும் அரசியல் நுண்ணறிவு, சமகால பார்வை, தார்மீக சிந்தனை இவற்றுக்கெல்லாம் தொடர்பே கிடையாது.

100 வீதம் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அண்ணை,

இலங்கையில் இந்தியாவின் நிலைப்பாடுதான் ரஸ்யாவின் நிலைபாடும் என்றவர் நீங்கள்.

அப்போ ஒரு போரில் நாம் இந்தியாவை ஆதரிப்பதும். ரஸ்யாவை ஆதரிப்பதும் ஒன்றே!

இது மொட்டந்தலை+முழங்கால் இல்லை.

தலிபான்கள் போல அதீத அமெரிக்க வெறுப்பால் உந்த பட்டு, ரஸ்யாவை ஆதரித்த உங்கள் நிலைப்பாட்டின் கொள்கை-கையறு நிலை.

விளங்கு தமிழில் சொன்னால் -

#முட்டுச் சந்து🤣

நல்லது கெட்டதுகளுக்கப்பால் எல்லாம் பூகோள அரசியல்.
ஒரு இடத்தில் சரியென தெரியும் விடயம் இன்னொரு இடத்தில் பிழையாக தோன்றும்.

ஊரில் இருக்கும் போது சூரியன் சரியாக 6 மணிக்கு கிழக்கில் உதிக்கும் என சொல்வோம். மற்ற நாடுகளில் அப்படியில்லை.அப்படி சொல்லவும் முடியாது. ஜனநாயகமும் அரசியலும் சட்டங்களும் தண்டனைகளும் நாட்டுக்கு நாடு வேறுபடும். எல்லாம் அந்தந்த நாட்டு மக்களின் குணாதிசயங்களை பொறுத்தது. 

எனவே ஒப்பீடுகள் எல்லா இடங்களுக்கும் சரிவராது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

நல்லது கெட்டதுகளுக்கப்பால் எல்லாம் பூகோள அரசியல்.
ஒரு இடத்தில் சரியென தெரியும் விடயம் இன்னொரு இடத்தில் பிழையாக தோன்றும்.

ஊரில் இருக்கும் போது சூரியன் சரியாக 6 மணிக்கு கிழக்கில் உதிக்கும் என சொல்வோம். மற்ற நாடுகளில் அப்படியில்லை.அப்படி சொல்லவும் முடியாது. ஜனநாயகமும் அரசியலும் சட்டங்களும் தண்டனைகளும் நாட்டுக்கு நாடு வேறுபடும். எல்லாம் அந்தந்த நாட்டு மக்களின் குணாதிசயங்களை பொறுத்தது. 

எனவே ஒப்பீடுகள் எல்லா இடங்களுக்கும் சரிவராது.:cool:

உங்களை பார்க்க பாவமா கிடக்கண்ணை.

தடிச்ச தமிழ் தேசியவாதி…புட்டினுக்கு சப்போர்ட் பண்ண போய்…இப்ப இந்தியா செய்யிறதுக்கும் முட்டு கொடுக்கும் அவல நிலை….

உண்மையிலே ஜோக்காக இல்லை…உங்கள் போன்றோரின் அமெரிக்க வெறுப்பு…உங்களை எப்படி கொள்கை சறுக்கலில் தள்ளி விட்டுள்ளது என பார்க்க கவலையாகத்தான் இருக்கு.

2 hours ago, Sasi_varnam said:

எனக்கென்னமோ புட்டின்+ ரஸ்யா  என்பது ஒரு போதை வஸ்த்தை போன்ற ஒரு சமாச்சாரம். அதை உட்கொண்டவர்கள் அந்த போதையிலேயே இருக்க விரும்புகிறார்கள்.
மற்றும்படி இதுக்கும் அரசியல் நுண்ணறிவு, சமகால பார்வை, தார்மீக சிந்தனை இவற்றுக்கெல்லாம் தொடர்பே கிடையாது.

பிரெக்சிற் இலும் இதை நான் பார்த்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

உங்களை பார்க்க பாவமா கிடக்கண்ணை.

தடிச்ச தமிழ் தேசியவாதி…புட்டினுக்கு சப்போர்ட் பண்ண போய்…இப்ப இந்தியா செய்யிறதுக்கும் முட்டு கொடுக்கும் அவல நிலை….

உண்மையிலே ஜோக்காக இல்லை…உங்கள் போன்றோரின் அமெரிக்க வெறுப்பு…உங்களை எப்படி கொள்கை சறுக்கலில் தள்ளி விட்டுள்ளது என பார்க்க கவலையாகத்தான் இருக்கு.

நான் எங்கும் இந்தியாவிற்கு முட்டு கொடுக்கவில்லை. பிராந்திய அரசியலைப்பற்றியே பல இடங்களில் எழுதியுள்ளேன்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.