Jump to content

இந்திய வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு படைகளின் பிரதானியுடன் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சந்திப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

 

(எம்.மனோசித்ரா)

ர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவிகளை பெற்றுக்கொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பின்னணியில், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பில் மீண்டும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் ஆகியோருக்கிடையில் நேற்று (ஜன. 31) செவ்வாய்கிழமை டில்லியில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இரு வாரங்களுக்குள் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

0.jpg

இச்சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெய்ஷங்கர், இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுடன் பயனுள்ள சந்திப்பு இடம்பெற்றது. எனது சமீபத்திய இலங்கை விஜயத்தை மறுபரிசீலனை செய்து புரிந்துகொள்ளல்களை மேம்படுத்துவதாக இந்த சந்திப்பு அமைந்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். 

குறிப்பாக, இந்த சந்திப்பின்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவிகளை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை முயற்சித்து வரும் பின்னணியில், இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான இருதரப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் (இந்து சமுத்திர பிராந்தியம்) புனித் அகர்வால் மற்றும் இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் நிலுக கதுருகமுவ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.  

அதேவேளை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடந்த திங்களன்று இந்திய பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் அனில் சௌஹானையும் டில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இரு நாடுகளின் பாதுகாப்பு படைகளுக்கு இடையே தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் பாதுகாப்பு நலன்களை பகிர்ந்துகொள்வது குறித்து சுமுகமான கலந்துரையாடல் இதன்போது நடைபெற்றது. 

உயர்ஸ்தானிகர் மொரகொட, இலங்கையின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பல ஆண்டுகளாக உலகத்தரம் வாய்ந்த தொழில்முறை பயிற்சிகளை வழங்கிய இந்திய படைகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதானியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு படைகளின் பிரதானியுடன் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சந்திப்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மொரகொட...அமெரிக்காவில்..புஸ் கட்சி ஆண்டால் அவருதான் அமெரிக்க தூதுவர்..எங்கையோ ஒரு அமெரிக்கன் சம்பந்தியாம் ..இப்ப இந்தியாவில்..அங்கையும் யாருடைய சம்பந்தியாம்...ஆனால் போற இடத்தில் காரியம் சாதிச்சு விடுவான் மனிசன்..என்ன மாய் மாலமோ...12  ம் 13 ம் அமுல் படுத்துவதில் கில்லாடி போல..இங்கை ஜெயசங்கர் பதுங்குது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இந்த மொரகொட...அமெரிக்காவில்..புஸ் கட்சி ஆண்டால் அவருதான் அமெரிக்க தூதுவர்..எங்கையோ ஒரு அமெரிக்கன் சம்பந்தியாம் ..இப்ப இந்தியாவில்..அங்கையும் யாருடைய சம்பந்தியாம்...ஆனால் போற இடத்தில் காரியம் சாதிச்சு விடுவான் மனிசன்..என்ன மாய் மாலமோ...12  ம் 13 ம் அமுல் படுத்துவதில் கில்லாடி போல..இங்கை ஜெயசங்கர் பதுங்குது..

அதுதான் சிங்களவன் அங்க இருக்கான் ...
நாங்கள் பெட்டியை டிக்கிக்கு கீழே அமுக்கிவிட்டு விசுக்கோத்து சாப்பிடத்தான் லாயக்கு 

  • Like 1
Link to comment
Share on other sites

12 hours ago, alvayan said:

இந்த மொரகொட...அமெரிக்காவில்..புஸ் கட்சி ஆண்டால் அவருதான் அமெரிக்க தூதுவர்..எங்கையோ ஒரு அமெரிக்கன் சம்பந்தியாம் ..இப்ப இந்தியாவில்..அங்கையும் யாருடைய சம்பந்தியாம்...ஆனால் போற இடத்தில் காரியம் சாதிச்சு விடுவான் மனிசன்..என்ன மாய் மாலமோ...12  ம் 13 ம் அமுல் படுத்துவதில் கில்லாடி போல..இங்கை ஜெயசங்கர் பதுங்குது..

மிலிந்தவின் மனைவி ஜெனவர் புஸ் குடும்பத்தின் உறவினர் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதுதான் சிங்களவன் அங்க இருக்கான் ...
நாங்கள் பெட்டியை டிக்கிக்கு கீழே அமுக்கிவிட்டு விசுக்கோத்து சாப்பிடத்தான் லாயக்கு 

தமிழந்தான் இனம் மாறி கட்டினால் அத்தோடு அந்த நபரை தூய தமிழன் இல்லை என்றாக்கி விடுவானே.

 

1 minute ago, nunavilan said:

மிலிந்தவின் மனைவி ஜெனவர் புஸ் குடும்பத்தின் உறவினர் என நினைக்கிறேன்.

 

12 hours ago, alvayan said:

இந்த மொரகொட...அமெரிக்காவில்..புஸ் கட்சி ஆண்டால் அவருதான் அமெரிக்க தூதுவர்..எங்கையோ ஒரு அமெரிக்கன் சம்பந்தியாம் ..இப்ப இந்தியாவில்..அங்கையும் யாருடைய சம்பந்தியாம்...ஆனால் போற இடத்தில் காரியம் சாதிச்சு விடுவான் மனிசன்..என்ன மாய் மாலமோ...12  ம் 13 ம் அமுல் படுத்துவதில் கில்லாடி போல..இங்கை ஜெயசங்கர் பதுங்குது..

மிலிந்த 13 ஐ பற்றி பெரிய அபிபிராயம் இல்லாத மனிதர். 

உண்மையில் ஒரு உயர் நிலை தரகர். கூலியை பொறுத்து நிலைப்பாட்டை மாற்றுவார்.

இவரை 13 எதிர் நிலை எடுக்க வைத்து, இந்திய தூதராயும் நியமித்தது நரி 🦊.

இந்த நரிதான் 13 ஐ அமல்படுத்துவேன் என ஊளையும் இட்டது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

 

 

 

மிலிந்த 13 ஐ பற்றி பெரிய அபிபிராயம் இல்லாத மனிதர். 

உண்மையில் ஒரு உயர் நிலை தரகர். கூலியை பொறுத்து நிலைப்பாட்டை மாற்றுவார்.

இவரை 13 எதிர் நிலை எடுக்க வைத்து, இந்திய தூதராயும் நியமித்தது நரி 🦊.

இந்த நரிதான் 13 ஐ அமல்படுத்துவேன் என ஊளையும் இட்டது🤣

எந்த சிங்களவன் 13 க்கு ஆதரவு....ஒருவருமே இல்லை..நரியின் நாடகம் கடன் கிடைக்கும்வரை...மொரகொட வுக்கு 12 13 ஐ சொன்னது ..அமெரிக்கா,இந்திய அதிகாரிகளின் பலவீனம் அறி ந்து ...12, 13 வயதினரை வைத்து அதி விசேட விருந்து வைப்பதில் கில்லாடிதான் இந்த் மொரகொட.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.