Jump to content

இரண்டு வருடகாலத்திற்கு கடன்களை ஒத்திவைக்க சீனா சம்மதம் - கடன் மறுசீரமைப்பிற்கும் ஆதரவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வருடகாலத்திற்கு கடன்களை ஒத்திவைக்க சீனா சம்மதம் - கடன் மறுசீரமைப்பிற்கும் ஆதரவு

By RAJEEBAN

22 JAN, 2023 | 07:54 AM
image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ள சீனா இரண்டு வருடகாலத்திற்கு கடனை மீளப்பெறுவதை ஒத்திவைப்பதற்கு இணங்கியுள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் நிதிஉதவியை பெறுவதற்கான முன்னோடி நடவடிக்கையான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு உதவுமாறு இலங்கை விடுத்த வேண்டுகோள்களிற்கு சீனா சாதகமாக பதிலளித்துள்ளது.

இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய சீனாவின் எக்சிம் வங்கி நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளது.

இரண்டுவருடங்களிற்கு இலங்கையின் கடன்களை ஒத்திவைக்கும் நடவடிக்கை கடன்களை குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்கும் நடவடிக்கை என தெரிவித்துள்ள எக்சிம் வங்கி  இலங்கைக்கு கடன்வழங்கியவர்கள் நீண்டகால அர்ப்பணிப்புகள் குறித்து இணைந்து பணியாற்றவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனாவின் எக்சிம் வங்கி ரணில்விக்கிரமசிங்கவிற்கான தனது கடிதத்தில் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணயநிதியம்  கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடரவேண்டும் என சீனாவின் எக்சிம் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/146398

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் கடன் மறுசீரமைப்பு இணக்க சான்றிதழ் விரைவில் வெளியாகும் - பல மட்டப் பேச்சுக்களில் சாதக சமிக்ஞை என்கிறார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

22 JAN, 2023 | 09:30 AM
image

 

ஆர்.ராம்

இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள கடன்கள் தொடர்பிலான அந்நாட்டின் மறுசீரமைப்பு இணக்கச் சான்றிதழ் விரைவில் வெளியாகும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பலமட்டப்பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் அப்பேச்சுவார்த்தைகளில் சாதகமான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவுடனான கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளின் நிலைமைகள் தொடர்பில் வீரகேசரிக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து இணக்கம் ஏற்பட்டுள்ள 2.9பில்லியன் டொலர்களைப் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையில், இந்தியா இலங்கைக்கு வழங்கிய கடன்கள் தொடர்பில் மறுசீரமைப்பினைச் செய்வதற்கான இணக்கச் சான்றிதழை சர்வதேச நாயண நிதியத்திற்கு அனுப்பியுள்ளனது. இந்தியாவைப் போன்று ஏனைய நாடுகளும் இணக்கச் சான்றிதழை அளிப்பதற்கு இணங்கியுள்ளன.

இந்த நிலையில், தற்போது சீனாவுடன் பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவின் எக்ஸிம் வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனா சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது. இந்நலையில் விரைவில் அதுகுறித்த இணக்கச் சான்றிதழை அந்நாடும் சர்வதேச நாணயநிதியத்திற்கு அனுப்பி வைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் சர்வதேச நாணயநித்திடமிருந்து முதற்கட்ட நிதியைப் பெற்றுக்கொள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/146394

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிடமிருந்து கிடைத்துள்ள கடிதம் நிதி உத்தரவாதமல்ல - செஹான் சேமசிங்க

By RAJEEBAN

23 JAN, 2023 | 10:55 AM
image

 

சீனாவின் எக்சிம் வங்கி அனுப்பிவைத்துள்ள கடிதம்  சர்வதேசநாணயநிதியத்தின் நிதி உதவியை பெறுவதற்கு சீனாவின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை இலங்கை பெறுவதற்கு சீனா நிதி உத்தரவாதங்களை வழங்கும் என இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் எக்சிம் வங்கி நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இலங்கையின்  கடன்களை இரண்டு  வருடங்கள் ஒத்திவைப்பதற்கு இணங்கியுள்ளதுடன் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கும்  சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து உதவிகளை பெறும் அதன் முயற்சிகளிற்கும் ஆதரவளித்துள்ளது.

shehan-semasinghe1.jpg

சீனாவின் புதுவருடத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த கடிதத்தை எக்சிம் வங்கி அனுப்பிவைத்துள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைளிற்கு உதவுவதற்கான விருப்பத்தை இந்த கடிதம் வெளியிட்டுள்ள போதிலும் இது நிதி உத்தரவாதம் இல்லை என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க  தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பிற்கு ஆதரவளிக்க தயார் என்ற அடிப்படையில் சீனா நிதியமைச்சிற்கு கடிதம் எழுதியுள்ளது கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு உதவ தயார் என சர்வதேச நாணயநிதியத்திற்கு சீனா தெரிவிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இந்தியாவிற்கு சர்வதேச நாணயநிதியம் அனுப்பிய கடிதம் தெளிவானதாக விடயத்தை தெளிவாக தெரிவிப்பதாக காணப்பட்டது எனினும் சீனாவின் கடிதம் தெளிவற்றதாக காணப்படுகின்றது நிதியமைச்சிற்கு மாத்திரம் அனுப்பப்பட்டுள்ளது

இந்த கடிதம் போதுமானதா என்பதை சர்வதேச நாணயநிதியமே  தீர்மானிக்கவேண்டும் இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் அளவுகோல்களை தீர்மானிக்க முடியாது இது கடன் வழங்கியவர்களிற்கும் சர்வதேச நாணயநிதியத்திற்கும் இடையிலான கூட்டுதீர்மானமாக காணப்படும்,என தெரிவித்துள்ள சேமசிங்க ஆனால் சீனாவும் ஆதரவை வழங்கும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/146468

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் மீள் செலுத்தலை 2 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக இடைநிறுத்த சீனா இணக்கம் - ஹர்ஷ டி சில்வா தகவல்

By T. SARANYA

23 JAN, 2023 | 01:39 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடன் மீள் செலுத்தலை இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு இணங்குவதாக சீனா , சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த கால அவகாசம் போதுமானதாக அமையுமா என்பது சிக்கலான விடயமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடன் மறுசீரமைப்பிற்கு இந்தியா எழுத்து மூலமாக அதன் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

எனினும் இவ்விடயத்தில் சீனாவின் முடிவும் அத்தியாவசியமானதாகும். இலங்கை கடன் மீள செலுத்துவதை இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு தாம் இணங்குவதாக சீனா சர்வதேச நாணய நிதியத்திடம் அறிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

எவ்வாறிருப்பினும் இரண்டு ஆண்டுகள் என்ற காலம் போதுமானதாக அமையுமா என்பதே இங்கு காணப்படும் சிக்கலாகும்.

சர்வதேச நாணய நிதியமே இது குறித்து தீர்மானிக்க வேண்டும். இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தால் சீன எக்ஸிம் வங்கி அதனை எழுத்து மூலம் நாணய நிதியத்திற்கு அறிவிக்க வேண்டும்.

நாடு வங்குரோத்தடைந்துள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். எனவே இந்த நிலைமைக்கு நாட்டை உள்ளாக்கியவர்களை ஆட்சியிலிருந்து நீக்க வேண்டும்.

அதற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு நாம் வலியுறுத்தினோம். எனினும் பொதுஜன பெரமுன எம்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தது.

தற்போது கடன் மறுசீரமைப்பிற்கான நிதி உத்தரவாதத்தை வழங்குமாறு சீனாவிடமும் , இந்தியாவிடமும் கையேந்திக் கொண்டிருக்கிறது.

அன்று நாம் கூறியதைக் கேட்டிருந்தால் இன்று இவ்வாறு மன்றாடும் நிலைமை ஏற்பட்டிருக்காது. எவ்வாறிருப்பினும் இவ்வனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/146496

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் வாங்கின சந்தோஷத்தில சாதனை வெற்றிப்பேச்சுக்களிலும், களியாட்டங்களிலும், தூக்கத்திலும் காலத்தை செலவழித்து விட்டு இரண்டு வருடம் முடிய சீனா வந்து கதவைத் தட்டாது உள் நுழைந்து விடும். கடன் வாங்கவதே இவர்களின் சாதனை. சொந்த குடி மக்களோடு உரிமையை பகிர்ந்துகொள்ள மனமில்லாமல் முப்பத்தைந்து வருடங்களாக கடன் வாங்கி போர் செய்து சாதனை படைத்தவையை  என்னத்தை சொல்ல.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

கடன் வாங்கின சந்தோஷத்தில சாதனை வெற்றிப்பேச்சுக்களிலும், களியாட்டங்களிலும், தூக்கத்திலும் காலத்தை செலவழித்து விட்டு இரண்டு வருடம் முடிய சீனா வந்து கதவைத் தட்டாது உள் நுழைந்து விடும். கடன் வாங்கவதே இவர்களின் சாதனை. சொந்த குடி மக்களோடு உரிமையை பகிர்ந்துகொள்ள மனமில்லாமல் முப்பத்தைந்து வருடங்களாக கடன் வாங்கி போர் செய்து சாதனை படைத்தவையை  என்னத்தை சொல்ல.

கடன் வாங்கின கெட்டித்தனத்துக்கே பெரிய திருவிழா வைப்பாங்கள் போல கிடக்கு...:zany_face:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

கடன் வாங்கின கெட்டித்தனத்துக்கே பெரிய திருவிழா வைப்பாங்கள் போல கிடக்கு...:zany_face:

இதுவரை சாதித்ததெல்லாம் அதுதானே! ஆனால் அப்பப்போ புதுப்புது காரணங்களை கண்டுபிடிப்பார்கள் கடன் கேட்பதற்கு. அதுக்குள்ள இறையாண்மை என்று வேற பேசி உயிரை வாங்குவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, satan said:

இதுவரை சாதித்ததெல்லாம் அதுதானே! ஆனால் அப்பப்போ புதுப்புது காரணங்களை கண்டுபிடிப்பார்கள் கடன் கேட்பதற்கு. அதுக்குள்ள இறையாண்மை என்று வேற பேசி உயிரை வாங்குவார்கள். 

சிறிலங்காவுக்கு ஒரு சுனாமியோ சூறாவளியோ வந்து போச்சுதெண்டால் வாற உதவி நிதியளை வைச்சு ஒருமாதிரி பிரச்சனையளை சமாளிச்சு போடுவினம்.அதிலையும் அழிவுகள் தமிழர் பக்கம் வந்தால் இரட்டிப்பு சந்தோசம்.

இது கடந்த கால அனுபவங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

வாற உதவி நிதியளை வைச்சு ஒருமாதிரி பிரச்சனையளை சமாளிச்சு போடுவினம்.

அந்தப்பணத்தை வைத்து தங்கள் ஊழல்களை மறைக்க தேர்தலில் நின்று வென்று தங்களை புனிதர்களாக்குவர் பின் மிஞ்சியதையும் சூறையாடி வெளிநாடுகளில் பதுக்குவார்கள். எதை நாட்டு மக்களுக்கு பிரயோசனமான வழிகளில் செலவழித்தார்கள்? அபிவிருத்தி செய்தார்கள்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரும் உதவிகளில் ஒரு பருக்கையைத்தானும் அவர்கள் அனுபவிப்பதில்லை.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.