Jump to content

மதுவுக்கு அடிமையான கணவர்கள், கைகொடுத்த கறவை மாடுகள்: சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதுவுக்கு அடிமையான கணவர்கள், கைகொடுத்த கறவை மாடுகள்: சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்
கைகொடுத்த கறவை மாடுகள்:  சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பல பெண்கள், மதுப் பழக்கத்திற்கு அடிமையான கணவர்கள் வாங்கிய கடனை கறவை மாடுகள் மூலம் பால் உற்பத்தி செய்த வருமானத்தில் அடைத்ததோடு,  பொருளாதாரத்திலும் முன்னேறியுள்ளனர்.

கொரோனா காலத்தில்கூட குன்னத்தூர் கிராமத்துப் பெண்கள் பால் உற்பத்தி மூலமாகக் கிடைத்த வருமானத்தால் கடன் வலையில் இருந்து தப்பித்துள்ளனர்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை மீட்டு, தங்களது குடும்பத்தின் வளர்ச்சிக்கு மாடுகள் உதவுவதால், அவற்றைப் பராமரிப்பதில் இந்த பெண்கள் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். பல வீடுகளில் மாடுகளை பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினராகக் கருதுவதாகச் சொல்கிறார்கள்.

சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குன்னத்தூர். வயல்வெளி, மேய்ச்சல் நிலம், சிறிய குட்டைகள், கிராமத்துக் கோயில்கள், ஆங்காங்கே பனைமரங்கள் என கிராமத்து அடையாளங்கள் நிரம்பிய பகுதி இது. 

 

நாம் குன்னத்தூர் கிராமத்திற்குச் சென்ற நேரத்தில், மேய்ச்சல் பகுதிகளில் மாடுகள் அசைபோட்டுக் கொண்டிருந்தன. கிராமத்தில் 100 நாள் வேலையில் சில பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.

சுய உதவிக்குழு அலுவலகம் கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நாம் சென்றபோது, ஒரு குழுவாகச் சேர்ந்து பெண்கள் பாலில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளான பன்னீர் செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.

கைகொடுத்த கறவை மாடுகள்:  சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்

நம்மிடம் முதலில் பேசிய ஜானகி, ''நான் இப்போது 15 மாடுகளுக்குச் சொந்தக்காரர். கணவரை மதுப் பழக்கத்திலிருந்து மெல்ல மீட்டு வருகிறேன். எங்கள் ஊரில் பல ஆண்களாக மதுப் பழக்கம் இருப்பதால், பெண்களாகிய நாங்கள்தான் குடும்பத் தலைவர்களாகவும் செயல்படுகிறோம்.

எனக்கு மூன்று மகள்கள். மூன்று பேரையும் பால் உற்பத்தியில் கிடைக்கும் வருமானத்தை வைத்துத்தான் படிக்க வைத்தேன்,'' எனக் கூறுகிறார். கணவர் பெற்ற இரண்டு லட்சம் ரூபாய் கடனையும் பால் உற்பத்தியில் கிடைக்கும் வருமானம் மூலம் அவர் அடைத்துள்ளார். 

2008இல் குறிஞ்சி சுய உதவிக்குழுவில் இணைந்த இவர், முதலில் மாடு வாங்க ரூ.30,000 கடன் பெற்றார். அந்த மாட்டை பராமரித்து, தினமும் மேய்ச்சலுக்குக் கூட்டிச் செல்வது, நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது, சரியான உணவு கொடுப்பது என்று பால் உற்பத்திக்குத் தேவையான வேலைகளை கவனமாகச் செய்தார். அந்த மாட்டின் பாலை சுய உதவிக்குழுவின் பால் உற்பத்தி மையத்தில் செலுத்தி வந்தார்.

கைகொடுத்த கறவை மாடுகள்:  சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்

 ''சிறுக பணம் சேர்த்து, பணத்தை முதலீடு செய்து  முன்னேறியுள்ளேன். என்னிடம் இப்போது 15 மாடுகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.20,000 வரை பால் உற்பத்தியில் சம்பாதிக்கிறேன். தற்போது ஒரு மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். வீடு கட்டியிருக்கிறேன்,'' என்று ஜானகி தனது சாதனைகளை விவரிக்கும்போது பூரிப்பு அவரைத் தொற்றிக்கொண்டது.

ஜானகி போல பல நூறு பெண்கள் சுய உதவிக் குழுக்களில் இணையவே, கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குழுக்கள் இணைந்து குன்னத்தூர் பஞ்சாயத்து அளவிலான சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு உருவானது. அதற்கு தலைமை ஏற்றவர் உமா மகேஸ்வரி.

கிராமத்தின் நுழைவுப் பகுதியில் இருந்த மதுக் கடையை அகற்றப் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றதை நினைவு கூர்கிறார் உமா மகேஸ்வரி.

''எங்கள் ஊரில் பல பெண்கள் கடன் சுமையால் தத்தளித்த நேரத்தில்தான் சுய உதவிக்குழு அமைப்பு எங்களுக்குக் கைகொடுத்தது. 2008இல் பெண்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினோம். டாஸ்மாக் வாசலில் காலையில் நாங்கள் அமர்ந்துகொண்டோம்.

கடையை அகற்றும் வரை நாங்கள் வீடு திரும்பப்போவதில்லை என்று சொன்னதை அடுத்து, பல அதிகாரிகள் வந்தார்கள். உடனடியாக கடையை மூடினார்கள். எங்கள் கிராமத்தில் எங்கும் டாஸ்மாக் கடை இல்லை என்பது எங்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி,'' என்கிறார்.

கைகொடுத்த கறவை மாடுகள்:  சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்

மது அருந்தும் பழக்கம் உள்ள கணவர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும் பிரச்னையால், பல பெண்களுக்கு மருத்துவச் செலவு, குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணம், அன்றாட செலவுகள் என எதற்கும் பணமில்லாமல் போனது.

முதலில் 12 பெண்கள் என்ற எண்ணிக்கையில் தொடங்கி இன்று சுமார் 500 பெண்கள் சுய உதவிக் குழுக்களில் இயங்குகின்றனர். சுய உதவிக் குழுக்கள் இணைந்து பஞ்சாயத்து அளவிலான சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பாகச் செயல்படுகின்றனர். தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அளவிலான சிறந்த சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு விருதை குன்னத்தூர் பெண்கள் 2014இல் பெற்றுள்ளனர்.

சுய உதவிக் குழு பெண்கள் சேர்ந்து நடத்தும் பால் உற்பத்தி மையத்திலிருந்து தினமும் 200 லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்து கொள்கிறது. கூட்டாக ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஐந்து லட்சம் ரூபாயை இந்தப் பெண்கள் பால் உற்பத்தி மூலம் பெறுகின்றனர். இதுதவிர மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் தயார் செய்கின்றனர்.

பால் உற்பத்திதான் அவர்கள் தொடங்கிய முதல் தொழில். அதில் 65 பெண்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, பன்னீர் தயாரிப்பது, பால் பொருட்களில் இனிப்புப் பண்டங்கள் தயாரிப்பது, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்குப் பாலில் இனிப்பு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்வது எனப் பல விதமான உபதொழில்களைத் தொடங்கினர்.

தையல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு, குன்னத்தூர் பெண்கள் ஆடைகள், தனியார் நிறுவனத்திற்குத் துணிப் பைகளைத் தைக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். அடுத்ததாக, பலவிதமான கைத்தொழில்களை ஒரே இடத்தில் கற்றுக் கொள்வதற்கான மையம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற திட்டத்தைக் கையில் எடுக்கவுள்ளனர்.

''கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரிய தொழிலதிபர்கள்கூட முடங்கிப் போனார்கள். எங்கள் ஊரில் உள்ள பெண்கள் ஒவ்வொருவரும் ரூ.25000 வரை சம்பாதித்தார்கள்.

பொருளாதார சிக்கலைச் சந்திக்கவில்லை. அதற்குக் காரணம் இந்த பால் உற்பத்தி தொழில்தான். பால் உற்பத்தி தொழிலால் குன்னத்தூரில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்கூட தொழில் முனைவோராக மாறியுள்ளனர்,'' என்கிறார் உமா மகேஸ்வரி.

கைகொடுத்த கறவை மாடுகள்:  சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்

தனி ஆளாக இருந்துகொண்டு தனது பெற்றோரையும் தனது குழந்தையையும் பராமரிக்க மாடுகள் உதவியதால், அவற்றை மிகுந்த பாசத்தோடு பார்த்துக் கொள்கிறார் கலையரசி. 

''2010இல் என் கணவர் என்னை விட்டுச் சென்றுவிட்டார். குழந்தையை எப்படிக் காப்பாற்றுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். என் தந்தை வயதானவர், அண்ணன் கால் உடைந்து வீட்டிலிருந்தார். வாழக்கையை  எப்படி எதிர்கொள்வது என்ற பயத்தில் இருந்தேன். பல நாட்களாக இரவு தூக்கம் இல்லை.

என் தோழிகள் சுய உதவிக்குழுவில் இருந்து மாடு வாங்கி பால் உற்பத்தி செய்வதை அறிந்துகொண்டு, தயக்கத்தோடு முதல் மாடு வாங்கினேன். என்னிடம் இப்போது ஐந்து மாடுகள் உள்ளன. மாதம் ரூ.20,000 சம்பாதிக்கிறேன். என் அண்ணனின் திருமண செலவுகளுக்கு நான் பணம் கொடுத்தேன்,'' என்கிறார் கலையரசி.

நம்மிடம் தங்களது வெற்றிக் கதைகளைச் சொல்லி முடித்த பெண்கள், தங்களது மாடுகளை அழைத்து வரச் சென்றனர். உமாமகேஸ்வரி, சுய உதவிக்குழு அலுவலகத்தில் இருந்து பெரிய பால் கேன்களை வெளியில் கொண்டு வந்து வைத்தார்.

ஆவின் கொள்முதலுக்காக பாலை எடுத்து வந்த பெண்களின் வரிசை நீளமானது. ஜானகி 10 லிட்டர் பாலை கேனில் ஊற்றிவிட்டு, தனது வங்கிக் கணக்கில் பணம் அதிகமாவதை மகிழ்ச்சியுடன் நம்மிடம் காண்பித்தார்.

https://www.facebook.com/BBCnewsTamil/videos/621587023302073/

https://www.bbc.com/tamil/articles/cw5qzy6zzp0o

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

மதுவுக்கு அடிமையான கணவர்கள், கைகொடுத்த கறவை மாடுகள்: சுய தொழிலில் முன்னேறும் பெண்கள்

பெண்களுக்கு கறவை மாடு 😋
ஆண்களுக்கு மைக்கல் ஜக்சன்😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால் வியாபாரம் செய்து கணவரின் கடனை அடைக்கும் கிராமத்து பெண்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பல பெண்கள், மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்று பொருளாதார ரீதியாக மேம்பட்டுள்ளனர். குடிப்பழக்கத்திற்கு ஆளான தனது கணவர் வாங்கிய இரண்டு லட்ச ரூபாய் கடனை அடைத்துள்ளதாகக் கூறும் அந்த ஊரைச் சேர்ந்த ஜானகி, தற்போது 15 மாடுகளை பாரமரித்துவருகிறார்.

தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு & தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.