Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

ஆரம்பத்திலிருந்தே ரஸ்யா உக்ரெய்ன் மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்தும்போதெல்லாம் நீங்களும் உங்கள் சகாக்களும் புதினைப் பாராட்டியும் அழிவை ரசித்தும் பக்கம் பக்கமாக எழுதியதெல்லாம் பகிடியாகவா இல்லை இது பகிடியா ? நீங்களும் ரஸ்ய ஆதாரவாளர்களும் எழுதிய கருத்துகள் அப்படியே யாழில் உள்ளன.

ரஷ்யா இடத்தில் அமெரிக்கா இந்த நடவடிக்கையை ஆரம்பித்திருந்தால் இன்று உக்ரேன் சுடுகாடாகியிருக்கும். உக்ரேன் அழிவுகளை பார்க்கும் போது மனித அழிவுகள் மிகமிக குறைவு.  உக்ரேன் யுத்தத்தில்  மனித அழிவுகளை பற்றி மேற்குலக ஊடகங்களே பெரிதாக பேசவில்லை.

புட்டினின் நோக்கமும் பொது மக்களை அழிப்பதல்ல....

5 hours ago, இணையவன் said:

இதற்கு 3 அப்பாவிகள விருப்பு வாக்கு வேறு போட்டுள்ளனர் 🙂

நான் அங்கே மூன்று விடயங்களை எழுதியுள்ளேன். எதற்கு விருப்பு போட்டார்கள் என்பது உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

இணையவன்

ஆரம்பத்திலிருந்தே ரஸ்யா உக்ரெய்ன் மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்தும்போதெல்லாம் நீங்களும் உங்கள் சகாக்களும் புதினைப் பாராட்டியும் அழிவை ரசித்தும் பக்கம் பக்கமாக எழுதியதெல்லாம் பகிடியாகவா இல்லை

Justin

அதே போல முதல் வெடி கேட்க முன்னரே "சிங்களவன் அடிக்கிறான்!" என்று ஓடி வந்த தேசிய வீரர்களும் போகாமல் சிவிங்கம் போல ஒட்டிக் கொண்டார்களாம்! அது மட்டுமல்லாமல், ஒட்டிக் கொண்டிருக்கும் இடத்தில் இருந்து புட்டி

nochchi

நன்றி! இதனை நானுட்படப் பலரும் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஆனால், இங்கே ரஸ்யா - உக்கிரேன் எனக் கருத்தாடல் நடைபெறுகிறது. அது தப்பில்லை. யாழினது அடைவே கருத்தாடல்தானே. அதேவேளை அந்தக் கருத்தாடல் ஊடாக

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

 

ஒரு நாட்டை ஆக்கிரமிக்க  போரைத்தொடங்கியவனை  ஆதரித்தபடி

நாட்டை  இழந்து  கொண்டிருப்பவனை

போராபத்தில் தத்தளிப்பவனை 

ஆதரிக்கக்கூடாது

உதவக்கூடாது என்பது  எந்தவகையில் நியாயம் தர்மம் அல்லது

போரை  முடிவுக்கு  கொண்டு  வரும் பாதை இது  தான்  என்று புரியவே  இல்லையண்ணா

அழிவுகள் விரும்பத்தக்கதல்ல.....
உக்ரேன் தனிநாடு.
அதனை ஒருவன் தாக்க வரும் போது எதிர்த்தாக்குதல் செய்யாமல் இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ்  கடைப்பிடித்த வழிமுறையை செலென்ஸ்கியும் கடைப்பிடித்திருக்கலாம் அல்லவா?
பின்னர் இன்று உலக நாடுகளின் ஆதரவை திரட்டியது போல் திரட்டி அழிவுகளை தவிர்த்திருக்கலாம் அல்லவா?

இன்று உக்ரேனுக்கு கொடுக்கப்படும் நவீன ஆயுதங்கள் இன்னும் அழிவை கூட்டுமே தவிர குறையாது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

அழிவுகள் விரும்பத்தக்கதல்ல.....
உக்ரேன் தனிநாடு.
அதனை ஒருவன் தாக்க வரும் போது எதிர்த்தாக்குதல் செய்யாமல் இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ்  கடைப்பிடித்த வழிமுறையை செலென்ஸ்கியும் கடைப்பிடித்திருக்கலாம் அல்லவா?
பின்னர் இன்று உலக நாடுகளின் ஆதரவை திரட்டியது போல் திரட்டி அழிவுகளை தவிர்த்திருக்கலாம் அல்லவா?

இன்று உக்ரேனுக்கு கொடுக்கப்படும் நவீன ஆயுதங்கள் இன்னும் அழிவை கூட்டுமே தவிர குறையாது.

இப்படி கருத்து சொல்லிக்கொண்டே இந்த திரியில் பேசப்படும் ரெண்டு நாடுகள் விவகாரத்தில் ரஷ்ய "அல்ட்டிமேட் ஸ்டார்", "தானைத்தளபதி" புட்டினை போற்றியும், வாழ்த்தியும் அறிக்கை விட்டுக்கொண்டு இருந்தால்  எப்படி?

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:

இப்படி கருத்து சொல்லிக்கொண்டே இந்த திரியில் பேசப்படும் ரெண்டு நாடுகள் விவகாரத்தில் ரஷ்ய "அல்ட்டிமேட் ஸ்டார்", "தானைத்தளபதி" புட்டினை போற்றியும், வாழ்த்தியும் அறிக்கை விட்டுக்கொண்டு இருந்தால்  எப்படி?

புட்டினை எனக்கு தனிப்பட பிடிக்கும் அவ்வளவுதான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினை நீங்கள் விரும்பத்தக்க தலைவர் வரிசையில் பார்ப்பதை தவறாக நான் எடுக்கவில்லை. 👍
ஆனால் குறிப்பிட்ட இரண்டு நாடுகள் விடயத்தில் அவரால் மேற்கொள்ளபட்ட வழிந்த தாக்குதல் / போர்  முனைவு; பெரும் உயிர் அழிவுகளையும், சொத்து அழிவுகளையும், நாடுகள் முழுவதும் சிதறி ஓடும் அகதிகளையும் உருவாக்கி உள்ளதே; அதை தான் நாங்கள் கண்டிக்கிறோம். 🙏

Edited by Sasi_varnam
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

அழிவுகள் விரும்பத்தக்கதல்ல.....
உக்ரேன் தனிநாடு.
அதனை ஒருவன் தாக்க வரும் போது எதிர்த்தாக்குதல் செய்யாமல் இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ்  கடைப்பிடித்த வழிமுறையை செலென்ஸ்கியும் கடைப்பிடித்திருக்கலாம் அல்லவா?
பின்னர் இன்று உலக நாடுகளின் ஆதரவை திரட்டியது போல் திரட்டி அழிவுகளை தவிர்த்திருக்கலாம் அல்லவா?

இன்று உக்ரேனுக்கு கொடுக்கப்படும் நவீன ஆயுதங்கள் இன்னும் அழிவை கூட்டுமே தவிர குறையாது.

 

இதையே திருப்பி போட்டால்....???

நமது  அத்தனை கொள்கைகளும் தியாகங்களும் வரலாறும்  கேலியாகிவிடும் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அழிவுகள் விரும்பத்தக்கதல்ல.....
உக்ரேன் தனிநாடு.
அதனை ஒருவன் தாக்க வரும் போது எதிர்த்தாக்குதல் செய்யாமல் இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ்  கடைப்பிடித்த வழிமுறையை செலென்ஸ்கியும் கடைப்பிடித்திருக்கலாம் அல்லவா?
பின்னர் இன்று உலக நாடுகளின் ஆதரவை திரட்டியது போல் திரட்டி அழிவுகளை தவிர்த்திருக்கலாம் அல்லவா?

இன்று உக்ரேனுக்கு கொடுக்கப்படும் நவீன ஆயுதங்கள் இன்னும் அழிவை கூட்டுமே தவிர குறையாது.

புட்டினின் நோக்கம் பொது மக்களைக் கொல்வதல்ல என்றால், இராணுவ நிலைகள் மீது மட்டும் தக்காமல் மேற்கு உக்ரைன் நகரங்கள் வரை மக்கள் வாழ்விடங்களைக் குறிவைக்கும் ரஷ்ய ஏவுகணைகளின் நோக்கம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

ரஷ்யாவின் தாக்குதலில் மக்கள் இறப்புக் குறைய பிரதான காரணம் உக்ரைனிய மக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளேயொழிய புட்டினின் தூய இதயமல்ல!😂 எச்சரிக்கை சைரன், நிலக்கீழ் ரயில் நிலையங்களை (இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் செய்தது போல) பதுங்குமிடங்களாக மாற்றியிருப்பது போன்ற நடவடிக்கைகள்   தான் இழப்புக் குறையப் பிரதான காரணம்.

பிரான்ஸ் ஹிற்லரிடம் சரணடந்ததால் விளைந்த நன்மைகளை எங்காவது வரலாற்று நூலில் வாசித்துப் பார்த்திருக்கிறீர்களா? பிரான்ஸ் சரணடையாமல் போராடியிருந்தால் ஹிற்லரை மஜினோ கோட்டுக்கு (Maginot line) அப்பால் நகராமல் முடக்கியிருக்கலாம் என்பது தான் உண்மை. அப்படி முடக்கியிருந்தால், பிரிட்டனும், பிரான்சும் சேர்ந்தே அமெரிக்காவின் துணையின்றி நாசி ஜேர்மனிக்குப் பாடம் படிப்பித்திருக்கலாம்.

அந்தப் பாடம் கிடைக்காமல் தான் ஹிற்லர் பிரிட்டனைப் பிடிக்க முனைந்து, அமெரிக்காவும் தலையிட வேண்டி வந்தது. சேர்ச்சில் தலைமையில் பிரிட்டன் மட்டும் ஹிற்லருக்குப் பணியாமல் போராடியிருக்கா விட்டால் இன்றைய உலகம் தலை கீழாக இருந்திருக்கும். நீங்கள் கூட ஜேர்மனியில் இருந்திருக்க மாட்டீர்கள்.   

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

ஒரு நாட்டை ஆக்கிரமிக்க  போரைத்தொடங்கியவனை [ புரின், ரஷ்யா ]ஆதரித்தபடி

நாட்டை  இழந்து  கொண்டிருப்பவனை

போராபத்தில் தத்தளிப்பவனை [உக்ரேன்]

ஆதரிக்கக்கூடாது

உதவக்கூடாது என்பது  எந்தவகையில் நியாயம் தர்மம்

எவ்வளவு சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் அய்யா 🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

புட்டினின் நோக்கம் பொது மக்களைக் கொல்வதல்ல என்றால், இராணுவ நிலைகள் மீது மட்டும் தக்காமல் மேற்கு உக்ரைன் நகரங்கள் வரை மக்கள் வாழ்விடங்களைக் குறிவைக்கும் ரஷ்ய ஏவுகணைகளின் நோக்கம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

ரஷ்ய புரின் உக்ரைன் முழுவதும் மக்களின் குடியிருப்பு பகுதிகள், உள்கட்டமைப்புகள், குழந்தைகள் விளையாட்டு மைதானம் என்று குறிவைத்து தாங்கி போர் குற்றம் செய்கிறார் என்பது உலகறிந்தது. ரஷ்யா ஆக்கிரமிக்க வரும்போது உக்ரைன் கைகட்டி கொண்டு இருக்க வேண்டும் என்று  ஈழத்து புதின் விசுவாசிகள் விரும்புவது அவர்கள் பிரார்த்தனை முழுவதுமே உக்ரைன் ஆக்கிரமிக்கபட்டு அகன்ற  ரஷ்யா உருவாக வேண்டும் என்று இருப்பதால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

புட்டினை நீங்கள் விரும்பத்தக்க தலைவர் வரிசையில் பார்ப்பதை தவறாக நான் எடுக்கவில்லை. 👍
ஆனால் குறிப்பிட்ட இரண்டு நாடுகள் விடயத்தில் அவரால் மேற்கொள்ளபட்ட வழிந்த தாக்குதல் / போர்  முனைவு; பெரும் உயிர் அழிவுகளையும், சொத்து அழிவுகளையும், நாடுகள் முழுவதும் சிதறி ஓடும் அகதிகளையும் உருவாக்கி உள்ளதே; அதை தான் நாங்கள் கண்டிக்கிறோம். 🙏

வியாபார மேற்குலகு  உலகில் செய்யாத அத்துமீறல்களையா ரஷ்யா செய்து விட்டது?
அண்மைக்கால அரபு வசந்தத்தில்  மக்கள் சிதறி ஓடி அலைந்து திரிந்த போது உங்கள் பொன்னான மனிதாபிமானம் எங்கே போனது?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 

இதையே திருப்பி போட்டால்....???

நமது  அத்தனை கொள்கைகளும் தியாகங்களும் வரலாறும்  கேலியாகிவிடும் அண்ணா

விசுகர்! ஒவ்வொரு நாடுகளுக்கும் பிரச்சனை இருக்கின்றது. அது அந்தந்த நாடுகளுக்கேற்ப வேறுபடும். உக்ரேன் பிரச்சனை ஐரோப்பிய அரசியல் பிரச்சனை. அதை எம்மின பிரச்சனையோடு தொடர்பு படுத்தினால் தலை வெடித்து விடும்.

மீண்டும் சொல்கிறேன் முள்ளிவாய்க்கால் அழிவும் உக்ரேன் அழிவும் ஒன்றல்ல.

குழுவாதத்தால் மட்டுமே என்னுடன் முரண்பட நினைக்கின்றீர்கள்.இது முன்னரும் ஒரு முறை நடந்தது. ஆனால் நான் யதார்த்தவாதி.

  • Like 3
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

புட்டினின் நோக்கம் பொது மக்களைக் கொல்வதல்ல என்றால், இராணுவ நிலைகள் மீது மட்டும் தக்காமல் மேற்கு உக்ரைன் நகரங்கள் வரை மக்கள் வாழ்விடங்களைக் குறிவைக்கும் ரஷ்ய ஏவுகணைகளின் நோக்கம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

இறந்த உடல்களை காட்டாமல்   புதைகுழிகளை காட்டுவதும் ஒரு சிறப்பு யுக்திதான்.

3 hours ago, Justin said:

பிரான்ஸ் ஹிற்லரிடம் சரணடந்ததால் விளைந்த நன்மைகளை எங்காவது வரலாற்று நூலில் வாசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

ஒம்.....அரசியல் பாடத்தில் உண்டு.

3 hours ago, Justin said:

அந்தப் பாடம் கிடைக்காமல் தான் ஹிற்லர் பிரிட்டனைப் பிடிக்க முனைந்து, அமெரிக்காவும் தலையிட வேண்டி வந்தது. சேர்ச்சில் தலைமையில் பிரிட்டன் மட்டும் ஹிற்லருக்குப் பணியாமல் போராடியிருக்கா விட்டால் இன்றைய உலகம் தலை கீழாக இருந்திருக்கும். நீங்கள் கூட ஜேர்மனியில் இருந்திருக்க மாட்டீர்கள்.   

உலகம் கட்டுக்கோப்புடன் இருந்திருக்கும். கொள்ளை இலஞ்சம் சமூக கொடூரங்கள் இல்லாமல் இருந்திருக்கும்.எல்லோரும் சமனான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள்.

இது ஒவ்வாத கருத்து இருந்தாலும் பரவாயில்லை.:beaming_face_with_smiling_eyes:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

இறந்த உடல்களை காட்டாமல்   புதைகுழிகளை காட்டுவதும் ஒரு சிறப்பு யுக்திதான்.

ஒம்.....அரசியல் பாடத்தில் உண்டு.
 

உலகம் கட்டுக்கோப்புடன் இருந்திருக்கும். கொள்ளை இலஞ்சம் சமூக கொடூரங்கள் இல்லாமல் இருந்திருக்கும்.எல்லோரும் சமனான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள்.

இது ஒவ்வாத கருத்து இருந்தாலும் பரவாயில்லை.:beaming_face_with_smiling_eyes:

மொட்டையாக ஓமெண்டு விடாமல் சொல்லுங்கோவன் அந்த நன்மைகளை? இது ஜேர்மனியின் அரசியல் பாடமா அல்லது சிறிலங்காவா?😂

உலகம் முழுக்க "தூய ஆரியர்" ஆட்சியில் இருந்திருந்தால் நிறைய விடயங்கள் இருந்திருக்காது தான்! அவற்றுள் சில - பிறவுண் தோல் மனிதர்கள், யூதர்கள், உடல் ரீதியான குறைபாடுடையோர், கம்யூனிஸ்டுகள் (பழைய ரஷ்யா போச்சே சார்😎!), வேலைக்குப் போகும் குடும்பப் பெண்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், இடைப்பாலினர், ..

👆மேலே இருக்கும் சில குழுவினர் மீதான உங்கள் "காண்டு" தான் உங்களை நாசி மற்றும் புட்டின் ஆதரவாளராக மாற்றுகிறதென நினைக்கிறேன் - சரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியாளர் சே குவேரா சொன்ன‌து தான் இந்த‌ நூற்றாண்டில் நினைவில் வ‌ந்து போகுது ]

நான் இதை முதலில் படித்த போது யாழ்களத்து கோஷான் சே  என்று நினைத்துவிட்டேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புரட்சியாளர் சே குவேரா சொன்ன‌து தான் இந்த‌ நூற்றாண்டில் நினைவில் வ‌ந்து போகுது ]

நான் இதை முதலில் படித்த போது யாழ்களத்து கோஷான் சே  என்று நினைத்துவிட்டேன்.

🤣

அவர் புரட்டு-வாளர் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அவர் புரட்டு-வாளர் 🤣

நன்றி.
ஓம்  கேள்விபட்டிருக்கிறேன். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

நீங்கள் கூட ஜேர்மனியில் இருந்திருக்க மாட்டீர்கள்.   

சில நேரம் யோசிக்க ஹிட்லர் வெண்டிருக்கலாம் எண்டும் தோணுது 🤣.

———

ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டு - 👇 இப்படி ஒருவர் தேர்ட் ரைக்ஹை புகழ்ந்து பொய்யாக எழுதுவதே ஜேர்மனிய அரசியலமைபுக்கு எதிரானதும்,  சட்ட விரோதமானதும், ஜேர்மன் நாட்டுக்கு தேச துரோகமும் ஆகாதா அண்ணை?

ஜெர்மனிக்கு நன்றி விசுவாசம் பாராட்டுவதாக சொல்லி கொள்ளும் நீங்கள், நவீன ஜேர்மனியின் அடித்தளத்தையே அசைக்க வல்ல இந்த கொடிய விசத்தை எப்படி போற்றி எழுதுகிறீகள்.

அப்புறம் ஹிட்லர் ஒண்டும் மகான் அல்ல. அவர் கட்டு கோப்புடன் ஒன்றும் ஆட்சி செய்யவுமில்லை. குழந்தைகள் பாலியல் துஸ்பிரயோகம் முதல் பலது அங்கேயும் நடந்தது.

ஹிட்லரின் ஆட்சியும் ஊழல் மலிந்தே இருந்தது.

 

1 hour ago, குமாரசாமி said:

உலகம் கட்டுக்கோப்புடன் இருந்திருக்கும். கொள்ளை இலஞ்சம் சமூக கொடூரங்கள் இல்லாமல் இருந்திருக்கும்.எல்லோரும் சமனான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள்.

 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

விசுகர்! ஒவ்வொரு நாடுகளுக்கும் பிரச்சனை இருக்கின்றது. அது அந்தந்த நாடுகளுக்கேற்ப வேறுபடும். உக்ரேன் பிரச்சனை ஐரோப்பிய அரசியல் பிரச்சனை. அதை எம்மின பிரச்சனையோடு தொடர்பு படுத்தினால் தலை வெடித்து விடும்.

மீண்டும் சொல்கிறேன் முள்ளிவாய்க்கால் அழிவும் உக்ரேன் அழிவும் ஒன்றல்ல.

குழுவாதத்தால் மட்டுமே என்னுடன் முரண்பட நினைக்கின்றீர்கள்.இது முன்னரும் ஒரு முறை நடந்தது. ஆனால் நான் யதார்த்தவாதி.

மிகவும் தவறான புரிதல் அண்ணா

இங்கே உங்கள் தம்பிகள் எல்லோரது பணிவான வேண்டுகோளை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

என்னை வேறு குழுவில் நீங்கள் போட்டாலும் உங்கள் தம்பிகளுடன் உங்கள் தம்பியாகத்தான் நிற்கிறேன் நிற்பேன் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

 

———

ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டு - 👇 இப்படி ஒருவர் தேர்ட் ரைக்ஹை புகழ்ந்து பொய்யாக எழுதுவதே ஜேர்மனிய அரசியலமைபுக்கு எதிரானதும்,  சட்ட விரோதமானதும், ஜேர்மன் நாட்டுக்கு தேச துரோகமும் ஆகாதா அண்ணை?

 

 

 

ட்ரம்ப் விடயத்தில் ஒன்று சொல்வார்கள்: "இதோ ட்ரம்ப் அரசியல் நாகரீகத்தின் அடிமட்டத்தைத் தொட்டு விட்டார் என்று எல்லோரும் நினைக்கும் போது, அவர் இன்னொரு காரியம் செய்து, அந்த அடியும் புட்டுக் கொண்டு இன்னொரு அடிமட்டத்திற்கு இறங்கி விடுவார். இப்படி புதிய அடிமட்ட நிலைகள் உருவாகிக் கொண்டே இருக்கும்!"😂

அதே போன்ற நிலை தான் புலத் தமிழர்களுள் ஒரு பிரிவினரது கருத்துகளில் வெளிப்படும். இந்த உக்ரைன் -ரஷ்ய பிரச்சினை பற்றிய உரையாடல்களில், சில புலத் தமிழர்கள் "he ain't so bad" என்ற வரையறைக்குள் ஹிற்லரையும் கொண்டு வந்து விட்டார்கள். இதை யாழில் மட்டுமன்றி யாழிணையத்திற்கு வெளியேயும் காண்கிறேன்.

இது ஒரு இரவில், உணர்ச்சி மேலீட்டால் உருவான நிலை அல்ல எனக் கருதுகிறேன். காலங்காலமாக யூரியூப், மீம்ஸ், இன்ஸ்ரா, ரிக் ரொக் என்பவற்றில் குப்பனும் சுப்பனும் இட்ட திரித்த வரலாற்றுப் படையலை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தமையால் உருவான ஒரு நீண்டகால மனநிலை!

இப்படிப் பட்ட ஒரு மனநிலை மாற்றத்தால் பிலிப்பைன்ஸ் அடைந்த பலனை கடந்த ஆண்டுத் தேர்தலில் உலகம் கண்டது.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இது ஒரு இரவில், உணர்ச்சி மேலீட்டால் உருவான நிலை அல்ல எனக் கருதுகிறேன்.

உண்மை.

நீண்டகாலமாக மேற்குலகநாடுகளின் வசதிவாய்புக்களை அனுபவித்தபடி

4 hours ago, Justin said:

யூரியூப், மீம்ஸ், இன்ஸ்ரா, ரிக் ரொக் என்பவற்றில் குப்பனும் சுப்பனும் இட்ட திரித்த வரலாற்றுப் படையலை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தமையால் உருவான ஒரு நீண்டகால மனநிலை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டு - 👇 இப்படி ஒருவர் தேர்ட் ரைக்ஹை புகழ்ந்து பொய்யாக எழுதுவதே ஜேர்மனிய அரசியலமைபுக்கு எதிரானதும்,  சட்ட விரோதமானதும், ஜேர்மன் நாட்டுக்கு தேச துரோகமும் ஆகாதா அண்ணை?

ஜெர்மனிக்கு நன்றி விசுவாசம் பாராட்டுவதாக சொல்லி கொள்ளும் நீங்கள், நவீன ஜேர்மனியின் அடித்தளத்தையே அசைக்க வல்ல இந்த கொடிய விசத்தை எப்படி போற்றி எழுதுகிறீகள்.

அப்புறம் ஹிட்லர் ஒண்டும் மகான் அல்ல. அவர் கட்டு கோப்புடன் ஒன்றும் ஆட்சி செய்யவுமில்லை. குழந்தைகள் பாலியல் துஸ்பிரயோகம் முதல் பலது அங்கேயும் நடந்தது.

ஹிட்லரின் ஆட்சியும் ஊழல் மலிந்தே இருந்தது.

அரசியல் மீம்ஸ் Images ஆதித்யா முருகேசன் - ShareChat - இந்தியாவின் சொந்த  இந்திய சமூக வலைத்தளம்

பெரிய பிரித்தானியா ஆசிய ஆபிரிக்க  நாடுகளில் செய்யாத கொடுமைகளையா  ஹிட்லர் செய்தார்?

ஹிட்லர் யூதர்களில் கை வைக்கா விட்டிருந்தால்......??????

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

அரசியல் மீம்ஸ் Images ஆதித்யா முருகேசன் - ShareChat - இந்தியாவின் சொந்த  இந்திய சமூக வலைத்தளம்

பெரிய பிரித்தானியா ஆசிய ஆபிரிக்க  நாடுகளில் செய்யாத கொடுமைகளையா  ஹிட்லர் செய்தார்?

ஹிட்லர் யூதர்களில் கை வைக்கா விட்டிருந்தால்......??????

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

என்ன அண்ணை இது சிங்களவன் செய்தது தப்பு எண்டால் - பர்மாகாரன் செய்யாததையா சிங்களவன் செய்தான் எண்ட மாரி போகுது கதை🤣.

யூத எதிர்ப்பு இல்லாவிட்டால் ஹிட்லரும் இல்லை, நாசிசமும் இல்லை. அடிப்படையே ஜேர்மனியை, உலகை ஆரிய தூய இனத்தின் பிடியில் கொண்டு வருவதுதான். அதில் யூதர் மட்டும் அல்ல, நாம் உட்பட பலர் அடக்கம்.

ஆனால் யூத படுகொலை மட்டும் அல்ல, ஹிட்லர் ஒன்றும் பொற்கால ஆட்சியை ஜேர்மனியிலோ, வெளியிலோ வழங்கவில்லை. 

மிக மோசமான வகுப்புவாத ஏற்ற தாழ்வு, ஊழல், பாலியல் லஞ்சம், குழந்தைகள் பாலியல் துஸ்பிரயோகம், அதிகார துஸ்பிரயோகம், கொள்ளை எல்லாம் மலிந்து கிடந்த ஒரு நரனின் ஆட்சிதான் ஹிட்லர் ஆட்சியும்.

பிகு

நான் கேட்டது அதை அல்ல, ஹொலோகாஸ்டை மறுப்பதை, நாஜிகள் பற்றி நல்லவர், வல்லவர் என பொய் பிரச்சாரம் செய்வதை இன்றைய ஜேர்மன் சட்டங்கள் தடுக்கிறன. 

ஒரு ஜேர்மன் குடியாக நீங்கள் இப்படி எழுதுவது ஜேர்மனிக்கு செய்யும் தேசதுரோகம் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

மிகவும் தவறான புரிதல் அண்ணா

இங்கே உங்கள் தம்பிகள் எல்லோரது பணிவான வேண்டுகோளை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

என்னை வேறு குழுவில் நீங்கள் போட்டாலும் உங்கள் தம்பிகளுடன் உங்கள் தம்பியாகத்தான் நிற்கிறேன் நிற்பேன் 

விசுகர்! புலம்பெயர் மக்கள் மேலைத்தேய அரசியல் நடவடிக்கைகளில் எப்படியான கருத்துக்களை / மனோநிலையை கொண்டிருக்க வேண்டும்  என கருதுகின்றீர்கள்? இதனால் ஈழதேசம் அடையும் நன்மைகள் எவை? உங்களின் பதிலை மட்டும் எதிர்பார்க்கின்றேன்.

எமது ஐயாம் புள்ளைகளின் கருத்துக்கள் தேவையில்லை..:rolling_on_the_floor_laughing:

Coming Walking GIF - Coming Walking Sexy - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

எமது ஐயாம் புள்ளைகளின் கருத்துக்கள் தேவையில்லை..:rolling_on_the_floor_laughing:

 

நேரடியாக  பெயர்களை குறித்து சொல்லி விட்டால், விலகி நடக்க வசதியாய் இருக்கும்🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

நேரடியாக  பெயர்களை குறித்து சொல்லி விட்டால், விலகி நடக்க வசதியாய் இருக்கும்🙏🏾

முதலில் காரணகர்த்தா விசுகர் பதில் சொல்லட்டும். :cool:
அதுக்கு பிறகு ஐயம்புள்ளையளை நானே வெத்திலை வைச்சு கூப்புடுவன். :beaming_face_with_smiling_eyes:

50 minutes ago, goshan_che said:

யூத எதிர்ப்பு இல்லாவிட்டால் ஹிட்லரும் இல்லை, நாசிசமும் இல்லை. அடிப்படையே ஜேர்மனியை, உலகை ஆரிய தூய இனத்தின் பிடியில் கொண்டு வருவதுதான். அதில் யூதர் மட்டும் அல்ல, நாம் உட்பட பலர் அடக்கம்.

இதே யூத இனம் இன்று பலஸ்தீனத்தில் என்ன செய்கின்றார்கள்? செய்வதெல்லாம் சரியா?

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கண்ணன் கவிதை, பாராட்டுக்கள்👏, நானும் முன்னால் தீவிர கண்ணன் பக்தன், பொன்னாலை பெருமாள்தான் அடைக்கலம் அப்போது, இப்ப???
    • கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் ”நாம் வாழும் இந்த பூமிக்கு இதற்கு முன்னதாக நாம் வந்திருக்கிறோமா என்று நமக்கு தெரியாது, இதற்கு பிறகு மற்றொரு முறை வருவோமா என்பதும் நமக்கு தெரியாது. எனவே இருக்கும் இந்த ஒரு வாழ்வை அனுபவித்து வாழ வேண்டும். நம்மை ஈர்க்கும் அனைத்து விஷயங்களுக்குள்ளும் இறங்கி முயற்சித்து விட வேண்டும்” என்கின்றனர் முத்துபாண்டியும், அவரது மகள் ஹரிணியும்.   சென்னை, ரெட் ஹில்ஸ் பகுதிக்கு 12 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் பண்டிக்காவனூர் ஊராட்சியில், `ஆனந்த இல்லம்’ என்ற பெயரில் ஹெச்.ஐ.வி., குழந்தைகளுக்கான காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தை கவனித்துகொள்ளும் பொறுப்பில் 30ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார் முத்துபாண்டி. ஒரு காப்பகத்தைக் கவனித்துகொள்ளும் பொறுப்பில் இருந்துகொண்டே இதுவரை அவர் 5000 பாம்புகளை மீட்டிருக்கிறார்; அவரது மகள் ஹரிணி 19 வயதில் 500 பாம்புகளை மீட்டிருக்கிறார். யார் இவர்கள்? இது எப்படி சாத்தியமானது?     மனம் போன போக்கில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன் ”எனது சொந்த ஊர் தூத்துக்குடி. ஆனால் சென்னை வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்போது நான் சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தேன். அதேசமயத்தில் சிறு சிறு பத்திரிக்கைகளுக்கு நேர்காணல்கள் எடுத்துகொடுக்கும் வேலைகளும் செய்து வந்தேன். அப்படி நேர்காணலுக்காக நான் சென்ற ஒரு இடம்தான் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” என்று பிபிசியிடம் பேசத் துவங்குகிறார் முத்துபாண்டி.   அவர் தொடர்ந்து பேசுகையில், “அது 1993ஆம் ஆண்டு. தமிழ்நாட்டில் அப்போதுதான் ஹெச்.ஐ.வி., பற்றி மக்களுக்கு அறிமுகமாகிறது. அனைவரும் அந்த நோய் குறித்து அச்சமும், வெறுப்பும் அடைந்திருந்த நிலையில் மனோரமா என்ற மருத்துவர் ஒருவர் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, சிகிச்சையளிக்க வேண்டுமென முயற்சி செய்தார். அவரை நேர்காணல் செய்வதற்காகத்தான் நான் சென்றிருந்தேன். ஆனால் அந்த நேர்காணலில் அவரது கருத்தை உள்வாங்கிய எனக்கு, அவருடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக பயணிக்க வேண்டுமென தோன்றியது.   அந்த நேர்காணல் முடிந்த பிறகு, `பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீங்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சியில், நான் உங்களுக்கு இறுதிவரை துணையாக இருப்பேன்` என்று வாக்குறுதியளித்தேன். அதன் அடிப்படையிலேயே இன்றுவரை எனது பயணம் தொடர்கிறது” என்று கூறுகிறார் முத்துபாண்டி.   “ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகள் அமைதியான சூழலில் வளர்வதற்கு, புறநகர் பகுதியில் காப்பகத்தை அமைப்பதற்கு முடிவு செய்து, பண்டிக்காவனூர் ஊராட்சியை தேர்ந்தெடுத்தோம். குழந்தைகள் நிம்மதியாக, அவர்களுக்கு பிடித்த வகையில் சுதந்திரமாக இருந்தனர். ஆனால் அது புறநகர் பகுதி என்பதால், அங்கே பாம்புகள் வந்தன. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நானே பாம்புகளை மீட்டு வெளியே கொண்டுபோய் விட ஆரம்பித்தேன். தொடர்ந்து அடிக்கடி பாம்புகள் வர ஆரம்பித்தன. அதனால் பாம்புகளை பிடிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நுட்பமான விஷயங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எங்கள் காப்பகத்திற்கு வரும் பாம்புகளை நான் கையாள்வதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவர்களது வீடுகளுக்குள் வரும் பாம்புகளையும் மீட்பதற்காக அழைத்தனர். அப்படியே 30கிமீ சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாம்புகளை கண்டால், என் மீது நம்பிக்கை வைத்து என்னை தொடர்புகொள்ள ஆரம்பித்தனர். எனக்கும் இதில் ஈடுபாடு இருந்ததால், இதை ஒரு சேவையாக செய்து வருகிறேன். இதுவரை 5000க்கும் அதிகமான பாம்புகளை பிடித்திருக்கிறேன். கண்ணாடி விரியன், கட்டுவிரியன் போன்ற அதிக விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளும் இதில் அடக்கம்” என்று கூறுகிறார் முத்துபாண்டி.   ”ஏதோ ஒரு சின்ன சின்ன புள்ளியில் துவங்கும் விஷயங்கள் என்னை தொடர்ச்சியாக அடுத்தடுத்த தளங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. என் மனம் போகும் போக்கில் நானும் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.   அப்பாவை போல் பாம்பு மீட்பரான மகள்   தனது தந்தை பாம்புகளை கையாள்வதை சிறு வயதிலிருந்தே கவனித்து வந்த ஹரிணிக்கும், அதன் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. தான் சிறுமியாக இருக்கும்போதே, பாம்புகளை கைகளில் பிடித்து பார்க்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டதாக கூறுகிறார் ஹரிணி.   பிபிசியிடம் பேசிய அவர், “சில நேரம் பாம்புகளை மீட்பதற்காக என் தந்தை செல்லும் இடங்களில், அன்பளிப்பாக பணம் வழங்குவார்கள். ஆனால் அவர் அதை மறுத்துவிடுவார். இந்த வேலையை அவர் ஒரு சேவையாக செய்து வருகிறார். ஒரே நாட்களில் வெவ்வேறு இடங்களில் 2, 3 பாம்புகளைக் கூட அவர் மீட்டிருக்கிறார். அதேபோல் மீட்கப்படும் பாம்புகளை பத்திரமாக எடுத்துச்சென்று, அடர்காட்டுப் பகுதிகளிலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் விட்டுவிடுவார். இதெல்லாம் பார்த்து வளர்ந்த எனக்கு பாம்புகள் பிடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. அவரை பார்த்து நானும் கற்றுக்கொள்ள துவங்கினேன்.   முதலில் விஷமற்ற தண்ணீர் பாம்பு, பச்சை பாம்பு ஆகியவற்றை எனது கைகளில் கொடுத்து பழக்கினார். பாம்புகளை பிடிக்கும் போது கழுத்து பகுதிகளில் பிடித்து லாக் செய்ய வேண்டும், எப்போதும் பாம்பிற்கும் நமக்கும் குறிப்பிட்ட இடைவேளை இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். அப்படியே நானும் பாம்புகளை மீட்பதில் முழுவீச்சில் செயல்பட ஆரம்பித்துவிட்டேன்” என்று கூறுகிறார் ஹரிணி.   “எனக்கு பாம்புகளை கையாள்வதில் ஒருபோதும் பயம் ஏற்பட்டதில்லை. சிலர் பாம்புகளை பார்த்து அறுவறுப்பு கொள்வார்கள். ஆனால் சிறுவயதிலிருந்தே எனக்கு அப்படியான உணர்வு ஏற்பட்டதில்லை. இதுவரை அப்பாவின் வழிகாட்டுதலுடன் 500 பாம்புகளை மீட்டிருக்கிறேன். அப்பா இல்லாத சமயங்களில் நான் மட்டுமே கூட சென்றிருக்கிறேன்” என்று பிரமிப்புடன் கூறுகிறார் ஹரிணி.   `என்னை விட என் மகளுக்கு துணிச்சல் அதிகம்` ”என்னுடைய மகளால் நஞ்சுள்ள பாம்புகளை எளிதாக கையாள முடியும். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நல்ல பாம்பை மீட்கும்போது, அது என்னை கடித்துவிட்டது. அப்போது சற்று உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அந்தசமயத்தில் அவளுக்கு 12 வயதுதான். என்னிடம் வந்த அவள், “அப்பா பாம்பு கடித்துவிட்டதற்காக, இனி பாம்புகளை மீட்கும் பணியை விட்டுவிடக்கூடாது. நீ மீண்டும் முயற்சி செய்யவேண்டும். பாம்புகளை மீட்க வேண்டும். குறைந்தது ஒரு பாம்பையாவது நீ மீட்க வேண்டும். அதன்பின் உனக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடு. ஏனென்றால் இப்போது நீ பாம்புகள் மீட்பதை விட்டுவிட்டால், அது உன் வாழ்வில் ஒரு அச்சமாக மாறிவிடும்” என்று அறிவுரை வழங்கினாள்.   அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த சிறு வயதில், இவளுக்குள் எப்படி இத்தனை அளவு பக்குவம் வந்தது என பிரமிப்பாக இருந்தது.   அந்த சம்பவத்திற்கு பின் மீண்டும் நான் பாம்புகளை மீட்கும் பணியில் நம்பிக்கையுடன் வந்ததற்கு என் மகள்தான் முக்கிய காரணம். அதேசமயம், தற்போது பல தற்காப்பு உபகரணங்களுடன் இந்த பணியை கவனமாக செய்து வருகிறோம்” என்று கூறுகிறார் முத்துபாண்டி.   “நாங்கள் பாம்புகளை மீட்கச் செல்லும் இடங்களில் என் மகளை ஒரு கதாநாயகி போல அனைவரும் பார்க்கிறார்கள். ஒரு தந்தையாக எனக்கு அது மிகவும் பெருமையாக இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார். மனிதத்தையும், இந்த பூமியையும் நேசிக்கிறோம் ”நான் இப்போது எம்.பி.ஏ படிப்பதற்கு முயற்சி செய்து வருகிறேன். அதன்பின் சுயமாக சம்பாதிக்க வேண்டும். ஏனென்றால் எனக்கு விலங்குகளுக்காக தனி காப்பகம் அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்று கூறுகிறார் ஹரிணி.   அவரைத் தொடர்ந்து பேசிய முத்துபாண்டி, “இப்போது எனக்கு 60 வயதாகிறது. இதுவரை எனக்கு என்ன தோன்றியதோ அதை மட்டுமே செய்து வந்திருக்கிறேன். மனிதர்கள் மீது எவ்வளவு அன்பு இருக்கிறதோ, அதே அளவு நேசம், மற்ற உயிரினங்கள் மீதும் இருக்கிறது. ஏனென்றால் ‘இந்த உலகில் மனிதர்கள்தான் கடைசியாகத் தோன்றிய உயிரினம். எனவே மனிதர்களை விட விலங்குகளுக்குத்தான் இந்த பூமியின் மீது அதிக உரிமை இருக்கிறது. அதன் காரணமாகவே அவைகளின் மீது அன்பும், மரியாதையும் எங்களுக்கு இருக்கிறது’.   ஆனால் என் குடும்பத்திற்காக நான் இதுவரை எதுவும் செய்யவில்லை. என்னுடைய முடிவுகள் அனைத்திற்கும் என் மனைவி துணையாகயிருந்தார். குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் இப்போது எதிர்காலம் குறித்த அச்சம் எட்டிப்பார்க்கிறது. அதனால் மீண்டும் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறேன். விரைவில் வெளியாகவிருக்கும் ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.   எனக்கு இந்த வாழ்க்கையின் மீதும், மனிதத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை உண்டு. மீதமிருக்கும் என் வாழ்நாளில் இந்த பிரபஞ்சம் எனக்கு துணையாக வரும் என்று என் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்” என்கிறார் முத்துபாண்டி. https://www.bbc.com/tamil/articles/cz4rpnqn4gxo
    • குடி/தூள்/கசிப்பு/கஞ்சா செய்யும் வேலை. கொலை, தற்கொலை, பாலியல் வதைகளுக்கான பிரதான காரணங்கள் இவை. 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.