Jump to content

தேசிய தினமா ஆக்கிரமிப்பு தினமா பிளவுபட்டு நிற்கும் அவுஸ்திரேலியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தினமா ஆக்கிரமிப்பு தினமா பிளவுபட்டு நிற்கும் அவுஸ்திரேலியா

By RAJEEBAN

26 JAN, 2023 | 01:22 PM
image

அவுஸ்திரேலியாவின் பலநகரங்களில்  இடம்பெற்ற படையெடுப்பு நாள் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் தேசிய தினத்தை  படையெடுப்பு தினமாக கருதி பல நகரங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

1788 இல் சிட்னிகோவில் குற்றவாளிகளுடன் பிரிட்டிஸ் கடற்படையினர் முதன்முதலில் தரையிறங்கிய நாளே - ஜனவரி 26 அவுஸ்திரேலிய தினமாக நினைவுகூறப்படுகின்றது.

download__77_.jpg

இதுவே அவுஸ்திரேலியாவில் ஐரோப்பிய குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்தது.

இந்த தினத்தை ஆக்கிரமிப்பு தினம் என தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்;றுள்ளன

அவுஸ்திரேலியாவின் காலனித்துவ வரலாறு குறித்து கடும் விவாதங்களும் அரசியல் சர்ச்சைகளும் இடம்பெற்று வரும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

invasion-day-darwin-2023.jpg

நாங்கள் பொய்சொல்வதை நிறுத்தவேண்டும் என பேராசிரியர் மார்சியா லாங்டொன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் தேசிய தினம் குடியேற்றத்தை கொண்டாடுவதாக காணப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தினம் என்பதே மிகப்பெரிய பொய் என குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் பொருத்தமான தினத்தை கண்டுபிடிக்கவேண்டும் அதன் பின்னர் நாங்கள் அவுஸ்திரேலிய வரலாறு குறித்த உண்மையை தெரிவிக்க ஆரம்பிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் நாங்கள் அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளிற்கும் பூர்வீககுடிகள் அல்லாதவர்களிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் உயிர்பிழைத்தவர்களிற்கு ஒரு மரியாதையை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

invasion-day-brisbane-2023.jpg

19ம் நூற்றாண்டிலிருந்து இந்த தினம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் 1994 முதல் அவுஸ்திரேலிய தினம்

பொதுவிடுமுறை தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது .

மேலும் பூர்வீககுடிகளை திட்டமிட்டு அகற்றியது பிரிட்டிஸ் குடியேற்றங்களிற்காக இடம்பெற்ற இனப்படுகொலை பூர்வீககுடிகள் தொடர்ச்சியாக எதிர்கொண்ட புறக்கணிப்புகள் போன்றவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளமை இந்த தினத்தை இரண்டு வகையான மனோநிலையுடன் கடைப்பிடிக்கப்படும் நாளாக மாற்றியுள்ளது.

கடந்தகாலங்களில் 26ம் திகதி கொடி பட்டாசுகள் வாணவேடிக்கை போன்றவற்றுடன் கடைப்பிடிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த நிலை மாறி ஆர்ப்பாட்டங்களை மையப்படுத்தியதாக இந்த நாள் மாறியுள்ளது.

இந்த தினத்தை மாற்றவேண்டும் என்பதற்கான பரப்புரைகளில் அதிகளவான அவுஸ்திரேலியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இன்றைய தினம் வெள்ளை அவுஸ்திரேலியாவை அங்கீகரித்த தினம் என சிட்னியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் விராட்ஜூரி சமூகத்தை சேர்ந்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

invasion-day-survival-day-events-austral

அவர்கள் எங்களை முற்றாக அழிக்க முயன்றார்கள் நாங்கள் இன்னமும் இங்கிருக்கின்றோம்,அவர்கள் எங்கள் மீது இனப்படுகொலைகளில் ஈடுபட முயன்றார்கள் நாங்கள் இங்கிருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தினத்தை வேறு திகதிக்கு மாற்றுவதற்கான  யோசனை எதுவும் முன்வைக்கப்படவில்லை என பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் கார்டியன் நடத்திய கருத்துக்கணிப்பு 23வீதமானவர்கள் திகதி மாற்றத்தை ஆதரிப்பதை வெளிப்படுத்தியுள்ளன.

https://www.virakesari.lk/article/146745

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/1/2023 at 19:07, ஏராளன் said:

அவர்கள் எங்களை முற்றாக அழிக்க முயன்றார்கள் நாங்கள் இன்னமும் இங்கிருக்கின்றோம்,அவர்கள் எங்கள் மீது இனப்படுகொலைகளில் ஈடுபட முயன்றார்கள் நாங்கள் இங்கிருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

இதுதான் எங்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் நடந்தது

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் வெள்ளை ஆங்கிலோ-சக்ஸன்🤣, ஐரோப்பிய வம்சாவழியினர், அவுஸ்திரேலியாவை அபர்ஜினிகள் கையில் கொடுத்து விட்டு வெளியேற வேண்டும்🤣.

Last in first out என்ற முறையில் முதலில் இலங்கை தமிழர் உட்பட்ட தென்னாசியர் வெளியேற வேண்டும்.

பிறகு சீனர்.

கடைசியாக ஐரோப்பியர்.

பலஸ்தீனருக்கு யூதர் செய்வதும், அபர்ஜினிகளுக்கு தமிழர் உள்ளிட்ட குடியேறிகள் செய்வதும் ஒன்றுதான்.

இவ்வண்.

ஈழதமிழ் பலஸ்தீன நண்பர்கள் சம்மேளனம்

மாஸ்கோ

இரஸ்யா

கிளைகள்: ரியாத், காபூல், பியொங்யாங், டெஹ்ரான்

Edited by goshan_che
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

அவுஸ்ரேலியாவை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் வெள்ளை ஆங்கிலோ-சக்ஸன்🤣, ஐரோப்பிய வம்சாவழியினர், அவுஸ்திரேலியாவை அபர்ஜினிகள் கையில் கொடுத்து விட்டு வெளியேற வேண்டும்🤣.

Last in first out என்ற முறையில் முதலில் இலங்கை தமிழர் உட்பட்ட தென்னாசியர் வெளியேற வேண்டும்.

பிறகு சீனர்.

கடைசியாக ஐரோப்பியர்.

பலஸ்தீனருக்கு யூதர் செய்வதும், அபர்ஜினிகளுக்கு தமிழர் உள்ளிட்ட குடியேறிகள் செய்வதும் ஒன்றுதான்.

இவ்வண்.

ஈழதமிழ் பலஸ்தீன நண்பர்கள் சம்மேளனம்

மாஸ்கோ

இரஸ்யா

கிளைகள்: ரியாத், காபூல், பியொங்யாங், டெஹ்ரான்

அது  தானே..

அவர்களும் நாமும்  பொருளாதாரம்  தேடி  புறப்பட்டவர்கள் தானே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Last in first out என்ற முறையில் முதலில் இலங்கை தமிழர் உட்பட்ட தென்னாசியர் வெளியேற வேண்டும்.

பலஸ்தீனருக்கு யூதர் செய்வதும், அபர்ஜினிகளுக்கு தமிழர் உள்ளிட்ட குடியேறிகள் செய்வதும் ஒன்றுதான்.

ஈழதமிழ் பலஸ்தீன நண்பர்கள் சம்மேளனம்  ரஷ்யாவின் இந்த நீதியான தீர்மானத்தை நான் கடுமையாக பரிந்துரை செய்கிறேன்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4/1/2021ல் தான் அவுஸ்ரேலிய தேசிய கீதத்தில் இருந்த “  we are young and free“ என்ற வரியை “ we are one and free” என மாற்றினார்கள். ஏனெனில் அவுஸ்ரேலியா பூர்வீக குடிகளைக் கொண்ட பழைய தேசம் என்பதால்.. 

அதுபோல இந்த தினமும் ஒரு நாள் மாறும்☺️

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/1/2023 at 15:36, goshan_che said:

அவுஸ்ரேலியாவை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் வெள்ளை ஆங்கிலோ-சக்ஸன்🤣, ஐரோப்பிய வம்சாவழியினர், அவுஸ்திரேலியாவை அபர்ஜினிகள் கையில் கொடுத்து விட்டு வெளியேற வேண்டும்🤣.

Last in first out என்ற முறையில் முதலில் இலங்கை தமிழர் உட்பட்ட தென்னாசியர் வெளியேற வேண்டும்.

பிறகு சீனர்.

கடைசியாக ஐரோப்பியர்.

பலஸ்தீனருக்கு யூதர் செய்வதும், அபர்ஜினிகளுக்கு தமிழர் உள்ளிட்ட குடியேறிகள் செய்வதும் ஒன்றுதான்.

இவ்வண்.

ஈழதமிழ் பலஸ்தீன நண்பர்கள் சம்மேளனம்

மாஸ்கோ

இரஸ்யா

கிளைகள்: ரியாத், காபூல், பியொங்யாங், டெஹ்ரான்

தெற்கு ஆபிரிக்காவை மறந்து விட்டீர்களோ?   :491:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

தெற்கு ஆபிரிக்காவை மறந்து விட்டீர்களோ?   :491:

அங்கே இருந்து வெள்ளையளை வெளியேற்றினால் அநேகம் பேர் ஜேர்மனிக்கும், நெதர்லாந்துக்கும்தான் வருவார்கள்🤣.

பிறகு ஜேர்மனியில் இருந்து பழுப்புதோலரை ஆசியா, துருக்கிக்கு அனுப்பலாம் 🤣.

Recycling is good for the environment 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அங்கே இருந்து வெள்ளையளை வெளியேற்றினால் அநேகம் பேர் ஜேர்மனிக்கும், நெதர்லாந்துக்கும்தான் வருவார்கள்🤣.

பிறகு ஜேர்மனியில் இருந்து பழுப்புதோலரை ஆசியா, துருக்கிக்கு அனுப்பலாம் 🤣.

Recycling is good for the environment 🤣

அப்படியே வட அமெரிக்க செல்லங்கள் இரண்டு  பேரிலும் கை வைக்க உலகம் அமைதிக்கு வரும். அவரவர் அவர்களின் நாடுகளில் வாழ்ந்து விட்டால் உலகம் அமைதி பெறும்.:face_with_tears_of_joy:

இயற்கை கூட அந்தந்த நாடுகளுக்கேற்ப மரம் செடி கொடி உயிரினங்களை படைத்துள்ளது.
உதாரணத்திற்கு நான் ஜேர்மனியில் வடலி வளர்த்து கள்ளு குடிக்க முடியாதல்லவா? :zany_face:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

அப்படியே வட அமெரிக்க செல்லங்கள் இரண்டு  பேரிலும் கை வைக்க உலகம் அமைதிக்கு வரும். அவரவர் அவர்களின் நாடுகளில் வாழ்ந்து விட்டால் உலகம் அமைதி பெறும்.:face_with_tears_of_joy:

இயற்கை கூட அந்தந்த நாடுகளுக்கேற்ப மரம் செடி கொடி உயிரினங்களை படைத்துள்ளது.
உதாரணத்திற்கு நான் ஜேர்மனியில் வடலி வளர்த்து கள்ளு குடிக்க முடியாதல்லவா? :zany_face:

ஓம். ரிசைக்கிளிங் நல்லதுதான்.

ஆனால் ரிசைக்கிளிங் என்ற போர்வையில் ஐரோப்பிய கழிவுகளை இலங்கையில் கொட்டுவதை, குறிப்பாக தமிழர் பகுதியில் கொட்டுவதை ஏற்க முடியாது என அந்த மக்கள் சொல்ல கூடும்🤣.

பிகு

ஜேர்மனியில் முடியாது ஆனல் கென்யாவில் வடலி வளர்த்து கள்ளும் குடிக்கலாம், வேலியும் பாயலாம் 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஓம். ரிசைக்கிளிங் நல்லதுதான்.

ஆனால் ரிசைக்கிளிங் என்ற போர்வையில் ஐரோப்பிய கழிவுகளை இலங்கையில் கொட்டுவதை, குறிப்பாக தமிழர் பகுதியில் கொட்டுவதை ஏற்க முடியாது என அந்த மக்கள் சொல்ல கூடும்🤣.

உலகம் போகும் போக்கை பார்க்க ரிசைக்கிளின் நடக்கும் போல கிடக்கு... தமிழர் பகுதி சொல்லக்கூடும். ஆனால் எனது உங்களது அடுத்த சந்ததி போராட வாய்ப்புள்ளது. அதன் பின் உலகம் எப்படியோ யாரறிவார்?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.