Jump to content

ஆஸ்திரேலியா ஓபன் : முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெலாரஸ் வீராங்கனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா ஓபன் : முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெலாரஸ் வீராங்கனை

christopherJan 28, 2023 18:23PM
SabALenka-2.jpg

மெல்போர்னில் இன்று (ஜனவரி 28) நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் வென்று பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

மெல்போர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான இதில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்வதற்காக டென்னிஸ் உலகின் முன்னணி வீரர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி மெல்போர்ன் ரோட் லேவர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ச்த எலெனா ரைபகினா மற்றும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அரினா சபலெங்கா ஆகியோர் மோதினர்.

முதல் செட்டில் 4-6 என்ற பின் தங்கிய சபலெங்கா, அடுத்தடுத்த சுற்றுகளில் தனது ஆக்ரோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெற்றியை தன்பக்கம் சாய்த்தார்.

Aryna Sabalenka won her first grandslam

சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றார் 24 வயதான அரினா சபலெங்கா.

 

ஒற்றையர் பிரிவில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சபலெங்கா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு இதே ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் சபலெங்கா இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Aryna Sabalenka won her first grandslam

தனது முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றியுடன் மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் தரவரிசையில் 5வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் சபலெங்கா.
 

https://minnambalam.com/sports/aryna-sabalenka-won-her-first-grandslam-title-in-australian-open/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸி. பகிரங்க டென்னிஸில் சம்பியனான ஜோகோவிச், நடாலின் கிராண்ட் ஸ்லாம் சாதனையை சமப்படுத்தினார்

By DIGITAL DESK 5

30 JAN, 2023 | 09:10 AM
image

(என்.வீ.ஏ.)

மெல்பர்ன், ரொட் லேவர் டென்னிஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்டெஃபானஸ் சிட்சிபாசை வெற்றிகொண்ட நோவாக் ஜோகோவிச், 10ஆவது அவுஸ்திரேலிய பகிரங்க சம்பியன் பட்டத்தை சுவீகரித்ததுடன் ரபாயல் நடாலின் 22 கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களையும் சமப்படுத்தினார்.

220181-01-02.jpg

ஒரு வருடத்திற்கு முன்னர் கொவிட்-19 தடுப்பூசியைப் போடத் தவறியமைக்காக அவுஸ்திரேலிய அரசினால் வெளியேற்றப்பட்ட சேர்பிய வீரரான ஜோகோவிச், இந்த வெற்றியுடன் டென்னிஸ் வரலாற்று நாயகர்களில் ஒருவரானார்.

222328-01-02.jpg

மூன்று மணித்தியாலங்களுக்கு சற்று குறைவான நேரத்தில் நிறைவடைந்த இறுதிப் போட்டியில் சிட்சிபாஸை 6 - 3, 7 - 6, 7 - 6 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 நேர் செட்களில் 35 வயதான ஜோகோவிச் வெற்றிகொண்டார்.

220080-01-02.jpg

இதன் மூலம் மெல்பர்ன் இறுதிப் போட்டியில் விளையாடிய 10 சந்தர்ப்பங்களிலும் அவர் சம்பியனாகியுள்ளதுடன் அங்கு 28 தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.

222330-01-02.jpg

அத்துடன் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றிய கடைசி 4 சந்தர்ப்பங்களிலும் ஜோகோவிச் சம்பியனானது மற்றொரு சாதனையாகும். தொழில்முறை டென்னிஸ் ஆரம்பமான பின்னர் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் இந்த சாதனையை படைத்த முதலாவது வீரர் ஜோகோவிச் ஆவார்.

https://www.virakesari.lk/article/146975

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என‌க்கு டென்னிஸ் விளையாட்டில் பெரிய‌ ஆர்வ‌ம் இல்லை

 

என‌து ந‌ண்ப‌ன் டென்னிஸ் விளையாட்டு பையித்திய‌ம் யார் வெல்வார்க‌ள் என்று ச‌ரியா க‌ணிப்பான்.....................

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.