Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறம் வெல்லும்..?


Recommended Posts

அறம் வெல்லும்..?
 
'BigBOSS' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் விக்ரமன் அடிக்கடி உச்சரித்த ‘அறம் வெல்லும்’ என்ற வார்த்தைகள் மக்களிடத்தில் இப்பொழுது அதிகம் பரீட்சயமான வார்த்தைகளாகியுள்ளன. ஆனால், போட்டியின் முடிவு ரசிகர்கள் பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
உண்மையில் 'அறம்' தோற்பதில்லை. அது தோற்கடிக்கப்படுகிறது என்று மக்களுக்கு புரியவைப்பதற்கே ஒரு ‘விடுப்பு’ நிகழ்ச்சி தேவைப்படுகிறது. இது தான் இன்றைய நிதர்சனம். புதிய ஒழுங்கு.
'அறம்' தோற்றல் என்பது புது விடயம் அல்ல. இது அரசியல், வணிகம், சட்டம், சமூகம், ஊடகம் என எல்லா மட்டங்களுக்கும் பொருந்தும். அடிப்படியில் அறத்தைத் தோற்கடிக்கும் தந்திரம் ஆதிக்க சக்திகளின் மூலோபாயம் என்றாலும், அதனை நிறைவேற்றும் கருவிகளாக மக்களே (சமூகமே) விளங்குகின்றனர்.
'BigBOSS' இல் விக்ரமன் தோற்றதால் 'அறம்' தோற்றதா? அல்லது தோற்கடிக்கப்பட்டதா..? என்று விவாதிப்பதற்கான பதிவு இல்லை இது. அல்லது விக்கிரமன் அறத்தின் காவலனா? இல்லையா ? என்று பகுப்பாய்வதும் இப்பதிவின் நோக்கமல்ல.
ஆனால், ‘அறம்’ மக்கள் பலத்தால் தோற்கடிக்கப்படுகிறது என்பதே சமகால பொது விதி. இந்நிலையில், ‘அறம்’ பற்றிய சொல்லாடலின் குறியீட்டு அடையாளமாக ‘விக்கிரமன்’ பெயர் புழக்கத்தில் உள்ளதால், சமூகப் பிறழ்வுகள் குறித்து மக்கள் மனங்களில் ஒரு சிந்தனைத் தூண்டலைச் செய்வதற்கான தருணமாக இது அமையலாம் என்ற ஒரு புள்ளியான நம்பிக்கையின் வெளிப்பாடே இப்பதிவு.
கணிசமானவர்கள், BigBOSS என்ற கள்ளுக்கொட்டிலுக்குள் கூடியிருந்து கள்ளடிச்ச போதையில், 'ஊடக அறம்' எது? என்று வகுப்பெடுத்துக்கொண்டு இருப்பீர்கள். ஆகவே, நானும் கள்ளுக்கொட்டிலுக்கு வெளியில் நின்று கள்ளடிச்சுப்போட்டு வந்திருக்கிறன். போதை உள்ளவர்களோடு போதையில் தானே உரையாடவேண்டும்.
அறத்தைக் காக்கும் கடமையும், பொறுப்பும் கொண்டு செயற்படவேண்டிய வெகுஜன ஊடகங்கள் (Mass Media), மக்களை எப்பொழுதும் ஒரு போதை மயக்கத்தில் வைத்துக்கொள்ளும் வித்தையில் கைதேர்ந்தவர்களாக உள்ளன. இவ்வித்தையில் தமிழக ஊடகங்களைப் பொறுத்தமட்டில் நான் முந்தி.. நீ முந்தி.. என்று ஒரு பிரகடனப்படுத்தப்படாத ஊடகப் போர் நடை பெற்றுவருகிறது. அது எப்படியோ போகட்டும். ஆனால், “…அதி உச்சமான ரசனை மிக்கவர்கள் ஈழத்தமிழர்கள், எச்சங்களுக்கு எல்லாம் கைதட்டமாட்டார்கள்..” என்ற ஒரு காலத்து நிலை மாற்றம் கண்டு, இன்று எச்சங்களை மட்டுமே தலையில் தூக்கிக் கொண்டாடும் இனமாக ஈழத்தமிழினமும் மாறியிருக்கிறது.
எனது கணிப்புச் சரி என்றால், அடுத்த நிகழ்ச்சிக்கு (Season க்கு) கனடாவில் இருந்தும் ஒரு போட்டியாளர் உள்வாங்கப்படலாம். நாமும் Facebook ஐக் கதறவிட்டு வாக்கு வேட்டையில் இறங்கக்கூடும். அதன் பின்னர் Pearson விமான நிலையத்தில் மாலை, பொன்னாடை, தாரை-தப்பட்டைகளோடு அப்போட்டியாளரை விழா எடுத்து வரவேற்போம்.
கழுதையாக இருந்தாலும், தமிழகத் தொலைக்காட்சியின் வாசம் பட்டால் குதிரையாகிவிடும் என்ற நம்மவர்களின் ‘அக்கரை’ மோகம், நம்மத்தியில் உள்ள திறமையாளர்களை தரக்குறைவாக இழிவு செய்யும் நிலைக்குத் தள்ளியுள்ளது. எனினும், திறமையாளர்களுக்கு பெரிய தளங்களில் அங்கீகாரம் கிடைப்பதை இப்பதிவு குறை கூறவில்லை. ஆனால், தமிழ்நாட்டு மண்ணில் அங்கீகரிக்கப்பட்டாலே, நாம் நம்மவர்களின் திறமைகளை அங்கீகரிப்போம் என்ற நிலையைத்தான் குறைகூறக் கடமைப்பட்டுள்ளோம்.
இந்நிலையில், கேளிக்கை விநோதங்களின் மைய்யமாக, மக்களை வசியம் செய்யும் பெருச்சாளிகளாக, ஊடகங்கள் பெருவளர்ச்சி காண்பதில் மக்களே பங்காளிகளாக விளங்குகின்றனர் என்பதை மக்கள் உணர்வதில்லை. எனவே, விடுப்பு, விறுவிறுப்பு, விசித்திரம் என்று நாடுகிற மக்கள் கூட்டத்துக்கு தேவைப்படும் தீனியை அள்ளிக் கொடுக்கும் ஊட்டிகளாக, இவ்வூடகங்கள் விஸ்வரூபம் பெற்றுள்ளன. மாறாக சமூகத்துக்கு உண்மையைச் சொல்கிற, விழிப்புணர்வை ஊட்டுகிற ஊடகங்களையும் / ஊடகர்களையும் புறக்கணிக்கும் பழக்கத்தையும் இது போன்ற கேளிக்கை மைய்யங்களே உருவாக்கி வைத்துள்ளன.
ஆனால், சமூகத்தில் மாற்றங்களை உருவாக்க விரும்பி ஊடகக் கற்கையை பயின்றும், பயிற்சியைப் பெற்றும், அதற்குரிய மதிப்பும் மரியாதையும், வெகுமதியும் கிடைக்காமல், அரச - தனியார் நிறுவனங்களில் கிடைத்த தொழிலைச்செய்கிற வழக்கமும் பழக்கமாகிவிட்டது.
ஒரு நுகர்வோனின் பலவீனமே, வியாபாரியின் பெரும்பலம். இந்த சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே சந்தைப்படுத்தலின் மூலோபாயம் (Marketing Strategy) வகுக்கப்படுகிறது. அதனை தமிழகத்து தொலைக்காட்சிகள் செவ்வனே செய்து வருகின்றன. ஆனால், பார்வையாளர்களும், பங்காளிகளும் இங்கு மக்களே என்பதே அடிப்படை. தாம் நிர்ணயம் செய்கிற இலக்கை, தமக்கு சேதாரம் இல்லாமல், மக்கள் எனும் கருவிக்கொண்டு இயக்குபவனே இங்கு ஆட்ட நாயகன். இது தெரியாமல் தன் பணத்தை, நேரத்தை, வாழ்வை விரயம் செய்கிறவனே ரசிகன் என்ற பங்காளி.
உண்மையில், இங்கே முற்றுமுழுதாகப் பாதிக்கபடுகிற (Vulnerable) தரப்பு, பங்காளியாகவுள்ள பொதுமகனே. ஆனால், அதனை அவன் உணர்வதில்லை. காரணம், ஒரு சாமானியப் பொதுமகனுக்கு பொழுதுபோக்கே முக்கியம். அவனுடைய அன்றாடத் தேவைகளின் பட்டியல் என்பது கேளிக்கை, வேடிக்கை, விடுப்பு என்ற ஆதாயங்களைத் தேடியே அலைகிறது. இதற்கு படித்தவர் /பாமரர் என்ற வேறுபாடு கிடையாது.
எனவே, இவ்வாறான மனோநிலையில் மக்களை வைத்துக்கொண்டாலே போதும், வணிக மூலோபாயமும், அரசியல் மூலோபாயமும் கட்டுக்குள் வந்துவிடும். இது போன்ற பிறழ்வுகள் தமிழகம்/ இந்தியாவில் நெடுங்காலப் பழக்கம் என்றாலும், அண்மைக்காலமாக நம்மவர்கள் மத்தியில் புகுத்தப்பட்டுள்ள சினிமா/ சின்னத்திரை / விடுப்பு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளின் திணிப்பும், அவை நம் சமூகத்தின் மீது செலுத்தும் தாக்கத்தின் அளவும், ஒரு பெரும் சமூகக் கட்டுமானச் சீரழிவையே ஏற்படுத்திவருகின்றன.
இன்று நம்மவர்கள் மத்தியில் ஊடகம் தொடர்பான புரிதலும், அது சார்ந்த செயல்களும் மலினப்பட்டுவருகின்றன. அதன் அடுத்த பரிணாமமாகவே சமகால சமூக ஊடகங்களின் பெருக்கமும், அவை தாங்கி வருகின்ற விடுப்புகளும் மக்களைக் கவர்ந்து வருகின்றன. அவற்றின் அடிப்படை என்பது, மக்களை வசியம் செய்யும் நோக்கமும். அதனூடாகப் பணம் ஈட்டும் வெறியும் கொண்ட செயல்களாக அமைந்துள்ளன. (ஒரு சில விதிவிலக்குகள் உண்டு)
சமூக ஒன்று கூடல்களே இவ்வூடகங்களின் அதிகபட்ச செய்தி மைய்யம் (coverage). கனடாவில் 4 லட்சம் பேர் இருப்பதாக மார்தட்டுகிற நம்மவர் நிகழ்வுகளின் பதிவுகளில் 40 பிரபல தம்பதிகளும்.. 40 வணிகர்களும்... 40 தமிழ் பெண்பிள்ளைகளும் மட்டுமே திரும்பத்திரும்ப 360 கோணத்தில் பதியப்படுகின்றனர் (படம் எடுக்கப்படுகின்றனர்).
உதாரணமாக கனடாவிலும் பெருகியுள்ள சமூக ஊடகங்களில் கணிசமானவை சமூகப்பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நேரலை செய்வதிலும், ஒளிப்படம் எடுப்பதிலும், செய்தியாக்குவதிலும் மும்முரமாக இயங்கி வருகின்றன. அவர்களுக்குள் ஒரு நீயா? நானா? போட்டியும் நடைபெற்று வருகிறது. அத்தோடு கலியாணம், செத்தவீடு என்று முன்பந்தியில் அமர்ந்து நேரலை செய்யும் அளவுக்கு ஊடகங்கள் மலினப்பட்டுள்ளன.
ஆனால், இவ்வாறான ஊடகப் பிறழ்வுகள் தொடர்பிலோ.. ஊடக அறம் பிழைத்ததாகவோ.. யாரும் கவலையோ.. கரிசனையோ ..கொள்ளவில்லை. எனவே, இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.. அதனை நாம் கொடுக்கிறோம் என்று குறித்த ஊடகங்களும்.. நியாயம் சொல்ல வசதியாகிவிட்டது.
மறுபுறத்தில் தமிழர்களுக்கு உரிமையும், இனப்படுகொலைக்கு நீதியும் வேண்டி நின்ற அமைப்புக்கள், GTA நகரங்களை குத்தகை எடுத்து விழா நடத்துகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கையைக் கொண்டு தமது பலத்தை குறித்த அமைப்புகள் பறைசாற்றுகின்றன.
தமிழ் இருக்கைக்காக 3 மில்லையன் டொலர்களை திரட்டும் திறன்கொண்ட சமூகத்தால், போரால் பாதிக்கப்பட்ட சில ஆயிரம் பேருக்கு தீனிபோட வழிபிறக்கவில்லை. திருவிழாவும், தெருவிழாவும் செய்து ஒரு வணிகமயப்பட்ட கட்டமைப்புக்களாக உருமாறியுள்ள அமைப்புக்களின் அறப்பிறழ்வுகள் குறித்து யாருக்கும் கவலை இல்லை.
காரணம், நீங்கள் கண்ணைமூடிக்கொண்டு கேள்வி கேட்காமல் இருப்பதற்கான மேடைகள் வழங்கப்படுவதோடு, உங்கள் கவனம் அவர்கள் மீது திரும்பாமல் வேடிக்கையும் காண்பிக்கப்படுகிறது. முன்வரிசையில் அமர்ந்து படம் எடுக்க கிடைத்த வாய்ப்புக்காக, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் விளம்பர முகவர்களாக சமூக ஊடகர்கள் தமது ஒளிப்படக்கருவிகளை காணிக்கையாக்கிவிட்டனர்.
ஆக, நம்மைச் சுற்றி எத்தனை அறப்பிறழ்வுகள் உண்டு?. அத்தனை அறப்பிறழ்வுகளின் பின்னால் பங்காளிகளாக யார் உண்டு.? என்ற கேள்விகளை நம் சமூகம் சிந்திக்க வேண்டும். மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தைகள் போல, சுயம் இழந்த சமூகமாக நாம் மாறிவருவது குறித்து நம்மவர்கள் வாய் திறப்பதில்லை. அப்படிக் குரல் கொடுப்போருக்குப் பக்க பலமாகவும் நிற்பதில்லை.
ஆக, இத்தனை அறப்பிறழ்வுகளையும் கண்டுகொள்ளாத சமூகம், கூத்தாடிகள் கூடாரத்தில் அநீதி நடப்பதாக முணுமுணுப்பது வேடிக்கையானது.
எனவே, BigBoss விடயத்தில் தோற்றது விக்ரமன் என்றாலும், வென்றது விஜய் தொலைக்காட்சியே. இனிமேல், தமது நிகழ்ச்சிகளில், செயல்களில், எவ்வித அறத்தையும் பேணவேண்டிய அவசியம் இல்லை என்பதை, மக்களே சொன்னார்கள் அல்லது சொன்னதாகக் காட்டினார்கள் என்ற நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் இனி அனைத்து ஊடகங்கள் மத்தியில் வீரியம் பெறும். சமூகமும் அதனை ஏற்றுக்கொண்டு பயணிக்கும். சமூகம் வெறும் குப்பைகளைக் கொட்டும் குப்பை மேடு என்பதை ஊடகங்கள் உறுதியாகப் புரிந்துகொள்ளும். ஆனால், வணிகமும், வணிகனும் வெல்வர்.
எனவே, அறம் தோற்பதில்லை... தோற்கடிக்கப்படுகிறது.. கண்ணை மூடிக்கொண்டிருக்கும் சமூகத்தால்...
(இப்பதிவை இறுதிவரை பொறுமையாகப் படித்தோருக்கு நன்றி🙏. ஏனையோர் அடுத்த விடுப்பைத் தேடிக்கொண்டிருக்கக்கூடும்..🥲)
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அம்ரித்பால் சிங்: 'ஐஎஸ்ஐ தொடர்பு, வெளிநாட்டு நிதி பரிவர்த்தனை' என சந்தேகம் எழுப்பும் பஞ்சாப் போலீஸ் - இதுவரை நடந்தவை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, அம்ரித்பால் சிங் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை பிடிப்பதற்கான நடவடிக்கையை பஞ்சாப் போலீசார் மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தனர். இதுவரை, ‘வாரிஸ் பஞ்சாப் டி’ செயல்பாட்டாளர்கள் மீது ஆறு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய பஞ்சாப் காவல்துறை தலைமையக தலைவர் (ஐ.ஜி) சுக்செயின் சிங் கில், தல்ஜித் கால்சி, பசந்த் சிங், குர்மீத் சிங் புக்கன்வாலா, பக்வந்த் சிங், அமிர்த் பாலின் மாமா ஹரிஜீத் சிங் ஆகியோர் அசாமின் திப்ருகார் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் ஹர்ஜீத் சிங் என்பவர் அசாமுக்கு செல்லும் வழியில் இருப்பதாகவும் கூறினார். போலீஸாரின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டுள்ள தல்ஜித் சிங் கால்சி, அமிரித்பால் சிங்குக்கு நெருக்கமானவர் மற்றும் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்புக்கு நிதி வழங்குபவர்.   அம்ரித்பால் சிங்கின் மாமா ஹர்ஜீத் சிங், ஓட்டுநர் ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸிடம் சரண் அடைந்தனர். ஜலந்திரின் ஷால்கோட்டில் மார்ச் 19-20ஆம் தேதி இரவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று ஜலந்தர் புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஸ்வரன்தீப் சிங் கூறுகிறார். ஹர்ஜீத் சிங் துபையில் தொழில்முறை டிரான்ஸ்போர்ட்டர் தொழிலை செய்து வருகிறார். மேலும், அம்ரித்பால் சிங் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆடம்பர சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். அந்த கார், ஹர்ஜீத் சிங் வசம் இருந்துள்ளது. இந்த ஐந்து பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று கூறிய அவர், பஞ்சாப் அமைதியான மாநிலம் என்றும், பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதுவரை கைதானவர்கள் எத்தனை பேர்? அம்ரிபால் சிங் தொடர்புடைய வன்முறை விவகாரத்தில் இதுவரை 114 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் வன்முறை நடந்த முதல் நாளிலேயே 78 பேரை போலீஸார் பிடித்தனர். இரண்டாம் நாளில் 34 பேரும் மூன்றாம் நாளில் 2 பேரும் பிடிபட்டனர். அனைவரும் மாநிலத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள் என்று காவல்துறை ஐ.ஜி கில் தெரிவித்தார். "இந்த வழக்கில் வெளிநாட்டு நிதி மற்றும் ஐஎஸ்ஐ தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்," என்கிறார் ஐ.ஜி கில். அம்ரித்பால் சிங் விவகாரத்தில் இதுவரை நாம் அறிந்தவை மற்றும் பதிலளிக்கப்படாத கேள்விகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:- “நாங்கள் ஏன் காலிஸ்தான் கோரிக்கையை முன் வைக்கிறோம்?” – அம்ரித்பால் சிங் நேர்காணல்5 மார்ச் 2023 'நான் இந்தியன் இல்லை' - இந்தியாவுக்கு அச்சத்தை விளைவிக்கும் இந்த மத போதகர் யார்?1 மார்ச் 2023 அம்ரித்பால் சிங்: யார் இந்த மத போதகர்? திடீரென இவர் பிரபலம் அடைந்தது எப்படி?2 மார்ச் 2023 கடந்த சில நாட்களில் என்ன நடந்தது? அம்ரித்பால் சிங் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடி கைது செய்யும் நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் போலீஸ் ஐ.ஜி சுக்செயின் சிங் கில் தெரிவித்தார். பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, சனிக்கிழமை பிற்பகல் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஷாகோட்-மால்சியன் சாலையில் 'வாரிஸ் பஞ்சாப் டி' (WPD) இன் செயல்பாட்டாளர்கள் ஏழு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மாநில அளவிலான நடவடிக்கையின் போது இதுவரை ஒரு '.315' போர் ரைபிள், ஏழு 12 போர் ரைபிள்கள், ஒரு ரிவால்வர் மற்றும் 373 லைவ் கார்ட்ரிட்ஜ்கள் (பயன்படுத்தப்படாத தோட்டா பேழைகள்) உட்பட 9 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, ஜலந்தர் போலீசார் உரிமை கோரப்படாத ஆடம்பர சொகுசு வாகனம் ஒன்றையும் மீட்டுள்ளனர். இந்த வாகனத்தை அம்ரித்பால் சிங் தப்பியோட பயன்படுத்தியதாக போலீசார் கூறுகின்றனர். கைவிடப்பட்ட வாகனத்தில் இருந்து .315 போர்த்துப்பாக்கி, 57 தோட்டாக்கள், வாள் மற்றும் வாக்கி-டாக்கி பெட்டி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. சில உள்நாட்டு தோட்டாக்களையும் மீட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். பஞ்சாபில் போராட்டங்கள் பட மூலாதாரம்,ANI பஞ்சாபில், அம்ரித்பால் சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக குவாமி இன்சாஃப் மோர்ச்சாவின் சில செயல்பாட்டாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மொஹாலியில் உள்ள விமான நிலைய சாலையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. அந்த இடத்தில் 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உள்ளனர். இதுவரை அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்திற்கு செல்லும் சாலையின் ஒரு பகுதி போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம், கர்னாலில் உள்ள சில சீக்கிய அமைப்புகள் ஹரியாணா சீக்கியர்களை மார்ச் 21ஆம் தேதி கர்னாலில் ஒன்றுகூடி அம்ரித்பால் சிங் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது. இதன் காரணமாக சண்டீகர் மற்றும் பஞ்சாபின் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மூன்றாவது நாளாக காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இராக்கில் சதாம் ஹுசேனை வீழ்த்திய வல்லரசுகள் - இருபது வருடங்களுக்கு முந்தைய வரலாறு எழுப்பும் கேள்விகள்3 மணி நேரங்களுக்கு முன்னர் ஏஜென்சி மோசடி: கனடாவாழ் இந்தியர்கள் பலரது எதிர்காலம் கேள்விக்குரியதாகிறதா?5 மணி நேரங்களுக்கு முன்னர் கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்மா லக்ஷ்மிக்கு சமூக ஊடகங்களில் குவியும் பாராட்டு5 மணி நேரங்களுக்கு முன்னர் பஞ்சாபில் இப்போது நிலைமை என்ன? அம்ரித்பால் சிங் விவகாரம் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தில் வழக்காக தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாரிஸ் பஞ்சாப் டி அமைப்புடன் தொடர்புடைய இமான் சிங் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்ரித்பாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பஞ்சாப் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு பட்டியலிட்டுள்ளது. பதற்ற நிலைமையைக் கருத்தில் கொண்டு, மாநில உள்துறை செல்பேசி இணைய சேவையை சனிக்கிழமை முதல் இடைநிறுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடு மார்ச் 21ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை தொடரும். விடை தெரியாத கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES அம்ரித்பால் சிங் இன்னும் தலைமறைவாக உள்ளதாக போலீசார் கூறி வருகின்றனர். சனிக்கிழமையன்று, அம்ரித்பால் சிங் ஷாகோட்டின் குருத்வாரா சாஹிப்பில் இருப்பதாக சில ஊடக தகவல்கள் வந்தன. ஆனால், அன்று மாலையே அவர் தப்பியோடிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அம்ரித்பால் சிங்கைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அம்ரித்பால் எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. அம்ரித்பால் சிங்குக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை எவ்வளவு காலம் தொடரும் என்பதை பஞ்சாப் போலீசார் தெரிவிக்கவில்லை. பஞ்சாப் போலீசார் மத வழிபாட்டுத் தலங்கள், குறிப்பாக கிராமங்களில் உள்ள குருத்வாராக்கள் முன்பு நிறுத்தப்பட்டு, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது எந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஜலந்தர் காவல்துறையின் கூற்றுப்படி, வாரிஸ் பஞ்சாப் டி செயல்பாட்டாளர்கள் மீது சமூக அமைதியின்மையை உருவாக்குதல், உள்நோக்கத்துடன் கொலை செய்தல், காவல்துறை அதிகாரிகளைத் தாக்குதல் மற்றும் அரசு ஊழியர்கள் சட்டபூர்வமாக தங்களுடைய கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. அஜ்னாலா காவல் நிலையம் மீதான தாக்குதலுக்காக 'வாரிஸ் பஞ்சாப் டி' செயல்பாட்டாளர்கள் மீது 24-02-2023 தேதியிட்ட வழக்கு எண் 39 பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES உள்ளூர் மற்றும் தேசிய ஊடகங்கள் பஞ்சாபில் நடக்கும் முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. கடந்த சனிக்கிழமையன்று, அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டு அசாமில் உள்ள திப்ருகாருக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மாலையிலவ் சில ஊடக நிறுவனங்கள் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதாகக் கூறி, அது தொடர்பான தகவல்களை அவற்றின் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தன. பிறகு அவற்றை நீக்கின. பஞ்சாப் காவல்துறை, அம்ரித்பால் சிங் கைது தொடர்பான செய்தி பொய்யானது என்றும் மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cv2vp4yrppzo
    • பிறந்தநாள் வாழ்த்துகள் இணையவன் அண்ணா, வாழ்க வளத்துடன்.
    • இணையவனுக்கு,  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன் ......!   🌹
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.