Jump to content

நியமான வாழ்வியல் எது ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நியமான வாழ்வியல் எது ?நன்றாக கிரகித்து அசல் எது நகல்  ( நசல்) எது?  இது எல்லாம் சாத்தியமா என்று கேள்வி கேட்க தெரிந்த கழுதை வயதிலும் நாடகங்கள் நீலப்பட ங்கள் ஹீல்ஸ் (REELS) இவைகளில் காட்டப்படும் அனைத்தும்நியமான வாழ்வியல் தான் என்று நம்பி அதே போல் வாழ முற்பட்டு வாழ்க்கையை வாழ முடியாமல் நாங்களே திண்டாடும்போது ......எதுவுமே தெரியாத அனுபவமே இல்லாத குழந்தைகள் அதிக நேரம் வீடியோ கேம்ஸ் விளையாடுவதால்அவர்களின் மனதில் நியமான வாழ்வியல் என்பது எப்போதும் எல்லாவற்றிலும் வெற்றி தீயவர்கள் நல்லவர்கள் யாரானாலும் தாங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் விலை உயர்ந்த பொருட்களில் இருந்து எல்லாவற்றையும் உடைத்து சேதப்படுத்தலாம் எத்தனை நூறு பேரை சுட்டால் என்ன வாகனங்களினால் நெரி த்தால் என்ன?  தனக்கு எதுவுமே ஆவதில்லை.அப்படி ஏதாவது நிகழ்ந்தாலும் நானே பலசாலி எழுந்து திரும்பவும் அவர்களை தாக்கி வெற்றி பெறுவேன்.
 
இப்படி பலபல எண்ணங்களை அவர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுவதால் அவர்களின்
இந்த விளையாட்டுகள் தான் நிஜமான உண்மை வாழ்வியல் என அவர்கள் மனதில் உறுதியாகிறது.
இந்த கொடூர மனநிலையை பாடசாலையில் விளையாடும் நேரங்களில் தனக்கு முன்னால் ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கி தனித்தனியாக விளையாடி கொண்டு இருக்கும் சிறுவர்களிடம் காண்கிறேன்.
இதற்கு காரணம் சேர்ந்துவிளையாடும் போது எதிரில் உள்ளவர் கட்டளைகளை ஏற்க மறுக்கிறார்கள் அல்லது வெற்றியாளர் ஆகிறார் என்பது ஏற்றுக் கொள்ள மறுக்கும் மன நிலை தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.  அவர்களின் அருகில் போய்  "ஏன் தனியாக விளையாடுகிறாய்
வா" எல்லோருடனும் சேர்ந்து விளையாடுவோம் என்று கேட்டால் தள்ளு தள்ளு இவர்களை சுட்டு
கொண்டு இருக்கிறேன் என்னை தொந்தரவு செய்யாதே என்று சொல்லுகிறார்கள்.
இவ்வளவுக்கும் இவர்கள் எட்டுவயதை இன்னும் எட்டி பிடிக்காதவர்கள்.
 
இந்த சிறுவர்களின் மனதில் பாலியல் சம்பந்தமான எண்ணங்களும் மிகவும் ஒருகொடூரமான கற்பனையில்உலா வர தொடங்கி விட்டது.என்பதும் மிகவும் ஒரு கசப்பான செய்தி.இவர்களின் எதிர் காலத்தைஒரு கணம் சிந்தித்தால் பதட்டத்தில் உடல் நடுங்குகிறது.காரணம் வளர்ந்து வரும் காலங்களில் தங்களின் எதிர்பார்ப்பு
நிறைவேறாத பட்சத்தில் இவர்கள்தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் எதுவும் செய்வார்கள்.உயிரையும் எடுப்பார்கள்.
 
ஆறு வயது சிறுவன் தன் பள்ளிஆசிரியரை சுட்டு கொலை செய்ததில் இருந்து இளம் சமூகம்
செய்யும் கொடூர நிகழ்வுகளை மட்டும் தான் தினமும் காதால் கேட்க தொடங்கி விட்டோம்.
இப்படியான விளையாட்டுகளை அதிக பணம் செலவு செய்து வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள்
விளையாட்டுக்களில் பார்ப்பதற்கும் நிஜத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன
என்பதை சொல்லி கொடுக்க மறந்து விடுகிறார்கள்.
 
அதனால் முதலில் பெரியவர்கள்தங்களின் முகமூடிகளையும் மாஜ கண்ணாடிகளையும் கழட்டி வைக்காத வரை ஒன்றும் அறியாத குழந்தைகள் வாழ்வியல் பயங்கர பாதாளத்தை நோக்கி மட்டுமே செல்லப்போகிறது....
 
நன்றி   முகநூல்

 

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.