Jump to content

மாத்திரை அளவிலான கதிர்வீச்சு குடுவை மாயம் - கண்டுபிடிக்க முடியாமல் திணறல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
கதிர்வீச்சு

பட மூலாதாரம்,DFES

மேற்கு ஆஸ்திரேலியாவில் கதிரியக்கப் பொருள் அடங்கிய சிறிய குடுவை காணாமல் போனதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

காணாமல் போன குடுவையில், சிறிய அளவில் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் சீசியம் -137 தனிமம் உள்ளது. இதை தொட்டால் கடுமையான நோயை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பார்த்தால், விலகி இருக்கவேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கதிரியக்க பொருள், ஜனவரி மாதம் 10ஆம் தேதிக்கும் 16ஆம் தேதிக்கும் இடையே நியூமன் நகரத்திற்கும் பெர்த் நகரத்திற்கும் இடையே காணாமல் போனது. இந்த இரண்டு ஊர்களுக்குமான தூரம் சுமார் 1,400 கிலோ மீட்டர்.

பில்பாரா பிராந்தியத்தில் உள்ள நியூமனுக்கு வடக்கே உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து பெர்த் நகரத்தின் வடகிழக்கு பகுதிக்கு ஒரு லாரியில் கொண்டு செல்லப்பட்டபோது இது தவறிவிட்டது.

 

சீசியம்-137 என்பது சுரங்க நடவடிக்கைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு தனிமம் ஆகும்.

"காணாமல் போன குடுவையை அணு ஆயுதமாக பயன்படுத்த முடியாது. ஆனால் வெளியாகும் கதிர்வீச்சினால் காயங்கள் ஏற்படும் என்றும், புற்றுநோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்," என்று ஆஸ்திரேலிய தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை (DFES) தெரிவித்துள்ளது.

கதிர்வீச்சு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த பொருளால் "தேவையான தாக்கத்தை" ஏற்படுத்தும் அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்த முடியும் என்று, தலைமை சுகாதார அதிகாரியும் கதிரியக்க கவுன்சிலின் தலைவருமான டாக்டர் ஆண்ட்ரூ ராபர்ட்சன் கூறினார்.

"என்னவென்று தெரியாமல் யாராவது அதை எடுத்துக்கொள்வார்கள் என்பதே எங்கள் கவலை," என்று அவர் கூறினார். 

"அதை சுவாரசியமான ஒன்று என்று நினைத்து அதை வைத்துக்கொள்ள நேரிடலாம், அல்லது அதை தங்கள் அறையில், காரில் வைத்திருக்க நேரிடலாம் அல்லது வேறு யாரிடமாவது கொடுக்கவும் செய்துவிடுவார்கள்," என்று ராபர்ட்சன் கூறினார்.

காணாமல் போன கதிரியக்க குடுவை, சுமார் 6 மில்லி மீட்டர்- 8 மில்லி மீட்டர் அளவே இருக்கும். இதை விளக்கும் வகையில் ஒரு படத்தை ஆஸ்திரேலிய தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை வெளியிட்டுள்ளது.

இதைக் கண்டறியும் முயற்சியில், பயணம் தொடங்கி நிறைவடைந்த இடம் வரை தேடப்பட்டுள்ளது. ஆனால் 1400 கி.மீ தூரத்தில் இந்த சிறிய பொருளைத் தேடுவது கடற்கரை மணலில் ஊசியைத் தேடுவது போல என்பதால், தேடும் பகுதியின் அளவை சுருக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக லாரி சென்ற சரியான பாதை மற்றும் நிறுத்திய இடங்களை கண்டறிந்து அங்கு தேடுதலை நடத்தி வருகின்றனர்.

இந்த பொருளைப் பார்க்கும் நபர்கள், ஆஸ்திரேலிய தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cw8g8px5g12o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

மேற்கு ஆஸ்திரேலியாவில் கதிரியக்கப் பொருள் அடங்கிய சிறிய குடுவை காணாமல் போனதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

காணாமல் போன குடுவையில், சிறிய அளவில் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் சீசியம் -137 தனிமம் உள்ளது. இதை தொட்டால் கடுமையான நோயை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பார்த்தால், விலகி இருக்கவேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானம் முத்தி வெடிக்கப்போகுது.:grinning_face:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

WA has called on other states and the federal government to help with the capsule search. (PR HANDOUT IMAGE PHOTO) Credit: AAP

 

WA has called on other states and the federal government to help with the capsule search. (PR HANDOUT IMAGE PHOTO)

 

இது நம்மூரில, கொஞ்ச நாள் கவனமாக இருக்க வேண்டும்😂

Rio Tinto apologises and launches investigation into missing radioactive capsule

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த கதிரியக்க கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டது

By SETHU

01 FEB, 2023 | 02:55 PM
image

அவுஸ்திரேலியாவில் 2 வாரங்களுக்கு மேல் காணாமல் போயிருந்த, ஆபத்தான கதிரியக்கப் பொருள் கொண்ட சிறிய கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.

8 மில்லிமீற்றர் நீளமும் 6 மில்லிமீற்றர் அகலமும் கொண்ட இச்சிறிய கொள்கலனில், சீசியம்-137 எனும் கதிரியக்கப் பொருள் இருந்ததாக மேற்கு அவுஸ்திரேலிய  சுகாதாரத் திணைக்களம் தெரிவித்திருந்தது சுரங்க நடவடிக்கைகளுக்காக இது பயன்படுத்துபட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

மேற்படி கொள்கலன் கதிரியக்கத்தினால் எரிகாயங்கள் அல்லது நோய்கள் ஏற்படலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்திலுள்ள சுரங்கப் பணிக்காக 1400 கிலோமீற்றர் தூரம் கொண்ட  பயணத்தின்போது கடந்த 12 -16 ஆம் திகதிகளுக்கு இடையில் இக்கொள்கலன் காணாமல் போயுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது

இக்கொள்கலனானது, லொறி ஒன்றிலிருந்து விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் இக்கொள்கலன்  வீதியோரமொன்றிலிருந்து 2 மீற்றர் தூரத்தில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

இத்தேடுதல் நடவடிக்கைக்காக கதிரியக்கத்தை கண்டறியும் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.

https://www.virakesari.lk/article/147177

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.