Jump to content

தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும் – விக்னேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும் – விக்னேஸ்வரன்

தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும் என தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ள பேரணியை வரவேற்றார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றதை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

தன்னைப் பொறுத்தவரை 1958 இல் சுதந்திர தின அணிவகுப்பு அணியில் இணைந்ததாக குறிப்பிட்டார். அதன் பின் இதுவரை சுதந்திர தினங்களில் கலந்தகொள்வதில்லை. ஏனெனில் தமிழர்களுக்கு சுதந்திரம் இதுவரை கிடைக்கவில்லை. இனியும் எமக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே கலந்து கொள்ள முடியும் – என்றார்.

https://athavannews.com/2023/1322489

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தினத்தை சர்வதேச விருந்தாளிகளை அழைத்து வெகு விமரிசையாக கொண்டாட ஆண்டி நரி திட்டம். மறுபுறம் குடிக்க கஞ்சியில்லாமல் போராட்டம், அதைக்கலைக்க அதிரடிப்படை களமிறக்கம்.  சும்மா கலாய்க்கப்போகுது சுதந்திர தின விழா. எங்கோ இருந்து பாத்து அறிக்கை விட்டவர்கள், நேரடியாக கண்டு களிக்கப்போகிறார்கள் இலங்கையின் சுதந்திரத்தை! சில ராஜதந்திரிகள் தங்கள் வருகையை ரத்தும் செய்யலாம், பல போராட்ட ஏற்பாட்டாளர்கள் கைதும் செய்யப்படலாம். சுதந்திர தினம் கலக தினமாகலாம். இறப்புகள்.....?

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.