Jump to content

உலகின் மிக பழமையான துறைமுக நகர் "பூம்புகார்".. ஆய்வில் வெளியான புது தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிக பழமையான துறைமுக நகர் "பூம்புகார்".. ஆய்வில் வெளியான புது தகவல்!

view-from-light-house.jpg?w=700&h=-1&s=1

திருச்சி: சுமார் 8000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பழமையான துறைமுகங்கள் இதுவரை மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பூம்புகார் துறைமுகமும்தான் இதில் மிக பழமையானதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த துறைமுகம் சுமார் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில்(NIOT), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பூம்புகார் நகரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேராசிரியர் ராமசாமி தலைமையிலான இந்த ஆய்வு குழுவானது சுமார் மூன்று ஆண்டுகளாக ஆய்வை மேற்கொண்டு வந்திருக்கிறது. இக்குழு இதேபோல கடந்த 2000ம் ஆண்டில் குஜராத் கடற்கரையில் ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் துவாரகா நகரத்தை கண்டுபிடித்தது.

இந்நகரம் தற்போது காம்பே வளைகுடாவில் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. இதனை ஆய்வு செய்த இக்குழு துவாரகா நகரம் கி.மு 7,500 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை கண்டறிந்தது. இந்தியாவின் மிக பழமையான நகரமான மொஹஞ்சதாரோ 4,500 ஆண்டு காலம் பழமையானது. இந்நிலையில் துவாரகா நகரம் குறித்து பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இதை விட பழமையான நகரம் பூம்புகார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பூம்புகார்

இது குறித்து ஆய்வு குழுவின் தலைவர் ராமசாமி கூறுகையில், 'தற்போது இருக்கும் நிலப்பரப்பிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் கடலுக்கு அடியில் 50 முதல் 100 மீ ஆழத்தில் துறைமுகம், கப்பல்துறை, மனித குடியிருப்புகள் மற்றும் கலங்கரை விளக்கம் ஆகியவை இருப்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இந்த ஆய்வை நாங்கள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கினோம். இதற்கு NIOT ஆய்வு கப்பல்களான 'சாகர் தாரா' மற்றும் 'சாகர் அன்வேஷிகா' ஆகியவற்றை பயன்படுத்தினோம். இதற்கு முன்னர் வரை இந்த பூம்புகார் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானது என்று நம்பியிருந்தோம். ஆனால் தற்போது எங்களுக்கு கிடைத்த புதிய ஆதாரங்களின்படி நகரத்தின் வயது கூடுதலாக இருக்கும் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறோம்.

பிரமாண்டம்

பழைய பூம்புகார் என்பது சுமார் 11 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்டிருந்துள்ளது. இந்த துறைமுகத்தில் வந்து நிற்கும் கப்பல்களிலிருந்து சரக்குகளை வேறு இடங்களுக்கு கொண்டு சென்று சேமித்து வைப்பதற்கு ஏதுவாக கால்வாய்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இங்கிருந்த கப்பல் துறையில் ஒரே நேரத்தில் சுமார் 70-80 கப்பல்கள் வரை நிறுத்தி வைக்கலாம். அந்த அளவுக்கு பெரியதாக இருந்திருக்கிறது. இதனை நாங்கள் கண்டுபிடிக்க சுமார் 6 ஆயிரம் சதுர கி.மீ வரை ஆய்வு செய்தோம். இதில் கப்பலுடன் இணைக்கப்பட்ட மல்டிபீம் எக்கோசவுண்டரையும் நாங்கள் பயன்படுத்தினோம்.

கண்டுபிடிப்பு

e8c12-1.jpg

இந்த மல்டிபீம் எக்கோசவுண்டரால் சேகரிக்கப்பட்ட தகவல்களை வைத்து கடலின் அடியில் உள்ள நிலப்பரப்பை வரைப்படமாக்கினார். இதற்கடுத்து கடலுக்கடியில் உள்ள எச்சங்களை கண்டுபிடிக்க ROV எனப்படும் வாகனத்தை பயன்படுத்தினோம். இதில் கேமிராவுடன் சென்சாரும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வாகனத்தின் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. தற்போது வரை முடித்துள்ள ஆய்வில், சுவர்கள், கடலோரத்தில் தோண்டப்பட்ட குழிகள், குடியிருப்புகள், கலங்கரை விளக்கத்தின் எச்சங்கள், சுழல் படிக்கட்டுகள் கொண்ட கட்டிடங்கள், தூண்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பழமையானது

இதில் என்ன ஆச்சரியம் எனில் சில எச்சங்கள் எகிப்தின் கட்டமைப்புகளோடு ஒத்துப்போகிறது. ஆனால் இவ்வளவு சிறப்பான ஒரு நகரம் எப்படி கடலில் மூழ்கியது என்பதுதான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம், சுனாமி, கடல் மட்டம் உயர்வு, சூறாவளி, புயல்கள் போன்றவற்றால் இந்நகரம் அழிக்கப்பட்டிருக்கலாம். சுமார் 6,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை மயிலாடுதுறை வரை கடல் உட்புகுந்திருக்கலாம். மீண்டும் கடல் பின்வாங்கியதன் காரணமாக இந்த நகரம் அழிக்கப்பட்டிருக்கலாம்' என்று கூறியுள்ளார். மேலும், 'இந்த ஆய்வில் 12 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்த ஆய்வு மேலும் ஓராண்டுக்கு தொடரும். ஆதேபோல இந்த ஆய்வுகள் குமரி கண்டம் குறித்த ஆய்வுக்கு பயன்படும்' என்றும் ராமசாமி கூறியுள்ளார்.

https://tamil.oneindia.com/news/trichirappalli/it-is-estimated-that-the-old-port-of-poompuhar-coast-may-be-around-15-thousand-years-old-495538.html

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி தோழர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி தோழர்........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கடல் நகரம் பூம்புகார் 15000 ஆண்டுகள் பழமையானதா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
பூம்புகார் நகரம்

பட மூலாதாரம்,BHARATHIDASAN UNIVERSITY

2,500 ஆண்டுகள் பழமையானது என கருதப்படும் பூம்புகார், சுமார் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என்கிறது, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வுத்துறையின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட சமீபத்திய ஆய்வு.

மேலும், இந்த ஆய்வில் பூம்புகாரின் தற்போதைய கடற்கரையில் இருந்து சுமார் 30-40 கி.மீ தூரத்தில் கடலுக்குக் கீழே 50-100 மீட்டர் ஆழத்தில் சுமார் 250 சதுர கி.மீ. பரப்பில் ஒரு துறைமுக நகரம் இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

ஆனால், இந்த ஆய்வு அறிவியல்பூர்வமானது இல்லையென்றும், 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் பொறியியல் சார்ந்த திறன்கள் இல்லை என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் மறுப்பு வாதத்தை முன்வைத்துள்ளனர். எதன் அடிப்படையில் இந்த வயது எட்டப்பட்டது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

உலகின் பல பகுதிகளிலும் பெருவாரியான நகரங்கள் கடலோரப் பகுதிகளிலே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பண்டைய அரசுகளின் தலைநகரங்களாகவும் பண்டைய துறைமுக நகரங்களாகவும் விளங்கியுள்ளன. 

 

சோழ மன்னர்களால் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டதாகவும் பின்னர் கடலுக்குள் புதையுண்டதாகவும் கருதப்படும் பூம்புகார் துறைமுக நகரம் குறித்து, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவேரிப்பூம்பட்டினம் என்றும் பூம்புகார் அழைக்கப்படுகிறது. 

பூம்புகார் நகரம் முதன்முதலாக கட்டமைக்கப்பட்ட இடம் மற்றும் காலம் , பின்நாளில் அது இடங்கள் மாறி இருந்தால் அதற்கான இடங்கள் மற்றும் கால வரையறைகள் உள்பட, பூம்புகார் பற்றிய பல உண்மைகள் இன்றுவரை புதிராகவே உள்ளன. 

”15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது”

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் பல கோடி நிதி உதவியோடு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

”தற்போதைய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூம்புகார் துறைமுக நகரத்தில் ஒரு துறைமுகம், அதன் அருகே மிகப்பெரிய கப்பல் துறைகள், அதைச் சுற்றிலும் பல விதமான கட்டிடங்களைக் கொண்ட குடியிருப்புகள் மற்றும் கலங்கரை விளக்கமும் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன” என, பேராசிரியரும் பூம்புகார் ஆய்வுத்திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான எம். ராமசாமி கூறுகிறார். 

இந்த ஆய்வு, தற்போதைய கடற்கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. முதல் 40 கி.மீ வரை உள்ள சுமார் 1,000 சதுர கி.மீ.களில் MBES சர்வே (ஒலிசார் கடல் கீழ் தரை மட்ட அளவீடு), தேசிய கடல் சார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த MBES சேகரித்த கடல் கீழ் தரை மட்டத்தின் தகவல்களை சுமார் 1,000 க்கும் மேற்பட்ட வகைகளில் கணணி சார் செயல் ஆக்கம் செய்து ஆராயப்பட்டது. 

2,500 ஆண்டுகள் பழமையானது என கருதப்பட்ட பூம்புகார் துறைமுக நகரம், சுமார் 15,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என்பதுதான் இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளுள் முக்கியமானது என்கிறார், எம். ராமசாமி. 

உலகிலேயே மிகப்பழமையான துறைமுக நகரமாக பூம்புகார் இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். 

ஆய்வு கூறுவது என்ன?

”இந்த ஆய்வில் காவிரி வண்டல் பகுதிகள் இந்திய செயற்கைக்கோள் படங்கள் மூலமும் மற்றும் கடல் கீழ் பகுதிகள் GEBCO (ஜெப்கோ - பல்துறை சார் கடல் கீழ் தரைமட்ட அளவு) மற்றும் MBES மூலம் ஆராயப்பட்டன. ஜெப்கோ மூலம் நடத்திய முதற்கட்ட ஆய்வுகள் மூலம் கடலுக்குக் கீழே 40 கி.மீ. தூரம் வரை மூன்று மிகப்பெரிய டெல்டாக்களை காவிரி நதி உருவாக்கி இருப்பது தெரியவந்தது” என்கிறார் அவர்.

மேலும், அவர் கூறுகையில், ”பூம்புகார் நகரம் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டது என்றுதான் தற்போதுவரை நம்பப்படுகிறது. ஆனால்,  தற்போதைய கடற்கரையில் இருந்து சுமார் 30-40 கி.மீ தூரத்தில் கடலுக்குக் கீழே 50-100 மீட்டர் ஆழத்தில் சுமார் 250 சதுர கி.மீ. பரப்பில் பூம்புகார் துறைமுக நகரம் இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடர் காரணமாக, பூம்புகார் நகரம் தற்போதைய இடத்திற்கு வந்திருக்கலாம்” என்கிறார் ராமசாமி. 

இந்த துறைமுகம் வடக்கு-தெற்காக 11 கி.மீ நீளமும் கிழக்கு-மேற்காக 2.5 கி.மீ அகலமும் கொண்டு இருந்தது என்றும், இதில் வடக்கு - தெற்காக நீண்ட கால்வாய்கள் கப்பல்கள் போக்குவரத்துக்காகவும், குறுக்குக்கால்வாய்கள் கப்பல்களை திருப்புவதற்காகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கக்கூடும் எனவும்  இவை சரக்குகளை ஏற்றி-இறக்கவும், சேமித்துவைக்கவும் இவை  துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் 70-80 கப்பல்களை நிறுத்த பயன்படுத்துவதற்காக இருந்து இருக்கலாம் என்றும் ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

”துறைமுகத்திற்கு 10 கி.மீ. வடக்கே அழிந்த நிலையில் உள்ள ஒரு கலங்கரை விளக்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கு வடக்கே சுமார் 4 சதுர கி.மீ. பரப்பளவில் மணலால் மூடப்பட்ட குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. மேலும் துறைமுகத்திற்கு வடக்கே வடக்கு-தெற்காக காணப்படுகின்ற மணல்மேட்டில் சுமார் 12 கி.மீ. நீளத்திற்கு காம்பவுண்ட் சுவற்றுக்கு உள்ளே கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் காணப்படுகின்றன. இதேபோன்று துறைமுகத்திற்கு 10 கி.மீ. தென்கிழக்கிலும் காம்பவுண்ட் உடன் கூடிய , ஆனால் உள்ளே உள்ள கட்டடங்கள் அழிந்த நிலையில் உள்ள குடியிருப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் கூறுகிறார். 

சுனாமி, கடல்மட்ட உயர்வு, வெள்ளம், புயல் எழுச்சி போன்ற பேரிடர்கள் இடம்மாறி வந்த பூம்புகாரை அழித்து இருக்கக்கூடும் என தெரிவிக்கிறார் எம். ராமசாமி.

பூம்புகாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக வடிவமைக்க சுமார் 12 நிறுவனங்களை இணைத்து இந்த ஆய்வு தொடர்ந்துவருவதாகவும் இங்கு கிடைத்த தடயங்களை கார்பன் டேட்டிங் செய்வதும் அடுத்தக்கட்ட ஆராய்ச்சி என்றும் அவர் கூறுகிறார்.

கீழடி
 
படக்குறிப்பு,

கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருட்கள்

”இன்னும் ஆதாரங்கள் வேண்டும்”

ஆனால், இந்த ஆய்வை முற்றிலும் ஏற்க மறுக்க மறுக்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வு தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியர் செல்வக்குமார் கூறுகையில், ”இது உறுதிபடுத்தப்படாத ஆய்வாக இருக்கிறது. சில அறிவியல் ரீதியாக படங்களை வைத்துக்கொண்டு அதனை சொல்கின்றனர். அங்கு தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. அதுவரை இதனை ஒரு யூகமாகத்தான் கருத வேண்டும். ஏனெனில், 15,000 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஒரு நகரம் இருந்திருக்க வாய்ப்பில்லை. தொல்லியல் ஆய்வுகளில் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் நமக்குக் கிடைத்திருக்கிற சான்றுகளின்படி நாம் வேட்டையாடி உணவு சேகரிக்கும் மக்கள் குழுவாகத்தான் இருந்திருக்கிறோம். கற்கால கருவிகள் தான் கிடைத்திருக்கின்றன. அப்போது உலோகமே இல்லை. அந்த காலத்தில் இதுவரை கட்டிடப் பகுதிகள் கிடைக்கவில்லை. 15000 ஆண்டுகளுக்கு முன்பு என்பது மிகமிகப் பழமையான காலக்கட்டம்” என்கிறார்.

இந்த ஆய்வில் கிடைத்துள்ள படங்களில் உள்ள அமைப்புகள் இயற்கையானதா அல்லது மனிதர்கள் உருவாக்கியதா என்பது தெரியவில்லை என்றும் அடுத்தக்கட்ட ஆய்வுகள் செய்யும்போதுதான் அதனை உறுதியாக சொல்ல முடியும் என்கிறார் அவர்.

படங்களை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் உருவகப்படுத்திக்கொள்ள முடியும் என்பது செல்வக்குமார் போன்ற தொல்லியல் ஆய்வாளர்களின் வாதமாக உள்ளது. 

பூம்புகாரில் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வுகள் குறித்து பேசிய அவர், “இந்திய தொல்லியல் துறை, தேசிய கடலாய்வு நிறுவனம் ஏற்கனவே பூம்புகாரில் நடத்திய ஆய்வுகளில், கி.மு. 300 காலக்கட்டத்திலான உடைந்த கப்பல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புத்த விகாரை குறித்த சான்றுகள் உள்ளன. இந்த சான்றுகளை தெளிவாக நாம் பார்க்க முடியும். ஆனால், இந்த சமீபத்திய ஆய்வில் நீருக்கடியில் கிடைத்துள்ள படங்களை வைத்து சொல்கின்றனர். ஆனால், அதனை நாகரிகம் என கூறுவதற்கு நமக்குக் கூடுதல் ஆதாரங்கள் வேண்டும்.” என தெரிவித்தார்.

கடலுக்கடியில் தொல்லியல் ஆய்வுகள் நடத்துவது சாத்தியம் என்று கூறும்  அவர், அதற்கு நிறைய பொருட்செலவாகும் என தெரிவிக்கிறார்.

சிவகளை

பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMIL NADU

 
படக்குறிப்பு,

சிவகளை அகழாய்வில் கிடைத்துள்ள பொருட்கள்

இந்த ஆய்வையொட்டி இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. பூம்புகாரில் துறைமுகம் இருந்திருக்கிறது என்றால், அவர்கள் வேறு எந்த துறைமுகத்துடன் தொடர்பு வைத்திருந்தனர்? இந்த துறைமுகம் பழமையானதா அல்லது அவர்கள் தொடர்பு வைத்திருந்த துறைமுகம் பழமையானதா போன்ற கேள்விகள் எழுகின்றன. மேலும், அங்கு கிடைத்துள்ளதாக கூறப்படும் கட்டிட அமைப்புகள் என்ன பொருளால் ஆனவை என்பது குறித்தும் இந்த ஆய்வில் ஆவணப்படுத்தப்படவில்லை. 

கீழடி, சிவகளை உள்ளிட்ட அகழாய்வுகளில் கிடைத்துள்ள பொருட்கள் கண்கூடாக உள்ள நிலையில், இந்த ஆய்வுக்காக ஆதாரங்கள் தெளிவாக இல்லை என்பதும் எதிர்வாதமாக இருக்கிறது. 

“ஆரம்பத்தில் எல்லா ஆய்வுகளையும் எதிர்க்கத்தான் செய்வார்கள்”

ஆய்வுக்கு எழும் மறுப்புகள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளித்த பேராசிரியர் ராமசாமி, “ அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. அறிவியல்ரீதியாகத்தான் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறோம். கடல் கீழ் தரைமட்டத்தை 10 செ.மீ வரை துல்லியமாக கணித்து அதனை முப்பரிமாண படங்கள் வாயிலாக ஆய்வு செய்திருக்கிறோம். அதில்தான் இவற்றை கண்டறிந்துள்ளோம்” என்றார்.

மேலும், எந்த புதிய ஆய்வுகளுக்கும் விமர்சனங்கள் எழுவது வழக்கம்தான் எனக்கூறும் அவர், அடுத்தகட்டமாக கடலுக்கடியில் அடையாளம் காணப்பட்டுள்ள 11 இடங்களில் ஆ்ழ்கடல் புகைப்படங்கள் எடுக்கப்படும் என தெரிவித்தார். 

“ஆய்வில் கிடைத்துள்ள கட்டுமானங்கள் கட்டப்பட்டவை அல்ல, வெட்டப்பட்ட கட்டுமானங்கள். கடல் மணலை வெட்டி துறைமுகத்தை நிர்மாணித்திருக்கின்றனர். வேறு எந்த துறைமுகத்துடன் தொடர்பு கொண்டிருப்பார்கள் என்பதெல்லாம் அடுத்தகட்ட ஆய்வுகளில் தெரியவரும். இதுவரை கண்டுபிடித்திருப்பதே பெரியது. எடுத்ததும் இந்த ஆய்வை மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. நாங்கள் ஆய்வில் கண்டவற்றை நம்புகிறோம்” என்றார். 

https://www.bbc.com/tamil/articles/cg3wdrv3r32o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி புரட்சியர் 👍🏼

Link to comment
Share on other sites

Quote

இங்கு கிடைத்த தடயங்களை கார்பன் டேட்டிங் செய்வதும் அடுத்தக்கட்ட ஆராய்ச்சி என்றும் அவர் கூறுகிறார்.

 

Quote

கடல் கீழ் தரைமட்டத்தை 10 செ.மீ வரை துல்லியமாக கணித்து அதனை முப்பரிமாண படங்கள் வாயிலாக ஆய்வு செய்திருக்கிறோம். 

முதலில் குறைந்தபட்ச ஆய்வுகளாவது செய்யப்பட வேண்டும். அதற்கு முன்னரே 10000 - 15000 ஆண்டுகள் என்றும் 100 மீற்றர் ஆழத்தில் ஊர் இருந்தது என்றும் கணக்கு விடக் கூடாது.

 

இது உண்மை

Quote

பேராசிரியர் செல்வக்குமார் கூறுகையில்... 15,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் நமக்குக் கிடைத்திருக்கிற சான்றுகளின்படி நாம் வேட்டையாடி உணவு சேகரிக்கும் மக்கள் குழுவாகத்தான் இருந்திருக்கிறோம். கற்கால கருவிகள் தான் கிடைத்திருக்கின்றன. அப்போது உலோகமே இல்லை. 

 

கீழடிக்குப் போட்டியாக குஜராத்தில்தான் மனித நாகரீகம் தோன்றியது என்பதை 'இந்திய மக்களுக்கு' நிறுவிக் காட்ட மத்திய அரசு பல கோடிகள் செலவு செய்யலாம். இராமாயணம் உண்மைச் சரித்திரம் என்று நம்புவோருக்கு இரைபோட இப்படியான ஆய்வாளர்களும் நாட்டுக்குத் தேவை. 

அதுசரி, ஏன் கட்டுரையில் கீழடி அகழ்வுப் படங்களைச் சேர்த்துள்ளனர் ? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2,500 ஆண்டுகள் பழமையானது என கருதப்படும் பூம்புகார், சுமார் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என்கிறது, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வுத்துறையின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட சமீபத்திய ஆய்வு.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரிமத் தேதிகணிப்பு (carbon dating) என்ற முறை பல தசாப்தங்களாக வழக்கத்தில் இருக்கிறது. ஒரு சேதனப் பொருளின் வயதைச் சொல்வதானால், இதன் மூலம் தான் கணித்துச் சொல்ல முடியும். தொலை நோக்குத் தொழில் நுட்பம் மூலம் நிலப்பகுதியின் வயதைக் கணிக்க இயலாது. இந்த ஆய்வு ஒரு உருப்படியான தொல்லியல் சஞ்சிகைக்கு சமர்ப்பிக்கப் பட்டால் நிராகரிக்கப் படும்.

 இது போன்ற விஞ்ஞான ரீதியற்ற கண்டுபிடிப்புகளை தங்கள் இணையத் தளத்தில் மட்டும் தான் பிரபலப் படுத்த முடியும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) RIYAN PARAG 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
    • தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.