Jump to content

வீட்டில் கொடூரமாக இறந்து கிடந்த சிறுமி, பெற்றோர் கைது - என்ன நடந்தது ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் கொடூரமாக இறந்து கிடந்த சிறுமி, பெற்றோர் கைது - என்ன நடந்தது ?

கெய்லியா லூயிஸ் டிட்ஃபோர்ட், போவிஸ்ச் சிறுமி
 
படக்குறிப்பு,

கெய்லியா லூயிஸ் டிட்ஃபோர்ட்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

’வேல்ஸின் போவிஸ் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் தனது அறையின் படுக்கையிலேயே இறந்து கிடந்தார். அரிய வகை நோயினாலும், உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடலை தூக்கும்போது அங்கே பூச்சிகள் மொய்த்தன, அவரது படுக்கையில் புழுக்கள் ஊறிக் கொண்டிருந்தன. அங்கே தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது. உணவு பொட்டலங்கள் அறை முழுவதும் சிதறிக்கிடந்தன. பிளாஸ்டிக் பால் பாட்டில்களில் சிறுநீர் இருந்தது. சுவர்களில் மலம் படிந்து கிடந்தது’.  

தனது மகளின் மரணித்திற்காக இப்போது அந்த பெற்றோர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.அழுக்கு நிறைந்த தனது படுக்கையில் மரணித்து கிடந்த அந்த சிறுமிக்கு உண்மையில் என்ன நிகழ்ந்தது தெரியுமா?

போவிஸ், நியூ டவுன் நகரைச் சேர்ந்த தம்பதியினர் ஆலன் டிட்ஃபோர்ட் மற்றும் சாரா லாய்ட் ஜோனஸ். இவர்களுடைய 16 வயது மகள் கெய்லியா லூயிஸ் டிட்ஃபோர்ட். இவர் பிறவியிலேயே ’ஸ்பைனா பிஃபிடா’ (spina bifida ) என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். பிறக்கும் குழந்தைகளின் முதுகெலும்பு மற்றும் முதுகு தண்டுவட பகுதிகளில் ஏற்படும் ஒருவித பாதிப்பே ‘ஸ்பைனா பிஃபிடா’ என்னும் நோயாக அறியப்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு  இடுப்புக்கு கீழே அசைவதிலும், எழுந்து நடப்பதிலும் சிக்கல்கள் ஏற்படும். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கெய்லியா லூயிஸ் டிட்ஃபோர்ட் நடப்பதற்கும், உடல் அசைவிற்கு வழியின்றியும் மிகவும் கவலைக்கிடமான நிலையில் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தனது மகள் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை என கெய்லியின் பெற்றோர்கள் அவசர உதவி சேவையை தொடர்பு கொண்டுள்ளனர். அவசர உதவி சேவையாளர்கள் அங்கு வந்த பின்புதான் கெய்லியா எவ்வளவு மோசமான நிலையில் அத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வந்தார் என்பது வெளியுலகிற்கு தெரிய வந்தது. 

 

பிறவியிலேயே உடல் பாதிக்கப்பட்டு, கடுமையான உடல் பருமனோடு போராடி வந்த  தனது மகளை டிட்ஃபோர்ட் தம்பதியினர் கொஞ்சம் கூட மனிதாபிமானத்தோடு நடத்தவில்லை என்பதே கெய்லியா டிஃபோர்டின் மரணத்திற்கு காரணம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

போவிஸ் சிறுமி
 
படக்குறிப்பு,

சிறுமியின் பெற்றோர்கள்

இதுகுறித்த வழக்கு போவிஸின் மோல்டு கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

’அவளது அறை மிகவும் அழுக்கு நிறைந்ததாக இருந்தது. அந்த அறை உண்மையிலேயே மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. அங்கு இருந்த துர்நாற்றத்தை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ’ என்கிறார் சம்பவத்தன்று கெய்லியின் வீட்டிற்கு சென்ற மருத்துவர் கரேத் வின் ஈவான்ஸ்.

கெய்லியாவிற்கு இருந்த முதுகு தண்டுவட பிரச்சனையால்   அவரது உடல் இடுப்பிற்கு கீழே செயல்படாத நிலையில் இருந்தது. இதனால் சக்கர நாற்காலி பயன்படுத்தி வந்த கெய்லியாவிற்கு அதுவே அவரது உடல் எடை அதிகரிக்க காரணமாகவும் அமைந்தது. 16வயதே நிரம்பியிருந்த அந்தச் சிறுமியின் எடை அவரது இறப்பின்போது 146 கிலோவாக இருந்திருக்கிறது. 

பல மருத்துவ பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த கெய்லியாவிற்கு டிட்ஃபோர்ட் தம்பதியினர் எந்தவொரு மருத்துவ சிகிச்சையும் அளிக்கவில்லை என்பதும், ஒரு குழந்தை பெற்றோர்களிடம் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச அன்பை கூட  அவர்கள் தங்களுடைய மகளுக்கு வழங்கவில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

மேலும் 2020 ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்ட காலத்திலிருந்து தான் மரணித்த நாள் வரை கெய்லியா வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்ததாகவும், அவர் வெளியுலகிற்கே அழைத்துச்செல்லபடவில்லை எனவும் கூறப்படுகிறது.

போவிஸ் சிறுமி

பட மூலாதாரம்,ATHENA PICTURES

 
படக்குறிப்பு,

கெய்லியா லூயிஸ் டிட்ஃபோர்ட் - உடல் பருமனுக்கு பின்

‘கெய்லியாவின் உடலை தூக்கும்போது அங்கே பூச்சிகள் மொய்த்தன, அவரது படுக்கையில் புழுக்கள் ஊறிக் கொண்டிருந்தன. அங்கே தாங்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியது. உணவு பொட்டலங்கள் அறை முழுவதும் சிதறிக்கிடந்தன. பிளாஸ்டிக் பால் பாட்டில்களில் சிறுநீர் இருந்தது. குளியலறை சுவர்கள் முழுவதும் மலம் படிந்துகிடந்தது’ என்கின்றனர் கெய்லியாவின் உடலை தூக்கிய மருத்துவ உதவியாளர்கள்.

அதேப்போல் கெய்லியாவின் உடலை புகைப்படம் எடுத்த கிரைம் சீன் போட்டோகிராபர் கூறும்போது, ’அவரது கால்கள் மிகவும் அசாதாரணமாக காணப்பட்டது. கால் முழுவதும் அவர் துணி வைத்து கட்டியிருந்தார். அதிலிருந்து நீர் போன்று எதோ வழிந்துக்கொண்டிருந்தது. அவரது காலுறைகளை கவனித்தபோது அது அவருடைய சதையோடு ஒட்டிக்கொண்டிருந்தன. பாதங்கள் வெளுத்துப்போய் வீங்கியிருந்தது. அது மனிதர்களின் கால்கள் போலவே தெரியவில்லை. மற்றும் அங்கே அழுகிய நாற்றமும், அமோனியா வாசமும் இணைந்து மிகவும் மோசமான நிலையை உருவாக்கியிருந்தன’ என்று தெரிவித்தார்.

பெற்றோர்களின் புறக்கணிப்பே கெய்லியாவின் மரணத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது என எதிர்தரப்பு வழக்கறிஞர் உறுதியாக வாதாடி வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் நடந்த விசாரணையில் கெய்லியாவின் தாய் சாரா லாய்ட் ஜோனஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் கெய்லியாவின் தந்தை ஆலன் டிட்ஃபோர்ட் தன் மீது வைக்கப்படும் குற்றத்தை தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த வழக்கு மீதான விசாரணை மோல்டு டவுன் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

https://www.bbc.com/tamil/articles/c98x3ezr9jqo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் பெற்றோர்களா? தம்மால் தமது பிள்ளையை பராமரிக்க முடியாவிடில்,
அரசிடம் பொறுப்பு கொடுத்திருக்கலாம். சமூக அமைப்புகள் அந்தப் பிள்ளையை பராமரித்து இருக்கும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.