Jump to content

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகினார் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகினார் !

25 JAN, 2023 | 09:15 PM
image

 

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

இன்று (ஜனவரி 25) முதல் ராஜினாமா அமுலுக்கு வருவதாக ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின்  உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/146699

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இதுவரை பதவி விலகலை : உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

By T. SARANYA

27 JAN, 2023 | 04:32 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பி.எஸ்.எம்.சார்லஸ் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய செய்தியை ஊடகங்கள் வாயிலாக அறிந்துக் கொண்டோம்.

பதவி விலகலை அவர் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பதவி விலகமாட்டார்கள்.

ஏனெனில் அவர்கள் மீது முழுமையான நம்பிக்கை உள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் வெள்ளிக்கிழமை (ஜன 27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் ஜனநாயகத்திற்கு கிடைத்த பிரதான வெற்றியாக கருதுகிறோம்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் எவ்வளவு நிதி செலவு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் ஊடாக பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இதற்கமைய கடந்த 24 ஆம் திகதி அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.

இதற்கமைய இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு 20 ரூபா மாத்திரம் செலவிட வேண்டும் அதன்படி ஒரு தேர்தல் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை இந்த 20 ரூபாவினால் பெருக்கி வரும் தொகையை அந்த வேட்பாளர் உரிய தேர்தல் தெர்குதிக்கான பிரசார நடவடிக்கைளுக்கு செலவிட வேண்டும்.அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தேர்தல் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கையை 20 ரூபாவினால் பெருக்கி வரும் தொகையில் 60 சதவீதத்தை மாத்திரம் குறித்த தேர்தல் தொகுதிக்காக செலவிட வேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தலுக்காக தான் செலவு செய்த நிதி,அந்த நிதியை பெற்றுக்கொண்ட விதம் ஆகியவற்றுக்கான மூல ஆவணங்களை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இருவார காலத்திற்குள் முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும்.போலியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு,அது உறுதிப்படுத்தப்பட்டால் அந்த வேட்பாளரின் அரசியல் பதவி இரத்து செய்யப்படும்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பதவி விலகவுள்ளதாக ஊடகங்களிலும்,சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆணைக்குழுவின் உறுப்பினராக பதவி வகித்த பி.எஸ்.எம்.சார்லஸ் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதை ஊடகங்கள் வாயிலாகவே அறிந்துக் கொண்டோம். பதவி விலகல் தொடர்பில் இதுவரை உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு ஏதும் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறவில்லை.

பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாது.ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பதவி விலகமாட்டார்கள்,அவர்கள் மீது முழுமையான நம்பிக்கை உள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/146845

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் விலகல்?

அதிகாரத்தில் உள்ளோர் மனம் கோணாதபடி நடப்பதில் சாள்ஸ் வல்லவர் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமர்வுகள் இடம்பெறும்போது சுற்றித்திருந்த உறுப்பினர்கள் – கண்டித்த சபாநாயகர்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா :அரசியலமைப்பு பேரவைக்கு அறிவிக்கப்படவில்லை !

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்துள்ளதாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அரசியலமைப்பு பேரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதன் தலைவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்த சார்லஸ், சமீபத்தில் ராஜினாமா செய்த நிலையில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்காக குறைந்தது.

https://athavannews.com/2023/1322140

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார்ள்ஸ் அனுப்பிய இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்கவில்லை-ஜனாதிபதி அலுவலகம்

சார்ள்ஸ் அனுப்பிய இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்கவில்லை-ஜனாதிபதி அலுவலகம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அனுப்பிய இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கவில்லை என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி கடந்த வாரம் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் ஜனவரி 25 அன்று தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ததுடன், அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

ஏன் விலகல்?

அதிகாரத்தில் உள்ளோர் மனம் கோணாதபடி நடப்பதில் சாள்ஸ் வல்லவர் தானே?

இவருக்கு... கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது போல் தெரிகின்றது.
ஏனென்றால்... வேறு ஒரு முஸ்லீம்   உறுப்பினருக்கும், மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. 👇

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றொரு உறுப்பினருக்கும் கொலை மிரட்டல்!

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றொரு உறுப்பினருக்கும் கொலை மிரட்டல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம்.மொஹமட்டுக்கு பதவியை இராஜினாமா செய்யுமாறு நேற்று (27) இரவு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கொலை மிரட்டல் வந்த எஸ்.பி. திவரத்னவுக்கு மீண்டும் ஒருமுறை குறுஞ்செய்தி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட உறுப்பினர்களான பத்திரன மற்றும் திவரத்ன ஆகியோருக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2023/1322151

 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

பி.எஸ்.எம் சார்ள்ஸின் இராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்கவில்லை

 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அனுப்பிய இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கவில்லை என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

charls-300x169.jpeg
ஜனவரி 25 ஆம் திகதி, திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்ததுடன், அவரது இராஜிநாமா கடிதமும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/236332

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல்-விசாரணைகள் ஆரம்பம்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல்-விசாரணைகள் ஆரம்பம்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டலுடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கம் குறித்து விசாரணை நடத்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.

ஆணைக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி. திவாரட்ன மற்றும் கே.பி.பி. பத்திரன ஆகியோர் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில் ,அவர்களின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1322199

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றொரு உறுப்பினரையும் பதவி விலகுமாறு மரண அச்சுறுத்தல் ; விசாரணைகளை ஆரம்பித்தது சி.ஐ.டி.

By T. SARANYA

29 JAN, 2023 | 09:26 AM
image

(எம்.மனோசித்ரா)

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம்.மொஹம்மட்டை பதவி விலகுமாறு வலியுறுத்தி தொலைபேசியூடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு அவருக்கு இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட எஸ்.பி.திவாரத்னவிற்கும் குறுஞ்செய்தியூடாக மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த உறுப்பினர்கள் இருவருக்கும் தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, குற்றப்புலனாய்வு பிரிவினால் (சி.ஐ.டி.) இது தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எஸ்.பி.திவாரத்ன மற்றும் கே.பி.பி.பத்திரண ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த 18 ஆம் திகதி தொலைபேசியூடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே தற்போது மீண்டுமொரு உறுப்பினரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் எஸ்.பி.திவாரத்ன மற்றும் எம்.எம்.மொஹம்மட் ஆகியோர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவாவிற்கு அறிவித்துள்ளனர்.

அதற்கமைய குறித்த இரு உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/146942

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ள்ஸின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்!

By T. SARANYA

07 FEB, 2023 | 03:30 PM
image

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் முன்னர் அறிவித்திருந்தார்.

இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர்  சமன் ஏக்கநாயக்க  சார்லஸிடம் இன்று (பெப் 07) தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/147637

Link to comment
Share on other sites

மக்கள் சுதந்திரமாக தம் பிரதிநிதிகளை தெரிவு செய்வதை உறுதிப்படுத்துவதற்கு தான் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இது வரை காலம் இந்த ஆணைக்குழுவில் இருந்து மக்களின் வரிப்பணத்தின் மூலம் சம்பளம், சலுகைகள் என வருமானம் பார்த்து விட்டு, மக்களின் காசில் வயிறு வளர்த்து விட்டு, மக்கள் தேர்தல் ஒன்றின் மூலம் தம் உள்ளூர் பிரதினிதிகளை தெரிவு செய்ய முனையும் போது, அதை குழப்பியடிக்க, ரணிலின் சூழ்ச்சியிற்கு ஒத்தாசை கொடுக்கும் விதமாக பதவி விலகியுள்ளார் இவர்.

தமிழ் அதிகாரிகள் என்றால் அரசுக்கு வாலை ஆட்டி, நக்கி விடவும் செய்வார்கள் என்பதை மீண்டும் மீண்டும் சாள்ஸ் நிரூபிக்கின்றார்.

இன்னுமொருவரும் பதவி விலகினால், ஆணக்குழுவின் தீர்மானங்கள் செல்லுபடியற்றதாகி விடும் (தீர்மானம் ஒன்று நிறைவேற தலைவரைத் தவிர்த்து ஆகக் குறைந்தது 3 பேராவது இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்). பின்னர் பொதுஜன பெரமுனவின் விருப்புக்கு ஏற்றவாறு தேர்தலை பிற்போட முடியும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றம் தலையிட்டு தேர்தலை நடத்தினாலொழிய தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. அரச ஊழியர்களின் சம்பளம் வழங்க காசில்லையாம், அதால தேர்தல் நடத்தவும் காசில்லை என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தம்மா மகிந்தரின் ஆள் என்பது தெரிந்ததே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2023 at 14:09, நிழலி said:

மக்கள் சுதந்திரமாக தம் பிரதிநிதிகளை தெரிவு செய்வதை உறுதிப்படுத்துவதற்கு தான் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இது வரை காலம் இந்த ஆணைக்குழுவில் இருந்து மக்களின் வரிப்பணத்தின் மூலம் சம்பளம், சலுகைகள் என வருமானம் பார்த்து விட்டு, மக்களின் காசில் வயிறு வளர்த்து விட்டு, மக்கள் தேர்தல் ஒன்றின் மூலம் தம் உள்ளூர் பிரதினிதிகளை தெரிவு செய்ய முனையும் போது, அதை குழப்பியடிக்க, ரணிலின் சூழ்ச்சியிற்கு ஒத்தாசை கொடுக்கும் விதமாக பதவி விலகியுள்ளார் இவர்.

தமிழ் அதிகாரிகள் என்றால் அரசுக்கு வாலை ஆட்டி, நக்கி விடவும் செய்வார்கள் என்பதை மீண்டும் மீண்டும் சாள்ஸ் நிரூபிக்கின்றார்.

இன்னுமொருவரும் பதவி விலகினால், ஆணக்குழுவின் தீர்மானங்கள் செல்லுபடியற்றதாகி விடும் (தீர்மானம் ஒன்று நிறைவேற தலைவரைத் தவிர்த்து ஆகக் குறைந்தது 3 பேராவது இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்). பின்னர் பொதுஜன பெரமுனவின் விருப்புக்கு ஏற்றவாறு தேர்தலை பிற்போட முடியும்.

முள்ளிவாய்க்கால் நேரம் களத்தில் நின்று ஓரளவுக்கு நியாயமாக செயல்பட்டவர் என நினைக்கிறேன் (பிழை என்றால் திருத்தவும்).

பின்னர் இதை காரணம் காட்டியே புலி என முத்திரை குத்தப்பட்டு பழிவாங்கபட போவதாக மிரட்டியதும் அப்படியே அரசின் பக்கம் சாய்ந்து விட்டார் என நினைக்கிறேன்.

அன்று முதல் நாய்க்கு வாழ்க்கைபட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும் என்ற நிலை என நினைக்கிறேன்.

On 7/2/2023 at 14:27, ஏராளன் said:

நீதிமன்றம் தலையிட்டு தேர்தலை நடத்தினாலொழிய தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. அரச ஊழியர்களின் சம்பளம் வழங்க காசில்லையாம், அதால தேர்தல் நடத்தவும் காசில்லை என்கிறார்கள்.

தேர்தல் நடக்குமா போல தெரியவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தேர்தல் நடக்குமா போல தெரியவில்லை.

அப்போ சுமந்திரனின் திட்டம் என்னாவது? சுதந்திர தினத்தில் தலையையாவது காட்டியிருக்கலாம், தேர்தலை நம்பி எல்லாக் கனவும் கைநழுவிப்போச்சு.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.