Jump to content

சிறுவனின் உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனின் உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி

தங்க இதயம்

பட மூலாதாரம்,COURTESY SN SALEEM, SA SEDDIK, M. EL-HALWAGY

28 ஜனவரி 2023

2,300 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய எகிப்து நாகரிகத்தின் உயர் வகுப்பைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவன் ஒருவரின் உடல் தங்க இதயத்துடன் பதப்படுத்தப்பட்டிருப்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 14 அல்லது 15 வயதில் இறந்ததாகக் கருதப்படும் இந்த சிறுவனின் உடல் 1916ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டு, கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் டஜன் கணக்கான மம்மிகளுடன் வைக்கப்பட்டிருந்தது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த உடல் வல்லுநர்களால் முழுமையாக ஆய்வு செய்யப்படாமல் இருந்த நிலையில், கெய்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சஹர் சலீம் தலைமையிலான குழு சிடி ஸ்கேனரை பயன்படுத்தி மம்மியை ஆய்வு செய்தபோது இந்த உண்மை தெரியவந்துள்ளது. இந்த உடலில் 21 வகையான 49 தாயத்துகள் இருந்தது இந்தச் சோதனையில் தெரியவந்துள்ளது. அதில், பெரும்பாலானவை தங்கத்தால் ஆனவை. இதன் காரணமாகவே இந்த மம்மிக்கு `தங்க பையன்` என்று பெயரிட்டதாக ஃப்ரென்டியர்ஸ் இன் மெடிசின்(Frontiers in Medicine) என்ற சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் சலீம் கூறியுள்ளார்.

மறைந்திருந்த பொக்கிஷம்

ஆரோக்கியமான பற்கள் மற்றும் எலும்புகள் கொண்டுள்ள இந்தச் சிறுவனிடம் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது எந்தவித நோய் பாதிப்பும் இருந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை.

மேலும், உயர்தரம் வாய்ந்த பதப்படுத்தல் செயல்முறை மூலம் அவரது உடலின் எச்சங்கள் பதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஸ்கேன் முடிவுகள் இந்தச் சிறுவன் உயர்வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை உறுதிசெய்துள்ளது. அந்த இளைஞனின் உடலை மூடியிருந்த உறைக்குக் கீழே இரண்டு விரல்கள் அளவிற்கு நீளம் கொண்ட ஒரு பொருள் முன்தோல் நீக்கப்படாத ஆண்குறிக்கு அருகில் இருந்தது. மேலும், வாயில் ஒரு தங்க நாக்கு இருந்தது.

மறைந்திருந்த பொக்கிஷம்

பட மூலாதாரம்,COURTESY SN SALEEM, SA SEDDIK, M. EL-HALWAGY

மறுபிறவியில் பாதுகாப்பு மற்றும் சக்தி கிடைப்பதற்காக இறந்தவர்கள் சடலத்தின்மீது தாயத்துகளை வைக்கும் பண்டைய எகிப்தியர்களின் சடங்கை சலீம் நினைவுகூர்ந்தார். இறந்தவருக்கு மறுபிறவியில் பேசும் திறன் கிடைப்பதை உறுதிசெய்வதற்காக தங்க நாக்குகள் வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். தெற்கு எகிப்தின் எட்ஃபு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தாலமிக் கால பிற்பகுதியைச் சேர்ந்ததாகக் (கி.மு. 332-30) கருதப்படும் இந்த மம்மி, பிரிட்டிஷ் ஹோவர்ட் கார்ட்டரால் கிங்ஸ் பள்ளத்தாக்கில் துட்டகாமனின் கல்லறை கண்டுபிடிக்கப்படுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது. இந்த எச்சங்கள் இரண்டு சவப்பெட்டியால் பாதுகாக்கப்பட்டிருந்தன. உட்பகுதி மரத்தால் செய்யப்பட்டிருந்தது. வெளிப்புறத்தில் கிரேக்க மொழியில் எழுத்துகள் இருந்தன. அதோடு, அதன் தலையில் தங்க முகமூடியும் இருந்தது.

 

முறையாக ஆய்வு செய்ய வேண்டும்

இந்தக் கண்டுபிடிப்பை பல புதிய கண்டுபிடிப்புகளுக்கான முன்னோட்டமாக சலீம் கருதுகிறார். ``19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எகிப்தில் நடந்த விரிவான அகழ்வாராய்ச்சிகளின் விளைவாக ஆயிரக்கணக்கான பண்டைய உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அவற்றில் பல இன்னும் திறக்கப்படாமல் சவப்பெட்டிகளுக்குள் உள்ளன" என்கிறார் சலீம். '`1835ஆம் ஆண்டு கெய்ரோவில் தொடங்கப்பட்ட எகிப்து அருங்காட்சியகம் இது மாதிரியான கண்டுபிடிப்புகளின் களஞ்சியமாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், அதன் அடித்தளம் முறையாக ஆய்வு செய்யப்படாமல் அல்லது காட்சிப்படுத்தப்படாமல் பல தசாப்தங்களாக பூட்டிவைக்கப்பட்டிருக்கும் இது போன்ற மம்மிகளால் நிறைந்துள்ளது,`` என்றும் அவர் கூறினார்.

மம்மி

பட மூலாதாரம்,SN SALEEM, SA SEDDIK, M. EL-HALWAGY

கடந்த காலங்களில், மம்மிகளில் இருந்து கவச உறைகள் அகற்றப்பட்டு, ஆராய்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக அவை சிதைக்கப்பட்டதாக சலீம் கூறுகிறார். ஆனால், தற்போதுள்ள கம்ப்யூட்டட் டோமோகிராஃபி (computed tomography) நுட்பம், மம்மிகளை சேதப்படுத்தாமல் ஆய்வு செய்ய ஒரு சிறந்த கருவியாக மாறும் என்றும், இது பண்டைய கால மனிதர்களின் ஆரோக்கியம், நம்பிக்கைகள் மற்றும் திறன்கள் குறித்து கூடுதலாக ஆராயவும் உதவும் என்கிறார் சலீம். "கம்ப்யூட்டட் டோமோகிராஃபி கதிரியக்க துறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது. ஒரு படத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இதன் மூலம் உடலின் சிறு பகுதிகளின் நூற்றுக்கணக்கான கணிப்புகளை ஒன்றிணைத்து முழுமையான முப்பரிமாண மாதிரியை உருவாக்க முடியும்" என்றும் சலீம் கூறுகிறார்.

தங்க இலையால் மூடப்பட்ட மம்மி

சக்காரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

4,300 ஆண்டுகளாக திறக்கப்படாத சவப்பெட்டியில் இருந்து தங்க இலையால் மூடப்பட்ட மம்மி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கடந்த வியாழனன்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஹெகாஷெப்ஸ் என்ற மனிதரின் எச்சமான இந்த மம்மி, இதுவரை எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான மற்றும் அரசர் அல்லாதவரின் சடலமாகக் கருதப்படுகிறது. இது, தெற்கு கெய்ரோவில் சக்காரா என்ற இடத்தில் அமைந்துள்ள ஓர் இடுகாட்டில் 15 மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது. அங்கு வேறு மூன்று கல்லறைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று ரகசியக் காப்பாளரின் கல்லறை. பண்டைய நெக்ரோபோலிஸில் கண்டெடுக்கப்பட்ட மம்மிகளில் மிகப் பெரிய மம்மி, க்னும்ட்ஜெடெஃப் என்பவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது. இவர் பாதிரியார் மற்றும் அரண்மனைகளின் மேற்பார்வையாளர்.

மற்றொரு கல்லறை மெரி என்பவருக்குச் சொந்தமானது. இவர் அரண்மனையில் ரகசியக் காப்பாளர் என்ற பெரிய பொறுப்பில் இருந்தவர். மற்றொரு கல்லறை நீதிபதியும் எழுத்தாளருமான ஃபெடெக் என்பவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது. இதுவரை கண்டெடுக்கப்பட்டதில் மிகப்பெரிய மம்மிகளாக கருதப்படும் பல மம்மிகள் இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்லறைகளோடு மண்பாண்டங்கள் உட்பட பல பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எகிப்தின் முன்னாள் தொல்லியல் துறை அமைச்சரும் தொல்லியல் ஆராய்ச்சியாளருமான ஜாஹி ஹவாஸ், இவை அனைத்தும் கிமு.25 முதல் 22 காலகட்டத்தைச் சேர்ந்தது என்கிறார்.

 

"அரசர்களை அவர்களைச் சுற்றியுள்ள மக்களுடன் இணைப்பதால் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது," என்கிறார் இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட மற்றொரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அலி அபு தேஷிஷ். சக்காரா 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக பரபரப்பாக இயங்கிய இடுகாடாகும். யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற இந்தத் தளம், பண்டைய எகிப்து தலைநகர் மெம்பிஸில் அமைந்துள்ளது. ஸ்டெப் பிரமிடு உட்பட ஒரு டஜனுக்கும் மேலான பிரமிடுகள் இங்கு உள்ளன. தெற்கு எகிப்திய நகரமான லக்சரில் ரோமானிய காலத்தைச் சேர்ந்த ஒரு முழுமையான குடியிருப்பு நகரத்தைக் கண்டுபிடித்ததாக வல்லுநர்கள் கூறியதற்கு மறுநாள், இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்களது சுற்றுலாத்துறையைப் புதுப்பிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அண்மைய ஆண்டுகளில் பல முக்கிய தொல்லியல் கண்டுபிடிப்புகளை எகிப்து அறிவித்துள்ளது. இந்தாண்டு திறக்கப்பட உள்ள பிரமாண்ட எகிப்து அருங்காட்சியகம், 2028ஆம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 30 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது. ஆனால், விரிவான ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாமல் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஊடக கவனம் பெறும் கண்டுபிடிப்புகளில் எகிப்து கவனம் செலுத்துவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c9wrzlx81jgo

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை இப்பொழுது அந்தப் பையன் நானாகவும் இருக்கலாம் .......காரணம் என் மனசு முழுக்க தங்கமாக இருப்பதுபோல் உணர்கிறேன்.......!  😁

நன்றி ஏராளன் ........!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

ஒருவேளை இப்பொழுது அந்தப் பையன் நானாகவும் இருக்கலாம் .......காரணம் என் மனசு முழுக்க தங்கமாக இருப்பதுபோல் உணர்கிறேன்.......!  😁

நன்றி ஏராளன் ........!

அண்ணை அம்மாவா ஆத்துக்காறியா தங்கமே என்று கூப்பிடுவாங்க?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3300 வருசத்துக்கு முன்னர், எகிப்தினை ஆண்ட 3ம் ராமெசேஸ் மன்னரின் பதப்படுத்தப்பட உடல் கண்டெடுக்கப்பட்டபோது, எகிப்திய ஜனாதிபதி, பிரெஞ்சின் ஜானதிபதியுடன் செய்துகொண்ட உடன்படிக்கை ஒன்றின் படி, மம்மி பாரிஸ் கொண்டு செல்லப்பட்டு ஆய்வுக்கு உள்ளானது. 3ம் ராமெசேஸ் மன்னரின், அந்த மம்மியின் பதப்படுத்தலில், அதனது மூக்கினுள் மிளகு திணிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

இதுவே, தமிழனின் மிளகு, 3300 வருடங்களுக்கு முன்னர் ஏற்றுமதி ஆகி இருந்தது என்பதன் மிக முக்கிய ஆதாரம்.

ஏனெனில், சங்கத்தமிழ் என்று, 2300 வரை இருந்த தமிழர் வரலாறு, கீழடி ஆய்வின் மூலம், 2600 வருடங்கள் என்று பின்னோக்கி நகர்கிறது. ஆனால் 3300 வருட இந்த சான்று, தமிழரிடம் இல்லாத வரலாறை சொல்கிறது. 5000 வருடங்கள் பின்னோக்கியும் செல்லக்கூடும். யாருக்கு தெரியும்.

விபரம் சொல்லும் கீழே உள்ள லிங்க், இந்திய அரசின் உத்தியோகப்பூர்வமானது.

என்ன விடயம் என்றால், தமிழனின் வியாபாரத்தினை இல்லாத இந்தியா செய்ததாக சொல்கிறார்கள்.

https://indianculture.gov.in/food-and-culture/spices-herbs/black-pepper-king-spices#:~:text=There is a narrative about,how old this spice is!

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்து  பட்டுப் பாதை என்று அழைக்கப் பட்ட மத்திய ஆசியாவினூடாக நகர்ந்த வர்த்தகப் பாதையின் மேற்குக் கிளைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது.  தென்னாசியாவில் உருவான தாவரமாக இருந்தாலும், மிளகு இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியிருந்தது, பின்னர் சீனாவிற்கும் பரவியிருந்தமைக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே, மிளகு எங்கிருந்தும் வந்திருக்கலாம்.

https://en.unesco.org/silkroad/countries-alongside-silk-road-routes/egypt

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம, ஆராய்ந்து எழுதிய இந்திய மத்திய அரசுக்கும், IIT Bombay கும், Indira Gandhi National Open University கும் பாடம் எடுப்போமில்ல... 🤦‍♂️ 😎😁

போர்த்துக்கேயர், தமிழரிடம் இருந்து கொண்டுபோன மிளகு, மாம்பழம் இப்ப பெருமளவில் பிரேசில் நாட்டில் விளைவிக்கப்படுகிறது. 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

நாம, ஆராய்ந்து எழுதிய இந்திய மத்திய அரசுக்கும், IIT Bombay கும், Indira Gandhi National Open University கும் பாடம் எடுப்போமில்ல... 🤦‍♂️ 😎😁

போர்த்துக்கேயர், தமிழரிடம் இருந்து கொண்டுபோன மிளகு, மாம்பழம் இப்ப பெருமளவில் பிரேசில் நாட்டில் விளைவிக்கப்படுகிறது. 

பாடம் எடுப்பது கேட்கும் செவியுள்ளோருக்கு மட்டுமே, அதனால் தான் உங்களை மேற்கோள் காட்டாமலே  எழுதியிருக்கிறேன் மேலே😎. நீங்கள் குறிப்பிட்ட 3 மூலங்களில் "தமிழரின் மிளகு" என்று ஆய்ந்து எழுதியிருந்தால் அறியத் தாருங்கள், பேசலாம்.

போர்த்துக்கேயர் தமிழரைச் சந்தித்தது எகிப்திற்கு மிளகு (கரு மிளகு?) போய் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்தால், "மிளகு தமிழருடையதா?" என்ற நியாயமான கேள்வி எழத் தான் செய்யும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதண்டாவாதம் செய்வதற்கு என்றே இங்கு பலர் கிளம்பி, ஓடி வருகிறார்கள்..🤦‍♂️

இந்திய மத்திய அரசு, தெளிவாக கேரளா என்று சொல்கிறது. கொஞ்சமாவது தமிழன் வரலாறு புரிந்தால், சேர, சோழ பாண்டியர்களில், சேரர்கள் தான் இன்றய கேரளாகாரர்கள் என்பது புரியும். இதனையே மத்திய அரசு சொல்கிறது. அவர்களுக்கு பாடம் எடுக்க, நமக்கு பட்டுப்பாதை உதாரணம். 

அட. அட.... சரிதான்... 😁

கேரளத்தின் பேறாரின் கரையின் முசிறி துறைமுகம் ஊடாக மிளகு வியாபாரம் நடந்தது என்றும், சங்கத்தமிழ் நூல்களில், சுமார் 22 கவி வரிகளில், 3ல் மிளகு என்றும், 19ல் மிளகினை கறி என்றும் சொல்லட்டுள்ளது. 

விசயம் புரிந்து கருத்தாடினால் நல்லது.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

விதண்டாவாதம் செய்வதற்கு என்றே இங்கு பலர் கிளம்பி, ஓடி வருகிறார்கள்..🤦‍♂️

இந்திய மத்திய அரசு, தெளிவாக கேரளா என்று சொல்கிறது. கொஞ்சமாவது தமிழன் வரலாறு புரிந்தால், சேர, சோழ பாண்டியர்களில், சேரர்கள் தான் இன்றய கேரளாகாரர்கள் என்பது புரியும். இதனையே மத்திய அரசு சொல்கிறது. அவர்களுக்கு பாடம் எடுக்க, நமக்கு பட்டுப்பாதை உதாரணம். 

அட. அட.... சரிதான்... 😁

கேரளத்தின் பேறாரின் கரையின் முசிறி துறைமுகம் ஊடாக மிளகு வியாபாரம் நடந்தது என்றும், சங்கத்தமிழ் நூல்களில், சுமார் 22 கவி வரிகளில், 3ல் மிளகு என்றும், 19ல் மிளகினை கறி என்றும் சொல்லட்டுள்ளது. 

விசயம் புரிந்து கருத்தாடினால் நல்லது.

படபடக்காதீர்கள் நாதம்😂, கேரளக் கரைக்கு வந்த அரேபிய வியாபாரிகளால் மிளகு போயிருக்கலாம். ஆனால், கேரளக்கரை மிளகு தான் எகிப்தில் கிடைத்த மிளகென்று எப்படிப் பாலம் போட்டீர்கள்? முடியாதல்லவா? அதனால் தான் நிபுணர்கள் இதை மேலும் ஆராயும் வரை "தமிழரின் மிளகென்று சொல்ல முடியாது" என்றேன்.
 
நேரடியாக அறியக் கூடிய ஒரு முறை இருக்கிறது. அந்த ராம்சிஸ் 2 இன் மூக்கில் கிடைத்த கரு மிளகை DNA sequencing செய்யலாம். அப்படியே 2600 ஆண்டுகள் கடந்து கீழடியில் கிடைக்கப் போகும் மிளகின் கரு அமிலத்தையும் DNA sequencing செய்யலாம். இரண்டையும் SNP அடிப்படையில் ஒப்பிட்டால், ஒற்றுமை தெரிந்து விடும். இப்படி யாராவது செய்திருக்கிறார்களா? செய்யவில்லையென்றால் செய்ய வேண்டும். அது வரை கிழக்கிலிருந்து சென்ற மிளகு என்று மட்டும் தான் சொல்ல முடியும், மேலதிக எதுவும் கற்பனையாக மட்டுமே இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட, இதை இந்திய மத்திய அரசுக்கு சொல்லி விட்டால், ஆயிரம் பொற்காசு கிடைக்குமே. 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

3ம் ராமெசேஸ் மன்னரின், அந்த மம்மியின் பதப்படுத்தலில், அதனது மூக்கினுள் மிளகு திணிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

நான் சொல்லல.....சிங்கனுக்கு உறைப்பு விசயத்திலை ஆரோ செய்வினை செய்து போட்டாங்கள் எண்டு :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

நான் சொல்லல.....சிங்கனுக்கு உறைப்பு விசயத்திலை ஆரோ செய்வினை செய்து போட்டாங்கள் எண்டு :rolling_on_the_floor_laughing:

எழுதும் போது, நினைத்தேன். வந்து இப்படி எழுதுவீர்கள் எண்டு... 😁

உங்கை ஒருத்தர், மிளகுக்கே DNA செய்வினை, சூனியம் செய்யனுமாம் எண்டு ஐடியா சொல்லுறாரே... 😜

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

எழுதும் போது, நினைத்தேன். வந்து இப்படி எழுதுவீர்கள் எண்டு... 😁

உங்கை ஒருத்தர், மிளகுக்கே DNA செய்வினை, சூனியம் செய்யனுமாம் எண்டு ஐடியா சொல்லுறாரே... 😜

அந்த மனிசனை விடுங்கோ....அந்தாள் செவ்வாய் கிரகத்துக்கே போய் ஆராய்ச்சி செய்யுதுட்டு வந்த ஆள் மாதிரி கதைப்பார் கண்டியளோ :rolling_on_the_floor_laughing:

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

அந்த மனிசனை விடுங்கோ....அந்தாள் செவ்வாய் கிரகத்துக்கே போய் ஆராய்ச்சி செய்யுதுட்டு வந்த ஆள் மாதிரி கதைப்பார் கண்டியளோ :rolling_on_the_floor_laughing:

இந்த விசயமெல்லாம் செவ்வாய்க்குப் போகாமலே பேசக் கூடிய விடயங்கள் தான், ஆனால் நீங்கள் கையில் இருக்கிற போனுக்குள்ளேயே போய்த்தேட மாட்டியளே? அப்ப நாதம் காதில் பூ வைப்பாரா இல்லையா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

நான் சொல்லல.....சிங்கனுக்கு உறைப்பு விசயத்திலை ஆரோ செய்வினை செய்து போட்டாங்கள் எண்டு :rolling_on_the_floor_laughing:

முதலில் இங்கிருக்கும் ஆளுக்கு யாராவது ஏதாவது செய்யுங்க மந்திரித்து விட்ட நாம்பன் கண்டு போல் ஓடி ஓடி  எல்லா திரிக்குள்ளு,ம்  புகுந்து பாடம் எடுக்கிறார் யுவர் ஆனர் .🐵

Edited by பெருமாள்
  • Haha 3
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முதலில் இங்கிருக்கும் ஆளுக்கு யாராவது ஏதாவது செய்யுங்க மந்திரித்து விட்ட நாம்பன் கண்டு போல் ஓடி ஓடி  எல்லா திரிக்குள்ளு,ம்  புகுந்து பாடம் எடுக்கிறார் யுவர் ஆனர் .🐵

அது பரவாயில்லை.... மிளகு தமிழர்களிடம் மட்டுமே இருந்தது என்று பிபிசி முதல் ஏபிசி வரை டாக்குமெண்டரி போடுகினம்.

பண்டைய தமிழ் மூவேந்தர்களில் சேரரின் வழித்தோன்றலான மலையாளிகள். இந்த அஞ்சாப்பு விளக்கமே இல்லாமல், தமிழர் மிளகு எண்டு போட்டிருக்கே எண்டால் எனனத்தை சொல்லுறது?

தமிழகம் எங்கும் விளைந்த மிளகு, அரேபியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சீனர்கள், மலேயர், சியாமியர் (தாய்) என்று, தமிழகத்துக்கு வந்து மிளகு உள்பட வாசனை திரவியங்கள் வாங்க வந்துள்ளனர். கொலம்பஸ் கிளம்பியதும்,  போர்த்துக்கேயர் வந்ததும், மிளகை தேடி. 

இதனை, இந்திய அரசின் தளம் சொல்கிறது என்றாலும், பெரிசு, முசிறிக்கொண்டு விதண்டாவாதம் செய்யிறன், முயலுக்கு மூண்டு கால் தான் என்று நிக்குதப்பா. 😅

சீனாக்காரர், அல்லைபிட்டியில், தாங்கள் 11ம் நூறாண்டில் அங்கை தங்கி இருந்து யாவாரம் பார்த்தோம் எண்டு வந்து நிண்டு கிண்டினார்களே. இவர், அவையளிடம் மிளகு இருந்திருக்கலாமாம்.

மிளகின் பிரச்சனை, நாம் பாவிக்கும் அந்த மிளகு பருப்புகளை போட்டு விளைவிக்க முடியாது. அதுவே இவ்வளவு பேரும் தமிழரிடம் ஓடி வந்ததுக்கு காரணம். 

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முதலில் இங்கிருக்கும் ஆளுக்கு யாராவது ஏதாவது செய்யுங்க மந்திரித்து விட்ட நாம்பன் கண்டு போல் ஓடி ஓடி  எல்லா திரிக்குள்ளு,ம்  புகுந்து பாடம் எடுக்கிறார் யுவர் ஆனர் .🐵

பாவம் மனுசன் என்ன சோலியோ :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

அது பரவாயில்லை.... மிளகு தமிழர்களிடம் மட்டுமே இருந்தது என்று பிபிசி முதல் ஏபிசி வரை டாக்குமெண்டரி போடுகினம்.

பண்டைய தமிழ் மூவேந்தர்களில் சேரரின் வழித்தோன்றலான மலையாளிகள். இந்த அஞ்சாப்பு விளக்கமே இல்லாமல், தமிழர் மிளகு எண்டு போட்டிருக்கே எண்டால் எனனத்தை சொல்லுறது?

தமிழகம் எங்கும் விளைந்த மிளகு, அரேபியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சீனர்கள், மலேயர், சியாமியர் (தாய்) என்று, தமிழகத்துக்கு வந்து மிளகு உள்பட வாசனை திரவியங்கள் வாங்க வந்துள்ளனர். கொலம்பஸ் கிளம்பியதும்,  போர்த்துக்கேயர் வந்ததும், மிளகை தேடி. 

இதனை, இந்திய அரசின் தளம் சொல்கிறது என்றாலும், பெரிசு, முசிறிக்கொண்டு விதண்டாவாதம் செய்யிறன், முயலுக்கு மூண்டு கால் தான் என்று நிக்குதப்பா. 😅

சீனாக்காரர், அல்லைபிட்டியில், தாங்கள் 11ம் நூறாண்டில் அங்கை தங்கி இருந்து யாவாரம் பார்த்தோம் எண்டு வந்து நிண்டு கிண்டினார்களே. இவர், அவையளிடம் மிளகு இருந்திருக்கலாமாம்.

மிளகின் பிரச்சனை, நாம் பாவிக்கும் அந்த மிளகு பருப்புகளை போட்டு விளைவிக்க முடியாது. அதுவே இவ்வளவு பேரும் தமிழரிடம் ஓடி வந்ததுக்கு காரணம். 

😎ஆறாம் வகுப்பு பாசான நாதத்திற்கு இன்னும் நான் சொன்னது விளங்கவில்லை  (நான் அஞ்சாப்பு என்பதாலோ தெரியேல்ல!)

மூக்கில் இருந்த மிளகு எங்கிருந்தும் வந்திருக்கலாம். இட்லி , ரசம், சாம்பாரு, கறி, மிளகு எல்லாம் தமிழனுடையது என்று உரிமை கோர கோராவில் வரும் தகவல்கள் போதாது சீனியர் (ஆறாம் வகுப்பு, ஒரு லெவல் கூடவெல்லோ!😉).

எனவே, அந்த மூன்று ரசிகர்களின் காதிலயும் பூந்தோட்டம் வையுங்கள் - மிச்ச பேர் உங்களை விட பல கிளாசுகள் மேல் என்பதால் பார்த்து அணுகுங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

😎ஆறாம் வகுப்பு பாசான நாதத்திற்கு இன்னும் நான் சொன்னது விளங்கவில்லை  (நான் அஞ்சாப்பு என்பதாலோ தெரியேல்ல!)

மூக்கில் இருந்த மிளகு எங்கிருந்தும் வந்திருக்கலாம். இட்லி , ரசம், சாம்பாரு, கறி, மிளகு எல்லாம் தமிழனுடையது என்று உரிமை கோர கோராவில் வரும் தகவல்கள் போதாது சீனியர் (ஆறாம் வகுப்பு, ஒரு லெவல் கூடவெல்லோ!😉).

எனவே, அந்த மூன்று ரசிகர்களின் காதிலயும் பூந்தோட்டம் வையுங்கள் - மிச்ச பேர் உங்களை விட பல கிளாசுகள் மேல் என்பதால் பார்த்து அணுகுங்கள்! 

பூக்கூடை, பூந்தோட்டம் இருக்கட்டும். அடுத்தவர் காதில, வெறும் காத்தை ஊதாமல், தமிழரை தவிர வேறு யாரிடம், மிளகு இருந்தது எண்டதை ஆதாரத்தோட சொல்லுங்க.

அதை விட்டுட்ட, சாப்பாடு செமிக்க, சும்மா வேற யாரிடமாவது மிளகு இருந்திருக்கலாம் எண்டு அலம்பறை பண்ணப்படாது.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன்ரை சாப்பாடு பழஞ்சோறு மட்டும் தானா? ஓ மை காட்....:beaming_face_with_smiling_eyes:

யுவர் ஆனர் புட்டு என்னமாதிரி???? ஆர்ரை வழித்தோன்றல்  :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Golden tongue Mummy: தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.