Jump to content

பறவைகளை துல்லியமாக ஓவியம் தீட்டும் சிவக்குமார்: தமிழ் களக் கையேட்டில் இடம் பெற்ற படங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பறவைகளை துல்லியமாக ஓவியம் தீட்டும் சிவக்குமார்: தமிழ் களக் கையேட்டில் இடம் பெற்ற படங்கள்

சிவக்குமார்

பட மூலாதாரம்,SIRAGAN

2 மணி நேரங்களுக்கு முன்னர்

உண்மையோடு தங்கள் கற்பனை மற்றும் படைப்புணர்வைக் கலந்து வரையும் ஓவியங்கள் ஆற்றல் மிக்க கலைப்படைப்புகளாக வளரத் தொடங்கிய நிலையில், உள்ளதை உள்ளபடி வரையும் துல்லிய ஓவியங்களுக்கான மதிப்பு குறையத் தொடங்கியது.

ஆனால், அளவுகடந்த துல்லியத்தோடு அழகியல் உணர்ச்சி கொப்பளிக்கும் ஓவியங்களை வரைந்து உள்ளங்களைக் கொள்ளை கொண்டார் ஓவியர் இளையராஜா. பல்வேறு இசங்களை உள்வாங்கிக் கொண்டு வெளிப்பட்ட நவீன முறை ஓவியங்களைப் போலவே துல்லிய ஓவியங்களும் ஆற்றல்மிக்க கலைவடிவம்தான் என்பதை அவரது ஓவியங்கள் பறைசாற்றின.

இதைப் போல துல்லிய ஓவியங்களால் புகழ்பெறும் பல ஓவியர்கள் தங்களுக்கென ஒரு தனித்துவமான களத்தைத் தேர்வு செய்துகொண்டு அதிலே தனித்திறனோடு வெளிப்படுகிறார்கள். அப்படி, வழக்கத்துக்கு மாறான ஒரு களத்தில் துல்லிய ஓவியம் வரைந்துவருகிறார்  திருவண்ணாமலையை சேர்ந்த ஓவியர் குமார் என்ற சிவக்குமார்.

சுமார் 20 ஆண்டுகள் முன்பு பதாகை ஓவியம் என்ற வணிக ஓவியத் தொழிலில் வாழ்க்கையைத் தொடங்கியவர் ஒரு கட்டத்தில் பறவைகளாலும், உயிர்ச்சூழலாலும் ஈர்க்கப்பட்டு பறவை ஆர்வலர் ஆனார். வண்ணங்களையும், வடிவங்களையும், கோடுகளையும் கூர்ந்து நோக்கும் ஓவியர்களின் பார்வை, தொடக்கத்தில் அவர் பறவைகளை உற்று நோக்குவதற்கும், பறவைகளை அடையாளம் காண்பதற்கும் உதவியாக இருந்தன.

 

காலம் செல்லச் செல்ல பறவைகளைப் பற்றிய அவரது அறிவு விரிவடைந்து, அவரது ஓவியத் திறனோடு கலந்து வெளிப்படத் தொடங்கியது.

திருவண்ணாமலை அருணகிரி சிறுவர் பூங்காவிலும், அதை ஒட்டியுள்ள செடிப் பண்ணையிலும் உள்ள கடப்பா கற்களில் பறவைகளின் துல்லிய ஓவியங்களைத் தீட்டத் தொடங்கினார் குமார். கடப்பா கற்களில் உள்ள உடைசல்கள், பள்ளங்கள், மொரமொரப்பான பகுதிகள் ஆகியவற்றை லாவகமாக ஓவியத்தின் பகுதிகளாகப் பயன்படுத்த தொடங்கினார் அவர். காட்டை ஒட்டிய அந்த சூழலில் அமைந்த அந்த கடப்பா கல் ஓவியங்கள் சில நேரங்களில் பறவைகள் அங்கே உயிருடன் இருப்பதைப் போன்ற பிரமையைத் தரும்.

கூடவே, பறவைகள் குறித்த அவரது அறிவு விரிவும் ஆழமும் அடைந்துகொண்டே இருந்தது. இதன் விளைவாக, சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபாரஸ்ட் வே அமைப்பு வெளியிட்ட திருவண்ணாமலை பறவைகள் என்ற ஆங்கில நூலின் உருவாக்கத்தில் கணிசமான பங்காற்றினார். அந்த நூலையும் அவரது ஓவியங்கள் அலங்கரித்தன.

பறவை குமார்

பட மூலாதாரம்,SIVAKUMAR

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, அதே அமைப்பு ‘திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள்’ என்ற விரிவான ஒரு களக்கையேட்டை தமிழில் வெளியிட்டது. இந்தக் கையேடு தமிழில் வெளியான முதல் களக் கையேடு அல்ல என்றபோதும், இரண்டு விஷயங்களுக்காக இது முக்கியத்துவம் பெறுகிறது.

வழக்கமாக பறவையியல் களக் கையேடுகள் பறவைகளின் புகைப்படங்களையே தாங்கி வரும் நிலையில், இந்தக் கையேடு சிவக்குமார் வரைந்து துல்லிய ஓவியங்களோடும், உள்ளூர்ப் பறவைகள் குறித்த சிவக்குமாரின் துல்லிய அனுபவங்களோடும் வெளியாகியுள்ளன. இந்தக் கையேடு கோவிந்தா பௌலே, வி.அருண், சிவக்குமார், வினோத், ஹரீஷ் போன்ற பல சூழலியல் ஆர்வலர்களின் கூட்டு உழைப்பின் விளைபொருள் என்றபோதும், இந்த நூலின் உருவாக்கத்தில் சிவக்குமாரின் படைப்பாற்றலுக்கும், கள அனுபவத்துக்கும் ஒரு தூக்கலான பங்கு இருப்பதை இந்த நூலுக்கு வழங்கப்பட்ட முன்னுரைகள், அணிந்துரைகள் வெளிப்படுத்துகின்றன.

பறவை ஓவியம்

பட மூலாதாரம்,SIVAKUMAR

பேர்ட் வாட்ச்சிங் எனப்படும் ‘பறவை நோக்கல்’ மேல்தட்டு மக்களுக்கான ஓய்வுக் கால செயல்பாடு என்ற பார்வையே ஓரிரு பத்தாண்டுகள் முன்புவரை இருந்தது. மறுபுறம் இயற்கையோடு நெருக்கமாக வாழும் ஊரக, பழங்குடி, உழைக்கும் சமூகங்களை சேர்ந்த மக்களுக்கே பல்வேறு பறவைகளை வேறுபடுத்தி அறியும் அறிவு இருந்துவந்தது. அவர்களிடையேதான் அந்தப் பறவைகளுக்கான தமிழ்ப் பெயர்களும் புழக்கத்தில் இருந்தன.

நகரமயம் தீவிரமாகி, நடுத்தர வர்க்கம் பெருக்கத் தொடங்கிய நிலையில், இயற்கை குறித்தும், பறவைகள் குறித்தும் கள அறிவு உள்ளோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஆனால், பல்வேறு சமூகப் பிரிவினரை உள்ளடக்கி விரிவடைந்த நடுத்தர வர்க்கத்தில் இருந்து பறவை நோக்கும் ஆர்வத்துடன் புதிய இளைஞர்கள் வரத் தொடங்கினர்.

பறவை நோக்கல், வெறும் ஓய்வுக் கால செயல்பாடு என்பதைத் தாண்டி, இயற்கை குறித்த அறிவுத் தொடர்ச்சியை தக்கவைக்கவேண்டும் என்ற தாகத்துக்கான வடிகாலாகவும் மாறியது.

இப்படி புதிய தாகத்தோடு பறவை நோக்க வந்த புதிய தலைமுறை ஓர் உறுத்தலை எதிர்கொண்டது. பறவைகள் குறித்த பாரம்பரிய அறிவு மண்ணில் வேர்கொண்ட சமூகங்களிடமே இருந்தாலும், பறவைகள் குறித்த நூல்களிலோ, பறவை நோக்கும் வல்லுநர்கள், ஆர்வலர்கள் நடுவிலோ பறவைகளுக்கான தமிழப் பெயர்கள், உள்ளூர்ப் பெயர்கள் புழக்கத்தில் இல்லை. இதையடுத்தே இயற்கையை, விலங்குகளை, பறவைகளைப் பற்றி தமிழில் எழுதுதல், தமிழ்ப் பெயர்களை கண்டெடுத்து காப்பாற்றுதல் ஒரு இலக்கிய செயல்பாடு போல வளரத் தொடங்கியது.

பறவைகள் களக்கையேடு

பட மூலாதாரம்,SIVAKUMAR

தமிழில் பறவைகளைப் பற்றி எழுதுதல்

க.ரத்னம், தியடோர் பாஸ்கரன், ச.முகமது அலி, ப.ஜெகந்நாதன், ஆசை, கோவை சதாசிவம் என்று பலர் தமிழில் சூழல் எழுத்தை முன்னெடுக்கத் தொடங்கினர். குறிப்பாக ரத்னம், ஜெகநாதன், சண்முகானந்தம், ஆசை, போன்றவர்கள் பறவைகளின் தமிழ்ப் பெயர்களை மீட்டெடுத்துப் பயன்படுத்த தொடங்கினர்.

இவர்களில் மிகவும் மூத்தவரான ரத்னம் தமிழில் பறவையியல் எழுத்திலும் எல்லோருக்கும் முன்னோடி. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே வெளியான ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ என்ற அவரது நூல் தமிழ்நாடு அரசின் விருது பெற்றது.

இப்படி தமிழில் பறவையியலை எழுதுவோர் பெருகத் தொடங்கியதும், குருகு, குக்குறுவான், இருவாச்சி, உழவாரன், தகைவிலான், வைரி, ஆலா போன்ற பறவைப் பெயர்களெல்லாம் அச்சேறி அவற்றின் புழக்கம் பரவலாயிற்று.

ஆனாலும், பெரும்பாலும் பறவையியல் எழுத்துகளை மட்டுறுத்தும் இரண்டு கூறுகள் இருந்தன. ஒன்று மொழிபெயர்த்து எழுதுவது, இன்னொன்று, சொந்தமாக எழுதுவதிலும், ஒரு பறவையின் பழக்க வழக்கம், வாழ்க்கை சுழற்சிகள் என பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வது.

ஆனால், திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள் நூல் இந்த வரையறைகளை கடந்து செல்கிறது.

உள்ளூர் மாறுபாடுகள்

இது பற்றிக் கேட்டபோது, “ஒரு பறவை ஜூன் – ஜூலை மாதத்தில் கூடு கட்டும் என்று பொதுவான வரையறை இருக்கும். ஆனால், உள்ளூரில் அந்தப் பறவைகளைப் பார்க்கும்போது அந்த காலகட்டத்தில் சிறிய மாற்றம் இருக்கும்.

ஒரு பறவை இந்தவகை செடி கொடிகளைக் கொண்டு கூடு அமைக்கும் என்று பொதுவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், திருவண்ணாமலையில் பார்க்கும்போது இங்கே கிடைக்கும் வேறு சில வகை பொருள்களை கூடமைப்பதில் அதே பறவைகள் பயன்படுத்தும். திருவண்ணாமலை மாவட்டத்தில் பறவைகளின் வாழ்வில் வெளிப்படும் இத்தகைய மாறுபாடுகளை இந்த நூலில் பதிவு செய்துள்ளோம்,” என்கிறார் சிவக்குமார்.

இது தவிர, வேறொன்றயும் இந்த நூல் செய்துள்ளது. ஒவ்வொரு பறவைக்கும் தமிழ்ப் பெயர்கள் என்ன என்று ஆராயும்போது பறவை எழுத்தாளர்கள் பலவிதமான பெயர்களை எதிர்கொண்டனர். இதைக் கடந்து பறவைகளுக்கான பெயர்கள் தமிழில் ஒருவிதமாக தரப்படுத்தப்படுவதுண்டு. பொதுவாகத் தரப்படுத்தப்பட்ட இப்படிப்பட்ட பெயர்களுக்கு மாற்றாக உள்ளூர் அளவில் சில பறவைகளுக்கு சுவாரசியமான பெயர்கள் இருக்கும். இத்தகைய உள்ளூர் அளவிலான பெயர்களையும், அவை எந்த ஊரில் வழங்குகின்றன என்பதையும் இந்த நூல் ஆவணப்படுத்துகிறது.

ஆள்காட்டி (red wattled lapwing) பறவை கோசாலை என்ற ஊரில் தித்தித்தாங் குருவி என்று அழைக்கப்படுவதாக இந்நூல் பதிவு செய்கிறது.

உள்ளூர்ப் பெயர்கள்

ஒரு காட்டுக்குள் மனிதர்கள், வேட்டைக்காரர்கள் வந்தால், உயரப் பறந்து எச்சரிக்கை ஒலி எழுப்பும் பறவை இது என்பதால் ஆக்காட்டி அல்லது ஆள்காட்டி என்பது இந்தப் பறவைக்கு பொதுவாக ஏற்கப்பட்ட தமிழ்ப் பெயர் ஆகும். ஆனால், தித்தித்தாங்குருவி என்ற இந்த உள்ளூர்ப் பெயர் அந்தப் பறவையின் எச்சரிக்கை ஒலி அமைப்பை ஒத்திருப்பது சுவாரசியமானது.

அதைப் போலவே செம்போத்து என்று பொதுவில் அழைக்கப்படும், குயில் இனத்தைச் சேர்ந்த பறவை ஆடையூர் என்ற ஊரில் கள்ளி காக்கா என்று அழைக்கப்படுவதையும் இந்த நூல் ஆவணப்படுத்தியுள்ளது.

இது தவிர  இ பேர்ட் என்னும் பறவை ஆவணப்படுத்தும் தளத்தில் புவியிடக் குறிப்போடு திருவண்ணாமலையில் பார்க்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு, வல்லுநர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்பளிக்கப்பட்ட பறவைகள் மட்டுமே இந்த கையேட்டில் இடம் பெற்றுள்ளதாக கூறுகிறார் சிவக்குமார்.

ஓவியங்களுக்கு என்ன முக்கியத்துவம்?

இப்படி பறவைகளுக்கான உள்ளூர் களக் கையேட்டில் துல்லிய ஓவியங்கள் இடம் பெறுவது எந்த அளவுக்கு முக்கியம் என்று கேட்டபோது, “என்னுடைய துல்லிய ஓவியங்களைப் பொறுத்தவரை, பறவைகள் எந்த நிறத்தில் எந்த அளவில் உள்ளனவோ அவற்றை துல்லியமாக அதே நிறத்தில், அதே அளவு விகிதத்தில் வரைகிறேன். ஈர்ப்புக்காக அவற்றை மாற்றியோ, வண்ணம் கூட்டியோ வரைவதில்லை.

ஆனாலும், சில பறவைகளை அடையாளம் காண்பதில் ஒரு வகையில் ஓவியங்கள் கூடுதலாக உதவுகின்றன. வேறுசில வகையில் புகைப்படங்களே சிறந்தவை என்பதால் புகைப்படங்களையும் இந்த நூலில் பயன்படுத்தியுள்ளோம். இப்படி பயன்பாட்டு நோக்கில் மட்டுமல்லாமல், ஆவண மொழியில் எழுதப்பட்ட நூலைப் படிப்பது சலிப்பை ஏற்படுத்தாமல் இருக்கவும், ஓவியம் என்ற அழகியல் வடிவம் உதவி செய்யும்” என்கிறார் சிவக்குமார்.

இந்த களக் கையேடு, பழைய நூல்கள், இணைய தளம் ஆகியவற்றில் உள்ள தரவுகளை மட்டும் பயன்படுத்தாமல் அவற்றை உள்ளூரில் கண்ட தரவுகளைக் கொண்டு மேம்படுத்தி தயாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.  

“வெறும் பறவைகளை மட்டும் ஆவணப்படுத்தாமல், அந்தப் பறவைகள் வாழும் நிலவியல்  அமைப்பு, அது சார்ந்து வாழும் மரம் செடி கொடிகள், பாலூட்டிகள், ஊர்வன போன்றவற்றையும் உள்ளூர் அளவில் நேரில் கண்டு, உறுதி செய்து 10-15 ஆண்டுகளில் பெற்ற கள அனுபவத்தின் அடிப்படையில் தொகுத்துள்ளோம்.

எடுத்துக்காட்டாக பொதுவாக வீண் என்று பார்க்கப்படும் தரிசு நிலங்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும், தரிசு நில அமைப்பு எப்படி குறிப்பிட்ட வகைப் பறவைகளுக்கு, குள்ளநரி போன்ற விலங்குகளுக்கு வாழிடமாக பங்கு வகிக்கிறது என்பதையும் இந்த நூலில் ஆவணப்படுத்தியுள்ளோம்,” என்கிறார் சிவக்குமார்.

https://www.bbc.com/tamil/articles/cd157dyv829o

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வண்ண ஓவியங்களில் பறவைகளும் மற்றும் கட்டுரையும் நன்றாக உள்ளது.....!  👍

நன்றி ஏராளன் .....!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • அ.தா.பாலசுப்ரமணியன்
  • பதவி,பிபிசி தமிழ்

 

  • 23 ஜனவரி 2023
பறவை சிவக்குமார்

பட மூலாதாரம்,SIVAKUMAR

உண்மையோடு தங்கள் கற்பனை மற்றும் படைப்புணர்வைக் கலந்து வரையும் ஓவியங்கள் ஆற்றல் மிக்க கலைப்படைப்புகளாக வளரத் தொடங்கிய நிலையில், உள்ளதை உள்ளபடி வரையும் துல்லிய ஓவியங்களுக்கான மதிப்பு குறையத் தொடங்கியது.

ஆனால், அளவுகடந்த துல்லியத்தோடு அழகியல் உணர்ச்சி கொப்பளிக்கும் ஓவியங்களை வரைந்து உள்ளங்களைக் கொள்ளை கொண்டார் ஓவியர் இளையராஜா. பல்வேறு இசங்களை உள்வாங்கிக் கொண்டு வெளிப்பட்ட நவீன முறை ஓவியங்களைப் போலவே துல்லிய ஓவியங்களும் ஆற்றல்மிக்க கலைவடிவம்தான் என்பதை அவரது ஓவியங்கள் பறைசாற்றின.

இதைப் போல துல்லிய ஓவியங்களால் புகழ்பெறும் பல ஓவியர்கள் தங்களுக்கென ஒரு தனித்துவமான களத்தைத் தேர்வு செய்துகொண்டு அதிலே தனித்திறனோடு வெளிப்படுகிறார்கள். அப்படி, வழக்கத்துக்கு மாறான ஒரு களத்தில் துல்லிய ஓவியம் வரைந்துவருகிறார்  திருவண்ணாமலையை சேர்ந்த ஓவியர் குமார் என்ற சிவக்குமார்.

சுமார் 20 ஆண்டுகள் முன்பு பதாகை ஓவியம் என்ற வணிக ஓவியத் தொழிலில் வாழ்க்கையைத் தொடங்கியவர் ஒரு கட்டத்தில் பறவைகளாலும், உயிர்ச்சூழலாலும் ஈர்க்கப்பட்டு பறவை ஆர்வலர் ஆனார். வண்ணங்களையும், வடிவங்களையும், கோடுகளையும் கூர்ந்து நோக்கும் ஓவியர்களின் பார்வை, தொடக்கத்தில் அவர் பறவைகளை உற்று நோக்குவதற்கும், பறவைகளை அடையாளம் காண்பதற்கும் உதவியாக இருந்தன.

காலம் செல்லச் செல்ல பறவைகளைப் பற்றிய அவரது அறிவு விரிவடைந்து, அவரது ஓவியத் திறனோடு கலந்து வெளிப்படத் தொடங்கியது.

திருவண்ணாமலை அருணகிரி சிறுவர் பூங்காவிலும், அதை ஒட்டியுள்ள செடிப் பண்ணையிலும் உள்ள கடப்பா கற்களில் பறவைகளின் துல்லிய ஓவியங்களைத் தீட்டத் தொடங்கினார் குமார். கடப்பா கற்களில் உள்ள உடைசல்கள், பள்ளங்கள், மொரமொரப்பான பகுதிகள் ஆகியவற்றை லாவகமாக ஓவியத்தின் பகுதிகளாகப் பயன்படுத்த தொடங்கினார் அவர். காட்டை ஒட்டிய அந்த சூழலில் அமைந்த அந்த கடப்பா கல் ஓவியங்கள் சில நேரங்களில் பறவைகள் அங்கே உயிருடன் இருப்பதைப் போன்ற பிரமையைத் தரும்.

கூடவே, பறவைகள் குறித்த அவரது அறிவு விரிவும் ஆழமும் அடைந்துகொண்டே இருந்தது. இதன் விளைவாக, சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபாரஸ்ட் வே அமைப்பு வெளியிட்ட திருவண்ணாமலை பறவைகள் என்ற ஆங்கில நூலின் உருவாக்கத்தில் கணிசமான பங்காற்றினார். அந்த நூலையும் அவரது ஓவியங்கள் அலங்கரித்தன.

பறவை குமார்

பட மூலாதாரம்,SIVAKUMAR

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, அதே அமைப்பு ‘திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள்’ என்ற விரிவான ஒரு களக்கையேட்டை தமிழில் வெளியிட்டது. இந்தக் கையேடு தமிழில் வெளியான முதல் களக் கையேடு அல்ல என்றபோதும், இரண்டு விஷயங்களுக்காக இது முக்கியத்துவம் பெறுகிறது.

வழக்கமாக பறவையியல் களக் கையேடுகள் பறவைகளின் புகைப்படங்களையே தாங்கி வரும் நிலையில், இந்தக் கையேடு சிவக்குமார் வரைந்து துல்லிய ஓவியங்களோடும், உள்ளூர்ப் பறவைகள் குறித்த சிவக்குமாரின் துல்லிய அனுபவங்களோடும் வெளியாகியுள்ளன. இந்தக் கையேடு கோவிந்தா பௌலே, வி.அருண், சிவக்குமார், வினோத், ஹரீஷ் போன்ற பல சூழலியல் ஆர்வலர்களின் கூட்டு உழைப்பின் விளைபொருள் என்றபோதும், இந்த நூலின் உருவாக்கத்தில் சிவக்குமாரின் படைப்பாற்றலுக்கும், கள அனுபவத்துக்கும் ஒரு தூக்கலான பங்கு இருப்பதை இந்த நூலுக்கு வழங்கப்பட்ட முன்னுரைகள், அணிந்துரைகள் வெளிப்படுத்துகின்றன.

பறவை ஓவியம்

பட மூலாதாரம்,SIVAKUMAR

பேர்ட் வாட்ச்சிங் எனப்படும் ‘பறவை நோக்கல்’ மேல்தட்டு மக்களுக்கான ஓய்வுக் கால செயல்பாடு என்ற பார்வையே ஓரிரு பத்தாண்டுகள் முன்புவரை இருந்தது. மறுபுறம் இயற்கையோடு நெருக்கமாக வாழும் ஊரக, பழங்குடி, உழைக்கும் சமூகங்களை சேர்ந்த மக்களுக்கே பல்வேறு பறவைகளை வேறுபடுத்தி அறியும் அறிவு இருந்துவந்தது. அவர்களிடையேதான் அந்தப் பறவைகளுக்கான தமிழ்ப் பெயர்களும் புழக்கத்தில் இருந்தன.

நகரமயம் தீவிரமாகி, நடுத்தர வர்க்கம் பெருக்கத் தொடங்கிய நிலையில், இயற்கை குறித்தும், பறவைகள் குறித்தும் கள அறிவு உள்ளோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஆனால், பல்வேறு சமூகப் பிரிவினரை உள்ளடக்கி விரிவடைந்த நடுத்தர வர்க்கத்தில் இருந்து பறவை நோக்கும் ஆர்வத்துடன் புதிய இளைஞர்கள் வரத் தொடங்கினர்.

பறவை நோக்கல், வெறும் ஓய்வுக் கால செயல்பாடு என்பதைத் தாண்டி, இயற்கை குறித்த அறிவுத் தொடர்ச்சியை தக்கவைக்கவேண்டும் என்ற தாகத்துக்கான வடிகாலாகவும் மாறியது.

பறவைகள் களக்கையேடு

பட மூலாதாரம்,SIVAKUMAR

இப்படி புதிய தாகத்தோடு பறவை நோக்க வந்த புதிய தலைமுறை ஓர் உறுத்தலை எதிர்கொண்டது. பறவைகள் குறித்த பாரம்பரிய அறிவு மண்ணில் வேர்கொண்ட சமூகங்களிடமே இருந்தாலும், பறவைகள் குறித்த நூல்களிலோ, பறவை நோக்கும் வல்லுநர்கள், ஆர்வலர்கள் நடுவிலோ பறவைகளுக்கான தமிழப் பெயர்கள், உள்ளூர்ப் பெயர்கள் புழக்கத்தில் இல்லை.

இதையடுத்தே இயற்கையை, விலங்குகளை, பறவைகளைப் பற்றி தமிழில் எழுதுதல், தமிழ்ப் பெயர்களை கண்டெடுத்து காப்பாற்றுதல் ஒரு இலக்கிய செயல்பாடு போல வளரத் தொடங்கியது.

தமிழில் பறவைகளைப் பற்றி எழுதுதல்

சிவக்குமார் - பறவை ஓவியம்.

பட மூலாதாரம்,SIVAKUMAR

 
படக்குறிப்பு,

இயல்பு மாறாத வண்ணம், அமைப்பு, அளவுடன் பறவை ஓவியங்கள் வரைவது சிவக்குமாரின் சிறப்பு.

க.ரத்னம், தியடோர் பாஸ்கரன், ச.முகமது அலி, ப.ஜெகந்நாதன், ஆசை, கோவை சதாசிவம் என்று பலர் தமிழில் சூழல் எழுத்தை முன்னெடுக்கத் தொடங்கினர். குறிப்பாக ரத்னம், ஜெகநாதன், சண்முகானந்தம், ஆசை, போன்றவர்கள் பறவைகளின் தமிழ்ப் பெயர்களை மீட்டெடுத்துப் பயன்படுத்த தொடங்கினர்.

இவர்களில் மிகவும் மூத்தவரான ரத்னம் தமிழில் பறவையியல் எழுத்திலும் எல்லோருக்கும் முன்னோடி. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே வெளியான ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ என்ற அவரது நூல் தமிழ்நாடு அரசின் விருது பெற்றது.

சிவக்குமார் பறவை ஓவியம்.

பட மூலாதாரம்,SIVAKUMAR

 
படக்குறிப்பு,

கச்சிதமாக கொத்தும் வண்ணம்.

இப்படி தமிழில் பறவையியலை எழுதுவோர் பெருகத் தொடங்கியதும், குருகு, குக்குறுவான், இருவாச்சி, உழவாரன், தகைவிலான், வைரி, ஆலா போன்ற பறவைப் பெயர்களெல்லாம் அச்சேறி அவற்றின் புழக்கம் பரவலாயிற்று.

ஆனாலும், பெரும்பாலும் பறவையியல் எழுத்துகளை மட்டுறுத்தும் இரண்டு கூறுகள் இருந்தன. ஒன்று மொழிபெயர்த்து எழுதுவது, இன்னொன்று, சொந்தமாக எழுதுவதிலும், ஒரு பறவையின் பழக்க வழக்கம், வாழ்க்கை சுழற்சிகள் என பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வது.

ஆனால், திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள் நூல் இந்த வரையறைகளை கடந்து செல்கிறது.

உள்ளூர் மாறுபாடுகள்

பறவை ஓவியங்கள் சிவக்குமார்.

பட மூலாதாரம்,SIVAKUMAR

இது பற்றிக் கேட்டபோது, “ஒரு பறவை ஜூன் – ஜூலை மாதத்தில் கூடு கட்டும் என்று பொதுவான வரையறை இருக்கும். ஆனால், உள்ளூரில் அந்தப் பறவைகளைப் பார்க்கும்போது அந்த காலகட்டத்தில் சிறிய மாற்றம் இருக்கும்.

ஒரு பறவை இந்தவகை செடி கொடிகளைக் கொண்டு கூடு அமைக்கும் என்று பொதுவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், திருவண்ணாமலையில் பார்க்கும்போது இங்கே கிடைக்கும் வேறு சில வகை பொருள்களை கூடமைப்பதில் அதே பறவைகள் பயன்படுத்தும். திருவண்ணாமலை மாவட்டத்தில் பறவைகளின் வாழ்வில் வெளிப்படும் இத்தகைய மாறுபாடுகளை இந்த நூலில் பதிவு செய்துள்ளோம்,” என்கிறார் சிவக்குமார்.

இது தவிர, வேறொன்றயும் இந்த நூல் செய்துள்ளது. ஒவ்வொரு பறவைக்கும் தமிழ்ப் பெயர்கள் என்ன என்று ஆராயும்போது பறவை எழுத்தாளர்கள் பலவிதமான பெயர்களை எதிர்கொண்டனர். இதைக் கடந்து பறவைகளுக்கான பெயர்கள் தமிழில் ஒருவிதமாக தரப்படுத்தப்படுவதுண்டு. பொதுவாகத் தரப்படுத்தப்பட்ட இப்படிப்பட்ட பெயர்களுக்கு மாற்றாக உள்ளூர் அளவில் சில பறவைகளுக்கு சுவாரசியமான பெயர்கள் இருக்கும். இத்தகைய உள்ளூர் அளவிலான பெயர்களையும், அவை எந்த ஊரில் வழங்குகின்றன என்பதையும் இந்த நூல் ஆவணப்படுத்துகிறது.

ஆள்காட்டி (red wattled lapwing) பறவை கோசாலை என்ற ஊரில் தித்தித்தாங் குருவி என்று அழைக்கப்படுவதாக இந்நூல் பதிவு செய்கிறது.

உள்ளூர்ப் பெயர்கள்

பறவை ஓவியங்கள் - சிவக்குமார்

பட மூலாதாரம்,SIVAKUMAR

ஒரு காட்டுக்குள் மனிதர்கள், வேட்டைக்காரர்கள் வந்தால், உயரப் பறந்து எச்சரிக்கை ஒலி எழுப்பும் பறவை இது என்பதால் ஆக்காட்டி அல்லது ஆள்காட்டி என்பது இந்தப் பறவைக்கு பொதுவாக ஏற்கப்பட்ட தமிழ்ப் பெயர் ஆகும். ஆனால், தித்தித்தாங்குருவி என்ற இந்த உள்ளூர்ப் பெயர் அந்தப் பறவையின் எச்சரிக்கை ஒலி அமைப்பை ஒத்திருப்பது சுவாரசியமானது.

அதைப் போலவே செம்போத்து என்று பொதுவில் அழைக்கப்படும், குயில் இனத்தைச் சேர்ந்த பறவை ஆடையூர் என்ற ஊரில் கள்ளி காக்கா என்று அழைக்கப்படுவதையும் இந்த நூல் ஆவணப்படுத்தியுள்ளது.

இது தவிர  இ பேர்ட் என்னும் பறவை ஆவணப்படுத்தும் தளத்தில் புவியிடக் குறிப்போடு திருவண்ணாமலையில் பார்க்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு, வல்லுநர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்பளிக்கப்பட்ட பறவைகள் மட்டுமே இந்த கையேட்டில் இடம் பெற்றுள்ளதாக கூறுகிறார் சிவக்குமார்.

ஓவியங்களுக்கு என்ன முக்கியத்துவம்?

பறவை ஓவியம்  - சிவக்குமார்

பட மூலாதாரம்,SIVAKUMAR

இப்படி பறவைகளுக்கான உள்ளூர் களக் கையேட்டில் துல்லிய ஓவியங்கள் இடம் பெறுவது எந்த அளவுக்கு முக்கியம் என்று கேட்டபோது, “என்னுடைய துல்லிய ஓவியங்களைப் பொறுத்தவரை, பறவைகள் எந்த நிறத்தில் எந்த அளவில் உள்ளனவோ அவற்றை துல்லியமாக அதே நிறத்தில், அதே அளவு விகிதத்தில் வரைகிறேன். ஈர்ப்புக்காக அவற்றை மாற்றியோ, வண்ணம் கூட்டியோ வரைவதில்லை.

ஆனாலும், சில பறவைகளை அடையாளம் காண்பதில் ஒரு வகையில் ஓவியங்கள் கூடுதலாக உதவுகின்றன. வேறுசில வகையில் புகைப்படங்களே சிறந்தவை என்பதால் புகைப்படங்களையும் இந்த நூலில் பயன்படுத்தியுள்ளோம். இப்படி பயன்பாட்டு நோக்கில் மட்டுமல்லாமல், ஆவண மொழியில் எழுதப்பட்ட நூலைப் படிப்பது சலிப்பை ஏற்படுத்தாமல் இருக்கவும், ஓவியம் என்ற அழகியல் வடிவம் உதவி செய்யும்” என்கிறார் சிவக்குமார்.

இந்த களக் கையேடு, பழைய நூல்கள், இணைய தளம் ஆகியவற்றில் உள்ள தரவுகளை மட்டும் பயன்படுத்தாமல் அவற்றை உள்ளூரில் கண்ட தரவுகளைக் கொண்டு மேம்படுத்தி தயாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.  

சிவக்குமார் பறவை ஓவியம்

பட மூலாதாரம்,SIVAKUMAR

“வெறும் பறவைகளை மட்டும் ஆவணப்படுத்தாமல், அந்தப் பறவைகள் வாழும் நிலவியல்  அமைப்பு, அது சார்ந்து வாழும் மரம் செடி கொடிகள், பாலூட்டிகள், ஊர்வன போன்றவற்றையும் உள்ளூர் அளவில் நேரில் கண்டு, உறுதி செய்து 10-15 ஆண்டுகளில் பெற்ற கள அனுபவத்தின் அடிப்படையில் தொகுத்துள்ளோம்.

எடுத்துக்காட்டாக பொதுவாக வீண் என்று பார்க்கப்படும் தரிசு நிலங்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும், தரிசு நில அமைப்பு எப்படி குறிப்பிட்ட வகைப் பறவைகளுக்கு, குள்ளநரி போன்ற விலங்குகளுக்கு வாழிடமாக பங்கு வகிக்கிறது என்பதையும் இந்த நூலில் ஆவணப்படுத்தியுள்ளோம்,” என்கிறார் சிவக்குமார்.

பறவைகளை துல்லியமாக ஓவியம் தீட்டும் சிவக்குமார்: தமிழ் களக் கையேட்டில் இடம் பெற்ற படங்கள் - BBC News தமிழ்

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை !! ♥️ ♥️

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.