Jump to content

மானிப்பாயில் லொறியை திருடியவர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாயில் லொறியை திருடியவர் கைது

By NANTHINI

01 FEB, 2023 | 12:31 PM
image

 

(எம்.வை.எம்.சியாம்)

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் லொறி சாரதியை அச்சுறுத்தி, லொறியை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அத்துடன் இச்சம்பவத்தோடு தொடர்புடைய நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

லொறி சாரதி லொறியை நிறுத்தி தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும்போது அவ்விடத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் சாரதியை பயமுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான முறைப்பாட்டின் பேரில் திருடப்பட்ட லொறியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரை மானிப்பாய் பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர் 33 வயதுடைய ஆனைக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

மேலும், சந்தேக நபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில்,  மானிப்பாய் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/147173

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மடையன் போயும் போயும் லாரியை திருடியுள்ளான்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

மடையன் போயும் போயும் லாரியை திருடியுள்ளான்.

 கிணத்தையே இரவோட இரவாய் தூக்கின எங்களுக்கு லொறி எம்மாத்திரம்????   :hurra:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 கிணத்தையே இரவோட இரவாய் தூக்கின எங்களுக்கு லொறி எம்மாத்திரம்????   :hurra:

சரி
கிணறுகாவி என்று பெயர் கொடுத்தது போல

லொறிகாவி என்று பெயர் வைத்து விட்டால் போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருபாலை வீதி, இராசபாதை வீதி, மானிப்பாய் சங்குவேலி சண்டிலிப்பாய் வயல்வெளி பாதை.. 

இந்த வழிகளால் இரவு பயணம் செய்வது இப்பொழுது நல்லதில்லை.. எந்தப்பக்கத்தால வந்து எதைப் பறிப்பார்கள் எனத் தெரியாது.. 

பத்திரிகைகளில் ஓட ஓட வாள்வெட்டும், வழிப்பறியும்தான் செய்தி.. எரிச்சலும் கவலையுமே அதிகம்

 

  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

சரி
கிணறுகாவி என்று பெயர் கொடுத்தது போல

 

அது ஏழாலை எல்லோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அது ஏழாலை எல்லோ ?

ஓமோம்.

8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இருபாலை

அம்மா தாயே நம்ம ஊரம்மா.

ரொம்ப வெருட்டாதேங்கோ.

  • Haha 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.