Jump to content

இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமனற் உறுப்பினர் எம்.எ சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரை எமது செய்திசேவை தொடர்புகொண்ட போதும் அது பயனளிக்கவில்லை.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வீட்டிற்கு இது தொடர்பில் எமது செய்திச்சேவை தொடர்பு கொண்ட போது அவரது மகன் கருத்து தெரிவித்திருந்தார்.

இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி | Sampanthan Colombo Hospital

“சம்பந்தன் அவர்களை வழமையாக வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்யும் வைத்தியர்கள் அவரது உடல்நிலை பலவீனப்பட்டுள்ளமையால் அவரை கட்டாயம்  இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார். 

எனவே ஐயா தற்போது கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருதாக” தெரிவித்தார்.

இரா.சம்பந்தனுக்கு தற்போது 90 வயதினை எட்டியுள்ள நிலையில் வயோதிபம் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளையும் புறக்கணித்திருந்தார்.

எனினும் அண்மையில் ரணில் விக்ரமசிங்கவுடனான இனப்பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

https://tamilwin.com/article/sampanthan-colombo-hospital-1675170911

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமனற் உறுப்பினர் எம்.எ சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரை எமது செய்திசேவை தொடர்புகொண்ட போதும் அது பயனளிக்கவில்லை.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வீட்டிற்கு இது தொடர்பில் எமது செய்திச்சேவை தொடர்பு கொண்ட போது அவரது மகன் கருத்து தெரிவித்திருந்தார்.

இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி | Sampanthan Colombo Hospital

“சம்பந்தன் அவர்களை வழமையாக வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்யும் வைத்தியர்கள் அவரது உடல்நிலை பலவீனப்பட்டுள்ளமையால் அவரை கட்டாயம்  இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார். 

எனவே ஐயா தற்போது கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருதாக” தெரிவித்தார்.

இரா.சம்பந்தனுக்கு தற்போது 90 வயதினை எட்டியுள்ள நிலையில் வயோதிபம் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளையும் புறக்கணித்திருந்தார்.

எனினும் அண்மையில் ரணில் விக்ரமசிங்கவுடனான இனப்பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

https://tamilwin.com/article/sampanthan-colombo-hospital-1675170911

உள்ளூராட்சி தேர்தல் வருகின்ற படியால்….
சம்பந்தனை கொண்டு போய் ஆஸ்பத்திரியிலை சேர்த்துப் போட்டு,
அனுதாப வாக்கு எடுக்கலாம் என்று திட்டம் போட்டு இருப்பார்கள்.
உந்தப் பாச்சா… பலிக்காது. உதைப் போல பல ஜில்மால் விளையாட்டுக்களை பாத்திட்டம்.
தமிழரசு கட்சி… கட்டுக்காசும் கிடைக்காமல் மண் கவ்வுவது உறுதி.
அதுக்குப் பிறகுதான்…. சம்பந்தன் ஐயாவுக்கு, உண்மையான வருத்தம் வரும்.

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரி கேட்டிருக்கும் .அய்யா இந்தமுறை சுதந்திரநாளில் கொடிபிடித்து அசைக்கவேணும்..இதைச் செய்யாவிட்டால் கொழும்பு வீடுகாணி எல்லாம் எடுத்திடுவன்....அய்யா பயந்திட்டார்...அதுதான் மெடிக்கல் லீவு அடிச்சிட்டார்..🙃

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்துக்கு கறுப்பு கொடி பறக்க போகுது போல.

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களா சிங்களமா என முடிவெடுக்கும் சந்தர்பங்களிலெல்லாம்  ஐயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது வழமை, இது ஒன்றும் புதிதல்ல. என்ன.... முந்தி இந்திய தைத்தியசாலையில் போய் படுப்பவர் இப்போ அதுக்கு முடியாமல் இருக்கிறார். கருணாநிதியாரும் அவரது கடைசி அரசியற்காலத்தில், இதுதான் நான் தேர்தலில் நிற்கும் கடைசித்தருணம் என்று மக்களிடையே அனுதாப அலையை உருவாக்கி வென்றவர் கண்டியளோ. ஆடி ஓடி திரியும் காலத்திலேயே சாதிக்காதவர் இனிமேற்தான் சாதிக்கப்போறார் என காத்துக்கிடக்குது தமிழினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சுதந்திர தினத்துக்கு கறுப்பு கொடி பறக்க போகுது போல.

தமிழரசுக்கட்சி வீட்டில் கூட பறக்காது. 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

உள்ளூராட்சி தேர்தல் வருகின்ற படியால்….
சம்பந்தனை கொண்டு போய் ஆஸ்பத்திரியிலை சேர்த்துப் போட்டு,
அனுதாப வாக்கு எடுக்கலாம் என்று திட்டம் போட்டு இருப்பார்கள்.
உந்தப் பாச்சா… பலிக்காது. உதைப் போல பல ஜில்மால் விளையாட்டுக்களை பாத்திட்டம்.
தமிழரசு கட்சி… கட்டுக்காசும் கிடைக்காமல் மண் கவ்வுவது உறுதி.
அதுக்குப் பிறகுதான்…. சம்பந்தன் ஐயாவுக்கு, உண்மையான வருத்தம் வரும்.

1 hour ago, satan said:

மக்களா சிங்களமா என முடிவெடுக்கும் சந்தர்பங்களிலெல்லாம்  ஐயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது வழமை, இது ஒன்றும் புதிதல்ல. என்ன.... முந்தி இந்திய தைத்தியசாலையில் போய் படுப்பவர் இப்போ அதுக்கு முடியாமல் இருக்கிறார். கருணாநிதியாரும் அவரது கடைசி அரசியற்காலத்தில், இதுதான் நான் தேர்தலில் நிற்கும் கடைசித்தருணம் என்று மக்களிடையே அனுதாப அலையை உருவாக்கி வென்றவர் கண்டியளோ. ஆடி ஓடி திரியும் காலத்திலேயே சாதிக்காதவர் இனிமேற்தான் சாதிக்கப்போறார் என காத்துக்கிடக்குது தமிழினம். 

 

வாக்குக்காக சாகடித்தாலும் சாகடிப்பார்கள். ஏனென்றால் அரசியல் உலகம் அப்படி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

வாக்குக்காக சாகடித்தாலும் சாகடிப்பார்கள். ஏனென்றால் அரசியல் உலகம் அப்படி

“அண்ணன் எப்ப போவான், திண்ணை எப்ப காலியாகும்” என்று பார்த்துக் கொண்டிருக்கும்..
சம்பந்தனே கொண்டு வந்து சேர்த்த… அவரின் அரசியல் வாரிசு,
சுத்துமாத்து திலகம்… செய்தாலும் செய்யும். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு ஒரு நல்ல செய்தி!திருகோணமலைக்கு ஒரு செயற்படக்கூடிய குறைந்தது பாராளுமன்றத்துக்குப் போய் கையொப்பம் போட்டுவிட்டு வரக்கூடிய ஒரு பிரதிநிதி கிடைக்க வாய்ப்பிருக்கு. 
அதுக்கு மாவை விடுவாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

“அண்ணன் எப்ப போவான், திண்ணை எப்ப காலியாகும்” என்று பார்த்துக் கொண்டிருக்கும்..
சம்பந்தனே கொண்டு வந்து சேர்த்த… அவரின் அரசியல் வாரிசு,
சுத்துமாத்து திலகம்… செய்தாலும் செய்யும். 😂

சம்பந்தன் இருக்கேக்கையே இவ்வளவு ஆட்டம் என்றால்.....சம்பந்தன் இல்லாவிட்டால் ஒரே கூத்துதான் :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலை இருப்பதாற்த்தான் வாலாடுகிறது. தலை அடங்கிவிட்டால் வால் தானாக முடங்கிவிடும். ஆனால் எல்லோரும் சிங்களத்தின் தாளத்திற்கு ஆடுகிறார்கள். அசைய முடியா நிலையில் நோயில் படுத்திருக்கும் ஒரு ஜீவன் தன் எஜமானைக்கண்டதும் தலையைத் தூக்க முடியாவிட்டாலும் வாலை மெதுவாக அசைக்க முற்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரா.சம்பந்தன் வீடு திரும்பினார்

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரா.சம்பந்தன் வீடு திரும்பியுள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதேவேளை சுகயீனம் காரணமாக வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட இரா.சம்பந்தன் ஒருசில நாட்களில் வீடு திரும்புவார் என குடும்பத்தினர் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)

 

http://www.samakalam.com/திடீர்-சுகயீனம்-காரணமாக-2/

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.