Jump to content

உடைந்தது தமிழரசுக்கட்சி?? தகப்பனை திட்டித்தீர்த்த மாவையின் மகன்!! கூட்டத்தில் பரபரப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உடைந்தது தமிழரசுக்கட்சி?? தகப்பனை திட்டித்தீர்த்த மாவையின் மகன்!! கூட்டத்தில் பரபரப்பு

4-26.jpg

இன்று காலை யாழ்பாணம் மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தொகுதி கிளைச் செயலாளர்களின் மாநாட்டில், வளமைக்கு மாறாக பரபரப்பு ஏற்பட்டதாகவும், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் மகன் அமுதன் ஆவேசம் கொண்டு கட்சியின் தலைமைக்கு எதிராக கொட்டித்தீர்த்துவிட்டதாகவும் மாநாட்டில் கலந்துகொண்ட பலர் தெரிவிக்கின்றார்கள்.

வழமையாகவே இதுபோன்ற தமிரசுக்கட்சியின் கூட்டங்களில் தலைவர் பேசுவார்.. அல்லது தன்னைப் பேச்சாளர் என்று சொல்லித்திரிகின்ற ‘முந்திரிக்கொட்டை’ பேசுவார்.. அல்லது எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் 200 வார்த்தைகளை புகுத்தி தனக்கும் விளங்காமல் மற்றவர்களுக்கும் புரியாமல் பேசுகின்ற சில பெரிசுகள் உளறுவார்கள்.அவ்வளவுதான் நடக்கும்.

மற்றவர்கள் ஒப்புக்கு ஓரிரண்டு வார்த்தைகளை உதிர்த்துவிட்டு, சிரிச்சுக்கொண்டு வீடு திரும்பி முகப்புத்தகத்தில அரசியல்செய்யத் தொடங்கிவிடுவார்கள்.

வளமைக்கு மாறாக இன்று நடந்த கூட்டத்தில் மாவையின் மகனும் தமிழரசுக்கட்சி இளைஞரணியின் முக்கியஸ்தருமான அமுதன் தந்தை என்றும் பார்க்காமல் கட்சியின் தலைமையை வெளுத்துவாங்கிவிட்டாராம்.

யாழ் மேயர் பதவிக்கு யாழ் வர்த்தகர் சங்கம் ஒரு நபரை சிபாரிசு செய்வதற்காக மாவையை அணுகியபொழுது, அதற்கு மாவை தமிழரசுக்கட்சியின் முந்திரிக்கொட்டையின் பெயரைக் கூறி ‘அவரிடம்தான் கேட்கவேண்டும்’ என்று கூறியதாகவும், அதனால் தமிழரசுக்கட்சியின் தலைமை மீது அதிருப்தியடைந்த யாழ் வர்த்தகர் சங்கம் வேறு கட்சியின் பக்கம் போய்விட்டதாகவும் சுட்டிக்காண்பித்த அமுதன், மாவையின் அந்த செயலை பகிரங்கமாகக் கண்டித்ததாக தெரியவருகின்றது.

ஓன்று ‘ஆம்’ என்று தலைமை பதில் கூறியிருக்கவேண்டும்.. அல்லாவிட்டால் ‘இல்லை’ என்று மறுத்திருக்கவேண்டும்.. இரண்டையும் செய்யாமல் எதற்காக கட்சியில் தீர்மாணிக்கும் பதவியெதனையும் வகிக்காத மற்றொருவர் மீது கைகாண்பித்தீர்கள்?’ என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

கட்சித் தலைமையின் பலவீனத்தைச் சுட்டிக்காண்பித்த அமுதன் , ‘கட்சி தொடர்ந்து இவ்வாறே வழிநடாத்தப்படுமாக இருந்தால், கட்சியைவிட்டு தான் உட்பட பல இளைஞர்களும் வெளியேறவேண்டி ஏற்படும்’ என்றும் எச்சரிக்கைவிடுத்தார்.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் கட்சிக்கு விரோதமாக ‘தமிழரசுக்கட்சியின் முந்திரிக்கொட்டை’ நடந்துகொண்ட விதங்கள் பற்றியும், அதற்கு மறைமுகமாக கட்சியின் தலைமை துணைபோவதுபற்றியும் விமர்சித்ததாகத் தெரியவருகின்றது.

இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சி இரண்டுபட்டு உடைந்து சந்திசிரித்து நிற்பதற்கு முந்திக்கொட்டையையும், கட்சியின் தலைமையையும் குற்றம்சுமத்தினார்கள்.

இன்று நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பருத்தித்துறைத் தொகுதி செயலாளரும், தென்மாராட்சித் தொகுதிச் செயலாளரும் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரியவருகின்றது.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் கூட்டம் முடிந்தபின்னர் தமக்குள் பேசிக்கொண்ட வாக்கியங்கள் இவைதான்:

‘தமிழசுக்கட்சி கிட்டத்தட்ட இரண்டாகப் பிளவடைந்துவிட்டது. கொழும்பில் இருந்து அந்த ‘முந்திரிக்கொட்டை எதற்காக அனுப்பப்பட்டாரோ அந்த வேலையை சரியாகச் செய்துமுடித்துவிட்டார். முதலில் கூட்டமைப்பை உடைத்துவிட்டு, கடைசியில தமிழரசுக்கட்சியையும் உடைத்துவிட்டார்.

 

https://akkinikkunchu.com/?p=236733

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கொழும்பில் இருந்து அந்த ‘முந்திரிக்கொட்டை எதற்காக அனுப்பப்பட்டாரோ அந்த வேலையை சரியாகச் செய்துமுடித்துவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோகசுவாமியின் அடியார்களால் “மகாவாக்கியங்கள்” என்று கூறப்படும் அவை வருமாறு:

எப்பவோ முடிந்த காரியம்
நாம் அறியோம்
ஒரு பொல்லாப்பும் இல்லை
முழுதும் உண்மை

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஊடக அறம் , தர்மம்.. பலம் ..பலவீனம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த எழுத்துமுறை

 உபயம் .......அக்கினிக்குஞ்.......சூ.  😀

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

புதிய ஊடக அறம் , தர்மம்.. பலம் ..பலவீனம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த எழுத்துமுறை

 உபயம் .......அக்கினிக்குஞ்.......சூ.  😀

😂👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kapithan said:

புதிய ஊடக அறம் , தர்மம்.. பலம் ..பலவீனம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த எழுத்துமுறை

 உபயம் .......அக்கினிக்குஞ்.......சூ.  😀

 

 

உண்மை  தான்

‘தமிழரசுக்கட்சியின் முந்திரிக்கொட்டை’ 

ஊடகங்கள் தமது அபிலாசைகளை  மக்கள் மீது திணிக்கக்கூடாது...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விசுகு said:

 

 

உண்மை  தான்

‘தமிழரசுக்கட்சியின் முந்திரிக்கொட்டை’ 

ஊடகங்கள் தமது அபிலாசைகளை  மக்கள் மீது திணிக்கக்கூடாது...

 

ஊடகங்களுக்கு பொறுப்பு அதிகம். நாகரீகமாக எழுதலாம். எங்கள் சமூகத்தில் பொறுப்பின்மை அதிகரித்துச் செல்வதற்கு இது நல்ல உதாரணம். 

chatbox ல் வாந்தி எடுப்பதைப்போல ஊடகங்கள் எழுத முடியாதல்லவா 😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

வழமையாகவே இதுபோன்ற தமிரசுக்கட்சியின் கூட்டங்களில் தலைவர் பேசுவார்.. அல்லது தன்னைப் பேச்சாளர் என்று சொல்லித்திரிகின்ற ‘முந்திரிக்கொட்டை’ பேசுவார்.. அல்லது எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் 200 வார்த்தைகளை புகுத்தி தனக்கும் விளங்காமல் மற்றவர்களுக்கும் புரியாமல் பேசுகின்ற சில பெரிசுகள் உளறுவார்கள்.அவ்வளவுதான் நடக்கும்.

இந்த ஒரு பந்தி போதும் .

அக்னிகுஞ்சு எல்லாவற்றையும் கொட்டை கொட்டையாக எழுதிவிட்டு

முந்திரிகொட்டையை யாரென்றே எழுதவே இல்லையே?

மாவையின் மகன் கட்சியை விட்டு பிரிந்து விட்டதாக அண்மையில்    @தமிழ் சிறிகூறியிருந்தாரே பொய்யா கோப்பாலு?

  • Haha 1
Link to comment
Share on other sites

புதிய ஆரம்பம் தேவை. தமிழரசுக்கட்சியின் தேவை தமிழ் மக்களுக்கு தேவை இல்லை என நினைக்கிறேன். இந்த உள்ளூராட்சி தேர்தலோடு மக்கள் இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுகிறேன். இளைஞர்களை உள்வாங்காத கட்சியும் தமிழ்மக்களுக்கு தேவை இல்லை.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

புதிய ஆரம்பம் தேவை. தமிழரசுக்கட்சியின் தேவை தமிழ் மக்களுக்கு தேவை இல்லை என நினைக்கிறேன். இந்த உள்ளூராட்சி தேர்தலோடு மக்கள் இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுகிறேன். இளைஞர்களை உள்வாங்காத கட்சியும் தமிழ்மக்களுக்கு தேவை இல்லை.

முந்திரிகொட்டை வந்த வேலை முடிஞ்சுதா சார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்த ஒரு பந்தி போதும் .

அக்னிகுஞ்சு எல்லாவற்றையும் கொட்டை கொட்டையாக எழுதிவிட்டு

முந்திரிகொட்டையை யாரென்றே எழுதவே இல்லையே?

மாவையின் மகன் கட்சியை விட்டு பிரிந்து விட்டதாக அண்மையில்    @தமிழ் சிறிகூறியிருந்தாரே பொய்யா கோப்பாலு?

தமிழரசு கட்சியில்… சுமந்திரன் என்ற ஒரு முந்திரி கொட்டைதான் இருக்கு.
மற்றது…பிலாக் கொட்டை. 😁

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

தமிழரசு கட்சியில்… சுமந்திரன் என்ற ஒரு முந்திரி கொட்டைதான் இருக்கு.
மற்றது…பிலாக் கொட்டை. 😁

 

இரண்டும் அலரிகொட்டை.

எல்லோரையும் கொல்லுது.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

மாவையின் மகன் கட்சியை விட்டு பிரிந்து விட்டதாக அண்மையில்    @தமிழ் சிறிகூறியிருந்தாரே பொய்யா கோப்பாலு?

@தமிழ் சிறிஅண்ணா இதை எனக்குத்தான் பதிலாக எழுதுதினவர்.

Refund please 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

@தமிழ் சிறிஅண்ணா இதை எனக்குத்தான் பதிலாக எழுதுதினவர்.

Refund please 🤣

No refund 
No exchange.

25 minutes ago, goshan_che said:

@தமிழ் சிறிஅண்ணா இதை எனக்குத்தான் பதிலாக எழுதுதினவர்.

Refund please 🤣

திரும்ப சேரும்போது  @தமிழ் சிறி க்கு சொல்லாமல் கொள்ளாமல் சேர்ந்துட்டார்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

முந்திரிகொட்டை வந்த வேலை முடிஞ்சுதா சார்?

கெதியில முடிந்துவிடும்போல் இருக்கிறது எல்லோரின் மவுனத்தையும் பாக்கும்போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

@தமிழ் சிறிஅண்ணா இதை எனக்குத்தான் பதிலாக எழுதுதினவர்.

Refund please 🤣

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

No refund 
No exchange.

திரும்ப சேரும்போது  @தமிழ் சிறி க்கு சொல்லாமல் கொள்ளாமல் சேர்ந்துட்டார்.

பதில் மேலே உள்ளது கோசான். 😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009க்கு பிற‌க்கு இல‌ங்கை செய்திக‌ள் வாசிப்ப‌து இல்லை ,

ஆனால் போர் நின்றும் ப‌ல‌ ம‌க்க‌ள் இப்ப‌வும் வ‌றுமையோடும் க‌ண்ணீரோடு வாழுகின‌ம்

ம‌க்க‌ளால் தேர்ந்தெடுக்க‌  ப‌ட்ட‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்த‌ மாதிரி தெரிய‌ வில்லை 

த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் கூட‌ ம‌க்க‌ளை வ‌றுமை இப்ப‌டி போட்டு  வாட்டின‌து கிடையாது 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன், @goshan_che கவனித்தீர்களா….
மீண்டும், மாவையின் மகனின் கோபத்திற்கு…. சுமந்திரன் தான் காரணம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

@ஈழப்பிரியன், @goshan_che கவனித்தீர்களா….
மீண்டும், மாவையின் மகனின் கோபத்திற்கு…. சுமந்திரன் தான் காரணம். 🤣

எங்கிருந்து ஆரம்பிக்கிறதோ அங்கு முடியும் முடிவுதான் சரியானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

எங்கிருந்து ஆரம்பிக்கிறதோ அங்கு முடியும் முடிவுதான் சரியானது.

எனக்கு…. இந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது.
தாயக மக்கள் என்ன தீர்ப்பை கொடுக்கிறார்கள் என பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

@ஈழப்பிரியன், @goshan_che கவனித்தீர்களா….
மீண்டும், மாவையின் மகனின் கோபத்திற்கு…. சுமந்திரன் தான் காரணம். 🤣

ஓம்…மாவையின் மகன் ரவிராஜின் மருமகன் என்பது உண்மையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு…. இந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது.
தாயக மக்கள் என்ன தீர்ப்பை கொடுக்கிறார்கள் என பார்ப்போம்.

மக்கள் தீர்ப்பு கொடுத்தாலும், தில்லு முல்லு பண்ணி 
வெக்கம் இல்லாமல்  மாத்தியமைச்சுப்போடுவதில் வல்லவர்கள். வேப்பிலை அடிச்சுத்தான் இவர்களை கலைக்கவேணும். இவர்களது பங்காளிகள் இவர்களது குரைப்புக்கு பதில், விளக்கம் கொடுக்காமல் கடுமையாக, உண்மையாக உழைக்கவேண்டும்!

2 minutes ago, goshan_che said:

ஓம்…மாவையின் மகன் ரவிராஜின் மருமகன் என்பது உண்மையா ?

இதுவரையில் தேடியறியாமலே இருக்கிறீர்களா? இல்லை பரிசோதிக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

ஓம்…மாவையின் மகன் ரவிராஜின் மருமகன் என்பது உண்மையா ?

அப்படித்தான் கேள்விப் பட்டேன்.
மாமனிதர் ரவிராஜின் செல்வாக்கை வைத்து,  
மாவை… தனது மகனை, அரசியலில் நிறுத்த…
ரவிராஜ் வீட்டில் திருமண சம்பந்தம் செய்து கொண்டதாக சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

ஓம்…மாவையின் மகன் ரவிராஜின் மருமகன் என்பது உண்மையா ?

இது  தெரியாமலா உலக அரசியலிலும் ஈழத்து அரசியலிலும் இங்கே கருத்து எழுதுகின்றீர்கள்?!?!?!?!?!?

“சேம்.. சேம் பப்பி சேம்”   :bl:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, satan said:

மக்கள் தீர்ப்பு கொடுத்தாலும், தில்லு முல்லு பண்ணி 
வெக்கம் இல்லாமல்  மாத்தியமைச்சுப்போடுவதில் வல்லவர்கள். வேப்பிலை அடிச்சுத்தான் இவர்களை கலைக்கவேணும். இவர்களது பங்காளிகள் இவர்களது குரைப்புக்கு பதில், விளக்கம் கொடுக்காமல் கடுமையாக, உண்மையாக உழைக்கவேண்டும்!

இதுவரையில் தேடியறியாமலே இருக்கிறீர்களா? இல்லை பரிசோதிக்கிறீர்களா?

இல்லை…இது வரை கேள்வி படவில்லை. சிறி அண்ணா இன்னொரு திரியில் சொல்லும் வரை.

23 minutes ago, தமிழ் சிறி said:

அப்படித்தான் கேள்விப் பட்டேன்.
மாமனிதர் ரவிராஜின் செல்வாக்கை வைத்து,  
மாவை… தனது மகனை, அரசியலில் நிறுத்த…
ரவிராஜ் வீட்டில் திருமண சம்பந்தம் செய்து கொண்டதாக சொன்னார்கள்.

நன்றி அண்ணா.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.