Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!


Recommended Posts

இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதேபோல் மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன.

இந்தியா - மத்திய பிரதேசம் அருகே மொரேனாவில் விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானங்கள் இவை.

விபத்துக்கான காரணம் என்ன? விமானிகளின் நிலை என்ன? என்பது குறித்து தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. விபத்துக்குள்ளான சுகோய் மற்றும் மிராஜ் இரண்டுமே தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் போர் விமானங்கள்.

மிராஜ் விமானமானது ஃபிரான்ஸ் நாட்டிலிருந்தும், சுகோய் விமானமானது ரஷ்யாவிடமிருந்தும் வாங்கப்பட்டவை.

இரண்டுமே நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டவை. இவை இரண்டுமே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

விமானங்களிலுள்ள கருப்புப் பெட்டியில் பதிவாகியிருக்கும் தகவல்களை வைத்து விமானத்தில் கோளாறு ஏற்பட்டதா? பறந்த உயரம், வேகம் போன்றவற்றை கொண்டு விபத்திற்கான காரணம் கண்டறியப்படும் என்று கூறப்படுகிறது. விமானங்கள் விழுந்து நொறுங்கிய இடங்களில் மீட்புப்பணிகளை விமானப்படை தீவிரப்படுத்தியுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயிற்சியின் போது விபத்துக்குள்ளான இந்திய விமானப் படை விமானங்கள்: ஒரு விமானி பலி

விமான விபத்து

பட மூலாதாரம்,ANI

28 ஜனவரி 2023, 10:20 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய விமானப் படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 போர் விமானங்கள் விபத்திற்கு உள்ளானதில், விமானத்தில் இருந்த 3 விமானிகளில் ஒருவர் பலியானதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்திய விமானப் படையின் விமான தளத்திலிருந்து, இன்று காலை வழக்கமான பயிற்சிக்காக சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 வகை போர் விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.

நடுவானில் அதிவேகமாக பறந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் நடந்துள்ளது.

வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட இந்த விபத்தில் இந்திய விமானப் படை விமானி ஒருவர் பலியானதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் ஹனுமந்த் ராவ் சாரதியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக எல்லா வான் போராளிகளும், சகோதரர்களும் நிற்பதாக இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

"குவாலியரில் இருந்து காலையில் புறப்பட்ட மிராஜ் மற்றும் சுகோய் விமானங்களில் மொத்தம் மூன்று விமானிகள் இருந்துள்ளனர். இரண்டு விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றொரு விமானியின் உடல் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன," என்று மொரேனா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான சுகோய்-30 போர் விமானத்தில் 2 விமானிகளும், மிராஜ்-2000 விமானத்தில் ஒரு விமானியும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

மொரேனா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசுதோஸ், "விமானங்கள் நடுவானில் மோதின என உறுதி செய்ய மறுத்து விட்டார். இந்திய விமானப் படையின் முழு விசாரணைக்குப் பிறகே விபத்து எப்படி நடந்தது என அறிய முடியும்," என்று அவர் கூறினார்.

விபத்து நடந்த இடத்திலிருந்து மிராஜ்-2000 போர் விமானத்தை இயக்கிய விமானியின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மத்திய பிரதேசம் - ராஜஸ்தான் மாவட்ட எல்லையில் நடந்த இந்த விபத்தில் சிதைந்த விமானத்தின் சில பாகங்கள் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சுகோய்-30, மிராஜ்-2000

பட மூலாதாரம்,BBC/PRAHLAD_SEN

இதுகுறித்து பேசிய பரத்பூர் டி.எஸ்.பி, "காலை 10-10.15 மணியளவில் விமான விபத்து பற்றிய தகவல் கிடைத்தது. இங்கு வந்த பிறகு, அது இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு காணப்படும் பாகங்களை வைத்து, இது போர் விமானமா அல்லது சாதாரண விமானமா என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை." 

இந்த விபத்து குறித்த தகவலை இந்திய விமானப் படை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட டிவிட்டர் பதிவில், விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

விமான விபத்து தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதற்கட்ட தகவல்களை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் கேட்டு அறிந்து கொண்டதாகவும், தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தக் கூறியுள்ளதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

இன்று காலை நடந்த இந்த விபத்து குறித்து உள்ளூர் காவல்துறைக்கு 10 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இது தனியார் ஜெட் என தகவல் வெளியான நிலையில், விசாரணைக்கு பிறகு இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள் என தெரிய வந்துள்ளது.

விமான விபத்து தொடர்பாக தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ள மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், உள்ளூர் நிர்வாகம் மூலமாக மீட்பு பணிகளை விரைந்து நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c9e4exppkryo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு வேறு மாநிலங்களில் விழுந்த இந்தியப் போர் விமானங்கள்; ஒரே விபத்தா? அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?

https://www.facebook.com/watch/?v=1586504331851544

Link to comment
Share on other sites

கடந்த 5 வருடங்களில் 24 விமானப்படை விமானிகளை இழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1328312
    • மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? இன்று வெளியாகிறது அறிவிப்பு? தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கப்பு 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாகவும், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் குறித்த திகதியில் தபால் மூல வாக்களிப்பினை நடத்துவதற்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்க முடியாது என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தேர்தலை உரிய திகதிகளில் நடத்துவது சிக்கலாக மாறியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328336
    • இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – செல்வம்! இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது காலம் காலமாக ஏமாற்றப்படும் ஒரு செயற்படாகவே காணப்படுகிறது. தமிழர்களின் உரிமைகளை அழித்து சிங்கள குடியேற்றத்தை ஸ்தாபிக்கும் பணிகளை அரச அதிகாரிகள் துரிதமாக முன்னெடுத்து வருகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் ஒழிப்பு தொடர்பில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என நாணய நிதியம் விசேட நிபந்தனை முன்வைத்துள்ளது. ஆட்சியாளர்கள் ஊழலை முதன்மையாக நிலை நிறுத்தி செயற்பட்டதால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் தான் நாட்டின் எதிர்காலம் சிறந்ததாக அமையும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1328343
    • ஏலுமெண்டால்... நம்ம கட்சிக்காரன் மேலை கை  வைத்து பாக்கட்டும்.  🤣
    • புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையால் தனியார் நிறுவனங்களுக்கு அதிக லாபம்! பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைப்பதற்காக அரசாங்கம் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை செலுத்துவதால் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரித்தானியாவிற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க 395 ஹோட்டல்கள் பயன்படுத்தப்படுவதாக அறியமுடிகின்றது. அதே நேரத்தில், ஹோட்டல்கள், வரிக்கு முந்தைய லாபத்தை 2.1 மில்லியன் பவுண்டுகளிலிருந்து 6.3 மில்லியன் பவுண்டுளாக உயர்த்தியுள்ளது என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன. புகலிட அமைப்பு நம்பமுடியாத அழுத்தத்தில் இருப்பதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2023/1328116
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.