Jump to content

இந்தியா, பாகிஸ்தான் அணுவாயுதப் போரை அமெரிக்கா தடுத்தது: மைக் பொம்பியோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, பாகிஸ்தான் அணுவாயுதப் போரை அமெரிக்கா தடுத்தது: மைக் பொம்பியோ

By SETHU

25 JAN, 2023 | 04:22 PM
image

2019 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணுவாயுதப் போர் முளூம் அபாயம் ஏற்பட்டதாகவும், அமெரிக்கா தலையிட்டு அதனை தடுத்தது எனவும் அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்கச் செயலாளர் மைக்  பொம்பியோ தெரிவித்துள்ளார்.

சிஐஏவின் தலைவராகவும் பணியாற்றிய மைக் பொம்பியோ, தான் எழுதிய "Never give an inch : fighting for the America I love" எனும் நூலில் இதனைத் தெரிவித்துள்ளார். 

2019 பெப்ரவரியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பாகிஸ்தானியப் பிராந்தியத்துக்குள் இந்தியப் படையினர் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். காஷ்மீரில் தற்கொலை குண்டுத் தாக்குதலொன்றில் 41 படையினர் கொல்லப்பட்டதையடுத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் இந்திய விமானப் படை விமானமொன்றை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதுடன் விமானியையும் சிறைபிடித்தது.

அப்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான சந்திப்புக்காக ட்ரம்புடன் வியட்நாமுக்கு பொம்பியோ சென்றிருந்தார்.

அப்போது தன்னை இந்தியாவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அவசர தொலைபேசி அழைப்பின் மூலம் உறக்கத்திலிருந்து எழுப்பினாரென பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்

'அணுவாயுத தாக்குதலுக்கான தயார்படுத்தல்களை பாகிஸ்தான் ஆரம்பித்துவிட்டது என அவர் நம்பினார். இந்தியாவும் இது குறித்து சிந்திப்பதாக அவர் எனக்கு தெரிவித்தார்.

'எதுவும் செய்ய வேண்டாம் எனவும் பிரச்சினையை தீர்க்க ஒரு நிமிடம் அவகாசம் தருமாறும் நான் கோரினேன்' என பொம்பியோ எழுதியுள்ளார்.

பின்னர் அணுவாயுத தாக்குதல்களுக்கு தயாராகாமல் இருப்பதற்கு இந்தியாவையும் பாகிஸ்தானையும் அமெரிக்க ராஜதந்திரிகள் இணங்கச் செய்தனர் எனவும், 'ஒரு பயங்கர விளைவைத் தடுப்பதற்கு அன்றிரவு நாம் செய்ததை வேறு எந்த நாடும் செய்திருக்க முடியாது' எனவும் பொம்பியோ எழுதியுள்ளார்.

https://www.virakesari.lk/article/146668

Link to comment
Share on other sites

உயிருடன் பிடிபட்ட கேரள  விமானப்படை வீரர் சில தினங்களின் பின் விடுதலை ஆனார். அத்தருணம் இரு நாடுகளிடமும் எந்த பதட்டமும் இருந்ததாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

உயிருடன் பிடிபட்ட கேரள  விமானப்படை வீரர் சில தினங்களின் பின் விடுதலை ஆனார். அத்தருணம் இரு நாடுகளிடமும் எந்த பதட்டமும் இருந்ததாக தெரியவில்லை.

பொம்பியேவுக்கு ரிப்பளிக்கன் நொமினேசனில் ஒரு கண். அதுக்கு என்ன வேணும் எண்டாலும் சொல்லுவார்.

பதற்றம் இருந்தது ஆனால் அணு ஆயுத போர் வருமளவுக்கு இல்லை.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையா, பொய்யா தெரியாது.

வெளிப்படையாக, அணுஆயுத பிரோயோக சாத்திய கூறு தென்படவில்லை, கிந்தியா - பாகிஸ்தான் நிலையில்.

அமெரிக்காவிடம் அணு ஆயுத பிரயோக தயார்படுத்துதல், அறிகுறிகளை அறிதல் போன்ற வசதிகள் உண்டு. ஆனால் , அமெரிக்கா மனித உளவும் (HUMINT) அறிந்து இருக்கும் - தலைமைகள் என்ன யோசிக்கிறது என்பதை பற்றி.

அனால், பொம்பையோ சொன்ன விதம் நம்ப முடியாமல் இருக்கிறது - கிந்திய  அதிகாரி நித்திரையில் இருந்து அவரை எழுப்பி .... பாகிஸ்தான் தயார் படுத்துகிறது என்று பொம்பையோவுக்கு சொன்னது என்பது. உண்மையில் நடைபெற்றதை - அதாவது அமெரிக்கா உளவு மூலம் அமெரிக்கா அறிந்ததை , உறவுகளுக்காக மறைக்கலாம். மாறி  நடைபெற்று இருக்கலாம் அமெரிக்கா கிந்தியா - பாக்கிஸ்தான் ஐ பொறுக்கும் படி கேட்டு ...       

இது தான் நான் சொல்லும் வெளிப்டையாக தெரியாத அணுஆயுத பிரோயோக சாத்திய கூறு.   

இது ஒருமுறை, இப்போதைய ரஷ்யா - உக்கிரைன் இல் எட்டிப்பார்த்து விட்டு போய்விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

Mike Pompeo வின் அடுத்த குண்டு 🤣

அமெரிக்காவில பொம்பியோ மட்டுமே வெடிகுண்டு? அவிங்க உருட்ட வெளிக்கிட்டால் நம்ம நல்லெண்ணை உருட்டுக்கள் பிச்சை வாங்கணும்...:rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தானுக்கு அணு குண்டை கொடுத்த‌ நாடு

இர‌ட்டை வேட‌ம் போட‌லாமா 🤣😁😂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/1/2023 at 05:21, குமாரசாமி said:

அமெரிக்காவில பொம்பியோ மட்டுமே வெடிகுண்டு? அவிங்க உருட்ட வெளிக்கிட்டால் நம்ம நல்லெண்ணை உருட்டுக்கள் பிச்சை வாங்கணும்...:rolling_on_the_floor_laughing:

நீ உருட்டு உருட்டுங்க உருட்டு என்கின்ற Love atoday பாடல் வசனம்தான் நினைவிற்கு வருகிறது. 

பெரிய பண்ணைக்கு முன்னால் எடுபிடிகளின் உருட்டு எம்மாத்திரம்? 🤣

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.