Jump to content

கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு: 7பேர் உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு: 7பேர் உயிரிழப்பு!

கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு: 7பேர் உயிரிழப்பு!

கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய தாக்குதல்கள் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே சுமார் 30 மைல் (50 கிமீ) தொலைவில் உள்ள கடற்கரை நகரமான ஹாஃப் மூன் பேவில் இரண்டு தனித்தனி இடங்களில் நிகழ்ந்தன.

தாக்குதல் நடத்தியவர் உள்ளூர்வாசியான 67 வயதான ஜாவோ சுன்லி என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டார்.

உயிரிழந்தவர்களின் முதல் நான்கு பேர் உள்ளூர் நேரப்படி 14:22 மணியளவில் காளான் பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டனர், மற்ற மூன்று பேர் பின்னர் அருகிலுள்ள டிரக்கிங் வணிகத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கான காரணத்தை இதுவரை புலனாய்வாளர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், துப்பாக்கிதாரி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட எட்டாவது நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சான் மேடியோ கவுண்டி ஷெரிஃப் கிறிஸ்டினா கார்பஸ் கூறினார்.

முன்னதாக, சந்திர புத்தாண்டன்று லொஸ் ஏஞ்சல்ஸின் கிழக்கு விளிம்பில் பெரும்பான்மையான ஆசிய அமெரிக்க நகரமான மான்டேரி பூங்காவில் உள்ள கார்வே அவென்யூவில் உள்ள பால்ரூம் நடன கிளப்பில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கி சூட்டில் 11பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
 

https://athavannews.com/2023/1321497

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலிபோர்னியாவில் மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி! சந்தேக நபர் கைது

By SETHU

24 JAN, 2023 | 09:28 AM
image

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் திங்கட்கிழமை நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஹாப் மூன் பே நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் காவல்துறையினரிடம் சரணடைந்த நிலையில் செய்யப்பட்டுள்ளார்.  அவர் உள்ளூரில் வசிக்கும் 67 வயதான ஸாவோ சுன்லி என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

கலிபோர்னியா மாநிலத்தின் மொன்டெரே பார்க் நகரில் கடந்த சனிக்கிழமை நபரொருவரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 10 பேர் கொல்லப்பட்டு 2 நாட்களின் பின் இச்சம்பவம் இடம்பெற்றது. 

ஏற்கெனவே,   மொன்டெரே பே நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற  துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து, ஜனவரி 26 ஆம் திகதிவரை அமெரிக்க தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைகள் பெரும் பிரச்சினையாக உள்ளன. கடந்த வருடம் அமெரிக்காவில் 44,000 பேர் துப்பாக்கிச் சூடுகளால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/146538

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nunavilan said:

துப்பாக்கி மக்களிடம் இருக்கும்  வரை மேற்படி சம்பவங்கள்  தொடரும்.

இந்த‌ ல‌ச்ச‌ன‌த்தில் தீவிர‌வாத‌ம் ப‌க்க‌ வாத‌ம் என்று புல‌ம்பும் நாட்ட‌வ‌ர்க‌ளின் நாட்டில் இப்ப‌டி ந‌ட‌ப்ப‌து ப‌க்க‌வாத‌ம்

இந்த‌ விடைய‌த்தில் ஒன்றுக்கும் உத‌வாத‌ இந்தியா வெற்ற‌ர் என்று தான் சொல்ல‌னும்.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

இந்த‌ ல‌ச்ச‌ன‌த்தில் தீவிர‌வாத‌ம் ப‌க்க‌ வாத‌ம் என்று புல‌ம்பும் நாட்ட‌வ‌ர்க‌ளின் நாட்டில் இப்ப‌டி ந‌ட‌ப்ப‌து ப‌க்க‌வாத‌ம்

இந்த‌ விடைய‌த்தில் ஒன்றுக்கும் உத‌வாத‌ இந்தியா வெற்ற‌ர் என்று தான் சொல்ல‌னும்.................

சனநாயகத்தின்ரை உச்ச  நாட்டிலை பால்குடி பாலன்களும் துவக்கு தோட்டாக்களோடை திரியோணும்.....அதுதான் சனநாயகம்.எல்லாருக்கும் எல்லா உரிமையும் இருக்காம்.:rolling_on_the_floor_laughing:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி

By SETHU

25 JAN, 2023 | 11:13 AM
image

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், ஒரு நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிந்துள்ளனர். 

யகீமா நகரில் செவ்வாய்க்கிழமை (24) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடையொன்யின் உள்ளேயும் வெளியேயும் நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினார்.

தாக்குதலாளி பொலிஸாரால் தேடப்பட்ட நிலையில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் 21 வயதான ஜெரீட் ஹெட்டொக் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை 72 வயதான ஒரு நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.  

அதே மாநிலத்தில் திங்கட்கிழமை 67 வயதான நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/146642

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.