Jump to content

மதுவுக்கு அடிமையான கணவர்கள், கைகொடுத்த கறவை மாடுகள்: சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதுவுக்கு அடிமையான கணவர்கள், கைகொடுத்த கறவை மாடுகள்: சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்
கைகொடுத்த கறவை மாடுகள்:  சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பல பெண்கள், மதுப் பழக்கத்திற்கு அடிமையான கணவர்கள் வாங்கிய கடனை கறவை மாடுகள் மூலம் பால் உற்பத்தி செய்த வருமானத்தில் அடைத்ததோடு,  பொருளாதாரத்திலும் முன்னேறியுள்ளனர்.

கொரோனா காலத்தில்கூட குன்னத்தூர் கிராமத்துப் பெண்கள் பால் உற்பத்தி மூலமாகக் கிடைத்த வருமானத்தால் கடன் வலையில் இருந்து தப்பித்துள்ளனர்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை மீட்டு, தங்களது குடும்பத்தின் வளர்ச்சிக்கு மாடுகள் உதவுவதால், அவற்றைப் பராமரிப்பதில் இந்த பெண்கள் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். பல வீடுகளில் மாடுகளை பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினராகக் கருதுவதாகச் சொல்கிறார்கள்.

சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குன்னத்தூர். வயல்வெளி, மேய்ச்சல் நிலம், சிறிய குட்டைகள், கிராமத்துக் கோயில்கள், ஆங்காங்கே பனைமரங்கள் என கிராமத்து அடையாளங்கள் நிரம்பிய பகுதி இது. 

 

நாம் குன்னத்தூர் கிராமத்திற்குச் சென்ற நேரத்தில், மேய்ச்சல் பகுதிகளில் மாடுகள் அசைபோட்டுக் கொண்டிருந்தன. கிராமத்தில் 100 நாள் வேலையில் சில பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.

சுய உதவிக்குழு அலுவலகம் கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நாம் சென்றபோது, ஒரு குழுவாகச் சேர்ந்து பெண்கள் பாலில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளான பன்னீர் செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.

கைகொடுத்த கறவை மாடுகள்:  சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்

நம்மிடம் முதலில் பேசிய ஜானகி, ''நான் இப்போது 15 மாடுகளுக்குச் சொந்தக்காரர். கணவரை மதுப் பழக்கத்திலிருந்து மெல்ல மீட்டு வருகிறேன். எங்கள் ஊரில் பல ஆண்களாக மதுப் பழக்கம் இருப்பதால், பெண்களாகிய நாங்கள்தான் குடும்பத் தலைவர்களாகவும் செயல்படுகிறோம்.

எனக்கு மூன்று மகள்கள். மூன்று பேரையும் பால் உற்பத்தியில் கிடைக்கும் வருமானத்தை வைத்துத்தான் படிக்க வைத்தேன்,'' எனக் கூறுகிறார். கணவர் பெற்ற இரண்டு லட்சம் ரூபாய் கடனையும் பால் உற்பத்தியில் கிடைக்கும் வருமானம் மூலம் அவர் அடைத்துள்ளார். 

2008இல் குறிஞ்சி சுய உதவிக்குழுவில் இணைந்த இவர், முதலில் மாடு வாங்க ரூ.30,000 கடன் பெற்றார். அந்த மாட்டை பராமரித்து, தினமும் மேய்ச்சலுக்குக் கூட்டிச் செல்வது, நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது, சரியான உணவு கொடுப்பது என்று பால் உற்பத்திக்குத் தேவையான வேலைகளை கவனமாகச் செய்தார். அந்த மாட்டின் பாலை சுய உதவிக்குழுவின் பால் உற்பத்தி மையத்தில் செலுத்தி வந்தார்.

கைகொடுத்த கறவை மாடுகள்:  சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்

 ''சிறுக பணம் சேர்த்து, பணத்தை முதலீடு செய்து  முன்னேறியுள்ளேன். என்னிடம் இப்போது 15 மாடுகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.20,000 வரை பால் உற்பத்தியில் சம்பாதிக்கிறேன். தற்போது ஒரு மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். வீடு கட்டியிருக்கிறேன்,'' என்று ஜானகி தனது சாதனைகளை விவரிக்கும்போது பூரிப்பு அவரைத் தொற்றிக்கொண்டது.

ஜானகி போல பல நூறு பெண்கள் சுய உதவிக் குழுக்களில் இணையவே, கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குழுக்கள் இணைந்து குன்னத்தூர் பஞ்சாயத்து அளவிலான சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு உருவானது. அதற்கு தலைமை ஏற்றவர் உமா மகேஸ்வரி.

கிராமத்தின் நுழைவுப் பகுதியில் இருந்த மதுக் கடையை அகற்றப் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றதை நினைவு கூர்கிறார் உமா மகேஸ்வரி.

''எங்கள் ஊரில் பல பெண்கள் கடன் சுமையால் தத்தளித்த நேரத்தில்தான் சுய உதவிக்குழு அமைப்பு எங்களுக்குக் கைகொடுத்தது. 2008இல் பெண்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினோம். டாஸ்மாக் வாசலில் காலையில் நாங்கள் அமர்ந்துகொண்டோம்.

கடையை அகற்றும் வரை நாங்கள் வீடு திரும்பப்போவதில்லை என்று சொன்னதை அடுத்து, பல அதிகாரிகள் வந்தார்கள். உடனடியாக கடையை மூடினார்கள். எங்கள் கிராமத்தில் எங்கும் டாஸ்மாக் கடை இல்லை என்பது எங்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி,'' என்கிறார்.

கைகொடுத்த கறவை மாடுகள்:  சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்

மது அருந்தும் பழக்கம் உள்ள கணவர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும் பிரச்னையால், பல பெண்களுக்கு மருத்துவச் செலவு, குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணம், அன்றாட செலவுகள் என எதற்கும் பணமில்லாமல் போனது.

முதலில் 12 பெண்கள் என்ற எண்ணிக்கையில் தொடங்கி இன்று சுமார் 500 பெண்கள் சுய உதவிக் குழுக்களில் இயங்குகின்றனர். சுய உதவிக் குழுக்கள் இணைந்து பஞ்சாயத்து அளவிலான சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பாகச் செயல்படுகின்றனர். தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அளவிலான சிறந்த சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு விருதை குன்னத்தூர் பெண்கள் 2014இல் பெற்றுள்ளனர்.

சுய உதவிக் குழு பெண்கள் சேர்ந்து நடத்தும் பால் உற்பத்தி மையத்திலிருந்து தினமும் 200 லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்து கொள்கிறது. கூட்டாக ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஐந்து லட்சம் ரூபாயை இந்தப் பெண்கள் பால் உற்பத்தி மூலம் பெறுகின்றனர். இதுதவிர மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் தயார் செய்கின்றனர்.

பால் உற்பத்திதான் அவர்கள் தொடங்கிய முதல் தொழில். அதில் 65 பெண்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, பன்னீர் தயாரிப்பது, பால் பொருட்களில் இனிப்புப் பண்டங்கள் தயாரிப்பது, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்குப் பாலில் இனிப்பு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்வது எனப் பல விதமான உபதொழில்களைத் தொடங்கினர்.

தையல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு, குன்னத்தூர் பெண்கள் ஆடைகள், தனியார் நிறுவனத்திற்குத் துணிப் பைகளைத் தைக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். அடுத்ததாக, பலவிதமான கைத்தொழில்களை ஒரே இடத்தில் கற்றுக் கொள்வதற்கான மையம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற திட்டத்தைக் கையில் எடுக்கவுள்ளனர்.

''கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரிய தொழிலதிபர்கள்கூட முடங்கிப் போனார்கள். எங்கள் ஊரில் உள்ள பெண்கள் ஒவ்வொருவரும் ரூ.25000 வரை சம்பாதித்தார்கள்.

பொருளாதார சிக்கலைச் சந்திக்கவில்லை. அதற்குக் காரணம் இந்த பால் உற்பத்தி தொழில்தான். பால் உற்பத்தி தொழிலால் குன்னத்தூரில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்கூட தொழில் முனைவோராக மாறியுள்ளனர்,'' என்கிறார் உமா மகேஸ்வரி.

கைகொடுத்த கறவை மாடுகள்:  சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்

தனி ஆளாக இருந்துகொண்டு தனது பெற்றோரையும் தனது குழந்தையையும் பராமரிக்க மாடுகள் உதவியதால், அவற்றை மிகுந்த பாசத்தோடு பார்த்துக் கொள்கிறார் கலையரசி. 

''2010இல் என் கணவர் என்னை விட்டுச் சென்றுவிட்டார். குழந்தையை எப்படிக் காப்பாற்றுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். என் தந்தை வயதானவர், அண்ணன் கால் உடைந்து வீட்டிலிருந்தார். வாழக்கையை  எப்படி எதிர்கொள்வது என்ற பயத்தில் இருந்தேன். பல நாட்களாக இரவு தூக்கம் இல்லை.

என் தோழிகள் சுய உதவிக்குழுவில் இருந்து மாடு வாங்கி பால் உற்பத்தி செய்வதை அறிந்துகொண்டு, தயக்கத்தோடு முதல் மாடு வாங்கினேன். என்னிடம் இப்போது ஐந்து மாடுகள் உள்ளன. மாதம் ரூ.20,000 சம்பாதிக்கிறேன். என் அண்ணனின் திருமண செலவுகளுக்கு நான் பணம் கொடுத்தேன்,'' என்கிறார் கலையரசி.

நம்மிடம் தங்களது வெற்றிக் கதைகளைச் சொல்லி முடித்த பெண்கள், தங்களது மாடுகளை அழைத்து வரச் சென்றனர். உமாமகேஸ்வரி, சுய உதவிக்குழு அலுவலகத்தில் இருந்து பெரிய பால் கேன்களை வெளியில் கொண்டு வந்து வைத்தார்.

ஆவின் கொள்முதலுக்காக பாலை எடுத்து வந்த பெண்களின் வரிசை நீளமானது. ஜானகி 10 லிட்டர் பாலை கேனில் ஊற்றிவிட்டு, தனது வங்கிக் கணக்கில் பணம் அதிகமாவதை மகிழ்ச்சியுடன் நம்மிடம் காண்பித்தார்.

https://www.facebook.com/BBCnewsTamil/videos/621587023302073/

https://www.bbc.com/tamil/articles/cw5qzy6zzp0o

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

மதுவுக்கு அடிமையான கணவர்கள், கைகொடுத்த கறவை மாடுகள்: சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்

பெண்களுக்கு கறவை மாடு 😋
ஆண்களுக்கு மைக்கல் ஜக்சன்😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால் வியாபாரம் செய்து கணவரின் கடனை அடைக்கும் கிராமத்து பெண்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பல பெண்கள், மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்று பொருளாதார ரீதியாக மேம்பட்டுள்ளனர். குடிப்பழக்கத்திற்கு ஆளான தனது கணவர் வாங்கிய இரண்டு லட்ச ரூபாய் கடனை அடைத்துள்ளதாகக் கூறும் அந்த ஊரைச் சேர்ந்த ஜானகி, தற்போது 15 மாடுகளை பாரமரித்துவருகிறார்.

தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு & தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.