Jump to content

சிறுவனின் உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனின் உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி

தங்க இதயம்

பட மூலாதாரம்,COURTESY SN SALEEM, SA SEDDIK, M. EL-HALWAGY

28 ஜனவரி 2023

2,300 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய எகிப்து நாகரிகத்தின் உயர் வகுப்பைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவன் ஒருவரின் உடல் தங்க இதயத்துடன் பதப்படுத்தப்பட்டிருப்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 14 அல்லது 15 வயதில் இறந்ததாகக் கருதப்படும் இந்த சிறுவனின் உடல் 1916ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டு, கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் டஜன் கணக்கான மம்மிகளுடன் வைக்கப்பட்டிருந்தது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த உடல் வல்லுநர்களால் முழுமையாக ஆய்வு செய்யப்படாமல் இருந்த நிலையில், கெய்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சஹர் சலீம் தலைமையிலான குழு சிடி ஸ்கேனரை பயன்படுத்தி மம்மியை ஆய்வு செய்தபோது இந்த உண்மை தெரியவந்துள்ளது. இந்த உடலில் 21 வகையான 49 தாயத்துகள் இருந்தது இந்தச் சோதனையில் தெரியவந்துள்ளது. அதில், பெரும்பாலானவை தங்கத்தால் ஆனவை. இதன் காரணமாகவே இந்த மம்மிக்கு `தங்க பையன்` என்று பெயரிட்டதாக ஃப்ரென்டியர்ஸ் இன் மெடிசின்(Frontiers in Medicine) என்ற சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் சலீம் கூறியுள்ளார்.

மறைந்திருந்த பொக்கிஷம்

ஆரோக்கியமான பற்கள் மற்றும் எலும்புகள் கொண்டுள்ள இந்தச் சிறுவனிடம் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது எந்தவித நோய் பாதிப்பும் இருந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை.

மேலும், உயர்தரம் வாய்ந்த பதப்படுத்தல் செயல்முறை மூலம் அவரது உடலின் எச்சங்கள் பதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஸ்கேன் முடிவுகள் இந்தச் சிறுவன் உயர்வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை உறுதிசெய்துள்ளது. அந்த இளைஞனின் உடலை மூடியிருந்த உறைக்குக் கீழே இரண்டு விரல்கள் அளவிற்கு நீளம் கொண்ட ஒரு பொருள் முன்தோல் நீக்கப்படாத ஆண்குறிக்கு அருகில் இருந்தது. மேலும், வாயில் ஒரு தங்க நாக்கு இருந்தது.

மறைந்திருந்த பொக்கிஷம்

பட மூலாதாரம்,COURTESY SN SALEEM, SA SEDDIK, M. EL-HALWAGY

மறுபிறவியில் பாதுகாப்பு மற்றும் சக்தி கிடைப்பதற்காக இறந்தவர்கள் சடலத்தின்மீது தாயத்துகளை வைக்கும் பண்டைய எகிப்தியர்களின் சடங்கை சலீம் நினைவுகூர்ந்தார். இறந்தவருக்கு மறுபிறவியில் பேசும் திறன் கிடைப்பதை உறுதிசெய்வதற்காக தங்க நாக்குகள் வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். தெற்கு எகிப்தின் எட்ஃபு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தாலமிக் கால பிற்பகுதியைச் சேர்ந்ததாகக் (கி.மு. 332-30) கருதப்படும் இந்த மம்மி, பிரிட்டிஷ் ஹோவர்ட் கார்ட்டரால் கிங்ஸ் பள்ளத்தாக்கில் துட்டகாமனின் கல்லறை கண்டுபிடிக்கப்படுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது. இந்த எச்சங்கள் இரண்டு சவப்பெட்டியால் பாதுகாக்கப்பட்டிருந்தன. உட்பகுதி மரத்தால் செய்யப்பட்டிருந்தது. வெளிப்புறத்தில் கிரேக்க மொழியில் எழுத்துகள் இருந்தன. அதோடு, அதன் தலையில் தங்க முகமூடியும் இருந்தது.

 

முறையாக ஆய்வு செய்ய வேண்டும்

இந்தக் கண்டுபிடிப்பை பல புதிய கண்டுபிடிப்புகளுக்கான முன்னோட்டமாக சலீம் கருதுகிறார். ``19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எகிப்தில் நடந்த விரிவான அகழ்வாராய்ச்சிகளின் விளைவாக ஆயிரக்கணக்கான பண்டைய உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அவற்றில் பல இன்னும் திறக்கப்படாமல் சவப்பெட்டிகளுக்குள் உள்ளன" என்கிறார் சலீம். '`1835ஆம் ஆண்டு கெய்ரோவில் தொடங்கப்பட்ட எகிப்து அருங்காட்சியகம் இது மாதிரியான கண்டுபிடிப்புகளின் களஞ்சியமாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், அதன் அடித்தளம் முறையாக ஆய்வு செய்யப்படாமல் அல்லது காட்சிப்படுத்தப்படாமல் பல தசாப்தங்களாக பூட்டிவைக்கப்பட்டிருக்கும் இது போன்ற மம்மிகளால் நிறைந்துள்ளது,`` என்றும் அவர் கூறினார்.

மம்மி

பட மூலாதாரம்,SN SALEEM, SA SEDDIK, M. EL-HALWAGY

கடந்த காலங்களில், மம்மிகளில் இருந்து கவச உறைகள் அகற்றப்பட்டு, ஆராய்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக அவை சிதைக்கப்பட்டதாக சலீம் கூறுகிறார். ஆனால், தற்போதுள்ள கம்ப்யூட்டட் டோமோகிராஃபி (computed tomography) நுட்பம், மம்மிகளை சேதப்படுத்தாமல் ஆய்வு செய்ய ஒரு சிறந்த கருவியாக மாறும் என்றும், இது பண்டைய கால மனிதர்களின் ஆரோக்கியம், நம்பிக்கைகள் மற்றும் திறன்கள் குறித்து கூடுதலாக ஆராயவும் உதவும் என்கிறார் சலீம். "கம்ப்யூட்டட் டோமோகிராஃபி கதிரியக்க துறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது. ஒரு படத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இதன் மூலம் உடலின் சிறு பகுதிகளின் நூற்றுக்கணக்கான கணிப்புகளை ஒன்றிணைத்து முழுமையான முப்பரிமாண மாதிரியை உருவாக்க முடியும்" என்றும் சலீம் கூறுகிறார்.

தங்க இலையால் மூடப்பட்ட மம்மி

சக்காரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

4,300 ஆண்டுகளாக திறக்கப்படாத சவப்பெட்டியில் இருந்து தங்க இலையால் மூடப்பட்ட மம்மி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கடந்த வியாழனன்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஹெகாஷெப்ஸ் என்ற மனிதரின் எச்சமான இந்த மம்மி, இதுவரை எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான மற்றும் அரசர் அல்லாதவரின் சடலமாகக் கருதப்படுகிறது. இது, தெற்கு கெய்ரோவில் சக்காரா என்ற இடத்தில் அமைந்துள்ள ஓர் இடுகாட்டில் 15 மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது. அங்கு வேறு மூன்று கல்லறைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று ரகசியக் காப்பாளரின் கல்லறை. பண்டைய நெக்ரோபோலிஸில் கண்டெடுக்கப்பட்ட மம்மிகளில் மிகப் பெரிய மம்மி, க்னும்ட்ஜெடெஃப் என்பவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது. இவர் பாதிரியார் மற்றும் அரண்மனைகளின் மேற்பார்வையாளர்.

மற்றொரு கல்லறை மெரி என்பவருக்குச் சொந்தமானது. இவர் அரண்மனையில் ரகசியக் காப்பாளர் என்ற பெரிய பொறுப்பில் இருந்தவர். மற்றொரு கல்லறை நீதிபதியும் எழுத்தாளருமான ஃபெடெக் என்பவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது. இதுவரை கண்டெடுக்கப்பட்டதில் மிகப்பெரிய மம்மிகளாக கருதப்படும் பல மம்மிகள் இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்லறைகளோடு மண்பாண்டங்கள் உட்பட பல பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எகிப்தின் முன்னாள் தொல்லியல் துறை அமைச்சரும் தொல்லியல் ஆராய்ச்சியாளருமான ஜாஹி ஹவாஸ், இவை அனைத்தும் கிமு.25 முதல் 22 காலகட்டத்தைச் சேர்ந்தது என்கிறார்.

 

"அரசர்களை அவர்களைச் சுற்றியுள்ள மக்களுடன் இணைப்பதால் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது," என்கிறார் இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட மற்றொரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அலி அபு தேஷிஷ். சக்காரா 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக பரபரப்பாக இயங்கிய இடுகாடாகும். யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற இந்தத் தளம், பண்டைய எகிப்து தலைநகர் மெம்பிஸில் அமைந்துள்ளது. ஸ்டெப் பிரமிடு உட்பட ஒரு டஜனுக்கும் மேலான பிரமிடுகள் இங்கு உள்ளன. தெற்கு எகிப்திய நகரமான லக்சரில் ரோமானிய காலத்தைச் சேர்ந்த ஒரு முழுமையான குடியிருப்பு நகரத்தைக் கண்டுபிடித்ததாக வல்லுநர்கள் கூறியதற்கு மறுநாள், இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்களது சுற்றுலாத்துறையைப் புதுப்பிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அண்மைய ஆண்டுகளில் பல முக்கிய தொல்லியல் கண்டுபிடிப்புகளை எகிப்து அறிவித்துள்ளது. இந்தாண்டு திறக்கப்பட உள்ள பிரமாண்ட எகிப்து அருங்காட்சியகம், 2028ஆம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 30 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது. ஆனால், விரிவான ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாமல் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஊடக கவனம் பெறும் கண்டுபிடிப்புகளில் எகிப்து கவனம் செலுத்துவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c9wrzlx81jgo

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை இப்பொழுது அந்தப் பையன் நானாகவும் இருக்கலாம் .......காரணம் என் மனசு முழுக்க தங்கமாக இருப்பதுபோல் உணர்கிறேன்.......!  😁

நன்றி ஏராளன் ........!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

ஒருவேளை இப்பொழுது அந்தப் பையன் நானாகவும் இருக்கலாம் .......காரணம் என் மனசு முழுக்க தங்கமாக இருப்பதுபோல் உணர்கிறேன்.......!  😁

நன்றி ஏராளன் ........!

அண்ணை அம்மாவா ஆத்துக்காறியா தங்கமே என்று கூப்பிடுவாங்க?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3300 வருசத்துக்கு முன்னர், எகிப்தினை ஆண்ட 3ம் ராமெசேஸ் மன்னரின் பதப்படுத்தப்பட உடல் கண்டெடுக்கப்பட்டபோது, எகிப்திய ஜனாதிபதி, பிரெஞ்சின் ஜானதிபதியுடன் செய்துகொண்ட உடன்படிக்கை ஒன்றின் படி, மம்மி பாரிஸ் கொண்டு செல்லப்பட்டு ஆய்வுக்கு உள்ளானது. 3ம் ராமெசேஸ் மன்னரின், அந்த மம்மியின் பதப்படுத்தலில், அதனது மூக்கினுள் மிளகு திணிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

இதுவே, தமிழனின் மிளகு, 3300 வருடங்களுக்கு முன்னர் ஏற்றுமதி ஆகி இருந்தது என்பதன் மிக முக்கிய ஆதாரம்.

ஏனெனில், சங்கத்தமிழ் என்று, 2300 வரை இருந்த தமிழர் வரலாறு, கீழடி ஆய்வின் மூலம், 2600 வருடங்கள் என்று பின்னோக்கி நகர்கிறது. ஆனால் 3300 வருட இந்த சான்று, தமிழரிடம் இல்லாத வரலாறை சொல்கிறது. 5000 வருடங்கள் பின்னோக்கியும் செல்லக்கூடும். யாருக்கு தெரியும்.

விபரம் சொல்லும் கீழே உள்ள லிங்க், இந்திய அரசின் உத்தியோகப்பூர்வமானது.

என்ன விடயம் என்றால், தமிழனின் வியாபாரத்தினை இல்லாத இந்தியா செய்ததாக சொல்கிறார்கள்.

https://indianculture.gov.in/food-and-culture/spices-herbs/black-pepper-king-spices#:~:text=There is a narrative about,how old this spice is!

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்து  பட்டுப் பாதை என்று அழைக்கப் பட்ட மத்திய ஆசியாவினூடாக நகர்ந்த வர்த்தகப் பாதையின் மேற்குக் கிளைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது.  தென்னாசியாவில் உருவான தாவரமாக இருந்தாலும், மிளகு இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியிருந்தது, பின்னர் சீனாவிற்கும் பரவியிருந்தமைக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே, மிளகு எங்கிருந்தும் வந்திருக்கலாம்.

https://en.unesco.org/silkroad/countries-alongside-silk-road-routes/egypt

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம, ஆராய்ந்து எழுதிய இந்திய மத்திய அரசுக்கும், IIT Bombay கும், Indira Gandhi National Open University கும் பாடம் எடுப்போமில்ல... 🤦‍♂️ 😎😁

போர்த்துக்கேயர், தமிழரிடம் இருந்து கொண்டுபோன மிளகு, மாம்பழம் இப்ப பெருமளவில் பிரேசில் நாட்டில் விளைவிக்கப்படுகிறது. 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

நாம, ஆராய்ந்து எழுதிய இந்திய மத்திய அரசுக்கும், IIT Bombay கும், Indira Gandhi National Open University கும் பாடம் எடுப்போமில்ல... 🤦‍♂️ 😎😁

போர்த்துக்கேயர், தமிழரிடம் இருந்து கொண்டுபோன மிளகு, மாம்பழம் இப்ப பெருமளவில் பிரேசில் நாட்டில் விளைவிக்கப்படுகிறது. 

பாடம் எடுப்பது கேட்கும் செவியுள்ளோருக்கு மட்டுமே, அதனால் தான் உங்களை மேற்கோள் காட்டாமலே  எழுதியிருக்கிறேன் மேலே😎. நீங்கள் குறிப்பிட்ட 3 மூலங்களில் "தமிழரின் மிளகு" என்று ஆய்ந்து எழுதியிருந்தால் அறியத் தாருங்கள், பேசலாம்.

போர்த்துக்கேயர் தமிழரைச் சந்தித்தது எகிப்திற்கு மிளகு (கரு மிளகு?) போய் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்தால், "மிளகு தமிழருடையதா?" என்ற நியாயமான கேள்வி எழத் தான் செய்யும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதண்டாவாதம் செய்வதற்கு என்றே இங்கு பலர் கிளம்பி, ஓடி வருகிறார்கள்..🤦‍♂️

இந்திய மத்திய அரசு, தெளிவாக கேரளா என்று சொல்கிறது. கொஞ்சமாவது தமிழன் வரலாறு புரிந்தால், சேர, சோழ பாண்டியர்களில், சேரர்கள் தான் இன்றய கேரளாகாரர்கள் என்பது புரியும். இதனையே மத்திய அரசு சொல்கிறது. அவர்களுக்கு பாடம் எடுக்க, நமக்கு பட்டுப்பாதை உதாரணம். 

அட. அட.... சரிதான்... 😁

கேரளத்தின் பேறாரின் கரையின் முசிறி துறைமுகம் ஊடாக மிளகு வியாபாரம் நடந்தது என்றும், சங்கத்தமிழ் நூல்களில், சுமார் 22 கவி வரிகளில், 3ல் மிளகு என்றும், 19ல் மிளகினை கறி என்றும் சொல்லட்டுள்ளது. 

விசயம் புரிந்து கருத்தாடினால் நல்லது.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

விதண்டாவாதம் செய்வதற்கு என்றே இங்கு பலர் கிளம்பி, ஓடி வருகிறார்கள்..🤦‍♂️

இந்திய மத்திய அரசு, தெளிவாக கேரளா என்று சொல்கிறது. கொஞ்சமாவது தமிழன் வரலாறு புரிந்தால், சேர, சோழ பாண்டியர்களில், சேரர்கள் தான் இன்றய கேரளாகாரர்கள் என்பது புரியும். இதனையே மத்திய அரசு சொல்கிறது. அவர்களுக்கு பாடம் எடுக்க, நமக்கு பட்டுப்பாதை உதாரணம். 

அட. அட.... சரிதான்... 😁

கேரளத்தின் பேறாரின் கரையின் முசிறி துறைமுகம் ஊடாக மிளகு வியாபாரம் நடந்தது என்றும், சங்கத்தமிழ் நூல்களில், சுமார் 22 கவி வரிகளில், 3ல் மிளகு என்றும், 19ல் மிளகினை கறி என்றும் சொல்லட்டுள்ளது. 

விசயம் புரிந்து கருத்தாடினால் நல்லது.

படபடக்காதீர்கள் நாதம்😂, கேரளக் கரைக்கு வந்த அரேபிய வியாபாரிகளால் மிளகு போயிருக்கலாம். ஆனால், கேரளக்கரை மிளகு தான் எகிப்தில் கிடைத்த மிளகென்று எப்படிப் பாலம் போட்டீர்கள்? முடியாதல்லவா? அதனால் தான் நிபுணர்கள் இதை மேலும் ஆராயும் வரை "தமிழரின் மிளகென்று சொல்ல முடியாது" என்றேன்.
 
நேரடியாக அறியக் கூடிய ஒரு முறை இருக்கிறது. அந்த ராம்சிஸ் 2 இன் மூக்கில் கிடைத்த கரு மிளகை DNA sequencing செய்யலாம். அப்படியே 2600 ஆண்டுகள் கடந்து கீழடியில் கிடைக்கப் போகும் மிளகின் கரு அமிலத்தையும் DNA sequencing செய்யலாம். இரண்டையும் SNP அடிப்படையில் ஒப்பிட்டால், ஒற்றுமை தெரிந்து விடும். இப்படி யாராவது செய்திருக்கிறார்களா? செய்யவில்லையென்றால் செய்ய வேண்டும். அது வரை கிழக்கிலிருந்து சென்ற மிளகு என்று மட்டும் தான் சொல்ல முடியும், மேலதிக எதுவும் கற்பனையாக மட்டுமே இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட, இதை இந்திய மத்திய அரசுக்கு சொல்லி விட்டால், ஆயிரம் பொற்காசு கிடைக்குமே. 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

3ம் ராமெசேஸ் மன்னரின், அந்த மம்மியின் பதப்படுத்தலில், அதனது மூக்கினுள் மிளகு திணிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

நான் சொல்லல.....சிங்கனுக்கு உறைப்பு விசயத்திலை ஆரோ செய்வினை செய்து போட்டாங்கள் எண்டு :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

நான் சொல்லல.....சிங்கனுக்கு உறைப்பு விசயத்திலை ஆரோ செய்வினை செய்து போட்டாங்கள் எண்டு :rolling_on_the_floor_laughing:

எழுதும் போது, நினைத்தேன். வந்து இப்படி எழுதுவீர்கள் எண்டு... 😁

உங்கை ஒருத்தர், மிளகுக்கே DNA செய்வினை, சூனியம் செய்யனுமாம் எண்டு ஐடியா சொல்லுறாரே... 😜

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

எழுதும் போது, நினைத்தேன். வந்து இப்படி எழுதுவீர்கள் எண்டு... 😁

உங்கை ஒருத்தர், மிளகுக்கே DNA செய்வினை, சூனியம் செய்யனுமாம் எண்டு ஐடியா சொல்லுறாரே... 😜

அந்த மனிசனை விடுங்கோ....அந்தாள் செவ்வாய் கிரகத்துக்கே போய் ஆராய்ச்சி செய்யுதுட்டு வந்த ஆள் மாதிரி கதைப்பார் கண்டியளோ :rolling_on_the_floor_laughing:

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

அந்த மனிசனை விடுங்கோ....அந்தாள் செவ்வாய் கிரகத்துக்கே போய் ஆராய்ச்சி செய்யுதுட்டு வந்த ஆள் மாதிரி கதைப்பார் கண்டியளோ :rolling_on_the_floor_laughing:

இந்த விசயமெல்லாம் செவ்வாய்க்குப் போகாமலே பேசக் கூடிய விடயங்கள் தான், ஆனால் நீங்கள் கையில் இருக்கிற போனுக்குள்ளேயே போய்த்தேட மாட்டியளே? அப்ப நாதம் காதில் பூ வைப்பாரா இல்லையா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

நான் சொல்லல.....சிங்கனுக்கு உறைப்பு விசயத்திலை ஆரோ செய்வினை செய்து போட்டாங்கள் எண்டு :rolling_on_the_floor_laughing:

முதலில் இங்கிருக்கும் ஆளுக்கு யாராவது ஏதாவது செய்யுங்க மந்திரித்து விட்ட நாம்பன் கண்டு போல் ஓடி ஓடி  எல்லா திரிக்குள்ளு,ம்  புகுந்து பாடம் எடுக்கிறார் யுவர் ஆனர் .🐵

Edited by பெருமாள்
  • Haha 3
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முதலில் இங்கிருக்கும் ஆளுக்கு யாராவது ஏதாவது செய்யுங்க மந்திரித்து விட்ட நாம்பன் கண்டு போல் ஓடி ஓடி  எல்லா திரிக்குள்ளு,ம்  புகுந்து பாடம் எடுக்கிறார் யுவர் ஆனர் .🐵

அது பரவாயில்லை.... மிளகு தமிழர்களிடம் மட்டுமே இருந்தது என்று பிபிசி முதல் ஏபிசி வரை டாக்குமெண்டரி போடுகினம்.

பண்டைய தமிழ் மூவேந்தர்களில் சேரரின் வழித்தோன்றலான மலையாளிகள். இந்த அஞ்சாப்பு விளக்கமே இல்லாமல், தமிழர் மிளகு எண்டு போட்டிருக்கே எண்டால் எனனத்தை சொல்லுறது?

தமிழகம் எங்கும் விளைந்த மிளகு, அரேபியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சீனர்கள், மலேயர், சியாமியர் (தாய்) என்று, தமிழகத்துக்கு வந்து மிளகு உள்பட வாசனை திரவியங்கள் வாங்க வந்துள்ளனர். கொலம்பஸ் கிளம்பியதும்,  போர்த்துக்கேயர் வந்ததும், மிளகை தேடி. 

இதனை, இந்திய அரசின் தளம் சொல்கிறது என்றாலும், பெரிசு, முசிறிக்கொண்டு விதண்டாவாதம் செய்யிறன், முயலுக்கு மூண்டு கால் தான் என்று நிக்குதப்பா. 😅

சீனாக்காரர், அல்லைபிட்டியில், தாங்கள் 11ம் நூறாண்டில் அங்கை தங்கி இருந்து யாவாரம் பார்த்தோம் எண்டு வந்து நிண்டு கிண்டினார்களே. இவர், அவையளிடம் மிளகு இருந்திருக்கலாமாம்.

மிளகின் பிரச்சனை, நாம் பாவிக்கும் அந்த மிளகு பருப்புகளை போட்டு விளைவிக்க முடியாது. அதுவே இவ்வளவு பேரும் தமிழரிடம் ஓடி வந்ததுக்கு காரணம். 

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முதலில் இங்கிருக்கும் ஆளுக்கு யாராவது ஏதாவது செய்யுங்க மந்திரித்து விட்ட நாம்பன் கண்டு போல் ஓடி ஓடி  எல்லா திரிக்குள்ளு,ம்  புகுந்து பாடம் எடுக்கிறார் யுவர் ஆனர் .🐵

பாவம் மனுசன் என்ன சோலியோ :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

அது பரவாயில்லை.... மிளகு தமிழர்களிடம் மட்டுமே இருந்தது என்று பிபிசி முதல் ஏபிசி வரை டாக்குமெண்டரி போடுகினம்.

பண்டைய தமிழ் மூவேந்தர்களில் சேரரின் வழித்தோன்றலான மலையாளிகள். இந்த அஞ்சாப்பு விளக்கமே இல்லாமல், தமிழர் மிளகு எண்டு போட்டிருக்கே எண்டால் எனனத்தை சொல்லுறது?

தமிழகம் எங்கும் விளைந்த மிளகு, அரேபியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சீனர்கள், மலேயர், சியாமியர் (தாய்) என்று, தமிழகத்துக்கு வந்து மிளகு உள்பட வாசனை திரவியங்கள் வாங்க வந்துள்ளனர். கொலம்பஸ் கிளம்பியதும்,  போர்த்துக்கேயர் வந்ததும், மிளகை தேடி. 

இதனை, இந்திய அரசின் தளம் சொல்கிறது என்றாலும், பெரிசு, முசிறிக்கொண்டு விதண்டாவாதம் செய்யிறன், முயலுக்கு மூண்டு கால் தான் என்று நிக்குதப்பா. 😅

சீனாக்காரர், அல்லைபிட்டியில், தாங்கள் 11ம் நூறாண்டில் அங்கை தங்கி இருந்து யாவாரம் பார்த்தோம் எண்டு வந்து நிண்டு கிண்டினார்களே. இவர், அவையளிடம் மிளகு இருந்திருக்கலாமாம்.

மிளகின் பிரச்சனை, நாம் பாவிக்கும் அந்த மிளகு பருப்புகளை போட்டு விளைவிக்க முடியாது. அதுவே இவ்வளவு பேரும் தமிழரிடம் ஓடி வந்ததுக்கு காரணம். 

😎ஆறாம் வகுப்பு பாசான நாதத்திற்கு இன்னும் நான் சொன்னது விளங்கவில்லை  (நான் அஞ்சாப்பு என்பதாலோ தெரியேல்ல!)

மூக்கில் இருந்த மிளகு எங்கிருந்தும் வந்திருக்கலாம். இட்லி , ரசம், சாம்பாரு, கறி, மிளகு எல்லாம் தமிழனுடையது என்று உரிமை கோர கோராவில் வரும் தகவல்கள் போதாது சீனியர் (ஆறாம் வகுப்பு, ஒரு லெவல் கூடவெல்லோ!😉).

எனவே, அந்த மூன்று ரசிகர்களின் காதிலயும் பூந்தோட்டம் வையுங்கள் - மிச்ச பேர் உங்களை விட பல கிளாசுகள் மேல் என்பதால் பார்த்து அணுகுங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

😎ஆறாம் வகுப்பு பாசான நாதத்திற்கு இன்னும் நான் சொன்னது விளங்கவில்லை  (நான் அஞ்சாப்பு என்பதாலோ தெரியேல்ல!)

மூக்கில் இருந்த மிளகு எங்கிருந்தும் வந்திருக்கலாம். இட்லி , ரசம், சாம்பாரு, கறி, மிளகு எல்லாம் தமிழனுடையது என்று உரிமை கோர கோராவில் வரும் தகவல்கள் போதாது சீனியர் (ஆறாம் வகுப்பு, ஒரு லெவல் கூடவெல்லோ!😉).

எனவே, அந்த மூன்று ரசிகர்களின் காதிலயும் பூந்தோட்டம் வையுங்கள் - மிச்ச பேர் உங்களை விட பல கிளாசுகள் மேல் என்பதால் பார்த்து அணுகுங்கள்! 

பூக்கூடை, பூந்தோட்டம் இருக்கட்டும். அடுத்தவர் காதில, வெறும் காத்தை ஊதாமல், தமிழரை தவிர வேறு யாரிடம், மிளகு இருந்தது எண்டதை ஆதாரத்தோட சொல்லுங்க.

அதை விட்டுட்ட, சாப்பாடு செமிக்க, சும்மா வேற யாரிடமாவது மிளகு இருந்திருக்கலாம் எண்டு அலம்பறை பண்ணப்படாது.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன்ரை சாப்பாடு பழஞ்சோறு மட்டும் தானா? ஓ மை காட்....:beaming_face_with_smiling_eyes:

யுவர் ஆனர் புட்டு என்னமாதிரி???? ஆர்ரை வழித்தோன்றல்  :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Golden tongue Mummy: தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.