Jump to content

வட மாநிலத்தவர்கள் சேலம் தொழிலாளியை கட்டி வைத்து 2 நாட்களுக்கு அடித்ததாக குற்றச்சாட்டு - 7 பேர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வட மாநிலத்தவர்கள் சேலம் தொழிலாளியை கட்டி வைத்து 2 நாட்களுக்கு அடித்ததாக குற்றச்சாட்டு - 7 பேர் கைது

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பி.சுதாகர்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
கிருஷ்ணகிரி அருகே தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மாதிரி படம்

சூளகிரி அருகே திருடன் எனக் கூறி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியைக் கட்டி வைத்து 2 நாட்களாக சரமாரியாகத் தாக்கிய குற்றச்சாட்டில் 5 வட மாநில தொழிலாளர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னாறு பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பதப்படுத்தும் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டட வேலைக்கான ஒப்பந்ததாரராக ஓசூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் எடுத்து நடத்தி வருகிறார்.

அங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக துணை ஒப்பந்தத்தை எடுத்து, பிரபாகரனுடன் பொங்கலுக்கு முன்பு வேலை செய்துள்ளனர். மீதி வேலை இருந்த நிலையில், இன்னும் வேலை தொடங்கவில்லை.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கந்தனூரில் வசிக்கும் தனது அண்ணன் மகன் பிரபாகரன் (33) என்பவரிடம், சின்னாறில் வேலை உள்ளதாகவும் போய் வேலை பார்க்குமாறு கூறியுள்ளார்.

"கட்டிப் போட்டு தாக்கினார்கள்"

அதைத் தொடர்ந்து பிரபாகரன் சின்னாறுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி, இரவு அந்தப் பகுதியில் உள்ள கம்பி வேலி அருகில் பிரபாகரன் அமர்ந்திருந்தார். அந்த நேரம் ஏலகிரியைச் சேர்ந்த, மேற்பார்வையாளர் தங்கராஜ் மற்றும் வட மாநில இளைஞர்கள் 5 பேர் வந்தனர்.

அவர்கள் பிரபாகரனை பார்த்து இரும்பு பொருட்களைத் திருட வந்தவர் என நினைத்து கயிற்றால் கட்டி போட்டு சரமாரியாக தாக்கியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து கட்டட உரிமையாளருக்கு போன் செய்து தகவல் தெரிவித்ததாகவும் கூறினர்.

வீடியோவை அனுப்பி மிரட்டல்

பிரபாகரனை அந்தப் பகுதியில் உள்ள அறையில் கட்டிப் போட்டு இரும்புக் கம்பியால் அவர்கள் சரமாரியாகத் தாக்கியதாகவும் அதில் பிரபாகரன் படுகாயம் அடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

மேலும் அவரிடம் இரும்புப் பொருட்களைக் கொடுக்கவில்லை என்றால், கொலை செய்து விடுவதாக அவர்கள் மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. தாக்குவதை வீடியோவாக எடுத்து, ஊத்தங்கரையில் உள்ள நாராயணனுக்கு அனுப்பி வைத்து, "அவர் எடுத்துச் சென்ற இரும்புப் பொருட்களை கொடு, இல்லாவிட்டால் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடு", என மிரட்டியதாக பிபிசி தமிழிடம் பேசிய நாராயணன் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து நாராயணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தானும், தனது அண்ணன் மகன் பிரபாகரனும் ஏஆர்சி கட்டுமான நிறுவனத்தில் பொங்கலுக்கு முன்பு வரை வேலை பார்த்ததாக" கூறினார். மேலும், "கடந்த 27ஆம் தேதி சென்ற பிரபாகரனை காணவில்லை என்பதால் 28ஆம் தேதி தேடியதாகவும்," கூறினார்.

அவர், "கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில் பிரபாகரனை, கட்டிப்போட்டு, வட இந்தியர்கள் தாக்கும் வீடியோவை எனது கைப்பேசிக்கு ஏ.ஆர்.சி கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியிலிருந்து அனுப்பி வைத்தனர்.

கம்பெனியிலிருந்து தொலைபேசியில் என்னை அழைத்து ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான கம்பியை பிரபாகரன் திருடிவிட்டதாகவும், அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுமாறும் கூறினார்கள். இது தொடர்பாக நேற்று காலை 11 மணியளவில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நான் புகாரளித்தேன்," என்று தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அருகே தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புகாரின் அடிப்படையில் சூளகிரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தன்னுடைய அண்ணன் மகனை நேற்று மதியம் 2 மணிக்கு மீட்டுக்கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.

"இரண்டு நாட்கள் உணவு அளிக்காமல், கை, கால்களைக் கட்டிபோட்டு தொங்கவிட்டு, அங்கு பணிபுரிந்த வட இந்தியர்கள் அடித்துள்ளனர். வலது கால், கை முறிவு ஏற்பட்டுள்ளது. இடது கண்ணிலும் அடிபட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக" காவல்துறை அதிகாரிகளிடம் பிபிசி பேசியபோது தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து சூளகிரி காவல் துறையினர் பிபிசி தமிழிடம் கூறும்போது, "மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்திரவின் பேரில், சின்னாறிலுள்ள ஏஆர்சி கம்பெனியிலுள்ள கண்டெய்னர் அறை ஒன்றில் கயிற்றால் கட்டி, அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரபாகரனை மீட்டதாக" தெரிவித்தனர்.

மேலும், அவரை ஆம்புலென்ஸ் வேனில் ஏற்றி சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக பிரபாகரனிடம் புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்து ஒப்பந்ததாரர் ஓசூர் சப்தகிரி நகரைச் சேர்ந்த மணி (47), மேற்பார்வையாளர் தங்கராஜ்(33), உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷியாம் சுந்தர்(46), பாலேந்தர்(28), சுசில்குமார்(24), அர்ஜூன்(24) ,அசாம் மாநிலத்தைச் சேர்ந்த திப்பந்தர் சோக்கியா(22) ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் மீது கொலை மிரட்டல், தாக்குதல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

https://www.bbc.com/tamil/articles/c6p82kd0ydlo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

சூளகிரி அருகே திருடன் எனக் கூறி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியைக் கட்டி வைத்து 2 நாட்களாக சரமாரியாகத் தாக்கிய குற்றச்சாட்டில் 5 வட மாநில தொழிலாளர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னாறு பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பதப்படுத்தும் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டட வேலைக்கான ஒப்பந்ததாரராக ஓசூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் எடுத்து நடத்தி வருகிறார்.

தமிழனுக்கு வேற்று மாநிலத்தில் தான் அடி என்றால் தமிழ்நாட்டுக்குள்ளேயே அடி விழுகுதா?

நாங்கள் திராவிடர்களடா எவ்வளவு அடித்தாலும் வாங்குவோம்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழனுக்கு வேற்று மாநிலத்தில் தான் அடி என்றால் தமிழ்நாட்டுக்குள்ளேயே அடி விழுகுதா?

நாங்கள் திராவிடர்களடா எவ்வளவு அடித்தாலும் வாங்குவோம்.

தமிழ் நாட்டில் 35 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் உள்ளார்களாம்.
இன்னும் ரயிலில் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் பட்டால் தான் திருந்துவான்☹️

Link to comment
Share on other sites

Gurugram போன்ற வடபகுதி நகரங்களில் ஏராளமான தமிழர்கள் ஐரி நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்.

ஆளுக்காள் அடிக்கத் தொடங்கினால் இருவருக்குமே பாதிப்பு. நீதித்துறையும் காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, இணையவன் said:

Gurugram போன்ற வடபகுதி நகரங்களில் ஏராளமான தமிழர்கள் ஐரி நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்.

ஆளுக்காள் அடிக்கத் தொடங்கினால் இருவருக்குமே பாதிப்பு. நீதித்துறையும் காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழர்கள் அடிக்கவில்லை அண்ணா, காவல்துறை மூலமாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தான் செய்திகள் வருகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

தமிழ்நாட்டில் தமிழர்கள் அடிக்கவில்லை அண்ணா, காவல்துறை மூலமாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தான் செய்திகள் வருகின்றன.

அப்படியொரு நிகப்பும் இருக்கா  உங்களுக்கு?

தமிழனுக்கு அடி  வாங்கித்தான் பழக்கம்

அது வெளியிலும் உள்ளிலும்?☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு காவல் துறை அசமந்தமாக இருந்தால் வடவர் கள் மீது  கலவரம் உருவாகும் ஜல்லிக்கட்டுக்கு பொங்கினது உலகம் முழுக்க தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

அப்படியொரு நிகப்பும் இருக்கா  உங்களுக்கு?

தமிழனுக்கு அடி  வாங்கித்தான் பழக்கம்

அது வெளியிலும் உள்ளிலும்?☹️

அண்ணா இப்ப தமிழர்கள் கையறு நிலையில் இருப்பதால் விவேகத்துடன் நடப்பதே நல்லது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

அண்ணா இப்ப தமிழர்கள் கையறு நிலையில் இருப்பதால் விவேகத்துடன் நடப்பதே நல்லது.

 

எத்தனை  வருசமா இந்த  விவேகத்தை  பார்க்கிறம்

ரசிக்கிறம்

போற்றுகிறம்...

அப்படியே கடலில் இறக்கிவிடும்போதும் விவேகம் தொடரட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

 

எத்தனை  வருசமா இந்த  விவேகத்தை  பார்க்கிறம்

ரசிக்கிறம்

போற்றுகிறம்...

அப்படியே கடலில் இறக்கிவிடும்போதும் விவேகம் தொடரட்டும்

சாணக்கியர் சொன்னது "நம்மிடம் சிந்திக்கும் அறிவு இருக்கிறது, நம்மிடம் நம்பிக்கை இருக்கிறது, நம்மிடம் உறுதி இருக்கிறது, காரியம் முடியும் வரை காத்திருக்கும் பொறுமையும் இருக்கிறது. இன்று நாம் தனியர்கள், இது போலவே நாம் கடைசி வரை இருந்து விடப்போவதில்லை. எதெல்லாம் இப்போது நம்மிடம் இல்லை என்று சொல்கிறோமோ அதெல்லாம் இனியும் இல்லாமலேயே போய்விடும் என்று அர்த்தம் இல்லை. இல்லாதவைகளை அறிவுடையவன் பெற்றுக் கொள்ள முடியும், எல்லாவற்றிற்கும் முயற்சிகள் தேவை. அதைச் செய்யத் தயாராவோம்."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் என்ற காட்டு தீயை பற்றவைக்க கூடிய பொறி.

வடமாநில கட்சிகளுடன் குறுக்கு சால் ஒட்டாமல், இதய சுத்தியாக தமிழ் தேசிய அரசியலை கைகொள்ளுபவர்கள், இப்போ இந்த இடத்துக்கு போய் அதகளம் பண்ணி இருப்பார்கள். 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

சாணக்கியர் சொன்னது "நம்மிடம் சிந்திக்கும் அறிவு இருக்கிறது, நம்மிடம் நம்பிக்கை இருக்கிறது, நம்மிடம் உறுதி இருக்கிறது, காரியம் முடியும் வரை காத்திருக்கும் பொறுமையும் இருக்கிறது. இன்று நாம் தனியர்கள், இது போலவே நாம் கடைசி வரை இருந்து விடப்போவதில்லை. எதெல்லாம் இப்போது நம்மிடம் இல்லை என்று சொல்கிறோமோ அதெல்லாம் இனியும் இல்லாமலேயே போய்விடும் என்று அர்த்தம் இல்லை. இல்லாதவைகளை அறிவுடையவன் பெற்றுக் கொள்ள முடியும், எல்லாவற்றிற்கும் முயற்சிகள் தேவை. அதைச் செய்யத் தயாராவோம்."

 

பாவம்  சாணக்கியர்  உங்களிடம்  மாட்டிக்கொண்டார்

இப்ப சாணக்கியர்  இருந்தாலும் காந்தி  இருந்தாலும்  திருப்பி  அடி என்பது  தான் அவர்களின்  தாரகமாக  இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன‌ கிழ‌மையும் ஏதோ த‌மிழ் இளைஞ‌ர்க‌ளை வ‌ட‌ நாட்ட‌வ‌ர்க‌ள் தாக்க‌ முய‌ன்ற‌ போது

த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் ஓடினார்க‌ள் என்று செய்திக‌ள் வ‌ந்த‌து

 

எப்ப‌டி அடிச்சாலும் வ‌லிக்காது போல் ந‌டிக்கும் திர‌ன் த‌மிழ‌க‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் தான் தெரியும் 😏😡

 

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.