Jump to content

தனித்துத் தேர்தலை முகங்கொடுக்கும் செயற்பாடு நிரந்தரப் பிரிவாக அமையாது : பாராளுமன்ற உறுப்பினர் - த.கலையரசன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனித்துத் தேர்தலை முகங்கொடுக்கும் செயற்பாடு நிரந்தரப் பிரிவாக அமையாது : பாராளுமன்ற உறுப்பினர் - த.கலையரசன்!

kugenJanuary 22, 2023
 
WhatsApp%20Image%202023-01-21%20at%2012.07.06.jpeg

(சுமன்)

நாங்கள் தனித்து இந்தத் தேர்தலை முகங்கொடுக்கும் செயற்பாடு ஒரு நிரந்தரப் பிரிவை ஏற்படுத்துகின்ற செயற்பாடாக அமையாது. நாங்கள் கூட்டாக இருந்து எதிர்காலத்திலும் எமது மக்களின் பிரச்சனைகளைக் கையாளுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
 

இன்றைய தினம் அம்பாறை கச்சேரியில் தமிழரசுக் கட்சி சார்பில் வேட்புமனு கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை இன்று கையளித்துள்ளோம். அம்பாறை மாவட்டதில் கல்முனை மாநகரசபை தவிர்த்து மற்றைய அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், நாவிதன்வெளி, சம்மாந்துறை போன்ற ஆறு தமிழ் பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை இன்று கையளித்துள்ளோம்.

ஜனநாயகம் பொருந்திய எமது தமிழரசுக் கட்சியிலே இம்முறை மக்களால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். எனவே மக்கள் நிச்சயமாக எமது கட்சிக்கு உறுதியான ஆணையைத் தருவார்கள் என்று நம்புகின்றோம்.

மாகாணசபை மற்றும் இந்த உள்ளூராட்சி மன்றங்களிலேயே எமது அரசியல் அதிகாரம் அத்தியாவசியமானதாக இருக்கின்றது. அந்த அடிப்படையில் நாங்கள் பலமாக இருந்து செயற்பட்டு எமது மக்களையும், எங்கள் மக்களின் வாக்குகளையும் எமது அரசியற் பிரதிநிதித்துவத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முகம்கொடுக்கும் விதமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் ஆகியன ஒன்றாகக் கேட்கும் போது வட்டாரம், விகிதாசாரம் என்ற ரீதியில் இத்தேர்தல் முறை இருப்பதால் எமக்கு அதிக பின்னடைவு இருக்கின்றது. அந்த அடிப்படையிலேதான் நாங்கள் தனித்துக் கேட்கின்றோம்.

நாங்கள் தனித்து இந்தத் தேர்தலை முகங்கொடுக்கும் செயற்பாடு ஒரு நிரந்தரப் பிரிவை ஏற்படுத்துகின்ற செயற்பாடாக அமையாது. நாங்கள் கூட்டாக இருந்து எதிர்காலத்திலும் எமது மக்களின் பிரச்சனைகளைக் கையாளுவோம்.

எமது மக்களுக்கு இந்த நாட்டில் பிரச்சனைகள் இருக்கின்றது. அந்த அடிப்படையில் ஒற்றுமையாகவே நாங்கள் செயற்படுவோம்.

இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில் எந்தவொரு அரசியற் கட்சியும் அதிக ஆசனங்களைப் பெற்றாலும் கூட ஆட்சி அதிகாரங்களைப் பெற முடியாது. அந்த அடிப்படையில் தான் இம்முறை இவ்வாறானதொரு அரசியல் அணுகுமுறையை நாங்கள் கையாண்டிருக்கின்றோம். அந்த அணுகுமுறையை ஒரு பிரிவாகக் கருதாமல் நாங்கள் எதிர்காலத்திலும் ஒற்றுமையாகவே செயற்படுவோம் என்று தெரிவித்தார்.

 

 

http://www.battinews.com/2023/01/blog-post_960.html

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில் எந்தவொரு அரசியற் கட்சியும் அதிக ஆசனங்களைப் பெற்றாலும் கூட ஆட்சி அதிகாரங்களைப் பெற முடியாது. அந்த அடிப்படையில் தான் இம்முறை இவ்வாறானதொரு அரசியல் அணுகுமுறையை நாங்கள் கையாண்டிருக்கின்றோம். அந்த அணுகுமுறையை ஒரு பிரிவாகக் கருதாமல் நாங்கள் எதிர்காலத்திலும் ஒற்றுமையாகவே செயற்படுவோம் என்று தெரிவித்தார்.

 

இதற்கான ஒப்பந்தம் ரெலோ, புளட்டுடன் இடப்பட்டதா அல்லது கப்சாவா?

கிளிநொச்சியில்  தமிழரசுக்கட்சிக்குளேயே ஒரு சுயேச்சை பிரிவு. அதுவும் ஒப்பந்தமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இதற்கான ஒப்பந்தம் ரெலோ, புளட்டுடன் இடப்பட்டதா அல்லது கப்சாவா?

கிளிநொச்சியில்  தமிழரசுக்கட்சிக்குளேயே ஒரு சுயேச்சை பிரிவு. அதுவும் ஒப்பந்தமா??

ரெலோ, புளட்டை…. வேண்டுமென்றே இறுதி நேரத்தில், முதுகில் பிடித்து தள்ளாத குறையாக…
கப்ஸா, அல்வா… எல்லாம் கொடுத்து வெளியே அனுப்பி இருக்கிறார்கள்.
கிளிநொச்சி… விடயம், தமிழரசு கட்சி தமக்குள் பேசி… பிரிந்து இருப்பார்கள் என்றே நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கிளிநொச்சி… விடயம், தமிழரசு கட்சி தமக்குள் பேசி… பிரிந்து இருப்பார்கள் என்றே நினைக்கின்றேன்.

அப்படியானால் பிரச்சார வேளைகளில் ஒருவரை ஒருவர் தாக்காமல் சேறடிக்காமல் குற்றஞ்சாட்டாமல் கண்ணியமாக நடப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வாறே பங்காளிக்கட்சிகளையும் கலந்து பேசி, வழிகாட்டி, சுமுகமாக செய்திருக்கலாம். ஏன் இரகசியமாக இறுதி வரை காத்திருந்து, எந்தவித விளக்கம், முன் ஆயத்தம் இல்லாமல், தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடும் நீங்கள் தனித்து போட்டியிடுங்கள், தேர்தலுக்குப்பின் சந்திப்போம் என்று மொட்டையாய் கூறி, கட்சிச் சின்னத்தை பாவிக்கப்படாது என்று கட்டளை இட்டு, மக்களை குழப்பி, பங்காளிகளை அவமானப்படுத்தி, இது சாதாரணமான செயலென கருதுகிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு பிரிந்து கேட்டால் அம்பாறையில் ஒரு தமிழ் எம்பியும் 🐚🐚🐚

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

அப்படியானால் பிரச்சார வேளைகளில் ஒருவரை ஒருவர் தாக்காமல் சேறடிக்காமல் குற்றஞ்சாட்டாமல் கண்ணியமாக நடப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா?

கிளிநொச்சியில்  பிரிந்த ஒரு பகுதியினர்… சுமந்திரன் கோஷ்டியினர் என தெரிகிறது.
மற்றவர்கள்… சிறிதரனது கோஷ்டியாக இருக்கலாம் என்பது எனது ஊகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

கிளிநொச்சியில்  பிரிந்த ஒரு பகுதியினர்… சுமந்திரன் கோஷ்டியினர் என தெரிகிறது.
மற்றவர்கள்… சிறிதரனது கோஷ்டியாக இருக்கலாம் என்பது எனது ஊகம்.

சிங்கள இனவாத அரசியல்வாதிகள் வடகிழக்கிலை ஒண்டுமே செய்யத்தேவையில்லை. எல்லாம் தானகவே அவர்களுக்கு சார்பாக நல்லபடியாக நடந்தேறும்.

முன்னொரு காலத்திலே சிறிலங்காவில் தமிழ் பேசும் இனமொன்று இருந்தது என ஒரு வரலாறு  வரும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

சிங்கள இனவாத அரசியல்வாதிகள் வடகிழக்கிலை ஒண்டுமே செய்யத்தேவையில்லை. எல்லாம் தானகவே அவர்களுக்கு சார்பாக நல்லபடியாக நடந்தேறும்.

முன்னொரு காலத்திலே சிறிலங்காவில் தமிழ் பேசும் இனமொன்று இருந்தது என ஒரு வரலாறு  வரும்.

உண்மைதான்…. படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்,
நிர்க்கதியாக நிற்கும் தன் இனத்தைப் பற்றியும், இதனால் ஏற்படும்
எதிர்கால பாதகங்களைப் பற்றியும் சித்திக்காமல்,
அப்பட்டமான, சுயநல… கதிரை அரசியல் செய்வதைப் பார்க்க… கோபம் வருகின்றது.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

உண்மைதான்…. படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்,
நிர்க்கதியாக நிற்கும் தன் இனத்தைப் பற்றியும், இதனால் ஏற்படும்
எதிர்கால பாதகங்களைப் பற்றியும் சித்திக்காமல்,
அப்பட்டமான, சுயநல… கதிரை அரசியல் செய்வதைப் பார்க்க… கோபம் வருகின்றது.

  அத்தனையும் சுயநலம். இப்போ கலந்தும்  விட்டினம், எல்லா இனமும் ஒன்றுதானே அவர்களுக்கு. யார் அழிந்தாலென்ன நிர்க்கதியாக நின்றால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

கிளிநொச்சியில்  பிரிந்த ஒரு பகுதியினர்… சுமந்திரன் கோஷ்டியினர் என தெரிகிறது.
மற்றவர்கள்… சிறிதரனது கோஷ்டியாக இருக்கலாம் என்பது எனது ஊகம்.

தமிழரசுக்கட்சியில் இளையவர்கள் இடம் கேட்க மறுக்கப்பட சுயேட்சையாக இறங்குகிறார்கள் சின்னமாக மாட்டு வண்டில் 🤗

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழரசுக்கட்சியில் இளையவர்கள் இடம் கேட்க மறுக்கப்பட சுயேட்சையாக இறங்குகிறார்கள் சின்னமாக மாட்டு வண்டில் 🤗

எல்லா சபைகளிலுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழரசுக்கட்சியில் இளையவர்கள் இடம் கேட்க மறுக்கப்பட சுயேட்சையாக இறங்குகிறார்கள் சின்னமாக மாட்டு வண்டில் 🤗

போற போக்கிலை, சின்னங்களுக்கு தட்டுப்பாடு வரப் போகுது போலை கிடக்கு. 😂
பிரச்சார கூட்டங்களில்… கல்லெறி, செருப்பு வீச்சு, முட்டை அடி… போன்றவை இன்னும் நடக்க தொடங்கவில்லையா.  🤣
இதுகள்… இல்லாமல், தேர்தல் களை கட்டாதே…. 😁

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

கூட்டமைப்பு பிரிந்து கேட்டால் அம்பாறையில் ஒரு தமிழ் எம்பியும் 🐚🐚🐚

இந்த பிரிவு உள்ளூராட்சிக்கு மட்டும் தான்!
பாராளுமன்ற தேர்தலுக்கு ஒன்னாகிடுவோம்! அல்லது பேச்சாளரை கலைக்கினமோ தெரில.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

எல்லா சபைகளிலுமா?

கிளிநொச்சியில் மாத்திரம் மற்ற இடங்களில் தமிழரசுக்கட்சி விசுவாசிகளாக இருந்தவர்கள் பிற கட்சிகளில் 

உயர்தர பரீட்சை நடக்கிறது இப்ப கரண்ட கட்டாகி இப்ப தான் வந்தது 8.30 -9.30

25 minutes ago, தமிழ் சிறி said:

போற போக்கிலை, சின்னங்களுக்கு தட்டுப்பாடு வரப் போகுது போலை கிடக்கு. 😂
பிரச்சார கூட்டங்களில்… கல்லெறி, செருப்பு வீச்சு, முட்டை அடி… போன்றவை இன்னும் நடக்க தொடங்கவில்லையா.  🤣
இதுகள்… இல்லாமல், தேர்தல் களை கட்டாதே…. 😁

இதுகள் இலங்கையில் இல்லை இருந்ததாலும் கழுவி ஊத்தூவார்கள் ஆளையாள் நாம வேடிக்கை மட்டும் பார்க்கலாம் பார்க்கலாம் இவர்களின்ற பருப்பு என்கிட்ட வேகாது 

நாங்க எங்க பகுதியில் படகிற்கு ஆதரவாக சில நேரம் சில மாற்றம் ஏற்றுக்கொள்ள முடியா விட்டாலும் ஏற்று கால நேரம் சிலதை திணித்து விடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இந்த பிரிவு உள்ளூராட்சிக்கு மட்டும் தான்!
பாராளுமன்ற தேர்தலுக்கு ஒன்னாகிடுவோம்! அல்லது பேச்சாளரை கலைக்கினமோ தெரில.

🤣 தனக்கு தனக்கு எண்டால் சுளகு படக்கு படக்கு எண்டு அடிக்குமாம்🤣

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கிளிநொச்சியில் மாத்திரம் மற்ற இடங்களில் தமிழரசுக்கட்சி விசுவாசிகளாக இருந்தவர்கள் பிற கட்சிகளில் 

உயர்தர பரீட்சை நடக்கிறது இப்ப கரண்ட கட்டாகி இப்ப தான் வந்தது 8.30 -9.30

நன்றி. 

முந்தி ஓகஸ்டில் எல்லா உ.த பரீட்ச்சை? சா.தா டிசம்பரில்.

இதுவும் மாறீட்டா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பிரச்சார கூட்டங்களில்… கல்லெறி, செருப்பு வீச்சு, முட்டை அடி… போன்றவை இன்னும் நடக்க தொடங்கவில்லையா.  🤣
இதுகள்… இல்லாமல், தேர்தல் களை கட்டாதே

நீங்கள் யாழ் களத்தை சூடேற்றுகிறீர்கள்.  மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட, தெரிந்தெடுக்கப்படப்போகிற தலைவர்களை பொதுவெளியில் மரியாதையாக விளிக்க, நடத்த  பழகிக்கொள்ளுங்கள். பாடம்  எடுக்க வருவார்கள் பெரியவர்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

போற போக்கிலை, சின்னங்களுக்கு தட்டுப்பாடு வரப் போகுது போலை கிடக்கு. 😂
பிரச்சார கூட்டங்களில்… கல்லெறி, செருப்பு வீச்சு, முட்டை அடி… போன்றவை இன்னும் நடக்க தொடங்கவில்லையா.  🤣
இதுகள்… இல்லாமல், தேர்தல் களை கட்டாதே…. 😁

இதற்கு நீங்கள் களத்தில் நிற்க வேண்டும்...நீங்கள் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் இப்படியான செயல்கள அறவே இல்லை 🤣😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

🤣 தனக்கு தனக்கு எண்டால் சுளகு படக்கு படக்கு எண்டு அடிக்குமாம்🤣

நன்றி. 

முந்தி ஓகஸ்டில் எல்லா உ.த பரீட்ச்சை? சா.தா டிசம்பரில்.

இதுவும் மாறீட்டா?

 

கொரோனாவால் பாடசாலைகள் மூடப்பட்டதால் எல்லாம் பிந்துகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

கொரோனாவால் பாடசாலைகள் மூடப்பட்டதால் எல்லாம் பிந்துகிறது.

ஓ… இன்னும் இந்த தாக்கத்தில் இருந்து மீளவில்லை😳

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.